அது ஒரு பெரிய மால் காலை பத்து மணி அளவில்
ஹேய் என்னடி எல்லாரும் வந்தடோம் சஹானாவ காணோம்…மீனா
வருவாடி அவ என்ன நம்மல மாதிரியா..
பாவம் குழந்த குட்டினு வாழ்ரா ஏதோ அவர் ஹஸ்பண்ட் விட்டனால இன்னகி வரேன் சொல்லிருக்கா இல்லேன அவ வரதே கஷ்டம் பாவம் டி அவ….வினிதா
ஆமா டி ,
நீ சொல்லுடி உன்னை எப்பிடி
விட்டாங்க ரோஜா….மீனா
அதுவா அவரு பர்ஸ்ட் வேணா தான் சொன்னாரு அப்புறம் அத்தைகிட்ட சொன்னேன் சரி வீட்டுலேயே தானா இருக்க போயிட்டுவா நாளைக்கு குழந்த குட்டினு வந்துட்டா போகமுடியாது அதான் அவர்ட சொல்லி அனுப்ப சொல்லிட்டாங்க..அவர் தான் விட்டுட்டு போனாரு ….ரோஜா
ம்ம் கல்யாணம் ஆன புருஷன் கூட இல்ல பேமிலியா தான் போகனும் பிரண்ஸ் கூடனா மட்டும் ஏன் அனுப்பமாட்டுராங்க தெரியல
ஆனால் அவங்க மட்டும் பிரண்ஸோட சுத்தனும்
இதான் கல்யாணம் ஆன பெண்கள் வாழ்ர வாழ்க்கைல,,…கவிதா
ஆமாடி பர்ஸ்ட் புருஷன் பிண்ணாடி போனும் அப்புறம் குழந்த பிண்ணாடி போனும் இடையில மாமனார் மாமியார் அவங்க பின்னாடி கொஞ்சம் இதான் டி வாழ்க்கை என்றே சொல்லிக்கொண்டு உள்ளே நுழைந்தாள் சஹாணா,..
வாமா வா இதான் டைமா வருதுக்கு….கவிதா
இல்லடி பையன தூங்கவச்சுட்டு வரேன் அதான் லேட்டு அவன,அம்மாவேற பார்த்துக்கோங்க சொல்லிட்டு வந்துருக்கேன் எப்ப எந்திரிச்சு அழுவானோ இருக்கு….சஹானா
அடியேய் இப்பையும் அதே நினைப்பா…மீனா
ஹேய் குழந்த நினைப்பு வராதாடி நீ ஏன் இப்பிடி கேட்குற….ரோஜா
அது இல்ல ரொம்ப நாள் கழிச்சு பிரண்ஸா சேர்ந்திருக்கோம் நம்மல பத்தி பேச வீட்டு நினைப்பு இருந்தா அதான் சும்மா கேட்டேன்….அது இருக்கட்டும் நீ எப்ப என்னை அத்தையாக்குவா ரோஜா…..மீனா
முதல்ல நீ எனக்கு அண்ணியாகு அப்புறம் நான் உன்னைய அத்தையாக்குறேன்,…ரோஜா
ம்ம்…..போடி உங்க அண்ணே என்னைய கண்டுங்கவே மாட்டுறான் நீ வேற ஏன்டி…மீனா
ஏன்டி இங்கையும் லவ் பத்திதான் பேசனுமா வேற பேசலாம் டி,….கவிதா
இல்லடி நேத்து தான் லவ்ர்ஸ்டே முடிஞ்சுருக்கு சரி எதாவது ரொமான்ஸ் நடந்ததா கேடட்கலாமுனு தான்டி….ரோஜா
அதலாம் ஒன்னும் நடக்கல டாப்பிக சென்ஜ் பன்னுங்க என்று மீனா கூற சஹானா,ரோஜா கவிதா வினாதா நால்வரும் பேசைமாற்றி தன் கல்லூரி நினைவுகளை பகிர்ந்தன….
