“ம்மா… ஒரு காபி…” என ஹாலில் இருந்த அன்னையை பார்த்து கேட்டுக்கொண்டே மாடியிலிருந்து இறங்கினான் விஷ்ணு பிரசாத்.
மிடுக்குடன் அவன் நடந்து வருவதை பார்த்து, ஒரு நொடி பூரிப்பாக அவனை பார்த்துவிட்டு, உடனே மனதிற்குள் மகள் சொன்னது நினைவு வர, யோசனை அங்கே செல்ல, மகனுக்கு தெரிய வர்றதுக்குள் பார்வையை மாற்றினார் விசாலாட்சி.
“நீங்க பார்த்ததை பார்த்துட்டேன்… மூஞ்சியை மாத்த வேணாம்…” என சொல்லி அன்னையின் அருகே வந்தான்.
அன்னையும், “உன்னைய தான் பார்த்தேன்னு எனக்கே தெரியுமே… அப்பறம் என்ன பார்த்துட்டேன்னு சொல்லுற…” என பதில் தந்தார் சமாளிப்பாக,
“அஹான்… அப்போ எனக்கு காபி நீங்க போடு தர மாட்டீங்க… அப்படி தானே…” என கேட்டான் அவனும் பேச்சை மாத்தி, அன்னையே சொல்லமென்று.
“ஹோட்டல் மாறி நினைச்சிட்டு, வீட்டுக்கு கண்ட நேரத்துக்கு வரவனுக்கு எல்லாம் என் கையால ஒன்னும் கிடைக்காது…” என்றார் அவரும் பதிலாக.
“இருந்துட்டு போகட்டும்…” என அலட்டிக்கொள்ளாமல், “செல்வா ண்ணா ஒரு பிளாக் காபி…” என ஹாலில் இருந்து கிட்சேன் நோக்கி குரல் குடுத்தான் விஷ்ணு.
விசாலாட்சி, “டேய்… நான் இங்க உங்கிட்ட பேசிட்டு இருக்கேன்… அதை எங்கயாச்சும் கண்டுக்கிறியா நீ…” என கேட்டார் கோவமாக.
“நீங்க கூட தான் நான் காபி கேட்டேன் தரல… அப்போ நான் மட்டும் எதுக்கு கண்டுக்கணும்…” என்றான் பதிலுக்கு,
விசாலாட்சி, “உன்னைய பெத்தவடா நானு…”
“அது தான் பெத்த பிள்ளையை எப்படி கவனிக்குறிங்கன்னு பாருங்க… நைட் முழுக்க பொட்டு தூக்கம் இல்லாம வேலை பார்த்துட்டு, விடிஞ்சி இப்போ பதினோரு மணிக்கு தான் வீட்டுக்கே வந்திருக்கேன்… அப்பாவும் ரெஸ்ட் எடுக்காம ரெப்பிரேஷ் பண்ணிட்டு வந்து உங்ககிட்ட காபி கேக்குறேன்… இப்போ போயி பையன் காபி கேக்குறானே… சாப்பிட்டானா? இல்லையான்னு? எங்கயாச்சும் அம்மாவா பதறுறீங்களா…” என கேட்டான் விளக்கமாக,
“உன்னைய நான் என்னனு தான் பெத்தேனோன்னு தெரியலடா சாமி…ஏண்டா இந்த நேரத்துக்கு ஏண்டா காபின்னு கேட்டா… எனக்கு தெரியும் என் வயிறுன்னு பேசுவ… இப்போ இப்படியா?…” என வாயில் கையை வைத்து அன்னை அவனிடம் கேக்க,
விஷ்ணு, “ஆமாம்… அப்படி தான் சொல்லுவேன்… இருந்தாலும் நீங்க அம்மாவா என்ன சொல்லணும்… அதை விட்டுட்டு வாயில கையை வச்சிட்டு, என்கிட்ட டயலாக் சொல்லிட்டு இருக்கீங்க…” என வாரினான் அன்னையை.
