Toggle navigation
Home
Tamil Novels
What's new
Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள்,
[email protected]
என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
Advertising
புது வெள்ளை மழை 6 2
Post Views:
2,037
நந்தா
முதலில்
வருணை
அழைத்து
எல்லா
விவரமும்
சொல்லி
இருந்தான்
.
அடுத்து
தன்
அன்னையை
அழைத்தான்
.
“
ஹலோ
….”
“
அம்மா
எப்படி
இருக்கீங்க
?”
“
நந்தா
,
நீ
இந்த
நேரத்தில
போன்
பண்ண
மாட்டியே, என்ன
விஷயம்
?”
“
அம்மா
,
நான்
ஒரு
பெண்ணை
விரும்புறேன்
.
அவளை
உடனே
கல்யாணம்
பண்ணிக்க
வேண்டிய
சுழ்நிலையில
இருக்கேன்
.
வருணுக்கு
எல்லாம்
தெரியும்
.
அவன்
உங்ககிட்ட
விவரமா
சொல்லுவான்
.
நீங்க
எல்லாம்
உடனே
கிளம்பி
இங்க
வாங்க
.”
“
என்ன
நந்தா
சொல்ற
?
கல்யாணம்
உனக்கு
விளையாட்டா
போச்சா
?”
“
ப்ளீஸ்
மா
…
எனக்கு
வேற
வழி
இல்லை
.
புரிஞ்சிக்கோங்க
மா
.”
அந்தப்
பக்கம்
குழலி
பேசவே
இல்லை
.
அவருக்கு
யோசிக்க
வேண்டியது
இருந்தது
.
போன்னை
வைத்து
விட்டார்
.
அவர்
யோசிக்கட்டும்
என
நந்தாவும்
நினைத்தான்
.
கமிஷனருக்கு
அழைத்துத்
தான்
அன்பரசுவின்
மகளைத்
திருமணம்
செய்யப்போவதாகச்
சொன்னான்
.
அவருக்கு
அவனைப்
பற்றித்
தெரியும்
.
அதனால்
ஒன்றும்
சொல்லவில்லை
…
உன்
விருப்பம்
என்றுவிட்டார்
.
உதவிக்கு
அங்கு
அவனுக்கு
நன்கு
பழக்கமான
காவல்துறை
நண்பர்கள்
இருவரிடம்
அழைத்து
விவரம்
சொன்னான்
.
“
அய்யாவோட
பொண்ணா
…
பெரிய
இடம்தான்
.”
என்றவர்கள்
,
உடனே
கிளம்பி
வருவதாகச்
சொன்னார்கள்
.
நந்தா
மீண்டும்
ஹாலுக்கு
வந்து
அமர்ந்து
கொண்டான்
.
பத்மா
அவனைச்
சாப்பிட
அழைத்தார்
.
அன்பரசுவும்
அவனை
அழைத்துக்
கொண்டு
உணவு
மேஜைக்குச்
சென்றார்
.
சாப்பிட
அமர்ந்தவனுக்குப்
பத்மா
வந்து
பரிமாறினார்
.
அவர்
முகத்தில்
அத்தனை
மகிழ்ச்சி
.
சப்பாத்தியும்
குருமாவும்
செய்து
இருந்தார்
.
“
கயல்விழி
எங்க
காணோம்
.”
அவன்
அன்பரசு
முன்பே
தைரியமாகக்
கேட்க
….
“
உள்ள
இருக்கா
…”
பத்மா
சொல்ல
…
“
வர
சொல்லு
.”
என்றார்
அன்பரசு
.
அவரை
ஆச்சர்யமாகப்
பார்த்தபடி
அறைக்குள்
சென்ற
பத்மா
,
மகளை
அழைத்துக்
கொண்டு
வந்தார்
.
நடப்பதை
எல்லாம்
இன்னும்
நம்பியும்
,
நம்பாமலும்
இருந்தாள்
கயல்விழி
.
