அன்று விசேஷமாய் தனனை அலங்கரித்திருந்தாள் மஞ்சரி. லைட் பிங்க்கில் கரு நீல கரையில் சரிகையிட்ட காஞ்சிக் காட்டன் சேலை, அவளது சற்றே மானிற கலருக்கு எடுப்பாய் இருந்தது. வில்லாய் வளைந்த திருத்தமான புருவங்களின் கீழ் அழகான கண்கள் மையிட்டு மெருகேற்றப்பட்டிருந்தது. லேசான லிப் க்ளாஸ் சிப்பி இதழ்களை பளபளப்பாய் வைத்திருந்தது.
“என்ன விசேஷம் என்று கேட்காதவர்கள் இல்லை அலுவலகத்தில். புதுப் புடவை உடுத்தவே, சற்று மெனக்கெட்டதாகக் கூறி சமாளித்தாள். மனதின் சந்தோஷம் முகத்தில் தெரிந்தது.”
ராஜேந்திரன் உள்ளே நுழையும்போதே பார்த்துவிட்டாள். அவன் இன்று வருவான் என்று தெரியும். அதற்குத்தானே இன்று புடவை உடுத்தியிருந்தாள். அவன் பார்க்கும்முன் அவசரமாய் கம்ப்யுட்டர் திரைக்குப் பார்வையை திருப்பினாள்.
வந்தவன் அவளைக் கண்டுகொண்டான். ஆனால் நேரே அவளிடம் செல்லாமல், மார்கெட்டிங்கில் இருந்தவரிடம் ஏதோ விசாரித்து, வேறு ஒரு சைட் எஞ்சினியருடன் பத்து நிமிடம் பேசிக்கொண்டிருந்தான்.
பொறுத்துப் பார்த்துக் கோபம் கொண்டாள் மஞ்சரி. தன்னை வேண்டுமென்றே தவிர்க்கிறான் என்று நினைத்து, ஓய்வறைக்கு எழுந்து சென்றாள். அவள் செல்வதைப் பார்த்த ராஜேந்திரன், வெட்டிக் கதையை முடித்துக்கொண்டு அவள் பின்னே சென்றான்.
பாட்டிலில் தண்ணீர் பிடித்துக்கொண்டிருந்தாள். அவன் வந்தது தெரிந்தும் கண்டுகொள்ளவில்லை.
சற்று இடைவெளிவிட்டு நின்றவன், “என்ன மஞ்சரி மேடம் ? உங்களைப் பார்க்க வரதுக்குள்ளே , இங்க வந்துட்டீங்க ?”
“என்ன எங்க பார்க்க வந்தீங்க ? எஞ்சினியர் கிட்டதானே பேசிக்கிட்டு இருந்தீங்க ?”, கண்கள் சுருக்கிக் கேட்டாள்.
சிரித்தவன். “நேரே உங்ககிட்ட வந்து பேசினா யாராச்சம் தப்பா நினைக்கப்போறாங்கன்னுதான், அங்க மொக்க போட்டுட்டு இருந்தேன். செக் ரெடியா ?”
“எப்பவும் செக் கேட்டு வருவீங்கதானே, யார் என்ன சொல்லுவாங்க ? ம்ம்…இன்னும் ரெடியாகலை. உங்க நம்பர் தந்துட்டுபோங்க, ரெடி ஆனதும் நானே கூப்பிடறேன்.”, அவனின் பர்சனல் நம்பர் அவளிடம் இல்லை, ஆபிஸ் நம்பர்தான் இருந்தது.
இதைக் கேட்டு உள்ளுக்குள் குத்தாட்டம் போட்டாலும், “உங்க நம்பர் தாங்களேன். நீங்க மறந்துட்டாலும் நான் போன் பண்ணி கேட்டுக்குவேன்.”, மஞ்சரியைக் கேட்டான்.
அவனைப் பார்த்தவாறே, அவன் போன் வாங்கி, தன் நம்பருக்கு ஒரு மிஸ்ட் கால் கொடுத்தாள். “யாருக்கும் தர மாட்டேன். நீங்க சொந்தக்காரர்னவும்தான் தரேன்.”
வேல்விழிகளிரண்டும் அவனைக் கூர்மையாகப் பார்த்தன.
