Toggle navigation
Home
Tamil Novels
What's new
Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள்,
[email protected]
என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
Advertising
புது வெள்ளை மழை 12 1
Post Views:
1,993
புது
வெள்ளை
மழை
அத்தியாயம்
– 12
கயல்விழியின்
வீடு
விசித்திரமான
மனிதர்களைக்
கொண்டது
.
அன்பரசு
முதலில்
இருந்தே
குடும்பத்துக்கு
அவ்வளவாக
முக்கியத்துவம்
கொடுக்க
மாட்டார்
.
அவர்
தொழிலை
பார்ப்பதிலும்
,
தங்கள்
சமூகப்
பணி
செய்வதிலுமே
அவரது
நேரம்
சென்று
விடும்
.
நவநீத
கிருஷ்ணனும்
,
வாசுவும்
அடுத்தடுத்து
இரண்டு
வருட
இடைவெளியில்
பிறந்தவர்கள்
.
அதன்பிறகு
கயல்விழி
பதினொரு
ஆண்டுகள்
இடைவெளி
விட்டு
பிறந்தவள்
,
அதனால்
அவள்
அந்தக்
குடும்பத்தில்
அதிகபடி
என்றே
அண்ணன்மார்
இருவரும்
நினைத்தனர்
.
அதோடு
கிருஷ்ணன்,
வாசு
இருவருமே
அந்தக்
குடும்ப
நிறமான
கருமை
நிறத்தில்
இருக்க
,
சின்ன
வயதிலேயே
இறந்து
போன
,
தன்
அத்தையின்
அழகை கொண்டு
கயல்விழி பிறந்திருந்தாள்
.
இவள்
மட்டும்
நிறமாக
அழகாக
இருக்கிறாளே
என்று
அது
வேறு
இருவருக்கும்
அவள்
மீது
பொறாமை
.
அதுவும்
கயல்விழி
நடக்க
ஆரம்பிக்கும்போது
,
அண்ணன்மார்
இருவரும்
பருவ
வயதில்
இருக்க
,
சின்னத்
தங்கையை
இருவரும்
திரும்பி
கூடப்
பார்ப்பது
இல்லை
.
அன்பரசுவோ
பிள்ளைகள்
காலையில்
எழும்போது
உறங்கிக்கொண்டு
இருப்பார்
.
இரவிலோ
அவர்கள்
உறங்கியதும்
தான்
வீட்டிற்கே
வருவார்
.
என்றாவது
அதிசயமாக
வீட்டில்
இருக்கும்
நேரமும்
,
பிள்ளைகளை
மிரட்டிக்
கொண்டுதான்
இருப்பார்
.
அதனால்
அவர்
வண்டி
தூரத்தில்
வரும்
ஓசையைக்
கேட்டதுமே,
பிள்ளைகள்
ஆளுக்கொரு
அறையில்
சென்று
முடங்கி
விடுவார்கள்
.
அவர்
வீட்டில்
இருக்கும்
நேரம்
பிள்ளைகள்
சின்னச்
சத்தம்
கூடச்
செய்ய
மாட்டார்கள்
.
அவர்
எப்போதுடா
வெளியே
செல்வார்
என்பது
போலவே
வீட்டினர் இருப்பார்கள்
.
பத்மாவுக்கு
இரண்டு
மகன்களுக்குப்
பிறகு
மகள்
பிறந்ததில்
மிகவும்
சந்தோஷம்
.
அவர்
மகளை
இளவரசி
போல
நடத்துவார்
.
கீதா
அந்த
வீட்டுக்கு
மூத்த
மருமகளாக
வந்ததும்
,
அழகாக
இருக்கும்
நாத்தனாரை
பார்த்து
அவளுக்கு
வயிறு
எரியும்
.
கயல்விழி
பற்றி
ஒன்றுக்கு
இரண்டாக
அவள்
அண்ணன்மார்களிடம்
கோல்
மூட்டுவாள்
.
அதைக்
கேட்டுவிட்டு
அவர்களும்
ஆடுவார்கள்
.
பள்ளிப்படிப்பை
அதே
ஊரில்
முடித்த
கயல்விழி
,
கல்லூரி
படிப்பிற்காகப்
பக்கத்தில்
இருக்கும்
டவுனுக்குச்
செல்ல
வேண்டியது
இருந்தது
.
அதற்குமே
அவளது
அண்ணன்கள்
ஆட்சேபனை
தெரிவிக்க
.
