Toggle navigation
Home
Tamil Novels
What's new
Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள்,
[email protected]
என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
Advertising
புது வெள்ளை மழை 4
Post Views:
2,502
புது
வெள்ளை
மழை
அத்தியாயம்
– 4
கயலும்
அவள்
அம்மா
பத்மாவும்
கீழே
இருக்கும்
அறை
ஒன்றில்
படுத்துக் கொள்வது
வழக்கம்
.
மற்றொரு
அறையில்
அன்பரசு
இருப்பார்
.
மாடியில்
இரு
அண்ணன்களுக்கும்
அறைகள்
இருக்கிறது
.
அதைத்தவிர
வீட்டை
சுற்றி
ஆட்கள்
எப்போதும்
இருப்பர்
.
அன்று
மன
உளைச்சலில்
இருந்த
கயல்விழி
நள்ளிரவுக்கும்
மேல்தான்
மெல்ல
உறங்கினாள்
.
இரவு
நந்தா
அவன்
அலுவலகத்தில்
இருந்து
வீட்டிற்குச்
செல்லும்
வழியில்
…
அவனைச்
சிலர்
காரில்
வழிமறித்தனர்
.
அவன்
காரில்
இருந்து
இறங்கி
நிற்க
….
அன்பரசுவின்
மகன்
நவநீத
கிருஷ்ணன்
பின்னால்
இருந்து
அவனை
வெட்ட
அரிவாளை
ஓங்க
…..
வீல்லென்று
கத்திக்கொண்டு
கயல்விழி
எழுந்து உட்கார்ந்தாள்.
எல்லாம்
வெறும்
கனவு
.
அவள்
உடல்
முழுவதும்
நடுங்க
….
அவளுக்கு
நல்ல
காய்ச்சல்
.
அவள்
போட்ட
சத்தத்தில்
மொத்த
வீடும்
அலறி
அடித்து
எழுந்து
வந்தது
.
“
என்ன
ஆச்சு
?”
அன்பரசு
கேட்க
…..
மகளை
மீண்டும்
கட்டிலில்
படுக்க
வைத்த
பத்மா
, “
அவளுக்குத்
திரும்பக்
காய்ச்சல்
வந்துடுச்சுங்க
.”
என்றதும்
,
மகளை
ஒரு பார்வை
பார்த்தவர்
,
திரும்பி
தன்
சின்ன
மகனிடம்
“
நம்ம
டாக்டரை
வர
சொல்லு
.”
என்றார்
.
அன்பரசு
அறைக்குள்
சென்றதும்
, “
எப்ப
பாரு
இதே
தொல்லை
….
இந்த
வீட்ல
நிம்மதியா
தூங்க
கூட
முடியலை
….”
என
அந்த
வீட்டின்
மருமகள்
கீதா
முனங்க
.
“
அன்னைக்கே
சொன்னேன்
இவளையும்
முடிச்சிருக்கணும்
.”
என்றான்
மூத்தவன்
நவநீத
கிருஷ்ணன்
.
அவன்
சட்டையைப்
பற்றிய
பத்மா
, “
என்
பொண்ணு
எதுக்கு
டா
சாகனும்
.
கொஞ்சம்
கூட
இறக்கம்
இல்லாம
பேசுறியே
…
இதே
நீ
பெத்த
பொண்ணா
இருந்த
இப்படிப்
பேசுவியா
?”
“
எங்க
பொண்ணு
ஒன்னும்
உங்க
பொண்ணு
மாதிரி
ஒழுக்கம்
கெட்டு
போக
மாட்டா
…”
காதலித்தவனையே
திருமணம்
செய்து
கொண்டது
ஒழுக்கம்
கெட்ட
செயலா
?
எனக்
கேட்க
நினைத்தவர்
,
அதை
எல்லாம்
இந்த
வீட்டில்
பேசிவிட
முடியாது
என்பதால்
….
அமைதியாகி
விட்டார்
.
அவருக்காகத்தான்
கயல்விழியை
உயிரோடு
விட்டு
வைத்திருப்பதே
….
இல்லையென்றால்
என்றோ
அவள்
கதையும்
முடிந்து
இருக்கும்
.
