புது மஞ்சள் புது தாலி
அத்தியாயம் 5.2
நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் தாமரை முன் சண்டை போட விரும்பாமல் அவள் செல்லும் வரை அமைதியாக இருந்தவர். வேலும் , தாமரையும் கோவிலுக்கு புறப்பட்ட பின்பு ஆக்ரோசமாக கொடி முன் போய் நின்றார் வள்ளி.
அடித்து வீழ்த்தும் உடல் மொழியும் , கண்ணில் தென்பட்ட கோபமும் பார்த்த கொடிக்கு சிறிது பயம் வந்தாலும் தன்னை என்ன செய்ய முடியும் என்று தெனவெட்டாகவே “என்ன?”… என்று கேட்டார்.
வள்ளி கோபத்தோடு , மனதில் எழுந்த வேதனை கண்ணிராக வழிய “ ஏட்டி! எம்மட புள்ள உனக்கு என்னாலே பாவம் செஞ்சுச்சு , நீங்க உண்கிற சோத்தில மண்ண அள்ளிய போட்டாவ , துடுக்கா பேசுமே தவிர்த்து ஒரு சொல்லு சொல்ல முடியுமா , உம்ம மவனோட பழகுறது ஒப்பலையா கண்டுச்சு வை உம் மவனே என் புள்ளையா பேசுறதுக்கு நீ யாருவே?”…
பொதுவா வள்ளிக்கு வெளியே பேசவே வரது. அதுவும் கொடி மாதிரி ஆக்களிடம் வள்ளி ஒதுங்கியே போவார் அவர்கள் தன் சொல் தான் சரியென்று நிரூபிக்க என்னவும் செய்வர், அதனால் தான் வள்ளி அவர் திசைக்கே வர மாட்டார். துஷ்டரை கண்டால் தூர விலகு என்று!
மகளை பற்றிய கொடியின் பேச்சே வள்ளியின் கோபத்திற்கு காரணம், “அப்பன் இல்லாத புள்ளன யாரும் என்னவும் சொல்லாம ! அத்தா நான் உயிரோட தான்லே இருக்கேன் , இப்ப பேசுவே உன் பேச்சை வாய கிழிச்சு தச்சுறேன்,” என வள்ளி அற்றாமை தாங்காமல் பேச
கொடிக்கு நொடி நேர பயம் விலகி கோபம் வந்தது தன் வாய கிழிப்பேன் என்று வள்ளி சொன்னதில் அவரை அடித்து நொறுக்கும் எண்ணம்,
“ ஏண்டி! உனக்கு எம்புட்டு நெஞ்சழுத்தம் இருந்த என் வீட்டு படி ஏறி வந்து என்னியவே பேசுவ ! வாய கிழிப்பேனு சொல்றவலோ!.. எங்க என் கிட்ட வந்து பாருலே ?
“அடுத்த வேளை கஞ்சிக்கு வழி இல்லாத நாயி ! என்னைய பேசுவியோ”, .. என்று முடியை அள்ளி கொண்டையாக முடிந்து , சேலையை இழுத்து சொருகி நின்றார். கட்டி அடிக்கும் எண்ணமே கொடிக்கு ,
யாரும் ஒரு சொல் சொல்லி அறியாதவர். புருசன் , மகன் என எவரும் இவருக்கு கட்டுபட தன்னை பேசுவத!…
வள்ளியும் விடுவதாய் இல்லை, “ஓகோ ! உன்னிய ஒரு சொல்லு சொல்லுமுன்ன சேலைய இழுத்து சொருகி வாரியே என் பிள்ளைய மட்டும் என்னனென்ன பேசுனவ , உனக்கு துடிச்ச மாதிரி தாம்லே எனக்கும் துடிக்கும் , ….
“ஆமலே! கஞ்சிக்கு வழி இல்லா தான், ஆன எனக்கு என் மக ராணி தம்லே! அந்தாளு குடியே கெதினு செத்தாரு அதுக்கு இந்த பச்சை மண்ணு என்னாலே பண்ணும்,”…
“ ஏழை தான்! உம்ம மறப்புல ஒன்னும் உல வைக்கல, உன் வீட்டு படியேறி வந்து நிக்கல , அப்புறம் என்னத்துக்கு எம்மட மவள நீ பேசனுங்குறேன்! உன் பணக்கார பவுசு உன்னோட, என் மவ வாய் பேசுனா உமக்கு என்னாலே, நீரு ஏன் அவகிட்ட வாய்ய குடுக்குறவ, நீதான் பெரிய சம்சாரி ஆச்சே சமதையில்லாத அவகிட்ட உம் பவுசுக்கு பேசலாமா!”…. என மேல் மூச்சு வாங்க வள்ளி பேச,
கொடிக்கு ஆத்திரம் கண்ணை மறைத்தது , தன்னை கண்டாலே ஒதுங்கி போகும் வள்ளி தன் வீட்டிலே தன்னை சாடுவதை பொறுக்க முடியாமல் வார்த்தைகள் ஆழமாக வந்தது.
