Toggle navigation
Home
Tamil Novels
What's new
Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள்,
[email protected]
என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
Advertising
புது வெள்ளை மழை 13
Post Views:
2,103
புது
வெள்ளை
மழை
அத்தியாயம்
– 13
அன்று
இரவு
உணவிற்குப்
பிறகு
குழலியை
தவிர
மற்ற
அனைவரும்
காரில்
கடற்கரைக்குக்
கிளம்பினர்
.
பரணி
காரை
ஓட்ட
அவன்
அருகில்
வருணும்
,
பின்
இருக்கையில்
தாரணி
,
கயல்விழி
,
நந்தா
உட்கார்ந்து
சென்றனர்
.
கயல்விழி
அடிக்கடி
தன்
கணவனைப்
பார்க்க
,
அவள்
எதோ
சொல்ல
வருகிறாள்
எனப்
புரிந்து
,
அவன்
அவள்
பக்கமாகக்
குனிந்து
என்ன
என்றான்
.
அவன்
சட்டென்று
வெகு
அருகில்
வரவும்
,
கயல்விழிக்கு
ஒரு
நொடி
பேச்சே
வரவில்லை
.
வேகமாகச்
சமாளித்துக்
கொண்டு
, “
சிற்பம்
எல்லாம்
இருக்குமே
,
அந்தப்
பீச்
பேர்
என்ன
?”
என
மெதுவான
குரலில்
கேட்க
,
அவள்
எதற்குக்
கேட்கிறாள்
எனப்
புரிந்து
கொண்டவன்
,
அவள்
காதில்
, “
மஹாபலிபுரம்
.”
எனக்
கிசிகிசுக்க
….
கயல்விழி
அந்தப்
பேரை
மனதிற்குள்
பதிய
வைத்துக்
கொண்டாள்
.
வருண்
, “
புருஷனும்
,
பொண்டாட்டியும்
என்ன
ரகசியம்
பேசுறீங்க
?”
நந்தா
, “
அதுதான்
நீயே
ரகசியம்ன்னு
சொல்லிட்டியே
டா
.”
“
பகல்ல
வந்தாதான்
சிற்பம்
எல்லாம்
நல்லா
தெரியும்
.
நைட்
போறோம்
பரவாயில்லையா
கயல்
.”
வருண்
கேட்க
…
“
பரவாயில்லை
அண்ணா
,
அந்தப்
பீச்லதான்
சிர்ப்பமே
இல்லையே
.”
கயல்
சொன்னதும்
,
அவளை
ஆச்சர்யமாகப்
பார்த்தவன்
,
“
அங்க
சிற்பம்
இருக்கு
.”
என்றான்
.
“
எனக்குத்
தெரியும்
,
அது
வேற
இடம்
.
மஹாபலிபுரம்
தான
.”
“
யாரு
சொன்னா
?
இவனா
.
டேய்
எட்டப்பா
.”
என
வருண்
நந்தாவை
பார்க்க
…
அவன்
சிரித்தான்
.
“
அவர்
ஒன்னும்
சொல்லலை
எனக்கே
தெரியும்
.”
“
பொய்
சொல்லாத
,
இவன்தான்
சொல்லி
இருப்பான்
.
டேய்
இதைச்
சொன்னியே
,
மெரீனாவில்
டால்பின்
வருமே
அதைச்
சொன்னியா
?”
டால்பின்
என்றதும்
ஆச்சர்யமான
கயல்விழி
“
நிஜமாவே
டால்பின்
வருமா
?”
என
வாயை
பிளக்க
…
“
பின்னே
அதனாலதானே
நைட்
போறோம்
.
இந்த
டைம்தான்
வரும்
.”
“
எத்தனை
வரும்
?”
“
அடிப்பாவி
என்ன
சொன்னாலும்
நம்புறாளே
.”
