Toggle navigation
Home
Tamil Novels
What's new
Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள்,
[email protected]
என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
Advertising
புது வெள்ளை மழை – 26
Post Views:
2,542
புது
வெள்ளை
மழை
அத்தியாயம்
– 26
வீட்டிற்குச்
சென்ற
தாரணி
மிகவும்
இறுக்கமாக
இருந்தாள்
.
வருண்
சிறிது
நேரம்
அவளுக்குத்
தனிமை
கொடுத்தவன்
,
பிறகு
அவளிடம்
சென்றான்
.
“
நீ
சரியாவே
சாப்பிடலை
.
இந்தப்
பாலையாவது
குடி
.”
என
அவன்
பாலைக்
கொடுக்க
…
தாரணி
அவன்
இடையைக்
கட்டிக்கொண்டு
அப்படி
ஒரு
அழுகை
.
சிறிது
நேரம்
அவளை
அழ
விட்டவன்
,
பிறகு
அவளைச்
சமாதானம்
செய்து
பாலைக்
குடிக்க
வைத்தான்
.
“
அண்ணன்
என்னை
வெறுத்திட்டார்
இல்ல
…
இனி
அவர்
என்கிட்டே
முன்னாடி
மாதிரி
இருக்க
மாட்டார்
.”
இல்லை
என்று
சொல்லவந்தவன்
,
இப்போதே
சொல்ல
வேண்டாம்
என
நினைத்து
,
வேறு
பேசினான்
.
“
நீயேன்
அப்படி
நடந்துகிட்ட
?
உனக்கு
ஏன்
கயலை
பிடிக்க
மாட்டேங்குது
?”
“
எனக்கு
ஆரம்பத்துல
கயலை
பிடிச்சுதான்
இருந்தது
.
ஆனா
அதுக்குப்
பிறகு
எல்லோரும்
என்னையும்
அவளையும்
சேர்த்து பார்த்து பேசினீங்க
.
அது
எனக்குச்
சுத்தமா
பிடிக்கலை
.”
“
நீ
சொல்றது
சரி
.
ஆனா
அதை
நீ
என்கிட்டே
நேரடியாவே
சொல்லி
இருக்கலாமே
.
எதுக்குக்
கயல்கிட்ட
உன்னோட
கோபத்தைக்
காட்டின
?”
“
நீங்க
எப்பவும்
அவளைப்
புகழ்ந்திட்டே
இருப்பீங்க
?
அப்புறம்
எப்படி
உங்ககிட்ட
சொல்றது
?”
“
நீயே
யோசிச்சு
பாரு
?
கயலோட
கல்யாணம்
எந்தச்
சுழ்நிலையில
நடந்தது
.
அந்தப்
பொண்ணுக்கு
பிறந்த
வீட்டுச்
சப்போர்ட்
இல்லை
.
புதுசா
ஒரு
இடத்துக்கு
வந்து
இருக்கணும்
.
உன்
அண்ணன்
கூட
இருந்திருந்தா
அது
வேற
மாதிரி
.
அவனும்
இங்க
இல்லை
.”
“
அந்தப்
பொண்ணு
ரொம்பத்
தனியா
பீல்
பண்ணக்கூடாதுன்னு
நான்
எப்பவும்
கயலுக்குச்
சப்போர்ட்
பண்ணுவேன்
.
உன்னை
இறக்கி
பேசனும்னு
நான்
நினைச்சதே
இல்லை
.”
“
உங்களுக்குக்
கயலை
பத்தி
எல்லாமே
தெரியுமா
?”
“
தெரியும்
,
நந்தா
கல்யாணத்துக்கு
முன்னாடியே
சொல்லிட்டான்
.”
“
அண்ணன்
கயலை
காப்பாத்துறதுக்காகக்
கல்யாணம்
பண்ணிகிட்டாரா
?”
“
இல்லை..
.
கயலை
பத்தி
தெரியறதுக்கு
முன்னாடியே
அவளை
அவன்
விரும்பினான்
.
