பயத்தை விதைத்தால்
வாழ்க்கை தளரும்………..
பயத்தை புதைத்தாள்
வாழ்க்கை மலரும்………..
ஹே அம்மு..!!ஹாஸ்பிடல் வந்து ஐஞ்சு நிமிஷம் ஆச்சு என்றிட அப்போது தான் சுயநினைவிற்கு வந்தவள் வேகமாக இறங்கி அவனுக்கு பாய் சொல்லிவிட்டு ஹாஸ்பிடல் உள்ளே சென்று விட்டாள்.
அவளை ஹாஸ்டலில் விட்டவன் நேராக வீடு நோக்கி பயண பட்டான் ஜீவா.
இங்கே வேகமாக உள்ளே வந்த நந்தினி தனது கை ரேகையை பதித்து விட்டு அங்கு இருந்த நோட்டில் தனது கையொப்பத்தை போட்டு விட்டு உடை மாற்ற சென்று விட்டாள் .
வீட்டிற்கு வந்த ஜீவா தனது வண்டி சாவியை டேபிளில் வைத்தவன் தொப்பென்று சோஃபாவில் அமர்ந்து மொபைலை நோண்ட தொடங்கினான்.
அங்கே நந்தினி தன் உடையை மாற்றி விட்டு வந்து தன் தோழியை காண சென்றாள்.
ஹே நந்து …!!! இன்னைக்கு ஏன் லேட்? நல்ல வேளை நீ பார்க்க வேண்டிய வார்டின் உடைய டாக்டர் கார்த்திக் ஒருவாரம் கேம்ப் சென்றதால் நீ தப்பித்தாய் என்று அவளுடைய தோழி கிர்த்திகா கூறிக்கொண்டு இருக்க அவளது முகத்தில் தௌதவ் சண்ட் வால்ட் பல்ப் எரிந்தது.
வீட்டில் கொஞ்சம் அதிகமா வேலை இருந்துச்சி டி..அதனால தான் இன்னைக்கு கொஞ்சம் லேட் ஆய்டுச்சி .. அதான் அப்பு என்னை கொண்டு வந்து விட்டுட்டு போனான் என்க
சரி வா போலாம் உன்ன வேற நம்ம சீஃப் டாக்டர் கூப்பிட்டார் என்று அவளை சீஃப் டாக்டர் அறைக்கு அழைத்து சென்றாள்.
சரி டி நீ போய் சீஃப் டாக்டர போய் பாரு . நான் என்னோட வார்டுக்கு போறேன் என்று கீர்த்தி அவளிடம் சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள்.
[the_ad id=”6605″]
கேம்பில் …,,
டேய் கார்த்திக்..!!ஏன் டா இப்படி முகத்தை தூக்கி வச்சுட்டு இருக்க? உனக்கு என்ன ஆச்சு? என்று வினவிக்கொண்டே அவன் இருக்கும் இடத்தை நோக்கி வந்தான் வெங்கட்.
டேய் எனக்கு இங்க இருக்கவே புடிக்கல டா என்று கார்த்திக் கூற என்ன டா சொல்ற .,உனக்கு தான் இந்த மாதிரி கேம்ப் வந்தா ரொம்ப புடிக்குமே என்றிட மன்னாங்கட்டி நீ வேற ஏன் டா கடுப்பேத்துற எனக்கு இந்த மாதிரி கேம்ப் போறது எல்லாம் சுத்தமா புடிக்காது என்று சொல்ல வெங்கட் அதிர்ச்சியுற்றான்.
