“ஹை அங்கிள் வந்தாச்சு” என்ற அபியின் குரல் வெளியே கேட்டு, அவரும் ராணியும் வெளியே வந்தனர்.
பிரனிதாவும் வந்தாள். “ஹாய் டாடி!” என்று அழைத்த படியே!
“ஹாய் My little princess! ஹாய் அம்முகுட்டி” என்றவாறே உள்ளே வந்த அவரை பக்கத்துக்கு ஒருவராக அவரது கையைப் பிடித்துக் கொண்டார்கள் அபியும், ப்ரனியும்.
அவர்களை தோளோடு லேசாக அணைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தார் விஸ்வநாதன்!
அதை கொஞ்சம் ஆச்சர்யமாக பார்த்தபடியே, உள்ளே வந்தார்கள் பிரபுவும் ஸ்ரீ யும்.
அவர்களும் அப்போது தான் பைக்கில் வந்து இறங்கியிருந்தார்கள்.
விஸ்வநாதனின் தாயார் பெயர் அமிர்ததம்மாள். தன் தாயாரின் பெயரைக் கொண்டுருந்த அபியை – அபி அமிர்தாவை அவர் மட்டும் எப்போதும் அம்முகுட்டி என்றே அழைப்பார்!
தன் தந்தை ப்ரநிதாவை தவிர எந்த பெண் குழந்தையையும் இப்படி கொஞ்சி பார்த்திடாத பிரபுவுக்கு கொஞ்சம் ஆச்சர்யம் தான்.
விஸ்வநாதனுக்கு பல பிசினஸ்கள். BHEL சுற்றியுள்ள, பல தனியார் industry களுக்கு industrial finance செய்கிறார். ஒரு leading FMCG brand ன் super stockist ஆக இருக்கிறார்.
சில govt contract களும் எடுத்து செய்வதுண்டு.
உறையூர் வெக்காளியம்மன் கோவில் ரூட்டில் ஒன்றும், ஸ்ரீரங்கம் ரூட்டில் ஒன்றுமாக, இரண்டு டவுன் பஸ்கள் காஞ்சனா என்ற பெயரில், மற்றும் திருச்செங்கோட்டில் அவர் நண்பர் பொறுப்பில் 2 ஆல் இந்தியா பெர்மிட் உள்ள லாரிகள் ஓடிக்கொண்டிருக்கின்றன.
தில்லை நகரில் ஒரு commercial பில்டிங்கும் இருக்கிறது. ஒரு ப்ளோரில் பேங்க் மற்றும் ATM, சில கடைகள். மற்றும் ஒரு ப்ளோரில் ஒரு travels நிறுவனம் இயங்கிக் கொண்டிருக்கின்றன. அவற்றின் மூலம் வாடகை வருமானம் வருகிறது.
அந்த travelsகூட போட்டு இருக்கும் rental contract விரைவில் முடிய போகிறது. அவர்களை காலி செய்து விட்டு அந்த இடத்தில் தன் கம்பனியின் branch ஓபன் செய்ய இருக்கிறான் விஷ்ணு.
திருச்சி மாதிரி tier 2 சிட்டிகளில் உள்ள இளைஞர்களுக்கு IT வேலை வாய்ப்பைகளை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் விஷ்ணுவுக்கு!
அதற்கு எல்லா ஏற்பாடுகளையும் செய்துக் கொண்டுதான் இருக்கான், திருச்சியை சேர்ந்த ஒரு Sr resource ஒருவரையும் தயார் படுத்தி வைத்து இருக்கான்.
“ஹாய் டாடி, ஹாய் அங்கிள்” என்ற படியே உள்ளே நுழைந்தார்கள் பிரபுவும் ஸ்ரீயும்.
“ஹாய் பசங்களா வாங்க வாங்க..” என்றார் விஸ்வநாதன்
பரஸ்பரம் நல விசாரிப்புகளுக்கு பிறகு,
பிரபு கேட்டான். “என்னப்பா போன காரியம் success தானே. contract கிடைத்து விட்டதா?” என்றுக் கேட்டான்.
“ம்ம் success தான். கிடைத்து விட்டது” என்றார் மிகவும் சந்தோசமாக.
