தென்றலிடம் பேசி முடித்தவன் இப்போது இரண்டாம் தளத்தை அடைந்து முகப்பில் வந்து நின்று பார்க்க மழை பெய்து கொண்டிருந்தது. உதயன் ராணிபேட்டையை அடைந்த போதே மேகமூட்டமாக இருந்தது தென்றலின் அழைப்பை ஏற்ற போதுலேசான தூறலாகஆரம்பித்து இப்போது வலுபெற்றிருந்தது.
வேலையாட்கள் கட்டுமான பொருட்களை மழையில் படாதவாறு எடுத்து அறையினுள் எடுத்து வைத்து கொண்டிருக்க உதய்க்கு தொடர் அழைப்புகள் வந்த நிலையில் மழையில் கிளம்ப பார்த்தான்.. ஆனால் அர்விந்த் உட்பட அங்கிருந்தவர்கள் “புது மாப்பிள்ளை அவசரம் வேண்டாம் மழை நின்ன பிறகு கிளம்புங்க” என்றதில் ஷோரூமிற்கு அழைத்து பேசியவன் ராகவனுக்கும் பேசிவிட்டு மீண்டும் முகப்பில் நின்று இருகரங்களையும் மார்பின் குறுக்கே கோர்த்து கொண்டு மழையை ரசிக்கஉதயனுக்கு தந்தையிடம் இருந்து அழைப்பு.
“சொல்லுங்கப்பா”
“வேலையெல்லாம் எப்படி போயிட்டிருக்கு உதய் சொன்ன தேதியில் முடிச்சிடுவாங்க தானே..? மார்பிள்ஸ்க்கானகொட்டேஷன் உனக்கு அனுப்பி இருந்தேனே பார்த்துட்டியா..?”
“ஹ்ம்ம் பார்த்துட்டேன் ப்பா, நீங்க ஜூவலரி ஷாப்ல இருந்து கிளம்பிட்டீங்களா..?“
“மருமகளுக்கு நீ ஏதாவது தனியா கிஃப்ட் பண்ற ஐடியா இருக்கா..? கலெக்ஷன்ஸ்நிறைய இருக்குஉனக்கு தேவைன்னா பிக்சர்ஸ் அனுப்பட்டா..”
“இல்லப்பா நீங்க எடுங்க நான் நேர்ல வந்து பார்த்துக்குறேன்”
“என்ன சத்தம் உதய் அங்க..! மழையா..?”
“ஆமாப்பா வந்த வேலை முடிஞ்சது கிளம்பலாம்னா மழை ஆரம்பிச்சுடுச்சு..? குறைஞ்சதும் வந்துடுறேன்..”என்றஉதயனின் பார்வையோபூஞ்சிதறலாக உருமாற்றம் பெற்றிருந்த மழையினூடேஎதிரில் வண்ண விளக்குகளால் ஜொலித்த வளையல் கடையின் மீது பதிந்திருந்தது.
இத்தனை மாதங்களாக வந்திருக்கிறான் ஆனால் அப்போதெல்லாம் இல்லாது இன்று அக்கடையில் பொருத்தபட்டிருந்த அலங்கார விளக்குகளின் உதவியில் கண்ணை பறித்த கண்ணாடி வளையல்கள் அவன் கவனத்தை ஈர்த்திருந்ததுஉடன் தளிரின் நினைவும்.
பின்னே பெற்றோர் ஆசிரியர் சந்திப்பில் தளிரை சந்தித்தவனின் கவனத்தை முதலில் பெற்றது என்னவோ அன்று மெல்லிய கரையிட்ட பச்சை வர்ண புடவைக்கு தோதாக அவள் அணிந்திருந்த கண்ணாடி வளையல்கள் தான்.. அதுவும் கழுத்திலும் காதிலும் அதிக கனமில்லாததாகமெல்லியசங்கிலியும்காதோடுஉறவாடியசிறுஜிமிக்கியும்அணிந்திருந்தவள் கைகளில் மட்டும் குறைந்தது அரை டஜன் வளையல் அணிந்திருந்தாள். அதை கண்டதும்அவனுக்கு பெரும் ஆச்சர்யம்.
