ராகா விடை பெறுகிறாள் என்று தெரிந்தும் திரும்பாமல் மறுபக்கமாகவே நின்றிருந்தான் என சத்யாவால் சொல்ல முடியவில்லை. அவள் இருக்கும் வேளையில் அவள் பக்கமாகவே பார்வை நீள்கிறது. வலது கையில் அணிந்திருந்த ஆப்பிள் ஸ்மார்ட் வாட்சை இன்று இடது கையில் அணிந்திருந்தாள்.
வலது காதின் கீழே “ஒரு இறகிலிருந்து பறக்கும் பல சிறிய பறவைகள்” வடிவத்தில் ஒரு டாட்டூ குத்தியிருந்தாள். “அன்னைக்கு ஃப்ரீ ஹேர் விட்டிருந்ததால டேட்டூ தெரியலை. அதுவுமில்லாம அன்னைக்கு இவளோ பக்கத்தில நிக்கலை இல்லையா?” என அவனே கேள்வியும் பதிலுமாய் மாறிப்போனான்.
“இந்த லைட் லீஃப் க்ரீன் ஷ்ர்ட்க்கு ஐவரி பேண்ட், அதுக்கு பக்கா மேட்சிங்கா ஒரு ப்ரவுன் பெல்ட், ம்ம்ம் நல்லா தான் இருக்கு உன் டிரஸ்ஸிங் சென்ஸ்” என்று எண்ணியவனுக்குப் புன்னகை அரும்பியது. அவள் சென்ற பிறகும், அவளின் “வெர்சாஸ்” செண்டின் நறுமணம் இன்னமும் ஏனோ நாசிகளை நிரைத்து அவளை நினைவலைகளில் நிரப்புவது போலவே ஒரு பிரமை.
அவள் அருகே இருக்கும் தருணத்தில் அவளின் பார்வை வீச்சு தன்னை சுற்றி வளைத்து சிறை செய்துவிடுவதைப் போலவும், அவள் இல்லாத போது, அந்தச் சிறைவாசம் வேண்டுமென எண்ணி ஏக்கம் கொள்வது போலவும் மாயை உண்டாயிற்று.
“ஏண்டா வெண்ண மவனே! அந்த ராகா பொண்ணு என்ன டிரஸ் போட்டிருக்கு, என்ன செண்ட் அடிச்சிருக்குன்னு இப்படி இன்ச் இன்சா யோசிக்கறையே, நீ கல்யாணம் பண்ணிக்கப் போற மிருதுளா இன்னைக்கு என்ன டிரஸ் போட்டுட்டு வந்தா சொல்லு பார்ப்போம்” என்று சவால் விடுவது போல அவன் மனசாட்சி கேள்வி கேட்கத் துவங்க,
சத்யா தன் மூளையில் சேமித்திருந்த மிருதுளாவின் பிம்பத்தை மனத்திரையில் மீண்டும் கொணர்ந்து, அவள் இன்று என்ன உடை அணிந்திருந்தாள் என யோசித்தது.
“கருநீலமா, அடர் க்ரேவா? இல்லை இரண்டும் கலந்தவாக்கில் ஒரு கவுன். நிச்சயமாக அது ஒரு கவுன் மாடல் உடை தான். அந்த மட்டில் துல்லியமாக நினைவு இருந்தது. ஆனால் கருநீலமா, க்ரேவா? இல்லை ஒரு வேளை கருப்போ? நல்ல டார்க் நீலம் கூட சில நேரம் கருப்பு மாதிரி தானே தெரியும்?” என்று மிருதுளாவின் உடை பற்றி எண்ணிக் கொண்டான்.
“ம்ம்ம்கும், அந்த ராகா பச்சை சட்டை, வெள்ளை பேண்ட் போட்டிருக்கா, பெல்ட் போட்டிருக்கா, கை வாட்சை மாத்தி கட்டியிருங்காங்கற வரைக்கும் நியாபகம் இருக்கு. அதுலையும் அந்த பச்சை ஷேட் பேரு பச்சை இல்லையாம்! லீஃப் க்ரீனாம். இதெல்லாம் நல்லா வக்கனையா சொல்லத் தெரியுது, ஆனா உன் ஃபியான்சி போட்டிருந்தது நீலமா கருப்பான்னு கன்பியூஸ் ஆகற. நீ நடந்துடா நடத்து” என்று சாடியது மனசாட்சி.
