ராம் வெட்ஸ் சீதா – 1
சோழவந்தான் ,அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகம்.
காலை ஒன்பது மணி முப்பது நிமிடம்..
” நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே!
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே!
தமிழணங்கே!
உன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே!
வாழ்த்துதுமே!
வாழ்த்துதுமே! “..
என்ற அந்த பள்ளியில் பயிலும் ஐநூறுக்கு மேற்பட்ட மாணவிகள் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை அழகான குரலில் பாடி முடித்த பிறகு அன்றைய திருக்குறள் வாசித்தாள் அப்பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு பயிலும் ஒரு மாணவி.
அதன் பிறகு செய்தித்தாள் வாசிப்பு,தேசியகீதம் இவையெல்லாம் முடித்து விட்டு மாணவிகள் அனைவரும் வரிசையாக அவரவர் வகுப்புக்கு சென்றனர்.
அந்த அரசு பெண்கள் பள்ளியில் தான் நம் கதையின் நாயகி சீதாலட்சுமி பன்னிரெண்டாம் வகுப்பில் உயிரியல் பிரிவில் படிக்கிறாள்.
அனைவரும் தங்களது வகுப்புக்கு சென்று அவர்களுக்கு ஒதுக்கிய இருக்கையில் அமர்ந்தனர்.
முதல் பாடப்பிரிவு ஆசிரியர் பாடம் எடுக்கும் வேளையில் தோளில் ஒருபக்கமாக பள்ளி பையை மாட்டிக்கொண்டு மூச்சிறைக்க ஓடிவந்தாள் சீதா.
“மே ஐ கம் இன் சார் “என்று குரல் வந்த திசையில் பார்த்தார் ஆசிரியர்.
அவளை பார்த்து “தண்டம் உனக்கு இதே வேலையா போச்சு,என் கிளாஸ்க்கு மட்டும் லேட்டா வரியா நீயி,ஆமா உன்கூட ஒரு கொரங்கு சுத்துமே அது எங்கே காணோம் “என்றவர் அவளின் பின்னால் பார்த்தார்..
அவளின் பின்னால் மறைந்து கொண்டிருந்த அவளின் தோழி ராதா ‘ அச்சச்சோ மாட்டிகிட்டோமே,என்று சீதாவின் முன்னால் வந்து நின்றவள் ஆசிரியரை பார்த்து “குட் மார்னிங் ஹவ் எ நைஸ் டே சார் ” என்று சொல்ல வகுப்பே சிரித்தது.
அதில் இன்னும் கடுப்பான ஆசிரியர் “இன்னக்கி முழுக்க வெளியே நில்லுங்க நீங்க ரெண்டு பேரும் என்றவரின் பார்வை ராதாவின் ஆடையை நோக்கியது, “இந்தா கொரங்கு என்ன இது துணி முழுக்க சகதியா இருக்கு, உன் கூட தானே இந்த சீதா புள்ளையும் வந்துச்சி, அது துணி மட்டும் நல்லா இருக்கு ஏன் உன் துணி சேரும் சகதியுமா இருக்கு என்றவர் ராதாவின் அருகில் போனார் ஆசிரியர்.
“க்கும் அவ துணி ஈரமா இருக்கறது இந்த சோடாபுட்டி க்கு தெரியல போல,என்னைய சேத்துல தள்ளி விட்டவளே அவ தான்,அவ துணி மட்டும் நல்லா இருக்காம்,முதல்ல இந்த சோடாபுட்டியை திருடி அந்த சேத்துல போட்டு பொதைக்கணும்,மூஞ்ச பாரு நல்லா,இதுலாம் நமக்கு வாத்தியாரா வந்துயிருக்கு “என்று மனதுக்குள்ளே ஆசிரியரை திட்டி கொண்டு இருந்தாள் ராதா..
ஆசிரியரின் பார்வை ராதாவையே சுற்றி சுற்றி வந்து கடைசியாக அவள் கெட்டியாக பிடித்து கொண்டிருந்த பள்ளி பையை பார்த்தார்.
