கணவனின் அதிரடியில் விக்கித்து போய் நின்றிருந்த யாழி அக்கணம் என்ன நடக்கிறது என்று உணரும் முன்னமே,
‘பருவம் என்னும்
கடையில் என்னை அடகு
வைத்து சென்றாயே..
வெறி நீ கொண்டு
முத்ததாலே மூழ்கடித்து
கொன்றாயே..’
என்று அடுத்த பாடல் பின்னணியில் ஒலிக்க அதிர்துடியனின் கரங்களும் அவள் கரங்களோடு அழுத்தமாக கோர்த்து அவளிடை சேர்ந்து நடனத்தை தொடர யாழிக்கோ அவன் ரிதம் சுத்தமாக புரியவில்லை..,
எப்படி அவனுக்கு ஈடு கொடுத்து ஆடுவது என்ற யோசனையில் இருந்தவளின் கரங்களை மெல்ல மேலுயர்த்தி சென்றவன் எப்போது..?? எப்படி..?? அதை அவன் கழுத்தோடு மாலையாக கோர்த்தான் அவளெப்படி அவன் வெற்று மார்போடு உறவாடி கொண்டிருக்கிறாள் என்று சுத்தமாக புரியாமல் யாழி திகைத்து போய் அவன் எயிட் பேக்கில் விழிகளை நிலைக்க விட்டு நின்றிருந்தாள்.
‘காதல் என்றும்
தும்மல் போல காமன்
என்றும் விக்கல் போல
தழுவ தழுவ இதயம்
நழுவியதே வைக்காதே
மை மை…’
அதிரனின் போக்கில் சுழன்று கொண்டிருந்தவளின் பார்வையோ அவன் மார்பில் பதிந்திருந்தது. பின்னே அவளை வரவேற்ற போது அவன் டீஷர்ட் அணிந்திருந்தானே இப்போது எப்படி எந்த நொடி அது காணாமல் போனது என்று ஆராயும் நிலையில் அவள் இல்லவே இல்லை, மொத்தமாக உலகம் மறந்து அவனில் லயித்து போயிருந்தாள் பெண்ணவள்.
அதிர்துடியனோ மெல்ல அவள் முகம் பற்றி நிமிர்த்தியவன் ‘லுக் அட் மீ’ என்ற கட்டளையிட்டு அவள் வெற்றிடையில் கரம் கோர்த்து நடனமாட அசைவுகள் புரிபடாமல் திணறியவளுக்கு அவன் விழிகளே வழிநடத்த அடுத்த சில நிமிடங்களில் அவன் ரிதம் புரிந்து அழகாக அவனோடு நடனமாட தொடங்கி இருந்தாள்.
‘வசியக்காரி வசியக்காரி வலைய வீசி போறாயே வசியக்காரி வசியக்காரி வளைச்சு போட்டு போறாயே ஏனோ ஏனோ உடல் வேகுதடி ஏனோ ஏனோ உயிர் நோகுதடி ஏனோ ஏனோ பறி போகுதடி யெ யெ யெ வைக்காதே மை மை..’
நேரம் கடக்க பாடல் வேகமெடுத்ததில் ஆட்டம் சூடு பிடித்து அவர்களின் அசைவுகளும் வேகம் எடுக்க தேகங்கள் ஒன்றோடொன்று விலக முடியாது ஆரத்தழுவியதில் விரல்களும் பிண்ணிக்கொள்ள இருவரின் சுவாசமும் ஒன்றாக கலந்து சங்கமித்ததில் இருவரும் அவர்கள் கட்டுபாட்டில் இல்லை.
ஒருவித மோனநிலையில் லயித்திருக்க சட்டென அதிர்துடியன் ஒற்றை காலை பின்னே வைத்து வளைய யாழியும் அவன் இசைவில் அவன் மார்போடு வந்து விழுந்திருந்தாள்.
