அன்றைய சந்திப்புக்கு பிறகு அஜையிடம் மனதால் தான் இன்னும் நெருக்கமானதை போல உணர்ந்தாள் மாதங்கவதனா.
உண்மையில் அவனை அவளுக்கு மிகவும் பிடித்துப்போனது. அந்த பிடித்தம் எந்த அளவுக்கு என்பதை மட்டும் அவள் யோசிக்க தயாராயில்லை.
அஜய் அவளிடம் ஓரடி நெருங்கி வந்தாலும் அவள் இரண்டடி விலக நினைத்திருக்கலாம், வாய்ப்புண்டு!
ஆனால், கள்ளன் தள்ளி நின்றே அவள் மனதில் இடம் பிடித்துவிட்டான்.
எப்போதும் போன்றதொரு நடைபாதை சந்திப்பு!
ரயிலில் ஏறி நின்றதும் அவன் முகம் பார்த்தாள் மாதங்கவதனா.
அஜய், “சோ…?” என்றான்.
“சோ…? நீங்க தான் சொல்லணும்!”
“வீடு பாக்க மறுநாளே வரோம்ன்னு சொன்னோம்! மேடம் கால்ஷீட் தான் கிடைக்க மாட்டேங்குது!” என்றான் கிண்டலாய்.
“ம்ச்! அஜய்… நான்தான் சொன்னேன்ல? இந்த வாரத்தோட வேலை முடிஞ்சுடும்! இனி இப்படி ட்ரைன்’ல அலையாம ஆபிஸ்’ல உட்காந்து வேலை பாப்பேன்! அப்போ எல்லாரும் வாங்கன்னு சொன்னேன் தானே?” அவன் கிண்டல் செய்கிறான் என்று தெரிந்துமே தன்னிலை விளக்கமளித்தாள்.
நின்றுக்கொண்டே கனவு கண்டவளின் முகத்துக்கு நேரே சொடுக்கிட்டவன், “முழிச்சுக்கிட்டே தூக்கமா?” என்று கேட்க, “இல்லையே!” என்றாள்.
“நான் ஒன்னு கேட்பேன்… கோச்சுக்காம பதில் சொல்லுவீங்களான்னு கேட்டேன் உங்ககிட்ட!” என்றான்.
“கேளுங்களேன்!”
“எதுக்காக டிவோர்ஸ்!?”
ஒற்றை கேள்வி அவள் உடல்மொழி, மனநிலை அத்தனையும் மாற்றிப்போட்டது.
முகத்தை அசூயையுடன் திருப்பிக்கொண்டவள், “எனக்கு அந்தாளை சுத்தமா பிடிக்காது! வீட்டுல நல்ல இடம்’ன்னு போர்ஸ் செஞ்சு தான் கட்டி வச்சாங்க!” என்று சொல்ல, ‘இன்பத்தேன் வந்து பாய்ந்தது’ அஜய் காதுக்குள்ளே!
“மேரேஜ் முடிஞ்ச பிறகு கொஞ்ச நாள் ஒன்னும் தெரியல! ஆனா, அதுக்கு பிறகு தான் அவன் நடவடிக்கை ஒன்னும் சரியா படல… வீட்டுல சொன்னேன்! என்னை தான் அட்ஜஸ்ட் பண்ண சொன்னாங்க! மூணு வருஷமா முட்டி மோதி இப்போதான் எல்லாரையும் எதிர்த்துக்கிட்டு விவாகரத்து வாங்க தைரியம் வந்துருக்கு எனக்கு!”
அவள் சொல்லிக்கொண்டிருக்கும் போதே அவள் இறங்க வேண்டிய நிறுத்தம் வந்துவிட, “ஓகே அஜய், ஸீ யூ டுமாரோ!” என்று இறங்கப்போனாள்.
“என்ன பிரச்சனைன்னு சொல்லவே இல்லையே!” என்று பின்னால் அவன் குரல் கேட்க, சுற்றிலும் இருந்த ஆட்களை பார்த்துவிட்டு, “ஈ.எம்.ஏ!” என்றவள் சொன்னதும் ரயில் அங்கிருந்து கிளம்பி சென்றது.
“நோ… மேப்’ல நீ அனுப்புன லொகேஷன் வச்சு வந்தோம்! ஈசியா தான் இருந்துச்சு!” என்றாள் ரீனா.
முதல்முறையாய் மாதங்கவதனாவை நேரில் பார்க்கும் பிரபு, ‘சூப்பர்’ என அஜய்யிடம் சைகை செய்துவிட, அதை கவனித்த மாதங்கவதனா கேள்வியாய் புருவம் சுருக்க,
“மாது, இவர் என் ஹஸ்பன்ட்! டாக்டர் பிரபு!” என்று அறிமுகப்படுத்தினாள் சுவாதி!
அவள் ‘ஹலோ’ சொல்லும்முன்னே தான் ‘ஹலோ’ சொன்ன பிரபு, “ரெண்டு முறை அடி வாங்குனபோதும் அஜய்க்கு வைத்தியம் பார்த்தது நான் தான்!” என்றிட, மாதுவுக்கு தர்மசங்கடமாய் போனது.