காதலர்தினமென்பதால் அந்த மால் முழுதும் சிவப்பு ஹார்ட்டின் பலூனால் சிவப்பு ரோஜாவால் அலங்கரிக்க பட்டிருந்தது….அதை அனைவரும் ரசித்துக்கொண்டிருந்தனர்… நிறைய காதலர்கள் வந்திருந்தனர்,,,
போன வருஷ லவ்ர்ஸ்டே எப்பிடி கொண்டாடுனோம் தெரியுமா,,..மீனா
ஐய்யோ ஆயம்பிச்சுடாலே,…வினாதா
ஒ…தெரியுமே திருட்டுதனமா காலேஜ்,கட்டடிச்சு போனிங்களே அதானே….சஹானா
ஆமா சரிடி உங்களுக்கு ப்ரோபோஷ் வரலையா உன் ஹஸ்பண்ட் எதுவும் சப்ரைஸ் பன்னலையா….மீனா
போடி கடுப்ப கிளப்பாத,
நீவேர….ரோஜா
ஏன்டி சரி எதுவும் ப்ரோப்போஸ்லாம் வரலையா….மீனா
ஆமா அப்பிடியே வந்துட்டாலும் போடி நமக்க்கேலாம் லவ்,சேட்டாகது ஏன் நம்ம செட்டுகே செட்டாகாது….கவிதா
அதானே டி லவ் பன்ற என்னையும் இப்பிடி உங்க கூட செலபிரேட்,பன்ன விட்டுடிங்க….மீனா
வேணும்னா,ஷாருகான் அமீர்கானோட செலபிரேட் பன்றிங்கள…என்று கூறி அனைவரும் கலாய்த்து மகிழ்ச்சியாக இருந்தனர்…கல்லூரி முடிந்து ஒரு ஆண்டு கடந்து அனைவரும் அன்று தான் பார்த்துக்கொண்டனர்..போன்னில் வாட்ஸ்சபில் பேசிக்கொள்வதோடு சரி யாரும் யாரையும் பார்த்துக்கொள்ள வில்லை அதனால் இந்த சந்திப்பு இன்று மகிழ்ச்சியாக இருந்தனர் ….
சரி சொல்லுங்க இப்ப,யாராவது ப்ரோபோஸ் பன்ன என்ன பன்னுவீங்க என்று மீனா கேட்க யாரைடி கேட்குர என்று சஹானா கேட்க
எல்லாரையும் தாண்டி என்று மீனாகூற,
ஏன்டி எனக்கும் ரோஜாவுக்கும் கல்யாணம் ஆயிருச்சு எங்கிட்ட எப்படி ப்ரோஸ் பன்னுவாங்க கவிதா வினிதாட வேணா பன்னுவாங்க என்று சஹானாகூற ஏன்டிநமக்கு மட்டும் தானேதெரியும் கல்யாணது வேற,யாருக்கும் தெரியாதே சோ பன்னா என்ன பன்னுவா….
என்ன அழகா இருந்தா சைட்,அடிச்சு எனக்கு கல்யாணம் ஆயிருச்சுனு,சொல்லவோம் என்று ரோஜா சொல்லி கண்டித்தால்
அடிப்பாவி….என்று மீனா கூற சந்தோஷ்சமா இருந்தனர்…..
ஏய் அங்க பாரேன் ஒருதன் ப்ரோப்போஸ் பன்னவரான் பாரு என்று மீனா கூற,
ஆமா அழகா தான் இருக்கான் யாருக்கு கொடுத்து வச்சதோ…வினிதா
ஐய்ய….ரோஜா
நம்ம டேபிள நோக்கி நம்மள யாரையாவது ப்ரோபோஸ் பன்ன வந்த என்னடி பன்னுவீங்க என்று மீனா கேட்க
பொறாமை படுவேன் டி நானு என்று வினிதா கூற
ஹேய் ச்சீ விடுங்கடி இந்த டாப்பிக்க என்று ரோஜா கூற அதை கவனிக்காது அவனே கவனித்தனர்…..ஆனால் ரோஜாவோ அவனை பார்க்காமல் திரும்பி அமர்ந்திருந்தால்…அவன் கையில்,ரோஜா பூங்கொத்தோட அவர்கள் டேபிள் நோக்கியே வர அவர்களுக்கு அதர்ச்சியாக பயமாக இருந்தது அவனும் டேபிள் அருகே நெருங்கினான்…
அவர்கள் இதயதடிப்பு,எகிரியது இதையாவும் அறியாத ரோஜா புக்கில் படம் பார்த்துக்கொண்டிருந்தால் அவள் பின் அவன் வந்து நின்றான்….
