ஆனாலும் குழம்பிய முகத்துடன், “வீட்டை விட்டு போறதுக்கு எதுக்கு மாமா பணத்தை எடுக்கணும்? அதுமில்லாம, நீங்க ஏன் வீட்டை விட்டு போகணும்?” என்று கேட்க,
“நிறைய தடவை சொல்லிருக்கேன்! இந்த வீட்ல நான் இருந்ததுக்கு ஒரே காரணம் என் அப்பா மட்டும் தான்! நான் யாரோடவும் அவ்ளோ சட்டுன்னு ஒட்டவே மாட்டேன்! அப்பாவும் இல்லன்னா நான் தனிமரமா சொந்தபந்தம் இல்லாம அநாதரவா போய்டுவேனோன்னு பயந்து தான் என்னை இங்க அனுப்பி வச்சாரு!
எங்களுக்குன்னு வேற சொந்தமும் இல்ல பெருசா! உங்க அப்பாவா என்னை ‘போ’ன்னு சொல்லாம நான் இவரை விட்டு போகக்கூடாதுன்னு சொன்னதால, ‘திருட்டுப்பட்டம்’ விழுந்தாலும் பரவால்லன்னு இப்படி செஞ்சேன்!
ஆனா, இதை கண்டுப்பிடிக்கவே ரெண்டு வருஷம் ஆகிருக்கு! உங்க அப்பா கணக்கு பார்த்த லட்சணம் அப்படி!” என்று நக்கலடித்தவன்,
“இப்போவும் மதன் வந்து நோன்டலன்னா விஷயம் வெளில வந்துருக்காது!” என்றான்.
கௌசி, “ஆனா, ஏன் மாமா?” என்றாள்.
இலகுவாய் சொல்லிக்கொண்டிருந்தவன், சில நொடிகள் பேச்சற்று இருந்தான்.
“இந்த வீட்ல எனக்குன்னு உரிமையோ, மரியாதையோ எதுவுமே கிடைச்சது இல்லை! நீயும், உன் ஆத்தாவும் மட்டும் தான் எனக்குன்னு இருந்த ஆளுங்க! என்னை கவனிக்க, என்கிட்ட பேச, என்னை பார்க்கன்னு உங்க ரெண்டு பேரை விட்டா வேற யாருமே இல்ல எனக்கு!
திடீர்ன்னு ஒரே நாள்ல ரெண்டு பேருமே என்னை விட்டு போனா? நானும் மனுஷன் தானே? எனக்கும் வலிக்கும் ல” என்றான் மரத்துப்போன குரலில்.
இருவர் நடுவிலும் இருந்த இடைவெளியை குறைத்து அவனை நெருங்கி வந்து தோளில் சாய்ந்துக்கொண்டாள் கௌசி. வேறெதுவும் பேசவில்லை.
அப்படியே சில நேரம் இருக்க, மனோகருக்கு அவள் மீண்டும் சோகக்கடலில் மூழ்கிவிடுவாளோ என்றச்சம் உண்டாக,
“அவ்ளோதானா உன் கேள்வி எல்லாம்?” என்றான்.
“அந்த காசை என்ன செஞ்சீங்க? அதுல தான் இப்போ பேக்டரி ஆரம்பிச்சுருக்கீங்களா?” என்றாள்.
“ஓ…!!!” என ராகம் போட்டவள், “ஏன் மாமா? ஒருவேளை நான் அம்மா தூக்கி வீசுன தாலியை எடுத்து கழுத்துல மாட்டிக்காம இருந்துருந்தா நீங்க என்னை சேர்த்துருந்துருக்கவே மாட்டேங்கள்ள?” என்றாள்.
‘அப்படியே உண்மைதான்’ என்றில்லாவிடியும் அதற்கும் வாய்ப்புண்டு தானே?
பூசி மொழுகவில்லை அவன்.