அப்போது தான் அனலின் மொத்த வடிவமாக கணவன் மாறி இருப்பதை உணர்ந்த யாழி அவன் நெருக்கத்தில் துவண்டு போய் கண்களை இறுக்கமாக மூடி அவனை கட்டிக்கொண்டு தன்னை நிலைபடுத்த முயன்றாள்.
‘யாழி’ என்ற அவனழைப்பு கூட அவளை மீட்கவில்லை அவன் இதயத்துடிப்போடு ஒன்றி அவனுடனான தனி உலகில் அவனோடவள்..!!
‘இரவை நள்ளிரவை உன் உரிமை என்று கொண்டாடு அழகை உனதழகை நீ அள்ளி தந்து திண்டாடு புடவை எங்கும் புதுமை செய்து பூப்பறித்து கொண்டாயே..’
என்று ஒலித்து கொண்டிருந்த பாடலை நிறுத்தி விட்டு அவளை அள்ளிக்கொண்டு அவர்களின் படுக்கையறைக்கு வந்தவன் மனைவியை தன் அணைப்பில் நிறுத்தி ‘யாழி’ என்றுழைக்க,
இத்தனை நேரம் ஆடவனின் ஆக்கிரமிப்பில் வேக மூச்சுக்களுடன் நெகிழ்ந்து நின்ற பெண்ணவள் தடதடத்த நெஞ்சை சமன்படுத்தும் முயற்சியுடன் நெஞ்சில் கரம் பதித்து மெல்ல விழி உயர்த்தி அவனை பார்த்திருந்தாள்.
மனைவியின் விழிகளில் சம அளவில் நிறைத்திருந்த அச்சமும், நாணமுமே அதிர்துடியனை சிதைக்க போதுமானதாக இருக்க ,
சிறுக சிறுக அவள் விழி ஈர்ப்பு விசையில் தன்னை தொலைத்து கொண்டிருந்தவன் பெட்டியில் இருந்த வைர கற்கள் பதித்த வளையத்தை எடுத்து அவள் முன் நீட்டி இருந்தான்.
‘என்ன்ன..??’
‘பர்த்டே பேபிக்கு என்னோட அடுத்த கிப்ட்’ என்றவன் அதை அவள் நாசியில் போட்டுவிட்டு இனியும் தாமதிப்பதற்கு இல்லை என்பது போல அவள் நாசியில் இதழ்களை அழுத்தமாக சேர்த்திட அவன் வெம்மை தாளாத யாழியின் கரமோ அவன் இடையோடு சேர்த்து இறுக்கமாக கட்டிக்கொண்டது.
***************************************
நாசியோடு உறவாடி கொண்டிருந்தவனுக்கு அடுத்த சில நிமிடங்களிலே துடித்து கொண்டிருந்த பெண்ணவள் இதழ்கள் தன் இருப்பை உணர்த்த சுகமாக பயணித்து அவளிதழ்களோடு உறவாட தொடங்கி இருந்தான்.
இதழ் வழியே உயிர் தீண்டி பெண்ணவளை பூக்க செய்தவன் மெல்ல அவளில் இருந்து விலக கண் மூடி அவனில் திளைத்திருந்த மனைவியோ அவனது நொடி நேர பிரிவையும் தாள முடியாது அதை ஈடு கட்டும் விதமாக அவன் மார்பிலேயே தஞ்சம் புகுந்திருந்தாள்.
‘யாழி’ என்ற அவன் குரலுக்கு மேலும் அவனில் அவள் புதைந்திட இதழ்களில் நெளிந்த குறுநகையோடு அவள் செவி தீண்டியவனின் அதரங்கள் ‘என்னோட அடுத்த கிப்ட் எப்படி இருக்குன்னு சொல்லவே இல்ல’ என்றான்.
கணவனின் ஸ்பரிசத்தில் சிலிர்த்தவள் ‘கிப்ட்டா.. ?? இன்னும் என்ன..??’ என்றவாறு இமைகளை திறக்க அவர்களின் படுக்கையறை முழுக்க வண்ண பூக்களால் அலங்கரித்திருந்தவன் படுக்கையிலும் ரோஜாக்களை கொண்டு நிறைத்திருந்தான்.