“சே, என்ன பண்ணறேன் நான்? ஏன் இப்படியெல்லாம் சின்னபுள்ளத் தனமா நடந்துக்கறேன். இப்படியெல்லாம் லஸ்ட் வந்து, அட்ராக்ட் ஆகறவனா நான்?அவளோ வில்பவர் இல்லாத மனசா என்னோடது? நான் ரொம்ப ஸ்டிராங்க்னு நினைச்சிருந்தேனே!” என்று புழுங்கியவன்,
“இனி இப்படியெல்லாம் அசட்டுத் தனமா நினைக்கறது கூட தப்பு! கொஞ்சம் கண்ட்ரோலா இருக்கணும்.” என்று தீர்மானித்து கொண்டான். ஆனால் அவன் தீர்மானமெல்லாம் அடுத்த முறை ராகாவைக் காணும் வரையிலும் தான் நீடித்தது.
அடுத்த இரு தினங்களிலேயே மிருதுளா ஆசைபட்டபடிக்கு அந்த ப்ரைடல் மேகஜீனைத் தொடர்பு கொண்டு, அவர்களை ஒருங்கிணைத்து ஒரு ஃபோட்டோ ஷூட்டிற்கு ஏற்பாடு செய்திருந்தது “ஷ்ருஷ்டீஸ்” குழு. புகைப்படம் எடுக்க வேண்டிய அன்றைய தினம், காலையே புகைப்படக் கலைஞர்கள், கேமரா மேன் மேக்கப் என எல்லாவற்றையும் தயாராய் வைத்துக் கொண்டனர்.
நடாஷாவின் ஏற்பாட்டின் படி, இந்த ஷூட்டிற்கு மைசூர் லலித் மஹால் பேலஸ் போலவே வடிவமைக்கப்பட்டிருந்த ஒரு நவீன ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த ஹோட்டலிலேயே மாத இதழ் குழுவினருக்கு ஒரு அறையும், ஷ்ருஷ்டீஸிற்கு ஒரு அறையும், மிருதுளா சத்யாவிற்கு ஒரு அறையும் பதிந்திருந்தனர்.
“ராகா! ஃபோட்டோகிராஃபர், காமிரா மேன் எல்லாமே ரெடியா?”
“மேக்கப் ஆர்டிஸ்ட் வந்து அரை மணி நேரமாச்சு. மிருதுளாவுக்கு ஃபேஸ் மேக்கப் ஸ்டார்ட் பண்ணயாச்சா?”
“ராகா மேம், ஃபோன் கால்”
“ராகா மேம் ஹோட்டல் மேனேஜர் உங்ககிட்ட ஏதோ சொல்லணுமாம்” என்று மாறி மாறி ராகா கவனிக்க வேண்டிய வேலைகள் குவிந்த வண்ணமே இருந்தன.
“சத்யா சார்கிட்ட அவரோட பைஜாமா குர்தா காட்டிட்டு, டிரஸஸ்ஸை அவங்க ரூம் கப்போர்டில தொங்க விட்டுட்டு வந்துடவா ராகா?” என்று வனிஷா, சத்யாவின் துணிகள் அடங்கிய ஆளுயர கருப்பு நிறக் உறையைப் பிடித்தபடி வினவினாள்.
“மைக்கில் இன்னும் மிருது மேம் வீட்டில இருந்து கிளம்பவேயில்ல. மிருது மேம் இன்னமும் டிரஸ் செலக்ட் பண்ணலையாம். கன்ஃபூஷனா தான் இருக்காங்களாம். அவங்க வந்ததுக்கு அப்பறமா சத்யா சார்கிட்ட அவரோட ட்ரெஸ் காட்டினா போதும்.” என்று வனிஷாவிற்கு பதில் சொல்லிவிட்டு, தன் கைப்பேசி எடுத்து மைக்கிலுக்கு அழைத்தாள்.
“மணி பத்தாகப் போகுது. இங்க எல்லாருமே வெயிட்டிங். மிருது மேம் இன்னும் ஏன் கிளம்பலை. நீ என்ன பண்ணிட்டு இருக்க அங்க. அவங்களை சீக்கரம் கிளம்ப வச்சு கூட்டிட்டு வரத்தானே நீ அங்க போன மைக்” என்று பதட்டப்பட்டாள்.
