‘அவள் பறந்து போனாளே…
என்னை மறந்து போனாளே…
நான் கைகள் நீட்டி தீண்டிடும் போது,
மறைந்து போனாளே…!’
பாடலை ‘பட்டென’ நிறுத்தினான் குரு.
கண்மூடி சாய்வு நாற்காலியில் அமர்ந்து பாடலில் லயித்திருந்த அஜய், கண்திறந்து பார்க்க, எதிரே குரு முறைத்துக்கொண்டு நிற்ப்பது தெரிந்ததும், மீண்டும் பழைய நிலைக்கே போனான்.
“அஜய்… உன் மனசுல என்ன நினைச்சுட்டு இருக்க நீ? பத்து பதினைஞ்சு வருஷ லவ்வே அசால்ட்டா புட்டுக்கிட்டு போகுது! நீ என்னவோ ரெண்டு வாரம் பேசிட்டு வாழ்கையே வெறுத்தவனாட்டம் வயலின் வாசிச்சுட்டு இருக்க?!”
கண்திறந்து மௌனமாய் பார்த்தான் அஜய்.
“இப்படி லுக் விட்டா என்ன அர்த்தம்? நான் தான் சொன்னேன்ல அவளுக்கு கல்யாணம் ஆகிருக்கும்ன்னு… ஒழுங்கா விசாரிக்காதது உந்தப்பு!”
“என் தப்பு தான்!” என்ற அஜய் மீண்டும் கண்மூடிக்கொள்ள,
“ம்ச்! டேய்… இப்படி பண்ணாதடா! உன்னை இப்படி பார்க்க என்னவோ மாறி இருக்கு! உனக்கு வேற பொண்ணா கிடைக்காது? நான் பாத்து கட்டிவைக்குறேன்!”
இகழ்ச்சியாய் வளைந்தன அஜய்யின் அதரங்கள்.
“அப்போ பொண்ணு கிடைக்காம தான் இவ்ளோ நாள் நான் கல்யாணம் பண்ணலன்னு சொல்றியா?” அஜய் கேட்க, ‘ஆம்’ என்று எப்படி சொல்ல முடியும் அவனால்?!
அஜய் இப்போது ‘இம்’ என்றாலும் கூட மறுநாளே திருமணம் வைக்க முடியும் எனும்போது எப்படி சொல்லுவான் உனக்கு பெண் கிடைக்காமல் தான் திருமணமாகவில்லை என…!
“ப்ச்! அஜய்! ஐ கான்ட் ஸீ யூ லைக் திஸ் டா! கப்பல் கவுந்தமாறி இருக்காத… சியர் அப் மேன்… ஷி ஸ் ஜஸ்ட் அ பாசிங் க்ளவுட்!”
இப்போது நிமிர்ந்து அமர்ந்து குருவை பார்த்த அஜய், “பாசிங் கிளவுட்? அவளா?” என்றவன், மறுப்பாய் தலையசைத்தான்.
“பத்து வருஷத்துக்கு முன்னாடி அவமேல வந்தது அட்ராக்ஷன், இன்பெக்சுவேஷன், க்ரஷ், ஈவன் லஸ்ட்’ன்னு கூட சொல்லு… நான் கேட்டுக்குறேன்… ஆனா, இப்போ இந்த வயசுல அவளை நான் பாத்தப்போ, அவதான் என் வாழ்க்கைன்னு தோனுச்சுடா! பாத்த நிமிஷத்துல இருந்தே அவளை என் மனைவியா தான் பாத்தேன், ரசிச்சேன்!” என்றவன், முகம் கசங்க,
“அவ ஏன்டா என்கிட்ட சொல்லல? நான் சொன்னேன்ல? அப்பா செத்தது, அம்மா திட்டுறது, அண்ணன், அக்கா செட்டில் ஆனது… நான் இன்னும் சிங்கிள்’ஆ நிக்குறது… எல்லாம் சொன்னேன்’ல? அப்போ அவளும் சொல்லிருக்கணும்ல? மனசுல கண்டதையும் நினைக்காம இருந்துருப்பேன்!” என்றான் கண்கள் கசிய.
