மாணிக்க விநாயகரும், உச்சி பிள்ளையாரும் அருள் புரியும் மலைக்கோட்டை மாநகர் திருச்சி!
மேல்தட்டு மக்கள் வசிக்கும் தில்லை நகரில் அமைந்திருந்த, விசாலமான கார்டனுடன் கூடிய வீடு!
“காக்க காக்க கனகவேல் காக்க “ என்று முணுமுணுத்துக் கொண்டே, பால்கனியின் மேல் சாய்த்து வைக்கப் பட்டிருந்த அந்த அலுமினிய ஏணியில் ஏறிக் கொண்டு இருந்தாள் அபி! அபி அமிர்தா!
ஏணியில் எல்லாம் ஏறி பழக்கமில்லாத காரணத்தால், கால்கள் தடதட என்று நடுங்கின! பில்டிங் ஸ்ட்ராங் , பேஸ்மென்ட் வீக் என்பது போல!
ஒழுங்காக, ப்ரனிதா சொன்னத கேட்டு நாமும் கொஞ்ச நேரம் வெயிட் பண்ணி இருக்கலாம் போல!
வெட்டி ஜம்பம்! இப்போது பயந்து என்ன ஆவது! என்று எண்ணிக் கொண்டே, மேலும் இரு படிகள் ஏறி, கையில் இருந்த ஷட்டில்காக் ராக்கெட்டை ஐ வைத்து, பால்கனி முல்லைகொடியில் வந்து விழுந்து இருந்த இறகுப் பந்துகளை கீழே தள்ளி விட்டாள்!
மொத்தம் மூன்று பந்துகள் இதில் வந்து விழுந்து விட்டன.
ரெண்டினை தள்ளி விட்டு விட்டாள்! இதோ அந்த மூன்றாவது பந்து.
அதையும் வெற்றிகரமாக எடுத்து விட்டால், மீண்டும் கொஞ்சநேரம் விளையாடலாம்!
ப்ரனிதா சொன்னாள், “டிரைவர் ஆறுமுகம் அண்ணன் வரட்டும்” என்று!. ஆனால், இவள் தான் பொறுமை இல்லாது, தானே ஏணியை எடுத்துகொண்டு ஏறிவிட்டாள்!
அந்த பெரிய வீட்டின் தோட்டத்தில், இவர்கள் இருவரும் ஷட்டில்காக் விளையாடினார்கள்!
விளையாட்டின் போது, ஒவ்வொரு பந்தாக, இந்த முல்லைக் கொடியில் வந்து விழுந்து விட்டன!
இதோ இன்னும் கொஞ்சம் எக்கி, நின்று தள்ளி விட்டால் அந்த மூன்றாவது பந்தும் விழுந்து விடும் என்று, இன்னும் முயன்று கொண்டு இருக்கும் போது, அந்த ஏணி மண் சரிந்து கொஞ்சம் சறுக்கி விட்டது!
இதைப் பார்த்துக் கொண்டிருந்த, சற்றுத் தள்ளி நின்று போனில் ஆறுமுகம் அண்ணாவை அழைத்து பேசிக் கொண்டிருந்த, ப்ரனிதா, அவ்வளவு தான், அபியும் கீழே விழப் போகிறாள் என்று பயந்து, “ஏய் பார்த்து ” என்று கத்திக்கொண்டு அருகே ஓடி வந்தாள்!
அதற்குள், ஏணி சறுக்கி விட்டது!
முருகா! என்று கத்திக் கொண்டே கண்ணை இறுக்கி மூடிக் கொண்டாள் அபி!
ஆனால், கீழே விழே வில்லை! ரொம்ப safe ஆக இரு ஸ்ட்ராங் ஜிம் body கைகளில் லேன்ட் ஆகி இருந்தாள்! தன் இரு கண்களை மூடியவாறே!