ராதாவோ பள்ளி பையை கெட்டியாக பிடித்து கொண்டு திரு திரு வென முழிக்க அதை கண்டுகொண்ட ஆசிரியரோ “இந்தா கொரங்கு என்ன திருட்டு முழி முழிச்சிட்டு நிக்கிற, உன் பையை காட்டு என்னத்த திருடிட்டு வந்தன்னு பாப்போம் “என்று கூற,ராதாவோ ” அதுவந்து சார் பையில சாப்பாடு கொட்டுக்கிச்சு” என்றவளை நம்பாத பார்வை பார்த்தவர் படக்கென அவளின் பையை புடுங்கி பார்த்தவரின் முகம் பரிகாசமானது,
ஆம் ராதாவின் பள்ளி பையில் கொத்து கொத்தாய் மாங்காய்கள் இருந்தது.
“இந்தா கொரங்கு இதுக்கு தான் பள்ளிக்கூடத்துக்கு லேட்டா வரியா தினமும்,அப்போ டெய்லியுமா மாங்கா அடிச்சிட்டு வர ” என்று சந்தேகமாய் பார்த்தவரிடம் “சார் உங்களுக்கு நான் தினமும் மாங்கா கொடுப்பேன் நீங்க என்னைய கிளாஸ் உள்ள போக சொல்லுங்க ” அப்பாடி இது தான் சரியான நேரம் உள்ள போயி உட்கார்ந்து தூங்கலாம் என்று முணுமுணுத்து கொண்டே சீதாவின் கையை பிடித்து கொண்டு வகுப்புக்கு உள்ளே சென்றாள் ராதா.
ஆனால் ஆசிரியரோ “இருங்க டி என்னையே மாங்கா கொடுத்து ஏமாந்திட்டு போறியா, பரீட்சை வரும்போது நீ மாங்கா,நெல்லிக்காய்,தேங்காய்,எந்த காய் பழம் கொடுத்தாலும் உன்ன உள்ள விட நான் இருக்க மாட்டேன், இந்த கொரங்கு கூட சேர்ந்து அந்த சீதா புள்ளையும் வீணா போவுது, முதல்ல அந்த கொரங்கு அப்பனை பார்த்து அடிச்சி அடங்கி வைங்கன்னு சொல்லணும் இப்படி யோசித்தே நேரத்தை போக்கியவர், வகுப்புக்கு உள்ளே வந்து பாடம் எடுப்பதற்காக புத்தகத்தை திறக்கும் போது,அடுத்த வகுப்புக்கான மணியடித்தது..
எல்லா இந்த கொரங்கு னால வந்தது,முகத்தை பாரேன் நல்லா கரிபூசின முக மாதிரி, ” இந்தாங்க நீங்க ரெண்டு பேரும் நாளைக்கு உங்க அம்மா அப்பாவை கூப்பிட்டு வாங்க, “என்றவர் வெளியே சென்று விட்டார்..
” ராதா என்ன டி அந்த ஆளு மாங்காயை பார்த்ததும் பல்லா இருக்காரு, எத்தனை மாங்கா டி அந்த ஆளுக்கு கொடுத்த நீ “என்ற சீதாவிடம்
“ஆமா நான் கொடுத்தேன்னு நீ பாத்தியா டி! அந்த ஆளே என் பைக்குள்ள கையை விட்டு ஐஞ்சு மாங்காவை எடுத்து அவரு பேண்ட்ல இருக்கற ஓட்டை சொக்க ல போட்டுட்டு போறாரு டி,ஏன் டி வரும் போது கரெக்டா ஒன்பது மாங்கா தானே அடிச்சோம்,ஒண்ணுமே எடுத்து வாயில வைக்கல டி,இப்போ பைக்குள்ள ஒரே ஒரு மாங்காய் தான் டி இருக்கு ” என்று கூறியவளின் பையை பிடுங்கி அதில் இருந்த அந்த ஒரு மாங்காவை எடுத்து தனது பையில் பையில் கொண்டாள் சீதா.
