Toggle navigation
Home
Tamil Novels
What's new
Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள்,
[email protected]
என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
Advertising
புது வெள்ளை மழை 3
Post Views:
2,597
புது
வெள்ளை
மழை
அத்தியாயம்
– 3
அன்பரசுவுக்கு
நந்தா
மீது
அவ்வளவு
அத்திரம்
.
எங்கிருந்து
வந்தான்
இவன்
.
நம்
திட்டத்தை
எல்லாம்
மாற்றுகிறான்
.
இவனை
எப்படி
அடக்குவது
என்று
யோசித்தார்
.
கள்ளச்சாராயம்
காயச்சுபவர்களுக்குப்
பண
உதவி
செய்து
வந்ததே
அன்பரசு
தான்
.
அன்பரசு
அரசியல்வாதி
இல்லை
.
அவர்கள்
சமுதாய
மக்களில்
செல்வாக்கானவர்
.
அவர்
என்ன
சொன்னாலும்
அவர்
சமுதாய
மக்கள்
மறுக்காமல
கேட்பர்
.
அவர்
சொன்னால்
சொல்பவர்களுக்கு
ஓட்டும்
போடுவார்கள்
.
அதனால்
அரசியல்வாதிகளுக்கு
மிகவும்
நெருக்கமானவர்
ஆனார்
.
இவர்
பண
உதவி
செய்து
வந்ததால்
…
கள்ளச்சாராயம்
காயச்சுபவர்களுக்கு
தெய்வம்
போல்
தெரிந்தார்
.
இவர்
என்ன
சொன்னாலும்
அவர்கள்
கேட்பார்கள்
.
அவர்களை
வைத்து
நிறையக்
காரியங்கள்
சாதித்துக்
கொள்வார்
.
ஊரில்
அவரை
யாரும்
பெயர்
சொல்லி
அழைப்பது
இல்லை
.
அய்யா
என்றுதான்
மரியாதையாக
அழைப்பார்கள்
.
அரசியல்வாதிகள்
ஆதரவு
இருந்ததால்
…
நிறைய
வழிகளில்
பணம்
சேர்த்தார்
.
இவர்
கஷ்ட்டப்பட்டு
ஆள்
சேர்த்து
வைக்க
….
இப்போது
வந்த
நந்தா
அவர்களை
வேறு
தொழில்
பார்க்க
அனுப்பிவிட
….
அவர்பாடு
திண்டாட்டம்
ஆனது
.
கள்ளச்சாராயம்
காயச்சுவதையே
குடும்பத்
தொழிலாகச்
செய்து
வந்தனர்
.
அதனால்
காலாகாலத்துக்கும்
கவலை
இல்லை
என்று
நினைத்து
இருந்தார்
.
ஆனால்
இப்போது
அவர்கள்
தொழிலையும்
மாற்றி
…
அவர்களின்
சந்ததிகளை
வேறு
படிக்க
அனுப்பினால்
…
அடுத்தத்
தலைமுறை
வேறு
வேலைக்கு
அல்லவா
சென்று
விடுவார்கள்
.
நந்தாவிடம்
இதைப்பற்றிப்
பேச
வேண்டும்
என்றுதான்
அவனைத்
தான்
பார்க்க
விரும்புவதாகச்
சொல்லி
அனுப்பினார்
.
ஆனால்
அவன்
அவரைத்
தெரியவே
தெரியாது
என்று
சொல்லிவிட்டான்
.
அதை
அவரால
நம்ப
முடியவில்லை
…
கண்டிப்பாக
அவனுக்குத்
தன்னைப்
பற்றித்
தெரிந்து
இருக்கும்
,
வேண்டுமென்றே
தான்
தன்னை
அவமானப்படுத்துகிறான்
எனப்
புரிந்து
கொண்டார்
.
‘
உனக்கு
நான்
யாருன்னு
காட்றேன்
.’
என
மனதிற்குள்
நினைத்துக்
கொண்டார்
.
எப்படி
ஒரு
சமுகத்தைச்
சேர்ந்த
மக்கள்
சேர்ந்து
தங்கள்
தலைவர்
ஒருவரின்
பிறந்த
தினத்தை
முக்கிய
நாளாகக்
கொண்டாடுகிறார்களோ
…
அதேபோல
ஒடுக்கப்பட்ட
மக்கள்
தங்களுக்காகக்
குரல்
கொடுத்து
உயிரையும்
விட்ட
தலைவரின்
நினைவு
தினத்தை
இன்றும்
அனுஷ்ட்டிகிறார்கள்
.