“தம்பி காபி…” என அவ்வீட்டில் சில காலமாக சமையல் செய்யும் செல்வா வர,
“தேங்க்ஸ் ண்ணா…” என வாங்கியபடியே, “உங்க முதலாளி உங்களுக்கு சம்பளம் எல்லாம் சரியாய் தாராளமா குடுக்காங்கள்ல ண்ணா… இல்லனா சொல்லுங்க கேஸ் போட்ருலாம்…” என அவரிடம் கேள்வியெழுப்ப,
“என்ன தம்பி…” என அவர் பதறி, விசாலாட்சியை பார்க்க,
“நீ போ செல்வா…” என அவரை அனுப்பி வைத்தார் விசாலாட்சி.
“என்ன அவரை பதில் சொல்ல விடாம பண்ணுறீங்க… அப்போ உங்க மேல சந்தேகமா இருக்கே…” என அன்னையை பார்த்து கேட்க,
“நைட் முழுக்க வேலை பாத்ததுல, வெட்டியா உக்காந்திருக்கவன் எவனும் உங்கிட்ட மட்டலையா?… அதான் வீட்டுல ஏதாவது கேஸ் கிடைக்குமான்னு பாக்கறியா…” என அவனுக்கு அன்னையென நிரூபித்தார் விசலாட்சி.
“அப்போ நானும் தான் கேப்பேன்… ஏன் உங்க நாதன் மட்டலையா இன்னைக்கு உங்க கிட்ட, என்கிட்டே லந்து பண்ணிட்டு இருக்கீங்க…” என்றான் அவனும் விடாமல்.
“ஏண்டா… என் புருஷன் என் உரிமை… நீயெண்டா அவரை இழுக்குற…” என விசாலாட்சியும் வாயட,
“அப்போ என்னோட வேலையை மட்டும், நீங்க உங்க இஷ்டத்துக்கு பேசலாமா… அது என் உடமைப்பட்டது…” என்றான் அவனும்.
விசாலாட்சி, “ஏன்டா உனக்கு வேலை இல்லையா… ஒரு பத்து நாளா என்னடான்னு கேட்டா… நின்னு கூட பதில் சொல்லாம ஓடுன… இன்னைக்கு என்னவாம் உனக்கு…” என பேச்சை மாற்றி கேட்டார்.
“நின்னு பேச கூட இல்லனா… நிக்ககூட நேரம் இல்லைன்னு உங்களுக்கு புரியாதா?… நான் உங்களுக்கு நின்னு விளக்கம் குடுத்துட்டு போகணுமா?…” என்றான் இப்போது.
“ஷப்பா… ஆ… இதுக்கு நான் கிளம்பி ஸ்கூலுக்காவது போயிருக்கலாம்… எல்லாம் இந்த வைஷுவை சொல்லணும்… இவனோட இப்படி போராட முடியாம… நான் படுற பாடு இருக்கே…” என மனதிற்குள் புலம்பிய படியே அவனை பார்க்க,
அவரின் முகபாவனையை பார்த்த விஷ்ணுவோ, “என்ன உங்க மைண்ட் வாய்ஸ்…” என புருவ முயர்த்தி கேக்க,
“ஒண்ணுமே இல்லை…” என சொல்லி, எழுந்து கிட்சேன் பக்கம் போக,
அவரை எழவிடாமல் விஷ்ணு, “ஏன் இன்னைக்கு நீங்க ஸ்கூலுக்கு போகாம இருக்கீங்க… என்ன விஷயம்?…” என்றான் இப்போது கேள்வியாக,
இவர்கள் கோவையில் இரண்டு கிளைகள் கொண்ட மெட்ரிகுலேஷன் பள்ளியை திறம்பட நடத்தி வருகின்றனர். நாதனும், வேணுவும் ஆளுக்கொரு கிளைகளை நிர்வகிக்கின்றனர். ஆனால் இரண்டு பள்ளிகளும் இருவருக்கும் பொதுவானது தான்.