அவளை தன் கைகளில் தாங்கிய படி நின்று இருந்தவன் விவேக் பிரபு! சுருக்கமாக பிரபு!
அவர்கள் மீது முல்லை பூக்கள் ஆசிர்வதிப்பது போல கொட்டின! (வானில் இருந்து தேவர்கள் மலர் தூவி ஆசிர்வதித்தார்கள் என்றால், என்னை அடிக்க வந்து விடுவீர்கள், கதை யாக இருந்தாலும் ஒரு நியாய தர்மம் வேண்டாமா என்று!).
பூக்கள் கொட்ட காரணமும் அபி தான்!, அவள்தான், பந்துகளை தள்ளி விட முயன்று, ராக்கெட்டால் தட்டி தட்டி விட்டதால் அவை உதிர்ந்து இருந்தன!
ஒரு காற்று அடிக்கவும் பூக்கள் கொட்டவும்,
அவள் கீழே விழ,
அவன் தாங்கி பிடித்துக் கொள்ள
எல்லாம் ஓர் coincidence ஆன நிகழ்வுதான்!
ஆனாலும், பார்ப்பதற்கு நன்றாகவே இருந்தது!
பின் சமாளித்து, மெல்லிய கூச்சத்துடனும், பயத்துடனும் கண்களை திறந்து அவனைப் பார்த்தாள்!
நல்ல சிவந்த நிறம், வசீகரமுகம், அதில் trim செய்யப்பட்ட தாடி, நல்ல உயரம்! trendy யான ஹேர் ஸ்டைல் என்று சகல ஹீரோ qualificationகளுடன் இருந்தான்!
அவனும் தன் கைகளில் தாங்கிப் பிடித்துக் கொண்டு இருக்கும் பெண்ணின் முகத்தைப் பார்த்தான்.
வட்ட முகம், அதில் செழுமையான கொழு கொழு கன்னங்கள்! கூரிய நாசி,பெரிய கண்கள், பிறை நெற்றியில் சிறிதாக eyeliner கொண்டு வைக்கப்பட்ட கண்ணுக்கே தெரியாத சிறிய கருப்பு பொட்டு.
முன்பக்கம் puff வைத்து போடப்பட்டு இருந்த போனி டெயில் கூந்தல்! காதில் பெரிய வளையங்கள்!
எல்லாவற்றுக்கும் மேலாய், யாருக்குமே ஒரு கணம் அந்த இரு கன்னங்களையும் கிள்ளி கொஞ்சத் தோன்றும் அளவுக்கு அதீத குழந்தைத் தனம் இருந்தது அந்த முகத்தில்!
உயரம் வேறு சராசரியை விட கொஞ்சம் குறைவு!( இதற்கு “குள்ளி “ என்றே சொல்லி விடலாம் தான்! என்ன இருந்தாலும் நம் நாயகி அல்லவா! அதான் கொஞ்சம் பில்ட்ப்பு!)
அவள் இன்ஜினியரிங் 3 ஆம் ஆண்டு படிக்கும் மாணவி என்றால், கொஞ்சம் நம்ப மறுப்பீர்கள்!
“நீங்க நம்பலைன்னாலும் அது தான் நிசம்!”
அந்த அவனுமே கொஞ்சம் confuse ஆனான்!, இவள் குமரியா? குழந்தையா என்று! எனினும் அந்த முகத்தில் இருந்து, பார்வையை எடுக்க முடிய வில்லை அவனால்!
அவன் ப்ரனிதா வின் அண்ணன்! 3 வது அண்ணன்! அந்த வீடும் அவர்கள் வீடு தான்! நேற்று இரவு தான் பெங்களூர் இல் இருந்து வீட்டுக்கு வந்து இருந்தான்.
அதிகாலையில் காவேரி பாலத்தில் ஜாகிங் போவது அவனுக்குப் பிடித்த விஷயம்!. ஊருக்கு வரும் போது எல்லாம் மிஸ் பண்ணாமல் போய் விடுவான்!.
