தூரத்தில் வெற்றி, வர்ணிகாவை தூக்கிக் கொண்டு வருவதைப் பார்த்த ஜெர்சிக்கு இதயத் துடிப்பே நின்றுவிடும் போல் இருந்தது. லோகாவிற்கு ஒரு பக்கம் கருகுவதைப் போல் இருக்க, வெற்றியின் கையில் இருந்தவளுக்கோ, அவனை அப்படியே நாலு சாத்து சாத்த வேண்டும் போல் இருந்தது. சூழ்நிலையும், உடல்நிலையும் அதற்கு ஒத்துழைக்காததே முதற் காரணம்.
“என்ன லுக்கு..? இப்படி பார்க்காத மாதிரி தான் என்னைய சைட் அடிக்கனும்ன்றது இல்லை. நேரா பார்த்தே சைட் அடிக்கலாம்..” என்றவன் லேசாக சிரித்து வைக்க, அவனை முறைத்து வைத்தாள் வர்ணிகா.
“இறக்கி விடு..” என்றாள் நடுங்கும் குரலில்.
“இருங்க பொண்டாட்டி.. இப்பத்தான லேசா பேச்சு வந்திருக்கு. இன்னும் நல்லா வரட்டும், அப்பறம் இறக்கிவிடுறேன். இனிமேல் என் பேச்சைக் கேட்காம இப்படி வருவ..?” என்றான் மந்தகாசமான குரலில்.
“பொண்டாட்டியா..??” என்றாள் எரிச்சலுடன்.
“இல்லையா பின்னே..! நான் கட்டுன தாலியெல்லாம் அப்படியே இருக்கு. நீ வேற என்னைத் தேடி வந்திருக்க. இதெல்லாம் எதார்த்தமா நடந்த மாதிரி தெரியலையே..?” என்றான் வெற்றி சன்னமான சிரிப்புடன்.
அவனிடம் திமிறி, அவன் கையிலிருந்து குதித்தே விட்டாள்.
‘மண்ணாங்கட்டி..! உனக்கு அப்படி நினைப்பு வேற இருக்கா..? நீ எனக்கு புருஷனா..? அதுக்கு அர்த்தம் தெரியுமா..? தாலிகட்டுன அரைமணி நேரத்துல ஓடிப்போன நீயெல்லாம் புருஷன் கிடையாது…” என்று மூச்சு வாங்க பேசினாள்.
“அடேங்கப்பா..! ஒரு வார்த்தை சொன்னதுக்கு இந்த பேச்சு பேசுற..? இவ்வளவு நேரம் நடுங்கிட்டு இருந்த உடம்பு, இப்ப அப்படியே எரிஞ்சுக்கிட்டு இருக்கு..? யாரு நானா விட்டுட்டு வந்தேன்..!” என்றான் கோபமாக.
“இல்லையா பின்னே..! சாகுற வரைக்கும் யார் மூஞ்சில முழிக்கக் கூடாதுன்னு நினைச்சிருந்தேனோ அவன் மூஞ்சியவே பார்க்குற மாதிரி ஆகிடுச்சு…” என்று கத்தியவள் விடுவிடுவென நடக்க ஆரம்பிக்க, கால்கள் பின்னிக் கொண்டது.
“அவங்க ரெண்டு பெரும் அங்கே இருந்தே சண்டை போடுற மாதிரி தெரியுது..?” என்றாள் ஜெர்சி கவலையுடன்.
“வர்ணி சண்டை போடாம இருந்தாத்தான் ஆச்சரயம்…” என்றாள் லோகா.
“எனக்கென்னமோ இரண்டு பேருக்கும் முன்னாடியே அறிமுகம் இருக்கும்ன்னு தோணுது…” என்றாள் ஜெர்சி.
“எனக்கு அப்படியொண்ணும் தோணலை..” என்றாள் லோகா.
“உனக்குத் அப்படி தோணினாதான் ஆச்சர்யம்..” என்றாள் ஜெர்சி.