“உங்கப்பா உன் கழுத்துல தாலி கட்ட சொன்னப்போ என் மனசுல ஒண்ணுமே இல்ல… சந்தோஷம், வருத்தம் எதுவும் இல்லை! அதேமாறி உங்கம்மா அதை தூக்கி வீசுனப்போவும் பெருசா எந்த வருத்தமும் இல்ல! ஆனா, மனசு ஏதோ பண்ணுச்சு! ஒரு மாதிரி! அதை சொல்ல தெரியல!” என்றவன்,
“உனக்கும் எனக்கும் கல்யாணம் ஆச்சுங்குற நினைப்பெல்லாம் எனக்கு மனசுல எங்கயுமே இல்லை! அதை கல்யாணம்ன்னு கூட நான் நினைக்கல! அப்படி இருக்கப்போ ‘இதுக்கு என்ன அர்த்தம்?’ ன்னு அதை காட்டி கேட்டப்பாரு…….
யப்பாஆஆ!!!! செத்துப்போனவனுக்கு சி.பி.ஆர் குடுத்து பொழைக்க வச்ச மாறி ஒரு ஃபீல்… அப்படியே ஜிவ்வுன்னு இருந்துச்சு!!!” என்று சொல்ல, அவன் தோளில் இருந்து நிமிர்ந்தவள் கோபமாய் முறைத்தாள்.
“நல்லா தானே பேசுறேன்… ஏன் முறைக்குற? ஓ!!! ஒருவேளை வெட்கமா?” என்றவனது தோளில் பட்’பட்டென அடித்தவள்,
“அப்பறம் எதுக்கு என்னை வேண்டாம், சரி வராதுன்னு அலைய விட்டீங்க?” என்றாள் விறைப்பாய்.
புன்னகை ஒன்றை சிந்தியவன், “நம்ம விருப்பம் மட்டும் போதாதுடா! குடும்பத்துல எல்லாரும் ஒத்துக்கணும்! முக்கியமா உங்க அம்மா! அவங்க சரின்னு சொல்லுவாங்கன்னு எனக்கு தோணல! அதான் வேண்டாம்ன்னு சொன்னேன்!
ஆனா, அதுக்கு பிறகு என்னால முடியல! சும்மா சும்மா உன் நினைப்பு தான்! அதுலயும் அந்த ‘ரெண்டு நாள்’…. உப்ப்ப்ப்….” காற்றை ஊதி தள்ளினான்.
“என்னாச்சு? அந்த ரெண்டு நாள்?” விடவில்லை அவள்.
போலியாய் முறைத்தவன், “எல்லாமே வாயால சொல்லனுமா? நான் இவ்ளோ பேசுனதே பெருசு!!” என்று சொல்ல, ‘அதுவும் உண்மைதான்!’ என்று அதற்குமேல் நோண்டவில்லை அவள்.
ஆனால், அவனோ, “நெக்ஸ்ட்டு?” என்று கேட்க, ‘அடுத்து என்ன கேட்கலாம்?’ என்று சிந்தித்தவளுக்கு, ‘அந்த’ ஒன்றை தவிர வேறு தோன்றவில்லை.
“ஏதோ யோசிக்குறியே!? கேளுடா!”
தயங்கிக்கொண்டே, “மாமா? அந்த ஹரியை… அவனை எதுக்கு நீங்க போய் பார்த்து பேசணும்? அடிச்சதே போதும் தானே?” என்றாள்.
அவள் எதை கேட்கிறாள் என்று புரிந்தது அவனுக்கு.
“நான் ஏன் பாத்தேன்னு தெரியனுமா? இல்ல என்ன சொன்னேன்னு தெரியனுமா?”
“ரெண்டும் தான்!”