காலையில் இருந்தே கணவனின் நடவடிக்கையில் இருந்த மாற்றத்தை உணர்ந்திருந்தவள் அடுத்தடுத்து அவளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்து கொண்டிருந்தாலும் நிச்சயம் பரிச்சைக்கு முன் இப்படி என்று எதிர்பார்க்கவில்லை. அதே ஆச்சர்யத்தோடு அவனை பார்க்க அவள் பார்வை புரிந்தவனும்,
‘என் பொண்டாட்டிக்கு எந்த டைவர்ஷனும் இருக்க கூடாதுன்னு தான் நம்மோட பிரஸ்ட் நைட்டை தள்ளி போட்டேன்… ஆனா என் மேல உயிரையே வச்சி எனக்காக எதுவும் செய்வேன்னு தன்னால் முடியுமா முடியாதான்னு கூட யோசிக்காம எனக்காக எதுவும் முடியும்ன்னு சொல்லி தன்னுடைய சுயம் இழந்து சாதிக்க போற என் பொண்டாடிக்கு அவளோட பிறந்தநாளில் என்னைவிட பெஸ்ட் கிப்ட் வேற என்னடி இருந்திட முடியும் சொல்லு..??’ என்றிட,
நெகிழ்ச்சியோடு அவனை கட்டிக்கொண்டவளின் கண்களில் திரண்டிருந்த நீர் அவன் மார்பில் வழிந்த போதும் மொழி மறந்து நின்றிருந்த பாவை அவன் கேள்விக்கு பதில் சொல்லும் நிலையில் இல்லை.
பின்னே அவனை பற்றி, அவன் குணத்தை பற்றி எடுக்க கூடிய முடிவுகள், அதில் கொள்ளும் உறுதி குறித்து இத்தனை மாதங்களில் தெரிந்து வைத்திருப்பவளுக்கு கணவனின் மனமாற்றம் தனக்காக என்பதை அறிந்த யாழிக்கோ மனமெங்கும் மத்தாப்பு சிதறல்கள்.
அத்தனை எளிதாக தான் எடுத்த முடிவை மாற்றுவதோ, பின்வாங்குவதோ அதிர்துடியனின் அகராதியிலேயே கிடையாது நினைத்ததை செய்து முடிப்பவன் முதல் முறையாக மனைவிக்காக முடிவை மாற்றி உள்ளான் அதுவும் அவள் மீது கொண்டிருக்கும் அபரிமிதமான நம்பிக்கையில்..!!
தன் மீதான அவன் நம்பிக்கையை கண்டு மகிழ்ச்சியில் ஆர்பரித்த மனதோடு அவன் மார்பில் முத்தமிட்ட யாழி விழி உயர்த்தி பார்க்க அதிர்துடியனோ , ‘ஒரு நிமிஷம் இருடி போன் எடுத்துட்டு வரேன்’ என்றான்.
‘எதுக்கு..?’
‘போட்டோ எடுக்க..’
‘போட்டோவா..?? என்ன உளருறீங்க..?’
‘அன்னைக்கு ரூம் டெக்கரேட் பண்ணலை போட்டோ எடுக்க முடியலைன்னு என்னலாம் பேசின.. இப்போ இவ்ளோ அலங்காரம் பண்ணிட்டு அதை போட்டோ எடுக்கலைன்னா எப்படி..??’ என்று உல்லாசக்குரலில் அவளை சீண்ட,
‘என்ன பேசுறீங்க..??’ என்று முதலில் பதறி போனவள் பின் அவன் வார்த்தைகளில் ஒளிந்திருந்த கேலியை உணர்ந்து,
‘நோ !! போன் இஸ் நாட் அலோவ்ட் இன் பெட்ரூம்’ என்றாள் கட்டளையான குரலில்.,
‘பார்ராஆஅ..’ என்று புருவம் உயர்த்தியவன்,
‘முடியாதுடி எனக்கு செல்பி எடுத்தே ஆகணும், என் பொண்டாட்டியோட ஆசை அதை நிறைவேத்தாம விட மாட்டேன்’ என்று அடம் பிடிக்க,
‘ப்ளீஸ் இது நம்மோட ப்ரைவசி.. அப்போ ஏதோ தெரியாம சொல்லிட்டேன் விட்டுடுங்க..’ என்று யாழி அவனை நகரவிடாமல் முதுகோடு இறுக்கமாக கட்டிக்கொள்ள,
‘முடியாது’ என்றவன் அவளோடு சேர்ந்து முன்னேற முயன்றான்.
