புது மஞ்சள் புது தாலி அத்தியாயம் 2.2
வேலு மீது வள்ளிக்கு ஒரு எண்ணம் இருந்தது தான் முன்னாடி அதெல்லாம் , எப்போது வேலு விருப்பம் தெரிந்ததோ அப்போதே தன் எண்ணத்தை மாற்றிக் கொண்டார். நட்புக்கு தடையேது , ஆனால் கல்யாணம் செய்யும் போது நாலும் பார்க்கத்தான் செய்வார்கள் போல சம்மு குணத்தில் தங்கம் தான் ஆனால் , கண்ணை கவரும் அழகு , படிப்பு , அந்தஸ்து , சீர் வரிசை , ஜனக்கட்டு என்று ஏதுவுமில்லை, ஏன் சம்முக்கு பார்க்கும் போதும் அப்பா இல்ல, பெரிய படிப்பு கிடையாது , சொத்தும் பெருசா எதுவுமில்லை நாளைக்கு உங்கள மகதானே பார்க்கணும் , சீர் செய்ய அண்ணன் ,தம்பி யாரும் இல்லா இப்படி ஆயிரம் காரணம் சொல்லி தட்டி களித்தனர்.
வேலுக்கு தான் முதலில் திருமணம் நடந்தது , சம்முக்கு சரியாக வரன் அமையாமல் கல்யாணம் தள்ளி போன போது தான் வள்ளிக்கு நிதர்சனம் புரிய துவங்கியது சரியான மாப்பிளை வேணும்னா தாங்களும் சரியாக இருக்க வேண்டும் என்று , கூடவே சுத்துன ஆம்பிளை பிள்ளைக்கு திருமணம் ஆகிருச்சு , தன் மகள் இன்னும் வீட்டோடு இருக்க கொஞ்சம் மூப்பாக தெரிந்தாள் தாய் கண்களுக்கு, இனி எப்பாடு பட்டாவது மகளுக்கு கல்யாணம் செய்து வைத்து விடும் எண்ணத்தில் தீவிரமாக இறங்க , அத்தோடு போச்சு அவளோட கொஞ்ச நஞ்ச சந்தோசமும்.
தன் நினைவில் இருந்த வள்ளி நிமிர்ந்து சுயம் உணரும் போது , வேலு ஏதோ ஒரு காகிதத்தை சம்மு கையில் கொடுக்க என்னவென பார்த்தார் வள்ளி. அதேதான் சம்முவும் கேட்டாள் வேலுவிடம் , “ என்னாலே இது நோட்டு மாதிரி என வாங்கி பார்க்க , வேலு அவளிடம் இது கம்மா வேலைக்கு அட்டடி (நுறு நாள் வேலைத் திட்டம்) எப்படியும் மாசத்துல இருவது நாள் வேலை இருக்கும், நல்ல காசு தருவாங்க , இப்படி முதுகு ஓடிய கட்டட வேலைக்கு போவத , நான் பார்க்க சிமெண்ட் மூட்டையா தூக்கிடு போரவ உன் சத்துக்கு தக்க வேலை செய் இல்லைனா அத்தைக்கு துணைக்கு நீயும் விழுந்துகுவ அப்புறம் யாரு உன்ன பார்க்க, இந்த வேலைக்கு போ மூணு மணி வர தான் வேலையும் சுளுவ இருக்கும் எனக்கும் கொஞ்சம் நிம்மதியாக இருக்கும்.
சம்மு அவனிடம் , சந்தோசமாக சரிலே சட்டிசோறு இனி நான் பர்த்துகிடுதென் , அந்த மாரியப்பன் பொண்டாட்டி கவிதா தான் அட்ட போடுறவ என் பேரா சேர்த்துக சொன்ன ஆள் சேர்ந்தாச்சு அடுத்து பர்க்கலாங்க ,முன்னாடி நடந்த நல்ல தண்ணி குழாய் சண்டையா மனசுல வச்சு என்ன வேலைக்கு சேக்கல அதான் மனசு ஆறமா நாலு நறுக்குனு கேட்டேன் உன்கிட்ட ஏதும் சடவு சொன்னாள என்று முன்னறிவிப்பாக தன் சண்டையில் பேசிய நல்ல வார்த்தைக்கு விளக்கம் கொடுத்தாள்.
சம்முக்கு தெரியும் , தகாத வார்ததைகளால் பேசுவது , கத்தி சண்டை போடுவது , அடிதடி எல்லாம் வேலு எப்போதும் விரும்பமாட்டான் , அவனின் அதிக பட்ச கோபமே அடியோடு வெறுத்து ஒதுக்கி விடுவான் இல்லையா அவன் ஒதுங்கி விடுவான் திரும்பி கூட பார்க்க மாட்டான் , ஆனால் சம்மு அப்படி இல்ல மன ஆதங்கம் ஓய்யும் வர அவர்களை நார்நாரை கிழித்து, சுத்த தமிழில் வண்ண வண்ணமாய் தன் மனம் திருப்திபடும் வரை விடமாட்டாள். கவிதா தன்னை பற்றி என்ன சொல்லிருப்பாள் என்று தெரிந்தே விளக்கம் கொடுத்தாள் பெண் , வேற யாரும் என்றால் இவள் பேசும் விதமே வேற , வேலு மட்டுமே இவள் மரியாதைக்கு உரிய ஆண்மகன் அதனால் தான் இந்த விளக்கம் .
