அந்த மாலில் உள்ள காரிடாரில் சூரி நின்று போனை பார்த்துக்கொண்டிருக்க, “என்னடா மச்சான், போலீஸ்காரன் வருவானா?, மாட்டானா?… மணி எட்டரயாக போதுடா…” என கேட்டான் அவனின் நண்பன் பிரதீப்.
“வரேன்னு சொன்னான்டா… கண்டிப்பா வருவான்… இல்லனா வரேன்னு சொல்லமாட்டேன்… நீங்க ஸ்டார்ட் பண்ணுங்க… நான் அவன் வந்தா கூட்டிட்டு வரேன்…” என பதில் தந்தான் சூரி நண்பனுக்கு.
“அவன் வரட்டும்… அதுக்கப்பறம் ஸ்டார்ட் பண்ணலாம்… இந்த பிரபா இடியட் ஒரு சோலோ ரெஸ்டாரண்ட்ல புக் பண்ணிருக்கலாம்… அவன் ஆளோட டைம் ஸ்பென்ட் பண்ணுறதுக்கு, மாலுக்கு கூப்ட்டு கல்யாண ட்ரீட்டையும் ஒரேதா முடிக்குறான்…” என கடுப்பாக பிரதீப் சொல்ல,
“ஏண்டா… நீயும் உன் ஆளை கூட்டிட்டு வர வேண்டியதுதானே…” என சூரியா கண்சிமிட்டி கேக்க,
“அடேய்… நான் கல்யாணமானவன் டா…” என பதறி சுற்றிலும் பார்த்து சொல்ல,
சூரி, “ஹா ஹா… அதுக்கு ஏண்டா இப்படி பதறி சொல்லுற… வொய்ப்ஃப ஆளுன்னு சொல்ல கூடாத என்ன?…” என சிரிப்புடன் கேக்க,
“ஆள விடுடா டேய்… நான் இந்த கதைக்கே வரல… என் வாய பிடுங்கி… அடுத்து என் வீட்டம்மாவை பாக்கும் பொது போட்டு குடுப்ப… நான் கிளம்புறேன்… நீ அவனோட வா…” என ஓடினான் பிரதீப்.
“வொய்ப்ன்னதும் பதறிட்டு ஓடுறான் பயபுள்ள…” என ஓடும் நண்பனை பார்த்து சிரித்துக்கொண்டே சொல்ல,
“அண்ணா… சூரியா அண்ணா…” என அவனின் பின்னாலிருந்து ஒரு குரல் வர,
“ஹா… யாரு…” என அவன் திரும்ப,
“அண்ணா… என்னை ஞாபகம் இருக்கா… நான் சிந்து…” என கேக்க,
“நல்லாவே ஞாபகம் இருக்கு தங்கச்சி… எப்படி இருக்க…” என சூரி விசாரிக்க,
“நல்லா இருக்கேன் ண்ணா… நீங்க எப்படி இருக்கீங்க…” என அவள் கேக்க,
“நானும் சூப்பரா இருக்கேன்… அப்பறம் எப்படி போகுது… இந்த டைம்ல இங்க…” என அவன் மறுபடியும் கேக்க,
“இங்க ஒரு ஸ்கூல் காம்பெடிஷன்க்கு ஸ்டுடென்ட்ஸ் கூட வந்திருக்கேன் ண்ணா…” என சொல்லி, பின்பு கொஞ்சம் தயங்கி “அண்ணா உங்க பிரெண்ட் எங்க…” என அவனை பார்த்து கேக்க,
அவளின் கேள்வியில் கொஞ்சம் திகைத்து, பின்பு “விஷ்ணுவை கேக்குறியா தங்கச்சி?…” என சூரி தெளிவாக கேக்க,
“ஹான்… ஆமாம் ண்ணா…” என அவள் பதில் சொல்ல,
“அவனா… இப்போ வருவான் ம்மா… என்ன தங்கச்சி ஏதாவது அவன் ஹெல்ப் வேணுமா…” என சகஜமாய் கேக்க,
கிடத்திட்ட நான்கு மாதம் முடிய போகுது… இன்னும் அவனிடம் பணம் தரவில்லை என சொல்ல முடியாமல், “இல்ல ண்ணா… அது…” என அவள் இழுத்து அவனிடம் எப்படி சொல்வது என்று தயங்க,
“சூரி… சாரி… ஐயம் லேட்…” என அவசரமாக சொல்லிக்கொண்டே அவனின் அருகில் தோலில் தட்டினான் விஷ்ணு.