என்ன டா இப்படி சொல்ற நீ தான ஒரு நாள் நந்தினி கிட்ட எனக்கு கேம்ப் போறதுன்னா ரொம்ப புடிக்கும் அதுவும் இல்லாமல் இல்லாதவுங்களுக்கு செய்றது பெரிய புண்ணியம்ன்னு சொல்லிக்கிட்டு இருந்த என்று வெங்கட் சொல்ல அதற்கு கார்த்திக் ஆமாம் நான் தான் சொன்னேன் தான் அதுக்கு இப்ப என்ன என்று அசால்டாக சொல்ல
அப்புறம் எதுக்கு டா இப்போ கேம்ப் போறதே புடிக்காதுன்னு சொல்ற என்று வினா எழுப்பிட
அட மக்கு பயளே அது அவள ஏமாத்துறதுக்காக நான் சொன்ன பொய் டா ….அப்ப தான அவ என்ன நம்பு வா அதுக்காக தான் ஒரு பிட் போட்டேன் . அவளும் அத நம்பிட்டா எனக்கு அது தான் வேணும் என்றவன் இந்த கேம்ப் மட்டும் இப்ப இல்லாம இருந்ததுன்னா இன்னேரம் அவள எனக்கு சொந்தம் ஆக்கிருப்பேன் பக்கத்தில் இருந்த டேபிளில் ஓங்கி ஒரு குத்து விட்டான் .
இதை கேட்ட வெங்கட்க்கு பேர் அதிர்ச்சியாக இருந்தது. அவன் சொன்னது உண்மைதானா இல்லை என் காதில் தான் தவறாக விழுந்ததா என்று தன் காதுகளை சரி செய்ய தொடங்கினான். இதை பார்த்த கார்த்திக்கிற்கு சிரிப்பு தான் வந்தது.
தீடீர்ன்னு இந்த கேம்ப்க்கு போக சொல்லிட்டாங்க .இல்லான இன்னேரம் எனக்கு இறையா இருந்திருப்பா.நான் போட்ட பிளன் எல்லாம் ஃபிளாப் ஆயிடுச்சி.பரவால இந்த ஒன் வீக் நிம்மதியா இருந்துட்டு போகட்டும் என்று ஒரு கொடுரமான அவனது எண்ணத்தை வெளியிட்டவன் தன் மொபைலை பார்த்து சிரிக்க தொடங்கிவிட்டான்.
அவனது இந்த செயல்களை கண்டு தன் நண்பன் கூறியது சரியே .. முதலில் அவனுக்கு அழைப்பு விடுத்து பேச வேண்டும் என்று மனதில் எண்ணிக்கொண்டான்.
ஆனால் கார்த்திக் ஃபோனை பார்த்து ஏன் சிரிக்கிறான் என்று யோசிக்க மறந்து விட்டான் வெங்கட்.
இங்கே நந்தினி சீஃப் டாக்டரின் ரூம் கதவை திறந்து மே ஐ கம் இன் சார் என்று கதவு அருகே நின்று கொண்டு கேட்க..,,yes come in என்றார் ..
குட் மார்னிங் சார் …!! நீங்க வர சொன்னீங்கன்னு கீர்த்தி நர்ஸ் சொன்னாங்க என்க ஆமாம் நந்தினி நீங்க தான் பேஷன்ட் நம்பர் 201 பார்த்தீங்க . அதுவும் அவுங்க நம்ம டீன்னோட சொந்தகாரங்க தானே என்றிட ஆமாம் சார் அவுங்க நம்ம டீன்னோட ரிலேட்டிவ் தான் .இப்போ அவுங்களுக்கு என்ன பிரச்சினை சார் என்று கேட்க
அவுங்களுக்கு இப்போ பக்கவாதம் வந்துடுச்சின்னு சார் என்கிட்ட போன் பன்னி சொன்னார் என்றார் அந்த சீஃப் டாக்டர்.
[the_ad id=”6605″]
அவுங்களுக்கு இப்போ உங்களோட உதவி தேவை படுதாம் .அதனால் சார் என கூப்பிட்டு உங்கள அவுங்களோட வீட்டில் இருந்தே கவனிச்சு கொள்ள முடியுமான்னு கேட்க சொன்னாரு மா என்க …
இது எப்படி சார் என்னால் முடியும் என்றவளை பேசவிடாது உங்களால மட்டும் தான் என்னுடைய அம்மாவை காப்பாற்ற முடியும் என்று கூறிக்கொண்டே உள்ளே நுழைந்தான் ஒருவன்.