மறுநாள்
நந்தா
அலுவலகத்துக்குக்
கிளம்பிக்
கொண்டிருந்த
போது
…
அவனைப்
பார்க்க
இன்ஸ்பெக்டர்
வந்திருந்தார்
.
அவரையும்
தன்னோடு
அழைத்துக்
கொண்டு
சென்றான்
.
சிறிது
தூரம்
சென்றதும்
,
அவர்களை
ஒரு
வாகனம்
பின்
தொடருவதைக்
கவனித்து
விட்டான்
.
“
கொஞ்சம்
வேகமா
போங்க
…”
என
ஓட்டுனரை
பார்த்து
சொன்னவன்
,
ஒரு
வளைவுக்கு
அடுத்து
வந்த
கிளை
சாலையில்
வாகனத்தை
விடச்
சொன்னான்
.
வளைவு
இருந்த
காரணத்தால்
…
பின்னே
வந்தவர்கள்
அவன்
கிளை
சாலையில்
திரும்பியதை
கவனிக்க
வில்லை
.
சற்றுத்
தூரம்
சென்றுதான்
முன்னே
சென்ற
வாகனத்தைக்
காணவில்லை
என்று
காரை
திருப்பிக்
கொண்டு
வந்தனர்
.
கார்
அருகில்
வந்ததும்
தான்
கவனித்தனர்
.
சாலையில்
ஓரம்
தனது
வாகனத்தில்
இருந்து
நந்தா
இறங்கி
நின்றிருப்பதை
.
அவன்
அவர்களுக்காகவே
காத்திருக்கிறான்
என
நன்றாகப்
புரிந்தது
.
இப்போது
என்ன
செய்வது
,
இறங்கி
ரெண்டில்
ஒன்று
பார்ப்போமா
…
இல்லை
பின்வாங்குவோமா
என
அவர்கள்
யோசிக்கும்போதே
…
நந்தா
துப்பாக்கியை
எடுத்து
நீட்டி
இருந்தான்
.
வேறு
வழி
இல்லை
அவர்களுக்கு
,
காரை
நிறுத்த
….
உடன்
வந்த
இன்ஸ்பெட்டர்
மற்றும்
ஓட்டுனர்
இருவரும்
சேர்ந்து
,
அவர்களை
வெளியே
இழுத்து
ரோட்டில்
மண்டி
போட
வைத்தனர்
.
ஜீப்பில்
இருந்து
கயிறு
எடுத்து
வந்து
நான்கு
பேரின்
கைகளையும்
பின்னால்
சேர்த்து
கட்டி
வைத்தனர்
.
வாக்கி
டாக்கியில்
ஏற்கனவே
தகவல்
கொடுத்திருக்க
..
ரோந்து
செல்லும்
வாகனம்
வந்து
அவர்களை
ஏற்றிக்கொண்டு
அருகில்
இருந்த
காவல்
நிலையம்
சென்றது
.
நந்தாவும்
அவர்கள்
வாகனத்தில்
அவர்களைத்
தொடர்ந்து
சென்றான்
.
அங்கே
காவல்
நிலையத்தில்
வைத்து
அவர்களை
விசாரித்தனர்
.
“
யாரு
அனுப்பியது
?”
என்று
கேட்டதற்கு
அவர்களுக்குத்
தெரியவில்லை
…
இவர்கள்
கூலிப்படையைச்
சேர்ந்தவர்கள்
,
நேரில்
எல்லாம்
இவர்கள்
யாரையும்
சந்திக்க
மாட்டார்கள்
…
எல்லாவற்றிற்கும்
வேறு
ஆள்
இருப்பார்கள்
என்று
தெரியும்
.
அவர்களைக்
காவலில்
வைக்கச்
சொன்ன
நந்தா
….
அங்கிருந்து
தன்
அலுவலகத்திற்குக்
கிளம்பினான்
.
அன்று
இரவு
வெகு
நேரம்
சென்றே
வீடு
திரும்பினான்
.
இரவு
படுத்ததும்
கயல்விழி
நியாபகமாகவே
இருந்தது
.
அவனுக்கு
அவளைப்
பார்க்க
வேண்டும்
போல்
இருந்தது
.