விசாலாட்சி தினமும் காலையில் பத்து மணிக்கு கிளம்பி இரு பள்ளிகளுக்கும் சென்று பார்த்து விட்டு, மத்திய சாப்பாட்டிற்கு கணவன் இல்லையென்றால் அண்ணனுடன் வீட்டிற்கு வந்து விடுவர். அவர் இது வரைக்கும் இப்படி பள்ளிக்கு போகாமல் வீட்டில் இருந்ததே கிடையாது… ரொம்ப முக்கியமாக காரணம் இருந்தாலொழிய அன்றைக்கு செல்லாமல் இருப்பார்… அப்போதும் மாற்று நேரம் சென்று விசிட் செய்வார்… அன்னையால் பள்ளிக்கு செல்லாமல் இருக்கவே முடியாது… இப்படி கேட்டால் அன்னை வாயை திறப்பார் என அறிந்து கேட்டான் அவரிடம்.
“ஏண்டா… நான் வீட்டுல இருக்க கூடாதா?…” என்றார் அவரும் கோவமாக,
“ம்மா… எனக்கு தெரியும் உங்கள பத்தி… என்ன விஷயம்னு சொல்லுங்க…” என்றான் நேரடியாக,
“வைஷு பேசுனாடா… அப்படியே பேசிட்டே உக்காந்துட்டேன்… நேரம் போனதே தெரியல…” என சொல்லி, “மகனுக்கு முழுதும் சொல்லாமல், பேசினோம்…” என்றவரையில் சொன்னார் விசாலாட்சி.
“சரி… அதுக்கும் நீங்க ஸ்கூல் போகத்துக்கும் என்ன சம்பந்தம்?…” என்றான்.
விசாலாட்சி, “சும்மா இப்படி திருடனை விசாரிக்குற மாறி கேக்காத டா… நாங்க அம்மா, பொண்ணு எங்களுக்குள்ள ஆயிரம் இருக்கும்…” என்றார் முறுக்கியவராக, அவனிடம் சொல்லவேணுமென முடிவெடுத்து.
“உங்களுக்குள்ள ரெண்டாயிரம் கூட இருக்கட்டும்… அதுக்கும் நீங்க ஸ்கூல் போகத்துக்கும் என்ன சம்பந்தம்…” என்றான் விடாமல்.
“எனக்கு மயக்கமே வருது டா… உன் விசாரணையில… முதல்ல கிளம்புடா வேலைக்கு… எவனாவது வெட்டியா உக்காந்திருக்கானான்னு பாத்து, அவனை புடிச்சி ஜெயில்ல போடு… நீ போலீன்னா அது வெளில மட்டும் தான்… இங்க நான் நான் அம்மாடா… நான் முட்டி போடா சொன்ன கூட பொட்டு தான் ஆகணும்…” என கடுப்பாக பேசினார் மகனிடம்.
“ஓஹ் அப்படி…” என விஷ்ணு கிண்டலாக பாக்க,
“அப்படியே தான்… எனக்கு பசிக்குது… உனக்கும் வேணும்னா வா…” என சொல்லி சமயலறையைக்கு விரைந்து சென்றார் விசாலாட்சி.
“சொல்லாம எஸ்கேப் ஆகுறீங்க… இருக்கட்டும்…” என அவரை பார்த்து சொல்லிவிட்டு, மேல அவனின் அறைக்கு சென்று சிறிது நேரத்தில் கிளம்பி வந்தான் காக்கி உடையில்.
அவனுக்கு சாப்பாடு பரிமாற, ஒன்றும் பேசாமல் உணவை மட்டும் உண்டான்.
சாப்பிட்டு முடித்து, மறுபடியும் ஹாலில் வந்து அமர, அன்னை அவனை கேள்வியாக பார்த்தார்.
அவரை கண்டுகொள்ளாமல் அவன் போனை பார்க்க, அவரும் அதன் பிறகு ஒன்றும் கேக்காமல் அவரின் அறைக்கு செல்ல போக,
“ம்மா… வைஷுக்கு என்னாவது இங்க இருந்து வேணுமான்னு கேளுங்க…” என்றான் அவரை நிறுத்தி,
“எதுக்குடா… வைஷுவை பாக்க போறியா?…” என அவரும் கேள்வியெழுப்ப,
“உங்க கிட்ட சொன்னா கேட்டு சொல்லுங்க… கேட்டதுக்கு பதில் சொல்லாம, நீங்க ஒரு கேள்வியை கேக்காதீங்க…” என சொன்னான்.
