Toggle navigation
Home
Tamil Novels
What's new
Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள்,
[email protected]
என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
Advertising
புது வெள்ளை மழை 9
Post Views:
2,118
அத்தியாயம்
– 9
கயல்விழி
உள்ளே
மண்டபத்தில்
உட்கார்ந்து
இருந்தாள்
.
அவளிடம்
சென்ற
பத்மா
, “
உன்
வீட்டுக்காரர்
நாம
கொடுத்த
நகைகளையும்
,
பணத்தையும்
வாங்கலை
.
நீ
போட்டிருக்கிறதே
போதும்னு
சொல்லிட்டார்
.”
“
தெரிஞ்சிருந்தா
இன்னும்
கொஞ்சம்
நகையைப்
போட்டிருப்பேன்
.
நீதான்
போடவே
விடலை
.”
என்றவர்
,
தன்
கழுத்தில்
கையில்
இருந்த
நகைகள்
சிலவற்றைக்
கழட்டி
மகளுக்குப்
போட
,
வேண்டாம்
எனக்
கயல்
மறுக்க
…
அதைப்
பார்த்துக்
கொண்டே
குழலியும்
,
தாரணியும்
வந்தனர்
.
அவர்களைப்
பார்த்ததும்
, “
இது
என்னோட
நகைகள்
,
எங்க
அம்மா
வீட்ல
போட்டது
.
நான்
என்
மகளுக்குத்
தரலாம்
இல்ல
…”
பத்மா
சொல்ல
….
குழலி
எதுவும்
சொல்லவில்லை
.
புன்னகையுடன்
பார்த்துக்
கொண்டு
இருந்தார்
.
“
நான்
கைகுள்ளயே
வச்சு
வளர்த்திட்டேன்
.
உலகமே
தெரியாது
,
நீங்கதான்
பார்த்துக்கணும்
.”
சொல்லிவிட்டுப்
பத்மா
கண்கலங்க
.
இப்போது
குழலி
பேசினார்
.
“
இனிமேல்
எனக்கு
மூன்னு
இல்லை
நாலு
பிள்ளைங்க
.
நான்
நல்லா
பார்த்துப்பேன்
.
அதோட
நந்தா
நல்லா
பார்த்துப்பான்
.
உங்க
பொண்ணே
வேணும்னு
கல்யாணம்
பண்றான்
.”
குழலி
பேசுவதைக்
கேட்க
,
பத்மாவுக்குச்
சந்தோஷமாக
இருந்தது
.
“
இப்படியெல்லாம்
திடிர்ன்னு
ஒருநாள்ள
மகனுக்குக்
கல்யாணம்
பண்ண
யாரும்
ஒத்துக்க
மாட்டாங்க
.
ரொம்ப
நல்ல
இடம்
அமைஞ்சிருக்கு
.
நீ
இன்னும்
சின்னப்
பிள்ளை
இல்ல
…
பொறுப்பா
இருக்கணும்
.”
பத்மா
தன்
மகளிடம்
சொல்ல
…
அவள்
சரியென்று
தலையசைத்தாள்
.
அங்கே
வந்த
நந்தா
,
கயல்விழியைப்
பார்க்க
,
அப்போது
அவளும்
அவனைப்
பார்த்தாள்
.
இதற்கு
முன்
இவள்
இவ்வளவு
நகையா
போட்டிருந்தாள்
என்று
யோசித்தவனுக்குக்
கிடைத்த
விடையோ
மகிழ்ச்சியாக
இல்லை
.
வேண்டாம்
என்று
சொல்லிய
பின்னர்
இவ்வளவு
நகை
போட்டிருந்தால்
,
பிறகு
தான்
சொன்னதற்கு
என்ன
மரியாதை
என்ற
கோபம்
எழுந்தது
.
அதை
அவனது
முகமே
காட்டிக்கொடுக்க
,
அது
அங்கிருந்த
எல்லோருக்குமே
புரிந்தது
.