“ஓ, சொந்தக்காரன்றதாலதான் நம்பிக்கையா ? என் மேல் நம்பிக்கை இல்லையா ?”. அவன் என்ன கேட்கிறான் என்று அவளுக்கும் புரிந்தது.
“ஷ்..மஞ்சரி, ஆபிஸ்ல வேண்டாம், வெளியில பேசுவோம். நீ முதல்ல போ.”,என்று அவளை அனுப்பினான்.
சற்று நேரம் கழித்து, வாஷ்ரூம் சென்று, பின் அவள் செக்ஷனைத் தாண்டிச் செல்கையில், “ராஜன் சார். செக் வேண்டாமா ?”, என்று சத்தமாக கூப்பிட்டுக் கேட்டாள்.
சட்டென்று திரும்பியவன், அவள் அருகே அமர்ந்திருந்த மற்ற இருவரும் பார்க்கவே, முறைக்க முடியாமல். “ரெடி ஆகிடுச்சா மேடம் ?”, என்றான் முகத்தை சாதாரணமாக வைத்துக்கொண்டு.
“உட்காருங்க. ஒரு ஜெராக்ஸ் எடுத்துட்டு, குடுத்துடறேன். என்று அவனை எதிர்புறம் இருந்த இருக்கையைக் காண்பித்துவிட்டு, எழுந்து சென்றாள்.
அவள் குறும்பை ரசித்தாலும், அவளின் அழகில் தன் பார்வை மாற்றத்தை யாரும் கண்டுகொள்வார்களோ என்ற அச்சத்தில், போனில் அவள் நம்பரை சேவ் பண்ணும் சாக்கில் அம்ர்ந்திருந்தான்.
அவள் அவனைக் கடந்து செல்கையில் அவளின் நறுமணம் மயக்கியது. தன் இருக்கையில் உட்கார்ந்தவள், “இந்தாங்க”, என்று செக்கைக் கொடுத்து, பெற்றுக்கொண்டதற்கான படிவத்தில் கையெழுத்திட தன் பேனாவையும் தந்தாள்.
புன்னகையோடே வாங்கி, கையெழுத்திடப் போனவன், “பானுக்கா, சார் இப்ப எனக்கு ரெலேடிவ் தெரியுமா ?”, என்று பக்கத்து சீட்டுப் பெண்ணிடம் சொல்லக்கேட்டு நிமிர்ந்தான்.
“இது எப்போ ?”, என்று பார்த்தார் அந்தப் பெண்மணி.
“என் அத்தை மகன் கல்யாணத்துக்குப் போனேனே. அங்கதான் தெரிஞ்சது. சார்தான் பொண்ணுக்கு அண்ணான்னு.”
இப்ப ரொம்ப தேவையா இது என்று அவளை ஒரு பார்வை பார்த்து, அந்தப் பெண்மணியிடம் ஒரு அரை சிரிப்பு சிரித்தவன், இருவருக்கும் பொதுவாக “கிளம்புறேங்க.”, என்று விடைபெற்றான். விஸ்வா சைட் விசிட் போயிருப்பான் இன்று என்று தெரிந்ததால் அவனை கேட்காமல் சென்று விட்டான்.
“பரவாயில்லை, சொந்தம்னு சொல்லி பேச்சை வளக்காம கிளம்பிட்டாரு.”. பானுக்கா சர்டிபிகேட் கொடுத்தார்.
“நான் சேர்ந்த இந்த எட்டு மாசமா பார்த்துட்டுதானே இருக்கேன். அவர் வந்த வேலையை மட்டும்தானே பார்த்திருக்கார். ஒரு அனாவசிய பேச்சு கிடையாதே. இப்ப மட்டும் மாறுமா என்ன ?”, மஞ்சரியும் ஆமோதித்தாள்.
அன்றரவு, அவள் நம்பருக்கு ஒரு வாட்சப் வந்தது அவனிடமிருந்து. “எதுக்கு சொந்தம்னு ஆபீஸ்ல சொன்ன ?”
பார்த்துப் புன்னகைத்தவள், “ஏன், சொன்னா என்ன ?” என்று கேட்டு , இரண்டு யோசிக்கும் ஸ்மைலியுடன் தட்டிவிட்டாள்.