“வீட்டுக்கே போக பிடிக்கலடா! அவளை பாத்த நாள் தொட்டு, இங்க வந்து நிப்பா, இங்க தான் சாமி கும்பிடுவா, இங்க தூங்குவா! இங்க உட்காருவான்னு ஒவ்வொரு இடத்துலையும் அவ பொருத்தி பொருத்தி பார்த்துட்டேன்!
இப்போ எதுவுமே நடக்க போறதில்லைங்குற நிஜம், என்னை கொல்லாம கொல்லுது!
ஒருத்தி மேல இவ்ளோ சீக்கிரத்துல பைத்தியம் ஆக முடியும்ன்னு எனக்கே தெரியாது டா! ஒவ்வொரு நிமிஷமும் அவ தான் இருக்கா எனக்குள்ள!
முன்ன அதை ரசிச்சேன்! இப்போ இன்னொருத்தன் பொண்டாட்டியை போய் மனசுல வச்சுருக்கியேன்னு என் மனசாட்சியே என்னை காரி துப்புது!” நெற்றியில் அறைந்துக்கொண்டு அஜய் அழ, விக்கித்து நின்றான் குரு.
அஜய்யை தடுக்கக்கூட அவன் அவயங்கள் முயலவில்லை.
“சத்தியமா தெரியாது மச்சி, நீ இவ்ளோ லவ் பண்றன்னு!” திகைத்து நின்ற வாக்கிலேயே குரு சொல்ல, விரக்தியாய் சிரித்த அஜய், “எனக்கும் போன வாரம் வரை தெரியாதுடா!” என்றான்.
சட்டென தன்னை மீட்டுக்கொண்ட குரு, “சரி வா நமக்கு ஷூட் இருக்கு இன்னும் ஒன் ஆர்’ல! செட்டிங் ஓகே’வான்னு சுவாதி கேட்டா! வந்து பாத்துடு! அப்பறம் காஸ்டியும்ல என்னவோ கரெக்ஷன் பண்ணனும்ன்னு சொல்லிருந்தியாம் முன்னாடி… ரீனா அதை செஞ்சுட்டா போல, பாத்துக்க சொன்னா!” என்று மளமளவென பேச,
அஜய், “நீ போ! நான் வரேன்!” என்று முடித்து விட்டான்.
அதற்குமேல் அவனை தொந்தரவு செய்யாமல் குரு போக, “கொஞ்ச நேரம் என்னை யாரும் டிஸ்டர்ப் பண்ணாதீங்க!” என்று சொல்லுபவனை வருத்ததுடன் பார்த்துக்கொண்டே வெளியேறினான் அவன்.
அந்த மூன்று மாடி கட்டிடத்தை நிமிர்ந்து பார்த்தாள் மாதங்கவதனா.
சிறு தயக்கத்துடன் உள்ளே நுழைந்தவள், ரிசெப்ஷன் போன்ற இடத்தில் சென்று நிற்க, அங்கே வரவேற்பாளரை காணவில்லை.
அவள் நிற்கும் இடத்தில் பெரிதாய் ஆட்கள் இல்லை என்றாலும், கண்முன்னே தெரியும் பெரிய கண்ணாடி கதவுக்கு பின்னே ஆட்கள் அநேகம் இருப்பது தெரிந்தது.
ஏதோ ஓர் உந்துதலில் வந்துவிட்டாள். வந்தது சரியா? தவறா? என்றுக்கூட தெரியவில்லை.
அப்படியே திரும்பி சென்றுவிடலாம் என அவள் எண்ணும்போதே அந்த கண்ணாடி கதவு திறக்கப்பட்டு, ஒரு நவநாகரீக மங்கை வெளிவந்தாள்.
“ஹலோ மேம்! ஐ’யம் மீரா. என்ன விஷயமா வந்துருக்கீங்க?” என்று அவள் கேட்க,
இதற்குமேல் தயங்கக்கூடாது என்றெண்ணி, “மிஸ்டர் அஜய் இருக்காரா?” என்றாள்.