“உனக்கு இவ்வளோ வாய் எங்க இருந்துடா வந்துச்சி… உன்னையெல்லாம் எந்த பொண்ணு வந்து சமாளிக்க போகுதோ… பாவம்டா அந்த பொண்ணு…” என்றார் கவலையாக,
விஷ்ணு, “அதை அப்பறமா எப்படி சமளிக்குறன்னு வரபோற பொண்ணுகிட்ட கேட்டு தெரிஞ்சிக்கோங்க… இப்போ உங்க பொண்ணுக்கு எதுனாச்சும் வேணுமான்னு மட்டும் சொல்லுங்க… இல்லனா விடுங்க…”
“ம்… பொண்ணு தான் பாக்க போறேன்… போதுமா…” என பதில் சொன்னான் மகன்.
அவர் பதில் சொல்ல வரத்துக்குள், “மம்மி… நான் வந்துட்டேன்…” என கூவிக்கொண்டே வேலையை முடிந்து உள்ளே வந்தான் சூரி.
“என்ன மம்மி போலீஸ்காரன் டியூட்டில இல்லாம வீட்டுல உக்காந்திருக்கான்…” என கேட்டுக்கொண்டே அவரின் பக்கத்தில் அமர்ந்தான்.
“அவன் பொண்ணு பாக்க போறானாம்டா… என்னனு கேளு அங்க…” என விஷ்ணு இறுதியாக சொன்னதை சொன்னார் சூரியிடம்.
“என்னாது!…” என அதிர்ச்சியாகி, “மம்மி… இவன் ஒரு டூ வீக் முன்னாடி கூட ஒரு பொண்ணுகிட்ட பேசிட்டு இருந்தான் மம்மி… நான் யாருன்னு கேட்டதுக்கு கூட என்னவோ காய்ன்னு சொல்லிட்டு போனான்…” என விஷ்ணு பேசியதை போட்டு குடுத்தான் சூரியா.
அப்போது தான் அவனுக்கு அவளின் நியாபகம் வந்தது… என்னவோ நான் பணம் கண்டிப்பா குடுத்துடுவேன்னு அன்னைக்கு விடும் போது அப்படி சொன்னா… உடனேயே மறுநாளே கால் பண்ணி, பணம் கொடுக்கணும்னு சொல்லுறதை விட்டுட்டு மீதி எல்லாத்தையும் வக்கணையா கேள்வி கேட்டா… இப்போ எங்க அந்த சுண்டைக்காயை ஆளே காணும்… ஒரு வேளை, நான் தான் அவ போனை கவனிக்காம விட்டுட்டேனா… என சிந்தித்து கொண்டே மொபைலில் அவளின் கால் ஏதும் வந்திருக்கிறதாவென ஆராய்ந்தான்.
சூரியா சொல்லியதை கேட்டா விசாலாட்சியோ, “ஏதாவது கஸ்டமர் சர்விஸ் ஆஹ் இருக்க போதுடா சூரி… இவனை பத்தி தான் நமக்கு நல்லா தெரியுமே…” என்றார்.
“நீங்க சொல்லுறதும் உண்மை தான் மம்மி… ஆனாலும் நான் அன்னைக்கு பார்த்ததும் உண்மை தான் மம்மி…” என்றான் சூரியா.
“அப்படின்ற…” என்ற பார்வை அன்னை பார்க்க,
“ஆமா மம்மி சத்தியமா… நான் இவன்கிட்ட யாரு அந்த பொண்ணுன்னு கேக்கறதுக்குள்ள எனக்கு டிமிக்கி குடுத்துட்டு சாப்பிட வந்துட்டேன் இவன்… வேணும்னா இவன் கிட்டயே கேளுங்க…” என்றான் உறுதியாக.
“டேய் விஷ்ணு… சூரியா சொல்லுறது உண்மையா… யாருடா அந்த அப்பாவி பொண்ணு…” என ஆர்வமாக கேட்டார் விசாலாட்சி.