“தேவையில்லாம நோட் பண்ணுவாங்க மஞ்சரி.”, என்று பதில் வந்தது.
“எப்பவும் போல தானே செக் வாங்கிட்டு போனீங்க ? மடியில் கனம் இல்லைன்னா பயம் எதுக்கு ?”, தோள் குலுக்கும் பெண்ணின் படம் போட்டு அனுப்பினாள்.
ஒரு நிமிடம் பதில் வரவில்லை. கொஞ்சம் படபடப்பாகியது மஞ்சரிக்கு. ‘ஓவரா பேசிட்டமோ ? ,இல்லயே, வெளிய மீட் பண்ணலாம்னு சொன்னாரே ?’
அங்கே அவள் எழுதிய வாக்கியத்தைப் பார்த்து ராஜேந்திரனும் யோசித்துக்கொண்டிருந்தான். ‘அவள்தானே உரிமையா போனை வாங்கி நம்பர் சேவ் பண்ணா ? இப்ப மடியில கனம் இல்லைங்கறா ? ஒரு வேளை போட்டு வாங்கறாளா ?’
மஞ்சரி போனை கிழே வைக்கும் நேரம் “அப்படியா, மடியில் கனம் இல்லையா ?”, என்று மெசேஜ் வந்தது.
குப்பென்று உடலில் ஒரு சூடு பரவியது போலிருந்தது மஞ்சரிக்கு. முகம் கொள்ளாப் புன்னகை பரவியது. இத்தனை மாதங்களாய் மனதின் ஓரம் இருந்த ஒரு க்ரஷ், சட்டென்று சிம்மாசனத்தில் ஏறியதுபோலிருந்தது.
இவள் இங்கே உணர்வுகளில் சிக்கியிருக்க, பதில் வராமல் அங்கே ஒருவன் நெஞ்சு நொடிக்கு நூறு மைல் வேகத்தில் அடித்துக்கொண்டிருந்தது. ‘ம்ம்ம்..” என்று அவள் அனுப்பியிருந்த மெசேஜை எந்த வகையில் எடுத்துக் கொள்வது என்று புரியாமல் முழித்துக்கொண்டிருந்தான்.
“???” என்று பதில் அனுப்பினான்.
“இப்படி வாட்சப்ல கேட்டு பதில் வாங்கிடமுடியாது சார்….”, என்ற பதில் வந்ததும்தான் ராஜேந்திரன் மூச்சு சீரானது.
“ஓ, நல்ல பதிலா கிடைக்க எப்படி மேடம் கேக்கணும் ? முன் அனுபவம் இல்லையே எனக்கு ?”
நாலு கோபத்தில் சிவந்த முகங்கள் வந்தது பதிலாக. “எனக்கு மட்டும் இருக்கோ ?”
‘சொதப்பறியேடா ராஜா’ , என்று தன்னைத்தானே திட்டிக்கொண்டவன், “ அப்படி சொல்லலை. எதாச்சம் ஹிண்ட் கிடைக்குமான்னுதான் கேட்டேன்.” பூங்கொத்துடன் மன்னிப்பு அனுப்பினான்.
“ம்ம்..கூகுள் குருவைக் கேளுங்க…குட் நைட்.”
குட் நைட் போட்டவன் நைட் படுக்க வெகு நேரமாகியது. கூகுளைத் தேடினால் ‘அடப்பாவிகளா, இப்படியெல்லாமாடா ப்ரப்போஸ் பண்ணுவாங்க ? ‘, என்னும் ரேஞ்சுக்கு ஐடியாக்கள் இருந்தன. வானத்தில் கலர் புகை கொண்டு எழுதுவது, பானர் தொங்கவிடுவது , ஹோட்டலில் மண்டியிட்டு ரோஜாப் பூ கொடுத்து கேட்பது, ரேடியோவில் ஆறிவிப்பது என்று ஆங்கிலேய ஐடியாக்கள்தான் வந்தன. இப்படியெல்லாம் பண்ண தில்லும் இல்லை, துட்டும் இல்லை என்று புரிந்தது. கவிதை எழுத துப்பும் இல்லை. இதெல்லாம் வேலைக்காகாது என்று புரிந்தது. ஆறப்போடுவோம். வழி தோன்றும் என முடிவு செய்து உறங்கச் சென்றான்.
