பத்தாண்டு காலமாக பெங்களூர் மாநகரத்தில் நிலைத்து நிற்கும் ஐந்து நட்சத்திர விடுதியின், நான்காவது தளத்தில், அறை எண் 912 ல் வரவேற்பறை, படுக்கையறை, சிறு உணவு உண்ணும் அறை என சகல வசதிகளையும் கொண்ட சிறு வீடு போன்ற தோற்றமுடைய அறையில், ஒரு பக்க சுவரில் செவ்வக வடிவத்தில் இயங்கிக் கொண்டிருந்த தொலைக்காட்சியில்… பரபரப்பான இசையில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது அன்றைய சிறப்பு செய்தி.
அதில், பூவிலாங்குடி புதையல் தொடர்பான விசாரணை இன்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நடைபெற இருக்கிறது. சம்பந்தப்பட்ட மூன்று குற்றவாளிகளும்… மருத்துவ ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டு இன்று ஆஜர் படுத்தப்பட உள்ளனர். என்ற முதல் செய்திக்கு அடுத்த செய்தியாக….
நிழல் கரம் பத்திரிக்கை நிருபர் ஆரதியின் துணிச்சலான செயலைப் பாராட்டி திரு. பிரதமர் அவர்கள் கீச்சகம் ( Twitter) தளத்தில் வாழ்த்தை பதிவிட்டுள்ளார். மேலும் ஆரதியின் செயலுக்கு பல பாராட்டுகள் எழுந்த நிலையில் தேசிய பெண்கள் நல அமைப்பின் சார்பில் அவருக்கு சாதனைப் பெண் என்ற விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது. என்று இரண்டாம் செய்தியும் வாசிக்கப்பட….. தனக்கான தேனீர் சுடு பெட்டியில் இருந்த தேனீரை.. கோப்பையில் மாற்றிக் கொண்டிருந்த கைகள் இரண்டும் அந்தரத்தில் நின்றிருக்க.. செவி இரண்டும் ஒரு நொடி உற்றுநோக்கி அச்செய்தியை கண்களுக்கு அனுப்ப..அவை மெல்ல உதட்டிற்கு சென்று இதமான சிரிப்பை வெளியிட்டது.
அதற்குப் பின்னான செய்திகளும், தொடர்ந்து பத்திரிக்கை நிருபர் ஆரதியைப் பற்றியே வர… நிற்க நேரமில்லாத சூழ்நிலையில் சிக்கித் தவிக்கும் ஆடவன் நேரம் கடந்து.. தனக்கான தேநீர் கோப்பையும் ஆறி அலைப்பேசி ஒலி வந்து தன்னை மீட்டெடுக்கும் வரை தன்னையே மறந்து நின்றிருந்தான் அவன்.
வந்த அலைபேசிக்கு பதிலளித்து விட்டு மெல்ல சிறு புல்வெளியிலால் நிரம்பியிருந்த அறையின் முற்றத்திற்கு சென்று தன் பார்வையை படர விட… அதிசய கோபுரத்தின் உயரத்தை மிஞ்சும் அளவிற்கு கட்டிடங்கள் ஒருபுறம் காட்சியளிக்க, மறுபுறமோ சென்னை போக்குவரத்து போன்ற அசாத்திய போக்குவரத்து நெரிசலில் சிறு பெட்டிகளாய் காட்சிதரும் பொம்மை கார்களும் அவன் பார்வையில் மட்டுமே நிற்க… மனம் முழுதும் அவளே நிறைந்திருந்தாள் . தன் இரு கைகளையும் முற்றத்தின் பிடியில் நிறுத்தி… ஆழ மூச்சை வெளியிட்ட ஆடவன் ‘ரதி… உன்னை பத்தின செய்தி தான் எந்தப் பக்கம் திரும்பினாலும். உன்னால மட்டும் எப்படி முடியுது. எங்கிட்ட கூட சொல்லலை. ஆனா எல்லா நேரத்துலயும்.. இந்த தைரியம் சரியா இருக்காது ரதி. உனக்கு ஏதாச்சும்’ன்னா…. என்னால மீண்டு வர முடியாது. பயமா இருக்குடி. உனக்காக என்ன வேணா செய்ய நான் இருக்கும்போது… நீ தனியா போறது நல்லாவா டி இருக்கு. இங்க இருந்து இன்னும் ரெண்டு நாள்ல கிளம்பிடுவேன். வந்ததும் முதல் வேலை உன்னை பார்க்கிறது தான். இனிமேலும் தள்ளிப் போட்டா ஜான்சிராணி…. அடுத்த ஆட்டத்திற்கு ரெடி ஆயிடுவீங்க. இனி என்ன பண்ணாலும்… என் மனைவியாவே பண்ணு.’
