Toggle navigation
Home
Tamil Novels
What's new
Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள்,
[email protected]
என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
Advertising
புது வெள்ளை மழை 1
Post Views:
4,473
புது
வெள்ளை
மழை
அத்தியாயம்
– 1
வருடம்
1992,
இடம்
சென்னை
.
“
புது
வெள்ளை
மழை
இங்குப்
பொழிகின்றது
இந்தக்
கொள்ளை
நிலா
உடல்
நனைகின்றது
இங்குச்
சொல்லாத
இடம்
கூடக்
குளிர்கின்றது
மனம்
சூடான
இடம்
தேடி
அலைகின்றது
.
”
பாடல்
வரிகளுக்கு
ஏற்ப
கற்பனையில்
முகம்
தெரியாத
பெண்ணுடன்
டுயட்
பாடிக்கொண்டிருந்த
நந்தாவின்
கனவு
தற்காலிகமாகத்
தடைபட
….
கதவு
திறக்கும்
சத்தம்
கேட்டு
யார்
என்று
பார்த்தான்
.
“
அண்ணா
,
லைட்
கூடப்
போடாம
என்ன
பண்ற
?”
என்றபடி
பவதாரணி
அறைக்குள்
வர
….
அவள்
குரல்
கேட்டு
எழுந்த
நந்தா
,
தன்
தலைப்பக்கம்
இருந்த
ஸ்விட்ச்சை
தட்ட
…
அறைக்குள்
வெளிச்சம்
பரவியது
.
“
கொஞ்ச
நேரம்
என்னை
நிம்மதியா
பாட்டுக்
கேட்க
விட
மாட்டியே
…
”
நந்தா
சலிக்க
….
பவதாரணியின்
முகம்
வாடியது
.
“
அம்மாதான்
உன்னைச்
சாப்பிட
கூடிட்டு
வர
சொன்னாங்க
.
”
“
கோபமா
….
நல்ல
பாட்டு
நடுவுல
தடைபட்டதுனால
அப்படிப்
பேசிட்டேன்
.
”
“
ஆமாம்
நல்ல
பாட்டு
.
புது
இசையமைப்பாளர்
ரஹ்மான்னு
ஒருத்தர்
மியூசிக்
போட்டிருக்கார்
….
அவரு
யூத்
,
அதுதான்
பாட்டு
கூடச்
செம்மையா
இருக்கு
…
நீ
படம்
பார்த்துட்டியா
அண்ணா
?”
“
இல்லை
…
”
“
நாம
ரெண்டு
பேரும்
நாளைக்குப்
போகலாமா
அண்ணா
…
”
“
உன்னோட
பார்க்கிற
படமா
இது
…
நீ
உன்
ஆளு
கூடப்
போ
…
”
நந்தா
சொல்ல
….
தாரணியின்
முகத்தில்
வெட்கம்
படர
…
அதை
அவன்
ரசித்தான்
.
“
ரெண்டு
போரையும்
சாப்பிட
வர
சொன்னா
…
இன்னும்
மேல
என்ன
பண்றீங்க
?”
அவர்கள்
அம்மா
குழலியின்
குரல்
கேட்க
….
இருவரும்
கீழே
இறங்கி
சென்றனர்
.
“
நேரத்துக்குச்
சாப்பிட
கூட
வராம
அப்படி
என்ன
பண்ற
நந்தா
?”
என
மகனை
பார்த்து
கேட்டவர்
,
உணவை
இருவருக்கும்
பரிமாற
ஆரம்பித்தார்
.
“
இங்க
இருக்கிற
வரைக்குமாவது
நேரத்துக்குச்
சாப்பிட
கூடாதா
?
வேலைக்குன்னு
போயிட்டா
உன்னால
சாப்பாட்டைப்
பத்தி
நினைக்க
முடியுமா
?”
“
சாப்பாடு
மட்டும்
இல்லை
…
வேற
எதைப்
பத்தியும்
நினைக்க
முடியாது
.
ஏன்னா
இந்தத்
தடவை
போஸ்டிங்
போட்டிருக்கிறது
அப்படிபட்ட
இடம்
.
”
“
என்னடா
இத்தனை
நாள்
வடநாட்டில
இருந்த
….
இப்பத்தான்
நாம்
ஊர்
பக்கம்
வந்திருக்கேன்னு
சந்தோஷப்பட்டேன்
,
அதுவும்
இல்லையா
…
”
“
ராமநாதபுரம்
மாவட்டம்னா
சும்மாவா
…
பாசக்கார
பயபுள்ளைங்க
…
அதோட
ரொம்ப
ரோஷமான
பயலுங்களும்
கூட
….
