“சார் நீங்க எங்களை அனுப்பி வைக்கப் போறிங்கன்னு பிகாரி சார் சொன்னது தான் மாயம்.. மேடம் முகம் அப்படியே மாறிப் போய்டுச்சு. எதுக்கு அப்படி மாறுச்சுன்னு இப்பத் தான் தெரியுது…!” என்றார் ஜெர்சி.
“அதெல்லாம் ஒண்ணுமில்லை..” என்றாள் கடுப்புடன்.
“ஒண்ணுமில்லை ஒண்ணுமில்லைன்னு சொல்லியே எங்களை ஒருவழியாக்கிட்டடி..” என்ற லோகா அவளைப் பார்த்து சிரித்து வைக்க, அவளை முறைத்து வைத்தாள் வர்ணிகா.
“நாங்க நிஜமாவே இந்த இடத்தை மிஸ் பண்ணுவோம் சார். என்ன ஒரு குறை.. எதையுமே பார்க்காம போறோம் அப்படின்றது தான்..” என்றாள் ஜெர்சி.
“எப்படியும் சார் இங்க தான் இருப்பாரு.. நம்ம வர்ணியும் இங்க தான் இருப்பா. அதனால நாம எப்ப வேணும்ன்னாலும் வரலாம். இல்லையா வர்ணி…?” என்றாள் லோகா.
“இல்லை..” என்றாள் வர்ணி சிரிக்காமல்.
“என்னடி பொசுக்குன்னு இப்படி சொல்லிட்ட..?” என்ற நண்பிகள் இருவரும் தலையில் கையை வைக்க,
“நானே முதல்ல இங்க இருக்கேனான்னு தெரியலை..” என்று மேம்போக்காய் சொன்னவள், வெற்றியைப் பார்க்க அவனின் முகமும் யோசனையில் தான் இருந்தது. அவன் என்ன யோசிக்கிறான் என்று அவளுக்குத் தெரியவில்லை.
அங்கே வர்ணிகாவின் வீட்டில், அப்படி ஒரு சந்தோஷத்துடன் பேசிக் கொண்டிருந்தார் வினிதா.
“நீ என்ன சொல்ற வினிதா..?” என்ற ராஜேஷிற்கு தான் அதிர்ச்சி.
“அட ஆமாங்க..! வர்ணி, மாப்பிள்ளைகிட்ட பேசி ஒரு முடிவுக்கு வந்துட்டாளாம். அவ பேசும் போது அவ குரல்ல அப்படி ஒரு சந்தோசம்…” என்றார் வினிதா.
“அப்போ அந்த பையன் வீட்டோட மாப்பிள்ளையா வர சம்மதம் சொல்லிட்டானா..?” என்றார் ராஜேஷ் யோசனையாக.
“அதுக்கெல்லாம் அவசியமே இல்லைங்க. மாப்பிள்ளையே இதுக்கு சம்மதம் சொன்னாலும் வர்ணி இதுக்கு சம்மதிக்க மாட்டேன்னு சொல்லிட்டா. நம்ம பொண்ணு எங்க இருந்தாலும் நல்லா இருந்தா அதுவே போதுங்க. அந்த பையன் நல்ல பையனா இருக்க போய் தான் இந்த விஷயத்துக்கு சம்மதம் சொல்லலை. இதேது வேற ஒரு பையனா இருந்திருந்தா, சொத்துக்கு ஆசைப் பட்டு கூட சரின்னு சொல்லியிருப்பாங்க..” என்றார் வினிதா.
“அப்பா, அக்காவுக்கு இவர் தான் பொருத்தமா இருப்பார். இப்ப நீங்க எதுக்கு தேவையில்லாம டைவேர்ஸ் பத்தி பேசுறிங்க. அதான் அக்காவே சமாதானம் ஆகிட்டாளே..” என்றாள் ஸ்ருதி.
“பெரியவங்க பேசும் போது உனக்கென்ன பேச்சு ஸ்ருதி..?” என்று கோபத்தை அவரிடம் காட்டினார் ராஜேஷ்.