எப்படிப்
பார்ப்பது
என்று
யோசித்தவனுக்கு
ஒரு
வழியும்
புலப்படவில்லை
.
மறுநாள்
காலை
பேச்சியின்
கிராமத்தில்
இருந்து
அன்பரசு
வீட்டிற்குச்
செல்லும்
வழியில்
…..
ஆள்
நடமாட்டம்
இல்லாத
இடமாகப்
பார்த்து
,
நந்தா
அவனின்
காரில்
உட்கார்ந்து
கொண்டு இருந்தான்
.
அவன்
காக்கி
உடையில்
இல்லை
…
சாதாரண
உடையில்தான்
இருந்தான்
.
அவளை
அன்பரசு
வீட்டில்
பாரத்ததை
வைத்து
,
அந்த
நேரத்தை
கணக்கிட்டு
வந்திருந்தான்
.
அவனுக்குப்
பேச்சியைப்
பிடிப்பதை
தவிர
வேறு
வழியில்லை
….
அவள்
மூலமாகத்தான்
கயல்விழி
பற்றித்
தெரிந்துகொள்ள
முடியும்
என
நினைத்தான்
.
சிறிது
நேரத்தில்
சைக்கிளில்
பாடுப்படியபடி
பேச்சி
வந்தாள்
.
அவளைப்
பார்த்ததும்
நந்தா
காரில்
இருந்து
இறங்கி
நின்றான்
.
திடிரென்று
அவனைப்
பார்த்ததும்
பேச்சிக்கு
வெட்கமாகப்
போய்விட்டது
.
நந்தாவும்
சிரித்து
விட்டான்
.
அவனைப்
பார்த்ததும்
பேச்சி
சைக்கிளில்
இருந்து
இறங்கி
நின்றாள்
.
“
உன்னைப்
பார்க்கத்தான்
வந்தேன்
.
உன்
பேரு
?”
“
பேச்சியம்மாங்க
அய்யா
.”
“
ஊர்ல
எல்லோரும்
சவுக்கியமா
?”
“
ம்ம்
…
நல்லா
இருக்காங்க
.
இப்ப
யாரும்
சாராயம்
காய்ச்சுறது
இல்லைங்க
.”
என
அவள்
கூடுதல்
தகவல்
சொல்ல
…
“
நல்லது
.
அப்புறம்
எத்தனை
வருஷமா
அன்பரசு
வீட்ல
வேலை
பார்க்கிற
?”
“
வீட்ல
இல்லைங்க
அய்யா
…
பின்னாடி
இருக்கிற
மாட்டு
தொழுவத்துலதான்
வேலை
பார்க்கிறேன்
.
அது
ஒரு
ரெண்டு
வருசம்
இருக்குமுங்க
.”
“
ஓ
….
அவங்களுக்கு
ஒரு
பொண்ணு
கூட
இருக்கு
இல்ல
?”
“
ஆமாம்
கயல்விழி
அக்கா
….”
“
அவங்க
உனக்கு
ப்ரண்டா
?”
“
ஐயோ
இல்லைங்க
முன்னாடி
பேசுவாங்க
…
இப்ப
என்கிட்டே
பேசுறது
கூட
இல்லை
.”
“
அவங்க
என்ன
படிக்கிறாங்க
?”
“
முன்னாடி
காலேஜ்
போனாங்க
…
அப்புறம்
உடம்பு
சரியில்லைன்னு
வீட்லதான்
இருக்காங்க
.”
“
ஓ
..
.
அவங்க
வேற
எங்கையும்
வெளிய
போகவே
மாட்டாங்களா
?”
“
அவங்க
அம்மாவோட
கோவிலுக்குப்
போவாங்க
.”
“
எந்தக்
கோவில்
?”
“
அது
அவங்க
குலதெய்வ
கோவில்
….”
“
அப்ப
வேற
யாரும்
அங்க
போகக்
கூடாதா
?”
“
அப்படி
இல்லை
….
ஆனா
அவங்க
ஆளுங்க
மட்டும்
தான்
போவாங்க
.”