அவள் பார்க்க வொயிட்செர்ட்,பிளாக் பான்ட் கையில் ரோஜா பூக்களோடு அவள் பின்னே வந்து நின்றான்…. அவளும் அவனை பார்க்க அவனும் அவளை தான் பார்த்தான் அவளோ பிங்க் காட்டன் சாரியில் அழகாக இருந்தாள்….
அவளிடம் அருகில் அந்த பூங்தோடு வந்து நிக்க அவள் எழுந்து நின்றாள்..
ஹாய் ஜ யம் பிரபு
ஹாப்பி வேலன்டைஸ் டே என்று கூறி அதை கொடுக்க அவள் வாங்காமல் அவனையே பார்க்க
ஐ லவ் யூ என்று அவள் கண்னை பார்த்தவாறே கூறினான் யாவரும் உறைந்து போயினர்…
அவள் முன் சொடக்கிட்டு இந்த என்றே அவளிடம் கொடுக்க…
எக்கூயூஸ் மீ எனக்கு கல்யாணம் ஆயிருச்சு என்று மிக தன்மையாக அவள் கூற
அவனோ ம்ம் தெரியும்…..
வாட் தெரிஞ்சே எப்பிடி நீங்க ப்ரோபோஸ் பன்னலாம்,..என்று மீனா கேட்க
நான் லவ் பன்ற பொண்ணுகிட்ட தானே ப்ரோபோஸ் பன்ன முடியும் என்று ரோஜாவை பார்த்தே கூறினான் அவளோ பேக்க பேக்க முழித்துக்கொண்டிருந்தாள்….
அதேப்படி கல்யாணம் ஆன பொண்ண காதலிப்பீங்க என்று வினிதா கேட்க….
நான் கல்யாணம் ஆகத பொண்ண தான் காதலிச்சுசேன் ஆனால் நான் காதலிக்கிற பொண்ணுக்கு கல்யாணம் ஆயிருச்சு….
என்ன சொல்லிறிங்க என்று சஹானா கேட்க
அவன் சிரித்துக்கொண்டே ரோஜாவிடம் திரும்பி நான் உன்ன காதலிக்கிறது உண்மை தான் அது உன் கல்யாணத்துக்கும் முன்னாடியும் இப்பவும் சரி எப்பவும் சரி உன்ன மட்டும் தான் காதலிப்பேன் காதலிச்சுடே இருப்பேன்….