என
நந்தா
நினைக்க
…
தாரணியும்
,
பரணியும்
சிரிப்பை
அடக்கிக்
கொண்டு
இருந்தனர்
.
“
நிறைய
வரும்
.
வா
வந்து
பாரு
.”
என்ற
வருண்
,
யாராவது
இல்லைன்னு
சொன்னீங்க
,
அவ்வளவுதான்
என்பது
போல்
மற்றவர்களைப்
பார்த்தான்
.
பீச்
வந்ததும்
,
காரை
நிறுத்திவிட்டு
இறங்கி
மணலில்
நடந்தனர்
.
கடற்கரை
காற்று
முகத்தில்
மோத
,
அந்த
நேரத்தில்
நடந்து
செல்வதே
சுகமாக
இருந்தது
.
“
என்ன
இங்க
வேற
யாருமே
இல்லை
?”
கயல்விழி
கேட்க
…
“
அது
அந்தப்
பக்கம்
கூட்டமா
இருக்கும்
அண்ணி
.
இங்க
நாம
ப்ரீயா
இருக்கலாம்
.”
என்றான்
பரணி
.
“
இந்தப்
பக்கம்தான்
கயல்
,
டால்பின்கள்
இருக்கும்
.
அதுதான்
இந்தப்
பக்கம்
வந்தோம்
.”
வருண்
சொல்ல
…
அப்படியா
என்பது
போல்
கயல்விழி
பார்க்க
…
“
டேய்
வருண்
,
நீ
என்
பொண்டாட்டியை
வச்சு
காமெடி
பண்ணிட்டு
இருந்தேன்னு
வச்சுக்கோ
,
என்கிட்டே
அடி
வாங்கிடுவ
சொல்லிட்டேன்
.”
“
அப்ப
இங்க
டால்பின்
இல்லையா
?”
என்ற
கயல்விழியை
நந்தா
ஒரு
பார்வை
பார்க்க
…
அதன்பிறகு
கயல்விழி
வாயை
திறப்பாளா
என்ன
?
இரவு
நேரம்
என்பதால்
கடல்
வரை
செல்லாமல்
,
வெளிச்சமாக
இருந்த
இடமாகப்
பார்த்து
உட்கார்ந்தனர்
.
“
கயல்
அங்க
பார்த்தியா
,
அதுதான்
எம்
.
ஜி
.
ஆர்
சமாதி
.”
“
என்ன
பீச்
பக்கத்தில
போய்ச்
சமாதி
இருக்கு
.”
“
பீச்
பக்கத்தில
இல்லை
மா
,
பீச்லதான்
இருக்கு
.
வரியா
கிட்ட
போய்ப்
பார்க்கலாம்
.”
“
வேண்டாம்
,
வேண்டாம்
.
இந்த
நேரத்தில
போய்
யாரவது
சமாதிக்கு
போவாங்களா
?
காத்துக்
கருப்பு
சுத்தும்
.”
அவள்
மறுத்த
வேகத்தைப்
பார்த்து
எல்லோருக்கும்
சிரிப்பு
வந்தது
.
“
சரி
இப்ப
என்ன
பண்றது
?”
வருண்
கேட்க
…
பக்கத்தில்
ஒரு
குடும்பம்
வட்டமாக
உட்கார்ந்து
விளையாடிக்
கொண்டு
இருந்தனர்
.
“
நாமும்
விளையாடலாமா
?”
தாரணி
கேட்க
,
“
போலீஸ்
போய்
இது
மாதிரி
எல்லாம்
விளையாடுவாங்களா
?”
கயல்
ஆச்சர்யப்பட
…
“
ஏன்
நாங்க
மட்டும்
மனுஷங்க
இல்லையா
?”
என்ற
நந்தா
தன்
பாக்கட்டில்
இருந்து
கர்சீப்
எடுத்தவன்
, “
இந்தா
பரணி
நீ
ஆரம்பி
.”
எனத்
தன்
தம்பியிடம்
கொடுத்தான்
.
