காரிருள் சூழ்ந்து மேகங்கள் ஒன்றோடு ஒன்று இணைந்து சூரியனை வெளியே வர விடாமல் தடுக்க, அதனை முறியடித்து சூரியன் தன் கதிர்களை ஊடுருவி, மெல்ல மெல்ல மேகங்களை பிரித்து தன் ஆட்சியை செலுத்த ஆரம்பிக்க, அதனை பார்த்தபடியே வாசலில் ஒரு கண்ணையும், ஹாலில் உள்ள கடிகாரத்தில் ஒரு கண்ணையும் வைத்து “இன்னைக்கு வரட்டும் அவனுக்கு இருக்கு…” என அர்ச்சித்தபடியே தாழ்வாரத்தில் நடை பயின்று கொண்டிருந்தார் விசாலாட்சி.
அப்போது மேலிருந்து கீழே இறங்கிய விஷ்ணு, அன்னையின் செயலில் நமுட்டு சிரிப்புடன் சத்தம் செய்யமால் அவரின் பின்னே நின்று, “மம்மி… எதுக்கு இப்படி வாசலையே முறைச்சி பாத்துட்டு இருக்கீங்க…” என வாய்ஸ் மாத்தி சூரி போல் கேக்க,
பின்னல் திரும்பி பார்க்காமலே, “எல்லாம் இந்த விஷ்ணுவை தான்டா சூரி… இவன் ரொம்ப போலீஸ் ஆஹ் இருக்கான்டா… இந்த ஒரு ரெண்டு வாரமா அவன் என்ன பண்ணுறான்னு கூட தெரியலடா… வீட்டுக்கு என்னவோ திருடன் மாறி வந்துட்டு போறான்டா… நைட் வந்த போல தெரியல எனக்கு… அதன் காலைல வந்தா வீட்டுக்குள்ள விடாம பண்ணுலாம்னு பாத்துட்டு இருக்கேன்… எப்படியும் வந்து தானே ஆகணும்…” என சீரியஸ் ஆக அவர் வெளியில் கேட்டினை பார்த்தவாறே சொல்ல,
“என்ன மம்மி நீங்க… அப்பறம் போலீஸ் வேலைன்னா சும்மாவா…” என விஷ்ணு மறுபடியும் சூரியை போல் பேச,
விசா, “நீ என்னடா அவனுக்கு சப்போர்ட் பண்ணி பேசுற…” என கேட்டுக்கொண்டே திரும்பி பார்க்க,
அங்கே நமுட்டு சிரிப்புடன் நின்றிருந்தான் விஷ்ணு பிரசாத்.
அவனை அதிர்ச்சியுடன் பார்க்க,
“ஷாக்க குறைங்க… ஷாக்க குறைங்க…” என அவரை பார்த்து விஷ்ணு சொல்ல,
விசா, “நீ எப்போடா வந்த… நான் உன் ரூமை பார்த்துட்டு தான் வெளியவே வந்தேன்…” என இன்னும் அதிர்ச்சி குறையாமல் கேக்க,
“ரெண்டு அப்பு அப்பலாம்னு தான் பாத்துட்டு இருந்தேன்…” என அவர் சூடாக சொல்ல,
“இது நல்ல கதையா இருக்கே… எதாவது தப்பு நடந்துச்சின்னா, என்ன போலீசோன்னு திட்டுறீங்க… ஒழுங்கா வேலை பாத்தா, வீட்டுக்கே வராம என்ன வேலைன்னு கேக்குறீங்க… அப்போ நான் என்ன தான் பண்ணுறது…” என அவன் புருவமுயர்த்தி தோரணையாக அன்னையிடம் கேக்க,
“ஆஹான்… சரண்டர் ஆனாலும் தண்டனை இருக்குமே…” என்று விஷ்ணு சொல்ல,
“ஆண்டவா… உங்கிட்ட தெரியாம சரெண்டெர்ன்னு வார்த்தையை பிரயோகிச்சிடேண்டா…தப்பு தான்… உடனே நீ தண்டனை, சட்டம், வட்டம்ன்னு ஆரம்பிக்காத…” என அவர் சலித்து பேச,
“நான் எங்க ஆரம்பிச்சேன்…” என்று விஷ்ணு திரும்பி கேக்க,
“ஞாயித்துக்கிழமைடா விஷ்ணு இன்னைக்கு…” என விசாலாட்சி சொல்ல,
விஷ்ணு, “அது தான் எனக்கும் தெரியுமே… இன்னைக்கு சண்டே அப்பறம் இப்போ காலை மணி எட்டரை ஆக போது…” என மகன் நேரத்தையும் சேர்த்து சொல்ல,
“அதே தான்… வாரத்தோட முதல் நாளே உங்கிட்ட மல்லுக்கட்டினா… வாரம் முழுக்க அதே தான் நடக்கும்… அதனால நான் இப்போ சமாதானத்துக்கு வரேன்…” என அன்னை மகனிடம் மல்லுக்கு நிக்காமல் பேச,
அவரை ஆராய்ச்சியாக பார்த்த பையனோ, “இந்த பேக் அடிக்குறத பேச்சை பாத்தா… உங்களை நம்ப முடியலையே…” என சந்தேகமாக பதில் சொல்ல,
“ஏன்டா… நான் உன் அம்மாடா…”
விஷ்ணு, “அது தான் எப்போதும் சொல்லிட்டு இருக்கீங்களே… உங்களுக்கு நீங்களே…”
விசா, “என்கிட்ட இப்படி பேசுனும்னே பேசுறியாடா…” என நொந்து கொண்டு கேக்க,
“நீங்க தான் என்னை பேச வைக்குறிங்க… நானா எங்க பேசுனேன் சொல்லுங்க…” என அலட்டிக்கொள்ளாமல் பதிலளிக்க,
“பேசாம நான் உங்க அப்பா, அண்ணாவோட வாக்கிங் ஆது போயிருக்கலாம்… உன்னைய பிடிச்சி நிப்பாட்டனும்ன்னு நினச்சேன் பாத்தியா… என்னைய சொல்லணும்…” என விசலாட்சி சோகமாக சொல்ல,
“அப்போ வாங்க… நாம இப்போ வாக்கிங் போலாம்…” என அவரை பிடித்து இழுக்க,
“போடா டேய்…” என சொல்லி அவனை தள்ளிவிட்டு உள்ளே சென்றார் விசாலாட்சி.