அதை
என்கிட்டே
சொல்லவும்
செஞ்சான்
.”
“
முன்னாடியே
அண்ணன்
கயலை
விரும்பினாரா
?
ஆனா
ராதிகா
வேற
மாதிரி
சொன்னா
?”
“
என்ன
சொன்னா
?”
“
முதல்ல
நீங்க
சொல்லுங்க
.”
இவளுக்கு
அறையும்
குறையுமாகத்
தெரிந்ததால்தான்
பிரச்சனை
என்பதை
உணர்ந்த
வருண்
,
நந்தா
கயலை
சந்தித்ததில்
இருந்து
,
நடந்த
அனைத்தையும்
தாரணியிடம்
சொல்லி
விட்டான்
.
எல்லாவற்றையும்
கேட்ட
தாரணிக்கு
,
நந்தா
திட்டமிட்டே
கயலை
திருமணம்
செய்து
இருக்கிறான்
எனப்
புரிந்தது
.
அவள்
வாழ்க்கையில்
இருந்த
சிக்கலை
அவன்
அழகாகச்
சரி
செய்துவிட்டான்
.
ஆனால்
உள்ளே
புகுந்து
தேவையில்லாமல்
உலப்பியது
அவள்தான்
என
இப்போது
நன்றாகவே
புரிந்தது
.
“
நீங்களே
முன்னாடி
எனக்கு
எல்லாத்தையும்
சொல்லி
இருக்கலாம்
இல்லையா
?”
“
என்னோட
விஷயம்
எதையும்
நான்
உன்கிட்ட
மறைச்சது
இல்லை
.
அதோட
நந்தாவுக்குக்
கயலோட
விஷயம்
வேற
யாருக்கும்
தெரியறது
விருப்பம்
இல்லை
.
கயலோட
மதிப்பு
குறையும்னும்
நினைச்சு
இருக்கலாம்
.”
“
பாரு
அவன்
நினைச்ச
மாதிரிதான
நடந்தது
.
உனக்கு
ராதிகா
சொன்னா
கூட
,
நீ
தெரிஞ்ச
மாதிரி
காட்டி
இருந்திருக்கக்
கூடாது
.
அப்படியே
உனக்கு
யார்கிட்டையாவது
சொல்லனும்னா
என்கிட்டே
சொல்லி
இருக்கலாம்
.
இல்லை
உங்க
அம்மாகிட்ட
பேசி
இருக்கலாம்
.
அதைவிட்டு
கயல் மனசு கஷ்ட்டப்படுற மாதிரி
பேசி
எவ்வளவு
பிரச்சனை
பண்ணிட்ட
.”
“
கயல்
எவ்வளவு
கஷ்ட்டபட்டிருக்கு
தெரியுமா
?
நந்தா
வெளிய
தெரியாம
மனநல
டாக்டர்கிட்ட
எல்லாம்
கூடிட்டுப்
போனான்
.
அவன்
அவளைக்
கஷ்ட்டப்பட்டு
இந்தளவுக்குக்
கொண்டு
வந்திருக்கான்
.
ஆனா
நீ
எல்லாத்தையும்
கெடுக்கிற
மாதிரி
நடந்துகிட்ட
.”
“
கயல்
வாழ்க்கையில
ஒரு
தவறு
நடந்திடுச்சு
.
அதுக்காகக்
காலம்
எல்லாம்
அந்தப்பொண்ணு
அப்படியே
இருக்கனுமா
என்ன
?”
“
உங்க
அண்ணன்
அவளை
விரும்பி
கல்யாணமும்
பண்ணிகிட்டான்
.
இனி
கயலைப்
பத்தி
பேச
யாருக்குமே
உரிமை
இல்லை
.
இது
அவங்களோட
வாழ்க்கை
.”
என்றான் வருண் தெளிவாக.
“
நான்தான்
ரொம்பத்
தப்புப்
பண்ணிட்டேன்
.