“சார் உள்ளே தான் இருக்காரு! அப்பாயின்ட்மென்ட் இருக்கா மேம்?”
“இல்லையே! ஆனா அவர் ‘கார்ட்’ இருக்கு என்கிட்ட…”
“ஓ! என்ன விஷயமா பார்க்க வந்துருக்கீங்கன்னு சொன்னா நான் சார்’கிட்ட இன்போர்ம் பண்ணுவேன்!”
தயங்கியவள், “அஃபீசியல் இல்ல… பர்சனல்லா பார்க்க வந்தேன்!” என்றிட, “ஓகே மேம், யூ ஜஸ்ட் வெயிட் ஹியர் போர் சம் டைம்!” என சொல்லும்போதே ரிசெப்ஷனிஸ்ட் வந்துவிட, “வொர்கிங் ஹார்ஸ்ல எங்க போன நீ?” என்று அவளை கடிந்த மீரா, திரும்ப உள்ளே நுழைய போனாள்.
காலியாக இருந்த சோபாக்களில் சென்று மாதங்கவதனா அமரும்போது திரும்ப வந்த மீரா, கையில் இருந்த நோட்பேடில் எதையோ குறித்துக்கொண்டே, “உங்க பேர் என்ன மேம்?” என்று கேட்க,
“மாதங்கவதனா!” என்று அவள் உரைத்த நிமிடம் விலுக்கென நிமிர்ந்து அவளை பார்த்தாள் மீரா.
ஒருவேளை தன் காது தான் தவறாய் கேட்டதோ என்றெண்ணி, “பார்டன் மேம்?” என்றிட, மீண்டும் அவள் தன் பேரை அழுத்தமாய் சொன்னபோது, மீரா உடலில் ஒரு பரபரப்பு தொற்றிக்கொண்டது.
அவளுக்கு இந்த ரயில், காதல், தண்டவாளம் பற்றியெல்லாம் தெரியாது! அன்று கதை கேட்கும்போது இந்த பேரை அஜய் சொன்னதை வைத்து அவனுக்கு ‘சர்ப்ரைஸ்’ கொடுக்க நினைத்தாள்.
‘இது வேற மாதங்கவதனா’வா இருந்தா என்ன செய்யுறது?’ என்றும் தோன்றியது.
‘ம்கும்! இந்த பேருல இன்னொரு ஆளு இருந்துட்டாலும்…!’ என்று மனம் எள்ளலடிக்க,
முதல் வேலையாய் “மேம், என்னோட வாங்க மேம்… வாங்க” என்றாள் கையை பிடித்து இழுக்காத குறையாய்.
“இல்ல, நான் இங்கேயே வெயிட் பண்றேன்!”
“ஐயோ, நீங்க இங்கல்லாம் இருக்கக்கூடாது! நீங்க வாங்க மேம் என்னோட! வாங்கன்னு சொல்றேன்ல?” என்று அவள் மறுக்க மறுக்க கேட்காது உள்ளே அழைத்துப்போனாள்.
வெளியே பார்த்ததை விட உள்ளே விசாலமாய் பிரம்மாண்டமாய் இருந்தது.
ஏதோ விளம்பரத்திற்காக செட்டிங் வொர்க் நடந்துக்கொண்டிருந்தது. வேடிக்கை பார்த்துக்கொண்டே வந்தாள் மாதங்கவதனா.
இரு திருப்பங்கள் சென்று, ஒரு அறைக்கதவை இருமுறை தட்டிய மீரா, “சார்” என உற்சாகமாய் அழைத்துக்கொண்டே அந்த கதவை திறக்க,
“ம்ச்! மீரா, ஐ செட் டோன்ட் டிஸ்…!” எரிச்சலாய் சொல்லிக்கொண்டே தன் சுழல் நாற்காலியில் இருந்து வாசல் புறம் திரும்பியவன் பேச்சு அப்படியே நின்றது. அங்கே மாதங்கவதனாவை துளியிலும் துளியாய் கூட அவன் எதிர்ப்பார்க்கவில்லை.
