தன்னுடைய அன்றைய பணியை முடித்து, பஸ்ஸை விட்டு இறங்கி ரோட்டை கடக்க முற்படும் போது அவனின் நியாபகம், போனை எடுத்து பார்க்க கைகள் பரபரக்க, அவன் தன்னை விடுதியில் இறக்கிவிடும் போது சொன்னது தானாகவே நினைவு வந்தது. ” இதுக்கு அப்பறமாச்சும் ரோட்டுல கனவு காணாம, ஒழுங்கா ரூமுக்கு போயி சேருற வழியை பாரு… ஏன்னா அடுத்த முறை இந்த மாறி நடந்தா, எவனும் என்னை மாறி செயல் பட மாட்டான்…” என அவளுக்கு கொட்டு வைத்து சொன்னான். அதில் அவள் முகம் சுருங்கினாலும், இவனுக்கு இப்படி தான் பேச்சே வரும் போல, என்றெண்ணி எதுவும் கூறாமல் மண்டையை ஆட்டி வைத்தாள் சிந்து.
இதை யோசித்துக்கொண்டே, இரு புறமும் செல்லும் வாகனங்களை கருத்தில் கொண்டு, கவனமாக ரோட்டை கடந்து விடுதிக்கு வந்து சேர்ந்தாள் பாவை.
அவள் ரூமினுள் நுழைய, அங்கே அவளை முறைத்து பார்த்துக்கொண்டிருந்தாள் அவளின் நெருங்கிய தோழி வித்யா.
அவளின் முறைப்பு எதற்கென்று தெரிந்தாலும், அதனை சட்டை செய்யாமல் பொறுமையாக தன்னை ரெப்பிரேஷ் செய்துகொண்டு வந்து அவளின் பெட்டில் சாய்வாக அமர்ந்தாள் சிந்துஜா. அவளின் முகத்தில் வலியின் சாயல், இருந்தும் அதனை காட்டிக்காமல் நண்பியை பார்த்து சிரித்தாள்.
“போடி… நீ சிரிச்சனு வையேன்… நான் உன்னைய என்ன பண்ணுவேன்னே தெரியாது சொல்லிட்டேன்…” என்றால் வித்யா கடுப்பாக.
அவளின் அந்த பேச்சிற்கும், அதே சிரிப்பையே பதிலாக குடுக்க,
“உங்கிட்ட இன்னைக்கு நான் வேலைக்கு போக வேணாம்னு சொல்லியும், நீ என் பேச்சை ஒரு பொருட்டா கூட மதிக்காம கிளம்பி வேலைக்கு வந்த… அப்பறம் ஈவினிங் அந்த இன்ஸ்டிடியூட்க்காது சொல்லிகுடுக்க போக வேணாம்னு சொன்னேன்… அதையும் மதிக்காம போயிட்டு வந்திருக்க… இப்போ வந்தும், நான் உன்னைய முறைக்குறது தெரிஞ்சும், நீ ஒன்னும் கண்டுக்காம எனக்கென்னன்னு உன் வேலையை பாக்குற… அப்போ எதுக்கு நான் உன்கூட பிரெண்ட்ன்னு சொல்லிட்டு இருக்கனும்… நான் வேற ரூம் பாத்துட்டு போறேன்… இனிமே உன் பிரெண்ட்ஷிப் எனக்கு தேவை இல்லை… நீ என்கூட பேசவும் வேணாம்…” என மூச்சுக்கு கூட இடம் கொடுக்காமல் கடுகாய் பொரிந்தாள் வித்யா.
சிந்து எதுவும் எதிர்வினை ஆற்றாமல் அதே புன்னகையுடன் தோழியை பார்த்தாள்.
அவளின் அந்த புன்னகையில் இன்னும் கடுப்பாகி, “இங்க என்ன கோல்கேட் விளம்பரத்துக்கு ஆள் எடுக்குறாங்களா?… ஈஈஈன்னு பல்லை காமிச்சிட்டு இருக்க…” என்றாள் வித்யா.