‘என்னங்க ப்ளீஸ் விளையாடாதீங்க இது நமக்கே நமக்கான நிமிஷங்கள் இதை எப்படி…’ என்று கேட்டுக்கொண்டே அருகே இருந்த விளக்கை எட்டி அணைத்தாள்.
‘எதுக்குடி லைட் ஆப் பண்ண விடு என்னை.., ஒரே ஒரு போட்டோவாவது எடுத்தே ஆகணும்’ என்றவனை விடாமல் பிடித்திழுத்து கொண்டு யாழி பின்னோக்கி நகர,
‘விடுடி’ என்றவாறே அவள் புறம் திரும்பியவனை மேலும் தன்னை நோக்கி இழுத்த யாழி அவன் கணம் தாளாது கட்டிலில் விழ அவனும் சுகமாக அவளில் வந்து விழுந்திருந்தான்.
*******************************************
விழுந்த வேகத்தில் மெத்தையில் இருந்த பூக்கள் தன்னவளின் முகத்தை நிறைத்திருப்பதை கண்டவனோ தன் முத்தங்களால் அவற்றை சிதறடிக்க யாழியோ பூஞ்சிதறலாய் அவளை ஆட்கொண்ட முத்தத்தில் கிறங்கி உருகி கரைந்து கொண்டிருந்தாள்..,
விழி மூடி கணவனின் கரங்களில் யாழி தன்னை ஒப்பு கொடுத்திருக்க மேனியெங்கும் ஒருவித லயத்தோடு பயணித்து தன் தடத்தை பதித்து கொண்டிருந்த அதிர்துடியனின் கரங்களோ மெல்ல வேகமெடுத்து மனமெங்கும் ததும்பிய காதலின் ஆதிக்கத்தை தன் சரிபாதியிடம் தொடங்கி இருந்தது.
கணவனின் சிறு ஸ்பரிசமே அவளை சிதைக்க போதுமானதாக இருக்கையில் அதனோடு சேர்ந்து அவன் கரங்களும் இதழ்களும் போட்டிபோட்டு கொண்டு அவளை ஆட்கொண்டதில் மேனியெங்கும் புதுவித சுகவதை கொண்டு கிறங்கி, சிவந்து, கிளர்ந்து, தவித்து போனாள்.
பெண்ணவளின் வெட்க திமிறல்கள் ஆடவனை திணற செய்து தேடலை தீவிரபடுத்த அவன் மனையாளோ உணர்வுகளின் படையெடுப்பில் ஆர்ப்பரித்த கூச்சம் அவளை நெட்டி தள்ளியதில் கணவனின் எல்லை மீறலை தாள முடியாமல் திணறிய மூச்சுக்களுடன் அவன் கரத்தை தடுத்து பிடித்திருந்தாள்.
பெண்ணவள் வளையல்களின் கீதமே அவனை முழுதாக உடைக்க போதுமானதாக இருக்க அவள் வளைக்கரம் பற்றி மென்மையாக அவளை முத்தமிட்டு கொண்டே சென்றவன் இறுதியாக அவள் செவிமடலில் இளைப்பாறி அவளிடம் ரகசிய ராகம் இசைக்க தொடங்கி இருந்தான்.