அசையாமல் அப்படியே பார்த்துக்கொண்டு இருந்தான்.
மீரா தான், “மேம், உள்ள போங்க…” என்று அவளை நகர்த்திக்கொண்டு அவனுக்கு அருகே இருக்கும் நால்வர் படைக்கான கதிரைகளில் ஒன்றில் அமர வைத்தாள்.
“மேம், வாட் டு யூ லைக் டு ஹேவ்?” என்று உபசரிப்பாய் மீரா கேட்டதும், நாசூக்காய் மறுத்தாள் மாதங்கவதனா.
“பர்ஸ்ட் டைம் வந்துருக்கீங்க… கண்டிப்பா எதாவது சாப்பிடனும்! இங்க கோல்ட் காப்பி நல்லா இருக்கும்… கொண்டு வரவா?” என்று அவளே கேட்க, ‘சரி’ என தலையசைத்தாள் மாதங்கவதனா.
மீரா அங்கிருந்து சென்றபின் நிசப்தம் சூழ்ந்தது.
அஜய்க்கு இன்னமும் இந்த நிமிடத்தை நம்ப இயலவில்லை. இவள் என்முன் இருக்கிறாளா? என்று வியப்பேற பார்த்துக்கொண்டிருந்தான்.
அவன் ஒன்றும் பேசாததால், “உங்க ஆபிஸ் ரொம்ப பெருசா இருக்கு!” என்றாள்.
“ம்ம்… இன்டோர் ஷூட் எல்லாம் இங்கேயே வச்சுக்கணும்’ன்னு ப்ளான் போட்டு தான் பெருசா கட்டுனோம்” என்றான்.
“ஓ” என்றவள், அவனை ஒருமுறைப்பார்த்து, “வேற மாதிரி இருக்கீங்க! இந்த ஆபிஸ், உங்க சேர், அதுல எம்.டி’யா நீங்க… வித்தியாசமா இருக்கு!” என்றாள்.
தினமும் பிளாட்பாரத்தில் வைத்து சாதாரணமாய் பார்த்தவனை இப்படி பார்க்கையில் சற்று கம்பீரமாய் தெரிந்தான்.
சம்பிரதாயமாய் சிரித்தவன், “என்ன இவ்ளோ தூரம்? எதுவும் பிரச்சனையா?” என்று வினவ, குனிந்து கோர்த்திருந்த தன் கைவிரல்களை பார்க்கலானாள்.
“எதுவா இருந்தாலும் சொல்லுங்க!” என்றான்.
“ஏன் ஒருவாரமா நீங்க வரல?” குனிந்திருந்த சிரம் நிமிராமல் கேட்டாள்.
‘இதற்காகவா வந்தாள்?’
‘தன்னை தேடியா வந்தாள்?’ அவன் புருவம் சுருங்கி கேள்வியாய் பார்த்துக்கொண்டிருக்க,
“நான் ஃபோன் பண்ணேன்! நீங்க ஆன்சர் பண்ணல!” என்றாள் அடுத்ததாய்.
‘ஆம், அவள் அழைத்தாள் தான்’
இவன் வாசித்த சோக வயலினுக்கு நடுவே அலைபேசி எல்லாம் அன்னியபேசியாகி கிடந்தது இந்த ஒரு வாரமாய்!
“ஃபோன் பாக்கல… கொஞ்சம் பிசி!” என்றவன் சொல்ல, வெறுமையாய், ‘ஓ’ என்றாள்.
மீண்டும் நிசப்தம் சூழ, “இதுக்காக தான் வந்தீங்களா?” என்றான். என்ன முயன்றும் அவன் குரலில் வழியும் வியப்பை, ஆர்வத்தை, ஆவலை தடுக்கமுடியவில்லை.
பிகு செய்யாமல் ‘ஆம்’ என ஒத்துக்கொண்டாள்.
“உங்களுக்கு உடம்பு சரியில்லையோன்னு நினைச்சுட்டேன்! அதான் பார்த்துட்டு போகலாம்ன்னு சீக்கிரமே கிளம்பி வந்தேன்” என்றாள்.