“அங்கிள் எங்கே எனக்கு சாக்லேட்?” அபி கேட்க,
“உனக்கு இல்லாமலா?” என்று சொல்லியபடியே , ஆறுமுகத்தை அழைத்து வண்டியில் இருக்கும் அந்த insulated bag ஐ எடுத்து வர சொல்லி , அபியின் கையில் கொடுத்தார்.
பிரித்த அபியின் கண்கள் விரிந்தன!
ஏகப்பட்ட imported சாக்லேட் பார்கள்!
மிகுந்த சந்தோசத்துடன் “தேங்க்ஸ் அங்கிள்” என்றாள்.
“மவளே லஞ்சுக்கு முன் அதைத் தொட்ட.. கெட்ட..” என்ற கண்டிப்பான குரலுடன் அருகில் வந்த ப்ரனிதா bag ஐ அபியிடம் இருந்து வாங்கி fridgeஇல் வைத்து விட்டாள்.
தன் வீட்டு கடைகுட்டி ப்ரனிதா, ஏதோ பெரிய மனுசி போல அதட்டி உருட்டுவது கண்டு விஸ்வநாதனுக்கு கொஞ்சம் சிரிப்பு வந்தது.
“அது சும்மா, அக்கா அப்புறம் எனக்கு தான் தருவாள். கொஞ்சமாக சாப்பிட்டால் தான் நான் கொஞ்சம் பூசுன மாதிரி இருப்பேன் , இல்லை என்றால் குண்டாகி விடுவேன்” என்று அவளுக்கு பயம்.
ப்ரநிதாவை யாரும் தப்பாக நினைக்கக் கூடாதாம். சப்பைக்கட்டு கட்ட முயன்ற அபியை பார்த்து எல்லோருக்கும் சிரிப்பு வந்தது!.
“எல்லோரும் சீக்கிரம் கைகால்களை கழுவிக்கொண்டு சாப்பிட வாங்க, மணி இப்பவே 2 ஆகி விட்டது” அழைத்தார் காஞ்சனா!
எல்லோரும் dining table முன்னே அமர, ராணியும் காஞ்சனாவும் பரிமாறினார்கள்.
“எல்லா டிஷ்ஷும் சூப்பரா இருக்கு ஆன்டி” என்றான் ஸ்ரீ
“ஆமாம்மா” என்றான் பிரபுவும்.
“தேங்க்ஸ். அப்புறம்.. ஒண்ணு தெரியுமா இன்னைக்கு அபி தான் காய்கறியெல்லாம் கட் பண்ணிக் கொடுத்தா , வடைக்கு அரைத்துக் கொடுத்தா” என்றார் காஞ்சனா.
“அதுதான் விசயமா? அதான் எல்லாம் சூப்பரா இருக்கு” என்றார் விஸ்வநாதன்.
“அப்பா.. இருந்தாலும் இது கொஞ்சம் ஓவர்ப்பா” என்றான் பிரபு.
என்னை மட்டம் தட்டலைன்னா ஆச்சர்யம் என்று நினைத்துக்கொண்டாள் அபி.
“என்ன அபி எப்ப பார்த்தாலும் பேசிகிட்டே இருப்பீங்கன்னு கேள்விப் பட்டேன், ஆனா ரொம்ப அமைதியாக இருக்கீங்க? என்றான் ஸ்ரீ
“ஆஹா ஆப்பை தேடிப் போய் உட்கார்கிறான்டா” என்று மைன்ட் வாய்ஸ் என்று நினைத்து சத்தமாக சொல்லிவிட்டான் பிரபு!
அவனை முறைத்த அபி, ப்ரநிக்கா தான் சொல்லி இருக்கா
“வாய்க்கு கொஞ்சமாவது ரெஸ்ட் குடு அபி. ஒன்னு தின்னுகிட்டே இருக்க.. இல்லே பேசிகிட்டே இருக்கன்னு. அதனால தான் நான் இப்பெல்லாம் ரொம்ப பேசுவதில்ல!”
என்று சொல்ல கேட்ட அனைவருக்கும் சிரிப்பு வந்தது.