இப்பொழுது வித்யாவை பார்த்து கண்களை சிமிட்டி புன்னகைத்தாள் சிந்துஜா.
“ஏய்… நான் சொல்லிட்டே இருக்கேன்… நீ சிரிச்சிட்டே இருக்க…” என சொல்லிக்கொண்டே அவளின் அருகில் வந்து சிந்துவின் கையை பிடிச்சி இழுக்க, அதில் அவளின் காயத்தில் பட்டுவிட்டது.
சிந்து, “ஸ்ஸ்… ஆஹ்…” என கத்தினாள், அவளின் கண்ணில் நீர் நிரம்பியது.
“பச்… இதுக்கு தான் சொன்னேன்… எங்கயாச்சும் என் பேச்சை கேக்குறியா?…” என சிந்துவை கடிந்துக்கொண்டே, அவளின் காயங்களை ஆராய்ந்தாள் வித்யா.
வித்யா, “ஒழுங்கா மாத்திரையெல்லாம் போட்டுட்டியா இல்லையா… இவ்வளோ வலிக்குதுல, அப்பறம் எதுக்குடி வேலைக்கு போன… இன்னைக்கு ஒரு நாள் சேலரி போனா என்ன… இவ்வளோ மாசமா உனக்குன்னு ஒன்னும் வங்கிக்காம எல்லாத்தையும் தானே உன் வீட்டுக்கு குடுக்குற… உன்னைய அப்படியே தலையில தூக்கிவச்சி கொண்டாடுறாங்களா என்ன… அப்பறம் எதுக்குடி நீ உன்னைய கூட பாத்துக்காம இப்படி ஓடிட்டு இருக்க…” என்றாள் கோவமாக,
தோழியின் ஆதங்கம் புரிந்தாலும், ஒன்றும் சொல்லாமல் அமைதியா இருந்தாள் சிந்து.
“வாய தொறந்து பேசுடி… ஊமச்சி மாறி இருக்காதா…” என்றாள் திரும்பியும்.
“நீ தானே என்கிட்ட இனிமே பேச வேணாம்னு சொன்ன…” என வாயை திறந்தாள் சிந்துஜா.
தோழியின் பதிலில் கொலைவெறியாய் அவளை முறைத்து பார்த்து, “அப்போ நீ என் பிரெண்ட்ஷிப்பை வேணாம்ன்னு முடிவு பண்ணிட்ட… அப்படிதானே…” என கேட்டாள் வித்யா.
“நீ தான் சொன்ன… நான் சொல்லவே இல்ல…” என இப்போது பதில் தந்தாள் சிந்துஜா.
“நான் சொன்னா, நீ அப்படியே விற்றுவியா…” என பல்லைக்கடித்தாள் வித்யா.
“நானே விட்டாலும், நீ என்னை விட்டு போகமாட்டேன்னு எனக்கு தெரியுமே…” என்றாள் இப்போது புன்னகையுடன் சிந்துஜா.
“இதுலாம் நல்லா வக்கணையா சொல்லு… ஆனா நான் சொல்லுறது மட்டும் கேக்கமாட்ட அப்படிதானே…” என கேட்டாள் வித்யா.
“அதை விடேன் வித்யு… நான் இப்போ ஒகே தான்…” என்றாள் சிந்து.
“என்ன ஒகே… நீ என்கிட்ட சமாளிக்க பாக்காத… ரோட்டுல விழுந்து அங்கங்க சிராய்ச்சி வச்சிருக்க… அப்பவும் எனக்கு ஒன்னும் சொல்லல… நான் நீ காணும்னு அத்தனை போன், மெசேஜ் பண்ணிருக்கேன்… நீ ஒண்ணுத்துக்கும் ரிப்ளை பண்ணல… ஆசுவாசமா வர கொஞ்சம் லேட்டாகும்ன்னு மெசேஜ் மட்டும் பண்ணுற… இங்க வந்து நான் என்ன ஆச்சுன்னு கேட்டதுக்கு அப்பறம் சொல்லுற… இதுல நான் உனக்கு காலேஜ்ல இருந்து பிரெண்டா இருக்கேன்…” என்று நொடித்தாள் வித்யா.