“ஒரு நிமிஷம் வீடியோ கால் வா ராக்ஸ். நீயே பாரு இங்க என்ன நிலைமைன்னு” என்று கூறிய மைக்கேல், வாட்ஸப் வீடியோ கால் எடுக்க, அங்கே மிருதுவின் வீட்டைக் காண்பித்தான் மைக்கில்.
மிருதுவின் கட்டிலின் மேல் மூன்று உடைகள் கிடத்தப்பட்டிருக்க, அதில் எதை அணிவது என்று பலத்த வாக்குவாதம் நடந்து கொண்டிருந்தது. “இன்னுமா இவங்க என்ன டிரஸ் போடறதுன்னு டிசைட் பண்ணலை” என்று நினைக்கும் போதே ராகாவுக்கு எரிச்சல் மூண்டது. ஆனால் இதெல்லாம் இந்த மேனேஜ்மெண்ட் துறையில் சாதாரணம் என்று உணர்ந்த ராகா, “மைக் நீ ஃபோனை மிருதுளா மேம்கிட்ட குடு” என்றாள் சாந்தமாக.
“ஹாய் மிருது மேம். எப்போ வர்றீங்க! வி ஆல் ஆர் வெயிட்டிங்க் ஃபார் யூ” என்று ப்ளாஸ்டிக் புன்னகையை முகத்தில் இளைத்துக் கொண்டு பேசினாள். “ஓ, ராகா! தெரியும்யா. பட் ஐம் ரியலி கன்ஃப்யூஸ்ட். நான் ஒரு டிரெஸ் சூஸ் பண்ணி வச்சிருந்தேன். பட், லாஸ்ட் மினிட்ல இந்த தீப்தியும், மின்னியும் என்னைக் குழப்பிட்டாங்க.” என்று நிஜமான குழப்பத்தில் தான் பேசினாள் மிருது.
ராகா தான் சின்ன குழந்தைக்கு சமாதானம் செய்வதைப் போல பேசிவேண்டிருந்தது. “மிருது மேம். ப்ளீஸ் டோண்ட் கெட் டென்ஸ்ட். நீங்க ஒன்னு பண்ணுங்க, மூணு டிரஸ்ஸையும் எடுத்துட்டே இங்க வந்துருங்க. நாம ஃபோட்டோ ஷூட் பார்த்துட்டு, எது உங்களுக்கு பிடிச்சிருக்கோ அந்த பிக்ஸை மேகஜீன்க்கு குடுத்துடலாம். பட், கம் சூன் மேம், நைட் டு ஒ க்ளாக் வரைக்கும் தான் இங்க பர்மிஷன் வாங்கியிருக்கோம். லேட் ஆகிட்டா, அப்பறம் நாம டிரஸ் சேஞ்ச் பண்ணி பிக்ஸ் எடுக்க முடியாது” என்று தன்மையாக ஆனால் திடமாகக் கூற, மிருது ராகாவின் முடிவை ஏற்றுக் கொண்டாள்.
“ம்ம் ஒ.கே, நான் மூணு டிரஸ்ஸையும் எடுத்துட்டு இப்போவே கிளம்பறேன். சீ யூ” என்று கைப்பேசியைத் திரும்ப மைக்கிலிடம் சேர்ப்பித்தாள்.
“இடியட், அவங்களை எப்படியாவது அங்கிருந்து பேக் பண்ணி வர வைக்கற வழியைப் பார்க்காம, நீயும் அங்க நின்னு அவங்க தாளத்துக்கு ஆடிட்டு இருக்க?” என்று ராகா மைக்கிலிடம் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, அவள் பின்னால், “மிருது இன்னும் வரலையா?” என்று சத்யாவின் குரல் கேட்டு திடுக்கிட்டுத் திரும்பினாள்.
கம்பெனி விஷயமாக மும்பை வரையில் சென்றிருக்கிறான் என்று காலையில் சொல்லப்பட்டிருந்தது. மிருதுளாவுடன் சேர்ந்து வருவான் என்று எண்ணியிருந்த ராகா, அவள் எதிர்பாராத நேரத்தில் அவன் மட்டுமாக அங்கே இருக்கவும் அவளையும் மீறி புன்னகைத்திருந்தாள்.