“நான் வர்ணி கிட்ட பேசுறேன்..” என்றவர் அவளுக்கு போனில் அழைத்துக் கொண்டே அவருடைய அறைக்கு சென்றார். அவரை யோசனையுடன் பின் தொடர்ந்தார் வினிதா.
போனை யார் எடுத்தார்கள் என்பதை கவனிக்கக் கூட அவருக்கு பொறுமையில்லை.
“யாரைக் கேட்டு வர்ணி நீ இப்படி பண்ணிட்டு இருக்க..? நான் என்ன சொன்னேன் உன்கிட்ட..? டிவேர்ஸ் பேப்பர் அனுப்பினது.. அனுப்பினது தான். இப்ப திடீர்ன்னு என்ன புதுசா..? நான் சொன்னது எல்லாம் மறந்து போயிடுச்சா..?” என்றார் மிரட்டும் தொணியில்.
“ஹையோ மாமனாரே..நீங்க வர்ணின்னு நினைச்சு என்கிட்ட பேசிட்டு இருக்கீங்க. நீங்க சொன்ன எதுவுமே வர்ணி மறக்கலை. அதே சமயம் நானும் மறக்கலை. அப்பறம் ஒரு விஷயம்… வர்ணி உங்க வீட்டு பொண்ணெல்லாம் கிடையாது. அவ என்னோட பொண்டாட்டி. இந்த மிரட்டுற வேலை, உருட்டுற வேலையெல்லாம் இனி வச்சுக்காதிங்க.. சரியா..?” என்றான் வெற்றி.
“சிம்பிள்..! நீங்க ஜெயில்ல போய் களி திங்கணும் பரவாயில்லையா..?” என்றான் வெற்றி.
“நான் ஏண்டா ஜெயிலுக்குப் போகணும்…? என்ன மிரட்டிப் பார்க்குறியா..? யாரை யார் மிரட்டுறது..?” என்றார் ராஜேஷ்.
“சாட்சாத்.. உங்களைத் தான்… நான் தான் மிரட்டுறேன். உங்க மாமனாரை நீங்கதான் குளோஸ் பண்ணிங்கன்னு எனக்கு நல்லாவே தெரியும். அந்த ஒரு விஷயம் போதும் உங்களை உள்ள தள்ள..” என்றான் வெற்றி.
“ஆமா, நான் தான் போட்டுத் தள்ளுனேன். ஆனா, அதுக்கு எந்த ஆதாரமும் கிடையாது உன்கிட்ட…! என்னடா பண்ண முடியும் உன்னால..?” என்றார் ராஜேஷ்.
“ஆதாரம் இப்ப வரைக்கும் இல்லை. ஆனா, இப்போ நீங்க பேசுனது எல்லாமே ரெக்கார்ட் ஆகியிருக்கு.. இது ஒன்னு போதுமே..” என்றான் வெற்றி.
“அப்படியே கொஞ்சம் திரும்பிப் பின்னாடி பாருங்க..” என்றான் வெற்றி சிரித்தபடி.
அவர் திரும்பிப் பார்க்க அங்கே கோபத்துடன் நின்றிருந்தார் வினிதா. அவரை அங்கு பார்த்த ராஜேஷிற்கு போன் கையிலிருந்து நழுவப் பார்த்தது.
“வினிதா..!” என்று அவர் அதிர்ந்து போக,
“என் பேரை சொல்ற அருகதை கூட உங்களுக்குக் கிடையாது. இத்தனை நாள் உங்க நடிப்பை பார்த்து நான் ஏமாந்தது போதும். மாப்பிள்ளை சொன்னப்ப கூட நான் நம்பலை. ஆனா, இப்பத்தான தெரியுது உங்களோட உண்மையான முகம்…” என்று வினிதா அவரை கோபத்துடன் பேசிக் கொண்டிருக்க,
“எல்லா நேரத்துலயும் நல்லவளா இருக்குறது வர்ணிகாக்கு மட்டும் தான் செட்டாகும். அவ புருஷன் எனக்கெல்லாம் செட்டாகாது. பாம்புக்கு முதல்ல பல்லைப் பிடுங்கணும். அந்த வேலையை நான் சரியா செஞ்சுட்டேன். இனி வர்ணியை மிரட்டுற வேலையெல்லாம் வச்சுக்காதிங்க. அப்பறம் என்னோட சுயரூபத்தைப் பார்க்க வேண்டியது வரும்..” என்ற வெற்றி போனை வைத்து விட்டான்.