அவன் மோக ராகத்தால் முகிழ்த்த சிறு அச்சத்தோடு அவனை பார்த்தவளிடம் ‘நான் உன்னை தெரிஞ்சிக்க வேண்டாமா..??’ என்றிட
அவன் அனல் மூச்சுக்கள் அவளை சுட்டு பொசுக்கியத்தில் நடுங்கிய இதழ்களை கட்டுபடுத்தும் வழியறியாமல் அவனை கட்டிக்கொண்டவளின் நிலை உணர்ந்தவன்,
‘அன்னைக்கு தெரிஞ்சிக்கிறது புரிஞ்சிக்கிறது ரெண்டும் ஒண்ணான்னு கேட்டியேடி..??’ என்று நிறுத்தி அவள் முகம் நிமிர்த்தியவன் நடுங்கும் அவள் இதழ்களை மெல்ல தன் வசப்படுத்தி அவளை ஆற்றுபடுத்தி இருந்தான்.
பின் அவள் முகமெங்கும் மென்முத்தம் பதித்து மனைவியின் தலையை வருடிக்கொண்டே ‘இத்தனை நாள் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சிகிட்டோம் இன்னைக்கு தான் முழுசா தெரிஞ்சிக்க போறோம்’ என்றவன் இன்னும் விலகாத அவள் அச்சத்தை கண்டு,
“என் கிட்ட யாழிக்கு என்ன பயம்..?? ட்ரஸ்ட் மீ” என்றவன் அவள் விழிகளில் முத்தமிட்டு,
‘ஜஸ்ட் க்ளோஸ் யுவர் ஐஸ் அண்ட் பீல் மீ ‘ என்றவாறே ஆடை களைந்தும் நாணப்போர்வை களையாத பெண்ணவளின் தயக்கங்களை தகர்த்தெறிந்து அச்சத்தை சிதறடித்து தாபங்களை கூட்டியதில் தத்தளித்த பெண்மை அவன் வேகம் தாளாமல் துவள அவளை தன்னோடு சேர்த்தணைத்து மோக ராகத்தை மோகனமாய் இசைத்து மனைவியின் இமை மீற துடித்த கண்ணீர் துளியை தன்னுள் விழுங்கி அவளை ஆராதித்து, பூஜித்திட காதல் கொண்ட நெஞ்சங்களின் சங்கமம் அங்கே காதலாட அரங்கேறியது.
***************************************
அதிர்துடியன் கொடுத்த பாலை வழக்கம் போல அவனோடு சேர்ந்து குடித்து முடித்தவள் படுக்கையில் இருகரங்களையும் தலைக்கு பின் கோர்த்து கொண்டு அவளை பார்த்திருந்தவனின் நெஞ்சில் தலை வைத்து சுகமாக கண் மூடிட அவனோ, ‘இப்போதானேடி அர்த்தஜாம பூஜை முடிஞ்சிருக்கு அதுக்குள்ள என்ன தூக்கம்..?? அடுத்த பூஜைக்கு நேரமாச்சு…’ என்றான்.
‘ஏதே பூஜையா..??’ என்று திகைப்போடு அவள் எழுந்தமர்ந்து அவனை பார்க்க,
‘ஆமாடி..’ என்று கண் சிமிட்டியவன் அவளை இழுத்து தன் மீது போட்டு கொள்ள,
‘என்..ன்..னது .??’
‘அன்னைக்கு சொன்னது தான் இன்னைக்கும்..!!’ என்று அவன் தோள்களை குலுக்க அவன் இதழ்கடையோரம் துடித்த புன்னகையை கண்டு,
‘என்ன சொல்றீங்க..?? விடுங்க நீங்க’ என்று யாழி அவனிடம் இருந்து விலகி அமர்ந்தாள்.
