Toggle navigation
Home
Tamil Novels
What's new
Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள்,
[email protected]
என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
Advertising
புது வெள்ளை மழை 11
Post Views:
2,086
புது
வெள்ளை
மழை
அத்தியாயம்
– 11
விடியற்காலையில்
எக்மோர்
ரயில்
நிலையத்தில்
சென்று
ரயில்
நிற்க
…
அதை
விட்டு
இறங்கிய
நொடியில்
இருந்து
கயல்விழி
அப்படி
ஒரு
வேடிக்கை
.
இவ்வளவு
கூட்டமான
இடத்துக்கு
எல்லாம்
அவள்
இதுவரை
சென்றதே
இல்லை
.
பலதரப்பட்ட
மனிதர்கள்
,
அந்தக்
கூட்டத்திலும்
கனமான
சுமைகளோடு
லாவகமாக
நடக்கும்
கூலிகள்
,
நடைபாதை
கடைகள்
என
வேடிக்கை
பார்க்க
நிறைய
இருந்தது
.
மற்றவர்கள்
முன்னே
செல்வதைக்
கூடக்
கவனிக்காமல்
அவள்
பின்தங்க
,
அவளுக்காக
வேகத்தைக்
குறைத்துப்
பொறுமை
இழந்த
நந்தா
,
ஒரு
கட்டத்தில்
அவள்
கையைப்
பிடித்து
இழுத்துக்
கொண்டு
சென்றான்
.
முதலில்
திடுகிட்டாலும்
,
அவன்
இழுத்த
இழுப்பிற்குச்
சென்றாள்
.
பிறகு
இழுப்பது
அவள்
கணவன்
அல்லவா
…
அவன்
வேகத்திற்குக்
கயல்விழி
ஓட்டமும்
நடையுமாகச்
செல்ல
வேண்டியது
இருந்தது
.
அவளுக்காக
வேகத்தைக்
குறைத்த
நந்தா
, “
எனக்கு
மூன்னு
நாள்தான்
லீவ்
.
அதுக்குள்ள
நான்
முடிக்க
வேண்டிய
வேலைகள்
நிறைய
இருக்கு
.”
என்றான்
.
கயல்விழி
எதுவும்
சொல்லவில்லை
.
ஆனால்
இன்னும்
வேகமாக
நடந்தாள்
.
காரில்
ஏறி
வீட்டிற்கு
வந்தவர்களைத்
,
தாரணியை
விட்டு
முறைப்படி
ஆரத்தி
எடுக்கவைத்தே
குழலி
வீட்டிற்குள்
அழைத்தார்
.
நந்தாவுக்கு
அடுத்துச்
செய்ய
வேண்டிய
வேலைகளே
மனதிற்குள்
ஓடிக்கொண்டிருந்ததால்
,
நேராகத்
தனது
அறைக்கு
வந்துவிட்டான்
.
குளித்து
உடைமாற்றி
வந்தவன்
,
தனது
அறையில்
இருந்த
தொலைபேசியை
எடுத்து
மனநல
மருத்துவராக
இருக்கும்
தன்
தோழி
உமாவை
அழைத்துப்
பேசினான்
.
“
ஹலோ
”
“
ஹலோ
உமா
,
நான்
நந்தா
பேசுறேன்
.
எப்படி
இருக்க
?”
“
ஏசிபி
.
நந்தாவா
…
ஆச்சர்யமா
இருக்கே
.
உனக்கு
என்கிட்டே
போன்
பேச
எல்லாம்
நேரம்
இருக்கா
?”
“
ரொம்ப
ஒட்டாத
.
இன்னைக்கு
உன்னைப்
பார்க்கணும்
.
எப்ப
வரட்டும்
.
என்
மனைவியோட
வரேன்
.”
“
மனைவியா…
அடப்பாவி
கல்யாணம்
ஆகிடுச்சா
?
சொல்லவே
இல்லை
.
அந்த
வருண்
தடியன்
கூட
ஒண்ணுமே
சொல்லலையே
?”
“
திடிர்ன்னு
தான்
,
அதுதான்
யார்கிட்டயும்
சொல்ல
முடியலை
.”
புதிதாகத்
திருமணம்
ஆனவன்
,
தன்னை
ஏன்
பார்க்க
வேண்டும்
என்கிறான்
?
எதோ
சரியில்லை
என
உமாவுக்குப்
புரிந்தது
.
“
ஒரு
பதினோரு
மணிக்கு
வீட்டுக்கு
வா
…
நான்
மட்டும்தான்
இருப்பேன்
.”