பரணி
நான்கு
போரையும்
சுற்றி
வந்தவன்
,
தாரணியின்
பின்புறம்
கர்சிப்
போட
,
அவள்
அதை
எடுத்துக்
கொண்டு
அவனைப்
பிடிக்கத்
துரத்தினாள்
.
பரணி
அவள்
கையில்
மாட்டிக்கொள்ளவே
இல்லை
.
சிறிது
நேரத்தில்
அவனைப்
பிடிக்க
முடியாமல்
,
அவள்
திரும்பி
வர
…
இப்போது
அவள்
முறை
,
அவள்
வருணுக்கு
போட
,
வருண்
நந்தாவுக்குப்
போட
,
நந்தா
கயல்விழிக்கு
போட்டான்
.
கயல்விழி
தன்
கணவனைப்
பிடிக்கத்
துரத்த
….
நந்தா
கடலை
நோக்கி
ஓடினான்
.
கயல்விழி
புடவை
கட்டி
இருந்ததால்
மெதுவாகத்தான்
ஓட
முடிந்தது
.
இருவரும்
ஆள்
நடமாட்டாம்
இல்லாத
இடத்திற்கு
வந்திருந்தனர்
.
கயல்
திரும்பி
பார்க்க
…
அவர்கள்
உட்கார்ந்த
இடத்தில்
இருந்து
வெகு
தூரம்
வந்திருந்தாள்
.
“
உங்க
அண்ணன்
பொண்டாட்டியை
தனியா
தள்ளிட்டு
போயிட்டான்
.
இப்போதைக்கு
வர
மாட்டான்
.
வாங்க
நாம
அப்படியே
நடந்திட்டு
வருவோம்
.”
என
வருண்
மற்ற
இருவரோடு
வேறுபக்கம்
சென்றான்
.
“
என்னங்க
எனக்குப்
பயமா
இருக்கு
நில்லுங்க
.”
கயல்
சத்தமாகக்
குரல்
கொடுக்க
…
நந்தா
கடலுக்கு
வெகு
அருகில்
சென்றிருந்தவன்
,
அங்கேயே
உட்கார்ந்தான்
.
கயல்
தன்
கணவனிடம்
சென்றாள்
.
“
ஏன்
இங்க
வந்தீங்க
?”
“
நீ
இன்னும்
கடலை
பார்க்கலையே
.”
“
இந்த
இருட்டில
என்ன
தெரியும்
.
எனக்கு
அந்தப்
பக்கம்
பார்க்கவே
பயமாயிருக்கு
.”
என்றவள்
,
திரும்பி
தன்
கணவனைப்
பார்த்தபடி
உட்கார்ந்தாள்
.
“
எதுக்கெடுத்தாலும்
பயமா
இருக்குன்னு
சொல்றதை
முதல்ல
விடு
கயல்
.”
“
நீ
பார்க்க
பயப்படுற
இந்தக்
கடலுக்குள்ள
,
இப்ப
கூட
ஆயிரகணக்கானவங்க
இருக்காங்க
தெரியுமா
?”
“
திரும்பி
பாரு
.”
என
அவன்
காட்டிய
திசையில்
பார்த்தவளின்
முகம்
மலர்ந்தது
.
தூரத்தில்
வெளிச்சங்கள்
முதலில்
சிறு
சிறு
புள்ளிகளாகத்
தெரிந்து
.
பிறகு
சர
விளக்கு
போல்
தெரிந்தது
.
அவை
பெரிய
கப்பலில்
இருந்து
தெரிந்த
வெளிச்சங்கள்
.
உற்று
பார்க்க
பார்க்க
…
அவள்
பார்வைக்கு
இன்னும்
நிறையக்
கப்பல்கள்
தட்டுபட்டது
.
“
பார்த்தியா
அந்தப்
பக்கமும்
மனுஷங்கதான்
இருக்காங்க
.