வீட்டில் இருந்து தனது KTM பைக் ஐ எடுத்துக் கொண்டு போய் பாலத்தின் ஓரம் பார்க் செய்து விட்டு, நல்ல குளுமையான காற்றை அனுபவித்தபடி, காதில் ஹெட் போன் மாட்டிக் கொண்டு சிறிது நேரம் ஜோக்கிங் போய் விட்டு வருவான்.
இன்றும் அது போல போய் விட்டு திரும்புகையில்தான், அபி கீழே விழப் போவதை பார்த்து, அவளை விழாமல் பிடித்துக்கொண்டான்!
கண்களை திறந்துப் பார்த்த அபி, வேகமாக அவன் கைகளில் இருந்து வேகமாக இறங்க முற்பட, அவள் கழுத்தில் இருந்த லாங்செயின் அவன் track சூட் காலர் ஜிப்பில் மாட்டிகொண்டு விட்டது!
அபி என்ன நினைத்தாளோ, தெரியவில்லை! டக்கென்று அந்த செயினை கழட்டி, அவன் கழுத்தில் மாட்டி விட்டு, கூடவே தேங்க்ஸ் அங்கிள் (அங்கிள் ஆ!) என்று சன்னமாக முணுமுணுத்துக் கொண்டே வேகமாக உள்ளே ஓடி விட்டாள்!
எப்போதும் FM Radio மாதிரி பேசிக் கொண்டே இருக்கும் அபி, இன்று அமைதியாக ஒன்றும் பேசாமல் உள்ளே ஓடிவிட்டது, உண்மையிலேயே ஒரு வரலாற்று நிகழ்வு தான்!
அவன் ஒன்றும் புரியாது பார்த்துக் கொண்டு இருந்த போது, அவன் அருகே வந்து விட்டாள் ப்ரனிதா.
அபி கொழுக் மொழுக் அழகி என்றால், இவள் slim beauty! அவள் அண்ணனைப் போல இவளும் 5 அடியை தொடும் உயரம், சிவந்த நிறம், கொஞ்சம் சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி ஐ நினைவு படுத்தும் தோற்றம்!
இவளுக்கும் சில மாடலிங் வாய்ப்புகள் கூட வந்தன! அதற்கெல்லாம் பெரிய “நோ” சொல்லி விட்டாள் தீர்க்கமாக!
காரணம் அவளின் “ஸ்ரீ!”
இப்போது பிரபுவை பார்த்து,
“ஹாய் அண்ணா! எப்போ வந்தே?“ என்றாள்.
“நைட் தான் பப்பிமா வந்தேன்,11 மணி ஆகிவிட்டது!, ஸ்ரீ யும் வந்து இருக்கான், அவனை அவன் வீட்டில் ட்ரோப் செய்து விட்டு வந்ததால் , கொஞ்சம் லேட் ஆகி விட்டது!.
நீ தூங்கி இருப்பாய், disturb செய்ய வேண்டாம் என்று தான் எழுப்பவில்லை!
அவளும் அபியும் சென்னையில் உள்ள இன்ஜினியரிங் கல்லூரியில் 3ஆம் ஆண்டு மாணவிகள், நெருங்கியத் தோழிகள்!
தற்போது செமஸ்டர்லீவில் இருக்கிறார்கள். இன்னும்1௦ நாட்களில் காலேஜ் reopen ஆக இருக்கிறது!
இன்னும் 5 நாட்களில் ப்ரனிதா அப்பா விஸ்வநாதனுக்கு 7௦வது birthday வருகிறது அதை கொஞ்சம் சிறப்பாகக் கொண்டாட பிள்ளைகள் அனைவரும் முடிவு செய்து இருக்கிறார்கள்!