பிரபுவோ, “என்ன… செகன்ட் டைம் நான் சுவாதிக்கு ஹஸ்பன்ட்! பர்ஸ்ட் டைம் வுட் பீ ஹஸ்பன்ட்!” என்றுவிட்டு பெரிய ஹாஸ்யம் சொல்லிவிட்டதை போல சிரிக்க, அவஸ்தையாய் சிரித்து வைத்தாள் மாது.
“சுவா, உன் புருஷனை கொஞ்சம் மாடியேத்துறியா?” அஜய் கேட்டதும், “வாங்க!” என இழுத்துக்கொண்டு லிப்டு இருந்த பக்கம் சென்றாள் சுவாதி.
விவேக்கும் குருவும் கூடவே போக, அவர்களுக்கு பின்னே மற்றவர் சென்றனர்.
தனக்கு சற்று அருகே நடந்து வந்துக்கொண்டிருந்த மாதங்கவதனாவிடம், இம்முறை விவரமாய், “ஷராரா வெரி நைஸ்!” என்றான் அஜய்.
மாது ‘களுக்!’ என்று சிரிக்க, தலையில் அடித்துக்கொண்ட ரீனா, “டேய், இது டுனிக் டா!” என்றாள்.
சிரித்துக்கொண்டே இரு பெண்களும் லிப்ட்க்குள் நுழைந்துவிட, “ச்சை! என்ன பேரு வைக்குறாங்க… நமக்கெல்லாம் சட்டை, பேன்ட் அவ்ளோதான்!” என சலிப்பாய் புலம்பிக்கொண்டு சென்றான் அஜய்.
“முதல்ல புது வீடெல்லாம் பார்த்துடலாம்! அப்பறம் என் வீட்டுக்கு அழைச்சுட்டு போறேன்! டோன்ட் மிஸ்டேக் மீ!” என்றாள் மாது.
அறுவரும் ‘நோ ப்ரோப்ளம்!’ என்றுவிட, ஒரே அமைப்பில் இருக்கும் மூன்று வீடுகளையும் சுற்றி பார்த்தனர்.
வந்தது என்னவோ அஜய்’க்காக தான் என்றாலும் உண்மையில் அவர்களுக்கு வீடு வெகுவாய் பிடித்துப்போனது. அவர்கள் அலுவலகத்தில் இருந்து அரைமணி நேர பயணம் மட்டுமே…
விலையும் இவர்கள் எதிர்ப்பார்த்த பட்ஜெட்டில் தான் இருந்தது.
விவேக் தன் மனைவிக்கு வீடியோ காலில் வீட்டை காட்டிக்கொண்டிருந்தான். எந்த வீட்டை யார் எடுப்பது என இப்போதே சின்ன பசங்க சண்டை ஆரம்பித்திருந்தது.
சில நிமிடங்கள் அவனருகே நின்றவள், பின்பு ‘தங்கு.. தங்கு…’கென நடந்து, நகர்ந்து போவது தெரிய, இவன் அதரங்கள் அகலமாய் விரிந்தது.
சற்று நேரத்தில் அனைவரையும் அவள் வீட்டுக்கு அழைத்துக்கொண்டிருந்தாள், கவனமாய் அவனை மட்டும் தவிர்த்து.
‘நீ கூப்பிடலன்னாலும் நான் வருவேன் மாதுக்குட்டி!’ மனதுக்குள் கொஞ்சிக்கொண்டே தான் புகப்போகும் புகுந்தவீட்டிற்குள் வலது காலை எடுத்து வைத்து சென்றான் அஜய்.
வந்தவர்களுக்கு ஸாஃப்ட் ட்ரிங்க்ஸ், ஸ்நேக்ஸ் என்று அவள் கொண்டு வந்து கொடுக்க, கொஞ்சமும் கூச்சமின்றி ரவுன்ட் கட்டி அடித்தனர்.
அஜய் மட்டும் வீட்டை அங்குலம் அங்குலமாய் அளவெடுத்துக்கொண்டிருந்தான். அதே அமைப்பில் தான் இருந்தது அந்த மூன்று புதிய வீடுகளும்.
சற்று நேரம் அவர்களுடன் அமர்ந்து அளவளாவிக்கொண்டிருந்த மாதங்கவதனா, “ஒரு நிமிஷம்! இதோ வரேன்” என்றுவிட்டு வீட்டை விட்டு வெளியே சென்றாள்.
அவள் போனதும் அஜய்யை பிடித்துகொண்டது நால்வர் படை.
“டேய், என்னடா ஆரத்தி எல்லாம் எடுத்து உள்ளே கூப்பிடுவாங்கன்னு பார்த்தா இப்படி மொக்கையா போச்சு!?”
“துரை, வலது காலை எடுத்து வச்சு தான் வந்தான் பாத்தீங்களா?”