“இப்ப நீங்க ரெண்டு பெரும் ஏன் சண்டை போடுறிங்க…அடுத்து என்ன பண்றது..? நம்ம கார் வேற அங்க நிக்குது. இப்போ மறுபடியும் மழை ஆரம்பிக்கும் போல…” என்றனர் ஆண்கள் அனைவரும்.
“காரெல்லாம் சேப் ஜோன்ல தான் இருக்கு. நாம தான் தான் சேப் இல்லாம இருக்கோம்..!” என்றாள் ஜெர்சி.
“அதுவும் உண்மை தான்..” என்றனர்.
“பிகாரி சார்..! இதுக்கு என்ன தான் வழி..?” என்றனர் அவனிடம்.
“ஒருவழியும் இல்லை..! சார் ஏதாவது ஏற்பாடு பண்ணிக் கொடுப்பார். ரெண்டு நாள் லீவு கேட்டிருந்தேன், பொண்ணுப் பார்க்க போக. அதுவே இப்போ முடியாது போல இருக்கு. நானே அந்த கவலையில் இருக்கேன்..” என்றான் பிகாரி சோகமாக.
“என்ன சார் இது..உங்களுக்கு வந்த சோதனை..?” என்றார் லோகா சிரிக்காமல்.
“அது என்னவோ உண்மைதான்… எனக்கு எங்க இருந்து தான் சோதனை வரும்னே தெரியலை..” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, வர்ணிகாவும், வெற்றியும் வந்திருந்தனர்.
அதற்குள் வெற்றிக்கு போன் வர, அதை பேசிவிட்டு வைத்தவனின் முகத்தில் யோசனை படிந்தது.
“என்னாச்சு சார்..?” என்றனர் அனைவரும்.
“ஒண்ணுமில்லை..! பொதுவா இந்த மாசத்துல, இப்படி டைம்ல இங்க யாரும் வரமாட்டாங்க. ரொம்ப ஆபத்தான பகுதிகள் எல்லாம் இருக்கு. உங்களுக்கு இங்க வர்றதுக்கு ஐடியா கொடுத்தது யாரு..?” என்றான்.
“வர்ணிதான்” என்றனர் ஒட்டு மொத்த பெரும்.
“பேச்சு மட்டும் தான் போல.. மண்டையில மசாலா எதுவும் இல்லை போல..!” என்றான் நக்கலாய்.
“எனக்கும் இது தான் பர்ஸ்ட் டைம். நான் இந்த பக்கம் வந்தது கிடையாது..” என்றாள்.
“இப்ப என்ன சார் பண்றது..?” என்றனர்.
“இங்க இருந்து இருபது கிலோமீட்டர் தூரத்துல ஒரு வில்லேஜ் இருக்கு. அங்க போய்ட்டா, நீங்க ஈசியா மெயின்க்கு போயிடலாம். ஆனா, இப்போதைக்கு எங்கயுமே போக முடியாது. எல்லா பக்கமும் மரம் விழுந்து ரொம்ப கிரிட்டிகலா இருக்கு..” என்றான்.
“காரை எங்க பார்க் பண்ணியிருக்கிங்க..?” என்றான் யோசனையுடன்.
அவர்கள் காரின் பெயரையும், பார்க்கிங் பண்ணியிருந்த இடத்தையும் சொல்ல,
“உங்க கார் ரெண்டுமே இப்போ டோட்டல் டேமேஜ். மரம் விழுந்து கார் அப்பளம் ஆனது தான் மிச்சம். இப்போதான் இன்பர்மேஷன் வந்தது.”என்றான் வெற்றி.
“ஐயோ சார்… நாங்க எப்படி போறது..?” என்றனர்.
“அதான் சொன்னேனே..! அந்த வில்லேஜ் போனாதான்… அங்க இருந்து பஸ்ல போக முடியும்…ஆமா, ரெண்டு காரும் யாரோடது..?” என்றான் வெற்றி.
“காரும் வர்ணியோடது தான் சார்..” என்று சொல்ல,
“என்ன..? எல்லாரையும் திட்டம் போட்டு கூட்டிட்டு வந்தியா..?” என்றான் கோபத்துடன்.