பெரிய அண்ணன் விஷ்ணு பிரசாத் இன்ஜினியரிங் முடித்து விட்டு சில புகழ் பெற்ற கம்பனிகளில் சில வருடங்கள் வேலை பார்த்து பின் சொந்தமாக சிங்கப்பூரை தலைமையிடமாக ஒரு IT நிறுவனம் நடத்தி வருகிறான்.
அவன் நாளை காலை வந்து விடுவான். கூடவே அவன் காதலித்து மணந்த அர்ச்சனாவும்.
2 வது அண்ணன் விஜய் பிரதாப் அமெரிக்காவில் டாக்டர்! அவனும் அவன் மனைவி காவ்யா – அவளும் ஒரு டாக்டர்! மும்பைப் பெண். அவனும் காதல் திருமணம் தான்! நாளை மறுநாள் வருகிறார்கள்!
நம் ஹீரோ பிரபுவும், தன் அண்ணன் கம்பனியில் முக்கிய பொறுப்பில் – COO ஆக இருக்கிறான்! அவன் இருப்பது பெங்களூரில் இருக்கும் அவர்களது branch office இல்! அவனும் birthday functionக்கு ஆக தான் வந்து இருக்கான்.
பிரனிதா அவள் friend அபியையும் இந்த functionக்கு அனுப்பும்படி அவளது பாட்டி வேம்புவிடம் கேட்டு வர வைத்து இருக்கிறாள்.
விழா முடிந்த பின், அவளது தந்தையே அவர்கள் இருவரையும் சென்னைக்கு அழைத்து சென்று விட்டு விடுவார்!
பாட்டி வேம்புவிடம், ப்ரனிதாவின் தாய் காஞ்சன மாலாவும் போனில் பேசி சம்மதிக்க வைத்தார்.
அபிக்கு அம்மா இல்லை, அவள் பிறக்கும் போதே இறந்துவிட்டாள்! தந்தை கௌஷிக் வெளிநாட்டில் பணி புரிகிறான்.
அவளுக்கு சித்தி உண்டு. அவள் அவளது அம்மா வீட்டில் தன் குழந்தைகளுடன் இருப்பாள், கௌஷிக் லீவில் ஊருக்கு வரும் போது அவளும் வருவாள், லீவ் முடிந்தவுடன் தாய் வீடு திரும்பி விடுவாள்.
அவளுக்கு ரெட்டை குழந்தைகள். அருண் – வருண் என்று இரு வால் பையன்கள். அவர்களை தனியே சமாளிக்க முடியாமல் தான் அவள் தன் தாய் வீட்டில் இருக்கிறாள்.
அதனால் அபி முழுக்க முழுக்க பாட்டி வேம்புவினால் தான் வளர்க்கப் படுகிறாள். அவர்கள் தற்போது இருப்பது தஞ்சையில்.
தாய் இல்லாத அபியின் மீது நட்பையும் தாண்டி ஒருவித தாய் பாசம் போல மிகுந்த அக்கறையும் அன்பும் கொண்டு இருந்தாள் ப்ரனிதா!
இவர்கள் வீட்டில், இவள் தான் கடைக்குட்டி என்பதால், இவள் கொஞ்சி விளையாட, தூக்கி வைத்துக் கொள்ள என்று’ இவர்கள் வீட்டில் யாரும் இல்லை ஆதலால், இவள் எந்த குழந்தையைப் பார்த்தாலும், உடனே தூக்கி வைத்துக் கொள்வாள்!
ஸ்கூல் vanல் வரும் போது கூட எதாவது ஒரு KG குழந்தை இவள் மடியில் உட்கார்ந்து இருக்கும்!
அவளிடம் இயல்பாகவே கொஞ்சம் தாய்மை உணர்ச்சி கொஞ்சம் அதிகம் இருக்கும்! நீங்க கூட சில பெண் குழந்தைகள் இப்படி இருப்பதைக் கண்டு இருப்பீர்கள்!