“அஜய், கல்யாணம் முடிஞ்சதும், முதல் வேலையா கப்போர்ட்’ல ரெண்டு ரேக் உங்களுக்குன்னு பேசி இடஒதுக்கீடு வாங்கிடுங்க! இல்லனா ‘ஹேங்கர்’ தான் எப்பவும்” பிரபு சொல்ல அவன் முதுகிலேயே சுவாதி கையால் ஒன்று விழுந்தது!
ஆளாளுக்கு அவனை ஏதேதோ சொல்லி ஓட்ட, எப்போதும் போல அவர்கள் ஒன்றாய் இருக்கும் இடத்தில் சிரிப்புக்கு பஞ்சம் இன்றி போனதால் அவர்கள் நகையொளி பலமாய் எதிரொலித்துக்கொண்டிருந்தது.
சந்தோஷமாய் சிரித்து பேசி விளையாடிக்கொண்டிருந்தவர்கள் வாசலில் அரவம் உணர்ந்து திரும்ப, அங்கே கண்ட காட்சியில் அப்படியே உறைந்து நிற்க,
“சர்ப்ரைஸ்!!! இது என்னோட பொண்ணு பிரசன்னவதனா!” என்றபடி இரண்டு வயது குழந்தையை தூக்கிக்கொண்டு வந்தாள் மாதங்கவதனா.
அங்கே குண்டூசி விழுந்தால் கூட இடியென சப்தம் கேட்கும்… அப்படி ஒரு நிசப்தம் நொடியில் சூழ்ந்துக்கொண்டது.
அங்கிருப்பவர்களில் யார் அதிகம் அதிர்ந்து நின்றனர் என்பதற்கு பாகுப்பாடே இன்றி அனைவரும் ஸ்தம்பித்து நிற்க,
கொஞ்சம் கூட அதிர்ச்சி இன்றி மலர்ந்த முகத்துடன் எழுந்து சென்று தன் கரங்களில் குழந்தையை வாங்கிக்கொண்டான் அஜய்.
அவனது அதிர்சியற்ற நிலைக்கண்டு இன்னும் அதிர்ந்தவர்கள் அவனிடம் கண்களாலேயே, ‘உனக்கு முன்னாடியே தெரியுமா?’ என்று வினவ, ‘இல்லை!’ என்று தீர்கமாய் மறுத்தான் அஜய்.
சிறிது நேரம் அவன் மட்டுமே குழந்தையுடன் விளையாடினான்.
மற்றவர்களால் என்ன முயன்றும் இயல்பாய் இருக்க முடியவில்லை.
மாது சற்று நகர வேண்டி காத்திருந்தவர்கள், அவள் கிட்சன் பக்கம் சென்றதும்,
“உனக்கு கொஞ்சம் கூட ஷாக்கா இல்லையா?” என்றனர்.
“எதுக்கு ஷாக் ஆகணும்?” என்றான் அவன்.
“டேய், குழந்தை இருக்குடா!”
“கல்யாணம் ஆனா குழந்தை இருக்கத்தானே செய்யும்? உங்களுக்கெல்லாம் இருக்கு தானே? அப்பறம் என்ன?”
அசால்ட்டாய் கேட்டான் அஜய்.
சுவாதி, “உங்க அம்மாக்கிட்ட என்ன சொல்லுவ? டிவோர்ஸ் ஆன பொண்ணுன்னு தெரிஞ்சாலே ஒத்துக்க கஷ்டம்… இதுல குழந்தையோட இருக்குன்னா…! ம்ச்! கண்டிப்பா ஒத்துக்க மாட்டாங்க…”
“திஸ் இஸ் மை லைஃப் சுவா!” என்றுவிட்டான்.
ரீனா, “அஜய்… ஐ தின்க் திஸ் வோன்ட் வொர்க் அவுட்… விட்டுடு”
“இப்போதான் நான் ரொம்ப ரொம்ப ஸ்ட்ராங்’கா இருக்கேன்! ஐ நீட் ஹர்! அவ தான் எனக்கு வேணும்!” அழுத்தமாய் உரைத்தான் அஜய்.
“சுத்த பைத்தியக்காரத்தனம்! உனக்கு என்ன குறைச்சல்’ன்னு…” ரீனா துவங்கும்போதே,
“அவளுக்கும் எந்த குறைச்சலும் இல்லையே!” என்றான் அஜய்.
அவன் மிகவும் தெளிவாக ஸ்திரமாக இருப்பது புரிந்தது ஐவருக்கும்.
இதற்குமேல் பேசுவது ‘வீண்’ என்றும் புரிந்துப்போனது.
இறுதி முயற்சியாய், “மாதுக்கு இன்னொரு கல்யாணம் பண்ற ஐடியா இல்லனா என்னடா பண்ணுவ?” என்று விவேக் கேட்க, அதேநேரம் அடுக்களையில் இருந்து வெளியே வந்த மாதங்கவதனா,
“அஜய், ஏன் கூல்ட்ரின்க் எடுத்துக்கல? வேற ஏதாவது கொண்டு வரவா? என்ன வேண்டும்?” என்றாள்.