இங்கு ஒருத்தன்… தன்னையே மறந்து பேசிக் கொண்டிருக்கும் நேரம்… சென்னையில்,
மாலை வேளையில் நிலவுக்கு வேலை வைக்காமல் ஒட்டுமொத்த ஒளியையும் குத்தகைக்கு எடுத்து தெருவிளக்குகள் மின்னிக் கொண்டிருக்க அந்த தார்ச்சாலையில் சந்தன மாநிறத்தில், தாடையோடு ஒட்டிய தாடி மற்றும் காலை தான் திருத்தம் செய்யப்பட்ட வெட்டு மீசையை யாருக்கும் தெரியாத படி தலை கவசம் அணிந்து கொண்டு இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்றான் சித்தேஷ் கண்ணன். வர வேண்டிய நேரத்திற்கு ஐந்து நிமிடம் முன்னதாகவே சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்த சித்தேஷ் தனது பேக்கி செஃப் பண்ட்ஸ் ல் இருக்கும் ஐபோன் ஐ எடுத்து … ஏஞ்சல் என்று பதிவு செய்யப்பட்டிருந்த எண்ணிற்கு அழைக்க, அழைப்பொலி கேட்டததே தவிர எடுக்கப்படவில்லை. மனதில் ‘இவளுக்கு இதே வேலையா போச்சு. இதுக்குத்தான் நீயே வா டி ன்னு சொன்னேன். வேணும்’னே என்ன வர வச்சுட்டு ஃபோன் எடுக்க மாட்றா.’ என்றவன் சத்தமாக… வரட்டும் இன்னிக்கு…. போற வழியில நல்ல மெயின் ரோடா பார்த்து தள்ளி விட்டுட்டு போறேன்.என இருக்கும் இடம் மறந்து புலம்பிக் கொண்டிருந்த சித்தேஷின் தோல்களை யாரோ.. கையில் இருக்கும் வாட்டர் பாட்டிலால் அடிக்க, திடீர் அடியால் ஏற்பட்ட வலியில் தோள்களை தேய்த்துக் கொண்டே திரும்பிய சித்தேஷ் … எதிரில் நின்றவளை பார்த்து ஏகத்துக்கும் முறைத்தான். “அறிவு கெட்டவளே எதுக்குடி என்ன இப்படி அடிச்ச! நீயே வா’ன்னு விட்டிருக்கணும். வேலையெல்லாம் விட்டுட்டு வந்தல்ல இதுவும் அடிப்ப இன்னமும் அடிப்ப. ஃபோனை எதுக்குடி கையில வைச்சிருக்க நான் கால் பண்றேன்னு தெரிஞ்சு எடுக்காம இருந்தியா பிசாசு… பிசாசு.” என பேசிக்கொண்டே சென்றவனை திரும்பவும் அடிக்க.. நிஜமாகவே கடுப்பான சித்தேஷ்,
“ஆதி! இதுக்கு மேல அடிச்ச பொண்ணுன்னு கூட பார்க்க மாட்டேன். இந்த ஹெல்மெட்டை வைத்து மண்டையை உடைச்சிடுவேன். பேசாம வண்டியில் வந்து ஏறு. உன்னோட வீரசாகசம்’லாம் வேலையோட வச்சுக்கோ.”என்றபடியே தனது வாகனத்தை இயக்க அதில் ஏறி அமர்ந்த ஆரதி, “ஏன் என்னோட வீர சாகசத்தை காட்டினா சார் என்ன பண்ணுவீங்க. உங்க வக்கீல் வேலை எல்லாம் இங்க காட்டாதீங்க. உங்களை விட நாங்க பவர்ஃபுல்லான ஆள். பார்த்தல்ல நாங்க தான் இப்போ தமிழ்நாட்டோட தலைப்பு செய்தி. போனா போது’ ன்னு கூட்டிட்டு போக வந்தியா! இரு இரு இதை அத்தை மாமா ரெண்டு பேருக்கு கிட்டையும் சொல்றேன்.” என அவளும் பதிலளித்தப்படி.. அவனுடன் பயணப்பட்டாள்.