‘பூஜை எவ்ளோ நேரம் நடக்கும் எப்படி நடக்கும்ன்னு அன்னைக்கு கேட்டியே..??’ என்று நிறுத்தி அவளை பார்த்தவன் யாழியின் முகத்தில் அகலாத அதிர்வை கண்டு,
‘புரியலையா யாழி..??’ என்று கேட்டவாறே தானும் எழுந்தமர்ந்தவன் அவளை தூக்கி தன் மீது அமர்த்திக்கொண்டு ‘இப்போ உனக்கு புரியிற மாதிரி தெளிவா சொல்றேன் கேளு’ என்றவன்,
‘முதல்ல பூஜை செய்யும் இடத்தை அலங்கரிக்கணும் இதோ இப்படி..’ என்று கட்டிலை சுட்டி காட்டியவன் பின் அவள் மீது மலர் தூவி வரவேற்றதில் இருந்து ஒவ்வொரு நிலைகளாக அவளை எப்படி பூஜித்தான் என்பதை அவள் காதில் விளக்கி கொண்டே செல்ல,
‘அச்சோ ப்ளீஸ் போதும் போதும் நிறுத்துங்க..’ என்று திரும்பி அவன் பேச்சை தடை செய்த யாழி,
‘நிஜமாவே இது தான் பூஜையா..??’ என்று அலைபாய்ந்த விழிகளுடன் நாசி விடைக்க கேட்கவும்,
‘ஆம்’ என்று மேலும் கீழுமாக தலையசைத்திருந்தான் அதிர்துடியன்.
‘அப்… அப்போ..’ என்றவளுக்கு அவர்களின் முதலிரவின் போது நடந்த இருவரின் சம்பாஷனையும் நினைவில் வர உடனே அவனிடம்
‘அன்னைக்கு நீங்க இது பத்தி தான் என்கிட்டே பேசினீங்களா..??’ என்று கேட்க அவனோ அவள் உள்ளங்கையில் முத்தமிட்டுக்கொண்டே ‘ஆம்’ என்று தலையசைக்க,
அவன் மீசையின் குறுகுறுப்பில் கூசி சிலிர்த்து சட்டென கரத்தை அகற்றி அவனை பார்த்த யாழிக்கும் இப்போதுதான் பூஜையின் அர்த்தம் புரிபட ‘அச்சோஓஒ..’ என்று சட்டென இருகரங்களால் முகத்தை மூடி கொண்டாள்.
அதிர்துடியனோ அவளை போலவே அன்றைய நாளை எண்ணி அட்டகாசமாக சிரிக்க தொடங்கி இருந்தான்.
மூடிய கரங்களினூடே அவனை பார்த்தவள் ‘சிரிக்காதீங்க’ என்றிட ,
அவனோ இன்னுமே வெடித்து சிரித்தவன் மெல்ல தன்னை கட்டுபடுத்தி கொண்டு, ‘ஹே யாழி அன்னைக்கு நீ பேசுறப்போ எனக்கு சிரிப்பை கண்ட்ரோல் பண்ணிட்டு பதில் சொல்றது எவ்ளோ பெரிய சேலஞ்சா இருந்தது தெரியுமா..??’ என்று அவள் கரங்களை விலக்கிட,
அவளோ ‘போங்க நீங்க என்னை எப்படி ஏமாத்தி இருக்கீங்க.. இது தெரியாம நா… ‘ என்று சிணுங்கலுடன் அவன் மார்பில் முகத்தை மறைக்க,
‘இது மட்டும் இல்லடி’ என்று அவளை தன் ஆளுகையின் கீழ் கொண்டு வந்தவன் இன்னும் மிச்சமிருக்கும் பூஜைகளை பற்றி விளக்கமளித்து அவளை மேலும் சிவக்க வைத்து அவளோடு கலந்தவன் அடுத்து தொடர்ந்த நாளிலும் ஆறுகால பூஜையை சிறப்பாக முடித்த பின்பே அவளோடு கீழே இறங்கி வந்திருந்தான் அதிர்துடியன்.
******************************************
யாழியோ நேற்று முன்தினம் இரவு அவர்களை கடைசியாக சந்தித்தது.., ஒரு நாள் முழுக்க வெளியில் வராமல் இருந்துவிட்டு இப்போது எப்படி மற்றவர்களை எதிர்கொள்வது என்று புரியாமல் அவன் பின்னே குனிந்த தலை நிமிராமல் வந்தவள் சத்தமின்றி உணவு மேஜையில் வந்து அமர,
மரகதம் உணவோடு வருவதை கண்டவளுக்கு அப்போது தான் பூஜை குறித்து அவரிடம் உளறி கொட்டி வைத்தது நினைவில் எழ நாக்கை கடித்து கொண்டு கண்களை மூடிக்கொள்ள அதை கண்டவன் ‘எதுக்குடி அம்மாவை பார்த்து கண்ணை மூடிக்கிட்ட..??’ என்று கேட்க,
‘எல்லாம் உங்களால தான்..’