“போதும் விடு வித்யு… அதான் வந்ததும் சொல்லிட்டேனே…” என்றாள் இலகுவாக சிந்து.
சிந்து மற்றும் வித்யா அடுத்தடுத்த ஊரை சேர்ந்தவர்கள். இருவரும் கரூரில் உள்ள ஒரே காலேஜீஜில் வேறு வகுப்பிரிவில் பயின்றவர்கள். கல்லூரிக்கு பஸ்சில் வரும் போது ஆரம்பித்தது இவர்களின் நட்பு. சிந்து வீட்டை விட்டு வெளியில் வேலை தேட, அப்போது வித்யா தான் அவள் வேலை பார்க்கும் பள்ளியில் விண்ணப்பிக்க சொல்ல, அப்படி தான் சிந்துவும், வித்யாவுடன் சேர்ந்து ஒரே பள்ளி, விடுதியில் ஒரே அறை என இணைந்துகொண்டனர்.
சிந்து வீட்டின் சூழ்நிலை கருதி, பள்ளியில் வேலை முடித்து விட்டு, பக்கத்தில் உள்ள இன்ஸ்டிடியூஷனில், கம்ப்யூட்டர் கிளாஸ் எடுக்கிறாள்.
வீட்டின் நிலையை சிந்து யோசிக்க தலையே வெடித்துவிடும் போல இருந்தது.
சிந்து அமைதியாக வித்யுவை பார்க்க,
“என்ன மேடம்?… ஆஃப் மோட்க்கு போயிட்டீங்க…” என்று வித்யு கேள்வியெழுப்ப,
ஒன்றுமில்லை என்பதாக தலையை ஆட்டினாள் சிந்து.
“என்ன ஒண்ணுமில்லை… நீ காலைல உங்க வீட்டுக்கு காசு அனுப்பினதும் உங்க வீட்டுல இருந்து ஒரு காலும் வந்திருக்காதே?…” என வித்யு வினவ,
கால் என்றதும் தான் சிந்துவுக்கு விஷ்ணுவின் நினைவே வந்தது. அவன் எதுவும் திரும்ப அழைத்திருக்கிறானா என்று தனது பேகில் சைலென்டில் இருந்த போனை அவசரமாக எடுத்து பார்த்தாள்.
அதில் ஒரு அழைப்பும் இல்லாமல் போக, “பச்…” என சளித்தாள்.
அவளின் முகமாறுதலை பார்த்த வித்யுவோ, “என்னடி… ஒரு காலும் வந்திருக்காது… ஒரு நாள் பணம் அனுப்ப லேட் பண்ணதுக்கு அத்தனை போன் பண்ணவங்க… பணத்தை பாத்ததும் உன்னையே மறந்துருப்பாங்க… ஆனாலும் நீ, அவங்களுக்காக பார்த்து, முடியாத அப்போவும் வேலைக்கு போயி நாசமா போற…” என கொஞ்சம் கரமாக மொழிந்தாள்.
“ஆமா… ஆமா… உனக்கு மட்டும் தான் அந்த கடமை இருக்கு உங்க வீட்டுல…” என வித்யு கடிய,
“வித்யு ப்ளீஸ் விடு… நான் அவங்க போனை எதிர்பாக்கல… அது வராதுன்னு எனக்கு தெரியும்… இது வேற…” என்றாள் சிந்து.
“வேற யாரு?… ” என கேள்வியாய் சிந்துவை பார்க்க,
“ஹாஸ்பிடல் பில் செட்டில் பண்ணனும்ல அவங்களுக்கு, அதுக்கு தான்…” என பதிலளித்தாள் சிந்து.