“எதுக்குங்க இப்படி பண்ணிங்க..?” என்றாள் வர்ணி.
“மிஸ்டர் ராஜேஷ் முதல்ல இருந்து இப்படியில்லை. இடையில தான் இப்படி மாறியிருக்காரு. இதுக்கு தீர்வு என்ன நடக்குதுன்னு உங்க அம்மாவுக்குத் தெரியனும். அதான் தெரியப்படுத்தினேன். இனியும் திருந்தலைன்னா, உங்கப்பா கண்டிப்பா ஜெயிலுக்குப் போவார்..” என்றான் வெற்றி கோபமாக.
“வினிதாம்மா மனசுடைஞ்சு போய்டுவாங்க..” என்றாள்.
“எனக்குத் தெரிஞ்ச வரைக்கும் அவங்க இப்பதான் ஸ்ட்ராங்கா இருக்காங்க..” என்றான் வெற்றி. அவன் சொல்வது உண்மைதான் என்பதைப் போல் அங்கு பேசிக் கொண்டிருந்தார் வினிதா.
“நான் சொல்றதைக் கேளு வினிதா..” என்று மன்றாடிக் கொண்டிருந்தார் ராஜேஷ்.
“இத்தனை நாள் உங்களை முழுசா நம்பினதுக்கு நீங்க செஞ்சதே போதும். வர்ணியை என் வயித்துல சுமக்கலைன்னாலும், அவ என் அண்ணனோட பொண்ணு. என்னோட ரத்தம். அவளை நீங்க என்ன பாடு படுத்தியிருந்தா அவ இப்படி வாழ்க்கையை வெறுத்திருப்பா. சொத்து தான் வேணும்ன்னு நேரா கேட்டிருந்தா அவளே குடுத்திருப்பா.. அதை விட்டுட்டு, கண்டிஷன் கல்யாணம்.. அது இதுன்னு அவ வாழ்க்கையவே சீரழிக்கப் பார்த்திங்களே. அந்த பையன் நல்ல பையனா இருக்க போய், தப்பா எதுவும் நடக்கலை..இனி உங்களுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எங்களுக்கு நீங்க தேவையில்லை..” என்றார் வினிதா ஒரேயடியாக.
“என்ன வினிதா..? இப்படி பேசுற..? இதையெல்லாம் நான் யாருக்காக செஞ்சேன்..? உனக்காகவும், நம்ம பொண்ணுக்காகவும் தான..?” என்றார் மன்றாடும் குரலில்.
“அதுக்கு நீங்க உழைச்சு சேர்த்திருக்கணும். இப்படி அடிச்சுப் பிடுங்கி சேர்க்க கூடாது. அதைக் கூட நான் மன்னிச்சுடுவேன், ஆனா, என்னோட அப்பாவையே கொலை பண்ணியிருக்கிங்க. அதை என்னால எந்த காலத்துலயும் மன்னிக்க முடியாது… டைவேர்ஸ் நோட்டிஸ், டைவேர்ஸ் நோட்டிஸ்ன்னு பாடா பட்டிங்கல்ல.. இப்ப சொல்றேன், விவாகரத்து ஆகப் போறது உங்களுக்கும் எனக்கும் தான். என் பொண்ணுக்கில்லை..” என்றார் ஒரே போடாய்.
“வினிதா..! இந்த ஒரு தடவை என்னை மன்னிச்சுடு. இனி நான் அப்படி நடந்துக்க மாட்டேன். வர்ணி வேணும்ன்னா அந்த பையன் கூடவே வாழட்டும்..” என்றார் ராஜேஷ்.