இப்ப
பயமா
இருக்கா
?”
நந்தா
கேட்க
…
இல்லையென்று
தலையசைத்த
கயல்விழி
,
இன்னும்
ஆர்வமாகக்
கடலைத்தான்
பார்த்துக்
கொண்டு
இருந்தாள்
.
நந்தா
சிறிது
நேரம்
அவளின்
முகத்தையே
பார்த்துக்
கொண்டு
இருந்தவன்
, “
கிளம்புவோமா
…
ரொம்ப
நேரம்
ஆகிடுச்சு
.”
என்றதும்
,
கயல்விழி
எழுந்துகொள்ள
,
இருவரும்
திரும்பி
நடந்தனர்
.
அப்போது
லுங்கி
கட்டிய
ஆள்
இவர்களை
நோக்கி
வர
….
கயல்விழி
பயந்து
போய்
நந்தாவின்
கையை
இறுக
பிடித்தாள்
.
ஆனால்
அவனோ
எதிரில்
வந்தவனைப்
பார்த்துப்
புன்னகைத்தான்
.
“
எப்ப
அண்ணா
வந்தீங்க
?”
என
அவன்
கேட்க
…
கயல்விழி
இருவரையும்
ஆச்சர்யமாகப்
பார்த்தாள்
.
“
இன்னைக்குதான்
வந்தேன்
.
இவங்க
என்னோட
மனைவி
.”
“
உங்களுக்குக்
கல்யாணம்
ஆகிடுச்சா
?
சொல்லவே
இல்லை
.”
என்றவன்
,
கயல்விழியைப்
பார்த்து
“
வணக்கம்
அண்ணி
.”
என்றான்
.
கயல்விழி
பதிலுக்கு
வணக்கம்
எனக்
கரம்
குவிக்க
…
அவன்
அவளை
ஆச்சர்யமாகப்
பார்த்தான்
.
“
அண்ணி
ஊர்ப்பக்கமா
அண்ணா
.”
“
ஏன்
கேட்கிற
?”
“
சிட்டி பொண்ணுங்க
எல்லாம்
எங்களை
மாதிரி
ஆளுங்களை
மதிக்க
மாட்டாங்களே
,
அதுதான்
கேட்டேன்
.”
அவன்
சொன்னதைக்
கேட்டு
சிரித்த
நந்தா
,
“
நானும் மெட்ராஸ் பையன்தான் டா
.”
என்றவன்
,
கயல்விழியிடம்
திரும்பி
, “
இவன்
ஸ்டீபன்
,
இங்க
இருக்கக்
குப்பத்தைச்
சேர்ந்தவன்
.
நான்
படிக்கும்
போது
,
தினமும்
காலையில
இங்க
வந்துதான்
உடற்பயிற்சி
பண்ணுவேன்
.
அப்ப
பழக்கம்
.”
என்றான்
.
“
எப்ப
அண்ணா
கடலுக்குப்
போகலாம்
.
இந்தமுறை
அண்ணியையும்
கூடிட்டு
போகலாமா
?”
“
இந்த
முறை
இல்லை
டா
.
அடுத்த
முறை
வரும்போது
தகவல்
சொல்றேன்
.
சரி
நாங்க
கிளம்புறோம்
.
இந்தப்
பணத்தை
வச்சுக்கோ
.
நம்ம
பசங்களுக்கு
எங்க
கல்யாண
ட்ரீட்ன்னு
சொல்லிடு
.”
“
சரிண்ணா
…”
எனப்
பணத்தை
வாங்கிக்கொண்டு
சந்தோஷமாக
விடைகொடுத்தான்
.
அவனை
விட்டு
தள்ளி
வந்ததும்
, “
எப்பவும்
உருவத்தை
வச்சு
நல்லவங்களா
கெட்டவங்களான்னு
முடிவு
பண்ணாத
.