இனி
எங்க
அண்ணன்கிட்ட
நான்
எந்த
முகத்தை
வச்சிக்கிட்டு
பேசுவேன்
.”
“
திரும்ப
லூசு
மாதிரி
யோசிக்கிற
.
நீ
மனசு
விட்டு
பேசி
,
அவன்கிட்ட
மன்னிப்பு
கேளு
.
அதை
விட்டு
பேசாம
இருந்தா
…
இன்னும்
உங்களுக்குள்ள
இடைவெளி
அதிகமாகிடும்
.”
“
அண்ணன்
என்னை
மன்னிப்பாங்களா
?
அவங்க
தனிக்குடுத்தனம்
போறேன்னு
சொன்னாங்களே
.”
“
அதை
அவனைக்
கயல்
முன்னாடி
சொல்ல
சொல்லு
பார்ப்போம்
.
அதுக்குக்
கயலே
ஒத்துக்கமாட்டா
.
அதனால
தானே
உங்க
அண்ணன்
அவ
இல்லாத
போது
சொன்னான்
.”
வருண்
சொன்னதைக்
கேட்டு
தாரணிக்குச்
சிரிப்பு
வந்துவிட்டது
. “
நிஜமாவா
?
எங்க
அண்ணன்
கூட
யாருக்காவது
பயப்படுவாரா
என்ன
?”
“
உங்க
அண்ணன்
மட்டும்
இல்லை
.
எல்லா
ஆம்பிளைங்களும்
பொண்டாட்டிக்கு
பயப்படுவாங்க
.
ஏன்
நான்
இல்லை
?”
“
எனக்கு
எங்க
அண்ணன்கிட்ட
பேச
பயமா
இருக்கு
.”
“
நீ
கயல்கிட்ட
ஒழுங்கா
நடந்துகிட்டாலே போதும்,
உங்க
அண்ணன்
கோபம்
குறையும்
.”
“
நீங்க
சொல்றது
கரெக்தான்
.
ஆனா
எனக்குக்
கயலைப்
பார்க்கவே
சங்கடமா
இருக்கு
.”
“
நீ
இப்படி
யோசிச்சிட்டே
இருந்தேனா
,
உங்களுக்குள்ள
இடைவெளிதான்
அதிகமாகும்
.”
“
நீங்க
எனக்காகப்
பேசுறீங்களா
?”
“
உனக்காக
நான்
பேசுவேன்
.
ஆனா
நீ
பேசினா
சீக்கிரம்
பிரச்சனை
சரி
ஆகும்
.”
“
நான்
பேசி
அண்ணா
பேசலைனா
?
அதை
என்னால
தாங்கிக்க
முடியாது
.”
சொல்லுபோதே
தாரணி
அழுது
விட
,
அவளை
ஆறுதலாக
அணைத்த
வருண்
“
ஏன்
அப்படி
நினைக்கிற
?
நந்தா
உன்னை
விட்டுக்கொடுக்க
மாட்டான்
.”
என்றான்
.
அங்கே
கயல்
உறக்கம்
வருகிறது
எனச்
சொல்ல
… “
பரிட்சையை
வச்சிக்கிட்டு
தூங்குவியா
,
ஒழுங்கா
படி
.”
என
நந்தா
மிரட்டிக்
கொண்டு
இருந்தான்
.
“
எனக்கு
நாளைக்கு
லீவ்தாங்க
.
அதோட
அது
ஈஸியான
பரிட்சைதான்.
நான்
ஏற்கனவே
படிச்சிட்டேன்
.”
என்றாலும்
அவளை
விடவில்லை
.
கொஞ்ச
நேரம்
படி
என்றான்
.
அவன்
சொன்னதற்காகக்
கயல்
புத்தகத்தை
எடுத்து
வைத்துக்
கொண்டு
உட்கார்ந்து
இருந்தாள்
.