“அதை நீங்க என்ன சொல்றது..? அவ வாழ்க்கையை தீர்மானிக்கிறதுக்கு நீங்க யாரு..? நான் யாரு..?என் அப்பாவைக் கொன்ன கொலைகாரன் நீ. எனக்கு நீ தேவையில்லை. என்னோட பொண்ணுக்கும் இப்படி ஒரு கொலைகார அப்பா தேவையில்லை..” என்றார் வினிதா.
“என்னடி..? விட்டா ரொம்ப ஓவரா பேசிட்டு போற..? உங்கப்பனைக் கொன்ன எனக்கு.. உன்னைய போட்டுத் தள்ள எவ்வளவு நேரம் ஆகும்..?” என்றார் ராஜேஷ்.
“பார்த்தியா, இவ்வளவு நடந்தும் உன் புத்தி உன்னை விட்டு போகலை பார்த்தியா..? நீயெல்லாம் எப்பவுமே திருந்தமாட்ட. உனக்கு வாய்ப்பு குடுத்தா, எங்களை மாதிரி முட்டாள் யாரும் இருக்க முடியாது..” என்றார் வினிதா.
“பார்த்துக்கிறேன்டி உங்களை..” என்று கோபமாக பேசிவிட்டு சென்று விட்டார் ராஜேஷ்.
“டாடி எதுக்குமா கோபமா போறார்..?” என்றாள் ஸ்ருதி.
“அவரைப் பத்தி எல்லாமே தெரிஞ்சிடுச்சுன்னு கோபமா போறார். போகட்டும் விடு. இப்படி ஒரு மனுஷனை எனக்கு புருஷன்னு சொல்லவே அசிங்கமா இருக்கு..” என்றார் வினிதா. அவர் சென்ற அடுத்த இரண்டு மணி நேரத்தில் அவருக்கு போன் வர, பதட்டத்துடன் சென்றார் வினிதா.
அங்கே காட்டில் இருள் சூழ்ந்த அந்த இரவு நேரத்தில், வெற்றிக்காக காத்திருந்தாள் வர்ணிகா. வேலை இருப்பதாக கூறி சென்றவன், இருட்டிய பிறகும் வராமல் இருப்பது கண்டு அவளுக்கு பயம் தோற்றிக் கொண்டது.
“சார் வந்திடுவார். நீ ஏன் இப்படி பதட்டமாவே இருக்க..? என்றாள் ஜெர்சி.
“அதெல்லாம் ஒண்ணுமில்லை..” என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே வந்துவிட்டான் வெற்றி.
“இந்த நேரத்துல எங்க போனிங்க வெற்றி…?” என்றாள் எடுத்த எடுப்பில்.
“ஹேய்..! நான் என்ன இங்க தங்கி வேடிக்கைப் பார்க்க வந்தவன்னு நினைச்சியா..? இது என்னோட கண்ட்ரோல்ல இருக்குற பகுதி. இங்க என்ன நடந்தாலும் அதுக்கு நான் தான் பொறுப்பு. வேலையை செய்ய வேண்டாமா..? பக்கத்துல நிறைய மலைக் கிராமங்கள் இருக்கு. விடாம மழை பெய்ததால, நிறைய ரோடு பிளாக் ஆகியிருக்கு. இப்போ எல்லாமே கிளியர் ஆகிடுச்சு… அதான் கொஞ்சம் லேட்..” என்றான் வெற்றி.
“இவ தான் சார் பயந்து கிட்டே இருந்தா..” என்றாள் லோகா.
“வர்ணி நாங்க வேணும்ன்னா, அவங்களோட போய் தூங்கவா..?” என்றனர் இருவரும் குறும்புப் புன்னகையுடன்.
“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். காலையில எல்லாரும் கிளம்புறிங்க. நீங்க எப்பவும் போல இங்கயே இருங்க. எப்பவும் போல ரூம்லயே தூங்குங்க…” என்றான் வெற்றி.