அவளுக்குக்
காய்ச்சல்
போய்
ஜன்னி
வந்துவிடும்
போல்
இருந்தது
.
அவளைப்
பரிமாறச்
சொல்லிவிட்டு
பத்மா
உள்ளே
சென்றார்
.
அவனது
முகம்
பார்க்காமல்
அவள்
பரிமாற
,
நந்தா
அவளைத்
தவிர
வேறு
யாரையும்
பார்க்கவில்லை
.
தன்
கணவர்
வந்து
பேசி
சென்ற
பிறகு
பத்மா
மகளுக்குப்
புடவை
கட்டிவிட்டு
,
தலைவாரி
பூ
வைத்து
இருந்தார்
.
சின்னப்
பெண்ணாக
இருந்தாலும்
,
புடவை
அவளுக்குப்
பாந்தமாக
இருந்தது
.
அவள்
நிறத்திற்கு
ஒப்பனை
எதுவுமே
தேவை
இல்லை
.
சின்னப்
பொட்டு
மட்டும்தான்
வைத்திருந்தாள்
.
அதற்கே
அவ்வளவு
அழகாகத்
தெரிந்தாள்
.
நந்தா
தன்
மகளை
விரும்பிதான்
பெண்
கேட்கிறான்
என
நேரில்
பார்த்தே
தெரிந்து
கொண்ட
அன்பரசு
,
அந்த
இடத்தை
விட்டு
எழுந்து
சென்றார்
.
அவனுக்குச்
சப்பாத்தி
எடுத்துக்
கொண்டு
வந்த
பத்மாவிடம்
, “
என்ன
அத்தை
உங்க
பொண்ணு
கேட்ட
காரக்குழம்பு
பண்ணலையா
?”
எனக்
கேட்டு
நந்தா
சிரிக்க
,
அவரும்
மகளை
பார்த்து
சிரித்து
விட்டார்
.
கயல்விழி
அப்போதுதான்
அவனை
நிமிர்ந்து
பார்த்தாள்
.
ஒற்றைப்
புருவத்தை
உயர்த்தி
,
அவன்
என்ன
என
விழியால்
கேட்க
,
சட்டென்று
தலையைக்
குனிந்து
கொண்டாள்
.
அவளுக்கு
மனதில்
ஆயிரம்
குழப்பம்
இருந்தது
.
அதை
யாரிடமும்
சொல்ல
முடியாமல்
இருந்தாள்
.
சாவில்
இருந்து
தப்பித்ததை
நினைத்து
சந்தோஷப்படுவதா
…
அல்லது
மீண்டும்
திருமணம்
நடக்கபோவதை
நினைத்து
வருந்துவதா
என
ஒன்றும்
தெரியவில்லை
.
காற்று
அடிக்கும்
திசையில்
செல்லும்
படகை
போல்
அவள்
நிலைமை
.
அவள்
கைகளில்
ஒன்றும்
இல்லை
.
நந்தா
சாப்பிட்டு
முடிக்கவும்
,
பூசாரி
வரவும்
சரியாக
இருந்தது
.
அவர்
அவர்களது
குலதெய்வ
கோவில்
பூசாரிதான்
.
அவருக்குத்தான்
நந்தாவை
நன்றாகத்
தெரியுமே
.
அதோடு
கயல்விழியின்
நிலையையும்
அறிந்தவர்
ஆயிற்றே
.
“
ரெண்டு
பேருக்கும்
பேர்
பொருத்தம்
ரொம்ப
நல்லா
இருக்கு
.
நாளைக்கே
நல்ல
முஹுர்த்தம்
இருக்கு
.
கல்யாணத்தை
நாளைக்கே
கூட
வச்சிடலாம்
.”
என்றார்
.
“
நான்
எங்க
அம்மாகிட்ட
பேசிட்டு
வந்திடுறேன்
.”
என
நந்தா
அறைக்குள்
போன்
பேச
சென்றான்
.