“ஆமாம், யார் இந்த பெண்? உன் friend ஆ?” கேட்டான் பிரபு, உள்ளே ஓடிவிட்ட அபியைப் பார்த்தவாறே.
“ஆமாம் அண்ணா. என் friend அபி என்று சொல்வேனே! அவள் தான், நம் வீட்டு function க்கு அழைத்து வந்து இருக்கேன்!”
“யார் அந்த உன் teddy bear என்று ஸ்ரீ கிண்டல் அடிப்பானே? அவளா? என்று சிரித்த படியே கேட்டான்!”
“அண்ணா..” என்று சிணுங்கினாள் ப்ரனிதா!
சிறு வயதில் அவளுக்கு ஒரு வினோத பழக்கம் இருந்தது! அது அவள் அண்ணன் பிரபுவின் மஞ்சள் நிற T ஷர்ட் ஒன்றை, தான் அணிந்து கொள்வாள், இல்லை என்றால், கையில் வைத்துக் கொண்டே இருப்பாள்.
எவ்வளவு முயன்றாலும், அதை அவளிடம் இருந்து வாங்க முடியாது. அழுக்கு ஆனால் கூட, அவள் தூங்கும் போது எடுத்து துவைத்து, காய வைத்து, அவள் எழுமுன், அவள் கைகளில் வைத்து விடுவார் அவள் அம்மா காஞ்சனா! இல்லை என்றால், வீடு ரெண்டாகிவிடும்!
பின் ஸ்கூல் சேர்ந்த பின், அவள் LKG g மிஸ் ப்ரின்சி தான், ஒரு teddy bear பொம்மை வாங்கி கொடுத்து divert பண்ணி விட்டாள்!. அதன் பின், அந்த மஞ்சள் T shirt க்கு பதில், அந்த மஞ்சள் நிற teddy bear! அவள் பள்ளி இறுதி வரை! இன்றும் அவள் கப் போர்டில் பத்திரமாக இருக்கிறது!
“அண்ணா! நீயுமா” என்று சிணுங்கிய அவளை, “சும்மா டா, ஒரு funnukku! நீயும் அவளும் ரொம்ப close friends என்று அம்மாவும் சொல்வார்கள்!” என்று சிரித்த படியே உள்ளே சென்றான்!
இன்று சும்மா funnukku என்று கிண்டல் செய்பவனை, பின் வரும் நாட்களில் இன்று என்னவோ பயந்து போய் “சாது” போல உள்ளே ஓடிவிட்ட அந்த teddy bear தான், “சேது” போல “அபி.. அபி.. என்று அவள் பின்னால் சுற்ற வைக்க போகிறாள் என்று யாரும் அறியவில்லை!
தன் ரூமிற்கு சென்ற ப்ரனிதா அங்கே, கட்டிலில் சுருண்டு படுத்துக்கொண்டிருந்த அபியை பார்த்து,
“ஏய் என்னடி ஆச்சு, இப்படி படுத்து இருக்க? periods ஏதும் ஆகி விட்டாயா?” என்று கேட்டாள்.
“இல்ல..போன வாரம் தானே ஆனேன்”
“பின்ன என் இப்படி படுத்துக் கொண்டு இருக்க? போய் குளிக்க வேண்டியது தானே?”
“நீ போய் குளி. நான் அப்புறம் குளிக்கிறேன்.”
“என்னோவோ ஆச்சு உனக்கு” என்று சொல்லிய படியே பாத்ரூமுக்கு சென்றாள் ப்ரனிதா.
“என்ன ஆச்சு எனக்கு” என்று பிரபுவும் தன்னைத் தானே கேட்டுக் கொண்டு இருந்தான், அவன் ரூமில்! அவளின் அந்த குழந்தை முகம் அவனை அப்படி ஈர்த்து இருந்தது!
இது வரை அவனுக்கு இப்படி நேர்ந்தது இல்லை! அவன் எந்த பெண்ணையும் ஏறிட்டுக் கூட பார்க்க மாட்டான்!. ஸ்ரீ கூட கிண்டல் அடிப்பான்.
