Toggle navigation
Home
Tamil Novels
What's new
Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள்,
[email protected]
என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
Advertising
புது வெள்ளை மழை 6 1
Post Views:
2,003
புது
வெள்ளை
மழை
அத்தியாயம்
– 6
அவன்
யோசனையில்
இருக்கும்
போதே
வீடும்
வந்திருக்க
….
பத்மா
ஒரு
முடிவுடன்
காரில்
இருந்து
இறங்கினார்
.
அவரைத்
தொடர்ந்து
இறங்கிய
கயல்விழியின்
முகம்
பயத்தில்
வெளிறி
இருந்தது
.
இருவரும்
மெதுவாக
வீட்டை
நோக்கி
செல்ல
…
அவர்களைப்
பார்த்ததும்
,
ஆத்திரமாகக்
கத்த
வந்த
அன்பரசு
,
அவர்களின்
பின்னே
வந்த
நந்தகுமாரை
பார்த்ததும்
,
அதிர்ச்சியில்
திகைத்து
போய்ப்
பேச
மறந்தார்
.
வேறு
வழியில்லாமல்
வந்தவனைப்
பார்த்து
,
“
வாங்க
”
என
அவர்
அழைக்க
….
அதற்குள்
பத்மாவும்
,
கயல்விழியும்
அறைக்குள்
சென்று
இருந்தனர்
.
அவர்கள்
இருவரும்
உள்ளே
செல்லும்
போது
,
கீதாவும்
,
விக்னேஷும்
அவர்களை
இளக்காரமாகப்
பார்த்து
நகைத்தனர்
.
“
நான்
இப்ப
கொஞ்சம்
வெளிய
போகணும்
,
நாம
பிறகு
பேசலாமா
?”
அன்பரசு
நந்தாவிடம்
கேட்க
,
“
உங்ககிட்ட
கண்டிப்பா
நான்
பேசணும்
.
நான்தான்
அவங்களைக்
கோவில்ல
இருந்து
கூடிட்டு
வந்தேன்
.”
என
நந்தா
சொல்லவும்தான்
,
அவரது
மனைவியையும்
,
மகளையும்
அழைத்து
வந்தது
அவன்தான்
என
அன்பரசுவுக்குத்
தெரிந்தது
.
அவர்
தன்
மகன்கள்தான்
அவர்களை
அழைத்து
வந்திருந்தனர்
என
நினைத்து
இருந்தார்
.
“
ஐயோ
இப்ப
இவனுக்கும்
விஷயம்
தெரிந்து
விட்டதா
…
தன்னைப்
பற்றிக்
கேவலமாக
நினைப்பானே
…”
என
நினைத்தபடி
நந்தாவுக்கு
ஒரு
இருக்கையைக்
காட்டிவிட்டு
,
தானும்
அவன்
எதிரில்
அமர்ந்தார்
.
“
கொஞ்சம்
தண்ணீர்
கொடுங்க
.”
நந்தா
கேட்க
…
கீதா
உள்ளே
சென்று
தண்ணீர்
கொண்டு
வந்து
கொடுத்தாள்
.
அவன்
அதைப்
பருகிக்கொண்டு
இருக்கும்
போதே
….
கிருஷ்ணாவும்
வாசும்
வந்துவிட்டனர்
.
நந்தா
காரை
மெதுவாகத்தான்
ஓட்டிக்கொண்டு
வந்திருந்தான்
.
இவர்கள்
சென்று
கோவில்
பூசாரியிடம்
விசாரித்து
விட்டு
வந்திருந்தனர்
.
ஆக்ரோஷமாக
வீட்டிற்குள்
நுழைந்த
இருவரும்
,
நந்தாவை
பார்த்ததும்
தயங்கி
நின்றனர்
.
இவர்கள்
இருவரிடமும்
மாட்டினால்
கயல்விழியின்
நிலை
என்ன
ஆகும்
என
நினைத்த
நந்தா
,
தான்
நினைத்ததைப்
பேசி
விடுவது
என
முடிவு
செய்து
கொண்டான்
.