பின்னே அவன் அன்னை அக்கா தங்கைகள் யாருமே பெரும்பாலும் கண்ணாடி வளையல்கள் அணிந்து பார்த்ததில்லை.. தங்க வளையல்கள் அல்லது ப்ரேஸ்லெட் கைகடிகாரம் என்றே இருப்பவர்களை பார்த்து பழக்கபட்டவனை கொள்ளைகொண்டதே அவளணிந்திருந்த வளையல்கள் தான்.. அதன் பின்னர் அவளுடனான சந்திப்புகளிலும் அவன் பார்வை தவறாமல் அவள் கைகளில் கவனம் கொள்ளும்.
தென்றலிடம் தளிரின் பிடித்தத்தை கேட்ட போது புத்தகத்தை தவிர்த்து அவள் ஆர்வத்தோடு வாங்கும் ஒரே பொருள் கண்ணாடி வளையல்கள் தான் என்றிருந்தாள்.
நிச்சயத்தின் போது தேவதையாய் ஜொலித்தவளின் கைகளை நிறைத்திருந்தது என்னவோ தங்கத்திற்கு பதிலாக கண்ணாடி வளையல்கள் தான்.. அன்று நிச்சயம் முடித்து தன்அக்கா தங்கைகளின் கலாட்டாவில் அவனுக்கு ஊட்டிவிட வந்தவளின் விரல்களை முந்திக்கொண்டு அவன் அதரங்களை தீண்டியதும் அவள் வளையல்களே..!!
ஆம் நிச்சயம் முடிந்து மணமக்களை ஒன்றாக சாப்பிட அமர்த்தியிருந்தனர். வைஷுவோடு தன் வகுப்புகுழந்தைகள் சிலரும்உடனிருக்க சுஜி, நிவி, தென்றல் அனைவரும் சேர்ந்து கேலி செய்ததில் யாரையும் பார்க்காமல் இலையை பார்த்தவாறே உதய்க்கு ஊட்ட முயன்றவளின் விரல்கள் அவன் முகத்தை தாண்டி செல்ல அவன் உதடுகளோடு உறவாடியது என்னவோ அவள் வளையல்கள் தான்.
‘அண்ணி யாருக்கு ஊட்டிட்டு இருக்கீங்க எங்கண்ணாவை பார்த்து ஊட்டுங்க’ என்று நிவி சொல்லி முடிக்கும்முன் யாருமறியாமல் தன் உதட்டோடு உறவாடிய அவள் வளையல்களில் உதய் முத்தமிட வளையலை தாண்டி ஊடுருவிய அவன் ஸ்பரிசத்தில் சிறு அதிர்வோடு அவனை பார்த்த தளிர் தன் கையை இழுத்துகொள்ள மீண்டும் அவனுக்கு இனிப்பை ஊட்டும்வரை சுற்றியிருந்தவர்கள் தளிரை விடவில்லை அத்தனை கலாட்டா செய்திருந்தனர்.
வைஷு வேறு பெரிய மனுஷியாக சுஜி நிவியை முந்திக்கொண்டு தளிரின் அருகே வந்து, ‘மாமி நானே என் தம்பிக்கு சிந்தாம ஊட்டிவிடுவேன், பார்த்து ஊட்டுங்க மாமா ட்ரெஸ் ஸ்பாயில் ஆகிடும் என்று அவள் கரத்தை சற்று பின்னே இழுத்தவள் எங்க மாமா வெரி குட் பாய்! என் தம்பி மாதிரி பேட் பாய் இல்லை’ என்று கூற தளிருக்கு ஒன்றும் புரியவில்லை.