“எல்லாம் தெரிஞ்ச மாதிரி பேச வேண்டாம். டாடி தான் பெர்மிஷன் வாங்கிக் குடுத்து அனுப்பி வச்சார். ஐ லவ் நேச்சர். இதுக்கு முன்னாடி நிறைய பிளேஸ்க்கு போயிருக்கோம்…” என்றாள் கோபமாக.
“அது எதுக்கு உனக்கு. அதெல்லாம் தர முடியாது..” என்றாள்.
“நீ தரலைன்னா, அதை வாங்குறது எனக்கொண்ணும் பெரிய விஷயம் கிடையாது..” என்று சொன்னவன், பொன்னிக்கு அழைத்தான்.
அவன் என்ன செய்கிறான் என்று அவள் பார்த்துக் கொண்டிருக்க, அவன் சற்று தள்ளி சென்று பேசத் தொடங்கினான்.
“சொல்லுப்பா வெற்றி..எப்ப ஊருக்கு வர்ற..?” என்றார் பொன்னி எடுத்த எடுப்பில்.
“அம்மா.. உங்களுக்கு எப்ப பார்த்தாலும் இதே பேச்சுதான். உங்க புருஷன் வேற எதுவும் பிளான் போட்டு வச்சிருக்காரா என்ன..?” என்றான்.
“அதெல்லாம் ஒண்ணுமில்லை வெற்றி. அவர் ரெண்டு நாளா ஆளே சரியில்லை வெற்றி. ரொம்ப இடிஞ்சு போய் உட்கார்ந்திருக்கார்..” என்றார் பொன்னி அழுதுவிடும் குரலில்.
“ஏன்? என்னாச்சு..?” என்றான் வெற்றி அதிர்ந்த குரலில்.
“மருமக வீட்ல இருந்து விவாகரத்து நோட்டிஸ் அனுப்பியிருக்காங்க வெற்றி. விஷயம் தெரிஞ்சு எல்லாரும் ஒரு மாதிரி பேச ஆரம்பிச்சுட்டாங்க. எனக்கு என்ன பண்றதுன்னே தெரியலை. உனக்கு போன் பண்ணா, லைன் கிடைக்கவேயில்லை..அப்பா முகத்தைப் பார்க்கவே முடியலை வெற்றி..” என்றார் பொன்னி.
“அதெல்லாம் இல்லம்மா. இது வேற விஷயம்..” என்று நடந்ததை சுருக்கமாக சொல்லி முடித்தான் வெற்றி.
“என்ன பண்றது வெற்றி..? விவாகரத்து நோட்டிஸ் அனுப்புற வரைக்கும் போவாங்கன்னு நான் நினைக்கவே இல்லைப்பா.. எல்லாம் உங்கப்பானால தான். ஒரு பையனுக்கு இப்படி கல்யாணம் பண்ண வேண்டாம்ன்னு தலைப் பாடா அடிச்சுகிட்டேன். என் பேச்சைக் கேட்டிருந்தா இப்ப இப்படியெல்லாம் நடக்குமா?” என்ற பொன்னி அழுது விட்டார்.
“அம்மா அழாதிங்க..! நான் பார்த்துக்கிறேன்..எனக்கு வர்ணிகா அம்மா போன் நம்பர் வேணும்..” என்றான்.
பொன்னி அழுதது அவனுக்கு ஒரு மாதிரியாகிவிட்டது. என்றாவது ஒரு நாள் புரிந்து கொள்வாள் என்று நினைத்திருக்க இப்படி ஒரு விஷயத்தை கையில் எடுப்பாள் என்று அவன் நினைக்கவேயில்லை. கோபமெல்லாம் வர்ணிகா மேல் தான் திரும்பியது.