“ஹா ஹா…” என சிரித்துக்கொண்டே உள்ளே வந்தவன், “சரி வாங்க சாப்பிடலாம்…” என அவரை அழைக்க,
“ஏன் காபி வேணாம்?…” என கேட்டு, அடுத்து அவசரமாக, “இல்ல… இல்ல… வா சாப்பிடலாம்…” என அவனை பார்த்து சொல்லி முன்னே சென்றார்.
“உஷாராகிட்டீங்க ம்மா…” என சொல்லிக்கொண்டே சாப்பிட அமர்ந்தான் விஷ்ணு.
இருவரும் சாப்பிட்டு கொண்டிருக்க, “ஆல் டே ஜாலி டே… இன்னைக்கு ஹாலிடே… மோர்னிங் நல்லி டே…” என பாடிக்கொண்டே டைன்னிங் டேபிளில் வந்து அமர்ந்தான் சூரியா.
விஷ்ணு, “உனக்கு எல்லா நாளும் ஹாலிடே தான்…”
சூரியா, “போடா பொறாமை புடிச்சவனே… உனக்கு இன்னைக்கு டியூட்டி இல்லையா?…” என நண்பனை திட்டிகொண்டே, “மம்மி… சீக்கரம் எல்லா ஐட்டமும் வைங்க…” என தட்டை வைத்து காமித்துக்கொண்டு கேக்க,
விசாலாட்சியும் பொறுப்பாக தட்டில் பொங்கல் வைத்து பக்கத்தில் இரு சிறிய கிண்ணங்களில் ஒன்றில் கொஸ்துவும், மற்றொன்றில் சாம்பாரும் வைக்க, அதை பார்த்த சூர்யாவின் முகமோ கோணலாக,
“என்னடா… சோத்துல சாம்பாரா…” என நக்கலாக விஷ்ணு கேக்க,
நண்பனை கடுப்புடன் பார்த்துவிட்டு, “மம்மி… என்ன இது சண்டே அதுவுமா காலைல நல்லி இல்லாம இப்படி பொங்கலை வச்சி ஏமாத்திரிங்க…” என சுணங்கியபடி சூரியா கேக்க,
“இன்னைக்கு கிருத்திகைடா சூரி… சோ நோ நல்லி ஒன்லி மல்லி…” என அவரும் ராகமாக சொல்ல,
சூரியா, “இதெல்லாம் அநியாயம் பண்ணுறீங்க மம்மி… வாரத்துல வர நாளெல்லாம் பௌர்ணமி, அம்மாவாசை, சஷ்டி, சதுர்த்தி, செவ்வாய், வெள்ளி, சனி இப்படி ஒரு நாளைக்கு டிசைன், டிசைன் பேரு சொல்லி நல்லிக்கு தடா சொல்லுவீங்க… இப்போ அதுல சண்டேவும் சேர்த்துட்டீங்களே…” என புலம்பலாக சொல்ல,
“நீ எப்படி புலம்பினாலும் உனக்கு இன்னைக்கு சாம்பார் தான்… சாப்புடு சாப்புடு…” என இடையில் விஷ்ணு கௌண்ட்டர் குடுக்க,
“போடா… நான் மம்மிகிட்ட பேசிக்குறேன்…” என சொல்லி, “மம்…மீ…” என இழுத்து அவரை பார்க்க,
“கத்திரிக்காய் கொஸ்து… முருங்கைக்காய் போட்ட பருப்பு சாம்பார்டா… பொங்கலோட செம காம்போடா… சாப்பிட்டு பாரு…” என அவர் ரசித்துக்கொண்டே சொல்ல,
“ஆமா… ஆமா… அவனுக்கு புரையேறுது பாருங்க… அவனையே கேளுங்க…” என சூரி திடமாக சொல்ல,
“என்னடா சொல்லுறான் இவன்…” என தாய், மகனை பார்க்க,
” அவன் தானே சொல்லுறான் அவன்கிட்டயே கேளுங்க…” என அசால்ட்டாக விஷ்ணு சொல்ல,
சூரி, “மம்மி… நான் உங்ககிட்ட பொய் சொல்லிருக்கேனா?… அவன் வேணுமே கேள்வியை திசை திருப்புறான்…”