“
இதுக்கு
முன்னாடி
உங்க
பொண்ணு
வாழ்க்கையில
என்ன
வேணா
நடந்திருக்கலாம்
.
எனக்கு
அதைப்
பத்தி
எல்லாம்
அக்கறை
இல்லை
.
எனக்கு
வருங்காலம்
தான்
முக்கியம்
.”
“
உங்க
பெண்ணைப்
பார்த்த
அன்னைக்கே
எனக்குப்
பிடிச்சிருந்தது
.
உங்க
பெண்ணை
எனக்குக்
கல்யாணம்
பண்ணி
தருவீங்களா
?”
எனக்
கேட்டே
விட்டான்
.
தனக்கு
எதோ
அறிவுரை
வழங்குவான்
என
நினைத்தாரே
தவிர
,
இப்படி
அவன்
பெண்
கேட்பான்
என
அன்பரசு
நினைக்கவே
இல்லை
.
“
நான்
கொஞ்சம்
யோசிச்சு
சொல்றேன்
.”
“
இல்லை
,
எனக்கு
இப்பவே
முடிவு
தெரியனும்
.
நான்
உங்களை
நம்பி
கயல்விழியை
இங்க
விட்டுட்டு
போக
மாட்டேன்
.
நீங்க
பொண்ணு
கொடுக்க
மாட்டேன்னு
சொன்னாலும்
,
எனக்கு
அவளை
இங்க
இருந்து
எப்படிக்
கொண்டு
போறதுன்னு
தெரியும்
.”
நந்தா
நிமிர்வாகச்
சொல்ல
….
“
ஹே
யாரு
வீட்டுக்கு
வந்து
யாரை
மிரட்டுற
?”
எனக்
கிருஷ்ணாவும்
,
வாசுவும்
எகிற
..
.
“
வர்ற
வழியில்
போலீஸ்
ஸ்டேஷன்னுக்குத்
தகவல்
கொடுத்திட்டு
தான்
வந்தேன்
.
உங்க
கோடவுன்ல
ரைட்
போகச்
சொல்லி
…”
“
நாங்களே
கஞ்சாவை
அங்க
வச்சிட்டு
,
எடுக்கிறது
போல
எடுத்து
,
உங்க
எல்லாரையும்
உள்ள
தள்ளிட்டு
,
நாளைக்கே
அவ
கழுத்துல
தாலி
கட்டி
காட்டட்டுமா
…”
எனப்
பதிலுக்கு
நந்தாவும்
எகிற
,
அன்பரசு
இரு
தரப்பையும்
அடக்கினார்
.
“
எனக்கு
என்ன
குறை
அன்பரசு
?
உங்க
பெண்ணைக்
கொடுக்கிறதுல
என்ன
தயக்கம்
?
நான்
அவளை
நல்லா
பார்த்துப்பேன்
.”
அன்பரசுவும்
அதேதான்
யோசித்துக்
கொண்டு
இருந்தார்
.
இதே
அவர்
பெண்ணுக்கு
மாப்பிள்ளை
பார்க்கும்போது
,
நந்தா
மாதிரி
ஒருவன்
மாப்பிள்ளையாக
வந்தால்
,
அவர்
வேண்டாம்
என்று
சொல்லி
இருக்க
மாட்டார்
.
இப்போது
மட்டும்
ஏன்
தயங்க
வேண்டும்
என
நினைத்தவர்
,
எழுந்து
தன்
மனைவி
இருந்த
அறைக்குள்
சென்றார்
.
அவரைப்
பார்த்ததும்
வேகமாக
எழுந்து
வந்த
பத்மா
, “
அவளை
எதுவும்
செஞ்சுடாதீங்க
.
அவ
ரொம்பப்
பயப்படுறா
.”
“
நானே
என்ன
பண்ணணுமோ
பண்ணிக்கிறேன்
.