அந்நேரத்திற்கு
நந்தா
வெளிமாடிக்கும்
,
அறைக்கும்
நடந்து
கொண்டு
இருந்தான்
.
முதலில்
விருப்பம்
இல்லாமல்
படிக்க
உட்கார்ந்தவள்
,
பிறகு
பாடத்தில்
முழ்கிவிட்டாள்
.
அவள்
படித்து
முடித்துப்
புத்தகத்தை
மூடி
வைத்த
போது
,
நள்ளிரவாகி இருந்தது
.
இரவு
உடையை
எடுத்துக்கொண்டு
குளியல்
அறைக்குச்
சென்றாள்
.
வெயில்
காலம்
எனபதால்
,
இரவும்
ஒருமுறை
குளித்து விடுவாள்
.
அவள்
வெளியே
வந்தபோது
நந்தா
அவளுக்காகக்
காத்திருந்தான்
.
இங்க
வா
என்றவன்
,
அவள்
கண்களைப்
பொத்தி
வெளிமாடிக்கு
அழைத்துச்
சென்றான்
.
வெளிமாடியின்
நடுவே
சின்ன மேஜையில்
பிறந்தாநாள்
கேக்
வைத்து
,
அதில்
நிறைய
மெழுகுவர்த்தி
ஏற்றி
வைத்திருந்தான்
.
சுற்றிலும்
ரோஜா
பூ
செடிகள்
வைத்து
,
அந்த
இடத்தை
மேலும்
அழகாக்கி
இருந்தான்
.
கயலுக்குப்
பார்த்ததும்
ஆச்சர்யம்
தாங்கவில்லை
.
நந்தா
அவளைக்
கேக்
வெட்ட
சொல்ல
…
கயல்
மெழுகுவர்த்தியை
ஊதி
அணைத்துவிட்டு
கேக்
வெட்டினாள்
.
அவள்
இது
போல்
வாழ்க்கையில்
பிறந்தநாள்
கொண்டாடியதே
இல்லை
.
கயலுக்கு
மிகவும்
நெகிழ்ச்சியாக
இருந்தது
.
கண்ணீர்
வந்துவிடும்
போல்
இருந்தது
.
சந்தோஷமான
நேரம்
,
அதனால்
அழுது
விடக்கூடாது
எனத்
தன்னையே
கட்டுப்படுத்திக்கொண்டாள்
.
நந்தா
கேக்கை
எடுத்து
அவளுக்கு
ஊட்டிவிட
…
வாயைத் திறந்து
வாங்கிகொள்ளவே
அவள்
அவ்வளவு
வெட்கபட்டாள்
.
“
இப்ப
நீ
எனக்குக்
கொடுப்பியா
இல்லையா
?”
நந்தா
கேட்க
…
கயல்
வெட்கபட்டாலும்
அவன்
விரும்பியதை
செய்தாள்
.
“
எனக்குச்
சாக்லேட்
கேக்
ரொம்பப்
பிடிக்கும்
.
இன்னும்
கொஞ்சம்
எடுத்துக்கட்டுமா
?”
“
எல்லாம்
உனக்குத்தான்
.”
கயல்
ஒரு
பெரிய
துண்டாக
எடுத்து
சாப்பிட
…
நந்தா
அவள்
சாப்பிடும்
அழகை
ரசித்தான்
.
கயல்
அவனுக்கும்
வேண்டுமா
என்று
கேட்க
…
நந்தா
பதில்
சொல்லாமல்
வாயை
மட்டும்
திறக்க
…
கயல்
அவனுக்கு
ஊட்டி
விட்டாள்
.
இருவருமாகக்
கேக்
சாப்பிட்டு
முடிக்கவும்
,
மழை
வரவும்
சரியாக
இருக்க
…
கயல்
மீதம்
இருந்த
கேக்கை
உள்ளே
கொண்டு
போய்
வைத்துவிட்டு
வந்தாள்
.