“அடியேய் இருந்ததே ஒரே ஒரு மாங்காய் டி அதையும் எடுத்து எதுக்கு உன் பையில போட்டுக்குற நீ “என்ற தோழியை முறைத்த சீதா
” ஏன் டி ஒன்பது மாங்காய்ல ஒன்னு தான் இருக்கு மிச்ச எட்டு மாங்காய் எங்கே , சார் கூட ஒரு மூணு மாங்காய் தான் எடுத்து சொக்கால போட்டுக்கிட்டு போயிருப்பாரு,மிச்ச ஐஞ்சு மாங்கா கணக்குல காட்டுது எங்கே போயிருக்கும் “என்று ராதா வை சந்தேகமாக பார்க்க அவளோ சீதாவின் பார்வையின் அர்த்தத்தை புரிந்து கொண்டு,
“இங்க பாரு சீதா நான் உன்கூட தானே வந்தேன், உன் பக்கத்துல தானே சைக்கிள்ல வந்தேன், நம்ம மாங்காய் அடிச்சிட்டு அதை எடுத்து பையில வச்சிட்டு அந்த களத்துமேட்டு வழியா வரும் போது பெரிய பள்ளிக்கூடத்து பசங்க போனான்களே, அவனுங்க கூட மாங்காய் கேட்டு நம்ம கிட்ட சண்டை போடும் போது தான் நீ பக்கத்துல இருக்குற சேத்துல என்னைய புடிச்சி தள்ளி விட்டு , உன் கை கொடுத்து தூக்கும் போது நமக்கு தெரியாம மாங்காய திருடிட்டு போய்ட்டானுங்களோ,”என கூறும் ராதாவை பார்த்து
” ஆமாம் டி நீ சொல்றது சரியா தான் இருக்கும், இன்னைக்கு வூட்டுக்கு போகும் போது அவனுங்க சைக்கிளை பஞ்சர் ஆக்கணும் டி விட கூடாது அவனுங்களை,அது எப்படி நம்ம கஷ்ட பட்டு குறிவைச்சி அடிச்ச மாங்காய திருடிட்டு போலாம் அவன் “என்ற தோழியின் முகத்தை பார்த்த ராதாவுக்கோ
சிரிப்பு தான் வந்தது..
“இந்தா டி நீ இன்னாத்துக்கு இப்ப ஹாஹாஹா ன்னு பேய் மாதிரி சிரிக்கிற, ஏன் டி இந்த ஒரு மாங்கா வச்சிக்கிட்டு நம்ம எப்படி சாப்பிடறது,பாதியாப்புட கூட கத்தியோ,பிளேடோ இல்லை டி,இப்போ என்ன பண்றது எனக்கு வேற நாக்குல எச்சி ஊறுது, “என்ற சீதாவை பார்த்து “நீ ஒரு வாய் கடிச்சிட்டு எனக்கு கொடு நான் ஒரு வாய் கடிச்சிகிட்டு உனக்கு கொடுக்கறேன்,இப்படியே மாத்தி மாத்தி கடிச்சி சாப்பிடுவோம், “என்றாள் ராதா..
மதிய உணவு இடைவேளைக்கான மணி அடித்ததும்,அந்த இரண்டு தோழிகளும் தங்களது பையில் இருந்த தட்டை எடுத்து கொண்டு ஒரே ஓட்டமாக ஓடினார்கள் மதிய சத்துணவு வாங்குவதற்காக.
அங்கு நீண்ட வரிசையில் மாணவிகள் நின்று இருப்பதை பார்த்த ராதாவுக்கோ, அச்சச்சோ நமக்கு சாப்பாடே இருக்காதா,என அங்கு சுற்றி கொண்டிருந்த அவளின் பத்தாம்வகுப்பு கணக்கு ஆசிரியை மேகலா அவளின் பார்வையில் பட்டார்..
சீதாவிடம் திரும்பி “சீதா கொஞ்சம் இரு,இங்கேயே நில்லு எங்கையும் ஓடிப்போய்டாத “என்று கூறிவிட்டு சென்றாள் மேகலைவை நோக்கி.