“ஆனால் அப்படி ஒன்றும் சாப்பிடுகிற மாதிரி தெரியலையே. இன்னும் சாம்பாரிலேயே இருக்கியே” என்றார் விஸ்வநாதன்.
“அது…” கொஞ்சம் நெளிந்தாள் அபி. ப்ரநிதாவை பார்த்துக்கொண்டு.
“ரசம் போட்டுக் கொள்கிறாயா?” கேட்டார் ராணி.
“அவளுக்கு ரசம் பிடிக்காது” என்ற ப்ரனிதா, தன் தட்டில் பிசைந்த தயிர் சாதத்தை எடுத்து அபியின் தட்டில் வைத்தாள். “இதுக்கு தான் மேடம் waiting” என்றாள் சிரித்துக் கொண்டே.
“ஊரில் பாட்டி தான் பிசைந்து தருவார். இப்ப அக்கா. எனக்கு அது மட்டும் கொஞ்சம் சோம்பேறித்தனமாக இருக்கும். அதான்.”
“ஆமா. தயிர் சாதம் வரை சாப்பிட சோம்பல்பட்டுகொண்டு, பாதியிலேயே எழுந்து போய் விட்டு பின் பசிக்குது. பசிக்குது என்று snacks மொத்தத்தையும் காலி பண்ணிடுவாள்” என்றாள் ப்ரனிதா.
என்ன ஒரு bonding இவர்களுக்குள் என்று பிரபுவால் கூட ஆச்சர்யப் படாமல் இருக்க முடியவில்லை.
எல்லோரும் சாப்பிட்டு முடித்தவுடன், விஸ்வநாதன் ரெஸ்ட் எடுக்க அறைக்குள் செல்ல, ப்ரனிதா, பிரபு, ஸ்ரீ அனைவரும் அரட்டை அடிக்க மாடிக்கு சென்று விட்டனர்.
அபி மட்டும், “நீங்க ரெண்டு பேரும் உட்காருங்க ஆன்டி நான் உங்களுக்கு serve பண்றேன்” என்றாள்.
“இல்லடா, நாங்களே எடுத்துப் போட்டுக்கிறோம் நீ போ”. என்றார் காஞ்சனா.
அபி மாடிக்கு சென்ற போது மூவரும் ஜாலி ஆக பேசிக் கொண்டிருந்தார்கள் அபியால் மட்டும் mingle ஆக முடியவில்லை. பிரபு அவளை குரங்கு என்று சொன்னதால் , அவன் மேல் இன்னும் கோபம் இருந்தது.
தனியே உட்கார்ந்து போன் நோண்டி கொண்டிருந்தாள்.
அவர்கள் அரட்டை ஒருவாறு முடிந்து ஸ்ரீ விடை பெற்று சென்றான், அப்புறம் போன் செய்கிறேன் என்று ப்ரநிதாவிடம் சைகை காட்டியவாறு.
ப்ரனிதா ரூமுக்கு வந்தவள் அபியிடம்
‘பிரபு அண்ணாகிட்ட சொல்லிட்டேன், அப்புறமா வந்து செயின் ஐ வாங்கிக்க சொன்னான்.”
அப்புறம்மாவா?…
அது தான் அபி அகராதியிலேயே கிடையாதே!
“நான் இப்பவே போய் கேட்கிறேன்” என்று கிளம்பி விட்டாள்!
அவன் ரூமில் ஜன்னலோரம் திருப்பி போடப்பட்டிருந்த அந்த சோபாவில் உட்கார்ந்து தனது லேப்டாப்பில் வேலை செய்துக் கொண்டிருந்தான் பிரபு. அது அவனுக்குப் பிடித்த இடம்.
அருகே ஒரு ஸ்டீல் stand போடப்பட்டு ஒரு fish tankகில் flower horn fish இருந்தது!. அது ஒரு வாஸ்து மீன்.
அதன் தலைப் பகுதி, ஜல்லிக்கட்டு காளையின் திமில் போல வளரும். அது வளர வளர தான் அதிர்ஷ்டம் மற்றும் positivity பெருகும் என்பது “Feng Shui” (சீன வாஸ்து) நம்பிக்கை. அதன் Head growthகென்று ஸ்பெஷல் உணவு கூட உண்டு!