நந்தா
வாசல்
படியில்
உட்கார்ந்து
மழையை
ரசித்தவன்
,
கயல்
நிற்பதை
பார்த்ததும்
,
அவளை
இழுத்து
தன்
அருகில்
உட்கார
வைத்துக்
கொண்டான்
.
சிறிதுதான்
இடம்
இருந்ததால்
இருவரும்
நெருக்கமாக
உட்கார்ந்து
இருந்தனர்
.
“
மழை
வரும்னு
நினைக்கவே
இல்லை
.”
நந்தா
சொல்ல
,
“
இன்னைக்குக்
கொஞ்சம்
வெக்கை
அதிகம்தான்
.
அதுதான்
மழை
வந்திருக்கு
.”
என்றாள்
கயல்
.
இருவரும்
நிலவு
வெளிச்சத்தில்
மழையை
ரசித்துக்
கொண்டு
இருந்தனர்
.
மழை
நின்றதும்தான்
இருவரும்
எழுந்து உள்ளே
சென்றனர்
.
கயல்விழி
கேக்கை
பத்திரபடுத்திவிட்டுப்
படுக்கச்
செல்ல
… “
கயல்
…”
நந்தா
அழைக்க
,
நின்று
அவனைத்
திரும்பி
பார்த்தாள்
.
அவளைத்
தன்
கைவளைவுக்குள்
கொண்டு
வந்தவன்
,
அவள்
நெற்றில்
வழிந்த
கேசத்தைக்
காதின்
பின்புறம்
ஒதுக்கிவிட்டு
,
இதமாக
நெற்றியில்
இதழ்
ஒற்றினான்
.
கயல்
எதிர்ப்பார்க்கவே
இல்லை
இப்படி
ஒரு
முத்தத்தை
,
அவள்
திகைத்து
போய்
நிற்க
…
அடுத்து
கன்னத்திலும்
முத்தமிட்டான்
.
வெளியே
மழை
மீண்டும்
வேகம்
எடுக்கும்
சத்தம்
கேட்டது
.
அவன்
அவளது
இதழ்களை
மெல்ல
வருட
…
கயல்
அவன்
கைபிடித்துத்
தடுத்தாள்
.
அவள்
கையை
விலக்கிவிட்டு
குனிந்து
மிருதுவாக
அவளது
இதழில்
முத்தமிட்டான்
.
பூவை
முத்தமிட்டது
போல்
உணர்ந்தான்
.
அவ்வளவு
மென்மையான
இதழ்
.
அந்த
முத்தம்
போதாது
என்று
தோன்ற
,
மீண்டும்
முத்தமிட்டான்
.
இந்தமுறை
இன்னும்
சற்று
அழுத்தமாக
.
ஒவ்வொரு
தடவை
முத்தமிடும்
போதும்
,
இன்னும்
வேண்டும்
என்றுதான்
தோன்றியதே
தவிர
,
போதும்
என்று
மட்டும்
தோன்றவே
இல்லை
.
இந்தமுறை
முத்தம்
முடிவு
பெறாமல்
நீண்டு
கொண்டே
செல்ல
…
வலுக்கட்டாயமாக
அவனிடம்
இருந்து
இதழ்களைப்
பிரித்த
கயல்
,
அவன்
மார்பில்
சாய்ந்தே
இளைப்பாறினாள்
.
நந்தா
அவளை
அணைத்துக்கொண்டு
இருந்தவன்
,
அவள்
முகத்தை
நிமிர்த்திப்
பார்க்க
…
மொத்த
ரத்தமும்
முகத்திற்குப்
பாய்ந்தது
போல்
,
முகம்
சிவந்து
கிடந்தது
.
இதுக்கே
இப்படியா
என
நினைத்ததும்
,
அவன்
முகத்தில்
மென்னகை
அரும்பியது
.