“அந்த அடி வாங்குனதுக்கு பிறகு அவன் நீ இருக்க திசைக்கே வரமாட்டான்னு எனக்கு தெரியும்! ஆனாலும் போய் பாத்தேன்! எதுக்கு தெரியுமா?” என்றவன், அவள் ஆர்வ முகத்தை ஆசையாய் பார்த்துக்கொண்டே,
“தாலி அவன் காசுல தானே வாங்கிருப்பான்? அது எனக்கு புடிக்கல! என்னதான் நான் கட்டி, அதை உங்கம்மா தூக்கி போட்டுட்டாங்கன்னாலும்……. ம்ச்… எனக்கு என்னவோ அவன் காசல வாங்குனது மனசுக்கு பிடிக்கல! அதான் காசை குடுத்துட்டு, அப்படியே ‘நீ என் பொண்டாட்டி’ன்னு சொல்லிட்டு வந்தேன்!” என்றான்.
பதில் சொல்லாமல், ஏதோ பாடலை முனகிக்கொண்டே ராகம் போட்டவன், “ரொம்ப இருட்டிடுச்சுல?” என்றான்.
“ம்ம்ம்… நைட் எட்டு மணிக்கு இருட்டா தானே இருக்கும்?” அவள் சொன்னதும்,
“அச்சச்சோ… எட்டு மணிக்கெல்லாம் இப்படி தனியா உட்காந்து பேசுறது எவ்ளோ பெரிய தப்பு தெரியுமா? எழுந்துரி… எழுந்துரி… வா!!!” என அவள் மறுக்க மறுக்க கேட்காமல் கரம் பிடித்து வீட்டுக்குள் இழுத்து சென்றுவிட்டான்.
பிறகு நேரம் எட்டை தாண்டியபோது, ஏற்கனவே மனோகரன் சொல்லிவைத்ததை போல, மனோகரின் வீட்டுக்கு இருவரும் போவது என முடிவானது.
காரை வேண்டாம் என சொல்லிவிட்டு தன் பைக்கிலேயே அவளை அழைத்து செல்வதாய் சொல்லிவிட்டான்.
திருமணதிற்கு என்று சீதனம் கொடுக்க அன்பழகன் நாளை வருவதாய் சொன்னதும், மனோ மறுக்காமல் ‘சரி!’ என்று சொல்ல, அவனை முறைத்தாள் கௌசி.
பைக்கில் ஏறியவள் வெகு நேரம் பேசாமலே வர, “யாராவது இருக்கீங்களா? ஐயோ இருட்டா இருக்குதே!! பயமா இருக்குதே!” என்றவன், வண்டியை காட்டுப்போக்கில் வளைக்க, அவனை இறுக்கி பிடித்துக்கொண்டவள்,
அவள் ஒன்றும் சொல்லாமல் இருக்க, “சீதனம் வேண்டாம்ன்னு சொல்லாம குடுக்க சொல்லிட்டேன்னு தானே கோவம்?” என்று சரியாய் அவளது கோப நாடியை பிடித்தான் அவன்.
அதைக்கண்டு வியப்பானாலும் காட்டிக்கொள்ளாது அவள் அமைதி காக்க, “பொண்ணுக்கு அப்பா செய்யுறாரு! அதை நான் எதுக்கு வேண்டாம்ன்னு சொல்லணும்?” என்றவன்,
“ஏற்கனவே நான் பைனான்ஸ்ல எடுத்த அஞ்சு லட்சத்தை திருப்பி கொடுத்துட்டேன்னு வருத்தத்துல இருக்காரு உங்கப்பா! இதுல சீதனமும் வேண்டாம்ன்னு சொல்லிட்டா அழுதுடுவாரு” என்றான்.
அப்போதும் ‘உம்மென்று’ இருந்தாள் அவள்.
“நீ சொல்லிடு உங்கப்பா கிட்ட! எனக்கு எதுவும் வேண்டாம்… எனக்கு என் மாமா மட்டும் போதும்ன்னு நீ சொல்லிடு!!!” பின்னால் இருந்தவள் மேல் சாய்ந்துக்கொண்டு பிதற்றலாய் மொழிந்தான்.