வருண்
கயல்விழியைப்
பற்றி
எல்லாவற்றையும்
குழலியிடம்
சொல்லி
இருந்தான்
.
நந்தா
ஒன்றை
நினைத்து
விட்டால்
,
அதிலேயே
நிற்கும்
ரகம்
.
நாளை
அவன்
பயப்படுவது
போல்
,
அந்தப்
பெண்ணுக்கு
எதுவும்
நடந்து
விட்டால்
,
தன்
மகனின்
எதிர்காலம்
என்ன
ஆகுமோ
என்ற
எண்ணத்தில்
,
குழலி
கல்யாணத்திற்கு
ஒத்துக்
கொண்டார்
.
நந்தா
அழைத்ததும்
வருண்தான்
போன்னை
எடுத்தான்
.
நந்தா
விவரம்
சொல்ல
, “
எல்லோரையும்
அங்க
கூடிட்டு
வர்றது
என்
பொறுப்பு
.
நீ
நாளைக்கே
கல்யாணத்தை
வைக்கச்
சொல்லு
.”
என்றான்
.
வருண்
சொன்னால்
முடித்து
விடுவான்
என
நந்தாவுக்குத்
தெரியும்
.
அறையை
விட்டு
வெளியே
வந்தவன்
, “
நாளைக்கே
கல்யாணத்தை
வச்சுக்கலாம்
.”
என்றான்
.
கல்யாணத்தைக்
குல
தெய்வ
கோவிலில்
வைப்பது
என்று
முடிவு
ஆனது
.
அப்போதே
கோவிலை
அலங்கரிக்க
ஒரு
கும்பல்
சென்றது
.
“
ஜவுளி
கடைகாரருக்கு
சொல்லி
விடு
.”
அன்பரசு
வாசுவிடம்
சொல்ல
, “
அப்படியே
அவரை
மறக்காம
ரெடிமேட்
ஜாக்கெட்
கொண்டு
வர
சொல்லுங்க
.”
எனப்
பத்மா
நியாபகப்படுத்தினார்
.
கீதாவுக்கு
நடப்பதை
எல்லாம்
பார்த்து
ஆத்திரமாக
வந்தது
.
தனது
தம்பியிடம்
அப்பாவுக்குத்
தகவல்
சொல்ல
சொல்லி
அனுப்பி
இருந்தாள்
.
சரி
என்று
சொல்லி
வந்திருந்தாலும்
,
விக்னேஷ்க்கு
அவன்
தந்தையிடம்
சென்று
சொல்லும்
எண்ணம்
எல்லாம்
இல்லை
.
அவனுக்குத்தான்
கயல்விழியைத்
திருமணம்
செய்ய
விருப்பம்
இல்லையே
.
இதே
கயல்விழியை
ஒரு
காலத்தில்
திருமணம்
செய்யும்
ஆசையுடன்
அவனும்
சுற்றி
சுற்றி
வந்தவன்தான்
.
அதெல்லாம்
ஒரு
கனாக்காலம்
போல்
ஆகிவிட்டது
.
பத்மா
மறுநாள்
கல்யாணத்திற்குத்
தேவையானவற்றை
எல்லாம்
பூசாரி
சொல்ல
சொல்ல
எடுத்து
வைத்துக்கொண்டு
இருந்தார்
.
தனது
காவல்த்துறை
நண்பர்கள்
வந்ததும்
,
நந்தா
அவர்களோடு
வெளியே
நின்று
பேசிக்
கொண்டு
இருந்தான்
.
அவனுக்கு
வீட்டுக்கு
போகும்
எண்ணம்
எல்லாம்
இல்லை
.
மறுநாள்
வரும்
அவன்
உறவினர்களுக்கு
நல்ல
ஒரு
விடுதியில்
அறை
ஏற்பாடு
செய்தாகிவிட்டது
.
அவனுக்கு
உடையும்
கயல்விழிக்கு
தாலியும்
வாங்க
வேண்டும்
.