அப்போது தான் எதிரில் நின்றிருந்தவளை பார்க்க, “ஓ மை காட்… மறுபடியும் இவளா… இவ என்னடா விடாது கருப்பு போல, அப்பப்ப வந்துட்டே இருக்கா…” என நினைத்து, அவளை காணாதது போல், “போலாம் சூரி…” என விஷ்ணு சொல்லி திரும்ப,
ஏனென்றே தெரியாமல் கண்ணில் நீர் சுமந்தது பெண்ணவளுக்கு… ஆடவனின் இந்த நிராகரிப்பு பெண்ணவளை சுணங்க வைக்க தலையை குனிந்தாள் பாவை.
பாவையின் முக சுருக்கத்தை பார்த்த சூரியாவோ, “டேய்… டேய்… நில்லுடா… உன்னை தான் சிந்து கேட்டுச்சு இப்போ…” என சூரியா பட்டென்று அவனிடம் சொல்ல,
“இவளை…” என பல்லைக்கடித்துக்கொண்டே கோவமாக அவளை பார்த்தான் விஷ்ணு.
“வந்தப்போ தெரியாத மாறி பாத்துட்டு… இப்போ மட்டும் எதுக்கு முறைக்கணும்…” என்று மனதில் நினைத்து அவனை பார்த்தாள் பெண்.
இவர்கள் இருவரையும் பார்த்த சூரியாவோ, “டேய்… எதோ ஹெல்ப் வேணும் போல… என்னனு பேசிட்டு வா… நான் அங்க சமாளிக்குறேன்…” என சொல்லிவிட்டு நிற்காமல் சென்றான்.
சுற்றியும் திரும்பி பார்த்த விஷ்ணுவோ, அருகிலிருந்த ஒரு காபி ஷாப்பை பார்த்து, அவளிடம் கண்ணால் அங்கே காட்டிவிட்டு முன்னே சென்றான்.
“இப்போ எதுக்கு சூரியா கிட்ட போயி என்னை கேட்ட… உனக்கு மண்டையில மசாலாவே இல்லையா?…” என இருக்குமிடம் கருதி, சத்தம் வராமல் மிக அழுத்தமாக அவன் கேக்க,
அவள் பதில் சொல்லாமல் அமைதியாக இருக்க,
“ஏய் உன்னை தான் கேக்குறேன்… நான் தான் அன்னைக்கு உங்கிட்ட தெளிவா பேசிட்டு தானே வச்சேன்… அப்பறம் என்ன…” என மீண்டும் கேக்க,
சிந்து பதில் பேசாமல் இருக்க,
“ஏய்…” என அவன் ஆரம்பிக்க,
“சிந்து… நான் சிந்துஜா…” என்றாள் பெண் இப்போது.
“இப்போ அது ரொம்ப முக்கியம்… நீ என்னாவது இருந்துட்டு போ… இப்போ இதை சொல்ல தான் என்னை கேட்டியா?…” என அவன் நக்கலாக கேக்க,
“இங்க பாருங்க சார்… சும்மா என்ன எப்பப்பாத்தாலும் இப்படியே பேசாதீங்க…” என நங்கையவள் கோவமாக பேச,
“அப்பறம் என்ன உங்கிட்ட கொஞ்சிட்டு பேச சொல்லுறியா…” என அவனின் குரலில் இன்னும் நக்கல் தாண்டவமாட,
அவனின் இந்த பேச்சு பெண்ணவளை இன்னும் பேச தூண்டியது.