கோபமாக அவளிடத்தில் சென்றவன்,
“இப்போ சந்தோஷமா உனக்கு..? என்ன பணம் இருக்குற திமிர்ல ஆடிட்டு இருக்கியா..?அன்னைக்கு எங்கப்பா வாக்கு குடுத்தது, கல்யாண மண்டபத்துல நடந்தது தப்புத்தான். அதுக்காக டிவேர்ஸ் நோட்டிஸ் அனுப்புற அளவுக்கு போவியா..? நானும் இப்ப மனசு மாறிடுவ, அப்பறம் மனசு மாறிடுவன்னு பொறுமையா இருந்தா ரொம்ப ஓவராத்தான் போற..?” என்று கோபத்தில் கத்த, சுற்றி இருந்தவர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. ஜெர்சிக்கு மட்டும் எதுவோ புரிவதைப் போல் இருந்தது.
“ஏய்..!!!” என்று அவள் கழுத்தைப் பிடித்து விட்டான் வெற்றி.
“ஐயோ..! சார்..! என்ன பண்றிங்க? விடுங்க அவளை..? விடுங்க சார்..?” என்று சுற்றி இருப்பவர்கள் சொல்வது காதில் விழுந்தாலும் அதை கருத்தில் எடுத்துக் கொள்ளவில்லை அவன்.
“உங்க போதைக்கு என்னோட வாழ்க்கையை ஏண்டி கெடுத்திங்க..? வாழ்க்கையில ஒரு கல்யாணம் தான். ஒருத்திக்குத் தான் மனசுல இடம். அது எல்லாமே என் வாழ்க்கையில நடந்து முடிஞ்சுடுச்சு. அதை இனி நீயே நினைச்சாலும் மாத்த முடியாது. மரியாதையா டிவேர்ஸ் கேஸை வாபஸ் வாங்கு..” என்றான் வெற்றி.
“ஹோ..! அப்படியா..? அப்போ நான் கட்டுன தாலி மட்டும் எதுக்கு. அதையும் கழட்டிடு…” என்றான் கோபமாய்.
“வர்ணி..! சார் என்ன சொல்றார். அப்போ உனக்குப் பார்த்த மாப்பிள்ளை சார் தானா..? இதையேன் நீ வந்தப்பவே எங்ககிட்ட சொல்லலை..” என்றாள் ஜெர்சி அதிர்ச்சியுடன்.
“என்னன்னு சொல்ல சொல்ற…? அரைமணி நேரத்துல அந்து போன உறவைப் பத்தி பேசச் சொல்றியா..? இதோ, ஆறுமாசமா இருக்கேனா, செத்தேனான்னு கூட கண்டுக்காம இருந்த இவனையா என்னோட புருஷன்னு சொல்ல சொல்ற..?அந்த அளவுக்கு இவன் முதல்ல மனுஷனா நடந்துக்கலை..” என்றாள் வர்ணிகா.
“சாருக்கு கல்யாணம் ஆகிடுச்சா..?” என்ற பிகாரி வாயைப் பிளந்து கொண்டு நிற்க, அங்கு இருந்த அனைவருக்கும் அதிர்ச்சி தான்.
“எல்லா தப்பும் என்மேல தான் அப்படின்ற மாதிரி பேசுற..? உங்க பக்கம் தப்பேயில்லையா..?” என்றான் வெற்றி.
“நான் அப்படி சொல்லவேயில்லை. நாங்க எதையுமே மறைக்கலை. உங்கப்பா உங்ககிட்ட மறைச்சிருந்தா அதுக்கு நீ அவரைத்தான் கேள்வி கேட்கணும். என்னைய இல்லை.. புரியுதா..! எத்தனை கனவுகளோட உன் கையால தாலி வாங்கிகிட்டேன் தெரியுமா..? அத்தனை ஆசைகளையும், அத்தனை கனவுகளையும் அங்கயே குழி தோண்டி புதைச்சவன் தான நீ. உனக்கெல்லாம் என்கிட்டே பேசுறதுக்கே அருகதை கிடையாது..” என்று மேல் மூச்சு வாங்கியவள்…
“என்னைப் பிடிச்சிருக்கான்னு..” நீ கேட்ட அந்த வார்த்தை இப்ப வரைக்கும் என் காதுல கேட்டுகிட்டே இருக்கு. ஆனா, நீ..!” என்று அவனைப் பார்த்து கையை நீட்டியவள், என்ன நினைத்தாளோ, தன் உணர்வுகளைக் கட்டுப் படுத்திக் கொண்டு,
“எனக்கு நீ தேவையில்லை. இது என்னோட உறுதியான முடிவு…” என்றவள் அப்படியே உள்ளே சென்று விட்டாள்.