நாட்கள் அதன்போக்கில் ஓடிக்கொண்டிருந்தது. விக்ரம் வீட்டில் அனைவரும் புது வீட்டிற்குப் பழகியிருந்தனர். லோன் கைக்குவந்து, காசு மாலையும் வீடு வந்து சேர்ந்திருந்தது. மேல் மாடி வேலையும் துவங்கியது.
செமஸ்டர் பரீட்சைக்கு ஒரு மாதமே இருப்பதால், படிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்திருந்தாள் வேதா.
ஒரு புதன்கிழமை மாலை, பர்வதம்மா, “ வேதா, உனக்கு எப்பவும் சரியான தேதியில வீட்டு விலக்காகுமா, இல்ல தள்ளியும் போகுமாமா ?”, என்று விசாரித்தார்.
வாயெல்லாம் பல்லாக, “ அப்படின்னா, ஒரு வாரம் தள்ளி போயிருக்கு வேதா. நாளைக்கு லீவ் போட்டுட்டு டாக்டர நாம போய் பார்த்துட்டு வந்துடலாம்.”, என்றார்.
திக்கென்று ஆனது வேதாவிற்கு. இதுக்குள்ளயா ? பரீட்சை வேற வருதே என்று பயம் கவ்வியது. “ நாளைக்கு லீவ் போட முடியாது அத்தை, அஸ்சைன்மென்ட் ப்ரெசென்ட் பண்ணனும். இன்டெர்னல் மார்க் இருக்கு அதுக்கு. சனிக்கிழமை பார்த்துக்கலாமே.” என்றாள்.
“என்ன வேதா, நானே ஒரு வாரம் பல்ல கடிச்சிட்டு எல்லா சாமியயும் வேண்டிட்டு இருந்தேன். நீ இப்படி சொல்ற ? எல்லாம் டாக்டர் சர்டிபிகேட் வாங்கி குடுத்துக்கலாம். “
ஒன்றுமே சொல்லாமல், தலையை அசைத்துவிட்டு, அவள் அறைக்கு சென்று அமர்ந்துவிட்டாள். மனமுழுதும் ஒரு பயம். குழந்தை வர போகுதா. விக்ரமிற்கு அழைத்தாள். அவன் எடுத்த்தும், “வீட்டுக்கு வா வீரு. சீக்கிரமா வா.”, என்றுவிட்டு அணைத்துவிட்டாள்.
விக்ரமிற்கு ஒன்றும் புரியவில்லை. அம்மா எதுவும் திட்டிடாங்களா, இவ குரலே சரியில்லையே என்று நினைத்தவன் அலுவலகம் முடிய கொஞ்ச நேரமே இருப்பதால், சொல்லிவிட்டு கிளம்பிவிட்டான்.
[the_ad id=”6605″]
“என்னடா இவ்ளோ சீக்கிரம் வந்துட்ட ? வேதா போன் பண்ணாளா ?” , என்று சந்தோஷமாக கேட்டார்.
இவரைப் பார்த்தால் சண்டை போல தெரியவில்லயே என்று விக்ரம் யோசிக்கும்போதே, “ உள்ள இருக்கா. இந்த பாலை குடுத்துடுடா அவகிட்ட, காபி வேண்டாம். நான் உனக்கு போட்டுட்டு கூப்பிடறேன்.”
“வேண்டாம்மா, நான் ஆபீஸ்ல இப்பதான் குடிச்சேன்”, என்றவாறே பாலை எடுத்துக்கொண்டு அவர்கள் அறைக்குச் சென்றான்.
வேதா கட்டிலில் சுருண்டு படுத்திருந்தாள்.
“தேனூ…என்னாச்சுமா ? என்ன பண்ணுது உடம்புக்கு ?”, அவளை திருப்பியவாறே கேட்டான்.
எழுந்து அவனை கட்டிக்கொண்டவள், அழ ஆரம்பித்துவிட்டாள். நல்ல வேளையாக அவளை திருப்பும் மும் பாலை மேசையில் வைத்திருந்தான்.
“அத்தை…அத்தை நாள் தள்ளிப்போயிருக்குன்னு சொன்னாங்க…” , அழுகையினூடே வந்தது வேதாவில் குரல்.