“என்ன சொல்லு வர்ணி..! ஹீரோ சார் ஹீரோ தான். பாரு கிடைக்கிற கேப்ல எல்லாம் எப்படி ஸ்கோர் பன்றாருன்னு..” என்றார் லோகா.
ஜெர்சியும், லோகாவும் அறைக்குள் சென்று விட,
“வர்ணி..” என்றான்.
“ஆங்..” என்றாள் ஏதோ யோசனையில் இருந்தபடி.
“உங்க டாடிக்கு சின்னதா ஒரு ஆக்சிடென்ட்டாம். ஒரு காலும், ஒரு கையும் அடி வாங்கியிருக்கிறதா தகவல்..” என்றான் ஏதோ செய்தி சொல்லுவதைப் போல.
“அச்சோ என்னங்க சொல்றிங்க..? எப்படி நடத்தது..? எப்ப நடந்தது..?” என்று பதட்டமாய் கேட்டுக் கொண்டிருந்தவள், அவன் எப்போதும் போல் பதட்டமில்லாமல் இருப்பதைப் பார்த்து,
“உண்மையை சொல்லுங்க.. இதுல வேற ஏதாவது விஷயம் இருக்கா..?” என்றாள் கோபத்துடன்.
“ஆமா, இருக்கு..! நான் தான் தட்டிவிட சொன்னேன்..! அந்த காரை லைட்டா தான் தட்டி விட்டாணுக. அதுக்கே கை, கால் பஞ்சாயத்து…” என்றான் சாவகாசமாய்.
“ இப்படி சொல்றிங்க..?இப்ப இப்படி பண்ணினதால அவருக்கும் உங்களுக்கும் என்ன வித்யாசம்..? நீங்க இப்படி செய்வீங்கன்னு தெரிஞ்சிருந்தா, நான் உங்ககிட்ட எதையுமே சொல்லியிருக்க மாட்டேன்..!” என்றாள் அழுகையுடன்.
வினிதா அவனிடம் பேசிய அனைத்தையும் வர்ணியிடம் சொன்னவன்,
“அவங்க மொத்தமா பிரியறதுக்கு இது எவ்வளவோ மேல். முடியாம இருக்கும் போது தான்.. ஒவ்வொன்னுக்கும் மனைவியோட உதவியை எதிர்பார்க்கிறப்போ தான்.. உங்க டாடியோட ஆணவம் கொஞ்சமாவது அடங்கும். வாழ்க்கையில பணம், சொத்து சுகம் எதுவும் அந்த நேரத்துக்கு உதவாது. பொண்டாட்டி, பிள்ளைங்க தான் கூட இருப்பாங்கன்றது புரியும். ரெண்டு பேரும் பிரியவும் மாட்டாங்க. தண்டனை குடுத்த மாதிரியும் ஆச்சு. நீ நினைச்ச மாதிரி உங்க வினிதாம்மா மனசு கஷ்ட்டப்படாமயும் இருக்கும். என்னதான் அவரைப் பேசி அனுப்பிட்டாலும், அவங்க மனசுல நீங்காத ரணமா அந்த விஷயம் இருந்துகிட்டே இருக்கும். அந்த ரணத்தை ஏன் அவங்களுக்குக் குடுக்கணும். அதான் இப்படி பண்ணேன்..” என்றான் வெற்றி.
“நீங்க என்ன சொன்னாலும் இதை என்னால ஏத்துக்கவே முடியாது..” என்றாள் வர்ணிகா.
“இப்ப என்ன செஞ்சிருக்கனும்ன்னு சொல்ற..? உங்கப்பாவை உள்ள தள்ளியிருக்கனுமா..? இல்லை உங்கம்மா அவரை டைவேர்ஸ் பண்ணியிருக்கனுமா..? இதுனால யாருக்கு என்ன பிரயோஜனம்..? அவர் ஆரம்பத்துல இருந்து இப்படி இல்லை. அவர் இப்படி ஆனதுக்கு உங்க வீட்ல இருந்தவங்களும் ஒரு காரணமா இருந்திருக்கலாம். பார்ப்போம் என்ன நடக்குதுன்னு..?” என்றான்.