‘தனக்காக… தன்னை யோசித்து…!’ இதுவே வேறு வகையான உணர்வை கொடுத்தது.
இதெல்லாம் அவளுக்கு திருமணமாகவில்லை என்று அவன் நினைத்திருந்த நாட்களில் நடந்திருந்தால் வானத்திற்கும் பூமிக்கும் குதியாய் குதித்திருப்பான்! இன்றோ தன் நிலையை நினைத்து விரக்தியாய் சிரிக்க மட்டும் தான் முடிந்தது அவனால்.
“அஜய், எனக்கு ஒரு லேடி லாயர் அரேஞ் பண்ணித்தர முடியுமா?”
“ஹும்? எதுக்கு?”
“அது என் கேஸ் இப்போ எடுத்துருக்க லாயர் எனக்கு சரிப்படல! கொஞ்சம் அந்தாள் பக்கம் சாயுற மாறி இருக்கு!” என்றாள்.
“அந்தாள்..? யாரு?”
“ம்ச்! என் எக்ஸ் ஹஸ்பன்ட்!” சொல்லக்கூட விரும்பாதவளாய் முகம் சுழிக்க,
“ரெஸ்பெக்ட் குடுக்கலாமே!” என்றான்.
“அவனுக்கு இதுவே ஜாஸ்தி!” என்றவள், “முடியுமா?” என்றாள்.
“எங்க லீகல் அட்வைசர்’கிட்ட கேட்டு ரெண்டு நாள்ல அரேஞ் பண்றேன்!” என்றான் அஜய்.
“லேடியா இருந்தா பெட்டர்!”
“டோன்ட் வொர்ரி! சீக்கிரமே உங்க ஹஸ்பென்ட் கூட ‘பேட்ச் அப்’ ஆக்கிவிடுற மாதிரி நல்ல லாயரா சொல்றேன்!” என்று அவன் சொன்ன கணம்,
“வாட்?” என்று முகம் சுருக்கினாள் மாதங்கவதனா.
“அவன்கூட ‘பேட்ச் அப்’ஆ?” என்று கோபத்தில் எழுந்து நின்றவள்,
“நான் கேட்டேனா? அவனோட நான் சேர்ந்து வாழனும்… சேர்த்து வைங்கன்னு நான் கேட்டேனா?” என்று விரல் நீட்டி கேள்வி கேட்க, அமர்ந்த வாக்கிலேயே பயந்து பின்னால் சாய்ந்தான் அஜய்.
“நானே அவனை விட்டு வெளில வரணும்ன்னு கல்யாணம் முடிஞ்சா நாளா வேண்டிக்கிட்டு இருக்கேன்! இப்போ வந்து ‘பேட்ச் அப்’, மண்ணாங்கட்டி’ன்னு!”
“நீங்க தானே, டிவோர்ஸ் குடுக்க மாட்டேன்னு சொன்னதா சொன்னீங்க?” மெல்லிய குரலாய் கேட்டான்.
“சொன்னேன் தான்! அவன் கேட்டதும் ‘இந்தா’ன்னு தூக்கி குடுக்க விருப்பம் இல்லாம, கொஞ்ச நாள் நாயா அலையட்டும்ன்னு நினைச்சேன்! தப்பா? சொல்லுங்க தப்பா?” அவள் இன்னமும் எகிறிக்கொண்டு அவன் முன்னே வர, மொத்தமாய் பின்னால் சாய்ந்தான் அஜய்.
கொஞ்சம் விட்டாலும் சுழல் நாற்காலி சுழட்டி தள்ளியிருக்கும். ‘ஜஸ்ட் மிஸ்’ஸில் தப்பியவன்,
“கூல் மாது… ஜஸ்ட் கூல்!!!” என்றான் அவளை சமாதானப்படுத்த வேண்டி…
மீரா கோல்ட் காஃபியோடு நுழைந்தாள்.