“அது எதுக்கு உங்களுக்கு… ஒரு பொண்ணுக்கு ஹெல்ப் பண்ணுனேன்… அதுக்கு போன் பண்ணி தேங்க்ஸ் சொல்லுச்சு… அவ்வளோதான்… நீங்க ரொம்ப பெருசா கற்பனை பண்ணாதீங்க உடனே… இப்போ எனக்கு அந்த பொண்ணை பக்கத்துல பார்த்தா கூட நியாபகம் வராது…” என விஷ்ணு தெளிவாக பேசினான்.
அவன் அப்படி எண்ணி சொல்ல, அடுத்த சில மணி நேரத்தில், அவனின் எண்ணத்தில் மண்ணை வாரி தூற்றியது அவனின் அறிவு.
“நான் தான் சொன்னேன்லடா சூரி… இவன்கிட்ட எந்த பொண்ணு வந்து பேசுனாலும், அந்த பொண்ணை பேசவே விடமாட்டான்… இவன் காலேஜ் படிக்கும் போது கூட ஒரு பொண்ணு இவனை லவ் பண்ணுறேன்னு வந்து சொல்லுச்சே… அதுக்கு அவன் என்ன சொல்லி அனுப்பினான் நியாபகம் இருக்குல்ல உனக்கு…” என கேட்டார் அன்னை சூர்யாவிடம்.
“அதை எப்படி மறக்க முடியும்… ஒழுங்கா படிக்க வந்தியா… படிச்சிட்டு போனோமான்னு இரு… அதை விட்டுட்டு லவ்வுன்னு சொல்லிட்டு பின்னாடி வந்தினா… உங்க வீட்டுல சொல்லுவேன்ல சொன்னான்…” என பகிர்ந்தான் சூரியா.
“ம்… அதேதாண்டா… அந்த பொண்ணு என்கிட்டே வந்து நல்லா வளத்துருக்கீங்க உங்க பையனை ஒத்த ரோசான்னு-ன்ற மாறி பேசிட்டு போச்சுடா…” என விஷ்ணுவை பார்த்துக்கொண்டே சொன்னார் விசாலாட்சி.
விஷ்ணுக்கு என்னவோ அப்படி தான்… அவன் படிக்கும் போது அவனின் ஒரே எண்ணம் ஐ.பி.எஸ் மட்டுமே… கவனமும் செயலும் அதிலேயே ஊறி இருக்க மற்றது எல்லாம் பின்னுக்கு சென்றுவிட்டது. அடுத்து வேலையில் சேர்ந்த பிறகு, அவனின் எண்ணம் முழுவதும் வேலையே ஆக்கிரமிக்க, மேற்கொண்டு வேறு எதற்கும் சிந்தனை இல்லாமல் போனது.
“இவனுக்கு நான் எங்க இருந்து, எப்படி பொண்ணு கண்டுபிடிக்குறதுன்னு நினைச்சாலே, என்னக்கு தலையெல்லாம் சுத்துதுடா சூரி…” என தன் கவலையை சொன்னார் விசாலாட்சி.
விஷ்ணுவிற்கு அப்போது ஒரு கால் வர, அதனை எடுத்து அட்டென்ட் செய்து, “வெளில வெயிட் பண்ணுங்க… வந்துட்டேன்…” என சொல்லி போனை வைத்தான்.
“ஒகே… நான் கேஸ்க்காக திருப்பூர் போறேன்… வர டூ டேஸ் ஆகும்…” என இருவருக்கும் பொதுவாக சொல்லி விடைபெற்றான் விஷ்ணு.
“இங்க பாருடா சூரி இவனை… இதுக்கு தான் வைஷுக்கு என்ன வேணும்னு கேக்க சொன்னான் போல… நான் இவனோட மல்லுகட்டிட்டே அவகிட்ட கேக்கலைடா…” என்றார் வருத்தமாக,
“விடுங்க மம்மி… அவன் வேலையா போறான்… டைம் இல்லனா அவன் வைஷுவை போயி பாக்க கூட மாட்டான்… சோ நோ பீலிங்ஸ்…” என்றான் நண்பனை பற்றி அறிந்தவனாக.