வேலுக்கு தெரியும் இவள் சொன்னது கால்வாசி தான் என்று அடிதடி வரை சண்டை பெருசு . சம்மு பேரை சேர்த்திக்க சொல்லி மாரியப்பன் வீடு போகும் போது தான் தெரிந்தது இவள் வண்டவாளம். கவிதா ஒரு பாடு ஒப்பாரி வைத்து தான் அனுப்பினாள், பெருமூச்சு தான் வந்தது வேலுக்கு சிறு வயதிலிருந்தே சம்மு இப்படித்தான் சொல் பொறுக்கவே மாட்டாள் . எதுக்க யார் நிண்டாலும் பார்க்க மாட்டாள் கை ஓங்கி விடுவாள். அவ்வளவு ஏன் வேலே அவளிடம் நிறைய வாங்கிருக்கான் , என்ன சொன்னாலும் கேட்க மாட்டாள் என்று தெரிந்து பேச்சை மாற்றும் விதமாக ஏட்டி ! வேலை வாங்கி தந்துருக்கேன் உண்க ஒன்னும் தரமாட்டிய என்க ,
என்னாலே , செத்த பொறு இந்த வந்துரேன் சொல்லி சிட்டாக உள்ளே சென்றவள் வரும் போது தட்டில் கோதுமை தோசை இருக்க கையில் சுக்கு காபி மணத்தது. தட்டை வாங்கியவன் மூக்கருகே கொண்டு சென்று நல்லெண்ண வாசனை தெருவே தூக்குது போ என்று உண்ணுவதில் கவனம் செலுத்த , நம்ம சுப்பையா தோட்டத்தில் கருப்பு எள்ளு அரிச்சு புடைக்க போனேன் , காசு வாங்காம கூலிக்கு எள்ளு அரை சாக்கு கொடுத்தாக செக்குல குடுத்து ஆட்டி வாங்கினேன். எண்ணெய் விக்குற விலைக்கு நமக்கு கட்டுபடியகுமா, இன்னும் ரெண்டு தோசை வைத்து உள்ளே சென்றவள் கையில் சிறு தூக்கு கொண்டு வந்து அவனருகில் வைக்க,
வேலுக்கு தெரியும் தூக்கு தன் மகள் பவிக்கு என்று , அதை திறந்து பார்க்க நல்லெண்ணை வாசனையோடு கருப்பட்டி , ஏலக்காய் போட்ட தோசை ரெண்டும் , முட்டை ஊத்தி முறுகலாக தோசை ரெண்டும் இருக்க நிமிர்ந்து பார்த்த அவன் பார்வையில் , “ வெங்காய தொகையில் வத்தல் கூடி போச்சு காரம் அதிகம் நமக்கு ஆவும் புள்ளைக்கு ஆவாது “ என விளக்கம் சொன்னவளை மனம் நிறைய பார்த்தவன் , தன் தாய்க்கு பின் தன்னை தாங்கும் உறவு , தோள் கொடுக்கும் நட்புக்கு ஏற்ப தன் எல்லா சூழ்நிலையிலும் தாங்கி கூட நின்றவள்.
புன்னகையோடு வழியனுப்ப நின்றவளை பார்த்தவன் இது தான் சமயம் என்று ,ஏட்டி எம்புட்டு நாள் நீ தனியா நிப்ப , அயித்த முடியாம கிடக்க உன் நினப்பு தான் , நம்ம மணி ஒருத்தனை சொன்னான் சிறிது தயங்கி மேலும் பேச முயன்றவனை தடுத்தவள் “ இங்காரு வேலு எனக்கு யோசனை நீ சொல்லாத அது உனக்கும் பொருந்தும்” என்றவள் சொல்லில் அடி பட்டு போனவன் அமைதியாக, சம்முவே மேலும் பேசினால் “ உனக்கு பேர் சொல்ல வாரிசு இருக்கு நான் பருக்கு மகளா (அநாதை) போவேன்னு கவலை உமக்கு வேணாம் , இரத்தம் சுண்டி போற வர உழைக்கிறேன் , இருக்க ஓட்டு வீடு ஆன சொந்த வீடு ஒருத்தன் ஒரு சொல்லு சொல்லுவான , தள்ளாத காலத்திலும் ஓசியா ரேசன் அரிசி கிடைக்கும் யாரு வீட்டு வாசலுக்கும் போய் நிக்க மாட்டேன் கல்ல கரச்சு குடிச்சு கூட என் வீட்டுல நான் படுத்துப்பேன் , செத்தா பழகுன தோஷத்துக்கு துக்கி போது இல்லையா புழு அரிச்சு போறேன் எம்ம வீட்டுல ,மூணு வேலை காஞ்சிக்கு பொண்டட்டின்ற பேருல யாருக்கும் முந்தி விரிக்க மாட்டேன்” போலே உன் சோலிய பார்த்து என்று அவனிடம் கத்தி விட்டு வேகமா உள்ளே போய் கதவடைத்து விட்டாள்.
வள்ளி மகளை நிமிர்ந்து பார்க்க , ஏதும் பேசாமல் படுக்கைய போட்டாள் கண்களில் இருந்து நீர் கோடாக இறங்க நினைவோ பழசை அலசியது ஊர் அறிய தன்னை வேசி பட்டம் கட்டி , நடு தெருவில் உள்ளாடை கிழியும் அளவிற்கு அடித்த கொடுமை எல்லாம் திரும்ப நினைவில் வர மனசு கொதித்தது , இனி ஒரு முறை இந்த அவலம் வேண்டாம் என்று.