நாளைக்குக்
காலையில
நாங்க
ரெண்டு
பேரும்
உயிரோட
இருக்க
மாட்டோம்
.”
“
பொண்ணுக்கு
வயிற்று
வலி
…
அந்த
வேதனை
தாங்காம
அவளும்
,
அவளோட
அவங்க
அம்மாவும்
சேர்ந்து
செத்துட்டாங்கன்னு
சொல்லுங்க
.”
ஆத்திரமாகச்
சொன்ன
பத்மாவின்
குரல்
நடுங்க
,
அன்பரசு
மகளைப்
பார்க்க
,
அவள்
இழுத்து
மூடி
படுத்திருந்தாள்
.
அவருக்குத்
தெரியும்
,
அவளுக்கு
இந்நேரம்
காய்ச்சல்
வந்திருக்கும்
என்று
.
மகள்
மேல்
பாசம்
இல்லாதவர்
இல்லை
.
ஆனால்
எல்லாவற்றிற்கும்
முன்
அவரது
கௌரவம்
தான்
பெரியது
.
“
இல்லை
நான்
வேற
சொல்ல
வந்தேன்
.
உங்களைக்
கூடிட்டு
வந்தாரே
,
அவர்
நம்ம
கயலை
பொண்ணு
கேட்கிறார்
.”
என்றதும்
,
பத்மா
அவர்
காலில்
விழுந்தே
விட்டார்
.
“
நல்லபடியா
கொடுத்திடுங்க
.
என்
பொண்ணு
இந்த
உலகத்தில்
எந்த
மூலையிலாவது
உயிரோட
இருந்தா
,
எனக்கு
அதே
போதும்
.”
என்றார்
கதறியபடி
.
தன்
காதில்
விழுந்ததை
நம்ப
முடியாமல்
,
கயல்
போர்வையை
விலக்கி
பார்த்துக்
கொண்டு
இருந்தாள்
.
அன்பரசு
அறையில்
இருந்து
வெளியே
வந்தவர்
,
நந்தாவிடம்
திருமணதிற்குச்
சம்மதம்
சொல்ல
…
மொத்த
வீடும்
ஹா
எனப்
பார்த்துக்
கொண்டிருந்தது
.
“
என்னங்க
,
மாமாதான்
புரியாம
பேசுறாருன்னா
,
நீங்களும்
பார்த்திட்டு
பேசாம
இருக்கீங்க
.
என்
தம்பிக்கு
தானே
உங்க
தங்கையைக்
கொடுக்கிறதா
பேச்சு
.”
கீதா
சட்டென்று
மாற்றிப்
பேசினாள்
.
“
நீ
தானே
உன்
தம்பி
கயலை
கட்டிக்க
மாட்டான்னு
சொன்ன
.”
“
அது
எதோ
கோபத்தில்
சொன்னேன்
மாமா
.”
“
விருப்பம்
இல்லாத
உன்
தம்பிக்கு
முடிப்பதை
விட
,
அவளை
விருப்பப்பட்டுக்
கேட்கிற
இடத்தில்
செஞ்சிட்டு
போறேன்
.”
“
நாளைக்குக்
கல்யாணத்துக்கு
அப்புறம்
அது
இதுன்னா
,
நான்
சும்மா
இருக்க
மாட்டேன்
.”
என
அவர்
விக்னேஷை
சொல்வது
போல்
,
நந்தாவையும்
எச்சரித்தார்
.
அது
புரியாதவனா
அவன்
.
“
கல்யாணத்தை
எப்ப
வச்சுக்கலாம்
.”
நந்தா
கேட்க
,
அன்பரசு
யோசித்தார்
.
கல்யாணத்தைத்
தள்ளி
போடும்
உத்தேசம்
எல்லாம்
நந்தாவுக்கு
இல்லை
.