காலை
பத்தரை
பன்னிரென்டு
தான்
முஹுர்த்தம்
.
அதனால்
பரவாயில்லை
காலையில்
வாங்கிக்கொள்ளலாம்
.
கயல்விழி
அவள்
அறையில்
படுத்து
இருந்தாள்
. “
நீ
மட்டும்
கல்யாணம்
செஞ்சு
சந்தோஷமா
இருக்கப்
போறியா
?”
எனப்
பாண்டியின்
நண்பர்கள்
கேட்டதே
,
காதில்
ஒலித்துக்
கொண்டு
இருந்தது
.
திருமணம்
செய்து
கொண்டால்
கூடத்
தன்னால்
சந்தோஷமாக
இருக்க
முடியுமா
எனத்
தெரியவில்லை
.
வீணாக
ஏன்
ஒருவரின்
வாழ்க்கையை
வேறு
வீணாக்க
வேண்டும்
என்ற
எண்ணம்
தோன்றியவுடன்
,
எழுந்து
தன்
அம்மாவை
தேடி
சென்றாள்
.
“
அம்மா
,
எனக்குக்
கல்யாணம்
வேண்டாம்
மா
…
எதோ
தப்பு
பண்ற
மாதிரியே
இருக்கு
.”
என
அவள்
சொல்ல
….
பத்மா
கதிகலங்கி
போய்
விட்டார்
.
“
என்ன
இப்படிப்
பேசுற
?
இனியாவது
நீ
நல்லா
இருப்பேன்னு
பார்த்தா
இப்படிச்
சொல்ற
?
நான்
தவிச்ச
தவிப்பு
உனக்குத்
தெரியும்
தான,
இப்ப
எல்லாம்
கூடி
வர்ற
நேரத்தில
இப்படிப்
பேசினா
எப்படிக்
கயல்
?”
“
நீ
மட்டும்
கல்யாணம்
வேண்டாம்னு
சொன்னா
நாம
ரெண்டு
பேரும்
சாகிறதை
தவிர
வேற
வழியில்லை
.”
“
பழசையெல்லாம்
மறந்துடு
டா
…
இங்க
வந்து
பாரு
.”
என
அறையின்
ஜன்னல்
வழியாக
நந்தாவை
காட்டியவர்
,
“
உனக்கத்தான்
அந்தத்
தம்பி
இந்த
நேரத்தில்
கூட
இங்க
நின்னுட்டு
இருக்கு
.
உன்னை
விட்டுட்டுப்
போக
மனசு
இல்லாமத்தான்
.”
“
நாம
நினைச்ச
வாழ்க்கை
அமையலைனா
…
கிடைச்ச
வாழ்க்கையாவது
நல்லா
அமைச்சுக்கனும்
.”
“
கண்டதையும்
யோசிக்காம
இந்த
அம்மாவுக்காக
நீ
கல்யாணம்
பண்ணிக்கணும்
.”
பத்மா
கெஞ்சலாகச்
சொல்ல
….
கயல்விழி
நந்தாவை
பார்த்தாள்
.
தெரு
விளக்கு
வெளிச்சத்தில்
அவன்
முகம்
நன்றாகத்
தெரிந்தது
.
அவன்
உடன்
இருந்தோரிடம்
எதோ
சிரித்துப்
பேசியபடி
இருந்தான்
.
அவளுக்கு
என்ன
தெரியும்
அவனைப்பற்றி
.
இதற்கு
முன்
இரண்டு
முறைதான்
பார்த்து
இருக்கிறாள்
.
அதுவும்
தனிப்பட்ட
முறையில்
அவனைப்
பற்றி
எதுவுமே
தெரியாது
.
யாரிவன்
திடிரென்று
வந்தான்
,
எல்லாவற்றையும்
மாற்றுகிறான்
என்றுதான்
தோன்றியது
.
Advertising
Advertising