“
ஓகே
?”
“
எதாவது
பிரச்சனையா
?”
வினோதினி
கேட்க
,
நந்தா
பதில்
சொல்ல
யோசிக்க
…
“
சில
பெண்களுக்குக்
கல்யாணம்னாலே
பயம்தான்
.”
எனப்
பொதுவாக
அவள்
சந்தித்த
மற்ற
பெண்களை
நினைத்து
உமா
பேச
….
“
இல்லை
இது
வேற
விஷயம்
.”
என்ற
நந்தா
கயல்விழி
பற்றிச்
சொன்னான்
.
“
ஓகே
நீ
நேர்ல
கூடிட்டு
வா
.
.
.
ரெண்டு
மூன்னு
கவுன்செல்லிங்
கொடுத்தா
சரி
ஆகிடும்
.”
“
சரி
வரேன்
.”
என்றவனுக்கு,
அப்போதுதான்
மற்றவர்களின்
நினைவு
வந்து
கீழே
இறங்கி
சென்றான்
.
தாரணி
அறையில்
அவளும்
வருணும்
மீண்டும்
உறக்கத்தைத்
தொடர
…
நள்ளிரவுக்கு
மேல்
வீடு
திரும்பி
இருந்த
பரணியும்
இன்னும்
எழுந்து
வரவில்லை
.
சமையல்
அறையில்
குழலியும்
,
கயல்விழியும்
நின்று
வேலை
பார்த்துக்
கொண்டு
இருந்தனர்
.
குளித்து
விட்டு
வந்த
கயல்விழி
தன்
மாமியார்
மட்டும்
தனியே
வேலை
பார்ப்பதை
பார்த்து
அவளாகவே
வந்து
உதவ
ஆரம்பித்தாள்
.
மகன்
வருவதைக்
கவனித்த
குழலி
அவனைப்
பார்த்து
புன்னகைத்தவர்
, “
நந்தாவுக்குக்
காபி
போட்டுக்
கொடு
.
நான்
குளிச்சிட்டு
வந்திடுறேன்
.”
என்று
மருமகளிடம்
சொன்னவர்
,
அவர்கள்
இருவருக்கும்
தனிமை
கொடுத்து
வெளியே
சென்றார்
.
கயல்விழி
குனிந்த
தலை
நிமிரவில்லை
…
அவளையே
பார்த்துக்
கொண்டு
நந்தா
சமையல்
மேடையில்
ஏறி
அமர்ந்தான்
.
கயல்விழி
அவனுக்குக்
காபி
போட்டுக்
கொடுக்க
… “
அதை
வாங்கிச்
சிறிது
பருகியவன்
, “
காப்பி
நல்லாயிருக்கு
.
ஆனா
அன்னைக்கு
உங்க
வீட்ல
குடிச்ச
காபி
மாதிரி
இல்லையே
.”
எனச்
சந்தேகமாகக்
கேட்க
….
“
அது
கருப்பட்டி
போட்ட
காபி
.
இது
சீனி
போட்டது
.
அதுவும்
எங்க
வீட்ல
அப்ப
கறந்த
பாலு
.
இங்க
பாக்கெட்
பாலுதான
.
அதனால்தான்
இப்படி
இருக்கு
.
எனக்கே
இங்க
காபி
குடிச்ச
மாதிரியே
இல்லை
.”
சொல்வதையெல்லாம்
சொல்லிவிட்டு
அதிகம்
பேசி
விட்டோமோ
என்பது
போல்
கயல்விழி
பார்க்க
…
நந்தா
சிரித்து
விட்டான்
.
“
ஓ
….
இவ்வளவு
பேசுவியா
நீ
?
சரி
சீனின்னா
என்ன
?”
“
சீனின்னா
தெரியாதா
?”
என்றவள்
,
அதை
எடுத்தே
காட்ட
…
“
இதுவா
இது
பேர்
சர்க்கரை
இல்லையா
?”
“
இதுதான்
சக்கரை
என
வெல்லம்
இருந்த
டப்பாவை
தேடி
எடுத்துக்
கொடுத்தாள்
.
“
இதுவா
?
நாங்க
இதை
வெல்லம்ன்னு
சொல்வோம்
.”
“
வெல்லம்
,
சர்க்கரை
எல்லாம்
ஒண்ணுதான்
.
ஆனா
இந்த
ஷுகரை
நாங்க
சீனின்னுதான்
சொல்வோம்
.”
“
உங்க
ஊர்ல
அப்படியோ
?”
“
எல்லா
ஊர்லயும்
அப்படித்தான்
.