இந்த மீன் அவனுக்குப் பிடித்த ஒன்று!
மேலும் சில grow bag களில் மணி பிளான்ட் மற்றும் சில வாஸ்து செடிகள். அவை ராணி மற்றும் ஆறுமுகத்தின் பராமரிப்பில் செழிமையாக இருந்தன.
அவன் எப்போதும் இங்கு தான் உட்கார்ந்து வேலை செய்வான். அவன் இங்கே இருப்பது சட்டென்று ரூமுக்குள் வருபவர்களுக்கு தெரியாது. சோபா பின்புறம் திருப்பிப் போடபட்டுருப்பதால்.
அபி கதவைத் தட்டி உள்ளே நுழைந்து,
“எங்கே யாரையும் காணோம்” என்று சத்தமாக சொல்லிக்கொண்டு இருக்க,
“கம்இன்” என்றவாறு, எழுந்து வந்தான் பிரபு.
“வந்து.. என் செயினை வாங்கிப் போக வந்தேன்” என்றாள் அபி தயங்கியபடி.
“அதுக்கு நீ முதலில் சாரி சொல்லணும். அங்கிள் என்று சொன்னதற்கு”
“நீங்க கூட தான் என்னை குரங்கு என்று சொன்னீங்க, அதுக்கும் இதுக்கும் சரியாப் போச்சு”
“அதெப்படி சரியாகும்?”
“நான் குரங்கு என்று சொன்னது ஒரு flow வில் தெரியாமல் சொல்லிவிட்ட சாதாரண திட்டு!
ஆனா, என்னைப் போய் அங்கிள் சொன்னது எனக்கு எவ்வளவு ரொம்ப hurting ஆன விஷயம் தெரியுமா? எனக்கு இன்னும் கல்யாணம் கூட ஆகல.
ஒரு 9௦’s கிட்ஸின் pain ஒரு 9௦’s kidduக்கு தான் தெரியும் உன்னை மாதிரி 2K kid க்கு தெரியாது! –
ஒகே நான் உன்னை குரங்குன்னு திட்டியதற்கு சாரி போதுமா என்றான்.
அங்கிள் என்று சொன்னதுக்கே இவ்வளவு பீலிங்க்ஸ் என்றால், அவள் அவனை boomer என்று திட்டியதை கேட்டுருந்தால்…? அபிக்கு ஒரு மாதிரியாகிவிட்டது!
“நானும் சாரி கேட்டுக்கொள்கிறேன்” என்றாள் அபி பெரிய மனதாக!
“அதை தான் ஒத்துக் கொள்ள முடியாது. ஏன் என்னைப் பார்த்து அப்படி சொன்ன?”
“நான் வேணுமின்னு எல்லாம் அப்படி சொல்லல!”
“என் பாட்டி தான் நான் சின்ன பிள்ளையாக இருக்கும் போது எல்லோரையும் மரியாதையாக அழைக்க வேண்டும் என்று “ பால்க்கார மாமா, தண்ணி கேன் மாமா, EB மாமா என்று பழக்கி விட,
என் ஸ்கூலில் கூட படிக்கின்ற அவர்களது பையன்களை வைத்து உன் மாமா பையன் வர்றான் பாரு என்று எல்லோரும் கிண்டல் அடிக்க ஆரம்பித்து விட்டார்கள்.
அதனால் தான், நான் அங்கிள் என்று அழைத்துப் பழகிவிட்டேன்.”
“உங்களுக்கு தெரியுமா, நான் சின்ன பிள்ளையில் சாமிகிட்ட இவர்கள் அனைவருக்குமாக pray பண்ணுவேன்!”
“சாமி.. cylinder மாமாவை காப்பாத்து, பால்க்கார மாமாவை காப்பாத்து தண்ணி கேன் மாமாவை காப்பாத்து, EB மாமாவை காப்பாத்து என்று!