மேலும்
கோவில்
எங்கே
இருக்கிறது
…
எந்தத்
தினம்
செல்வார்கள்
என
எல்லா
விவரமும்
கேட்டுக்கொண்டான்
.
“
சரி
நான்
வரேன்
.”
எனக்
கிளம்பியவன்
,
நின்று
அவளைத்
திரும்பி
பார்த்து
, “
நீ
இப்படித்தான்
யாரு
நின்னு
பேசினாலும்
பேசுவியா
…”
எனக்
கேட்க
…
“
இல்லை
…
நீங்கன்னு
தான்
நின்னேன்
.”
என்றாள்
பேச்சி
.
“
யார்கிட்டயும்
இப்படி
நின்னு
பேசக்கூடாது
என்ன
?”
அவன்
அக்கறையாகச்
சொல்ல
..
பேச்சி
சரி
என்பதாகத்
தலையசைத்தாள்
.
“
ஆமாம்
நீ
ஸ்கூல்
போகலையா
?”
“
பத்தாவது
வரை
படிச்சேன்
.
அய்யா
வீட்ல
வேலைக்கு
ஆள்
வேணும்னு
சொல்லி
நிறுத்திட்டாங்க
.”
“
இவனுங்களைத்
தவிர
எவனும்
முன்னுக்கு
வரக்
கூடாதுன்னு
எண்ணம்
.”
என
நினைத்தவன்
, “
நான்
உங்க
வீட்ல
பேசுறேன்
.
நீ
அடுத்த
வருஷம்
ஸ்கூலுக்குப்
போற
.”
என்றான்
அழுத்தமாக
.
அவன்
அப்படிச்
சொன்னதும்
அவள்
முகம்
பளிச்சிட
, “
நன்றிங்க
அய்யா
…”
என்றாள்
.
“
என்னது
அய்யாவா?
வேண்டாம்
மா
,
நீ
என்னை
அண்ணான்னு
வேணா
கூப்பிடு
.”
எனச்
சொல்லிவிட்டுச்
சென்றான்
.
கிராமத்து
வெள்ளந்தியான
பேச்சிக்கு
,
அவன்
தன்னுடன்
நின்று
பேசியதே
,
ஆச்சர்யமாக
இருந்தது
.
அதோடு
அண்ணன்
என்று
வேறு
அழைக்கச்
சொல்ல
…
“
பார்க்க
ஹீரோ
மாதிரி
இருக்காங்க
.
இவங்க
எனக்கு
அண்ணனா
…”
எனச்
சந்தோஷமாக
உணர்ந்தாள்
.
அதே
சந்தோஷத்தோடு
சைக்கிளை
மிதித்துக்கொண்டு
வேலைக்குச்
சென்றாள்
.
அந்த
வாரம்
வெள்ளிக்கிழமை
எதேச்சையாக
வருவது
போல்
நந்தா
கோவிலுக்குச்
சென்றான்
.
கயல்விழி
அவள்
அம்மாவோடு
எப்போதும்
போல்
கோவிலுக்கு
வந்தாள்
.
உடன் வந்த
ஆட்கள்
வெளியவே
நின்றுகொள்ள
…..
இவர்கள்
இருவர்
மட்டுமே
உள்ளே
வந்தனர்
.
தெரிந்தவரோடு
பத்மா
நின்று
பேச
….
கயல்விழி
கோவிலுக்குள்
சென்றாள்
.
சிகப்பு
நிற
பாவடை
ரவிக்கைக்கு
நீல
நிறத்தில்
தாவணி
அணிந்து
இருந்தாள்
.
தலையைத்
தளர
பின்னி
நெற்றியில்
கருப்பு
நிற
பொட்டு
மட்டுமே
வைத்திருந்தாள்
.
அதற்கே
பார்த்ததும்
மனதில்
ஒட்டிக்கொள்வது
போல்
இருந்தாள்
.
அவள்
மட்டுமே
உள்ளே
வருவதைப்
பார்த்த
நந்தா
அவளை
நோக்கி
சென்றான்
.
“
ஹலோ
…
என்னைத்
தெரியுதா
?”
என
அவன்
குரல்
கேட்டு
கயல்விழி
அப்போதுதான்
அவனைப்
பார்த்தாள்
.