நயனங்களோடு சேர்த்து அவள் முகமும் அழகாய் விகசிக்க, கண்களை இடுக்கிக் கொண்டு கொஞ்சம் போல் விழிகளை உயர்த்திய சத்யா “இது என்ன என்னைப் பார்த்ததுல இவளோ சந்தோஷமா?” என்று விழிவினா தொடுக்க, ராகா தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு,
“மேம் இப்போ தான் கிளம்பறாங்க சத்யா சார்.” என்று புன்னகையை துடைத்துக் கொண்டு பதிலளித்தாள். போன முறை விடை பெற்றுச் செல்ல எத்தனித்த தருணம், அவன் அவளைப் பாராமல் முதுகு காட்டி நின்று கொண்ட பிம்பத்தை வலுவில் மனதில் கொணர்ந்து நிறுத்தி, வேண்டுமென்றே முகத்தில் சிடுசிடுப்பைக் கூட்டிக் கொண்டாள்.
“ஒரு பாய் சொல்லகூட இல்லாம, செவுத்தைப் பார்த்துட்டு திரும்பி நின்னான்ல. அதை மறந்துட்டு இப்போ அவன் வரவுமே எதுக்கு அவளோ ஒரு பெரிய இளிப்பு” என்று கடிந்து கொண்டவள்,
“வனிஷா, வேர் ஆர் யூ? சத்யா சார் வந்தாச்சு பாரு. டேக் கேர் ஆஃப் ஹிம்” என்று அங்கே சுற்றிக் கொண்டிருந்த வனிஷாவை அழைத்து, பொறுப்பை அவளிடம் ஒப்படைத்திருந்தாள்.
விழியில் தேங்கியிருந்த வினாவுடன் ராகாவை பார்த்துவிட்டு, வனிஷாவின் பின்னூடே நகர்ந்தான் சத்யா. அவனுடன் அவனது பால்யகால நண்பன் ரிஷி துணையாக வந்திருந்தான்.
ரிஷியுடன் அளவளாவிக் கொண்டே அவனுக்காக ஏற்பாடு செய்திருந்த அறைக்குள் செல்ல, அங்கே அவனது பைஜாமா குர்தா தயாராக கட்டிலின் மீது கிடத்தப்பட்டிருந்தது. அதே போன்று இவர்கள் உள்ளே நுழைந்த அடுத்த இரண்டாவது நிமிடம், “சார், எனிதிங் டு டிரிங்?” என்றபடிக்கு ஒரு சிப்பந்தி வந்துவிட்டிருந்தான். “ரெண்டு காபி. ஒண்ணு ஸ்டிராங்கா” என்று சிப்பந்தியிடம் தெரிவித்தான்.
“என்னடா, உபசரிப்புலாம் பயங்கர பர்ஃபெக்டா இருக்கு. இதுக்காகவே நான் இன்னொரு கல்யாணம் பண்ணிக்கலாம் போல இருக்கே” என்று ரிஷி விளையாட்டாய் கூறினான். அவனுக்கு இரு மாதங்கள் முன்பு தான் திருமணம் முடிந்திருந்தது.
இதற்குள் கதவு தட்டப்பட, “எஸ் கமின்” என்று கதவினைத் திறந்தான் ரிஷி. வெளியே நின்றிருந்த வனிஷாவின் கையில் மேலும் இரு உடைகள் ஹேங்கரில் தொங்கிக் கொண்டிருந்தன.
“இது யாருக்கு? என்னோட டிரெஸ் தான் ஏற்கனவே இங்க இருக்கே” என்று மெத்தையைச் சுட்டிக் காட்டினான். வனிஷாவிற்கு இந்தக் கேள்விக்கான பதில் தெரிந்திருக்கவில்லை. “சாரி சார், ராகா மேம் உங்க ரூம்ல வைக்க சொன்னாங்க.” என்று பவ்யமாக பதிலளித்த வனிஷா, தயங்கிக் கொண்டே வெளியே நிற்க, கதவருகில் இருந்து விலகிக் கொண்டு உள்ளே செல்ல வழிவிட்டான் சத்யா.