“
காலேஜ்
போயிட்டு
வந்திட்டு
இருக்கட்டும்
.
நல்ல
இடமா
வந்தா
படிப்பை
நிறுத்திட்டுக்
கல்யாணத்தை
முடிச்சிடலாம்
.”
என்றார்
அன்பரசு
.
அந்தக் கல்லூரி அவர்கள்
சமூகத்தினர்
நடத்துவது
.
அதனால்தான்
அதில்
சேர்த்து
இருந்தனர்
.
மற்ற
சமூகத்தினரும்
அந்தக்
கல்லூரியில்
படிப்பார்கள்தான்
.
ஆனால்
மிகவும்
குறைந்த
அளவிலேயே
.
கல்லூரி
காலம்
என்பது
எல்லோருக்குமே
வசந்தகாலம்தான்
.
அதே
போலத்தான்
கயல்விழிக்கும்
இருந்தது
.
அவள்
ஊரில்
இருந்து
,
அந்தக்
கல்லூரிக்குச்
செல்லும்
அனைவரும்
ஒரே
நேரத்தில்
,
ஒரே
பேருந்தில்தான்
செல்வார்கள்
.
அது
ஒரு
தனியார்
பேருந்து
.
அதனால்
வண்டி
புதிதாகப்
பளபளவென்று
இருக்கும்
.
காதை
கிழிக்கும்
சத்தத்தில்
சினிமா
பாட்டு
வேறு
….
பெண்கள்
எல்லாம்
சீட்டில்
அமர்ந்து
வர
…
பையன்கள்
எல்லாம்
நின்றபடி
அலப்பறை
செய்து
கொண்டு
வருவார்கள்
.
கயல்விழி
பாவாடை
தாவணியிலேயே
அத்தனை
விதம்
வைத்து
இருப்பாள்
.
எல்லாமே
உயர்ந்த
ரகம்
.
தன்
நீளக்
கூந்தலை
தளர
பின்னி
,
தினமுமே
மல்லிகை
பூ
வைத்துக்
கொண்டு
வருவாள்
.
அதோடு
கழுத்தில்
ஒரு
லாங்
செயின்
,
காதில்
சின்ன
ஜிமிக்கி
கையில்
வாட்ச்
அணிந்து
கொண்டு
இருப்பாள்
.
பார்த்ததுமே
பெரிய
வீட்டுப்
பெண்
எனத்
தெரியும்
.
கயல்விழி
பேருந்து
நிலையம்
சென்ற
போது
,
அவள்
தோழி
தேன்மொழியும்
அரக்கபரக்க
வந்து
சேர்ந்தாள்
.
“
நல்லவேளை
இன்னும்
பஸ்
வரலை
.”
தேன்மொழி
நிம்மதி
பெருமூச்சு
விட
…
“
உனக்கு
எத்தனை
தடவை
சொல்றேன்
,
முகத்தை
நல்லா
துடைச்சிட்டு
பவுடர்
போடுன்னு
.
பாரு
திட்டு
திட்டா
இருக்கு
.”
என்றவள்
,
தன்
கைகுட்டையால்
தேன்மொழியின்
முகத்தைத்
துடைத்து
விட்டாள்
.
“
நானும்
உன்னை
மாதிரி
இருந்தா
பவுடர்
போட
தேவை
இல்லை
.”
“
ஏன்
நானும்
தான்
போடுறேன்
.”
“
ஏற்கனவே
வெள்ளச்சி
தான
பிள்ள
நீன்னு
.
இன்னும்
உனக்குப்
பவுடர்
வேற
கேட்குதா
?”
“
அப்பத்தான்
பிள்ளை
எண்ணெய்
வழியாது
.”
எனப்
பதில்
கொடுத்த
கயல்விழி,
“
போட்டது
தெரியாத
மாதிரி
போடணும்
.”
என்றாள்
.
“
உனக்கு
என்ன
உங்க
அம்மா
எல்லா
வேலையும்
பார்ப்பாங்க
.
என்
வீட்ல
நான்
இல்ல
எல்லா
வேலையும்
செஞ்சு
வச்சிட்டு
வர
வேண்டியதா
இருக்கு
.
கிளம்புற
அவசரத்துல
அப்படியே
போட்டுட்டு
வரேன்
.”
“
எதாவது
சாக்கு
சொல்லு
.