”
என்றான்
.
“
அந்தப்
பக்கம்
ஜாதி
சண்டை
எல்லாம்
அடிக்கடி
நடக்கும்னு
சொல்வாங்களே
…
எப்படி
அண்ணா
சமாளிப்ப
?”
தாரணி
கவலையாகக்
கேட்க
…
அதைக்
கேட்டபடி
உள்ளே
நுழைந்த
வருண்
, “
உங்க
அண்ணன்
உன்கிட்ட
இருக்கிற
மாதிரியே
,
எல்லார்கிட்டயும்
இருப்பான்னு
நினைச்சியா
?
”
“
எப்படா
இவன்
ஊரைவிட்டு
காலி
பண்ணி
போவான்னு
…
நிறைய
பேரை
நொந்து
போக
வச்சிருக்கான்
.
நார்த்ல
இருந்த
வரை
….
அங்கிருந்த
பெரிய
ஆளுங்க
கண்ணுலையே
விரலை
விட்டு
ஆட்டினவன்
,
இவனுக்கு
மாற்றல்
வந்ததும்
,
அதை
எத்தனை
பேர்
அங்க
கொண்டாடினாங்க
தெரியுமா
?”
“
பயபுள்ள
பார்க்கத்தான்
பச்சபுள்ள
மாதிரி
இருக்கு
…..
டெரர்
பீஸ்
.
”
வருண்
சொன்னதைக்
கேட்டு
அப்படியா
என்பது
போல்
தாரணி
நந்தாவை
பார்க்க
…
அவன்
இல்லை
என்று
தலையசைத்தவன்
,
குனிந்து
சாப்பிடுவது
போல்
வந்த
சிரிப்பை
அடக்கினான்
.
“
அச்சோ
…
தாரணி
என்ன
அப்படிப்
பார்க்கிற
……
மாமாவை
நம்பமாட்டியா
நீ
….
”
வருண்
கேட்க
…
தாரணி
அவனை
முறைத்தாள்
.
“
நலத்துக்கே
காலம்
இல்லை
….
நீங்க
சாப்பாடு
போடுங்க
அத்தை
.
”
என்ற
வருண்
,
நகரத்தில்
பிரபல
வக்கீல்
.
நந்தாவின்
நண்பன்
…
வருங்கலத்தில்
அவன்
தங்கையைத்
திருமணம்
செய்துகொள்ளப்
போகிறவன்
.
“
எப்படா
கிளம்புற
?”
“
நாளைக்குக்
கிளம்பனும்
.
”
“
அடுத்து
எப்ப
எங்க
கல்யாணத்துக்கு
வருவியா
?”
“
ஆமாம்
,
ஒரு
மூன்னு
நாளாவது
லீவ்
போட
முடியுமான்னு
தெரியலை
…
எதுக்கும்
என்னை
நம்பி
இருக்க
வேண்டாம்
.
நீங்க
எல்லாம்
கல்யாண
வேலையைப்
பார்த்துக்கோங்க
.
”
என்றான்
நந்தா
.
“
நான்
உங்க
சித்தப்பா
சித்தியை
கூடிட்டுப்
போய்ப்
பத்திரிகை
வச்சிட்டு
வரேன்
.
”
என்றார்
குழலி
…
அவருடைய
கணவர்
இப்போது
உயிரோடு
இல்லை
….
“
அண்ணா
கடைசி
நிமிஷத்துல
வரமுடியலைன்னு
சொன்ன
,
நான்
கல்யாணத்தையே
நிறுத்திடுவேன்
.
”
தாரணி
நந்தாவை
மிட்ட
ஆனால்
மிரண்டதென்னவோ
வருண்தான்
.
“
ஏன்
மா
…
என்னை
டென்ஷன்
பண்ற
?
அதெல்லாம்
அவன்
வந்திடுவான்
,
வந்திடுவ
இல்லைடா
….
”
என
அவன்
தன்
நண்பனை
பார்த்து
கேட்க
…
“
வந்திடுவேன்னு
தான்
நினைக்கிறேன்
.
”
என
நந்தா
தன்
தங்கையைப்
பார்த்தபடி
இழுக்க
…
அவள்
முகம்
வாடியது
.
அதைக்
காண
பொறுக்காதவன்
, “
எப்படியும்
வந்திடுவேன்
டா
….
”
என்றான்
உறுதியாக
.
நந்தா
என்கிற
நந்தகுமார்
IPS
ஆபீசர்
.