வனிஷா உடைகளை ஹேங்கரில் தொங்க விட்டுவிட்டு, வெளியே செல்ல எத்தனிக்க, “இப்போ நான் எதைப் போடறதுன்னு உங்க ராகா மேம் இன்ஸ்டிரக்ஷன்ஸ் சொல்லலியா?” என்றான் காட்டமாக.
“சார் அதுவந்து.. எந்த டிரெஸ்னு உங்களுக்கு தெரியாதா சார்?”
“தெரியாம தானே கேட்கறேன்.”
“உங்களுக்கு தெரியும் நினைச்சேன் சார். கிவ் மீ டூ மினிட்ஸ் சார். ஐ வில் பி பேக்” என்று பதில் சொல்லிவிட்டு அங்கிருந்து சிட்டாகப் பறந்துவிட்டாள் வனிஷா. திரும்ப இரண்டு நிமிடத்தில் ஓடி வந்தவள்,
“சார், மிருது மேம் இன்னும் டிரஸ் சூஸ் பண்ணலை” என்றாள் சற்றே கம்மிய குரலில்.
“சோ! சோ நான் என்ன பண்ணனும் இப்போ?” என்று மீண்டும் காட்டமாய் பேசினான் சத்யா. இதற்கு பதில் சொல்லாமல் வனிஷா மெளனமாய் நிற்க, அவள் நின்ற விதம் சத்யாவை சங்கடமூட்டியது. “மிருதுக்கு மேக்கப் ஸ்டார்ட் பண்ணிட்டாங்களா? ரூம்ல இருக்காளா?” என்று சற்றே குரலைத் தளைத்து வினவினான்.
“சார். அது வந்து, அவங்க இன்னும் ஸ்பாட்டுக்கு வரலை. ஆன் த வே” என்று தயக்கத்துடன் பதில் எழுந்தது வனிஷாவிடமிருந்து. ஷ்ருஷ்டீஸ் வனிஷாவை மணமகனின் பாயிண்ட் ஆஃப் காண்டாக தேர்தெடுக்க, வனிஷாவின் இந்த அமைதியான சுபாவம் ஒரு முக்கியமான காரணம்.
ராகாவோ, நடாஷாவோ இந்த இடத்தில் வனிஷா போன்று அமைதியாய் நிற்க மாட்டார்கள். “நோ நான்சென்ஸ் ஆட்டிட்யூட்” என்று சொல்லப்படும், “உன் தவறுக்கு நான் எதற்கு தலைகுனிய வேண்டும்?” என்று கண்களைப் பார்த்து கொஞ்சமும் தயவு தாட்சண்யம் இன்றி கருத்து சொல்லிவிடும் ரகம் இருவரும்.
நிறைய மணமகன்களுக்கு இது பிடித்தமில்லாமல் போகும். இதுவே தலையை குனிந்து கொண்டு அமைதியாய் போய்விடும் பெண்ணிடம் அதற்கு மேல் வாதாடத் தோன்றாது. இதோ இப்போதும் வனிஷா அமைதியான குரலிலேயே சத்யாவிற்கு பதிலளித்தாள்.
“சார், அது வந்து அவங்க என்ன டிரஸ் கலர் சூஸ் பண்ணறாங்களோ அதுக்கு மேட்சிங் கலர் தான் நீங்க போடப் போறீங்கன்னு…” என்று அவளை முடிக்கவே விடவில்லை,
“பின்ன? எனக்கு தான் நீங்க வேலை பார்க்கறீங்க? நாட் த அதர் வே அரவுண்ட். புரியுதா? சீ ஐம் நாட் யுவர் பப்பெட். நீங்க ஆட்டிவைக்கற பொம்மை மாதிரி நினைக்காதீங்க. இந்த டைமுக்கு வான்னு அத்தனை தடவை ரிமைண்ட் பண்ணீங்க. ஆனா இங்க வந்தா எதுவுமே இன்னும் ரெடியாகலை. எனக்கு வேற வேலை வெட்டி இல்லைன்னு நினைக்கறீங்களா?”
“சார்..”