ஒரு
பத்து
நிமிஷம்
முன்னாடி
கிளம்பினா
என்ன
?
அன்னைக்கு
உன்னைத்தான்
பயலுங்க
கேலி
பண்ணாங்க
.”
“
என்னன்னு
?”
“
ம்ம்
..
.
சுண்ணாம்பு
அடிச்ச
சுவருன்னு
.”
“
இருக்கட்டும்
,
ஒரு
நாள்
என்கிட்டே
மாட்டாமலா
போயிடுவானுங்க
,
அப்ப
இந்தத்
தேன்மொழி
யாருன்னு
காட்றேன்
.”
ஆண்கள்
பெண்கள்
இருபாலரும்
படிக்கும்
கல்லூரி
என்றாலும்
,
மாணவர்கள்
மாணவிகளிடம்
அத்தனை
எளிதாகப்
பேசி
விட
முடியாது
.
ஜாடைமாடையாகத்
தான்
பேசுவார்கள்
.
வகுப்பறையில்
கூட
மாணவர்கள்
ஒரு
பக்கம்
,
மாணவிகள்
ஒரு
பக்கம்
என்றுதான்
உட்கார்ந்து
இருப்பார்கள்
.
பாண்டியும்
கயல்விழியின்
வகுப்புதான்
.
மாநிறத்தில்
கலையான
முகம்
.
மிகவும்
நன்றாகப்
படிப்பான்
.
ஒருநாள்
பேருந்தில்
கல்லூரிக்குச்
செல்லும்போது,
படியில்
நின்று
கொண்டு
வந்தவன்
,
அவன்
நோட்டுப்
புத்தகத்தை
ஜன்னல்
வழியாக
,
யார்
இருக்கிறார்கள்
எனப்
பார்க்காமல்
கொடுக்க
…
கயல்விழியும்
தேன்மொழியும்
தான்
உட்கார்ந்து
இருந்தனர்
.
நோட்டை
திறந்து
பார்த்த
தேன்மொழி
, “
ஹே,
நம்ம
பாண்டியோட
நோட்டு
டி
.”
என்றதும்
,
கயல்விழி
அதை
வாங்கிப்
பார்க்க
…
அது
அவனின்
கணக்கு
நோட்டு
.
முன்தினம்
கணக்கு
சார்
வீட்டுபாடம்
கொடுத்த
கணக்கை
போட
முடியாமல்
திணறி
,
அப்படியே
கயல்விழி
விட்டிருந்தாள்
.
அதைப்
பாண்டி
சரியாகப்
போட்டிருக்க
….
ஏற்கனவே
சார்
திட்டுவாரோ
எனப்
பயந்து
கொண்டு
இருந்தவள்
,
அவள்
நோட்டை
திறந்து
அந்தக்
கணக்கை
காபி
அடித்தாள்
.
அடுத்த
நிறுத்தத்தில்
பேருந்து
நின்று
விட்டு
மீண்டும்
கிளம்ப
,
கூட்டம்
கொஞ்சம்
குறைத்து
இருந்தது
.
ஜன்னல்
வழியாக
அவள்
எழுதுவதைப்
பார்த்த
பாண்டிக்கு
சிரிப்பாக
வந்தது
.
வேகமாக
எழுதி
முடித்து
விட்டு
நிமிர்ந்தவள்
,
பாண்டி
தன்னையே
பார்க்கவும்
,
அவளுக்கு
ஒரு
மாதிரியாகி
விட்டது
.
அன்றிலிருந்து
தினமும்
பாண்டி
அவனின்
நோட்டை
தேன்மொழியிடம்தான்
கொடுப்பான்
.
அதை
வாங்கிக்
கயல்விழி
கணக்கை
பார்த்து
போட்டுக்கொள்வாள்
.
முதல்
செமஸ்டர்
நெருங்க
…
ஒருநாள்
வகுப்பிற்குள்
கயல்விழி
நுழையும்போது
,
பாண்டி
அவனின்
நண்பனிடம்
பேசுவது
போல்
சத்தமாகப்
பேசினான்
.
“
இத்தனை
நாள்
சாரை
ஏமாத்தியாச்சு
.
பரீட்சை
வரப்போகுதே
மார்க்
வந்தா
தெரிஞ்சு
போகுமே
…”
என
அவன்
கயல்விழியைப்
பார்த்துக்
கொண்டே
சொல்ல
…
அவன்
என்ன
சொல்கிறான்
என
அவளுக்கு
நன்றாகவே
புரிந்தது
.