இது
சிட்டி
,
இங்க
அழுக்கா
இருக்கிறவங்க
எல்லாம்
கெட்டவங்களும்
இல்லை
.
அழகா
உடை
அணிஞ்சு
இருக்கிறவங்க
எல்லாம்
நல்லவங்களும்
இல்லை
.
…
புரியுதா
.”
“
சாரி
,
திடிர்ன்னு
பார்த்ததும்
பயந்துட்டேன்
.”
“ஓகே
,
ஆனா
யாரு
என்ன
சொன்னாலும்
,
உனக்கு
நல்லாத்
தெரியாம
நம்பிடாத
.”
“
வருண்
அண்ணா
தானே
சொன்னாங்க
.”
“
அவன்
உன்னோட
விளையாடுறான்
.
ஆனா
வெளி
ஆளுங்ககிட்ட
கவனமா
இருக்கணும்
.”
“
அவங்க
சொல்றது
பொய்ன்னு
எப்படித்
தெரியும்
?”
கயல்விழி
கேட்க
…
அவள்
வெகுளித்தனத்தைப்
பார்த்து
நந்தா
புன்னகைத்தான்
.
“
அவங்க
சொல்றது
உண்மைன்னு
உனக்குத்
தெளிவாகிற
வரை
கேள்வி
கேளு
.
ரெண்டு
கேள்வி
அதிகமா
கேட்கிறதுனால
யாருக்கு
என்ன
கஷ்ட்டம்
சொல்லு
.”
“
ம்ம்
..
.
சரி
.”
“
அதோட
நாட்டில
என்ன
நடக்குதுன்னு
தெரிஞ்சு
வச்சுக்கோ
.
பேப்பர்
படி
,
டிவியில்
நியூஸ்
பாரு
.
இதுவரை
வீட்டு
பறவையா
இருந்துட்ட
…
இனி
வெளி
உலகத்தையும்
தெரிஞ்சிக்கணும்
.”
“
நான்
எப்பவும்
உன்னோட
இருக்க
முடியாது
கயல்
.
அதுவும்
இப்ப
கொஞ்ச
நாளைக்குக்
கண்டிப்பா
முடியாது
.
நான்
இன்னும்
ரெண்டு
நாள்ல
கிளம்பிடுவேன்
.
அப்புறம்
நீதான்
உன்னைப்
பார்த்துக்கணும்
.”
“
நீ
இங்க
இருந்துப்பியா
?”
எனக்
கேட்ட
நந்தாவின்
குரலில்
,
அத்தனை
கவலை
தெரிந்தது
.
உடன்
அவனது
கவலையைப்
போக்க
வேண்டும்
என்ற
எண்ணம்
கயலுக்குத்
தோன்ற
. “
அதுதான்
அத்தை
,
வருண்
அண்ணா
,
தாரணி
அண்ணி
,
பரணி
எல்லாம்
இருக்காங்களே
.
என்னைப்பத்தி
கவலைப்படாம
போயிட்டு
வாங்க
.
நான்
இருந்துப்பேன்
.”
என
அவள்
நம்பிக்கையாகச்
சொல்ல
..
நந்தாவின்
முகமும்
மலர்ந்தது
.
காரில்
திரும்பி
செல்லும்போது
வழியிலேயே
வருணும்
,
தாரணியும்
அவர்கள்
வீட்டில
இறங்கிக்
கொள்ள
… “
அம்மாகிட்ட
நாளைக்கு
வீட்டுக்கு
வரோம்ன்னு
சொல்லு
டா
.”
என்றான்
நந்தா
.
“
கயல்
,
நாளைக்குக்
கண்டிப்பா
வரணும்
என்ன
?
ஆனா
உங்க
வீட்லயே
சாப்டிட்டு
வந்திடுங்க
.
இங்க
உங்க
தாரணி
அண்ணி
சமையல்தான்
.
அப்புறம்
எதாவது
எக்குத்தப்பாக
நடந்தா
நான்
பொறுப்பு
இல்லை
.”