இப்ப கூட நான் உன்ன தேடி வந்தது என்ன கல்யாணம் பன்னிக்கோனு கேட்க இல்ல நான் ரோஜாவனம் ஒரு டரஸ்ட் முதியோர் அனாதை குழந்தைகளுக்காக வைச்சுருகேன் நான் அத ஆரம்பிச்சதுக்கு நீ தான் ரீசன் உன்னால உனக்காக தான் அத ஆரம்பிச்சேன் சோ நீ வரனும் அங்க என்னோட ஆசை அதான் என்று கூறி அந்த டர்ஸ்டின் விசிட்ங் கார்டையும் பூங்கொத்தையும் டேபிளில் வைத்துவிட்டு உன்னோட ஹஸ்பன்டையும் கூட்டிட்டு வா பாய் டேக்கேர் லவ் யூ என்று கூறி சென்று விட்டான்..,
அவன் சென்ற திசைப்பார்த்து நின்றாள் அதிர்ச்சியிலும் ஆச்சிரியத்திலும்…
பின் அனைவரும் அவரவர் வீட்டிற்கு சென்றிட….தன் கணவனிடம் அனைத்தையும் ஒப்பித்தால் சிறு பயத்தோடு அதை கேட்ட அவளது கணவனோ அவளை பார்த்துக்கொண்டிருந்தான் அவளோ பயத்தின் உச்சிக்கு செல்ல அவள் கணவனோ சிரித்தான், அவளோ அவனை பார்த்து ஏன் சிரிக்கிரிங்க….என்று அவள் கேட்க
பின்ன என்னடி என்ன தப்பு பன்னனு இப்பிடி பயப்படுற,அவன் தானே உன்ன லவ் பன்றான் நீ இல்லேல
நீ தான் அவனபார்த்தே இல்லைல அப்புறம் ஏன் பயம் நான் எதுவும் தப்பா நினைப்பேனுனா என்று அவள் கணவன் கேட்க அவள் தலையசைத்தால்…
லூசு நான் ஏன் உன்ன தப்பா நினைக்க போறேன் ஏன் பொண்டாட்டிய பத்தி எனக்கு தெரியாத விடுமா
இதையே மனசுல போட்டு குழப்பிக்காம இரு சரியா…
ஆனா ஒன்னேஒன்னு டைவுட் என்று அவன் சொல்ல என்ன டைவுட்,போயும் போயும் உன்னையா அவன் லவ் பன்னனும் வேற பொண்ணே கிடைக்கலையா என்று கேட்க
பயப்புல முன்னாடி காதல சொல்லிருந்த நான் தப்பிச்சுருப்பேன் என்று கூற யூயூயூ…தலையனை வைத்து அவனையடித்தால் பின் அந்த இரவு நீண்டது…
சில நாட்கள் கழித்து
ஏங்க எங்க போறோம் சொல்லுங்க என்று ரோஜா தன் கணவனை படுத்திக்கொண்டிருந்தாள் கேள்வியாய் கேட்டு அவனோ அசராமல் காரை மட்டும் செலுத்திக்கொண்டிருந்தான்….
அவளின் நச்சரிப்பை தாங்க முடியாமல்,காரை நிருத்தினான்…
அடியேய் வாய் மூடவே மாட்டியா ஒழுங்க பேசாம வா என்று அவள் கண்ணை போத்தி இத அவிழ்க்க கூடாது நான் சொல்லற வரைக்கும் புரியுதா என்று கூறி வண்டியை எடுத்தான் அவளும் அமைதியாக இருந்தாள்…பின் அந்த ஒரு இடத்தில் நின்றது அவளை அவன் கைப்பிடித்து இறக்கி கூட்டிச்சென்றான் அந்த இடத்தின் உள்ளே அழைத்து சென்றான்…பின் கண்னை திறந்திட அதிர்ச்சியடைந்தாள்…அவளை சூற்றியா ஐம்பதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் முதியோர்கள் இருந்தனர்….அவள் சுற்றி அவளுக்காக காத்திட்டுருந்தனர் அவள் முன் கேக்கை வைத்துக்கொண்டு….அன்று தான் அவள் பிறந்த நாள்…அனைவரும் அவள் முன் நிற்க பிரபுவும் வந்து நின்றான்…அனைவரும் பிறந்தநாள் பாட்டு பாடினர் கைத்தட்டினர் அவளும் மெழுகுபர்த்தி ஊதி கேக்கை வெட்டினாள் பின் அனைவருக்கும் பகிர்ந்தனர்….