வெற்றிக்கும் கோபம் கூடிக் கொண்டு தான் போனதே தவிர கொஞ்சம் கூட குறையவேயில்லை.
‘நான் அப்படி என்ன தப்புப் பண்ணிட்டேன். மான,ரோஷம் இருக்குற எந்த ஆம்பிள்ளை தான் வீட்டோட மாப்பிள்ளையா போக சம்மதிப்பாங்க. இவங்க போக்குக்கு போகலைன்னா டிவேர்ஸ் பண்ணுவாளா..இதை இப்படியே விட்டா, நான் வெற்றி கிடையாது…” என்றவன் மனதிற்குள் ஒரு தீர்மானத்திற்கு வந்தான்.
வானிலையும் சேர்ந்து கொண்டு அவனை இம்சை செய்தது. அவனால் நேரடியாக வீட்டிற்கும் போக முடியாத சூழ்நிலை. மேகநாதனை உண்டில்லை என்று ஆக்கும் வெறியே அவன் மனதிற்குள் இருந்தது.
அதற்கு பிறகு அவன் வர்ணிகாவின் பக்கம் திரும்பவேயில்லை. அவள் ஒருத்தி இருக்கிறாள் என்பதை அவன் கருத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. அதை வர்ணியும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
“சாரைப் பார்த்தா, கொஞ்சம் கூட தப்பானவரா தோணலை வர்ணி..! நீ ஏதோ தப்பா புரிஞ்சுகிட்டு இருக்கன்னு நினைக்கிறேன்..” என்றாள் ஜெர்சி சமயம் பார்த்து.
“உனக்கு அவனைப் பத்தி தெரியாது ஜெர்சி. ஒருத்தரோட குறையை காரணம் காட்டி பேசுறவங்க, எப்படி மனுஷத் தன்மையோட இருக்க முடியும்..” என்றான் வர்ணி.
“அதுக்காக டிவேர்ஸ் எல்லாம் எதுக்கு..?” என்றாள் ஜெர்சி.
“எனக்குமே இந்த விஷயம் ஷாக் தான் ஜெர்சி. நான் டிவேர்ஸ் பத்தியே பேசலை. ஒருவேளை இதெல்லாம் டாடியோட வேலையா கூட இருக்கும். எது எப்படியோ எனக்கு என்ன செய்யனும்ன்னு என்னோட டாடிக்குத் தெரியும்..” என்றாள் வர்ணி.
“எங்கையோ தப்பு நடந்திருக்கு வர்ணி..! எங்கன்னு தான் தெரியலை..” என்றாள் ஜெர்சி.
“இனி என்ன நடந்து என்ன பண்ண..?” என்றாள் விரக்தியாய்.
“நிஜமாவே நீ ஒரு நல்ல மனுஷனை மிஸ் பண்றியோன்னு தோணுது.. இதை நினைச்சு என்னைக்காவது ஒரு நாள் நீ பீல் பண்ணுவன்னு நினைக்கிறேன்..” என்றாள் ஜெர்சி.
“நெவர்..! அப்படி ஒரு நாள் வரவே வராது..” என்றாள் வர்ணிகா உறுதியாக.
அங்கே வர்ணிகாவின் வீட்டில்…
“என்னங்க இதெல்லாம்..?” என்ற வினிதாவிற்கும் அதிர்ச்சி தான்.
“எல்லாம் நீங்க குடுக்குற செல்லம் தான். அவர் வீட்டோட மாப்பிள்ளையா வரலைன்னா என்ன? நம்ம பொண்ணு அங்க போகலாமே…” என்றார் வினிதா.
“அதெல்லாம் சரிப்பட்டு வராது. பொண்ணு நம்ம கண் பார்வையில தான் இருக்கணும்..” என்றார் ராஜேஷ்.