ராமநாதபுரம்
மாவட்டத்தின்
புதிய
ASP.
நாம்
என்ன
செய்கிறோமோ
அதுதான்
கண்ணாடியில்
தெரியும்
.
அதுபோல
நந்தா
நல்லவர்களுக்கு
நல்லவன்
,
கெட்டவர்களுக்குக்
கெட்டவன்
.
ஆள்
பார்க்க
அமைதியாகத்
தெரிந்தாலும்
,
மிகவும்
அழுத்தமானவன்
.
பார்த்தா
இள
வயதா
இருக்காரே
…
என்ன
செய்துவிடுவார்
என்று
நினைப்பதற்குள்
முடித்து
இருப்பான்
.
அவனுக்குச்
சட்ட
ஒழுங்கு
ரொம்பவும்
முக்கியம்
.
அதைப்
பாதிக்கும்
வகையில்
யார்
நடந்து
கொண்டாலும்
,
அவர்கள்
எவ்வளவு
பெரிய
ஆளாக
இருந்தாலும்
கவலையே
படமாட்டான்
.
ஒரு
காட்டுக்
காட்டிவிடுவான்
.
விரைவில்
அவன்
தங்கையின்
திருமணம்
நடக்க
இருப்பதால்
…
அதைப்
பற்றி
வருணிடம்
கலந்து
பேசிக்கொண்டு
இருந்தான்
.
அதே
நேரம்
ராமநாதபுர
மாவட்டத்தின்
கீழ்
வரும்
ஊர்
ஒன்றில்
பரபரப்பாக
ஆட்கள்
சுற்றிக்கொண்டு
இருந்தனர்
.
“
டேய்
கிடைச்சாங்களா
….
”
“
இன்னும்
இல்லைப்பா
…
”
“
இன்னைக்கு
ராத்திரிக்குள்ள
கண்டுபிடிக்கணும்
.
ஒருநாள்
அவ
அவன்
கூடத்
தங்கிட்டாலும்
,
அவளையும்
சேர்த்து
வெட்டு
….
இல்லைனா
அந்தப்
பையனை
மட்டும்
வெட்டிட்டு
,
அவளை
இங்க
கொண்டு
வாங்க
.
”
என்று
போன்னில்
கர்ஜித்தவர்
,
தொலைபேசியை
நங்கென்று
வைக்க
…
அந்தப்
பக்கம்
கேட்டவனின்
ரத்தமோ
இன்னும்
கொதித்தது
.
பொதுத்
தொலைபேசியில்
இருந்து
வெளியே
வந்தவன்
,
எந்தப்
பக்கம்
போவது
என்று
தெரியாமல்
இருபக்கமும்
பார்த்து
வைக்க
…
“
அண்ணே
அவங்க
இருக்க
இடம்
தெரிஞ்சிடுச்சு
….
வாங்க
.
”
என
ஒருவன்
சத்தமாக
அழைக்க
….
அந்தப்
பக்கம்
ஓடினான்
.
“
ச்சு
…
என்ன
பண்ற
உனக்குப்
பயமாவே
இல்லையா
?”
பெண்
குரல்
தயங்கி
கேட்க
….
“
பயமாத்தான்
இருக்கு
…
அதுக்காக
நமக்குதான்
கல்யாணம்
ஆகிடுச்சு
இல்லை
….
”
என்றது
ஆண்
குரல்
.
“
எனக்கு
எங்க
வீட்டை
நினைச்சா
பயமா
இருக்கு
.
நம்மை
அவங்க
வாழ
விடமாட்டாங்க
.
”
“
பயப்படாத
…
இந்த
இடம்
அவங்களுக்குத்
தெரியாது
.
நாளைக்குக்
காலையில
வெள்ளனவே
நாம
சென்னைக்குப்
போயிடலாம்
.
அப்புறம்
நம்மை
யாரும்
ஒன்னும்
பண்ண
முடியாது
.
”
அவன்
சொல்லிக்கொண்டிருந்த
போதே
…
கதவை
யாரோ
முரட்டுத்
தனமாக
இடிக்க
…
இருவரும்
பயந்து
போய்
அறையின்
மூலைக்குச்
சென்றனர்
.
“
டேய்
பாண்டி
,
ஓடிப்போயிடுங்க
டா
….
அவங்க
ஆளுங்க
வந்திட்டாங்க
.
”
நண்பர்கள்
குரல்
வெளியே
கேட்க
…
எந்தப்
பக்கம்
செல்வது
என்று
தெரியாமல்
,
உள்ளே
இருந்த
இளஞ்சிட்டுக்கள்
இரண்டும்
தவிக்க
….