“வாட் சார் சார்ன்னு மென்னு முழுங்கிட்டு? என் இஷ்டத்துக்கு டிரஸ் பண்ணிக்க எனக்கு உங்க பர்மிஷன் தேவையில்லை. காட் இட்?” என்று வனிஷாவிடம் கத்திக் கொண்டிருக்க,
“அஃப்கோர்ஸ் வீ வர்க ஃபார் யூ சார். எந்த டெஷிஷனும் இந்த ராகா மேம் சொல்லலை சார். இது எல்ல்ல்ல்ல்லாமே உங்க மிருதுளா மேமோட டெஷிஷன். கலர் கோ ஆர்டினேஷன் பிக்ஸ்க்கு இம்பார்டெண்ட்னு அவங்க டிசைட் பண்ணதை நாங்க எக்ஸிக்யூட் தான் பண்ணறோம்” என்று வெகு அமைதியாக முகத்தை வைத்துக் கொண்டு வனிஷாவின் முதுக்கு பின்னாலிருந்து தென்பட்டாள் ராகா.
வனிஷா ஒதுங்கி வழிவிட்டு ஓரமாய் நின்றுவிட, “உங்களுக்கு எதாவது டிரஸ் கோட்ல டிஸ்கிரிபென்சி இருந்தா ப்ளீஸ் டாக் டு யுவர் ஃப்யான்சி. எங்க கிட்ட உங்க கோபத்தைக் காட்டிறதுல எந்த பிரயோஜனமும் இல்ல சார். நீங்க என்ன திட்டுனாலும் எங்க டீம் அதை மனசில போட்டுக்க மாட்டாங்க. பிகாஸ் திஸ் இஸ் ஆல்சோ அவர் ஜாப். வி ஆர் டூயிங் அவர் பெஸ்ட். உங்க சாடிஸ்ஃபாக்ஷன் தான் எங்களுக்கு பிரதானம். அதுக்காக தான் இவளோ மெனக்கெடறோம்” என்று சொல்லிய ராகாவிடம் பதில் பேசத் தடுமாற்றம் கொண்டது சத்யாவின் உதடுகள்.
“தேவையில்லாமல் இந்த வனிஷா பெண்ணை ஏன் திட்டிக் கொண்டிருக்கிறேன். உண்மையில் இதெல்லாமே மிருதுவின் எண்ணங்களும் ஆசைகளும் தான் என்று தெரிந்த பின்பும் வேலை பார்க்கும் பெண்ணிடம் இதையெல்லாம் போய் கொட்டிக் கொண்டிருப்பானேன்.
என் கோபம் எதனால்? என்று கொஞ்சம் ஆராயத் துவங்கினான் சத்யா. உண்மையில் மிருதுளாவிடம் தான் கோபம் எழுந்தது. “என்னால் ஷூட்டிற்கு தாமதமாகிவிடக் கூடாது என்று அரக்கப் பறக்க மும்பையில் இருந்து நான் வந்து சேர்ந்து விட்டேன். ஆனால், அரை மணி நேர தூரத்தில் இருந்து கொண்டு மிருதுளா இன்னமும் வரவில்லை. எனக்கு முன்னரே வந்து எனக்காகக் காத்திருக்க வேண்டும் என்றெல்லாம் எண்ணவில்லை தான். ஆனாலும் இன்ன நேரத்திற்குத் துவங்க வேண்டும் என்று எனக்கு பத்தாயிரம் முறை கைப்பேசியில் கட்டளையிட்ட உணர்வு அவளுக்கு இருக்கவேண்டும் அல்லவா?”
“வனிஷாவிடம் தன் செய்கைக்கு மன்னிப்பு கோர வேண்டும் என்று ராகா சொல்லாமல் சொல்கிறாளோ?” என்ற எண்ணத்தில் குழப்பத்துடன் சத்யா பேசாமல் நிற்க, சத்யா யோசனையுடன் புருவங்கள் முடிச்சிட நின்றிருந்த பாங்கு ராகாவை சங்கடப்படுத்தியது. அவன் மனம் நோகும் படிக்கு தன எதுவும் பேசிவிடவில்லை என்னும் போதும், அவன் மனதளவில் வருந்துகிறானே! அதை சீர் செய்ய வேண்டுமே என்று ஏனோ பரிதவித்தது அவள் மனம்.
வாஸ்தவத்தில் ராகா கொஞ்சம் புன்னகையுடன் தான் சொல்ல வந்த விஷயத்தை திடமாகச் சொல்லிவிடுபவள் தான். ஆனால் என்னவோ இவனிடம் ஏனோ இவனிடம் கோபத்தைக் காட்டத் தோன்றவில்லை. அதற்கு நேர் மாறாக இவன் புருவங்கள் முடிச்சிடுவதைக் கண்டு அவன் மனதை லகுவாக்கவே எண்ணம் ஏற்பட்டது. இதைப் பற்றி ரொம்பவும் ஆராய்ச்சி செய்யாமல், ராகா மேலே தொடர்ந்தாள்.