வருண்
சொல்ல
…
கயல்விழியால்
சிரிப்பை
அடக்க
முடியவில்லை
.
“
சரிண்ணா
…”
என
அவள்
தலையாட்ட
…. “
உள்ள
வாங்க
உங்களுக்கு
வச்சுகிறேன்
.”
என்றாள்
தாரணி
கடுப்பாக
.
“
உனக்கு
அடிவாங்காம
தூங்க
முடியாதே
.
போ,
போய்
நல்லா
வாங்கு
.”
என்ற
நந்தா
,
பரணியைக்
காரை
எடுக்கச்
சொன்னான்
.
வீட்டிற்கு
வந்தவர்களைப்
பார்த்து
குழலி
, “
என்ன
சிற்பம்
எல்லாம்
பார்த்தாச்சா
?”
எனப்
புன்னகையோடு
கேட்க
,
“
போங்க
அத்தை
.
அங்க
சிற்பம்
எல்லாம்
கிடையாது
.”
எனக்
கயல்
வெட்கப்பட
…
“
சரி
பால்
குடிச்சிட்டு
தூங்குங்க
.”
என்றதும்
,
கயல்
அவளே
சென்று
எல்லோருக்கும்
பால்
கொண்டு
வந்தாள்
.
அவள்
குழலிக்கும்
,
பரணிக்கும்
கொடுத்துவிட்டு
திரும்ப
,
அதற்குள்
நந்தா
அங்கு
இல்லை
.
அவன்
மாடி
ஏறி
சென்று
கொண்டிருந்தான்
.
“
என்னங்க
பால்
,”
என்
அவள்
சொல்வது
காதில்
விழாதது
போல்
,
அவன்
அறைக்குச்
சென்று
விட
….
கயல்விழியும்
அவன்
பின்னே
சென்றாள்
.
“
இந்தாங்க
பால்
.”
அவன்
எடுத்ததும்
,
கயல்விழி
வெளியே
செல்ல
திரும்ப
,
“
இப்ப
எங்கப்
போற
?
இங்கயே
இரு
.”
என்றான்
நந்தா
.
அவனோடு
தனியறையில்
இருப்பது
தயக்கமாக
இருந்த
போதிலும்
,
சரி
என்பதாகத்
தலையை
உருட்டினாள்
.
இருவரும்
பால்
குடித்ததும்
,
அவள்
தம்ளர்களைக்
கீழே
வைக்கச்
செல்ல
… “
கொடு
நான்
போய்
வச்சிட்டு
வரேன்
.”
என்று
கீழே
சென்றவன்
,
திரும்பி
வரும்
போது
,
அவளது
பெட்டியையும்
கொண்டு
வந்தான்
.
“
டிரஸ்
மாத்திக்கோ
.”
என
அவன்
சொல்ல
….
மாற்று
உடைகளை
எடுத்துக்
கொண்டு
குளியல்
அறைக்குள்
சென்றாள்
.
நைட்டி
அணிந்து
கொண்டு
வருவாள்
என்று
பார்த்தால்
,
பாவாடை
சட்டை
அணிந்து
கொண்டு
வந்தாள்
.
மேலே
ஒரு
தாவணியை
வேறு
போர்த்திக்கொண்டு
வந்தாள்
.
நைட்டியை
விட
இதுதான்
ஒரு
மார்க்கமாக
இருப்பதாக
அவனுக்குத்
தோன்றியது
.
“
சட்டைதான
போட்டிருக்க
,
அதற்கு
மேல
ஏன்
ஷால்
போட்டிருக்க
.”
அவன்
சந்தேகம்
கேட்க
,
“
மேலாக்கு
போடாம
இருக்கக்
கூடாதுன்னு
எங்க
அம்மா
சொல்வாங்க
.”
என்றாள்
.
“
ஓ
…
சரி
படுத்துக்கோ
.”