“
அம்மா
கிளம்பலாம்
.”
என
யாரின்
முகத்தையும்
பார்க்காமல்
அவன்
சொல்லிவிட்டு
சொல்ல
…
கயல்விழி
சில
நகைகளைத்
தவிர
மற்றதை
கழட்டி
பத்மாவிடம்
கொடுத்து
விட்டாள்
.
நகையால்
பிரச்சனை
வேண்டாம்
என
நினைத்த
பத்மாவும்
,
அதற்கு
மேல்
வற்புறுத்தவில்லை
.
ஆனால்
அவர்
முகம்
வாடிவிட்டது
.
கோவிலில்
இருந்து
அப்படியே
நந்தாவின்
இருப்பிடத்துக்குக்
கிளம்பி
விட்டனர்
.
கயல்விழியோடு
அவளது
துணிகள்
இருந்த
பெட்டி
மட்டும்
வந்தது
.
எப்போதும்
பெண்கள்
புகுந்த
வீட்டிற்குக்
கிளம்பும்
போது
இருக்கும்
பாச
போராட்டம்
எல்லாம்
அங்கு
இல்லை
.
கிருஷ்ணனும்
கீதாவும்
முன்பே
அங்கு
இருந்து
சென்று
இருந்தனர்
.
வாசு
மிச்சம்
மீதி
இருந்த
சாமான்களை
ஆட்களை
வைத்து
வண்டியில்
ஏற்றிக்கொண்டு
இருந்தான்
.
அன்பரசு
முகத்தில்
இருந்து
ஒன்றும்
கண்டுகொள்ள
முடியவில்லை
.
பத்மாவுக்கு
மகளைப்
பிரியும்
வருத்தம்
இருந்தாலும்
,
எந்தச்
சூழ்நிலையில்
இந்தத்
திருமணம்
நடந்தது
என்றும்
நினைவு
இருந்தது
.
அதனால்
மகளைச்
சந்தோஷமாகவே
வழி
அனுப்பினார்
.
கயல்விழிக்கு
தன்
அம்மாவை
தவிர
,
மற்றவர்களைப்
பிரிந்து
செல்லும்
வருத்தமும்
இல்லை
.
அதே
நேரத்தில்
புகுந்த
வீட்டிற்குச்
செல்லும்
சந்தோஷமும்
இல்லை
.
பொதுவாக
ஒரு
தலையசைப்புடன்
அவள்
விடைபெற்றாள்
.
காரின்
பின்
இருக்கையில்
கயல்விழியின்
அருகே
நந்தாவும்
,
மறுபக்கம்
குழலியும்
அமர்ந்து
கொண்டனர்
.
வருண்
காரை
ஓட்ட
…
அவன்
அருகில்
தாரணி
இருந்தாள்
.
மற்றொரு
காரில்
நந்தாவுடன்
நேற்றில்
இருந்து
உடனிருந்த
நண்பர்கள்
இருவரின்
குடும்பமும்
வந்தது
.
எல்லோரும்
நேராக
நந்தா
தங்கி
இருக்கும்
வீட்டிற்குச்
சென்றனர்
.
வீடு
பெரிதாக
வசதியாக
இருந்தது
.
விருந்தினர்களுக்குக்
குளிர்பானம்
கொடுக்க
…
அவர்கள்
சிறிது
நேரத்திலேயே
கிளம்பி
விட்டனர்
.
தான்
உபயோகிக்கும்
அறைக்குள்
சென்ற
நந்தா
,
காக்கி
உடையில்
வெளியே
வந்தான்
.
“
இன்னிக்கும்
வேலைக்குப்
போகனுமா
நந்தா
?”
குழலி
கேட்க
,
“
ஒரு
முக்கியமான
வேலை
இருக்கு
மா
.
நீங்க
எல்லாம்
ரெஸ்ட்
எடுங்க
.
நான்
கொஞ்ச
நேரத்தில
வந்திடுறேன்
.”