அவனுக்கு சட்டென்று புரியவில்லை. “ எதுக்கு தள்ளி போயிருக்கு ?”, என்றான்.
அழுகை நிறுத்தி அவனை எரித்துவிடும் பார்வை பார்த்தாள் வேதா.
“ஓ…ஓ..அந்த நாளா….பேபி வரப்போகுதா ?”, விக்ரமுக்குமே கொஞ்சம் கலங்கியது. கல்யாணமானதிலிருந்து, அவர்கள் அடித்த கூத்திற்கு இதை எதிர்ப்பார்த்திருக்க வேண்டும்தான். ஆனாலும் கொஞ்சம் ஷாக்தான்.
“தேனு செல்லம்…அதுக்கு ஏன்மா அழுகுற ?”
“ அத்தை நாளைக்கு லீவ் போட்டுட்டு போய் டாக்டர பார்க்க சொல்றாங்க. உங்களுக்கு தெரியும்தான, இன்டெர்னல் அசைன்மென்ட் ப்ரசென்டேஷன் இருக்கு நாளைக்கு. சொன்னதுக்கு MC குடுத்தரலாம்னு சொல்றாங்க…மத்தவங்க ப்ரெசன்ட் பண்றத நம்ம கேள்வி கேக்கறதுக்கெல்லாம் மார்க் உண்டு.” மூக்கை உறிந்துகொண்டே புகார் வாசித்தாள்.
“அவ்ளதானே, அம்மாவை நான் சமாளிச்சிக்கறேன். நீ நாளைக்கு காலேஜ் போற. சமத்தா பாலை குடுச்சிட்டு, உன் ப்ரசென்டேஷனுக்கு தயார் பண்ணு.”
அவனை நிமிர்ந்து கேள்வியாய் பார்த்த வேதா, “பாப்பா பத்தி ஒண்ணும் சொல்லலை ?”
அவள் முகத்தை இரு கைகளிலும் ஏந்தியவன், கண்கள் பார்த்து, “ எப்படி ஃபீல் பண்றேன்னு தெரியலை…கொஞ்சம் ஷாக், பயம். இப்போ கொஞ்சம் சந்தோஷம் வருது. ஆனா, உனக்கு எப்படி இருக்குன்னு தெரியாம நான் என்ன சொல்ல ?”
கண்கள் இன்னுமே கலங்கி இருக்க, “எனக்கும் ஷாக், பயம்தான். அதுல அத்தை எடுத்ததுமே இப்படி சொல்ராங்க. நீங்க இல்லாட்டா நான் எப்படி சமாளிப்பேன் ? படிக்க வேண்டாம்னு சொல்லிடுவாங்களா ?”, கண்ணீர் அவன் கைகளில் வழிந்தது.
“ஷ்… அது நடக்காம நான் பார்த்துகறேன். நான் சிங்கப்பூர் போனதும், நீ உங்கம்மா வீட்ல இருந்துக்கோ, வீகெண்ட்ல, அண்ணி இருக்கும்போது இங்க இரு. அம்மா ரொம்ப படுத்தாம அவங்க பார்த்துக்குவாங்க.”
“ பாப்பா வரப்போகுதுன்னு எனக்கு ஹாப்பியா இல்லையே, நான் ஒழுங்கா வளர்பேனா ? ஏன் நான் ஹாப்பியா ஃபீல் பண்ணமாடெங்கறேன் ?”, அடுத்த கவலை வந்துவிட்டது வேதாவிற்கு.
சிரிப்பு வந்தது விக்ரமிற்கு. “ குழந்தை, குழந்தைன்னு சொல்லிட்டு இருந்தாலும் ,நாம உடனே எதிர்பாக்கலை இல்லயா, அதுனால அப்படி இருக்கும். நாளைக்கு சாயந்திரம் நாம டாக்டர் கீதாவை பார்க்கலாம். அவங்க கிட்ட பேசினதும் உனக்கு தைரியம் வரும், அப்பறம் சந்தோஷமும் வரும். சரியா ?”