“சம்டைம்ஸ் கௌஷிக் நான் ஊட்டி விடறப்போ என் கையை கடிச்சு வச்சுடுவான் ஆனா மாமா அப்படி செய்யமாட்டார் குட் பாய் நீங்க தைரியமா ஊட்டிவிடுங்க” என்று சொல்ல அன்றைய நாளின் நினைவில் எழுந்த புன்னகையோடு வளையல்களை பார்த்திருந்தவன் மழை குறையவுமே நேரே எதிரில் இருந்த கடைக்கு சென்றான்.
ரகரகமாய் அடுக்கபட்டிருந்த வளையல்களை கண்டவனுக்கு எதை வாங்குவது எதைவிடுவது என்ற நிலை.. அவர்கள் வளையல் சைஸ் என்னவென்று கேட்கவும் கைபேசியை திறந்து தளிரின் புகைப்படத்தை காண்பித்து ஓரளவு தோதான சைஸில் அவள் வழக்கமாக அணிவது போலவே பலநிறங்களில் கண்ணாடி வளையல்களை வாங்கி அதை அழகாக பேக் செய்து கொண்டவன் மறக்காமல் வைஷு மற்றும் தென்றலுக்கும் பரிசு வாங்கிக்கொண்டு வேலூர் திரும்பினான்.
*************************************
நகைக்கடையில் இருந்து வீடு திரும்பிய நிவியும் சுஜியும் நேரே அண்ணாமலை அன்னபூரணியின் அறைக்குள் நுழைந்தனர்.
“சாப்ட்டீங்களா தாத்தா.. நீங்க மாத்திரை எடுத்துட்டீங்களா பாட்டி..?” என்றவாறே சுஜி அவர்கள் மேஜையில் இருந்த மருந்த பெட்டியை ஆராய,
“எங்களுக்கு அதைவிட வேற என்ன வேலை இருந்துட போகுது எல்லாம் நேரமே முடிச்சுட்டு உன் தாத்தாவை கூட்டிட்டு காலாற நடந்துட்டு இதேதான் வந்தோம் நீங்க போன வேலை நல்லபடியா முடிஞ்சதா ராஜாத்தி”
“ஆச்சு பாட்டி இதோ பாருங்க இதெல்லாம் தளிருக்கு எடுத்தது இது எங்களோடது, இது வைஷுகுட்டிக்கு” என்று நிவேதா நகைகளை அவரிடம் கொடுக்க அனைத்தையும் பார்வையிட்டவர் கணவரிடமும் காண்பிக்க, “நல்லா இருக்கு சாமிகிட்ட வச்சு கும்பிட்டு எடுத்து உள்ள வைங்க… கூறைப்புடவை எடுக்க போகணுமே உங்க அத்தை சித்திங்களுக்கு எல்லாம் தகவல் சொல்லியாச்சா எத்தனை மணிக்கு கிளம்பறீங்க..?” என்றவருக்கு சுஜி பதிலளித்து கொண்டிருந்த அதேநேரம் தங்கள் அறையினுள் நுழைந்த கணவரிடம்,
“என்னங்க கல்யாணத்துக்கு இவ்ளோ நகை எடுக்கணும்னு அவசியமா..? பொதுவாவே மருமகளுக்கு அதிகபட்சம் பத்து சரவன் வைச்சுதான் பழக்கம் நீங்க என்கிட்டே ஒரு வார்த்தை கூட சொல்லாம இப்படி..” என்று முடிக்கும் முன்னமே,
“எப்படி..?” என்று சட்டையை கழற்றிக்கொண்டு கேட்டார் அம்பலவானன்.
“இல்லைங்க இது தகுதிக்கு மீறி..” என்று ஆரம்பித்துவிட்டாரே தவிர எப்படி முடிப்பது என்று தெரியாமல் ஜெகதீஸ்வரி விழித்து நிற்க,
“யாரோட தகுதியை சொல்ற ஈஸ்வரி..?” என்று கைலிக்கு மாறிய அம்பலவானன் இப்போது கட்டிலில் அமர்ந்து கொண்டு தீவிர குரலில் கேட்டிருந்தார்.