“பேசுடி பேசு சும்மாவே உன்னோட ஆட்டம் ஓவரா இருக்கும். இப்போ சொல்லவா வேணும். ஆனா ஒன்னு டி நீ தனியா பிடிக்கிற அளவுக்கு…. அந்த மூன்று பைத்தியக்காரன்களும் வீக்கு போல. சும்மா ஏதோ ஊர் சுத்திட்டு இருந்தவங்களை பிடிச்சி இந்த கேஸ்ல மாட்டிவிட்டுட்ட தானே! என தன் போக்கில் அவளை கலாய்க்க….”ஏய்!! நான் எவ்வளவு கஷ்டப்பட்டு கண்டுபிடிச்சிருக்க அதைக் கிண்டலா பண்ற. நெஜமாவே அவனுங்க தாண்டா பண்ணாதே. முதல்ல நான் மிரண்டு எப்படி நடுங்கி போனன்னு தெரியுமா? ஆனாலும் பெண்களை இந்த அளவுக்கு…. கொடுமை பண்றவங்கள சும்மா விடக்கூடாது ன்னு ஒரு வெறி. அதான் என்ன நடந்தாலும் பரவாயில்லை’னு இந்த ரிஸ்க் எடுத்தேன். ” ஆரதி.
“சும்மா சொன்னேன் டி. இந்த மாதிரி தப்பு பண்றவங்களுக்கு… சரியான தண்டனை கிடைச்சா தான் அடுத்து வரவனுங்க இதே தப்பை பண்ணாம இருப்பாங்க.” என்றபடி இருவரும் பேசிக்கொண்டே சித்தேஷின் வீட்டிற்குள் நுழைந்தனர்.
வண்டி சத்தத்திலே தன் மகன் வந்து விட்டான் என்பதை உணர்ந்த மகாலட்சுமி. செய்துகொண்டிருந்த சமையலை பாதியிலே நிறுத்தி விட்டு வேகமாக தன் மருமகளை நோக்கி நகர்ந்தவர் “வாடா ஆதி !!… எப்படிமா இருக்க? பார்த்து வருஷமாச்சு. உன்னை இங்க வர வைக்க என்னலாம் பண்ண வேண்டியதா இருக்கு. என் அண்ணனுக்கு… தங்கச்சி வீட்டுக்கு அனுப்பவே அவ்வளவு யோசனை.” என பாசமாக ஆதியை வீட்டிற்குள் அழைத்து வந்தார் மகாலட்சுமி.
“அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை அத்தை. அப்பாக்கு நான் தனியா இங்க அங்கன்னு போறதில்ல விருப்பமில்லை. எனக்கு ஏதாச்சும் ஆபத்து வந்துவிடும்’ன்னு பயப்படுகிறாங்க. அதனாலதான் அப்பா அங்கேயே இருக்க வச்சிட்டாரு. அங்கேயும் நான் சும்மா இல்லாம… சேட்டை பண்ணிட்டு இருந்ததால தான் இங்கே அனுப்பிவிட்டாங்க.” ஆரதி.