அவனை
எதிர்பாராததால்
திகைத்துப்
போய்ப்
பார்த்தவள்
, “
உங்களுக்கு
ஒன்னும்
ஆகலையே
?”
என
வாய்விட
…
முதலில்
நந்தாவுக்கு
ஒன்றும்
புரியவில்லை
….
மீண்டும்
அவள்
சொன்னதை
நினைத்து
பார்த்தவனுக்குப்
புரிந்து
விட்டது
.
“
உன்
அப்பாதான்
என்னை
அடிக்க
ஆள்
அனுப்பினதா
?”
அவன்
சரியாகக்
கேட்டு
விட
….
கயல்விழியின்
முகம்
வெளுத்தது
.
“
டேய்
மாமா…
இது
உன்
வேலைதானா
…
உனக்கு
அப்புறம்
இருக்கு
.”
என
நினைத்தவன்
,
“
எனக்கு
எதுவும்
ஆகாதது
,
உனக்குச்
சந்தோஷமா
வருத்தமா
…
அதை
முதல்ல
சொல்லு
?”
என
அவன்
புன்னகைத்தபடி
கேட்க
…
நந்தாவை
பார்த்து
முறைத்த
கயல்விழி
அவனைச்
சுற்றிக்கொண்டு
சென்றாள்
.
அப்போது
பத்மா
உள்ளே
வர
….
நந்தாவும்
விலகி
சென்றான்
.
அவனை
முதலில்
யாரோ
என்று
பார்த்தவர்
, “
நீங்களா
…
நல்லா
இருக்கீங்களா
…”
எனக்
கேட்க
…
“
நல்லா
இருக்கேன்
.”
என்றான்
நந்தா
.
அந்த
நேரம்
பூசாரியும்
உள்ளே
வர
…
அவர்கள்
சாமி
கும்பிட
சென்றனர்
.
நந்தா
சாமி
கும்பிடும்
போதுதான்
கவனித்தான்
,
கயல்விழியின்
முகத்தில்
அமைதியே
இல்லை
…
அவள்
பதட்டமாகவே
இருப்பது
போல்
தோன்றியது
.
‘
இவளுக்குள்ள
அப்படி
என்ன
ஓடுது
?’
என
நினைத்துக்
கொண்டான்
.
பூசாரி
கற்பூர
தீபத்தைக்
காட்ட
…
அதைக்
கண்களில்
ஒற்றிக்கொண்ட
கயல்விழி
,
வெறும்
திருநீறு
மட்டுமே
எடுத்துக்
கொண்டாள்
.
பூசாரி
நந்தாவுக்குக்
காகிதத்தில்
மடித்த
திருநீறு
,
குங்குமமும்
மற்றும்
கொஞ்சம்
பூவும்
கொடுத்தார்
.
கோவிலை
சுற்றும்
போது
பத்மா
முன்னே
சென்று
விட
….
கயல்விழியின்
அருகே
வந்த
நந்தா
, “
நீ
குங்குமமே
எடுத்துக்கலை
…
இதை
வச்சுக்கோ
…”
எனப்
பூசாரி
கொடுத்த
பிரசாதத்தை
அவளிடம்
கொடுத்து
விட்டுச்
சென்றான்
.
கையில்
இருந்த
குங்குமத்தையும்
பூவையும்
பார்த்த
கயல்விழிக்குக்
கண்கள்
கலங்க
,
தன்னைச்
சமாளித்துக்
கொண்டு
நடந்தாள்
.
அவன்
கொடுத்ததைக்
கோவில்
பிரகாரத்திலேயே
வைத்து
விட்டாள்
.
அவர்கள்
கோவிலில்
இருந்து
கிளம்பிய
போது
இருட்டி
விட்டது
.
அவள்
சோர்ந்து
போய்
நடக்க
…
செல்லும்
அவளையே
பார்த்த
நந்தாவுக்கு
,
கண்டிப்பாக
இவளுக்கு
எதோ
பிரச்சனை
இருக்கிறது
என்று
நினைத்தான்
.