எனச்
சொல்லிவிட்டு
விரைந்தவன்
,
வீடு
வர
இரவு
பத்து
மணி
ஆகிவிட்டது
.
அவனுக்குக்
கதவை
திறந்து
விட்ட
குழலி
மகனை
முறைத்தார்
.
“
சாரி
மா
…
லேட்
ஆகிடுச்சு
.”
எனச்
சங்கடமாகப்
புன்னகைத்தவன்
,
வீட்டிற்குள்
வந்து
பார்த்த
போது
,
வீடு
நிசப்தமாக
இருந்தது
.
“
எல்லோரும்
தூங்கிட்டாங்களா
?”
எனக்
கேட்டவன்
,
குழலி
அலுப்பாக
இருப்பதைப்
பார்த்து
,
கைகழுவிவிட்டு
சாப்பிட
அமர்ந்தான்
.
உணவை
அள்ளி
வாயில்
வைத்ததுமே
சொல்லிவிட்டான்
. “
இது
சமையல்காரம்மா
சமைச்சது
போல
இல்லையே
…
நீங்க
பண்ணீங்களா
மா
?”
“
ஆமாம்
.”
“
கயல்
சாப்பிட்டாளா
?”
“
பரவாயில்லை
அவளைக்
கூட
நியாபகம்
இருக்கு
.
நீ
பண்றது
எதுவும்
சரியில்லை
நந்தா
.
கல்யாணம்
பண்ணி
அந்தப்
பொண்ணைக்
கூடிட்டு
வந்து
விட்டுட்டு
உடனே
போயிட்ட
.
பாவம்
அந்தப்
பொண்ணு
.”
“
தப்புதான்
மா
…
என்
வேலை
அப்படி
என்ன
பண்றது
?”
“
சரி
சீக்கிரம்
சாப்பிடு
.”
நந்தா
விரைந்து
சாப்பிட்டு
முடித்ததும்
,
குழலி
படுக்கச்
சென்றுவிட
,
தன்
அறைக்கு
வந்த
நந்தா
,
அங்கே
கட்டிலில்
கயல்
இல்லாததைப்
பார்த்து
ஏமாற்றம்
அடைந்தான்
.
“
உனக்கு
ரொம்பதான்
டா
ஆசை
.”
எனத்
தன்னைப்
பற்றியே
கிண்டலாக
நினைத்தவன்
,
கட்டிலின்
மறுபுறம்
வர
…
அங்கே
தரையில்
பாய்
விரித்துக்
கயல்விழி
படுத்து
உறங்கிக்
கொண்டிருந்தாள்
.
அவளைத்
தனது
அறையில்
பார்த்ததும்
இன்பமாக
அதிர்ந்தான்
.
அவள்
அருகில்
தரையில்
மண்டியிட்டு
அமர்ந்தவன்
,
அவள்
முகத்தையே
ஆசை
தீர
பார்த்து
ரசித்தான்
.
தன்
மனைவியோடு
சல்லாபிக்கும்
காலம்
இப்போது
இல்லை
என
அவன்
அறிவான்
.
ஆனால்
அவளோடு
ஒரே
அறையில்
இருப்பதே
மனதிற்குச்
சந்தோஷமாக
இருந்தது
.
சிறிது
நேரம்
சென்று
குளித்து
உடைமாற்றி
கட்டிலில்
ஏறி
படுத்தவன்
,
மனைவியைப்
பார்த்தபடியே
உறங்கி
போனான்
.
நள்ளிரவில்
கயல்விழியின்
அலறல்
சத்தம்
கேட்டு
பதறி
அடித்து
எழுந்து
விளக்கை
போட்டான்
.
அவன்
பார்க்கும்போது
கயல்
சுவர்
ஓரமாக
அமர்ந்து
இருந்தாள்
.
பார்வையில்
அவ்வளவு
பயம்
.
“
கயல்
”
நந்தா
அழைக்க
….
அவனைப்
பார்க்க
அஞ்சியவள்
போல்
கண்களை
மூடிக்கொண்டாள்
.