இந்தப்
பக்கம்
அவனிடம்
சரி
என்று
சொல்லிவிட்டு
,
அந்தப்
பக்கம்
கயல்விழியை
எதாவது
செய்து
விட்டால்
, “
உடனே
வச்சிட்டா
நல்லா
இருக்கும்
.”
என்றான்
.
அன்பரசுவுக்கும்
நிறையப்
பேரை
அழைக்கும்
எண்ணம்
இல்லை
.
கயல்விழி
விஷயம்
அரசல்
புரசலாக
இந்நேரம்
வெளிவந்திருக்கும்
.
தன்னிடம்
இருக்கும்
பயம்
காரணமாகவே
யாரும்
பேசவில்லை
என்று
தெரியும்
.
மேலும்
கல்யாணத்தைத்
தள்ளிப்
போட்டால்
…
யாராவது
கலைக்கப்
பார்ப்பார்கள்
.
ஏன்
கீதாவின்
குடும்பமே
அந்த
முயற்சிகளை
செய்யும்
.
எதற்கு
இதெல்லம்
என்றுதான்
அவரும்
கல்யாணத்தை
உடனே
முடித்து
விடுவது
என்று
நினைத்தார்
.
“
சரி
நம்ம
பூசாரியை
இப்பவே
வர
வச்சு
நாள்
குறிச்சிடலாம்
.
வாசு
நீ
போய்
நம்ம
வண்டியிலேயே
அவரைக்
கூடிட்டு
வா
.”
தந்தை
சொன்னதும்
,
வாசுவும்
உடனே
சென்றான்
.
முகத்தைக்
கழுவி
துடைத்துக்
கொண்டு
மலர்ந்த
முகமாக
வெளியே
வந்த
பத்மா
, “
நான்
உங்களுக்குச்
சாப்பாடு
ரெடி
பண்றேன்
.”
எனச்
சமையல்
அறைக்குச்
சென்றார்
.
அவர்
பின்னே
கீதாவும்
உள்ளே
வர
, “
இத்தனை
நான்
இல்லாம
இன்னைக்கு
என்ன
?
நானே
பார்த்துகிறேன்
.”
எனப்
பத்மா
நறுக்கென்று
சொல்லி
விட்டார்
.
கீதா
முகத்தை
நொடித்தபடி
அங்கிருந்து
சென்றாள்
.
“
நான்
போன்
பண்ணனும்
.
இங்க
போன்
எங்க
இருக்கு
.”
நந்தா
கேட்டதும்
,
வருங்கால
மருமகன்
அல்லவா
…
அன்பரசு
தனது
அறைக்கே
அழைத்துச்
சென்றார்
.
அவனை
அறைக்குள்
விட்டு
,
அவர்
வெளியே
வர
…. “
அப்பா
நீங்க
ரொம்ப
அவசரப்படற
மாதிரி
எனக்குத்
தோணுது
.
எதுக்குப்பா
இவனுக்குக்
கல்யாணம்
பண்ணி
கொடுக்குறீங்க
.”
கிருஷ்ணன்
மெதுவான
குரலில்
கேட்க
..
“
டேய்
அவன்
என்ன
நமக்குப்
பரம
விரோதியா
….
அவன்
வேலைக்காக
நம்மை
எதிர்த்தான்
.
நம்ம
மினிஸ்டர்ட்ட
சொல்லி
வேற
ஊருக்கு
ட்ரான்ஸ்பர்
பண்ண
வச்சிடுவோம்
.
நம்ம
மாப்பிள்ளை
பெரிய
போலீஸ்
ஆபிசர்ன்னு
சொல்லிக்கிறது
நமக்கும்
கவுரவம்
தானே
.”
தந்தை
சொல்வது
சரி
என்றுதான்
கிருஷ்ணனுக்குப்
பட்டது
.
ஆனால்
தன்
மனைவியைத்தான்
எப்படிச்
சமாளிப்பது
என்று
அவனுக்குத்
தெரியவில்லை
.
Advertising
Advertising