“இதை வினிதாம்மா கிட்ட சொல்லாமையே செஞ்சிருக்கலாம். கண்டிப்பா அவங்க அவரை இனி ஏத்துக்க மாட்டாங்க..” என்றாள் வர்ணிகா கவலையுடன்.
“அதெல்லாம் அவங்க தான் ஹாஸ்பிட்டல்ல கூட இருக்காங்க. அவங்களுக்கு அவரை மன்னிக்கவும் மனசில்லை. அதே சமயம் விட்டு விலகவும் மனசில்லை. அது தான் உண்மை. சொத்து உன்பேர்ல இருக்குற வரைக்கும் தான் இந்த பிரச்சனை கூட. அதுல பாதிய ஸ்ருதி பேர்ல எழுதி வச்சுட்டா, எல்லா பிரச்சனையும் முடிஞ்சுடும். எனக்கு நீ மொத்தத்தையும் எழுதிக் குடுத்தாலும் ஆட்சேபனை இல்லை. எனக்குத் தேவை நீதான். உன்னோட சொத்து இல்லை. இது மிஸ்டர் ராஜேஷ்க்கு ஒரு வாய்ப்பு. திருந்துனா அவர் வாழ்க்கை வீட்டில் . இல்லைன்னா, ஜெயில்ல! அவ்வளவு தான். உனக்காக யோசிச்சு தான் இந்த அளவோட நிறுத்துனேன். வெற்றியா யோசிச்சிருந்தா, அது வேற மாதிரி இருந்திருக்கும்..” என்றான் வெற்றி.
“ம்ம்ம்!” என்றாள்.
“நீ போய் தூங்கு வர்ணி. காலையில கிளம்பனும் தான..” என்றான்.
“நானுமா..?” என்றாள் பரிதவிப்புடன்.
“அவங்களோட நீயும் தான் கிளம்புற..!” என்றவன், அந்த அறையிலேயே படுத்துவிட்டான்.
அறைக்குள் சென்றவளுக்கு தூக்கம் என்பது துளியுமில்லை. எப்படி படுத்துப் பார்த்தாலும் தூக்கம் வருவேனா என்று அடம் பிடித்தது. லோகாவும், ஜெர்சியும் நல்ல உறக்கத்தில் இருக்க, மெதுவாக வெளியே வந்து எட்டிப் பார்த்தாள். வெற்றியும் நல்ல உறக்கத்தில் இருந்தான்.
“எனக்கு தான் தூக்கம் வரலை. இவன் இங்க நல்லா தூங்கிட்டு இருக்கான்…” என்று முனங்கியவள்.
“எல்லாம் என் நேரம்..” என்று திரும்பவும் உள்ளே சென்று விட்டாள். அதுவரை கண்களை மூடியிருந்த வெற்றி, அவள் சென்ற பிறகு தனக்குத் தானே சிரித்துக் கொண்டான். அந்த சிரிப்பில் தான் எத்தனை நிம்மதி. அதே சிரிப்புடன் மறுபடியும் தூங்கிப் போனான்.
மறுநாள்..!
அனைவரும் மனமேயில்லாமல் கிளம்பிக் கொண்டிருந்தனர். ஆண்கள் அனைவரும் ஒரு ஜீப்பில் ஏறிக் கொள்ள, இவர்களுக்கு அவனுடைய ஜீப்பையே எடுத்தான். வர்ணிக்கு அங்கிருந்து கிளம்பவே மனமில்லை. முகத்தை தூக்கிக் வைத்துக் கொண்டு தான் கிளம்பியிருந்தாள்.
“உங்களுக்கு எதுக்கு சார்.. வீண் சிரமம். எங்களுக்கும் இன்னொரு ஜீப் ஏற்பாடு பண்ணியிருக்கலாமே..?” என்றாள் ஜெர்சி.
“சார் ஏற்கனவே ரெண்டு ஜீப் தான் ஏற்பாடு பண்ணியிருந்தார். கடைசி நேரத்துல வேண்டாம்ன்னு சொல்லிட்டார்..” என்றான் பிகாரி.