அவன் உரசலும் கொஞ்சலும் விளங்க கடினப்பட்டு உதடுகளை இழுத்துப்பிடித்து வைத்திருந்தாள் அவள்.
“எங்க அக்காவுக்கு நாங்க செஞ்சதெல்லாம் திருப்பியா குடுத்தானுங்க? அப்படியே அபேஸ் பண்ணிட்டாங்க! உங்கப்பா வச்சுருக்க அம்பாசிடர் காரு! யாரு குடுத்தது? எல்லாம் என் அப்பா காசு! உன் வழில திருப்பி வாங்குனாதான் உண்டு!!! நீ என்னடான்னா….? என்னமா நீங்க இப்…..படி பண்றீங்களேம்மா!!!” ஏற்ற இறக்கங்களோடு அவன் பேசிய வசனத்தில் தன் கட்டுப்பாடு கைகொடுக்காது போய்விட இரவின் அந்தகாரத்தில் கலகலவென சிரித்தாள் அவள்.
மனோகரின் வீட்டில் அவர்களை வரவேற்க யாரும் இல்லை!
அவர்களே கதவை திறந்துக்கொண்டு உள்ளே சென்றனர். திடீரென ஆளில்லாத வீட்டுக்குள் விடப்பட்டதும் காரணமற்ற லேசான பதற்றம் இருவருக்குள்ளும்…
சாமி மாடத்தில் விளகேற்றியவள், தெய்வங்களாய் புகைப்பட சட்டத்தில் இருந்த மனோகரின் சொந்தங்களை வணங்கினாள்.
அதற்குமேல் என்ன செய்வது என்று தெரியவில்லை.
நேரிடையாய் அறைக்குள் நுழைய அவளுக்கு தயக்கம்!!!
“மச்சு’ல கொஞ்ச நேரம் நிக்கலாமா?” என்றாள்.
பின்னே அவனோடு மாடிக்கு சென்று அந்த குளிர்க்காற்றில் தூரத்து மின்விளக்கை அதிசயம் போல அவள் பார்த்துக்கொண்டு நின்ற கோலம், அவன் கண்ணுக்கு அவள் மட்டுமே அதிசயமாய்!!!
யார் முதலில் பேசுவது? என்ன பேசுவது? எப்படி ஆரம்பிப்பது? கண்ணுக்கு புலப்படாத ஏகப்பட்ட தடைகள்!
அதை உடைத்து போடவெனவே அழைத்தது அலைபேசி.
மனோகரிடம் கொடுத்து வைத்திருந்த தன் அலைபேசியை வாங்கி பார்க்க, ‘மீனா’ என்று ஒளிர்ந்தது.
“கல்யாணத்துக்கு கூட வராதவங்க எதுக்கு போன் பண்றீங்க?” எடுத்த எடுப்பில் கேட்டாள் கௌசி.
கேள்வி கேட்டாலே சிரித்து மழுப்பும் ஆளா தன்னிடம் கேள்வி கேட்பது ஒரு நொடி ஆச்சர்யப்பட்ட மீனா, ‘சொந்தத்தில் ஒரு இழப்பு என்பதால் வரமுடியாததை’ சொல்லி சமாதனப்படுத்த, அரைகுறையாய் சமாதானம் ஆனாள் கௌசி.
“சரி, எனக்கு கல்யாண சாப்பாடு எங்க?”
“நேர்ல வராதவங்களுக்கு சாப்பாடு கிடையாது!!”
“உன்கிட்ட யார் கேட்டா? நீ என் அண்ணன் கிட்ட குடு… நான் பேசிக்குறேன்!” என்றுவிட்டாள் மீனா.