“சிந்துவோடவும், சித்துவோடவும் உன்ன பார்திருக்கேண்டா, நீ ‘சூப்பர் மாம்’ பேர் வாங்குவ நம்ம குட்டிகிட்ட, சரியா ? போய் முகம் கழுவிட்டு, படி செல்லம்,”, என்று அவள் பால் குடித்ததும், டம்பளரை வாங்கிக்கொண்டு, ‘ஷப்பா, அடுத்து அம்மாவை சமாளிக்கணுமே’, என்று எண்ணிக்கொண்டு சென்றான்.
இவன் வெளியே வரவும், மாலினி உள்ளே வரவும் சரியாக இருந்தது.
சிந்து அவள் வீட்டுப்பாடம் செய்ய உள்ளே இருக்க, முகமெல்லாம் சந்தோஷமாக, வேதா நாள் தள்ளி போயிருக்கும் விஷயத்தை சொன்னார் பர்வதம். அவர் சொல்லும்போதே விக்ரமின் முகத்தைத்தான் பார்த்தாள் மாலினி. அவன் புன்னகைக்கவும், தானும் புன்னகைத்தாள்.
“நீ சித்துவுக்கு வீட்லயே ஏதோ குச்சி வெச்சி டெஸ்ட் பண்ணியே. அதுமாதிரி பாக்கலாமா ? நாளைக்கு டாக்டர்கிட்ட போயிடலாம்”, ஆர்வம் பிடிபடவில்லை பர்வதம்மாவிற்கு.
“சரி, ஒரு ரெண்டு நிமிஷம் குடுங்க, என்று கை அலம்பி, தவ்விக்கொண்டிருந்த மகனை அள்ளிக்கொண்டு, விக்ரமை ஒரு பார்வை பார்த்து, வேதாவைத்தேடிச் சென்றாள்.
லாப்டாப்பை வெறித்துக்கொண்டிருந்த வேதாவைப் பார்த்து ஒரு நொடி நின்றவள், “வேதா…”, என்று அழைக்க
“அக்கா..”, என்று திரும்பினாள். அந்த அக்காவே நடுக்கத்துடன் வந்தது.
சித்துவை இடுப்பில் ஒருகையில் பிடித்திருந்தவள், மறு கையால் வேதாவை அணைத்தவாறே, “ ஷ்…முதல்ல பயமாத்தான் இருக்கும். கவலைப்படாதே. உன் மனசும் உடம்பும் ரெடி ஆகறத்துக்கு இன்னும் ஒன்பது மாசம் டயம் இருக்கு. அதுக்குள்ள நம்ம ரெடி ஆயிருவோம். இது நார்மல்தான். முதல்ல பேபிதானான்னு கன்பர்ம் பண்ணிக்கலாம். சரியா ?”, மாலினியின் பேச்சில், கொஞ்சம் நம்பிக்கை பெற்றவளாக, தலை அசைத்தாள்.
‘சே, நமக்கு இப்படியெல்லாம் விவரமா பேசத் தெரியலையே’, என்று நொந்தவனாக, “மெடிகல் ஷாப் போகவா அண்ணி ?”, என்று கேட்டான்.
“நானும் வரேன். சட்டுன்னு போய்ட்டு வந்துடலாம்.”, என்று குழந்தையை மாமியாரிடம் விட்டுவிட்டு, இருவரும் கிளம்பினார்கள்.
அடுத்த அரை மணி நேரத்தில் வேதாவிடம் எப்படி எடுக்கவேண்டும் என்று கூறி, துணைக்கு விக்ரமை அவளுடன் விட்டு வந்தாள்.
“அவளை அணைத்து, முத்தமிட்டு, எதுவா இருந்தாலும் பார்த்துக்கலாம் தேனு. போ. “, என்று அனுப்பி வைத்தான்.
“பாசாயிடுவேன் இல்லப்பா ?”, இப்போது குரலில் கொஞ்சம் ஆர்வம் இருந்ததோ.
[the_ad id=”6605″]
“இப்பதான் யாரோ பயமா இருக்கு, நான் ஏன் ஹாப்பியா இல்லைனு ஃபீல் பண்ணாங்க ? போய் மொதல்ல டெஸ்ட் எடுங்க மேடம், அப்பறம் பார்க்கலாம் ரிசல்ட்ட…”, என்று அவளை பாத்ரூமிற்குள் தள்ளினான்.