பிரபு அவள் முன்வந்து தன் பரிசை கொடுக்க அவளோ தன் கணவனை பார்த்தாள் அவள் கணவனோ கண்சைக்க பெற்றுக்கொண்டாள்….அங்கிருந்த கூட்டம் கலைய ரோஜா தன் கணவனிடம் எப்பிடிங்க இங்க என்று அவள் தயங்கி கேட்க நீ சொன்னதுக்கப்புறம் நான் அவர்ட பேசுனேன் ரொம்ப நல்லவர் தான் சோ அவரோடா ஆசை நீ இங்க வரனும் அதான் உனக்கும் இந்தமாதிரி செலபிரேட்,பன்றது பிடிக்குமே அதான் இந்த சப்ரைஸ் சரி போய் சுத்தி பாரு போ இந்த ரோஜா வனத்த என்று கூற அவளும் சுத்தி பார்க்க சென்றாள்…சுத்திப்பார்க்க மிக அழகான இடம் ரோஜாக்களாக தான் நிறையா இருந்தது அங்கு இருந்த குழந்தைகளுடன் முதியவர்களுடன் பேசி பலகினாள்….பின் அவள் சுற்றியும் பார்த்து வந்துக்கொண்டிருக்க அங்கே சிறுமி ரோஜாக்களை பார்த்து தனியாக நின்றுக்கொண்டிருக்க ரோஜா அவள் அருகில் சென்றாள்….ஒய் பாப்பா நீ மட்டும் ஏன் தனியா இருக்க என்று கேட்க அவள் திரும்பினாள்….அந்த குழந்தை அழுதுக்கொண்டு இருந்தது…அதை கண்டவள் அக்குழந்தையை தூக்கி சமாதானம் செய்தால்,,,,உங்க பெரு என்னமா என்று ரோஜா கேட்க அந்த பாப்பா பிரஜா என்றது….ஏன் அழுரீங்க என்று ரோஜா கேட்க
அம்மாவ பார்த்தா அம்மானு கூப்பிட கூடாதாம் அதான் என்று குழந்தை கூற…யாரு அப்பிடி சொன்னது என்று கூற ஏன் அப்பா என்றது அந்த குழந்தை…..
அப்பாவ அப்பிடி சொன்னது வா போய் கேட்கலாம் என்று ரோஜா சொல்ல
சரி என்று தலையாட்டி அவளை ஒரு அறையில் அழைத்து சென்றது அவளும் உள்ளே செல்ல அங்கே ரோஜாவின் ஒவிய புகைப்படாமாக இருந்தது,அதை கண்டதும் அதிர்ச்சியானள்….இது தான் எங்க அம்மா ரோஜா என்று சொன்னது…இவங்க பார்த்தா கூட அம்மா சொல்லக்கூடாது அப்பா சொன்னாரு என்று சொல்லி நான் உன்ன,அம்மானு கூப்பிடவா என்று கேட்க அவள் தலையசைத்து இரு கைகளை விரித்த அழைக்க அந்த குழந்தையும் அம்மா என்றே கூறி அவளை தொற்றிக்கொள்ள அவளும் அனைத்துக்கொண்டாள்…பிரஜா என்று பிரபு அழைக்க இருவரும் திரும்பினர்….
நான் உன்ன என்னசொல்லிருக்கேன் அப்பீடி கூப்பிடாதேனு அவன்சொல்ல விடுங்க சின்ன குழந்தைதானே அவளுக்கு என்ன தெரியும் என்று கூற,பிரஜா போய் விளையாடு என்று பிரபு சொல்ல அவளிடம் இறங்கி சென்றிட….