வீட்டுப்
பாடத்தைக்
காப்பி
அடித்துக்
காட்டிவிட்டாள்
.
ஆனால்
பரிட்ச்சையில்
கணக்கு
போட
தெரியாமல்
என்ன
செய்வாள்
?
“
ஹே
தேனு
,
அவன்கிட்ட
நமக்குக்
கணக்கு
சொல்லி
கொடுக்கச்
சொல்லுடி
.”
எனக்
கயல்விழி
நச்சரிக்க
…
வேறுவழியில்லாமல்
தேன்மொழி
பாண்டியிடம்
கணக்கு
சொல்லித்
தர
சொல்லி
கேட்டாள்
.
தேன்மொழியும்
பாண்டியும்
ஒரே
சமூகத்தைச்
சேர்ந்தவர்கள்
.
அவர்கள்
இருவரும்
பேசிக்கொண்டால்
பிரச்சனை
வராது
.
கல்லூரியில்
கூட
அவரவர்
ஆட்களோடுதான்
நட்பு
பாராட்டுவார்கள்
.
பெற்றோரே
,
நம்ம
ஆளுங்க
கூட
மட்டும்
பேச்சு
வச்சுக்க
எனச்
சொல்லித்தான்
அனுப்புவார்கள்
.
ஆனால்
கயல்விழிதான்
எந்த
ஏற்றத்தாழ்வும்
பார்க்காமல்
தேன்மொழியோடு
நட்பு
பாராட்டுவாள்
.
அன்றிலிருந்து
வகுப்பு
இல்லாத
வேளைகளில்
,
வகுப்பறையிலேயே
பாண்டி
கணக்கு
சொல்லிக்
கொடுக்க
…
கயல்விழி
,
தேன்மொழியோடு
இன்னும்
சிலரும்
கற்றுக்
கொண்டனர்
.
அந்தச்
செமஸ்டரில்
கணக்குப்
பரீட்சை
அன்று
,
பாண்டி
கயல்விழியையே
பார்த்துக்
கொண்டு
இருந்தான்
.
அவள்
ஒழுங்காக
எழுதுவாளா
என
அவனுக்குக்
கவலை
.
கேள்வித்தாளை
கையில்
வாங்கிய
கயல்விழி
அதைப்
படித்துப்
பார்த்தவள்
.
பாண்டியை
பார்த்து
நம்பிக்கையாகப்
புன்னகைக்க
….
அப்போதுதான்
அவனுக்கு
நிம்மதியாக
இருந்தது
.
அவள்
பரிட்ச்சை
நன்றாகவே
எழுதி
இருந்தாள்
.
மறுநாள்
வழக்கம்
போல்
கல்லூரிக்குச்
செல்லும்போது
,
பாண்டி
அவனின்
நோட்டை
கொடுக்க
…
அதில்
கயல்விழி
எதோ
எழுதுவதைப்
பார்த்தான்
.
பாண்டிக்கு
அது
என்ன
என்று
தெரிந்து
கொள்ளும்
வரை
பரபரப்பாக
இருந்தது
.
தேன்மொழி
கொடுத்துவிட்டு
சென்ற
நோட்டை
அவன்
திறந்து
பார்க்க
…
அதில்
நன்றி
என்று
எழுதி
இருந்தது
.
அதை பாண்டி பிடித்துக் கொண்டான். அன்றிலிருந்து
நோட்டில்
அவன்
எதாவது
எழுதி
வைப்பதும்
,
அதற்குக்
கயல்விழி
பதில்
எழுதுவதுமாக
நாட்கள்
சென்றது
.
இருவரும்
நேரடியாகப்
பேசிக்
கொள்ளததால்
…
தேன்மொழியைத்
தவிர
மற்ற
யாருக்கும்
அவர்கள்
இடையே
இருந்த நட்பு தெரியாது
.
முதலில்
சாதாரணமாகத்தான்
எதாவது
எழுதுவான்
. ‘
என்ன
சாப்பிட்ட
?’, ‘
வீட்டுப்
பாடம்
செஞ்சிட்டியா
?’
என
ஆரம்பித்து
‘
இன்னைக்கு
நீ
ரொம்ப
அழகா
இருக்கே
.’