“நான் தான் committed உனக்கு என்னடா? ஒரு வயசு பையன் மாதிரியா இருக்க?”
“அப்படி இல்லடா, என் வீட்டில் அண்ணன்கள் இருவரும் அவர்கள் இஷ்டப் படி love marriage பண்ணிக் கொண்டு விட்டார்கள், இப்போ ப்ரநிதாவும் பண்ண போறாள். என் அம்மாவிற்கு தான் பெண் பார்த்து, தன் பையன்கள் marriage செய்ய வில்லை என்று ஒரு ஏக்கமே இருக்கு. அதனால் தான், நான் ஆவது அவர் பார்க்கும் பெண்ணைத் தான் marriage செய்ய வேண்டும் என்று இருக்கேன்”
இப்படியெல்லாம் dialogue அடித்த பிரபுவுக்கு இன்று வந்த இனிய சோதனை!
தான் இப்படி நினைப்பது சரியா?
தங்கையின் தோழி, தன்னையும் அண்ணன் ஆக நினைத்து கொண்டு இருந்தால், தப்பாகி விடுமே!
ஆனால் அப்படி நினைக்க தான் வேண்டும் என்பதில்லையே. ஸ்ரீ கூட ப்ரநிதாவை ஒன்றும் தங்கை யாக நினைக்க வில்லையே!.
கீழே இறங்குமுன் அவள் ஏதோ சொன்னாளே “Thanks அண்ணா” என்றா? சொன்னதுபோலவும் இருந்தது, இல்லாதது போலவும் இருந்ததது!
இப்படி குழம்பி கொண்டே, தன் T shirt கழட்ட முற்பட, அவளின் செயின் கைகளுக்கு அகப்பட்டது! இது அபியுடையது அல்லவா? அவள் ஏன் தன் செயின் கழட்டி ஏன் என் கழுத்தில் போட்டாள்? என்ன நினைத்து? அதை எடுத்து பத்திரமாக ஓர் இடத்தில் வைத்து விட்டு குளிக்க சென்றான் அவன்!
குளித்து முடித்து வந்து விட்ட ப்ரனிதா, அபியை “போய் குளிடி” என்றாள்.
அவள் இன்னும் எழாமல் இருக்கவும், அருகே சென்று “என்ன ஆச்சுடா?” என்றாள் வாஞ்சையாக.
“ப்ரனிக்கா எனக்கு ஒரு மாதிரியாக இருக்குக்கா” என்றாள்
“என்ன ஆச்சு?”
“நான் அந்த shuttlecock களை எடுக்க ஏணியில் ஏறி கீழே விழுந்தேனே“
“ஆமாம் அதுக்கென்ன?”
“அப்ப ஒரு அங்கிள் மேல் எசகு பிசகாக விழுந்து விட்டேன், அதை நினைச்சா, கொஞ்சம் சங்கோஜமாக இருக்கு”
“அப்படின்னா?”
“ஒரு மாதிரி என்னன்னு சொல்ல தெரியல நான் நோர்மல் ஆக இல்லை. அந்த அங்கிள் என்னை தப்பா நினைப்பாரோ என்று”
“அங்கிள் என்று யாரை சொல்ற?”
“அதான் என்னை கீழே விழாமல் பிடித்துக் கொண்டாரே அவர் தான்”
இப்போது தான் ப்ரநிதாவிற்கு நினைவு வந்தது அவளை பிரபு அல்லவா இறக்கி விட்டான்!
“அடப்பாவி அவன் உனக்கு அங்கிள் ஆ? அவன் என் அண்ணன் பிரபு! 3 வது அண்ணன்! நீ இதற்குமுன் போட்டோவில் கூட பார்த்து இருக்க.. ஞாபகம் இல்ல? அவனை பார்த்தா உனக்கு அங்கிள் மாதிரியா தெரியுது?”