சத்தம்
கேட்டு
குழலியும்
அங்கு
வந்துவிட்டார்
.
நந்தா
அறைக்கதவை
தாழிடவில்லை
.
அதனால்
அவர்
நேராக
அறைக்குள்
வர
…
அவரைப்
பார்த்ததும்
அவரிடம்
கோழிக்குஞ்சாகக்
கயல்விழி
ஒண்டிக்கொண்டாள்
.
அவளை
அனைத்து
ஆறுதல்
படுத்தியவர்
, “
என்ன
டா
?”
எனக்
கேட்க
,
அதைப்
பார்த்தபடி
வருண்
அறை
வாசலில்
நின்று
இருந்தான்
.
“
ஒரே
ரத்தம்
.”
என்று
சொல்லி
கயல்
அவள்
முகத்தையும்
,
உடலையும்
அழுத்தி
அழுத்தி
துடைக்க
….
அவள்
என்ன
கனவு
கண்டிருப்பாள்
என
நந்தாவுக்குப்
புரிந்தது
.
“
ரத்தமா
?
இல்லையே
….
நல்லா
கண்ணைத்
திறந்து
பாரு
.”
குழலி
சொல்ல
…
கயல்விழி
இன்னும்
கண்ணை
இறுக
மூடிக்கொண்டாள்
.
“
நந்தா
,
முகம்
பார்க்கும்
கண்ணாடி
எடுத்திட்டு
வா
.”
என்றவர்
,
அவன்
எடுத்து
வந்து
கொடுத்த
கண்ணாடியை
அவள்
முன்பு
காட்டினார்
.
“
நீயே
கண்ணாடியில
பாரு
.
எங்க
ரத்தம்
?”
அவர்
சொல்ல
…
மெல்ல
கண்
திறந்து
பார்த்தவள்
,
பிறகு
வேகமாகக்
கண்ணாடியை
வாங்கி
அதில்
தன்னை
ஆராய்ந்தாள்
.
ரத்தம்
இல்லை
என்பது
தெளிவான
பிறகே
அமைதியானாள்
.
ஆனால்
குழலியை
விடவில்லை
.
வருண்
அவள்
குடிக்கத்
தண்ணீர்
கொண்டு
வந்து
கொடுத்தான்
.
அவளைச்
சமாதானம்
செய்து
குழலி
படுக்க
வைக்க
…. “
நீங்களும்
இங்கயே
இருங்க
.”
என்றவள்
,
அவரின்
கையைப்
பிடித்துக்
கொண்டாள்
.
நந்தாவும்
வருணும்
ஹாலில்
வந்து
உட்கார்ந்தனர்
.
இத்தனை
சத்தத்துக்கும்
தாரணி
எழுந்து
வரவில்லை
.
சாதரணமாகவே
அவள்
உறங்கும்
போது
எழுப்புவது
கடினம்
.
அதுவும்
முன்தின
இரவு
தூக்கம்
இல்லாததால்
….
அலுப்பில்
நன்றாக
உறங்கி
இருந்தாள்
.
“
ரொம்பப்
பயந்து
போய்
இருப்பா
போலிருக்கே
.
இப்ப
என்ன
டா
பண்ண
போற
?”
வருண்
கேட்க
,
“
சரி
பண்ணிடலாம்
.
நீயும்
போய்ப்
படு
.”
என
அவனை
அறைக்குள்
அனுப்பியவன்
,
அங்கயே
உட்கார்ந்து
சிறிது
நேரம்
யோசித்துக்
கொண்டு
இருந்தான்
.
அவன்
திரும்ப
அறைக்குள்
வந்த
போது
,
கயல்விழி
உறங்கி
இருந்தாள்
.
அவள்
பக்கத்தில்
குழலி
அமர்ந்து
இருந்தார்
.
தானும்
சென்று
அவர்கள்
அருகில்
உட்கார்ந்தவன்
,
கயல்விழியின்
நெற்றியை
மிருதுவாக
வருட
….