குட் மார்னிங் என்று கூறிக்கொண்டே சீஃப் டாக்டர் எழுந்து தன் கைகளை அந்த இளைஞனிடம் நீட்ட அந்த இளைஞனும் அவருக்கு கை கொடுத்துவிட்டு நந்தினியை பார்த்தான்.
அவளும் அந்த நபரையே பார்த்து கொண்டு இருக்க ,,சீஃப் டாக்டர் அவளுக்கு அவரை அறிமுக படுத்தி வைத்தார்.
நந்தினி இவரு தான் உதய்கிருஷ்னன் .நம்ம சார்மேன்னோட சொந்தம் .நம்ம டீன் கூட இருக்காங்க .இவரோட அம்மா தான் no 201 பேஷண்ட் என்றிட நந்தினி அவருக்கு பொதுப்படையாக தன் வணக்கத்தை தெரிவித்தாள்.
மிஸ் . நந்தினி நான் சொல்ல வரத நீங்க கொஞ்சம் கேள்ளுங்க …??எங்க அம்மாக்கு உங்களோட அணுகுமுறை தான் பிடிச்சிருக்காம்… என்னோட அம்மா உங்களோட உதவியை தான் வேண்டும் என்று அடம் பிடிக்கிறாங்க……உங்க அம்மாவிற்கு இப்படி ஒரு நிலைமை வந்தா இப்படி தான் பார்த்திட்டு சும்மா இருப்பிங்களா நந்தினி என்று உதய் பொறுமையாக ஆரம்பித்து கேள்வியில் முடித்தான்..
இதை கேட்ட நந்தினிக்கு அழுகை வர தன் கண்களில் வழிந்த ஒரு சொட்டு கண்ணீரை அவர்கள் பாரா வண்ணம் துடைத்து கொண்டாள்.
இன்னைக்கு ஒருநாள் யோசிச்சு நல்லா பதிலா தான் நீங்க சொல்லுவீங்கன்னு நான் எதிர் பார்க்கிறேன். எங்க அம்மாவோட ஹெல்த் தான் எனக்கு முக்கியம் . நாளைக்கு உங்களோட நல்ல பதிலுக்காக காத்திட்டு இருப்பேன் என்று கூறிவிட்டு இப்போ நீங்க போய் உங்க வேலையை பார்க்கலாம் என்றான் உதய்.
நந்தினி வெளியே சென்றதை பார்த்த சீஃப் டாக்டர்… ஏன் உதய் நந்தினியை இங்கிருந்து அனுப்ப முயற்சி செய்து கொண்டு இருக்கீங்க என்று தன் மனதில் தோன்றிய கேள்வியை கேட்டார்…
டாக்டர் நான் எதற்கு அந்த பொண்ண இங்கிருந்து அனுப்ப போறேன் சொல்லுங்க…இவுங்கள விட நல்ல நர்ஸை என்னால் ஏற்பாடு செய்ய முடியும் . ஆனால் எங்க அம்மாவுக்கு தான் யாரோட அணுகுமுறையும் பிடிக்கவில்லை… இறுதியாக தான் அவர்கள் நந்தினியின் பெயரை கூறினார்.
அதனால் தான் நான் இங்கே வந்திருக்கிறேன்.எனக்கு எங்க அம்மா தான் முக்கியம் .அதற்கு அந்த பெண் என்னுடன் வந்து தான் ஆக வேண்டும் என்று கூறி முடித்தான் .
இல்லையெனில் பெரிய ஆபத்தை அந்த நர்ஸ் ஃபேஸ் பண்ண வேண்டும் என்று மனதில் நினைத்துக்கொண்டான்.
சரி உதய் என்று கூறிவிட்டு ரௌண்ஸ் பார்க்க சென்றுவிட்டார் அந்த சீஃப் டாக்டர்.