கயல்
அவனிடம்
இருந்து
விலகி
மெத்தையில்
சென்று
படுக்க
…
நந்தா
விளக்கை
அணைத்துவிட்டு
,
அவள்
அருகில்
படுத்தவன்
,
அவளை
இழுத்து
தன்
தோள்
வளைவில்
படுக்க
வைத்துக்
கொண்டான்
.
அவள்
அவன்
பக்கமாகத்
திரும்பி
படுத்துக்
கண்மூடிக்கொள்ள
,
நந்தாவும்
இன்று
இவ்வளவு
போதும்
என்று
நினைத்தவன்
,
கண்
மூடி
உறங்கினான்
.
எப்போதும்
நந்தாதான்
முதலில்
எழுந்துகொள்வான்
,
இன்று
கயல்
விழித்தபோது
நந்தா
இன்னமும்
உறங்கிக்
கொண்டு
இருந்தான்
.
கயல்
குளித்துத்
தயாராகிக்
கீழே
சென்றபோது
,
குழலி
கல்லூரி
செல்ல
கிளம்பிக்
கொண்டு
இருந்தவர்
,
அவளை
ஆச்சர்யமாகப்
பார்த்தார்
.
“
இன்னைக்கு
உனக்குக்
காலேஜ்
இல்லையே
…
வெளிய
எங்கையும்
போறியா
?”
“
இன்னைக்கு
என்னோட
பிறந்தநாள்
அத்தை
.”
“
அப்படியா
முன்னாடியே
சொல்லி
இருக்கலாம்
இல்லையா
….
பிறந்த
நாள்
வாழ்த்துக்கள்
கயல்
.”
என்றவர்
,
உள்ளே
சென்று
பணம்
கொண்டு
வந்து
கொடுத்தார்
.
“
இருக்கட்டும்
அத்தை
.”
“
முன்னாடியே
தெரிஞ்சிருந்தா
நான்
எதாவது
வாங்கி
வச்சிருப்பேன்
.
பரவாயில்லை
,
நீயே
உனக்குப்
பிடிச்சதா
வாங்கிக்கோ
.”
கயல்
அவருக்குக்
கேக் கொடுக்க
….
சிறிது
எடுத்துக்
கொண்டவர்
, “
காலை
வேளைக்கு
மாடும்தான்
சமையல்
செஞ்சிருக்கேன்
.
மதியம்
நீங்க
சூடா
செஞ்சு
சாப்பிடுங்க
.”
என
அவர்
சொல்லிக்
கொண்டிருந்தபோதே
நந்தா
அங்கு
வந்தான்
.
“
அம்மா
,
நாங்க
மதியம்
வெளிய
சாப்பிட்டுகிறோம்
.”
“
சரி
,
ஆனா
கோவிலுக்கும்
போய்
உங்க
ரெண்டு
பேர்
பேர்லையும்
அர்ச்சனை
பண்ணிட்டு
வந்திடுங்க
.”
“
சரி
மா
.
கயல்
,
காபி
கொடு
.”
என்றவன்
மாடிக்கு
சென்றுவிட்டான்
.
கயல்விழி
கேக்கை
துண்டுகள்
போட்டு
உணவு
மேஜையில்
வைத்தாள்
.
காலையில்
பரிமாறும்
வேலை
எல்லாம்
இல்லை
.
அவரவரே
போட்டு
சாப்பிட்டுக்கொள்வார்கள்
.
நந்தாவுக்குக்
காபி
எடுத்துக்
கொண்டு
மாடிக்கு
சென்றாள்
.
கயல்
கொடுத்த
காபியை
வாங்கி
பருகியவன்
,
காலி டம்ளரை மேஜையில்
வைத்துவிட்டு
,
அவளைத்
தன்
முன்
நிறுத்தி
ரசித்துப்
பார்த்தான்
.
“
பிறந்த
நாள்
வாழ்த்துக்கள்
.”
என்றவன்
,
அவள்
நெற்றியில்
முத்தமிட
,
“
அத்தை
கோவிலுக்குப்
போகச்
சொல்லி
இருக்காங்க
.”