உங்களுக்கு எதுவும் பிரச்சனை வரக்கூடாதுனு தான் அப்பிடி சொன்னேன் அவளுக்குகாக நான் சாரி சொல்லிகிறேன் என்று அவன் கூறா
ஆமா என்ன,எப்பிடி உங்களுக்கு என்னோட ஆசையினு இதான் எப்பிடியும்தெரியும் ஏன் ஆசை இதானு எப்பிடி அவள் கேட்க…அவன் கூற ஆரம்பிச்சான்….நான் உன்ன டென்த் படிக்கும் போதே உன் பார்த்துருக்கேன் அப்பையே பிடிச்சுபோச்சு உன்ன பலோபன்னேன் உனக்கு என்னென்ன பிடிக்குமோ அதேல்லாம் தெரிடீசுட்டேன் மூனுவருஷமா பலோதான் பன்னேன் ஆனால் ஒருவாட்டிகூட நீ பார்க்கல என்ன நானும் ஏன் லவ் காலேஜ்படிக்கும் போது சொல்லம்னு நினைச்சேன்…. வீட்டுல சின்ன பிரப்ளம் சோ வெளிநாட்டு போக வேண்டிய சூழ்நிலை சோ போய்டேன் திரும்பி வரப்ப உன்னக்கு கல்யாணம் ஆயிருச்சு தெரிஞ்சு ரொம்ப வெக்ஸாயிடேன் எல்லாரும் மாதிரி சிகட்ரெட் தண்ணீ சுத்த தெரியல அதான் என்ன மாதிக்கனும் நினைச்சு எதாவது பன்னனும் யோசிச்சேன்…அப்பதான் ஒரு அக்சிடேன் நடந்துச்சு அதுல அம்மா அப்பா,சம்பவ இடத்துலே இறந்தட்டாங்க இந்த குழந்த உயிருக்கு போராட்கிட்டுருந்துச்சு சோ,அந்த குழந்தைய காப்பாத்தி நானே வச்சுக்கிட்டேன் உன்னோட பெரையும் ஏன் பெரையும் சேர்த்து பிரஜானு வச்சேன் அவளுக்காக வாழனும் தோனுச்சு அதே சமயம் இதேமாதிரி பல குழந்தைகளும் இதை மாதிரி அமீமா அப்பா இல்லாமல் சில முதியலர்கள் பிள்ளை இல்லாமல் கஷ்டம் படுறாங்கக அவங்களுக்கு எதாவது பன்னனும் தோனுச்சு அப்ப நீ ஒருவாட்டி உன்னோட கனவ உன் பிரண்டுகிட்ட சொல்லிட்டுருந்த பஸ்ஸல போகும் போது எனக்கு குழந்தைகள் முதியோர் காப்பகம் வைக்கனும் ஆசை நீ சொன்ன சோ அப்ப யோசிச்சேன் நான் உனக்காக அந்த ஆசைய நிறைவேற்றனும் ஆசைப்பட்டேன் நிறைவேத்திடேன் ஆனால் உன்ன இழந்துட்டேன்…..என்று அவன் கூற
இப்பிடி எவ்வளவு நாள் இருக்க போறீங்க மேரேஜ் பன்னிக்கமா சீக்கிரமி கல்யாணம் பன்னிக்கோங்க …. ரோஜா
ஒரு காதல் ஒரு இதயம் ஒருத்திக்கு தான் அது உனக்கு மட்டும் தான் சோ வேற ஒருதங்கவங்கல நினைக்காது….நான் ஏன்ன் பிரஜா குட்டி இந்த இல்லம் போதும் வேற வேணாங்க…
இதுவே போதும் என் வாழ்க்கைக்கு என்று கூறி சென்றவிட அவள் கண்ணில் கண்ணீர் சிறிதாய் எட்டிப்பார்த்தது…பின் அனைவரிடம் பேசிவிட்டு தன் கணவருடன் கிளம்பினாள்….அங்கு இருந்த அனைவரும் அவளிடம் அடுத்த முறை வரும்போது சந்தோஷ்ச விஷாயத்துடான் வரவேண்டும் என்று கூறி வழியனுப்பிவைத்தனர்,,,,அவள் காரில் ஏரி அமர்ந்தாள்….கார் கிளம்ப அவள் ஏரியமர்ந்தவள் அவனை திரும்பி பார்த்தாள் அவவோ அவளோட சேரமுடியாத வலியதை கண்ணீல் தேக்கி வைத்தே கண்டான் இருபார்வையும் ஏதோ வலியுடன் சந்தித்தே பிரிந்தது….
உன்னை காண
பெற்றேன் வரமது
உன்னில் சேராமல்
சாபமானது.
முற்றது……