என்றவன்
,
அவளுக்குப்
படுக்கையைக்
காட்டினான்
.
படுக்கச்
சென்றவள்
,
நினைவு
வந்து
,
உமா
கொடுத்த
மாத்திரையை
எடுத்து
போட்டுக்
கொண்டாள்
.
“
என்ன
மாத்திரை
அது
?”
“
உமா
அக்கா
கொடுத்தாங்க
.
போட்டா
தூக்கம்
நல்லா
வருமாம்
.
கனவே
வராதாம்
.”
என்றாள்
.
நந்தாவுக்குத்
தெரியும்
.
அவன்
உமாவிடம்
மாலை
பேசி
இருந்தான்
.
ஆனால்
வேண்டுமென்றேதான்
கேட்டான்
.
அந்த
அறையில்
கட்டில்
இல்லை
.
மெத்தை
மட்டும்
தான்
.
ஆனால்
மெத்தை
பெரிதாக
இருந்தது
.
கயல்விழி
சுவரின்
ஓரமாக
ஒட்டி
படுத்துக்
கொண்டாள்
.
“
பார்த்து
,
சுவத்தைப்
பேத்திட்டு
அந்தப்
பக்கம்
போயிட
போற
.”
நந்தா
சொல்ல
…
கயல்விழிக்கு
அவன்
கேலி
செய்கிறான்
என்ற
அளவு
புரிந்தது
.
டேப்ரெக்கார்டில்
இளையராஜா
பாடலை
மெலிதாக
ஒலிக்க
விட்டவன்
,
அவளின்
அருகே
சற்று
இடைவெளி
விட்டு
படுத்துக்
கொண்டான்
.
“
உனக்குப்
பாட்டு
தொந்தரவா
இருக்கா
?”
“
இல்லை
.”
“
எனக்கு
இப்படிப்
பாட்டு
கேட்டுட்டே
தூங்க
ரொம்பப்
பிடிக்கும்
.”
“
ம்ம்
…”
“
பூங்காற்று
உன்
பேர்
சொல்ல
கேட்டேனே
இன்று
.
நீரூற்று
என்
தோள்
கொஞ்ச
பார்த்தேனே
இன்று
.
தீர்த்தக்கரை
ஓரத்திலே
.
தேன்சிட்டுகள்
உள்ளத்திலே
கல்யாண
வைபோகம்தான்
.”
அந்தப்
பாட்டு
முடிந்து
அடுத்தப்
பாட்டு
ஆரம்பிக்கும்போது
பார்த்தால்
,
அதற்குள்
கயல்விழி
உறங்கி
இருந்தாள்
.
நேற்று
பயணம்
செய்தது
,
இன்று
அலைந்தது
எல்லாம்
சேர்ந்து
அசதியில்
உறங்கினாள்
.
அதையும்
விட
உமா
பேசியதும்
ஒரு
காரணம்
.
நந்தா
விலகி
இருந்த
தாவணியை
அவளுக்கு
ஒழுங்காகப்
போர்த்தி
விட்டான்
.
தான்
அவளை
நெருங்கினால்
,
அவள்
மறுக்க
மாட்டாள்
என்று
தெரியும்
.
ஆனால்
அப்படிச்
சேரும்போது
,
அவள்
மனதில்
எந்தக்
குழப்பமும்
இல்லாமல்
,
தான்
மட்டுமே
இருக்க
வேண்டும்
என்று
நினைத்தான்
.
அவள்
என்னவோ
தூங்கி
விட்டாள்
.
நந்தாதான்
உறங்குவதும்
,
நடுவில்
விழித்து
அவளைப்
பார்ப்பதுமாக
இருந்தான்
.
நள்ளிரவுக்கு
மேல்தான்
,
இனி
எழுந்துகொள்ள
மாட்டாள்
என
நிம்மதியாக
உறங்கினான்
.
Advertising
Advertising