“நானும் பார்த்தேன் டா. மாமாவும் உன்னை பத்தி தான் பேசிக்கிட்டு இருந்தாங்க. தனியாளா நின்னு… புதையல் எடுக்கிறேன் சொல்லி பெண்களை கொலை பண்ணிட்டு இருக்கிறவங்களை பிடிச்சியாமே. உன் புராணம்தான்…. ஒரு வாரமா வீட்டுல. இருந்தாலும் பொம்பள பிள்ளை இப்படி தனியா போய் பண்றதுல உனக்கு ஏதாவது ஆபத்து வந்துடும்னு பயமாவும் இருக்கு ஆதி. இவன் கிட்டையாது சொல்லி இருக்கலாம்ல… வக்கீல் வக்கீல்’ ன்னு சொல்லிக்கிட்டு வீட்டிலேயே இருக்கா. உனக்காது உதவியா வந்திருப்பான்.” என்று தன் மகனை வாரிய மகாலட்சுமியை முறைத்து பார்த்த சித்தேஷ்,
“ஆமா ம்மா! இவளுக்கு பேசவே தெரியாது நீங்க வேற சொல்லி கொடுங்க. நான் சும்மா வீட்டில இருக்கன்’னா ? நான் எவ்வளவு கேஸ் பாத்துட்டு இருக்கேன்னு உங்களுக்கு எங்கம்மா தெரியும். ஐயாவை மெட்ராஸ் ஹைகோர்ட் ல வந்து பாருங்க. அப்போ தெரியும் எவ்ளோ பெரிய ஆளுன்னு.” சித்தேஷ்.
“இதுக்கு எதுக்குடா ஹை கோர்ட் வரைக்கும் போகணும் எழுந்து நில்லு… எவ்ளோ பெரியயய…. ஆளுன்னு பார்த்திடலாம்.” என்று தன் மகனைக் கேலி செய்தவாறு அங்கு வந்தார் நாராயணன்.
“அப்படி சொல்லுங்க மாமா. வருஷத்துல ஒரு நாளு கேஸ் பிடிச்சுட்டு இவன் பண்ற அலும்பு இருக்கே ஐயோ….”என ஆரதி கூற, அவள் அருகில் அமர்ந்த நாராயணன் “ஆதி வாழ்த்துக்கள் டா. எப்பவும் இதே மாதிரி தைரியமா இரு. எனக்கு உன்னை நினைச்சா எப்பவுமே பெருமை தான். நம்மளால ஒருத்தர் நல்லா இருக்காங்கன்னு நினைக்கும் பொழுது அதை விட பெரிய சந்தோஷம் என்ன இருக்க முடியும். உன்னால இப்போ ஒரு ஊரே நிம்மதியா இருக்கு. நம்ம வேலை எவ்வளவு முக்கியமோ அதே மாதிரி பாதுகாப்பும் ரொம்ப முக்கியம். எது பண்ணாலும் நல்லா யோசிச்சிட்டு பண்ணு. உனக்கு எந்த உதவி வேணும்னாலும் மாமாகிட்ட கேளு. என்று பேசிய நாராயணனுக்கு.. “நிச்சயமா மாமா. எந்த வேளை செய்யுறதுக்கு முன்னாடியும் நல்லா யோசிச்சு தான் செய்வேன். முடிஞ்ச வரைக்கும் உங்க நம்பிக்கையை காப்பாற்றுவேன் மாமா.”
“இப்படியே ஆளாளுக்கு இவளை பெருமையா பேசினா… அவ்வளவுதான்.