நீங்கதான்
தப்பா
சொல்றீங்க
.”
“
ஓ
…
எனக்கு
யாரோ
தப்பா
சொல்லி
கொடுத்துட்டாங்க
போலிருக்கு
.”
அவர்கள்
இருவரும்
பேசும்
போதே
வருண்
வர
…
கயல்விழி
அமைதியாகி
விட்டாள்
.
“
என்ன
பெரிய
விவாதம்
போயிட்டு
இருந்தது
போல
…”
“
வருண்
இது
என்ன
சொல்லு
?”
“
இது
தெரியாதா
சர்க்கரை
.”
“
அதுதான்
இல்லை
.
இது
பேர்
சீனியாம்
.”
“
ரொம்ப
முக்கியம்
டா
இப்ப
?
புதுசா
கல்யாணம்
ஆனவங்க
பண்ண
வேண்டிய
ஆராய்ச்சிதான்
.”
“
ஏம்மா
உங்க
ஊர்ல
உப்புக்கு
பேராவது
உப்பா
?
இல்லைனா
அதுக்கும்
வேற
பேர்
இருக்கா
?”
“
உப்புதான்
.”
கயல்விழி
மெதுவான
குரலில்
தலையைக்
குனிந்தபடி
சொல்ல
…
“
சரி
எதையோ
போட்டு
எனக்கு
ஒரு
காபி
கிடைக்குமா
?”
வருண்
கேட்க
…
கயல்விழி
காபி
போட
ஆரம்பித்தாள்
.
வருண்
ஹாலுக்குச்
சென்று
விட
…
கயல்விழி
காபி
பொடி
போட்டு
விட்டு
,
சர்க்கரை
கையில்
எடுக்க
….
அவளிடம்
இருந்து
அதை
வாங்கி
வைத்த
நந்தா
,
உப்பை
எடுத்துக்
கொடுத்தான்
.
இது
எதுக்கு
என்பது
போல்
கயல்விழி
பார்க்க
… “
அவன்தான
எதாவது
போட்டு
கேட்டான்
.
உப்பை
போட்டு
கொடுத்திடு
.”
“
ஐயோ
நான்
மாட்டேன்
.
காபி
வீணா
போயிடும்
.”
கயல்விழி
மறுக்க
…
நந்தா
அவனே
காபியில்
உப்பை
கலந்து
விட்டான்
.
“
இந்தா
இதைப்
போய்
அவன்கிட்ட
கொடு
.”
நந்தா
கொடுக்க
…
கயல்விழி
மறுக்க
….
அப்போது
அங்கே
தாரணி
வந்தாள்
.
“
ரெண்டு
பேரும்
என்ன
பண்றீங்க
?”
“
இந்தா
வருண்
காபி
கேட்டான்
.
நீயே
கொடுத்திடு
.”
நந்தா
அவளிடம்
காபியை
கொடுக்க
…
அவளும்
அதில்
இருக்கும்
சூழ்ச்சி
அறியாமல்
எடுத்து
சென்றாள்
.
அவள்
பின்னே
நந்தாவும்
கயல்விழியும்
சென்றனர்
.
வருண்
ஹாலில்
அமர்ந்து
பேப்பர்
படித்துக்
கொண்டு
இருந்தான்
.
அவனிடம்
சென்று
தாரணி
காபியை
நீட்ட
….
“
நீ
காபி
போடலையே
?”
எனக்
கேட்டபடி
அவன்
காபியை
வாங்க
,
தாரணி
அவனை
முறைத்தாள்
.
வருண்
காபியை
வாசம்
பிடித்து
விட்டு
குடித்தவன்
,
உடனே
தூவென்று
துப்ப
….
தாரணிக்குக்
கோபம்
வந்துவிட்டது
.
“
இப்ப
எதுக்குத்
துப்புறீங்க
?”
“
நீ
போட்ட
காபியா
இது
?”
“
நான்
போடலை
அண்ணிதான்
போட்டாங்க
.”
“
ஏன்
மா
தங்கச்சி
?
நான்
உனக்கு
அப்படி
என்ன
மா
கொடுமை
பண்ணேன்
?
எதுக்குக்
காபியில
உப்பு
போட்ட
?”
“
நான்
உப்பு
போடலை
,
இவர்தான்
போட்டார்
.”
கயல்விழி
நந்தாவை
காண்பிக்க
…
“
டேய்
துரோகி
,
நட்புன்னா
என்னன்னு
தெரியுமா
டா
….
நண்பன்னா
யாருன்னு
தெரியுமா
….