“இல்ல.. அவர் கொஞ்சம் .. உன்னை மாதிரி ரொம்ப உயரமா.. தாடி எல்லாம் வைத்து இருந்தாரா? அதான், அப்படி நினைத்து விட்டேன். சாரி..”
“எல்லாம் என்னை சொல்லணும் ஒரே ஒரு வயது உன்னை விட நான் மூத்தவள்; ஆனால், நீ என்னை அக்கா அக்கா என்று கூப்பிட்ட போதே , உன்னை உதைத்து இருக்கணும். நானும் எனக்கு தங்கை யாருமில்லயே, என்று விட்டா, நீ பிரபுவை போய் அங்கிள் என்று சொல்ற..” பொய்க் கோபத்தோடே செல்லமாக அடித்தாள்.
“மேடம் க்கு இன்னும் தான் ஒரு kid என்று நினைப்போ? அடுத்த வருடம் நீயும் ஒரு engineer. ஞாபகம் இருக்கட்டும்.”
“இப்போ போய் குளிங்க மேடம்” என்றாள்
“அக்கா, இன்னும் ஒன்னு வேற பண்ணி விட்டேன்.. ஏன் செய்தேன் என்று எனக்கே தெரியவில்லை!”
“இன்னும் என்ன பண்ணின?”
இந்த சினிமால வர மாதிரி கிஸ் ஏதும் கொடுத்து விட்டாளோ..என்று அவள் மனம் கொஞ்சம் யோசிக்க, அப்படி ஏதும் நடந்து, இந்த teddy bear ஏ என் குட்டி அண்ணி ஆக வந்தால் நன்றாகவே இருக்கும் என, அவள் மனம் ஏகத்துக்கும் கற்பனை பண்ணியது!.
“நான் இந்த தடவை ஊரில் இருந்து வரும் போது,என் குட்டி செயின் ஐ கழற்றி விட்டு, பாட்டியிடம் பெரிய லாங் செயின் வாங்கி போட்டு வந்தேன். அங்கிள் பர்த்டே function க்காக.
கீழே விழும் போது, அது உன் அண்ணன் T shirt காலரில் மாட்டிக் கொண்டு விட்டது. அவசரத்தில், பயத்தில், நான் அந்த செயின்ஐ அவர் கழுத்தில் போட்டு விட்டுட்டேன்!”
“அதை வாங்கி கொடுக்கா..”
“அவ்வளவுதானே நான் வாங்கி தர்றேன், இப்போ நீ குளிக்க போ குளித்துவிட்டு வந்து கீழே சாப்பிட போலாம்.”
“எனக்கு பிரேக் பாஸ்ட் வேண்டாம் மனசே சரியில்லை.”
“உதை படுவே, நீ ஆச்சு, உன் ஆன்டி ஆச்சு. சீக்கிரம் வா, நான் கீழே போறேன்” என்றவாறு கீழே இறங்கி சென்றாள்.
தன் ரூமில் குழம்பிக் கொண்டு இருந்த பிரபு, ஒரு வழியாய், குளித்து ரெடி ஆனவுடன், அபியின் செயின் எடுத்துக் கொண்டு, அவளிடம் தர, ப்ரநிதாவின் அறைக்கு வந்து கொண்டு இருந்த போது, இவர்களின் பேச்சை தற்செயலாக கேட்க நேர்ந்தது!.
“மவளே.. என்னை அங்கிள் என்றா சொன்னாய், இந்த செயின் ஐ வைத்து, உன்னிடம் கொஞ்சம் விளையாட போகிறேன். பாரு..”
இதுமாதிரி எல்லாம் யோசிக்கிற,செய்கிற ஆள் இல்லை அவன்! ஆனால், இப்ப என்னமோ இந்த அபியிடம் வம்பு செய்ய அவன் மனம் ஆசைப்பட்டது!