“அவன் போவம் இருப்பதே நல்லது தான்…” என மனதில் நினைத்து கொண்டார் விசாலாட்சி.
———–
அவளின் நினைவே இல்லை என வீட்டில் சொல்லி வந்தவன், அவினாஷியை கடக்க முற்படும் போது, அவனின் நினைவில் தானாக வந்து நின்றாள் அவள்… மனது முதல் முறையாக கொஞ்சம் அலகலைக்க, ” குமார் அண்ணா… இங்க ஒரு நல்ல கடைல நிறுத்துங்க… ஒரு டீ குடிச்சிட்டு கிளம்பலாம்…” என அவனுக்கு வாகனம் ஓட்டும் ஓட்டுனரிடம் சொன்னான்.
ஓட்டுனரோ அவனை ஒரு முறை பார்த்தவர், ஒன்றும் மறுத்து கூறாமல், “சரிங்க தம்பி…” என சொல்லி ஒரு கடையை பார்த்து நிறுத்தினார்.
அவனிற்கே அவனின் செயல் ஒப்பாமல் இருக்க, அவனின் மூளையும் அதையே எடுத்துரைக்க, வீட்டுல அவளை பத்தி பேசுனதுனால தான் இப்படி, இல்லனா எதுக்கு தேவையில்லாம அவ நினைப்பு வர போது… வேற ஒன்னும் இல்ல… இனிமே இப்படி பண்ணக்கூடாது என அவனுக்கு அவனே சொல்லி சமாதானப்படுத்திக்கொண்டு ஓட்டுநர் குடுத்த டீயை வாங்கி பருகினான்.
டீயை குடித்து முடித்து மீண்டும் ஓட்டுநர் வண்டியை ஸ்டார்ட் செய்து நகர்த்த, அவனின் புறமிருந்த சைடு கண்ணாடியில் வேகமாக வண்டியை நோக்கி ஓடி வரும் ஒரு பெண்ணை பார்த்தான். “இவ எங்க இங்க…” என யோசித்தவாறே, ஓட்டுனரிடம் வண்டியை நிறுத்த சொல்ல, அவரும் நிறுத்தினார்.
அவளை பார்த்தால் கூட நியாபகம் இருக்காது என நினைத்தவன் தான் கண்ணாடியில் தூரத்தில் ஓடி வந்ததை பார்த்தே அவள் தான் என தீர்மானித்தான். அந்த அவள் சிந்துவே தான்.
வேகமாக ஜீப்பின் அருகில் ஓடிவந்தவள், மூச்சிரைக்க, “சார்…” என அவனை அழைத்தாள்.
அவனிற்கு கோவம் சுர்ரென்று ஏற, அதனை கட்டுப்படுத்தி, அவளிடம் வெயிட் என சைகை செய்து, “ண்ணா… நீங்க வேணும்னா இன்னொரு டீ குடிச்சிட்டு வரீங்களா…” என அவரிடம் பணித்தான்.
ஓட்டுனரான குமாருக்கு ஒன்றுமே புரியவில்லை, என்னவோ அதிசயம் போல அவர் விஷ்ணுவை பார்க்க,
அவனும் மண்டையை இடவலமாக ஆட்டிவிட்டு, “போங்க ண்ணா… கூப்பிடுறேன்…” என முடித்தான்.
“சரிங்க தம்பி… நீங்க பேசுங்க…” என சொல்லி சென்றார் குமார் கடைக்கு.
அவர் சென்றதை உறுதிப்படுத்தி விட்டு, மற்றவர்களுக்கு காட்சி பொருளாகாமல் ஒரு ஓரமாக அவளை அழைத்து வந்து, “உனக்கு மண்டையில மூளைன்னு ஒன்னு இருக்கா…” என சீறினான் அவளிடம்.