அங்கே கார்த்திக் தன் நண்பன் ராஜிவ்க்கு அழைப்பு விடுத்து ” டேய் மச்சி ..!! நந்தினி இந்த டைம் மிஸ் ஆகிட்டா டா .அவள எப்படியாவது அடையனும்ன்னு ஆச பட்டேன் .ஆனா இப்போ சின்னதா ஒரு கேப் விழுந்துடுச்சி டா…அந்த சொட்ட தலையன் என்ன கேம்ப்க்கு அனுப்பி வச்சிட்டான் என்று கூறிக்கொண்டு இருந்தான்.
மச்சி விடு டா இன்னும் ஒரு வாரம் தான டா பாத்துக்கலாம் விடு ,, அதுவரைக்கும் அவ நிம்மதியா இருந்துட்டு போகட்டும் என்று கூற சரி மச்சி நான் அப்புறம் பேசுறேன் என்று கூறிவிட்டு அழைப்பை அணைத்தான் கார்த்திக்.
கார்த்திக்கின் அழைப்பை அணைத்துவிட்டு தன் காதலியான கீர்த்திக்கு அழைப்பு விடுத்தான்..
சிறிது நேரத்திலே அழைப்பை ஏற்ற கீர்த்தி சொல்லு ராஜிவ் ..!! என்ன இந்த டைம்ல கால் பண்ணியிருக்க …???என்க என்னோட செல்லம் ஞாபகமாவே இருந்துச்சா அதான் என் பொண்டாட்டிக்கு கால் பண்ணேன் .ஏன் நான் கால் பண்ண கூடாதா மேடம் என்று பொய்யான கோபத்துடன் கேட்க அதெல்லாம் நீ எப்ப வேணும்னாலும் கால் பண்ணலாம் டா மாமா ..,,நீ பொதுவா என்னோட டியூட்டி டைம்ல கால் பண்ண மாட்டியே அதான் கேட்டேன் என்று தன்னவனின் கோபத்தை குறைக்கும் பொருட்டு பேசினால் கீர்த்தி.
சரி விடு…,,ஏதோ இன்னைக்கு உன்னோட ஞாபகம் அதிகம்மா இருந்துச்சி டி ..உன்னோ ரொம்ப மிஸ் பண்றேன் செல்லம் என்க அப்போ உங்க அத்தை மாமா கிட்ட வந்து பொண்ணு கேளு என்க சீக்கிரமா வரேன் செல்லம் என்க சரி மா சீக்கிரம் வா ,,இப்போ எனக்கு உன்கிட்ட பேச நேரம் இல்லை அப்புறமா பேசுறேன் என்று கூறிவிட்டு அழைப்பை அணைத்தாள்.
பின் கீர்த்தி தன் வேலையை காண சென்றுவிட்டாள்.
இதை எதுவும் அறியாத நந்தினி ,, தனக்குறிதான வேலையை மட்டும் பார்த்து கொண்டு இருந்தாள்.
வீட்டில் இருந்த ஜீவாவிற்கு மின்னஞ்சல் வர ..,,உடனே அதை திறந்து பார்க்க அதில் அவன் படிக்க போகும் கல்லூரியில் இருந்து செய்தி வந்தது..
அதை படித்த அவனுக்கு ஒரு பக்கம் மகிழ்ச்சியாகவும் மறு பக்கம் கலவையாகவும் இருந்தது.
தான் படிக்க வேண்டும் என்று ஆசை பட்ட கல்லூரியில் இருந்து அழைப்பு விடுத்ததை எண்ணி மகிழ்வுடன் இருந்தான்.
தன் குடும்பத்தை விட்டு பிரிய வேண்டும் என்ற கவலையும் அவனுக்கு தொற்றிக்கொண்டது.
நந்தினி உதய் சொன்னதையே மறந்து இருந்தாள். இதை உதய் முன்னதாகவே அறிந்து இருந்தானோ இல்லையோ ..?? மீண்டும் அவளிடம் சென்று நாளை காலை உன்னுடைய பதிலுக்காக நான் காத்திருப்பேன் என்று கூறிவிட்டு சென்றான்.