அந்தத்
தலைவரின்
நினைவு
நாள்
அன்று
மக்கள்
ஊர்வலமாகச்
சென்று
,
அந்தத்
தலைவரின்
சமாதியில்
அஞ்சலி
செலுத்துவார்கள்
.
இந்த
மாதிரி
ஜாதி
ஊர்வலங்களில்
கலவரங்கள்
ஏற்பட
நிறைய
வாய்ப்பு
உண்டு
.
மாவட்டம்
முழுவதும்
போலீஸ்
கண்காணிப்பில்
இருந்தது
.
இருந்தும்
என்ன
செய்ய
…
கலவரம்
வெடிக்கத்தான்
செய்தது
.
இது
மாதிரி
பொது
விழாக்களைத்தான்
தங்கள்
பழி
தீர்க்க
இரண்டு
தரப்புமே
பயன்படுத்துவார்கள்
.
அன்றும்
முதலில்
கல்வீச்சு
ஆரம்பிக்க
..
மக்கள்
அங்கேயும்
இங்கேயும்
சிதறி
ஓட
….
அப்போது
அங்கே
வந்த
மர்மம
கும்பல்
ஒன்று
நான்கு
பேரை
வெட்டி
சாய்த்துவிட்டுச்
சென்றது
.
இரண்டு
தரப்புக்கும்
இடையே
பெரிய
ஜாதி
கலவரம்
ஊருவாக
இருந்தது
.
துப்பாக்கி
சூடு
நடத்தியும்
,
கண்ணீர்
புகை
குண்டு
வீசி
எனக்
காவல்துறை
நிலைமையைக்
கட்டுக்குள்
கொண்டு
வந்தது
.
மாவட்டம்
முழுவதும்
, 144
தடை
உத்தரவு
பிறப்பிக்கப்பட்டு
இருந்தது
.
நந்தா
தன்
வாகனத்தில்
நகரை
வலம் வந்தான்
.
மறுநாள்
எந்த
இடங்களில்
கலவரம்
நடந்ததோ
அந்த
இடங்களைத்
தவிர
,
மற்ற
இடங்களில்
தடையுத்தரவு
நீக்கப்பட்டது
.
காவல்துறை
உயர்அதிகாரிகள்
கூடி
ஆலோசனை
நடத்தினார்கள்
.
மேலிடத்தில்
இருந்து
அவர்களுக்குக்
கேள்வி
மேல்
கேள்வி
வந்தது
.
ஆலோசனை
முடிந்ததும்
கலவரம்
நடந்த
இடத்திற்கு
நந்தா
பார்வையிட
சென்றான்
.
அங்குக்
காவலுக்கு
இருந்த
போலீசாரிடம்
அவன்
சராமாரியாகக்
கேள்வி
எழுப்பினான்
.
“
ஏற்கனவே
கலவரம்
நடக்க
வாய்ப்பு
உண்டுன்னு
தெரியும்
.
அவ்வளவு
அலெர்ட்
பண்ணியும்
,
கலவரம்
நடந்திருக்கு
…
நாலு
பேரு
வேற
செத்திருக்காங்க
.
நீங்க
எல்லாம்
என்ன
பண்ணிட்டு
இருந்தீங்க
.
வேடிக்கை
பார்த்திட்டு
இருந்தீங்களா
?”
அவன்
கேட்டது
உண்மைதான்
.
போலீஸ்
வேடிக்கைத்தான்
பார்த்துக்
கொண்டு
இருந்தது
.
காவல்துறையில்
இருந்த
சிலருமே
இதற்கெல்லாம்
உடந்தைதான்
.
அவர்களுக்கு
வேண்டியதை
செய்தத்தான்
அன்பரசு
இருந்தாரே
…..
காவல்
அதிகாரி
ஒருவர்
, “
சார்
நீங்க
அய்யாவை
போய்ப்
பாருங்க
சார்
.
அவர்
நினைச்சா
எல்லாத்தையும்
கண்ட்ரோல்
பண்ண
முடியும்
.”
என்றார்
.
அவரை
ஒரு
மாதிரி
பார்த்த
நந்தா
, “
போலீசா
இருந்திட்டு
இதைச்
சொல்ல
வெட்கமா
இல்லையா
…..”