முகத்தில் சின்ன புன்னகையுடன் சத்யாவை ஏறிட்ட ராகா, “மிருதுளா மேம் இன்னும் பத்து நிமிஷத்துல வந்துடுவாங்க சார். அவங்க வந்ததுக்கு அப்பறம் நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து பேசி ட்ரஸ் டிசைட் பண்ணிட்டு எங்களுக்கு சொல்லுங்க. வி வில் ப்ரொசீட் ஆஃப்டர் தட். நோ இஷ்சூஸ் ஃபார் அஸ் சார்.” என்று பற்கள் தெரியாமல் புன்னகை சிந்திவிட்டு, “கம் வனி.” என்று வனிஷாவையும் அழைத்துக் கொண்டு அங்கிருந்து விடுவிடுவென வெளியேறினாள்.
ராகாவின் இந்த செய்கை அவளுக்கு வெகு ஆச்சர்யமாக இருந்தது. அதை விடவும், “விட்டா அவன் கையைப் பிடிச்சு ஆறுதல் சொல்லுவ போல இருக்கே! க்ளியர் யுவர் ஹெட் ராகா!” என்று சொல்லி, தலையை சிலுப்பிக் கொண்டாள்.
ராகாவின் பதில் மொழிக்கு எந்த விளக்கமும் கொடுக்காமல், மீண்டும் தன் அறைக்குள் சென்றுவிட்டான். ஆனால் அவன் உள்ளுக்குள் நிறைய எரிச்சல் தான். அவன் செய்கையின் மீது அவனுக்கே கோபம் தான் எழுந்தது. யாரோ மீது காட்ட வேண்டிய கோபத்தை சம்பந்தமில்லாமல் வேறு நபரின் மீது திருப்பிக் கொண்டிருக்கிறோம் என்ற குற்ற உணர்வு வாட்டியது.
“டேய், கூலா இருடா! எதுக்கு இப்படி டென்ஷன் ஆகற?” என்று நண்பனைச் சமாதானம் செய்தான் ரிஷி.
எதனால் சம்பந்தமில்லாமல் இந்த பெண்ணிடம் கோபத்தைக் காட்டுகிறோம் என்று அவனுக்கும் புரியவில்லை. ஒரு வேளை வனிஷாவிற்கு பதிலாக, ராகா அவன் தேவைகளைக் கண்காணிக்க வரவில்லை என்ற எண்ணமோ?
“ஏன் அவள் வந்து இவனுக்கு என்ன வேண்டும் என்று அக்கறையாக கேட்டால் என்ன?நான் வந்தது தெரியும் தானே! பின்னே என் தேவைகள் என்னவென்று அருகிருந்து கவனிக்காமல் அவள் பாட்டில் அங்கேயே நின்றுவிட்டாள். இவள் வந்து” என்று மனதிற்குள் எண்ண, லேசாக தலை வலிக்கத் துவங்கியது.
“என்னடா இப்படி டிசைன் டிசைனா யோசிச்சு நீயே உன்னை டென்ஷன் ஆக்கிக்கற? உன்னை கவனிக்க உன் பின்னாடியே வனிஷாவ விட்டிருக்காங்க தானே! இதுல ராகா இருந்தா என்ன இல்லைன்னா என்ன?” என்று எண்ணிக் கொண்டு, சிப்பந்தி வைத்துவிட்டுப் போன ஆறிப் போன காபியைப் பருகலாம் என்று அவன் எத்தனித்த சமயம்,
“சார் ஸ்டிராங் காபு ஃபார் யூ” என்று வாயிலில் சூடான காபி கோப்பையுடன் தென்பட்டான் ஒரு சிப்பந்தி. இதுவும் ராகாவின் ஏற்பாடோ என்று உள்ளூர துள்ளி எழுந்தமர்ந்த மனதைப் பெருதுபடுத்தாமல் இம்முறை தன் காபியை சூடாகப் பருகத் துவங்கினான் சத்யசாய்ராம்.