என்றவள்
,
அவனிடம்
இருந்து
விலகினாள்
.
“
முத்தம்
கொடுத்தா
கோவிலுக்குள்ள
விட
மாட்டாங்களா
?”
நந்தா
சந்தேகம்
கேட்க
….
விழிகளை
விரித்துப்
பார்த்தவள்
, “
குளிச்சிட்டு
வாங்க
கோவிலுக்குப்
போகணும்
.”
என்றாள்
.
அவளைக்
கொஞ்சம்
சீண்டி
பார்க்க
எண்ணி
, “
உனக்கு
நான்
முத்தம்
கொடுத்தது
பிடிக்கலை
,
அதுதான்
இப்படிப்
பண்ற
?”
என்றான்
.
“
நான்
ஒன்னும்
அப்படிச்
சொல்லவே
இல்லை
.”
“
அப்ப
பிடிச்சிருக்கா
?”
“
இப்ப
என்ன
வேணும்
உங்களுக்கு
?”
“
ஒரே
ஒரு
முத்தம்
கொடு
விட்டுடுறேன்
.”
நந்தா
கேட்டதும்
,
கயலுக்கு
முகம்
சிவந்து
விட்டது
.
அவன்
அவளது
முகத்தையே
பார்த்துக்
கொண்டு
இருந்தான்
.
“
இப்பவா
?”
“
ஏன்
இப்ப
கொடுத்தா
என்ன
?”
“
ரொம்ப
வெளிச்சமா
இருக்கே
.”
“
அதுக்கு
?”
“
நான்
நைட்
கொடுக்கட்டுமா
?”
“
சரி
,
ஆனா
நைட்
கண்டிப்பா
கொடுக்கணும்
.”
அப்போதைக்குத்
தள்ளிபோட்ட
நிம்மதி
கயலுக்கு
.
இரவு
என்றால்
இன்னும்
வசதி
என்ற
எண்ணம்
நந்தாவுக்கு
.
வீட்டு
டெலிபோன்
அடிக்க
,
நந்தா
எடுத்துப்
பேசினான்
.
கயல்விழி
ஆர்வமாகப்
பார்த்து
இருந்தாள்
.
பத்மாதான்
அழைத்து
இருந்தார்
.
அவன்
அவளிடம்
போன்னை
கொடுத்துவிட்டுச்
சென்றான்
.
பத்மா
கயலுக்குப்
பிறந்த
நாள்
வாழ்த்து
சொன்னார்
.
அவள்
பிறந்தநாளுக்கு
என்றே
நந்தா
வந்தது
,
கேக்
வெட்டியது
என்று
எல்லாவற்றையும்
கயல்
சொல்ல
…
கேட்ட
பத்மாவுக்குச்
சந்தோஷமாக
இருந்தது
.
பிறந்த
வீட்டில்தான்
மகள்
இதுமாதிரி
சந்தோஷங்களை
அனுபவிக்கவில்லை
.
புகுந்த
வீட்டிலாவது
அவள்
நன்றாக
இருக்கிறாளே
..
அவர்
மனதிற்குள்
நந்தாவுக்கு
நன்றி
சொன்னார்
.
“
அம்மா
,
உங்களுக்குத்
தெரியுமா
,
நாளைக்கு
நாங்க
கிளம்பி
அங்க
வரோம்
.”
மகள்
வருகிறாள்
என்றதும்
,
பத்மாவுக்கு
மிகவும்
சந்தோஷமாக
இருந்தது
.
அப்போதே
அவளுக்குப்
பிடித்தது
எல்லாம்
செய்ய
வேண்டும்
என
நினைத்துக்
கொண்டார்
.
“
உங்களைப்
பார்த்து
எவ்வளவு
நாள்
ஆச்சு
மா
.
நாம
நம்ம
கோவிலுக்கு
எல்லாம்
போயிட்டு
வரலாம்
.”