‘என்னாலயா..?? நான் என்னடி பண்ணேன்..’
‘அது நேத்து நீங்க ட்ரெஸ் சேன்ஜ்..’ என்று ஆரம்பித்தவள் மாமியாருடனான உரையாடலை கூற அவனோ பொங்கிய சிரிப்பை இருக்கும் இடம் கருதி இதழ்களுக்குள் விழுங்க யாழியோ அவன் உடல் குலுங்குவதை உணர்ந்து திரும்பி அவனை பார்த்தாள்.
அதிர்துடியனோ மீசை துடிக்க அவளை பார்த்தவன் ‘சோ கியூட்டி நீ’ என்று ரகசிய குரலில் முனுமுனுத்து அவளை செல்லம் கொஞ்சி கொண்டான்.
‘என் மானமே போச்சு !! உங்களுக்கு சிரிப்பா இருக்கா..??’ என்ற சிணுங்கியவளை கண்டு,
‘ஹே யாழி..’, என்று அவன் ஏதோ கூறவர அதற்குள் மரகதம் அவளருகே வருவதை கண்டவள்
‘அச்சோ அத்தை..’ என்று பதறிக்கொண்டே திரும்பி குனிந்து தட்டுக்குள் முகம் புதைத்து கொண்டாள்.
அவர் அங்கிருந்து நகரும் வரை தலையை உயர்த்தினாள் இல்லை.
அவரோ இருவரின் முகத்தில் இருந்த மிளிரவில் மனம் நிறைந்தவராக மனதார அண்ணாமலையானுக்கு நன்றி உரைத்தவாறே பரிமாறி கொண்டிருந்தார்.
அதே நேரம் அவள் மறுபுறம் அமர்ந்திருந்த ஆராதனா, ‘அண்ணி முடிச்சிட்டீங்களா இப்போ புரிஞ்சதா..??’ என்றாள்.
யாழியோ பதட்டத்துடன் ‘என்…என்னன்ன…???’ என்று திணற,
‘இல்ல உங்களுக்கு ஸ்டாடிஸ்டிக்ஸ் சுத்தமா புரியலைன்னு அண்ணாவே சொல்லி கொடுக்குறேன் சொல்லி உங்களை டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்ன்னு என்னை வேற படிக்க சொல்லி இருந்தாரு அதான் இப்போ உங்களுக்கு புரிஞ்சதா..??’ என்று கேட்க,
‘ஓஒ’ என்ற யாழிக்கு இப்போது தான் நிம்மதி மூச்சே எடுக்க முடிந்தது.
பின்னே மற்றவர்களை விட ஆராதனாவிர்க்கு என்ன பதில் சொல்வது என்று தானே அவள் பயந்திருந்தாள் நல்லவேளை தான் காப்பாற்ற பட்டுவிட்டோம் என்பதில் அவளிதழ்களில் புன்னகை பூத்திருந்தது.
அதே நேரம் நன்றியுடன் கணவனை பார்க்க அவனோ அவள் அருகே சரிந்து, ‘சீக்கிரம் சாப்பிட்டு வாடி நீ மெயின்ஸ் எழுத போகும் முன்ன ஸ்பெஷல் பூஜைக்கு ஏற்பாடு பண்ணி இருக்கேன் அதுக்கு இன்னைக்கு ஒத்திகை பார்த்திடலாம்’ என்று கண்சிமிட்டிட யாழியோ குடித்து கொண்டிருந்த தண்ணீர் புரைக்கேறி இருமியவாறே அவனை பார்த்திருந்தாள்.