அவளின்
உடல்
சுடுவதை
உணர்ந்தான்
.
“
லேசா
ஜுரம்
இருக்குமா
…”
என்றவன்
எழுந்து
,
அவளை
ஒரு
குழந்தையைப்
போல்
தூக்கி
சென்று
கட்டிலில்
படுக்க
வைத்தான்
.
“
நீங்களும்
இவ
பக்கத்திலேயே
படுத்துக்கோங்க
மா
.”
என்றவன்
,
மற்றொரு
அறையில்
சென்று
படுத்துக்
கொண்டான்
.
காலையில்
எழுந்ததுமே
நந்தா
சென்று
தன்
மனைவியைப்
பார்க்க
…
அவள்
நல்ல
உறக்கத்தில்
இருந்தாள்
.
குழலியுமே
உறங்கிக்
கொண்டு
இருந்தார்
.
அவர்கள்
உறக்கத்தைக்
கெடுக்காமல்
வெளியே
வந்துவிட்டான்
.
நந்தா
அவனே
ஒரு
காபி
போட்டு
குடித்துவிட்டு
,
கயல்விழியின்
வீட்டிற்குத்
தொலைபேசியில்
அழைத்தான்
.
அன்பரசுதான்
எடுத்தார்
.
அவரிடம்
தான்
பத்மாவிடம்
பேச
வேண்டும்
என்றதும்
,
அவர்
போன்னை
தன்
மனைவியிடம்
கொடுத்துவிட்டு
விலகி
நின்று
பேசுவதைக்
கவனித்தார்
.
“
நல்லா
இருக்கீங்களா
அத்தை
.”
“
நல்லா
இருக்கேன்
மாப்பிள்ளை
.
அங்க
எல்லோரும்
சவுக்கியமா
?”
“
கயலுக்குத்தான்
லேசா
காய்ச்சல்
அடிக்குது
.
நீங்க
எந்த
டாக்டர்கிட்ட
பார்ப்பீங்க
?”
என்றதும்
,
பத்மா
விவரம்
சொல்ல
,
“
சரி
நான்
பார்த்துகிறேன்
.”
என
நந்தா
போன்னை
வைக்கச்
செல்ல
,
“
நான்
வந்து
கயலை
பார்க்கட்டுமா
?”
எனப்
பத்மா
அவனிடம்
அனுமதி
கேட்க
,
“
உங்க
பெண்ணை
நீங்க
வந்து
பார்க்கிறதுக்கு
என்னை
ஏன்
கேட்குறீங்க
?
நீங்க
வாங்க
.”
என
நந்தா
போன்னை
வைத்து
விட்டான்
.
அவன்
குளித்துக்
கிளம்பி
வந்தபோதுதான்
வீட்டினர்
ஒவ்வொருவராக
எழுந்து
வந்தனர்
.
கவலையாகப்
பார்த்த
மகனிடம்
, “
இப்ப
காய்ச்சல்
இல்லை
.
எழுந்து
குளிக்கப்
போயிருக்கா
.”
எனக்
குழலி
தகவல்
சொல்ல
..
“
சரிமா
பார்த்துக்கோங்க
,
சீக்கிரம்
வந்திடுறேன்
.”
எனச்
சொல்லிவிட்டு
வெளியே
சென்றான்
.
அவன்
பார்க்க
போனது
கயல்விழிக்கு
மருத்துவம்
செய்த
வைத்தியரை
.
பார்த்ததுமே
அவர்
அனுபவம்
வாய்ந்தவர்
எனத்
தெரிந்தது
.
அவன்
தன்னை
அறிமுகம்
செய்துகொள்ள
. “
தெரியுமே
,
நம்ம
கயல்
பெண்ணைக்
கல்யாணம்
பண்ணி
இருக்கீங்கள்ள
…
கேள்விப்பட்டேன்
.”
என்றவர்
,
அவனைப்
பார்த்து
புன்னகைக்க
.