அப்போது
கதவை
உடைத்து
உள்ளே
வந்தவனோ
,
ஒரு
நொடி
கூடத்
தாமதிக்கவில்லை
….
அந்த
ஆணின்
கழுத்தில்
ஒரே
போடாகப்
போட
….
ரத்தம்
எல்லாப்
பக்கமும்
சிதறியது
.
தன்
மேல்
சிதறிய
ரத்தத்தைப்
பார்த்துதான்
என்ன
நடந்தது
என்று
அந்தப்
பெண்ணுக்கு
தெரியும்
.
தாலி
கட்டிய
அன்றே
தன்
கணவனை
இழந்தவள்
,
அந்த
அதிர்ச்சி
தாங்காமல்
மயங்கி
விழுந்தாள்
.
வெட்டியவனோ
அவளை
அலட்சியமாகத்
தூக்கி
தோளில்
போட்டுக்கொண்டு
வெளியில்
சென்றான்
.
இரண்டு
நாட்கள்
சென்று
,
நந்தா
ராமநாதபுரம்
ASP
யாகப்
பொறுப்பு
ஏற்க
…
அவனை
வாழ்த்திய
கமிஷனர்
, “
நந்தா
,
உங்களைப்
பற்றி
நிறையக்
கேள்விபட்டிருக்கேன்
.
இங்கேயும்
நல்ல
மாற்றம்
வரும்னு
எதிர்பார்க்கிறேன்
.”
என்றார்
.
“
கண்டிப்பா
சார்
,
என்னால
முடிஞ்சது
செய்வேன்
.
எனக்கு
எந்த
அரசியல்
குறுக்கீடும்
இல்லாம
நீங்க
பார்த்துக்கணும்
.
”
“
அது
ரொம்பக்
கஷ்ட்டமாச்சே
….
”
கமிஷனர்
சிரிக்க
…
“
அவன்
நான்
சொன்னாலும்
கேட்க
மாட்டான்னு
சொல்லிடுங்க
போதும்
.
”
என்றான்
நந்தாவும்
சிரித்தபடி
…
“
அப்ப
எனக்கு
நிறையச்
சோதனை
வைப்ப
….
”
என்றபடி
கமிஷனர்
வெளியே
செல்ல
…
நந்தா
அந்த
வாரத்தில்
நடந்த
முக்கியமான
நிகழ்வுகளைப்
பற்றிப்
பார்த்துக்
கொண்டு
இருந்தான்
.
அங்கிருந்த
உதவி
ஆய்வாளரை
அழைத்தவன்
, “
ரெண்டு
நாள்
முன்னாடி
யாரையோ
வெட்டி
கொன்னு
இருக்காங்களே
யார்
அது
?”
என
விசாரித்தான்
.
“
சார்
,
அது
காதல்
கதை
சார்
.
பொண்ணு
மேல்சாதி
பொண்ணு
,
பையன்
கீழ்சாதி
…
அப்புறம்
விடுவாங்களா
சார்
…
அதுதான்
போட்டுடாங்க
.
”
“
இதெல்லாம்
இங்க
ரொம்பச்
சாதாரணம்
சார்
.
”
“
யாரு
வெட்டினதுன்னு
எதுவும்
தெரிஞ்சிதா
?”
“
அதெல்லாம்
அவங்க
ஆளே
ஒருத்தன்
வந்து
,
முன்விரோதம்
காரணமா
நான்தான்
கொன்னேன்னு
சரன்
அடைஞ்சிட்டான்
.
இதெல்லாம்
ஒன்னும்
பண்ண
முடியாது
சார்
….
”
கேட்ட
நந்தாவுக்கு
இன்னும்
எவ்வளவு
நாள்தான்
சாதி
வெறி
பிடிச்சு
அலையப்
போகிறார்களோ
என
ஆத்திரமாக
வந்தது
.
“
சாதிகள்
இல்லையடி
பாப்பா
…
”
என
எப்போதோ
பாடி
வைத்தான்
பாரதி
.
ஆனால்
நாடு
எவ்வளவு
வளர்ச்சி
அடைந்தாலும்
,
இன்னமும்
சாதியை
ஒழிக்க
முடியவில்லை
….
அதை
அரசியல்வாதிகள்
ஒழிக்கவும்
விடமாட்டார்கள்
.
அப்போது
தானே
அதைச்
சொல்லி
ஒட்டு
வாங்கலாம்
.
என்று
மாறுமோ
நம்
நாடு
…..
Advertising
Advertising