எனக்
கேட்டவன்
, “
ஆனா
நான்
கண்டிப்பா
அவரைப்
பார்ப்பேன்
.
பணிந்து
போக
இல்லை
….
அவரையும்
எச்சரிக்கை
பண்ண
.”
என்றான்
நிமிர்வாக
.
அன்பராசு
எப்போது
வீட்டில்
இருப்பார்
என்று
தெரிந்து
கொண்டு
,
மறுநாள்
காலை
ஏழு
மணிக்கெல்லாம்
அவர்
வீட்டில்
நந்தா
இருந்தான்
.
ஹாலில்
உட்கார்ந்து
பேப்பர்
படித்துக்
கொண்டிருந்த
அன்பரசு
,
அவர்
வீட்டின்
முன்பு
போலீஸ்
வாகனம்
வந்து
நிற்கவும்
,
நிமிர்ந்து
பார்த்தவர்
,
நந்தாவை
பார்த்ததும்
வாசலுக்கு
வந்து
வரவேற்றார்
.
அவர்
பார்க்க
சினிமா
வில்லன்
போல
எல்லாம்
இல்லை
…
பக்தி
பழமாகத்
தெரிந்தார்
.
“
வாங்க
ASP.
நீங்க
கண்டிப்பா
வருவீங்கன்னு
எனக்குத்
தெரியும்
.”
என்றவர்
,
வீட்டின்
உள்ளே
நந்தாவை
அழைத்துச்
சென்றார்
.
வீடு
இப்போது
சமீபத்தில்
தான்
கட்டி
இருக்க
வேண்டும்
.
நவீன
வசதிகளோடு
பார்க்க
நன்றாகவே
இருந்தது
.
அவனைச்
சோபாவில்
அமர
வைத்தவர்
,
அங்கே
வந்த
அவரின்
மகன்களை
அவருக்கு
அறிமுகம்
செய்து
வைத்தார்
.
“
இவன்
மூத்தவன்
நவநீத
கிருஷ்ணன்
என்னோட
சேர்ந்து
தொழிலை
பார்த்துக்கிறான்
.
இவன்
இளையவன்
வாசு
வக்கீலா
இருக்கான்
.
நம்ம
கேசை
பார்க்கவே
ஒரு
வக்கீலு
வேண்டியது
இருந்தது
.
அதனால
என்
மகனையே
வக்கீலுக்குப்
படிக்க
வச்சிட்டேன்
.”
அன்பரசு
பெருமையாகச்
சொல்ல
…
கேட்ட
நந்தாவுக்கு
எரிச்சலாக
வந்தது.
இவரின்
பெருமையைக்
கேட்கவா
அவன்
இங்கு
வந்தான்
.
அவரின்
இரு
மகன்களும்
பார்க்க
அடியாட்கள்
போலத்
தடித்
தடியாக
இருந்தனர்
.
சரியான
காட்டானாக
இருப்பார்கள்
போல
என
மனதிற்குள்
நினைத்துக்
கொண்டான்
.
மகன்களை
அங்கிருந்து
கண்
ஜாடையில்
அகற்றியவர்
, “
அப்புறம்
என்ன
விஷயமா
என்னைப்
பார்க்க
வந்தீங்க
?”
எனக்
கேட்க
….
“
நான்
வருவேன்னு
தெரிஞ்ச
உங்களுக்கு
,
எதுக்கு
வருவேன்னு
தெரியாதா
?”
என
அவரை
விட
அலட்சியமாகக்
கேட்ட
நந்தா
…
சோபாவில்
வசதியாகச்
சாய்ந்து
,
கால்மேல்
கால்
போட்டுக்
கொண்டான்
.
அன்பரசுவின்
முகம்
மாற
…. “
தம்பி
நான்
இவ்வளவு
பொறுமையா
பேசுறதுக்குக்
காரணமே
நீங்களும்
எங்க
ஆளுங்கன்னு
தான்
.”
என்றார்
.
“
அதுக்குள்ள
எல்லாம்
விசாரிச்சிடீங்க
போல
…..”
“
நான்
ஒருத்தர்
கூடப்
பேசுறதுக்கு
முன்னாடி
அவரோட
ஜாதகத்தையே
கைல
வச்சிருப்பேன்
.”
“
அப்ப
என்னைப்
பத்தி
எல்லாம்
தெரியும்
.”