“…..”
கணவரின் கேள்விக்கு நேரடியாக பதில் சொல்லமுடியாமல் ஜெகதீஸ்வரி திண்டாடி கொண்டிருக்க அங்கே வந்த சுஜி அன்னையிடம் பையை கொடுத்து, “ம்மா நான் தான் சொன்னேனே தாத்தா பாட்டிக்கு எங்களோடது விட தளிர் நகை ரொம்ப பிடிச்சிருக்கு… எல்லாரோடதும் பார்த்துட்டாங்க நான் பாக்ஸ்ல வச்சுட்டேன் குட்டி பையனுக்கு எடுத்த நகைகளை மட்டும் அவருக்கு காட்டுறதுக்கு எடுத்துட்டு கிளம்புறேன் உள்ளே வச்சுடும்மா.. குட் நைட் ப்பா” என்று கிளம்பவும் கதவை சாற்றிவிட்டு வந்தார் ஜெகா.
“சொல்லு ஈஸ்வரி உன்னை தான் கேட்கிறான் ஒருவேளை இதே தளிர் இடத்துல வசதியான வீட்டு பெண் இருந்தா இதையெல்லாம் தகுதிக்கு மீறினது இல்லைன்னு சொல்லவரியா..?” என்ற அம்பலவானன் மனைவியை கூர்மையாக பார்த்தார்.
“கண்டிப்பா ! அவங்கெல்லாம் பிறந்ததுல இருந்தே தங்கமும் வைரமுமா வளர்ந்திருப்பாங்க அதோட அருமை தெரியும் ஆனா இந்த பொண்ணு அப்படியில்லையே.. நீங்க முடிவு பண்ணினதால ஏத்துகிட்டோம் எப்பவும் நீங்க சரியான முடிவு தான் எடுப்பீங்க ஆனா ஆதி கல்யாண விஷயத்துல நீங்க அவசரபட்டிருக்க கூடாதோன்னு ஒரு எண்ணம்.., என்ன இருந்தாலும் நம்ம குடும்பத்துக்குன்னு ஒரு ஸ்டேடஸ் இருக்கு..” என்ற மறுநொடியே,
“இதே ஸ்டேடஸ நான் பார்த்திருந்தா நீ எனக்கு பொண்டாட்டியாகியிருக்க மாட்ட ஈஸ்வரி” என்றதும் தூக்கிவாரி போட கணவரை பார்த்த ஜெகதீஷ்வரியின் கையிலிருந்த பை நழுவியது சட்டென அதை பிடித்து மெத்தையில் வைத்த அம்பலவாணன்,
“இத்தனை வருஷ வாழ்க்கைக்கு அப்புறம் இப்படி ஒரு வார்த்தை என் வாயிலிருந்து வர வச்ச பெருமை முழுக்க உன்னையே சேரும் .. நம்ம பையன் கல்யாணம் முடியறதுக்குள்ள இன்னும் எத்தனை பெருமையை தேடி தரபோறன்னு தெரியலை நீ சொல்ற ஸ்டேடஸ், பணம், நகையை விட மனுஷனுக்கு நிம்மதி முக்கியம்!! உன்னை கட்டிக்கிட்ட நாளில் இருந்து இந்த ரூமுக்கு வந்த உடனே நிம்மதியா தூங்கியிருக்கேன் ஆனா இனி அது வாய்க்குமான்னு தெரியலை” என்ற அம்பலவானனின் வார்த்தைகளில் கண்ணீர் உடைப்பெடுத்தது ஜெகதீஸ்வரிக்கு..
“என் பையனுக்கு எது நல்லதுன்னு எனக்கு தெரியும்.. அதேபோல தான் என் மருமகளுக்கும்.. உனக்கு நியாபகம் இருக்கா சுஜி நிவியோட கல்யாணத்துக்கும் நான் இப்படிதான் நகை எடுத்தேன் அப்போ இந்த கேள்வியை கேட்கலை இப்போ மட்டும் ஏன்..?” என்ற கணவரின் கேள்விக்கு அவரும் என்ன பதில் சொல்ல..?