“
ஆமாம்
இப்ப
கயல்
விஷயமாத்தான்
உங்களைப்
பார்க்க
வந்தேன்
.
எனக்கு
அவளைப்பத்தி
எல்லாமே
தெரியும்
.
அவளுக்கு
எந்த
மாதிரி
ட்ரீட்மெண்ட்
கொடுக்கணும்
.
அதைப்
பத்தி
உங்ககிட்ட
பேசிட்டுப்
போகத்தான்
வந்தேன்
.”
என்றான்
.
“
இங்க
பாருங்க
சார்
.
அந்தப்
பொண்ணுக்குப்
பாதிப்பு
மனசுக்குள்ள
.
ஆனா
வைத்தியம்
பண்றது
என்னமோ
உடம்புக்கு
.
அப்புறம்
எப்படிச்
சரி
ஆகும்
சொல்லுங்க
?”
“
ஏற்கனவே
கயல்
ரொம்ப
இரக்க
சுபாவம்
.
அந்தப்
பையன்
சாவேன்னு
மிரட்டினதும்
,
கல்யாணத்துக்கு
ஒத்துக்கிட்டா
.
அவள்
எங்க
மனசு
மாறிட
போறாளோன்னு
,
அவன்
அவசரமா
கூடிட்டுப்
போய்த்
தாலியை
கட்ட
….
இவங்க
வீட்ல
விஷயம்
தெரிஞ்சு
,
அவ
கண்ணு
முன்னாடியே
அந்தப்
பையனை
வெட்டிட்டாங்க
.”
“
சினிமாவுல
வெட்டு
குத்து
வந்தாலே
,
கண்ணை
மூடிக்கிற
பொண்ணு
அது
.
நேர்ல
பார்த்தா
கேட்கவும்
வேணுமா
?
அதோட
மனசாட்சியும்
உள்ள
பொண்ணு
,
அதுதான்
குற்ற
உணர்வும்
சேர்ந்து
இப்படி
ஆகிடுச்சு
.”
“
நானும்
நிறையத்
தடவை
சொல்லிட்டேன்
.
நீங்க
ஒரு
மனநல
மருத்துவர்கிட்ட
காட்டணும்ன்னு
.
ஆனா
விஷயம்
வெளிய
வந்திடுமோன்னு
,
அவங்க
வீட்டு
ஆளுங்க
நான்
சொல்றதையே
காதுல
வாங்க
மாட்டேங்கிறாங்க
.”
“
நானும்
போய்க்
காய்ச்சலுக்கு
ஒரு
ஊசியைப்
போட்டுட்டு
வந்திடுவேன்
.
ஆனா
இப்படியே
விடுறது
நல்லது
இல்லை
.
சீக்கிரம்
டாக்டரை
பார்த்தா
நல்லது
.”
“
சரி
டாக்டர்
,
ரொம்பத்
தேங்க்ஸ்
.
நான்
கிளம்புறேன்
.”
“
எனக்குத்
தெரிஞ்ச
டாக்டர்
யாரையாவது
சிபாரிசு
பண்ணவா
?”
“
வேண்டாம்
,
நான்
அவளை
மெட்ராஸ்க்கு
கூடிட்டுப்
போய்க்
காட்டிகிறேன்
.”
“
அது
இன்னமும்
நல்லது
.
கயல்
இப்ப
இருக்கிற
நிலைக்கு
,
இடம்
மாற்றம்
ரொம்பவே
தேவை
.
அதோட
பழி
வாங்குறேன்னு
எவனாவது
கிளம்புவான்
.
இன்னும்
நிறைய
ஜாதி
வெறி
பிடிச்சவங்க
இருக்காங்க
.
எதுக்கும்
பத்திரமா
பார்த்துக்கோங்க
.”
“
தேங்க்ஸ்
டாக்டர்
வரேன்
.”
என்றவன்
,
ஒரு
முடிவுடன்
தன்
அலுவலகத்திற்குச்
சென்றான்
.
Advertising
Advertising