“ஓஹ்… நீ வேணும்னா திரும்பி கால் பண்ணி பாரு… நான் சாப்டுட்டு உனக்கு சாப்பாடு கொண்டு வரேன்… டின்னெர் டைம்…” என சொல்லிக்கொண்டே வெளியேறினாள் வித்யு.
தோழி சென்றவுடன் போனை பார்த்த சிந்துவோ, “காலைலயே இரண்டு முறை கால் பண்ணியும் எடுக்கல… ஒரு வேளை நம்பர் தெரியலையோன்னு மெசேஜ்யும் பண்ணிருக்கேன்… அப்பவும் பார்த்துட்டு கூப்பிடலை… இதுல எதுக்கு, என் காசு தான் என்கிட்டயே குடுன்னு போறப்போ சொல்லிட்டு நம்பர் குடுத்துட்டு போகணும்…” என நினைத்து, அவனிற்கு பேசலாமா? வேணாமா? என்று போனில் பதிந்து வைத்திருந்த அவனின் பெயரை பார்த்தபடி யோசித்தாள் பாவை.
“இவங்ககிட்ட முதல்ல காசை திருப்பி குடுக்கணும்… அப்போதான் இப்படியெல்லாம் அவங்களை பத்தி யோசிக்கமாட்டேன்…” என முடிவெடுத்து அவனுக்கு அழைத்தாள் சிந்து.
இம்முறை கால் நிற்கும் தருவாயில் அவன் எடுத்து, “ஹலோ விஷ்ணு பிரசாத், ஏஎஸ்பி” என்றான் கம்பிரமாக,
அவனின் பேச்சை கேட்டவுடன், வாயிலிருந்து வார்த்தை வர சண்டித்தனம் செய்தது.
“ஹலோ…யார் பேசுறீங்க…” என்றான் விஷ்ணு.
“நீ… நீங்க போலீஸ் ஆஹ்…” என்றாள் மெல்லிய குரலில் பாவை.
அவளின் ஓசையை வைத்தே அவளை அவதானித்தவன், இருந்தும், “யாரு பேசுறீங்க…” என்றான் அழுத்தமாக,
“நான்… நான் சிந்து… சிந்துஜா… நேத்து ரோட்ல ஆக்சிடென்ட்… ஹாஸ்பிடல்…” என அவனுக்கு தெரிய வேண்டி கொஞ்சம் திணறி சொல்ல,
“ம்ம்… தெரியுது… முதல்ல போன்ல பேசும் போது யாரு பேசுறதுன்னு சொல்லிட்டு அப்பறம் கேள்வி கேளு… புரியுதா?…” என்றான் அவளிடம்.
அவன் பேசியதில் என்ன தோன்றியதோ, “நான் உங்களுக்கு கால் பண்ணுனேன்… நீங்க எடுக்கல… ஒரு வேளை நம்பர் தெரியலையோன்னு மெசேஜ் கூட பண்ணுனேன்… ஆனா நீங்க திரும்பி கூப்பிடவே இல்ல…” என கொஞ்சம் குறைப்படுவதை போல அவளின் தொனி மாறி பேசிருந்தாள்.
“உனக்கு வேணும்னா… நீ தான் கூப்பிடனும்…” என்றான் தெளிவான குரலில்.
அவனின் பேச்சில் குழம்பி, “என்ன வேணும்…” என அவனையே வினவ,
“இங்க பாரு… எனக்கு இப்போ இப்படி உன்கூட பேசிட்டு இருக்குறதுக்கு எல்லாம் நேரம் இல்ல… நீ தான் கூப்பிட… அப்போ நீ தான் என்னனு சொல்லணும்…” என்றான்.