அதை வாங்கிய மாதங்கவதனா ஒரே மூச்சில் குடித்து முடிக்க, அவளை விநோதமாய் பார்த்துக்கொண்டே சென்றாள் மீரா.
ஐந்து நிமிடங்கள் எடுத்தது அவள் அமைதியாக!!!
அஜய், “சோ, உங்களுக்கு டிவோர்ஸ்’ல விருப்பம் தான்… இல்லையா?”
“ஆமா!”
“உங்களுக்கு அந்தாளை பிடிக்காது தானே?”
“எந்தாளை?”
“ம்ச்… அதான் அவனை!”
அவளின் முன்னால் கணவன் என்று விளிக்க கூட அஜய்’க்கு விருப்பமில்லை.
யார் என புரிந்து, “நோ…” என்றாள் அழுத்தமாய்.
“அன்ட் சோ… யூ ஆர் சிங்கிள்?” என்று அவன் வினவ,
“எதுக்கு இதெல்லாம்” என்றாள் அவள்.
“இல்ல, லாயர் கேட்ப்பாங்க… சொல்லணும் ல?”
“ஆமா, சிங்கிள் தான்!” என்றாள் உடனே.
அஜய் முகத்தை அப்போது பார்க்க வேண்டுமே!!! ஒரு வார கொடுந்துயர் ஒரே நொடியில் பறந்தே போனது.
“ஓகே அஜய்… லேட் ஆச்சு! ஸீ யூ டுமாரோ!” என்றவள்,
“வருவீங்க தானே இனி?” என்று கேட்க,
“இனி இதைவிட வேற என்ன வேலை” என்றான் அஜய்.
“புரியல!”
“வேற வேலை ஒன்னும் இல்லை! சோ வந்துடுவேன்னு சொன்னேன்!” என்றதும், சிரித்து, தலையசைத்து, ‘பை’ என்றுவிட்டு அவள் வெளியேற, அவள் முகம் மறையும் கடைசி நொடிக்காக காத்திருந்த அஜய், தானியங்கி கதவு தன்னால் மூடிக்கொண்டதும், தன் இருக்கையில் இருந்து ஒரே மூச்சில் உந்தி எழுந்தான், ‘ஏஏஏஏஏ’ என்ற அலறலோடு.
மேசை மீது உள்ளதை எல்லாம் கண்ட மேனிக்கு விசிறியடித்து தூக்கி வீசியவன், தன் டிஷர்ட்டை கழட்டி காத்தாடி போல சுழற்றி ஆடி, அதுவும் போதாதென, மேசை மீதி ஏறி நின்று,
‘ஹே, ஒத்த சொல்லால என் உசுர் எடுத்து வச்சுக்கிட்டா!
ரெட்டை கண்ணால என்னை கொன்னாடா!’ என்று காட்டுத்தனமாய் ஆட,
நண்பனுக்காக சுட சுட காஃபி எடுத்துக்கொண்டு அவன் கேபின் கதவை திறந்த குரு அங்கே கண்ட காட்சியில் மிரண்டுப்போய்,
‘ஐயோ, யார்னா ஓடிவாங்களேன்! இங்க ஒருத்தனுக்கு லவ் பெய்லியர்’ல பைத்தியமே புடிச்சுடுச்சே!!!’ என்று கத்த, குதித்து வந்து அவனை கட்டிக்கொண்ட அஜய், அவனையும் சேர்த்துக்கொண்டு குதிக்க, சுட சுட காஃபி மேலே கொட்டுவது கூட தெரியாமல் போனது.
‘காதல் ஒரு சுரனைக்கெட்டது!’ என்றோ எவரோ சொன்னது… எத்தனை உண்மை!?
காஃபி காலியாகும்வரை குதித்தவன், பின் அப்படியே அங்கிருந்து வெளியே ஓட, பேந்த பேந்த முழித்துக்கொண்டு,
‘யாரு பெத்த புள்ளையோ இப்படி பைத்தியம் புடிச்சு திரியுதே!’ என பாவமாய் பார்த்துக்கொண்டு நின்றான் குரு.