சிந்து, “சா… ர்…” என அதிர்ந்து பார்க்க,
“என்ன சார்… இல்ல என்ன சார்ன்னு கேக்குறேன்… நான் யூனிபோர்ம்ல இருக்கேன்… அதையெல்லாம் கவனிக்காம நீ பாட்டுக்கு என்னை பார்த்ததும் ஓடி வர… இங்க எவ்வளோ பேரு இருக்காங்க… என்னனு கொஞ்சம் கூட யோசிக்கவே மாட்டியா… நான் பாக்காம போயிருந்தா… நீ ஓடி வந்த வேகத்துக்கு விழுந்து தொலைச்சிருப்ப…” என்றான் காட்டமாக,
அவனின் பேச்சில் தான், தான் செய்த மடத்தனம் புரிய, என்ன பதில் சொல்வதென்று தெரியாமல், தலையை குனிந்தாள் சிந்து.
“என்ன இப்போதான் மரமண்டைக்கு புரியுதா…” என கேட்டான் அவளிடம் விஷ்ணு.
பதில் ஒன்றும் சொல்லாமல் தலையை மட்டும் ஆட்ட, “என்ன புரிஞ்சிச்சோ…” என முணுமுணுத்து அவன் செல்ல போக,
“சார்… நான்… அது உங்க…” என அவள் வார்த்தையை கோர்க்க,
“ஒழுங்கா ஹாஸ்டல் போயி சேருற வழியை பாரு…” என அவளிடம் அழுத்தமாக சொல்லி நிற்காமல் சென்ற காவல் அதிகாரி மனதினுள், “பாத்ததும் பணம் கொடுக்கணும்னு வரவ… அப்பறம் எதுக்கு இவ்வளோ நாளா போன் பண்ணலன்னு தெரியலையே…” என யோசித்தான்.
“இவங்க கிட்ட போன்ல அன்னைக்கு ஒழுங்கா நம்மால பேச முடியலன்னு தான், தினமும் இவங்களுக்கு பேசலாமா? வேணாமான்னு இவங்க நம்பரை பாத்து யோசிச்சு யோசிச்சே இத்தனை நாள் கூப்பிடமா விட்டேன்… இங்க எதர்ச்சியா பாத்தேன்னு ஓடி வந்து கொடுக்கலாம்னு பாத்தா… நேர்லயும் இப்படியா ஆகணும்… இவங்க கிட்ட நான் பணத்தை கொடுக்கவே முடியாதோ… ஒரு வேளை காசு வாங்க வேணாம்னு தான் இப்படி பண்ணுறாங்களோ …” என அவனை பத்தி கணிக்க முடியாமல், அவனுடைய சிந்தனையிலேயே ஹாஸ்டல் வந்து சேர்ந்தாள் சிந்து.
அதற்கடுத்து இருந்த இரவு பொழுது முழுவதும் அவனே அவள் தலையில் ரீங்கார வண்டாய் குடைய, “ஒரு வீக்கெண்ட் கால் பண்ணி ஒரு இடத்துக்கு வர சொல்லி, அவங்க பணத்தை குடுத்தா தான் ஆச்சு… இல்லனா நமக்கு ஒன்னும் வேலைக்காகாது… அவங்க காசு நமக்கு வேணாம்… அவங்க கிட்ட காசை கொடுத்துட்டு, இப்படி இனிமே எறிஞ்ச சட்டி மாறி பேசாதிங்க, கொஞ்சம் நல்ல மாறிய சிரிச்சி பேசலாம்னு சொல்லிட்டு வரணும்…” என தன்னிச்சையாக தீர்மானம் நிறைவேற்றினாள் சிந்து
இங்கு ஜீப்பில் பயணத்தை தொடர்ந்த போலீஸ்காரனும், “பாரேன்… இந்த சுண்டக்காய்க்கு கொஞ்சம் தைரியம் ஜாஸ்திதான்… என்னனு யோசிக்காம எனக்கென்னன்னு ஓடி வர்றதை பாரு… யூஸ்லெஸ் வெண்டைக்கா… அடுத்த தடவை இவகிட்ட நீயும் வேணாம் உன் காசும் வேணாம்ன்னு சொல்லணும் முதல்ல இவகிட்ட… ” என திட்டிக்கொண்டே அவளை நினைத்தான்.
எதிர்பாராத இந்த நிகழ்வை நினைத்தே அவர்களின் அந்த இரவு நேரம் இனிதே தொடங்கியது.