“துருவா என்ன பண்ணிட்டு இருக்க??”, என்றார் பாசமாக அவன் தலை முடியை கோதி.
“நா ஆர்க்கிடெக்சர் மாமா டெல்லில சொந்தமா நானு, விரு, ரிஷி சந்தோஷ் நாலு பேரும் சேர்ந்து கன்ஸ்டிரக்ஷன் கம்பெனி வச்சு இருக்கோம்”, என்றான் சிரிப்புடன்.
“ரொம்ப சந்தோஷம் டா இந்த சின்ன வயசுல நாலுபேரும் ஒண்ணா கம்பெனி வச்சி நடத்துறீங்க”, என்று நான்கு பேரையும் மனதார பாராட்டினார்.
“ஐயா உங்கள பெரியய்யா வயலுக்கு வர சொன்னாரு”, என்றார் வேலையாள் ஒருவர் வந்து.
“சரி இருங்க வரேன், பேபிடால பாத்துக்கோங்க நா போயிட்டு வந்துடுறேன், பேபிடால்”,என்றார் அவளை பார்த்து.அவள் கண் மூடி திறந்தாள். அவள் கன்னத்தை தட்டி விட்டு சென்றார்.
“ஹாய்!! பேபிடால் நா விரு, நா ரிஷி”, என்று கோரசாக இருவரும் வேகமாக கைவிரித்தனர். பேபிடால் குழப்பமாக இருவரையும் பார்த்தாள். இருவரும் ஒருவரை ஒருவர் முறைத்துக் கொண்டனர்.
“ஹீரோ இங்கதான் இருக்கேன் டா ஹீரோயின் தான் வராம நிக்கிறா”, என்றான் விரு பேபிடாலை பார்த்து.
“ஏய்!! ரெண்டு பேரும் என்னைய ஹக் பண்ண தான் இப்படி நினைக்கிறீங்களா???”.
இருவரும் வேகமாக தலையை ஆட்டினர். மற்றவர்கள் சிரிப்புடன் தலையில் அடித்துக் கொண்டனர்.
“நோ.. நோ…”, என்று இங்கிலீஷில் பேச வந்தவள், அகிலா அந்த பக்கம் போவதை பார்த்ததும்,” எனக்கு தோணுனா தான் பண்ணுவேன் நீங்க ரெண்டு பேரும் வெரி பேட்”, என்றாள் சிரிப்புடன்.
“ஹேய்!! நீ பான் இன் அமெரிக்கா தானே!!”, என்றான் ரிஷி வேகமாக.
“ஆமா”.
“மித்ரா… சந்தியா…”, என்று மூன்று இளம் பெண்கள் வீட்டிற்குள் வந்தனர்.
“ஹாய்”, என்று இருவரும் வரவேற்றனர்.
“துருவா மாமா எப்ப வந்தீங்க??? எப்படி இருக்கீங்க??”, என்றாள் அதில் ஓர் பெண் சிரிப்புடன்.
“நல்லா இருக்கேன் நைட் தான் வந்தேன், நீங்க எல்லாரும் எப்படி இருக்கீங்க??”, என்றான் மூவரையும் பார்த்து.
“பெரியம்மா பேபிடால் இங்கிலீஷ்ல பேசுறா “, என்றான் நந்து சத்தமாக. அவனை முறைத்தாள். அனைவரும் சிரித்தனர் வந்த மூன்று பெண்களை தவிர.
“இவளுக்கு தமிழ் அவ்வளவா தெரியாது”, என்று அந்தப் பெண்களை பார்த்து சொல்லிவிட்டு,”பேபி நீ ரொம்ப பியூட்டிஃபுல்லா இருக்கியாம், அப்படியே!! டால் மாதிரி வெறி பிரிட்டி, தேவதை மாதிரி இருக்கேன்னு சொல்றாங்க”, என்றான் துருவா சிரிப்புடன் பொறுமையாக.
“ரியலி”, என்றாள் சந்தோசமாக அவனைப் பார்த்து.
“ஆமா ஏஞ்சல்”, என்றான் அவள் மூக்கை பிடித்து லேசாக ஆட்டி.
“தேங்க்யூ”, என்று மூவரையும் அணைத்து கன்னத்தில் முத்தமிட்டு விலகினாள்.
மூவரும் அதிர்ச்சியுடன் தன் கன்னத்தை தடவி பார்த்தனர். சந்தியா மற்றும் மித்ரா அதிர்ச்சியோடு பார்த்தனர்.
“கிப்ட் கொடுத்ததுக்கு யாராச்சும் சாரி கேப்பாங்களா ?? ம்ம்”, என்றான் அவள் முகத்தில் இருந்த முடியை ஒதுக்கிவிட்டு.
“துருவா மாமா இதெல்லாம் ஓவரு முத்தம் கொடுத்தது எங்களுக்கு”, என்றாள் அதில் ஓர் பெண் கிண்டலாக.
“அவ குழந்தை மாதிரி அங்க இருக்குறதுக்கும் இங்க இருக்குறதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு அதான் பொறுமையா சொல்றேன், சரி அத விடுங்க இந்த பெண்கள் பட்டாலம் எங்கே!! போகுது”, என்றான் கிண்டலாக.
“சரி”, என்றவர்கள் அகிலாவிடம் அனுமதி வாங்கி அவளை அழைத்து சென்றனர்.
குணா எதற்காக செல்வியிடம் மன்னிப்பு கேட்டார்??? கல்யாணத்திற்கு போகும் இடத்தில் பேபிடாலுக்கு பிரச்சனை வருமா???? என்பதை அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்…..