அன்பரசு
எதோ
சொல்ல
வரும்முன்
வெளியே
இருந்து
யாரோ
அவரை
அழைத்தார்கள்
.
“
பத்மா
…”
என
உள்ளே
பார்த்து
குரல்
கொடுத்த
அன்பரசு
, “
ஒரு
நிமிஷம்
வந்திடுறேன்
.”
என்றவர்
,
அங்கு
வந்த
தன்
மனைவியிடம்
பார்த்துக்க
எனச்
சொல்லிவிட்டு
வெளியே
சென்றார்
.
பத்மா
,
பார்க்க
அமைதியாகத்
தெரிந்தார்
. “
என்ன
சாப்பிடுறீங்க
?”
அவர்
கேட்க
….
“
இல்லை
எதுவும்
வேண்டாம்
.”
என
நந்தா
மறுக்க
…
“
கயல்
…
காபி
எடுத்திட்டு
வா
…”
என
உள்ளே
பார்த்து
குரல்
கொடுத்தார்
.
சிறிது
நேரத்திற்க்கெல்லாம்
ஒரு
பெண்
கையில்
தம்ளரோடு
வந்தாள்
.
பாவாடை
தாவணியில்
குனிந்த
தலை
நிமிராமல்
,
அவள்
அடி
மீது
அடி
வைத்து
நடந்து
வர
….
“
எங்க
கடைசிப்
பொண்ணு
கயல்விழி
.”
என்றார்
பத்மா
.
நடப்பதை
எல்லாம்
பார்த்த
நந்தாவிற்கு
, ‘
நான்
என்ன
இவளை
பெண்
பார்க்கவா
வந்திருக்கேன்
.
கொடுக்கிற
பில்டப்
பார்த்தா
அப்படித்தான்
இருக்கு
.”
என
நினைத்தவனுக்குச்
சிரிப்பு
வந்தது
.
அவன்
அருகில்
வந்தவள்
,
ஒரு
வெண்கல
டம்ளர்
நிறையக்
காபியை
நீட்ட
….
அதைப்
பார்த்த
நந்தா
, “
நான்
இவ்வளவு
காபி
குடிக்க
மாட்டேன்
.”
என்றதும்
,
அந்தப்
பெண்
அவனை
நிமிர்ந்து
பார்த்தாள்
.
நிலா
முகம்
என்று
அவன்
இதுவரை
கேள்விதான்
பட்டிருக்கிறான்
.
இன்றுதான்
நேரில்
பார்க்கிறான்
.
அழகான
வட்ட
முகத்தில்
,
கயல்விழி
என்ற
பெயருக்கு
ஏற்றார்
போல்
,
மீன்
போன்ற
பெரிய
கண்கள்
,
வில்
போன்ற
புருவம்
,
அழகான
சிவந்த
உதடுகள்
.”
“
சும்மா
எடுத்துக்கோங்க
தம்பி,
கருப்பட்டி
காபிதான்
உடம்புக்கு
நல்லது
.”
எனப்
பத்மா
சொல்ல
….
அவளைப்
பார்த்தபடி
காபியை
கையில்
வாங்கினான்
.
உடனே
அவள்
திரும்பி
செல்ல
…
இடையைத்
தாண்டிய
அவளின்
கூந்தள்
,
நல்ல
அடர்த்தியாகவும்
இருந்தது
.
இந்தப்
பொண்ணு
சாப்பிடுறது
எல்லாம்
முடிக்கே
போயிடும்
போல
…
அதுதான்
ஒல்லியா
இருக்கா
…
என
வேறு
நினைத்தான்
.
“
நாம
ஏன்
இன்னைக்கு
இப்படிக்
கண்டதையும்
யோசிக்கிறோம்
.”
எனத்
தறிகெட்டு
ஓடிய
மனதை
அடக்கியவன்
,
காபி
குடிப்பதில்
கவனம்
செலுத்தினான்
.
“
காபி
ரொம்ப
நல்லா
இருக்கு
.
சம்ப்ரதாயத்துக்கு
இல்லாமல்
,
உண்மையில்
அதன்
சுவையை
ரசித்தே
சொன்னான்
.”
அதை கேட்டு பத்மா
புன்னகைக்க
…
அப்போது
அன்பரசு
உள்ளே
வந்தார்
.
அவரைப்
பார்த்ததும்
பத்மா
உள்ளே
சென்று
விட்டார்
.