“அம்மாடி… இவனென்ன இப்படி நம்மளையே சுத்தல்ல விடுறான்… இதுக்கு நான் இவன்கிட்ட பேசாமயே இருந்திருக்கலாம் போல…” என மனசுக்குள் நினைக்க,
“பச்… இப்போ எதுக்கு கால் பண்ணுன… காலைல போன் பண்ணி அட்டென்ட் பண்ணலேன்னா, விட மாட்டியா?… ரெண்டு தடவை கூப்பிட்ருக்க… இப்போ என்னடான்னா போனை பண்ணிட்டு பேசாம இருக்க… என்ன தான் வேணும் உனக்கு…” என பொறுமையை இழுத்து பிடித்து அவளிடம் கேட்டான் விஷ்ணு.
இவனின் பேச்சில் பணமெல்லாம் பின்னுக்கு போய், “அப்போ நான் தான் கால் பண்ணுறேன்னு தெரிஞ்சும், என்னோட போனை வேணும்னே அட்டென்ட் பண்ணாம இருந்திருக்கிங்க… அப்படி தானே…” என்றாள் கோவமாக கேட்டாள் தன்னுடைய அனுமானத்தை.
“ஓ மை காட்… இப்போ இதைக்கேட்டு இப்படி சண்டை போட தான் கால் பண்ணியா?…” என்றான் பட்டென்று.
அவனின் கேள்வியில் தான் இவனிடம் கோவமாக பேசியதை உணர்ந்து அமைதியானாள்.
“என்ன பதிலையே காணும்…” என்றான் மறுபடியும்.
“ஹான்… ஒண்ணுமில்லை…” என்றாள் பதிலாக,
“ஒகே… வேற ஒண்ணுமில்லைனா… நான் வைக்கிறேன்…” என சொல்லி போனை கேட் செய்தான்.
அவன் போனை வைத்ததும் தான், தான் எதற்காக அவனுக்கு அழைத்தோம் என்பதே அவளின் எண்ணத்திற்கு வந்தது.
“அச்சோ… என இது இவங்க என்னை பேசவே விடாம கட் பண்ணிட்டாங்க… திரும்பி கூப்பிட்டாலும் அதுக்கும் ஏதாவது பேசுவாங்க… என்ன பண்ணுறது?… எப்படி இந்த பணத்தை கொடுக்குறது… இருந்தாலும் இந்த சிடுமூஞ்சி சின்ராசு கொஞ்சம் ஓவர் தான்… இதுல போலீஸ் வேறயாம்… அப்பறம் என்ன சொல்லவா வேணும்… அதான் ஆளும், பேச்சும் வெறப்பா வருது…” என அவனை பத்தி நினைத்து,
“அடுத்த தடவை அவன்கிட்ட ஒழுங்கா பணத்தை பத்தி மட்டும் பேசி குடுத்துட்டு, அவனுக்கு இருக்குற திசைக்கே ஒரு கும்பிட போட்டுட்டு வந்திடனும்…” என சிந்தித்து செயல் பட எண்ணினாள் சிந்து.
இங்கு அவளிடம் சொல்லி போனை வைத்த விஷ்ணுவை பார்த்த சூர்யாவோ,
“யாருடா அது… பொண்ணெல்லாம் உனக்கு கால் பண்ணுது…” என்றான் ஆச்சரியம் கலந்த கிண்டலும்,
“ஏன் உங்கிட்ட மட்டும் தான் பொண்ணெல்லாம் பேசுமா?…” என விஷ்ணு எதிர்கேள்வி கேட்க,
“டேய்… உங்கிட்ட கூட பொண்ணெல்லாம் பேசுதேன்னு கேட்டேன்…” என்றான் பதிலுக்கு,
“ஏன்… என்கிட்ட எல்லாம் பேசக்கூடாதா என்ன?…” என கேட்டான் விஷ்ணுவும் விடாமல்,
சூரியா, “டேய்… நீ சும்மா கேள்வியையே கேக்காத… யாருன்னு சொல்லுடா அந்த பொண்ணு…” என்றான் ஆர்வமாக.