அங்கு கையில் குச்சியோடு மாணவிகளை வரிசையாய் நிற்க சொல்லி மிரட்டிக்கொண்டிருந்த மேகலாவின் முன்னால் வந்த ராதா “மிஸ் அங்க சீதாவுக்கு மயக்கம் வரத்து போல இருக்காம்,அவளால நிக்க முடியலியாம், மிஸ் கொஞ்சம் மனசு வச்சி சாப்பாடு வாங்கி கொடுங்க மிஸ் ப்ளீஸ், “என்று வராத கண்ணீரை துடைத்து கொண்டிருந்த ராதாவை மேலும் கீழும் பார்த்த மேகலா
” போய்ட்டு அவளை அப்படி ஓரமா உட்கார சொல்லிட்டு அவ தட்டை வாங்கி நீ லைன்ல நின்னு அவளுக்கும் சேர்ந்து வாங்கிட்டு போ “என்று சொன்னவரை பார்த்து முகம் அஷ்டகோணலாக மாறியது ராதாவின் முகம்.
“சரியான குந்தாணியா இருப்பா போல சோறு வாங்க கூட லைன்ல வரணுமாம்,இப்போ என்ன பண்றது,பேசாம நாம மயக்கம் போட்டு விழுந்துடுவோம்,அந்த சீதாவ மயக்கம் போட்டு நடிக்க சொன்னா,நம்மளை கோர்த்து விட்டுட்டா என்ன பண்றது,நாம தான் அடிவாங்கணும், நம்ம கூட சேர்ந்து அவளும் அடிவாங்குவா ஹாஹாஹா, “என்றவள் தனக்கு தானே பேசிக்கொண்டு அவளின் கடமையில் இறங்கினாள் ராதா
ஆம்,மயக்கம் போட்டு விழுந்துவிட்டு மனதுக்குள்ளே, “அடச்சே இந்த பாழா போனா வெளியில் வேற இப்படி சுடுது ஆத்தி நாம வேற மயக்கம் போட்டு விழுந்த மாதிரி நடிச்சிட்டோமே, யாராவது வந்து என்னைய தூக்குவாங்களா ” என்று புலம்பி கொண்டுஇருக்கும் போது அவளின் கன்னத்தை தட்டியது ஆசிரியர் சோடாபுட்டியின் கரம்.
அவளும் கண்ணை திறக்காமல் தண்ணி,தண்ணிணி வோணும், என்று சைகையால் கூற அவரோ வழியில் குடிநீர் பாட்டிலை எடுத்து சென்று கொண்டிருந்த ஒரு மாணவியிடம் தண்ணீரை வாங்கி அவளின் முகத்தில் தெளித்து உட்கார வைத்து வாயில் தண்ணீரை ஊற்றினார்.
நம்ம நடிப்பு நல்லா தானியிருக்கு, என்று மனதுக்குள் பேசிகொண்டவள் “சார் எனக்கு ரொம்ப பசிக்குது, சாப்பாடு வேணும் “என்று கூறிய நொடியே “ராதா உன் சாப்பாடு தட்டு எங்கே, ஆமா சீதாவை காணோம் அவ எங்கே சுத்துறா உன்னைய மயக்கம் போட வச்சிட்டு ” என்றவரிடம் “சார் அவ எங்கே இருக்காளேன்னு எனக்கு தெரியாது சார்,ஒரு வேளை அவ சாப்பாடு வாங்க என் தட்டை எடுத்துட்டு லைன்ல நிப்பாளோ ன்னு தோணுது சார் “எனவும் அவளின் நடிப்பை உண்மையென நம்பிய அந்த சோடாபுட்டி ஆசிரியர் சீதாவை தேடி உணவுவாங்குமிடத்துக்கு வந்தவர் அவளை கண்டு அவளிடம் இருந்த இரண்டு சாப்பாடு தட்டை வாங்கிக்கொண்டு உணவு வழங்கும் ஊழியரிடம் ராதாவின் மயக்க நடிப்புபை உண்மையென கூறி இரண்டு கைகளிலும் சாப்பாடு வாங்கி கொண்டு பின்னால் உர்ர்ர்ரென இருந்த சீதாவிடம் ஒரு தட்டை கொடுத்து ” இந்தா இனிமே ராதாவை வுட்டுட்டு எங்கையும் போவாத புரிதா ” என கூறியவரை பார்த்து “சார் நான் ” என்றவளிடம் “நீ ஏதும் சொல்ல வேணாம் சீதா,பக்கத்துலே வா “என்று அவளை ராதா இருக்குமிடத்துக்கு அழைத்து கொண்டு சென்றார் அந்த சோடாபுட்டி ஆசிரியர் பலராமன்…