உனக்கு
இந்த
வருண்ணா
யாருன்னு
தெரியுமா
?”
அவன்
அடுக்க
….
“
போதும்
அடங்கு
,
இது
தளபதி
படம்
டயலாக்ன்னு
எனக்கும்
தெரியும்
.
நீதானே
டா
எதாவது
போட்டுக்
கொடுன்னு
சொன்ன
.”
என்றான்
நந்தா
.
“
எங்க
அம்மா
அப்பவே
சொன்னாங்க
,
மாமியார்
வீட்டுக்கு
அடிக்கடி
போகாத
மரியாதை
இருக்காதுன்னு
.
நான்
அவங்க
பேச்சை
கேட்டிருக்கணும்
.”
வருண்
பேசுவதைக்
கேட்ட
கயல்விழிக்கு
,
அவன்
நிஜமாகக்
கோபித்துக்
கொண்டானோ
எனப்
பயமாகப்
போய்விட்டது
.
அவள்
வேகமாகச்
சென்று
வேறு
காபி
போட்டுக்
கொண்டு
வந்தாள்
.
“
இந்தாங்க
அண்ணா
,
இது
சீனி
போட்ட
காபிதான்
.”
அவள்
பயந்தபடி
கொடுக்க
…
“
வேண்டாம்மா…
நான்
எங்க
வீட்டுக்கே
போய்க்
குடிச்சிக்கிறேன்
.”
என்றான்
வருண்
.
அப்போது
அங்கே
வந்த
குழலி
,
என்ன
என்று
கேட்க
.
வீட்டு
மருமகனிடம்
மரியாதை
குறைவாக
நடந்து
கொண்டதாக
மாமியார்
கோபித்துக்
கொள்வாரோ
என்று
கயல்விழிக்குப்
பயம்
.
“
மன்னிச்சுடுங்க
அண்ணா
,
ப்ளீஸ்
குடிங்க
.”
அவள்
சொல்ல
…
அவளின்
பயந்த
முகத்தைப்
பார்த்த
வருண்
காபியை
வாங்கிகொண்டான்
.
கயல்விழி
சமையல்
அறைக்குச்
சென்றுவிட்டாள்
.
அவள்
பின்னே
உள்ளே
வந்த
நந்தா
,
அவளைத்
தன்
பக்கம்
திருப்பிப்
பார்க்க
….
கயல்விழியின்
கண்கள்
கலங்கி
இருந்தது
.
“
இப்போ
எதுக்கு
அழற
?”
“
அவங்க
கோவிச்சிகிட்டாங்க
.”
“
யாரு
வருணா
?
அவனுக்குக்
கோபமே
வராது
.”
“
அப்ப
ஏன்
அப்படிப்
பேசினாங்க
?”
“
சும்மா
விளையாடுறான்
.
அவங்க
அம்மாவே
இவன்
தொல்லை
தாங்காம
,
உன்
மாமியார்
வீட்டுக்கு
போடான்னு
துரத்திதான்
விடுவாங்க
.”
“
நிஜமாவா
?”
“
நிஜமாதான்
.
நாம
காலையில
சாப்பிட்டதும்
,
வெளியப்
போறோம்
.
சீக்கிரம்
ரெடியாகு
.”
“
புடவை
மாத்திட்டு
வரவா
?”
“
வேண்டாம்
இதே
ஓகே
.”
சொன்னது
போல்
காலை
உணவு
முடிந்ததும்
,
நந்தா
கயல்விழியை
அழைத்துக்
கொண்டு
காரில்
கிளம்பினான்
.
முதல்
தடவையாக
வெளியே
கிளம்புவதால்
….
முதலில்
கோவிலுக்கு
அழைத்துச்
சென்றான்
.
சின்னப்
பிள்ளையார்
கோவில்தான்
.
சாமி
கும்பிட்டு
விட்டு
திருநீறும்
,
குங்குமமும்
கொடுத்து
விட்டு
அய்யர்
சென்று
விட
.
கயல்விழி
நெற்றியில்
முதலில்
திருநீறும்
அடுத்து
குங்குமமும்
வைத்துக்
கொண்டாள்
.
“
வகிட்டில்
குங்குமம்
வச்சுக்கலை
?
”
எனக்
கேட்ட
நந்தா
,
அவனே
அவளுக்கு
வகிட்டில்
குங்குமம்
வைத்து
விட்டான்
.
கயல்விழி
சராசரி
உயரம்
.
நந்தாவோ
மிகவும்
உயரம்
.