இவளுக்கு
என்ன
ஒரு
பத்தொன்பது
வயது
இருக்குமா
…
அந்த
வயதுக்கு
ஏற்ற
துள்ளளோ
,
துடிப்போ
அவளிடம்
இல்லை
.
அவர்கள்
கார்
கிளம்பி
சென்றதும்
,
அவன்
கோவில்
மண்டபத்திலே
உட்கார்ந்து
விட
….
வேறு
யாரும்
இல்லாததால்
,
அந்தப்
பூசாரியும்
வந்து
அவனுக்குப்
பக்கத்தில்
இடைவெளி
விட்டு
அமர்ந்தார்
.
“
எப்படி
இருந்த
பொண்ணு
?
இன்னைக்கு
இப்படி
இருக்கே
…”
என
அவர்
வருத்தமாகச்
சொல்ல
…
நந்தா
அவரைப்
புரியாமல்
பார்த்தான்
.
பூசாரி
அவனிடம்
கயல்விழியைப்
பற்றி
எல்லாவற்றையும்
சொல்லிவிட்டார்
.
“
தம்பி
நான்
சொன்னதை
இப்ப
யார்கிட்டயும்
சொல்லிடாதீங்க
…
விஷயம்
வெளிய
பரவிட்டதுன்னு
தெரிஞ்சிட்டா,
அந்தப்
பெண்ணைக்
கொலை
கூடப்
பண்ணிடுவாங்க
.”
“
அந்தப்
பொண்ணு
இவ்வளவு
தூரம்
நடமாட்டிகிட்டு
இருக்கிறதுக்குக்
காரணமே
அவங்க
அம்மாதான்
.”
நந்தாவுக்கு
இப்போது
அவளைப்
புரிந்து
கொள்ள
முடிந்தது
.
காயம்
பட்டவர்களுக்குக்
காயம்
ஆறியதும்
மறந்து
போகும்
.
ஆனால்
காயப்படுத்தியவர்களுக்கு
அவ்வளவு
சீக்கிரம்
ஆறாது
.
நம்மால்
இப்படி
ஆகிவிட்டது
என்ற
குற்ற
உணர்வே
அவர்களைக்
கொஞ்சம்
கொஞ்சமாகக்
கொல்லும்
.
இப்போது
கயல்விழியும்
அந்த
நிலையில்தான்
இருந்தாள்
.
அன்று
இரவு
தாரணி
உறங்கியதும்
வருண்
நந்தாவை
அழைத்தான்
.
“
டேய்
அந்தப்
பொண்ணை
அதுக்குப்
பிறகு
பார்த்தியா
?”
“
நான்
அன்னைக்கு
எதோ
ஆர்வக்கோளாறுல
சொன்னேன்
…
நீ
இன்னும்
அதைப்
பிடிச்சிட்டு
இருக்கியா
…”
நந்தா
சமாளிக்க
…
“
நீ
என்கிட்டே
சொல்றன்னா
…
உன்னை
அந்த
அளவுக்கு
அந்தப்
பொண்ணு
பாதிச்சிருக்கான்னுதான்
அர்த்தம்
.
சும்மா
சமாளிக்காத
…”
நந்தாவும்
அதற்கு
மேல்
மறைப்பதாக
இல்லை
…
“
எஸ்
பார்த்தேன்
.”
என்றவன்
,
அந்தப்
பூசாரி
சொன்னதையும்
சொன்னான்
.
“
இப்ப
என்னடா
பண்ணப் போற
?
அந்தப்
பெண்ணை
அப்படியே
விட்டுடுவியா
?”
“
என்
தங்கையோ
தம்பியோ
தப்பு
பண்ணா
நான்
விட்டு விடுவேனா.
..
அவங்க
வாழ்க்கையைச்
சரி
பண்ண
தானே
பார்ப்பேன்
.
அதே
போலத்தான்
அவளும்
எனக்கு
.
நான்
அவளை
விட
மாட்டேன்
.”
“
எனக்கு
அவதான்னு
நான்
முடிவு
பண்ணிட்டேன்
.”
நந்தா
உறுதியாகச்
சொல்ல
…
அந்தப்
பக்கம்
கேட்ட
வருணுக்கு
மகிழ்ச்சியாக
இருந்தது
.
Advertising
Advertising