கயல்
பேசுவதை
எல்லாம்
கேட்டபடி
குளியல்
அறையில்
நின்று
நந்தா
முகசவரம்
செய்து
கொண்டிருந்தான்
.
மனைவி
இவ்வளவு
உற்சாகமாகப்
பேசி
இன்றுதான்
பார்க்கிறான்
.
நந்தா
குளித்து
விட்டு
வந்ததும்
,
இருவரும்
சாப்பிட
கீழே
இறங்கி
சென்றனர்
.
நல்லவேளை
ராதிகா
வேலைக்குச்
சென்றுவிட்டாள்
.
பரணி
மட்டுமே
உட்கார்ந்து
சாப்பிட்டுக்
கொண்டு
இருந்தான்
.
“
என்ன
அண்ணி
இன்னைக்குக்
காலையிலேயே
கேக்
இருக்கு
.”
பரணி
கேட்டதற்கு
,
கயல்
புன்னகைக்க
….
நந்தா
பதில்
சொன்னான்
.
“
இன்னைக்கு
உங்க
அண்ணிக்கு
பிறந்தநாள்
டா
.”
ஓ
அப்படியா
என்றவன், கயலுக்குப்
பிறந்தநாள்
வாழ்த்துச்
சொன்னான்
.
“
அண்ணா
,
நீங்க
இன்னைக்குக்
கண்டிப்பா
ட்ரீட்
கொடுக்கணும்
.
நைட்
வெளிய
போகலாமா
?”
பரணி
சொன்னதற்கு
நந்தா
பதில்
சொல்லாமல்
சாப்பிட
,
கயல்
இருவரையும்
பார்த்துக்
கொண்டு
இருந்தாள்
.
“
சொல்லுங்க
அண்ணா
போகலாமா
?”
“
இன்னைக்கு
வேண்டாம்
பரணி
.
நேத்து
வீட்ல
என்ன
நடந்துச்சுன்னு
உனக்கே
தெரியும்
.
வருணும்
தாரணியும்
இல்லாம
நாம
மட்டும்
போனா
நல்லா
இருக்காது
.”
“
ஏன்
?
அவங்களும்
வரட்டும்
.”
“
நான்
இப்ப
அவங்களைக்
கூப்பிடுற
மூட்ல
இல்லை
.”
நந்தா
கண்டிப்பாகச்
சொல்ல
…
கயலுக்கு
அழுகையே
வந்துவிட்டது
.
“
உங்ககளை
விட
அவங்க
சின்னப்
பொண்ணுதானே
,
நீங்க
கொஞ்சம்
விட்டுக்
கொடுத்தாதான்
என்ன
?”
கயல் கேட்க
,
“
நான்
இப்ப
விட்டுக்
கொடுத்தா
,
அவ
செஞ்சது
தப்புன்னு
அவ
உணரவே
மாட்டா
.”
என்றான் நந்தா
.
“
நீங்க
எனக்காக
அவங்ககிட்ட
சண்டை
போடுறது
எனக்குப்
பிடிக்கலை
.”
“
நான்
உனக்காக
மட்டும்
பேசலை
…
அவ
வருண்கிட்டயும்
அப்படித்தான்
நடந்துக்கிறா
.
அவளுக்குத்
தெரியனும்
,
அண்ணன்
தம்பி
எல்லாம்
எப்பவும்
கூட
வரமாட்டாங்க
.
புருஷன்தான்
நமக்கு
எல்லாம்னு
அவளுக்குப்
புரியணும்
.”
“
அண்ணன்
சொல்றது
கரெக்ட்தான்
அண்ணி
.”
என்று
பரணியும்
நந்தாவுக்குப்
பேச
…
கயலுக்கு
என்ன
செய்வது
என்று
தெரியவில்லை
.
சாப்பிட்டுவிட்டு
பரணியும்
வெளியே
சென்றுவிட்டான்
.
கயல்
அப்படியே
உட்கார்ந்து
இருந்தாள்
.
Advertising
Advertising