அதை தூரத்தில் இருந்து பார்த்த கீர்த்தி ,, அவளிடம் வந்து நந்தினி என்று அழைக்க அவள் காதில் கூட விழவில்லை.
உதய் சென்ற பாதையையே வெறித்து பார்த்து கொண்டு இருந்தாள்.மீண்டும் அழைத்தும் அவள் அப்படியே இருக்க ,, நந்தினியின் தோலில் கில்லி வைத்தாள் கீர்த்தி.
அப்போது தான் சுயநினைவு அடைந்த நந்தினி எதுக்கு டி இப்போ என்ன கில்லுன ..?? என்று கோபமாக வினவிட அவளை பார்த்து கீர்த்தி முறைத்து வைக்க எதுக்கு இப்போ என்ன பாத்து முறைக்கிற என்று கேள்வி கேட்க ஹலோ மேடம்..!!! நான் ரொம்ப நேரமா உன்ன கூப்பிட்டுட்டு தான் டி இருந்தேன் . உன்கிட்ட இருந்து எந்த பதிலையும் காணோம் அதான் உன்ன கில்லினேன் என்றாள்.
நந்தினி பதில் கூற வர அதெல்லாம் விடு யாரு டி அது …?? ரொம்ப ஹேன்ஸமா இருக்காரு …,, உன்கிட்ட என்ன பேசிட்டு போறாரு ..?? என்று தன் கேள்வியை கேட்ட கீர்த்தியை பார்த்து அமைதியாகவே இருந்தால் நந்தினி.
ஹே சொல்லு டி எரும…ஏன் அமைதியாவே இருக்க…??? ஓஓஓ I got it டி செல்லம் என்க நந்தினிக்கு ஒன்றும் புரியாமல் நீ என்னத்த புரிஞ்சி கிட்ட..?? என்றாள்.
அதற்கு கீர்த்தி அந்த ஹேன்சம் உனக்கு propose பண்ணிட்டு போறாரு ,,எனக்கு தெரியும் propose பண்ணிட்டு தான் போறாருன்னு என்று தன் போக்கில் பேசும் அவளை பார்க்க அங்கு நடந்து செல்பவர்களுக்கு பாவமாக இருந்தது.
கீர்த்தி நந்தினியின் புறம் திரும்பி பார்க்க அங்கு அப்படி ஒரு பெண் இருந்தாள் என்ற அடையாளமே இல்லாமல் இருந்தது.
[the_ad id=”6605″]
இவளை …. என்று தன் பற்களை கடித்துக்கொண்டே தன் வேலையை பார்க்க தொடங்கினாள்.
மாலை நேரம் வர ..,, கீர்த்தி மற்றும் நந்தினி இருவரும் தன் உடைகளை மாற்றிவிட்டு வீட்டிற்கு கிளம்பினர்.
பாதி வழியில் கீர்த்தி காணாமல் போக ( இது எப்போதும் நடப்பது தான் ),, நந்தினி பயத்துடனே அவளது வீட்டை நோக்கி சென்று கொண்டிருந்தாள்.
அந்த வழியில் இருந்த டி கடையை கடக்க முயலும் போது…,,அதில் ஒருவன் மட்டும் நந்தினியை பின்தொடர்ந்து வந்து கொண்டு இருந்தான் ( எப்படியும் அவனுக்கு நாப்பது வயது இருக்கும் பா ).
அவன் தன் பின்னால் வருவதை உணர்ந்த நந்தினிக்கு பயத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் தத்தளித்து கொண்டு இருந்தாள்.
வெங்கட் எவ்வளவு முறை அவனது நண்பனுக்கு அழைத்தும் நாட் ரீச்சபில் (not reachable) என்றே வந்தது.போனை தூக்கி போடனும் போல் இருந்தது அவனுக்கு.
அவன் மனதில் எப்படியாவது நந்தினியை காப்பாற்ற வேண்டும் என்று தோன்றியது.
தேடல் தொடரும்…???