எனப்
பாதை
மாற
ஆரம்பித்து
, ‘
உன்னை
எனக்குப்
பிடிச்சிருக்கு
.
என்னை
உனக்குப்
பிடிச்சிருக்கா
?’
என்ற
கேள்வியில்
வந்து
நின்றது
.
அவன்
காதலிக்கிறேன்
என்பதைத்
தான்
மறைமுகமாகச்
சொல்கிறான்
எனப்
புரியாத
கயல்விழி
,
பிடித்திருக்கு
என
எழுதி
விட்டாள்
.
பாண்டி
அவளும்
தன்னைக்
காதலிப்பதாகக்
கனவு
உலகத்தில்
மிதந்தான்
.
தேன்மொழியை
எப்படி
அவளுக்குப்
பிடிக்குமோ,
அப்படித்தான்
பாண்டியையும்
கயல்விழிக்குப்
பிடித்திருந்தது
.
பாண்டி
காதலை
மனதில்
வளர்த்துக்கொள்ள
…
கயல்விழி
அவனை
நண்பனாகத்தான்
பார்த்தாள்
.
ஒருநாள்
இதயம்
ஒன்றின்
படம்
வரைந்து
,
அதில்
இருவரின்
பெயரையும்
பாண்டி
எழுதி
வைத்திருக்க
…
அப்போதுதான்
அவனின்
உண்மையான
எண்ணம்
கயல்விழிக்குப்
புரிந்தது
.
உண்மையாகவே
அவள்
பயந்து
விட்டாள்
.
அன்றிலிருந்து
அவள்
பாண்டியை
நிமிர்ந்து
கூடப்
பார்ப்பது
இல்லை
.
சில
நாட்கள்
அவளைக்
கவனித்த
பாண்டி
தவிக்க
ஆரம்பித்தான்
.
கயல்விழி
பேருந்தில்
உட்காரும்
இருக்கையையும்
மாற்றிக்
கொண்டாள்
.
தேன்மொழிக்கு
ஒன்றும்
புரியவில்லை
.
அவளும்
கயல்விழியிடம்
எதுவும்
கேட்கவில்லை
.
ஒருநாள்
தேன்மொழி
வீட்டிற்காகத்
தண்ணீர்
எடுக்க ஆற்றிற்கு
சென்ற
போது
,
அவளிடம்
வந்த
பாண்டி
,
அவன்
கயல்விழியை
விரும்புவதாகச்
சொல்ல
…
கேட்ட
அவளுக்கும்
அதிர்ச்சிதான்
.
“
என்ன
சொல்ற
பாண்டி
இதெல்லாம்
நடக்குமா
?”
“
நடக்காம
என்ன
?
உன்
ப்ரண்ட்
ஏன்
திடிர்ன்னு
மாறிட்டா
?”
என
அவன்
கயல்விழியைக்
குறை
சொல்ல
…
“
நிஜமாவே
கயல்
உன்னை
அப்படி
நினைக்கலை
…
எனக்குத்
தெரியும்
.
அவ
உன்னை
ப்ரண்டா
தான்
பார்க்கிறா
.”
தேன்மொழி
சொல்ல
,
அதைப்
பாண்டி
நம்புவதாக
இல்லை
.
“
இல்லை
அவ
என்னை
விரும்புறா
.
என்னைப்
பிடிச்சிருக்குன்னு
சொன்னாளே
…
இப்ப
என்னை
ஏமாத்த
பார்க்கிறா
?
அவ
மட்டும்
இல்லைனா
நான்
செத்துடுவேன்
.”
பாண்டி
சொல்லிவிட்டு
சென்று
விட்டான்
.
இதை
அப்படியே
தேன்மொழி
கயல்விழியிடம்
சொல்ல
…
அவன்
செத்து
விடுவான்
என்றதும்
,
அவளின்
இரக்க
குணம்
தலை
தூக்க
….
அவன்
உண்மையிலேயே
எதாவது
செய்து
கொள்வானோ
என்ற
பயத்தில்
,
அவன்
விருப்பத்திற்குக்
கயல்விழி
சம்மதித்தாள்
.
அவள்
வீட்டின்
சூழ்நிலை
அதற்கு
ஏற்ற
மாதிரிதான்
இருந்தது
.
வீட்டில்
அவளிடம்
அவள்
அம்மாவை
தவிர
வேறு
யாரும்
அன்பு
பாராட்டவே
இல்லை
.
Advertising
Advertising