அவன்
காபி
குடித்து
முடிக்கும்
வரை
இருவரும்
ஒன்றும்
பேசவில்லை
.
“
நீங்க
இதுக்கு
முன்னாடி
எப்படி
வேணா
இருந்திருக்கலாம்
அன்பரசு
.”
அவன்
அய்யா
என்று
சொல்லாமல்
அவரின்
பெயரை
சொல்ல
…
அவரின்
முகம்
கடுத்தது
.
அதைக்
கவனித்தும்
கவனிக்காதது
போல்
நந்தா
தொடர்ந்தான்
.
“
உங்களால
சட்டம்
ஒழுங்குக்கு
இனி
ஒரு
பிரச்சனை
வந்தா
…
உங்களை
உள்ளே
வைக்கவும்
தயங்க
மாட்டேன்
.
இதைச்
சொல்லத்தான்
வந்தேன்
.
வரட்டா
…”
என
அவன்
திமிராகச்
சொல்லி
செல்ல
….
செல்லும்
அவனையே
அன்பரசு
கோபமாக
முறைத்தார்
.
அவர்
வேறு
மாதிரி
எதிர்பார்த்திருக்க
…
இவன்
மற்றவர்களைப்
போல்
அல்ல…
வேறு
மாதிரி
என
அவருக்குப்
புரிந்தது
.
அவன்
சென்றதும்
உள்ளே
வந்த
அவரின்
மகன்கள்
,
அவரைக்
கேள்வியாகப்
பார்க்க
….
“
இவன்
அடங்க
மாட்டான்
டா
…
இவனை
அடக்கணும்
.”
என்றார்
ஆத்திரமாக
…
உள்ளே
இருந்த
கயல்விழிக்கு
அவர்
சொன்னது
நன்றாகவே
கேட்டது
.
அவள்
மெல்லிய
உடல்
அதைக்
கேட்டு
நடுங்கியது
.
வெளிய
வந்த
நந்தா
ஜீப்பில்
ஏறப்போகும்
போது
…
அன்று
அவன்
கிராமத்தில்
பார்த்த
பெண்
சைக்கிளில்
வந்தாள்
.
இவள்
எங்கே
இங்கே
?
என்பது
போல்
அவன்
பார்க்க
…
அவளும்
நந்தாவை
ஆச்சர்யமாகப்
பார்த்தபடி
சென்றாள்
.
முன்
வாசல்
வழியாக
இல்லாமல்
…
பின்
வாசல்
வழியாக
அவள்
செல்ல
….
அந்த
வீட்டில்
அவள்
வேலை
செய்கிறாள்
என
நந்தா
புரிந்து
கொண்டான்
.
பின்கட்டு
வாசல்
படி
அருகே
நின்று
, “
அம்மா
…”
என
அந்தப்
பெண்
அழைக்க
….
பத்மா
வெளியே
எட்டி
பார்த்தார்
.
“
என்ன
பேச்சி
?”
“
அம்மா
இப்ப
வந்திட்டு
போறாரே
அந்த
அய்யாதான்
மா
…
எங்க
ஊருக்கு
ரெய்டு
வந்தவரு
.
இவராலதான்
இப்ப
எங்க
ஊர்
நல்லா
இருக்கு
.”
“
எங்க
அப்பாவும்
அண்ணனும்
கூடவேற
வேலைக்குப்
போறாங்க
.”
என்றாள்
குரலில்
சந்தோஷத்துடன்
.
“
சரி
சரி
அய்யா
கேட்டா
அவ்வளவுதான்
.
நீ
போய்ப்
பின்கட்டுல
வேலையைப்
பாரு
.
அப்புறமா
வந்து
சாப்பிடுவியாம்
.”
என்று
பத்மா
அவளை
அனுப்ப
…
உள்ளே
தள்ளி
நின்ற
கயல்விழியைப்
பார்த்துச்
சிநேகமாகச்
சிரித்துவிட்டுப்
பேச்சி
சென்றாள்
.
“
அம்மா
,
நான்
போய்ப்
படுத்துக்கட்டுமா
?”
“
சும்மா
படுத்திருக்கக்
கூடாது
.
உன்
அண்ணி
ஒரு
வேலையும்
செய்ய
மாட்டா
…
நீயாவது
அம்மாவுக்கு
உதவி
பண்ணக்கூடாதா
…”
பத்மா
சொல்ல
..
“
இல்லைமா
ஜுரம்
வர்ற
மாதிரி
இருக்கு
.”