“நீங்க போலீஸ் ஆஹ் வெறப்பா இருக்குறது எல்லாம் உங்க கைதிங்க கிட்ட வச்சிக்கோங்க… பேசிக் ஆஹ் ஒரு பெர்சன் கிட்ட எப்படி பேசுறதுன்னு முதல்ல தெரிஞ்சிக்கோங்க…” என்று சொல்லி,
“நீங்க அன்னைக்கு என்னோட உயிரை காப்பாத்திருக்கிங்க தான்… அதுக்காக எப்பவும் இப்படி அதட்டி பேசிட்டே இருக்கணும்னு இல்ல…” என முழுதாக சொல்லி முடித்தாள் சிந்து.
“சரி… சொல்லி முடிச்சிட்டியா… நான் கிளம்பவா…” என விஷ்ணு அலட்டிக்கொள்ளாமல் கேக்க,
அவனின் பேச்சில் ஆயாசமாக அவனை பார்த்து, “சார்… இங்க பாருங்க… ஒரு நிமிஷம் நான் என்ன சொல்லவரேன்னு கேளுங்க…” என பொறுமையை இழுத்து பிடித்த படி அவள் சொல்ல,
“அதே தான் நானும் உனக்கு சொல்லுறேன்… எனக்கு உன்னை பாக்கணும்னு அவசியமே இல்ல… புரியுதா உனக்கு… அன்னைக்கு நீனு இல்ல… யாரா இருந்தாலும் ஹெல்ப் பண்ணிருப்பேன்… அப்பறம் அப்படி தான் பேசியிருப்பேன்…ஏன்னா என்னோட நேச்சர் ஆஃப் ஸ்பீக்கிங் அது… இதுலாம் உங்கிட்ட எனக்கு எக்ஸ்பிலைன் பண்ணவேண்டிய அவசியம் இல்ல… எனக்கு நீ யாருமில்ல…” என காட்டமாக சொல்லி முடித்தான்.
“ஆமா… நீங்களும் எனக்கு யாருமில்லை தான்… அதுனால தான் உங்க பணத்தை உங்ககிட்ட எப்படியாவது குடுத்துடனும்னு இருந்தேன்… நான் உங்களுக்கு பணம் ரெடி பண்ணிட்டேன்… அக்கௌன்ட் நம்பர் அனுப்புங்கன்னு எத்தனை வாட்டி மெசேஜ் பண்ணிருக்கேன்… கால் கூட பண்ணுனேன்… எதுக்காது ஒரு தடவை நீங்க ரிப்ளை பண்ணிருந்தா… இப்போ இப்படி உங்க கிட்ட பேச்சு வாங்க வேண்டிய அவசியமே வந்துருக்காது… நானும் காசை அக்கௌன்ட்ல போட்டுட்டு போயிட்டே இருந்திருப்பேன்… உங்ககிட்ட எப்படி கொடுக்குறது இவ்வளோ நாளும் உங்களை பத்தி யோசிச்சிருக்கே மாட்டேன்…” என கடகடவென சரவெடியாக வெடித்து முடித்தாள்.
“என்னமா பேசுற இவ…” என சிந்தித்து அவளை பார்த்துக்கொண்டே, “எனக்கு தான் உன் பணம் வேணாம்னு சொல்லிட்டேன்ல… அப்பறம் எதுக்கு நான் போன் அண்ட் மெசேஜ்க்கு ஆன்செர் பண்ணனும்…”
அவனின் இந்த பேச்சில், அவளுக்கு எங்கிருந்து தான் இவ்வளவு உரிமை வந்ததோ, “அது எப்படி நீங்கி என் பணம் வேணாம்னு சொல்லலாம்… நான் குடுப்பேன்… நீங்கி வாங்கி தான் ஆகணும்…” என்றாள் விடாப்பிடியாக,
“உங்கிட்ட என்னோட அக்கௌன்ட் நம்பர் எல்லாம் தரமுடியாது… கேஷ் தான்… அதும் இப்போ குடுத்தா மட்டும் தான் வாங்குவேன்…” என முடித்தான் இறுதியாக.