அவள்
அவனை
நிமிர்ந்து
பார்க்க
…
அவள்
கன்னத்தைத்
தட்டியவன்
, “
சரி
வா
போகலாம்
.”
எனக்
காருக்கு
அழைத்துச்
சென்றான்
.
“
இப்ப
எங்க
போறோம்
?”
“
என்னோட
ப்ரண்ட்
உமா வீட்டுக்கு.
அவ
ஒரு
டாக்டர்
அவளைத்தான்
பார்க்க
போறோம்
.”
டாக்டர்
என்றதும்
கயல்விழியின்
முகம்
மாறிவிட்டது
.
அவர்
என்ன
கேட்பார்
?
அன்று
விக்னேஷ்
பேசியது
வேறு
நியாபகம்
வந்து
கலக்கமாக
இருந்தது
.
“
என்னை
டெஸ்ட்
பண்ணப்
போறோமா
?”
கயல்விழி
தயங்கித்தயங்கி
ஒரு
வழியாகக்
கேட்டே
விட
…
அப்போதுதான்
அவளின்
முகத்தைப்
பார்த்த
நந்தா
, “
ஹே
…
என்னடா
?
டெஸ்ட்
எல்லாம்
எதுவும்
இல்லை
.
சும்மா
பேசிட்டு
வரப்போறோம்
.
அவ்வளவுதான்
.”
“
என்ன
பேசணும்
?”
“
நீ
நைட்
திடிர்ன்னு
பயத்துல
முழிச்சிகிற
இல்லையா
?
அதைப்
பத்திதான்
கேட்க
போறோம்
.
வேற
ஒன்னும்
இல்லை
.”
நந்தா
சொன்னதைக்
கேட்ட
பிறகுதான்
கயல்விழி
சற்று
அமைதியானாள்
.
அதற்குள்
உமாவின்
வீடும்
வந்துவிட்டது
.
உமா
அவர்களை
வாயிலுக்கே
வந்து
வரவேற்றாள்
.
“
உன்
மனைவி
ரொம்ப
அழகு
.”
உமா
சொல்ல
…
நந்தா
சிரித்தான்
.
உமா
அவர்களுக்குக்
குடிக்கப்
பழரசம்
கொண்டு
வந்தாள்
.
மூவருமாக
உட்கார்ந்து
பேசிக்கொண்டு
இருந்தனர்
.
“
இவனை
ரொம்ப
நல்லவன்னு
நினைச்சுக்காத
.
நாங்க
ஸ்கூல்
படிக்கும்
போது
என்னவெல்லாம்
கலாட்டா
பண்ணி
இருக்கான்
தெரியுமா
?”
உமா
சொல்ல
,
கயல்விழி
நந்தாவை
அப்படியா
எனப்
பார்த்தாள்
.
அவன்
புன்னகைத்தான்
.
“
நீங்க
ரெண்டு
பேரும்
பேசிட்டு
இருங்க
.
நான்
பக்கத்தில
ஒருத்தரை
பார்க்கணும்
.
அவரைப்
பார்த்திட்டு
வந்திடுறேன்
.”
என்ற
நந்தா
சென்று
விட்டான்
.
“
கயல்
,
நான்
உன்னோட
ப்ரண்ட்
ஓகே
வா
….
நீ
என்கிட்டே
உன்
மனசு
விட்டு
பேசலாம்
.”
“
நான்
அதை
யார்கிட்டயும்
சொல்ல
மாட்டேன்
.
ஏன்
நந்தாகிட்ட
கூட
,
எது
தேவையோ
அது
மட்டும்
தான்
சொல்வேன்
.”
“
நீ
உன்
மனசுல
இருக்கிறது
எல்லாத்தையும்
சொல்லிடு
.
அப்பத்தான்
உனக்கு
இருக்கிற
அழுத்தமெல்லாம்
போய்
ப்ரீ
ஆகிடுவ
.”
உமா
பேசப்
பேச
கயல்விழி
அழுது
விட்டாள்
.
“
இங்க
பாரு
அழகக்
கூடாது
.”
“
நான்
ரொம்பத்
தப்புப்
பண்ணிட்டேன்
.
நடக்காதுன்னு
தெரிஞ்சும்
ஒருத்தர்
மனசுல
ஆசையை
வளர்த்து
,
அவர்
சாகவும்
நான்
காரணமாகிட்டேன்
.”
“
என்ன
நடந்துச்சு
முதல்ல
இருந்து
சொல்லு
.”
உமா
கேட்க
…
கயல்விழி
கடந்த
காலத்தை
நினைத்து
பார்த்தாள்
.
Advertising
Advertising