சிறிது நேரத்திற்கெல்லாம் கையில் குச்சியுடன் வந்தாள். ரெண்டு நீல வண்ணக்கோடுகள், அவள் கர்ப்பத்தை உறுதி செய்தது.
கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் இருந்தாள் வேதா. “நாம சேர்ந்து எழுதின எக்ஸாம், பாசாயிட்டோம் வீரு.“
அவளை இழுத்து அணைத்தவன், அழுந்த ஒரு முத்தம் பதித்து, “யெஸ். தாங்க்ஸ் கண்ணம்மா… நமக்குன்னு ஒரு பாப்பாவ தர்றதுக்கு. போ, போய் அண்ணிகிட்ட, அம்மாகிட்ட, உங்கம்மாகிட்ட சொல்லு.”, என்று அனுப்பி வைத்தான்.
வெளியே, சிரித்த முகமாக மருமகள் வரவும், பர்வதம்மா சந்தோஷமானார். “ டெஸ்ட் உறுதி பண்ணிடுச்சாமா ?”
“ஆமாம் அத்தை. அண்ணி, பாருங்க. ”, என்று அவள் வைத்திருந்த குச்சியை. காண்பித்தாள்.
அவளை அணைத்து “வாழ்த்துக்கள் வேதா. ஃபோட்டோ எடுத்து வை. குழந்தை வளர்ந்தப்பறம் காட்டலாம்.”, என்று சிரித்தவாறே ஐடியா கொடுத்தாள் மாலினி.
“இல்லத்தை.”, என்று சந்தோஷமாக திரும்பியவள். “மாலினி, நாளைக்கு காலைல உனக்கு பார்த்த கீதா டாக்டருக்கு அப்பாய்ண்ட்மெண்ட் வாங்கிடு. வேதா நாளைக்கு லீவ் போடட்டும். நானும் அவளும் போய் வர்றோம்.” என்ற பேச்சை கேட்டு, ஒரு திகிலடைந்த பார்வை பார்த்தாள்.
அதற்குள் வெளியே வந்த விக்ரம், “ இப்பதாம்மா பேசினேன். நாளைக்கு சாயந்திரம் ஏழு மணிக்குதான் அப்பாயிண்ட்மென்ட் கிடைச்சிது. அவ லீவ் போட தேவையில்லை. அப்பறம் வேணும்போது எடுத்துக்கலாம்.”, என்றான்.
வேதாவிடமிருந்து அப்படி ஒரு காதல் பார்வை விக்ரமை நோக்கி. அவள் மாலினிக்கும் அவள் மாமியாருக்கும் முதுகு காட்டி, அவனை பார்த்திருந்தாள். வேறு யாரும் அவள் பார்வையைப் பார்க்கவில்லை. விக்ரம்தான், அவர்கள் இருவரையும் பார்த்தபடி நின்றிருந்ததால், முகம் மாறாமல் இருக்க பாடுபடவேண்டியிருந்தது.
“ நானே அவளை கூட்டிப்போறேன். நான் ஊருக்கு போனதும், நீங்கதான் போக போறீங்க.”, அவர் அடுத்து பேசாமல் தடுத்திருந்தான்.
மாலினியிடமிருந்து ஒரு மெச்சுதலான பார்வை. அவன் மனைவியிடமிருந்து இன்னும் ஒரு மைய்யலான பார்வை.
“சரி. ஸ்வீட் வாங்கிட்டு அவளை அவங்க அம்மா வீட்டுக்கு அழைச்சிட்டு போ. மெதுவா வண்டிய ஓட்டு. ரொம்ப நேரம் கழிச்சி வராதீங்க. சனி ஞாயிறு வேணா போய் இருக்கட்டும்.”
ரூமினுள் வந்தவுடன், அவனை அணைத்து முகம் முழுதும் முத்த மழை பொழிந்துவிட்டாள் வேதா.
“ஹே… என்னடி, எங்கம்மாவை சமாளிச்சதுக்கா இவ்ளோ பரிசு”, சிரித்துக்கொண்டே அவள் கழுத்தில் முகம் புதைத்தான்.
“உங்கம்மாக்கும், அடுத்து எங்கம்மா பண்ணபோற அலப்பரையை சமாளிக்கறத்துக்கும் சேர்த்து.”