“ஓஹ்… நீங்க ரொம்ப பெரிய ஆளுல… சாரி கேட்ருக்க கூடாது தான்… இங்கவே இருங்க… நான் போயி எடுத்து வரேன்…” என சொல்லி எழும்ப,
“ஏய்… லூசா நீ…” என அவன் அதட்ட,
சிந்து, “இப்போ தான் சொன்னேன்… இப்படி பேசாதிங்கன்னு…”
“அடிச்சேன்னு வை…” என ஆத்திரமாக சொல்லி, “என்னை என்ன வேலை வெட்டி இல்லாதவன்னு நினைச்சியா… உன் இஷ்டத்துக்கு பண்ணிட்டு இருக்க…” என வெடித்தான் விஷ்ணு.
“சார் ப்ளீஸ்… உங்க மேல ஒரு நல்ல அபிமானம் வச்சிருக்கேன்… இப்படி பேசி அதை கொறச்சிக்காதிங்க…”
விஷ்ணு, “என்கிட்ட இதுவரைக்கும் யாரும் இப்படி பேசுனதே இல்ல… நீ உன்னோட லிமிட் தாண்டி பேசியும், ஒன்னும் சொல்லாம இருக்கேன்… பெரிய புடலங்கா மாறி பேசாத… ஒகே…”
“என்ன புடலங்காவா…” என அதிர்ந்து, “என்ன இப்படிலாம் பேசுறீங்க… அன்னைக்கு போன்ல இம்சை… ஆஹ் அப்பறம் வெள்ளெரிக்கா கூட சொன்னிங்க…” என முறைப்பாய் அவளும் கேக்க,
விஷ்ணு, “ஓ மை காட்… உனக்கு என்ன வேணும் இப்போ… நான் இங்க என் பிரெண்ட்டை பாக்குறதுக்கு வந்தேன்… ஆனா…” என அதற்கு மேல் சொல்லாமல் அமைதியாக,
அவன் சொல்லாமல் விட்டதை, கவனித்த பேதையின் மனமோ, நாம அவங்க வேலையை கெடுத்து, ரொம்ப அதிகமா பேசிட்டோமோ என அவனுக்காக யோசிக்க,
அங்கே ஒரு அமைதி நிலவியது.
வாட்சில் உள்ள மணியை பார்த்துவிட்டு, ” எப்படி போவ… மணி ஆகிட்டு…” என்றான் வேறேதும் கேக்காமல்.
அவளும் அப்போது தான் யோசித்தாள். அவள் தங்கியிருந்த ரூமிற்க்கு அருகில் மால் இருக்க, ஒரு தடவை நடந்து சென்றுவிட்டு வரலாமென்று தான் வந்தது.
கொஞ்சம் தயங்கி அவனை பார்க்க,
“பேசுறதையெல்லாம் பேசிட்டு இப்போ ஒண்ணுமே தெரியாதா மாறி பாவமா பாக்குறதை பாரு…” என மனதில் அவளை திட்டிக்கொண்டே, “ஏதாவது கேப் புக் பண்ணவா… எங்க போகணும்…” என அவன் கேக்க,
அவள் மனதோ மற்றதை விடுத்து, “கொஞ்சம் நல்லவங்க தான்…” என சான்றளித்தது.
அவன் பார்வையை உணர்ந்து, “இல்ல இங்க பக்கம் தான்…” என அவள் பதில் சொல்ல,
“சரி கிளம்பு… போய்ட்டு எனக்கு மெசேஜ் பண்ணு…” என சொல்லிவிட்டு அவன் எழ,
“ஹான்… ஆனா நீங்க தான் ரிப்ளை பண்ண மாட்டீங்களே…” என்றாள் பாவை.
விஷ்ணு, “நான் பண்ணலைனா என்ன… நீ பண்ணு…”
“நான் பத்திரமா போயிப்பேன்… ஆனா உங்களுக்கு மெசேஜ் பண்ண மாட்டேன்…” என சொல்லிவிட்டு எழுந்து சென்றாள் சிந்துஜா.
போகும் அவளை பார்த்துக்கொண்டே, இன்னைக்கு பட்டாசு பரங்கிக்காய்யா வெடிச்சிட்டா… இதும் நல்லா தான் இருக்கு… என்னைய என்னவோ பண்ணுறா இவ…” என அவளை பற்றி நினைத்துக்கொண்டே நண்பர்களை காண சென்றான்.