“எப்படி நீ மகனையும் மருமகன்களையும் வித்யாசம் இல்லாம நடத்துறியோ அதேபோல தான் எனக்கும் மகள்கள் மருமளுக்கு இடையில எந்த வித்யாசமும் இல்ல” என்ற கணவரை மெளனமாக பார்ப்பதை தவிர ஜெகதீஸ்வரிக்கு வேறு வழியில்லாது போனது. பின்னே அவர்களது மூத்த மருமகன் அவர்களது சொந்தம் ராகவன் தன் மகனின் நண்பன் என்பதால் சிறுவயதில் இருந்தே அவன்மீது பிரியமுண்டு.. வேறு ஆளான ராகவனை மாப்பிள்ளையாக உதய் கொண்டு வந்த போது எதிர்ப்பு முழுக்க அண்ணாமலையிடமிருந்து தான் கிளம்பியது.
ஆனால் சிறுவயது முதலே பழகிய பிள்ளை மட்டுமல்லாது அவர்களது வசதிக்கு சற்றும் குறையாதவன் என்பதால் ஜெகதீஸ்வரி ராஜேஸ்வரிக்கு அதில் மட்டற்ற மகிழ்ச்சி.. அம்பலவானன் தந்தையை சம்மதிக்க பெரும் போராட்டமே நடத்திவிட்டார். இறுதியில் இதுபோல இன்னொரு நிகழ்வு தன் குடும்பத்தில் நடைபெறகூடாது தன் பேரனுக்கு அவர் தேர்ந்தெடுக்கும் பெண் தான் மருமகள் என்று தீர்மானமாக கூறிவிட்டார். கல்லூரிகாலம் தொட்டே தன் இலக்கில் தெளிவாக இருந்த உதயனுக்கும் பெரிதாக எந்த பெண்ணின் மீதும் ஆர்வம் இல்லாததால் தாத்தாவிடம் மனப்பூர்வமாக சம்மதம் தெரிவித்துவிட்டான்.
ஆனால் தளிரை கண்ட பின்னர் அவன் எண்ணம் மாற்றம் பெற அதை தந்தையிடம் தெரிவித்தவன் தளிரை அவர் பார்த்து வைத்த பெண்ணாக தாத்தாவிடம் கொண்டு சென்று அவர் சம்மதத்தோடு தளிரை கைபிடிக்கவிருக்கிறான். ஆனால் இது தந்தை மகனுக்கு மட்டுமே தெரிந்த இரகசியம் மற்றவர்களை பொறுத்தவரை தளிரை அம்பலவானன் தான் உதயாதித்தனுக்கு தேர்ந்தெடுத்ததாக நினைத்து கொண்டிருந்தனர்.
அன்று தங்கள் வசதிக்கு குறையவான இடத்தில் இருந்த ஜெகதீஸ்வரியின் குணத்தை பார்த்து மட்டுமே சம்மதம் தெரிவித்த அண்ணாமலை இப்போதும் தளிரின் குணத்தை கொண்டு மட்டுமே பேரனுக்கு தேர்ந்தெடுத்திருந்தார்.
“இல்லைங்க நான் சொல்ல வந்தது..” என்று ஜெகதீஸ்வரி தன்னை நியாபடுத்த முற்படவும்,
“எனக்கு எந்த விளக்கமும் வேண்டாம் ஈஸ்வரி ஆனா இன்னொருமுறை இந்த பேச்சை நீ எடுக்கும் பட்சத்தில் இந்த ரூம்குள்ள வரனுமான்னு நான் யோசிக்க வேண்டியிருக்கும்..” என்ற அம்பலவானன் பேச்சு முடிந்தது போல விளக்கணைத்து படுத்துவிட ஜெகதீஸ்வரி அசைவற்று போனார்.