என்றவள்
நிற்க
முடியாமல்
,
சுவற்றில்
சாய்ந்து
நின்றாள்
.
அவளைத்
தொட்டு
பார்த்த
பத்மாவும்
அவளின்
உடல்
சூட்டை
உணர்ந்தார்
.
“
இந்தப்
பொண்ணுக்கு
நல்லாவே
ஆகாதா
…”
என
அவருக்குக்
கவலையாக
இருந்தது
.
“
சரி
நீ
போய்ப்
படு
.
நான்
வரேன்
.”
என
அவளை
அனுப்பி
வைத்தார்
.
நந்தாவுக்கு
ஆபத்து
என்று
உணர்ந்த
கயல்விழி
,
அதையே
நினைத்துக்
கொண்டு
படுத்திருக்க
…
அவளால்
உறங்கவே
முடியவில்லை
…
ஏதேதோ
எண்ணங்கள்
அவளை
அலைகழித்தது
.
அங்கே
அவன்
தங்கி
இருந்த
இடம்
வந்து
சேர்ந்த
நந்தா
வருணை
தொலைபேசியில்
அழைத்தான்
.
“
என்ன
டா
திடிர்ன்னு
காலையிலேயே
போன்
பண்ணி
இருக்க
?”
“
ஏன்
நான்
பண்ணக் கூடாதா
?”
“
பண்ண
மாட்டியே
அதுதான
விஷயம்
…
இப்ப
எதுக்குப்
போன்
பண்ண
சொல்லு
.”
“
ஒரு
பொண்ணைப்
பார்த்தேன்
டா
….”
நந்தா
சொன்னதைக்
கேட்டு
ஆனந்த
அதிர்ச்சி
அடைந்த
வருண்
, “
டேய், நீ
யுத்த
பூமிக்குப்
போனதா
சொன்னாங்க
….
ஆனா
நீ
எதோ
பொண்ணைப்
பத்தி
பேசுற
.”
“
சொல்றதை
கேளு
டா
…
அவ
பேரு
கயல்விழி
…
ஒருத்தருக்கு
பேர்
இவ்வளவு
பொருத்தமா
இருக்கிறதை
நான்
இப்பத்தான்
டா
பார்க்கிறேன்
.”
“
யார்
அந்தப்
பொண்ணு
அதையும்
சொல்லு
.”
வருண்
கேட்க
.
.
.
நந்தா
எல்லாவற்றையும்
சொல்ல
…
“
டேய்
பாவி
.
அந்தப்
பொண்ணோட
அப்பாகிட்ட
பேசுற
பேச்சையா
டா
பேசிட்டு
வந்திருக்க
…
இனி
அவன்
பொண்ணு
கொடுக்க
மாட்டானே
என்ன
செய்வ
?”
“
யாரு
அவன்கிட்ட
பொண்ணு
கேட்க
போறா
?
பொண்ணு
பார்க்க
நல்லா
இருந்தா
…
உன்கிட்ட
சொல்லனும்னு
தோனுச்சு
சொன்னேன்
.”
“
அவ்வளவுதானா
…”
வருண்
சந்தேகமாகக்
கேட்க
….
“
வேற
எதாவது
முன்னேற்றம்
இருந்தா
உனக்குக்
கண்டிப்பா
சொல்றேன்
.”
“
முன்னேற்றம்
எல்லாம்
தானா
வராது
டா
…
நாமதான்
வர வைக்கனும்
.”
நண்பன்
சொன்னதைக்
கேட்டு
சிரித்தபடி
நந்தா
போன்னை
வைக்க
…
வருண்
இந்தப்
பக்கம்
சிரித்துக்
கொண்டான்
.
“
என்னங்க
யாரு
போன்ல
?
எங்க
அண்ணனா
?
என்ன
பேசினீங்க
?”
தாரணி
கேட்க
…
“
எங்களுக்குள்ள
ஆயிரம்
இருக்கும்
அதெல்லாம்
நீ
கேட்க
கூடாது
.
நாங்க
பிரண்ட்ஸ்
என்ன
வேணா
பேசிப்போம்
.”
என்றபடி
வருண்
செல்ல
….
“
மனசுல
தளபதி
படத்துல
வர்ற
ரஜினி
மம்மூட்டின்னு
நினைப்பு
.”
எனத்
தாரணி
நொடித்தாள்
.
Advertising
Advertising