இதை “என் பாட்டி எல்லோரிடமும் பெருமையாக சொல்லுவார்”
இவள் என்ன எதற்கெடுத்தாலும் ஒரு flash back சொல்கிறாள்! என்று ஆச்சரியப்பட்டபிரபு,
அப்படின்னா என் கிட்ட “சாரி மாமா” என்று சொல்லு மன்னித்து விடுகிறேன் என்றான்
அபி அதிர்ந்து “என்ன மாமாவா”
“ஆமா, நீ இங்கிலீஷ் சொன்ன , நான் தமிழ்ல்ல சொல்ல சொல்றேன் அவ்வளவுதான்”
“அதெல்லாம் முடியாது”
“அப்படின்னா நீ இந்த செயின மறந்து விடு”
“ப்ளீஸ் கொடுங்க”
“மாமான்னு சொல்லு செயின தரேன்”
“நான் எப்படி உங்கள போய்..”
“மாமான்னு சொல்லு செயின தரேன்” பிரபு அவளை விடுவதாய் இல்லை!
“ஏன் இப்படி..”
“அப்ப அண்ணான்னு சொல்லு.. “
(தலைக்கு “தில்” ல பார்த்தியா! என்று நீங்கள் சொல்வது கேட்கிறது! அவன் மனசாட்சியும் கூட “டேய் இவ்வளவு ரிஸ்க் கூடாதுடா” என்றது!)
“ம்ம். மாட்டேன்.. உங்கள பார்த்த எனக்கு பிரதர் feel எல்லாம் வரல”
“அப்ப lover feel வருதா?”
“ம்ம் இல்ல வில்லன் feel வருது!”.
“ஓ.. எப்படி… உங்க ஊரில் எல்லாம் கீழே விழப் போன பெண்ணை, விழாமல் வில்லன் தான் காப்பாற்றுவானா?
அந்த வில்லன தான் அந்த பெண் hug பண்ணுவாளா?
“என்ன நான் கட்டிபிடித்தேனா? பொய்! பொய்!” கத்திய அவளுக்கு கொஞ்சம் உதறியது.
ஏனென்றால், அவன் கையில் இருந்தபடியே அவன முதல் முதலாக கண்ட போதே, அப்படியே கட்டிக்கொள்ள தோன்றியது என்னமோ உண்மைதான்.
இன்னும் அவளுக்கே கூட கொஞ்சமும் விளங்காத உண்மை!
அவன முன்ன பின்ன பார்த்ததே இல்ல, யாருன்னு கூட தெரியாது. விசித்திரமாக ஏன் அப்படி தோன்றியது?
அதனால் தான் மனசு சரியில்ல என்று ரூமில் உட்கார்ந்துகொண்டு இருந்தாள் காலையில்!
இப்ப என்னவென்றால், இவன் இப்படி சொல்கிறான். நம்ப முடியவில்லை. அதே சமயம் தன்னிடமும் அவளுக்கே உறுதியில்லை!
ஒரு வேலை hug பண்ண தான் செய்தேனா எனவே குழம்பி நின்றாள்!
அவள் குழம்பி நிற்பதை நமுட்டு சிரிப்புடன் பார்த்து ரசித்துக் கொண்டிருந்த பிரபு,
“சீக்கிரம் சொல்லு. எனக்கு மீட்டிங் இருக்கு” என்றான்.
“ரொம்ப லேட் பண்ணினால், இன்னும் ரூல்ஸ் ஸ்ட்ரிக்ட் ஆகும். பார்த்துக்கோ”
நான் ப்ரநிக்கா மூலம் வாங்கிக்கிறேன் என்றவாறே அவள் ரூமுக்கு சென்றாள்.
“போய் சொல்லு, எல்லாத்தையும் சொல்ல முடியுமா உன்னால்? பின்னால் அவன் குரல்!
ரூமுக்குள் சென்றவுடன் ப்ரனிதா கேட்டாள்
“என்னடி செயின வாங்கிட்டியா?
“இல்லக்கா, அவர் ஏதோ மீடிங்கில் இருக்கார். நான் வந்துட்டேன்”
முதல் பொய் ப்ரநியிடம்!
“காதல் “புகுந்து விட்டதோ? அவளுள்? அதனால் தான் “கள்ளமும்” (பொய்யும்) புகுந்து விட்டது போல!!