“ என்னாலே! குரல ஓசத்துறவ நான் ஆருங்குறது மறந்து போச்சா , ஒரு பய எனக்கு எதிரே நிக்கமாட்டான், நீரு என்னிய சாடுரையோ, மம்மம் தாய் பாசம் பேசுது” என எகத்தளமாக சொல்லிய கொடி , சொல்லால் வள்ளியை வீழ்த்தினார்,
“ஒத்த ஓட்டு வீட்டில பொட்டச்சிய பெத்த உனக்கே இம்புட்டு இருந்த , முச்சுடும் சொத்து வச்சு ஆம்புள்ள பிள்ளை பெத்த எனக்கு எம்புட்டு இருக்கும்” என இளக்காரமாக பேசியவர்,…
அதை விட நக்கலாக “அந்த சீமை சித்ராங்கிக்கு மாப்பிளை பாக்குற தான , ஏலே ! இப்ப சொல்றேன் கேட்டுக , இந்த எட்டு பட்டிலையும் ஒருத்தன் பொண்ணு கேட்டு படியேர மாட்டான் , என்னிய மீறி ஆரு வருவானு பக்குறேன்லே ! அங்க கொட்டி கேடக்கோ , நதியத்த கழுதனு தெரிஞ்சுதான் ஒருத்தன் வரல! இதுல நெசத்த தான் நான் சொன்ன உமக்கு பட்டுகிடுச்சோ!”…. என்று திமிராகவே பதில் சொன்னார் கொடி. அவர்க்கு வள்ளி சாடியதை ஏற்று கொள்ளவே முடிய வில்லை.
வள்ளியும் சும்மா விடவில்லை, “ “என் மகளுக்கு கொட்டி கேடக்கல சரிதான் , உமக்கு கொட்டி கெடந்ததுச்ச , முனிமூக்கும் , காதுக்கும் தான் நீ போட்டு வாக்கப்பட்டு வந்த இப்ப சம்சாரி ஆகல, ! நீரும் பார்க்கத்தான் போறவ , உம்மட சொந்ததில யாரும் எனக்கு மருமகன் ஆவ வேணாம், அவளுக்குனு பொறந்த மவராசன் வாரமையா போவான் எம்மட மவளும் நல்ல பொழைப்பா “!..என தாட்டியமக சொல்லி நடையா கட்ட,
கடைசி சொல் வள்ளி பேச்சாக முடிய தாங்க முடிய வில்லை கொடிக்கு, அவள் கண்ணிரை காணும் விதமாக “ ஏட்டி! உம் மவள நான் காங்கணுமா , பார்ப்பேன் தான் பட்ட மரமா நிக்குறத பார்ப்பேன், கல்யாணம் முடிச்சு நீயி முளியா ஆன மாதிரி காலத்துக்கும் உன் மக மூளியா தாம்லே உக்கருவா”!…என ஆங்காரமாக சொல்லியவரை பார்த்த வள்ளிக்கு , நெஞ்சல்லாம் அடைத்தது , இன்னும் பேச என்ன இருக்கு ,
கண்ணில் நீர் அருவியாக பெறுக “ நியெல்லம் ஒரு பொம்பளையாடி , எழங்குறுத்த சாபம் விடுற மதிரி பேசுறியே , நீயும் ஒரு பிள்ளை வச்சிருக்க மறக்காத , நாளைக்கு உனக்கு விடியாதா!”… என வேதனையாக சொன்னவரிடம் ,
கொடி நக்கலாக “ எனக்கு ஏன் விடியுதாம் , என் மவன் ராசா கணக்க வாழ்றான் , உன் மகதான் கட்டிகொடுக்க வழி இல்லாம நிக்க , என் குலசாமி ஐயன்னர் என் வம்சம் செழிக்க வைக்கும்”!.. என்று பெருமையாக சொன்ன கொடியை பார்த்த வள்ளி கடைசி வார்த்தையாக தன் வயிற்றில் கை வைத்து,
“ஏலே! கொடி இனி சாவளவுக்கும் உன் முஞ்சில முழிக்க மாட்டேன்லே, நானும் சொல்றேன் கேட்டுக ! நீ கும்புடுறது தான் சாமிய , நான் கல்லதான் கும்புடுறன , உனக்கு புருசன் வீட்டு சாமின எனக்கு அப்பன் வீட்டு சாமிலே அங்க இருந்து தான் நானும் வாக்கப்பட்டடு போனேன் , அந்த ஐயனார் பார்த்து தாம்ல இருக்காரு, யாரு பட்ட மரமா நிக்க போறதுனு பாருவே” ! என அவேசமாக சொல்லியவர் முகம் திரும்பாமல் சென்றார்.
பின்னர் நிகழ்ந்த நெல்லையப்பன் சாவுக்கும் சரி , கொடி சாவுக்கும் சரி , வள்ளி வரவேயில்லை.