“தன்மானம் உள்ள எந்த ஆம்பளையும் வீட்டோட மாப்பிள்ளையா வர சம்மதிக்க மாட்டான்..” என்றார் வினிதாவும் விடாமல்.
“ஏன்..? நான் வரலை..? உங்க வீட்டுக்கு நான் வீட்டோட மாப்பிள்ளையா வரலை. உங்கப்பா சொன்ன ஒரே காரணத்துக்காக இத்தனை நாள் நான் இங்க தான இருக்கேன். அப்போ எனக்கு தன்மானம் இல்லையா வினிதா..?” என்றார் ராஜேஷ்.
“ஐயோ..! நான் அந்த அர்த்ததுல சொல்ல வரலைங்க..!” என்று வினிதா சொல்ல,
“வர்ணிகா வாழ்க்கையில எது நல்லது? எது கெட்டதுன்னு எனக்குத் தெரியும். நீ இத்தனை கேள்வி கேட்குறன்னு சொன்னா, நீ என்னை நம்பலைன்னு அர்த்தம்..” என்றார் ராஜேஷ்.
“நீங்க அனுப்பின வக்கீல் நோட்டிஸ்க்கு என்ன அர்த்தம் சம்பந்தி..?” என்றார் பொன்னி.
“எனக்கு அதைப் பத்தி இன்னைக்குத் தான் தெரியும். வர்ணி அப்பா இப்படி பண்ணுவார்ன்னு எனக்குத் தெரியாது சம்பந்தி..” என்றார் வினிதா.
“என் பையனுக்கு என்ன குறைச்சல் சம்பந்தி. விஷயத்தை அவன்கிட்ட மறைச்சது நாங்க தான். அவன் மேல எந்த தப்புமில்லை. அதுக்காக வேணும்ன்னா நாங்க மன்னிப்பு கேட்டுக்கிறோம். அதுக்காக இப்படி எடுத்தோம், கவிழ்த்தோம்ன்னு எதையும் செய்ய வேண்டாம்..” என்றார் பொன்னி பொறுமையாக.
“எனக்கும் இதுல விருப்பம் இல்லைங்க. ஆனா, என்னோட பேச்சை யாரும் கேட்கிற மாதிரி இல்லை..” என்றார் வினிதா.
“இப்போ வர்ணிகா என் பையன் இருக்குற இடத்துல தான் இருக்கா. விஷயம் அவனுக்கும் தெரிஞ்சு போய்டுச்சு. இப்போ அங்க ரெண்டு பேரும் மறுபடியும் சண்டை போட்டுக்கிறதுக்குள்ள ஏதாவது பண்ணியாகணும்..” என்றார் பொன்னி.
“நீங்க என்ன சொல்றிங்க..?” என்று, வினிதா ஆனந்தம் கலந்த அதிர்ச்சியுடன் கேட்க, பொன்னி.. வெற்றி போனில் கூறிய அனைத்து விஷயங்களையும் கூறினார்.
“நீங்க சொல்றதெல்லாம்..”
“உண்மைதான்” என்றார் பொன்னி.
“நீங்க இங்க வந்தது மாப்பிள்ளையோட அப்பாவுக்குத் தெரியுமா..?” என்றார் வினிதா.
“அவருக்குத் தெரியாம தான் வந்தேன்ங்க…! வெற்றி உங்க கூட பேசனும்ன்னு சொன்னான்.” என்றார் பொன்னி.
“நான் மாப்பிள்ளைகிட்ட பேசுறேன் சம்பந்தி…!” என்ற வினிதாவின் கண்களில் இருந்தது என்ன பாவனை என்று பொன்னியால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஏதோ ஒரு தவிப்பு என்பது மட்டும் புரிந்தது.
இது எதுவும் தெரியாத வர்ணிகா, அங்கே காட்டில் வெற்றியை ஒரு ஆளாய் கூட மதிக்காமல், விடாமல் பெய்து கொண்டிருந்த மழையை சபித்துக் கொண்டிருந்தாள். அவள் கவலை அவளுக்கு.