கௌசிக்கு புரிந்துப்போனது. முதலில் தன்னிடம் பேச முயன்ற மீனாவை தான் கண்டுக்கொள்ளாது போக அவளும் தள்ளி சென்றுவிட்டாள். ஆனால், சில நாட்களில் தான் எவ்வளவு தவிர்த்தும் விடாமல் தன்னிடம் பேசி பேசி நட்ப்பானவளை அப்போது சந்தேகிக்க தோன்றவில்லை என்றாலும், இப்போது எல்லாம் புரிந்துபோனது.
“ஊருல இருக்க எல்லார்க்கிட்டையும் பேசிருக்கீங்க! என்கிட்ட பேச முடியல!” கண்ணை கசக்கப்போக,
“கரு கரு விழிகளால் கயல்விழி கொல்கிறாள்…
வலித்தாலும் ஏதோ சுகம்!!!” அவள் கரங்களை தன்னோடு சேர்த்து சிறைப்பிடித்தபடி அவன் பாட,
“சும்மா எதாவது சொல்லி மழுப்பாதீங்க” என்று மூக்கை உறிஞ்சினாள் அவள்.
“குழிவிழும் கன்னத்தில் குடியிரு என்கிறாள்…
விலையில்லா ஆயுள் வரம்…” உல்லாசமாய் அவன் பாடிக்கொண்டிருக்க,
“உங்களுக்கு என்மேல ஆசையே இல்லை! எனக்கு தெரியும்!” என்று பிதற்றினாள் பேதை.
ஒற்றை கையால் அவளை சுற்றி வளைத்தவன், அவள் கீழுதட்டை இருவிரல்களால் நிமிண்டி இழுத்து,
“எனக்கே தெரியாம உன்னை லவ் பண்ணிருக்கேன்! அதைக்கண்டுப்பிடிச்சு ஏதாவது கவனிப்போம்ன்னு அறிவு இல்லை! ஆ’வூன்னா கண்ணை கசக்கிக்கிட்டு!” என்று அவன் சொன்னதும் தான் கௌசி தலையில் பல்ப் எரிந்தது.
அதன் பலனாய் அவள் முகம் மத்தாப்பாய் பூத்து இருக்க, உதடுகளை விட்டவன், இருகையாலும் வளைத்து அணைத்தான்.
“அப்பறம்?”
“என்ன அப்பறம்?”
“ப்ச்… அப்….பறம்?”
கௌசி, “அப்பறம்’ன்னா அப்பறம் என்ன?”
“நைட் தூங்கனும்ன்னு சொன்னியே? தூக்கம் வருதா?”
விஷமமாய் கேட்டவனின் உள்ளர்த்தம் விளங்க, “இல்லை” என தலையாட்டினாள் எங்கோ பார்த்து.
“ஓ! அப்போ என்ன பண்ணலாம்?”
கௌசி, “ஒன்னும் பண்ண வேணாம்”
“இங்க பாரு… ஏற்கனவே வயசாகிடுச்சு!!!” என்றதும், “ஆங்? யாருக்கு?” என்று முறைத்தாள் பெண்.
“எனக்கு ம்மா… எனக்கு…” என்றவன்,
“அதனால….” என்று இழுக்க….
அவளும், “அதனால?” என்றாள் கேள்வியாய்.
“அதனால…..” என்றவன், அவளை அணைத்திருந்த கைகளுக்கு இன்னமும் வலு கொடுக்க, அவனுக்குள் ஒடுங்கிவிடுவதை போல நெருங்கி வந்து அவனோடு ஒட்டிக்கொண்டாள்.
மூக்கும் மூக்கும் உரசிக்கொள்ளும் அளவு நெருக்கம்!
எதையோ எதிர்ப்பார்த்து அவள் கண்மூடி சாய, அவள் எதிர்ப்பார்ப்பை பொய்க்காது அவனும் அவள் அதரங்களின் ஆதி அந்தத்தில் தன்னை ஒட்ட வைக்கப்போக, நூலிழை நெருக்கத்தில் ஜில்லென தெளித்தது ஒரு துளி நீர்!!!