விசா, “ஆனா ஒன்னுடா சூரி… இவன் பொண்ணுகிட்ட பேசுறதே பெருசு இதுல காய் பேரெல்லாம் செல்ல பேரா வச்சி கூப்பிடுறானா… நம்புற மாறி இல்லையடா… ஏன்னா இவனோட ஜாதகம் நமக்கு தெரியுமேடா… இருந்தாலும் நான் உன்னையும் நம்புறேன்… இப்போ நான் என்னடா பண்ணுறது…” என சூரியாவிடம் தன் எண்ணத்தை பரிமாற,
“மம்மி… நான் எந்த பொண்ணுகிட்ட பேசுனாலும் உங்ககிட்ட சொல்லுறேன்ல… அதை மாறி இவனை சொல்ல சொல்லுங்க…” என சூரி தன் மம்மிக்கு யோசனை சொல்ல,
“ஓ மை காட்… நானே மறந்தாலும் இவங்க இப்படி பேசியே உசுப்புவாங்க போல… விஷ்ணு நோ… ஸ்டெடி…” என தனக்குள்ளே சொல்லிக்கொண்டான்.
“அவனென்ன நீயடா… சொல்லுடான்னு கேட்டா உடனே சொல்லுறதுக்கு… வேற ஏதாச்சும் சொல்லுடா…” என மம்மி சொல்ல,
“அவன், ஆ… நம்ம கோவிலுக்கு போனோம்ல… அன்னைக்கு கூட ஒரு பொண்ணுகிட்ட பேசிட்டு தான் லேட்டா வந்தான் மம்மி… விடாதீங்க அவனை…” என சூரி தீவிரமாக சொல்ல,
விசா, “அப்படியாடா சூரி… யாருடா அந்த பொண்ணு உனக்கு தெரியுமா… இவனை போயி பிடிச்சிடுச்சே… நான் பாக்கனும்டா அந்த பொண்ணை…” என ஆர்வமாக கேக்க,
“நோ மம்மி… இவன்கிட்ட யாருனு கேட்டா அவனுக்கு தெரிஞ்ச காய் பேரெல்லாம் பட்ட பேரா சொல்லுறான்… ஆனா எனக்கு பாருங்க ஒரு காய் பேரு கூட நீங்க சொல்லி தரல…” என சூரியா சோகமாக சொல்ல,
இவர்களின் பேச்சை கேட்ட விஷ்ணுவோ, பல்லைக்கடித்தபடி இருவரையும் பார்த்து, “என்ன வேற வேலை இல்லையா உங்களுக்கு… இப்போ இது ரொம்ப அவசியமான விஷயமா?…” என கேக்க,
“இல்லையா பின்ன…” என மற்ற இருவரும் கோரஸாக சொல்ல,
“என்னத்தையோ பண்ணுங்க…” என சொல்லி கை கழுவ எழுந்து சென்றான் விஷ்ணு.
போகும் அவனை பார்த்து, “டேய் சொல்லிட்டு போடா… பட்ட பேரு வச்சு பொண்ணுகிட்ட பேசுனியா…” என சத்தமாக விசாலாட்சி கேக்க,
அவரை திரும்பி பார்த்த விஷ்ணுவோ, “ஆமா … எவ்வளோ நாளைக்கு டியர், டார்லிங், பேபின்னு சொல்லுறது… அதான் புதுசா கூப்புடுறேன்…” என சொல்லிவிட்டு சென்றான்.
அவனின் பதிலில் விசாலாட்சியும், சூரியாவும் ஒருவரை ஒருவர் பார்க்க, கழுவிட்டு வந்தவன் இவர்களை பார்த்து, “போதும் பாத்துக்குறது… அதான் தெரிஞ்சிடுச்சில… எழுந்து போயி அடுத்த வேலையே பாருங்க…” என இருவருக்கும் சொல்லி, “டேய் சூரி… நான் எயிட் கிட்ட, அவன் பிரபா குடுக்குற ட்ரீட்க்கு நேரா வந்துருவேன்… எனக்கு கால் பண்ணாத…” என சொல்லிவிட்டு வெளியில் கிளம்புவதற்காக அவனின் அறைக்கு சென்றான் விஷ்ணு.
“என்னடா சொல்லிட்டு போறான் இவன்…” என அதிர்ச்சி விலகாமல் விசாலாட்சி கேக்க,
“நீங்க உங்க புள்ளைய பால் குடிக்குமான்னு கேட்டீங்க… அவன் பீரே குடிப்பேன் சொல்லிட்டு போறான்…” என சிரிப்புடன் விளக்கமாக சொன்னான் சூரி.