சும்மாவே கையில பிடிக்க முடியாது இவளை . உங்க பங்குக்கு கொம்பு சீவி விடுற மாதிரி அத்தையும் மாமாவும் பாராட்டுப் பத்திரம் வாசித்துட்டு வேற இருக்கீங்க. இன்னும் கொஞ்ச நேரம் நான் இங்க இருந்தா அவ்வளவுதான்… என்னோட ரூமுக்கு போறேன் ப்பா. நீங்க நல்லா இன்னும் உங்க மருமகளை கொஞ்சிகிட்டு இருங்க.” என அங்கிருந்து நகர்ந்த சித்தேஷை பார்த்து…
“பொறாமை மாமா இவனுக்கு. இந்த மாதிரி ஒரு நாளாச்சும் அத்தை மாமாக்கு பெருமை சேர்த்து இருப்பியா. போ... சாப்ட்டு நல்லா தூங்கு. அதுக்கு தான் நீ சரிப்பட்டு வருவ…” என சென்று கொண்டிருந்த சித்தேஷை வம்பு இழுக்க…
“சித்து சும்மா சொல்லிட்டு போறான் டா. அவனும் உன்ன ஒரு வாரமா பெருமையா பேசிக்கிட்டு தான் இருந்தா. ரொம்ப நேரமா ட்ரெயின்ல வந்திருக்க கொஞ்ச நேரம் போய் ரெஸ்ட் எடு மா. நைட்டுக்கு என்ன வேணும் சொல்லு அத்தை பண்ணித் தரேன்.” மகாலட்சுமி
“ஸ்பெஷலா ஒன்னும் வேணா அத்தை. எதுவா இருந்தாலும் ஓகே தான்…” ஆரதி.
“சரிமா. சித்துக்கு பக்கத்து ரூம் தான் உன்னோட ரூம். நீ போய் ரெஸ்ட் எடு.” என்றவருக்கு “சரி அத்தை ” என தலையாட்டிவிட்டு தன் அறை நோக்கி சென்றாள் ஆரதி.
“ஏங்க! அண்ணா கிட்ட சீக்கிரமா பேசுங்க. ரெண்டு பேருக்கும் வயசா கிட்டே போகுது. இந்நேரம் கல்யாணத்தை முடித்திருக்க வேண்டியது. ரெண்டு வீட்டு ஆம்பளைங்களும் இப்படியே அமைதியா இருந்தா என்ன அர்த்தம். ஆரதி பேசுறத பாத்தா… அவளுக்கும் இங்க இருக்க முழு விருப்பம்’னு நல்லாவே தெரியுது. வேற யாராச்சும் வந்து சம்மந்தம் பேசுறதுக்குள்ள நீங்க பேசுங்க.” என்று மகாலட்சுமிக்கு கூற,
எனக்கு மட்டும் அந்த ஆசை இல்லையா மகா. இருந்தாலும் இதுல ஆரதி அப்பா சண்முகம் என்ன நினைக்கிறாங்கன்னு தெரியனும். அதைவிட முக்கியமா பசங்க என்ன சொல்றாங்கன்னு கேட்கணும். நம்மோட ஆசையை என்னைக்கும் பசங்க மேல திணிக்கக்கூடாது மகா. அவங்களுக்கு விருப்பம் இருந்தா மட்டும் தான் கல்யாண பேச்சை ஆரம்பிக்கணும். இப்போதான ஆரதி இங்க வந்திருக்கா… கொஞ்ச நாள் போகட்டும். பசங்களோட நடவடிக்கையை பார்த்துட்டு… சண்முகம் கிட்ட பேசுறேன். அதுவரைக்கும் நீ உன்னோட ஆசையை சொல்லி அவங்க மனசை கலக்காத மகா. நம்ம மருமகள் ஆதின்னு இருந்தா அதை யாராலும் மாற்ற முடியாது.” என்று அவரும் அங்கிருந்து நகர…
‘இவருகிட்ட சொன்னதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம். கல்யாண பேச்சு ஆரம்பிச்சா தானே அவங்க விருப்பம் என்னன்னு தெரியும். கொஞ்ச நாள் போகட்டும் ஆ.. இப்பவே ரொம்ப நாள் போயிடுச்சு. இவரை நம்பிக்கிட்டை இருக்க முடியாது . அண்ணன் காதுல இந்த விஷயத்தை நேரம் கிடைக்கும்போது போட்டு வைக்கணும்.’ என நினைத்தவர் இரவு உணவிற்கு அடுப்பு அறை செல்ல …. இதை அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்த ஆரதி …. மெல்ல தனக்கு எதிரில் இருக்கும் புகைப்படத்தை பார்த்து …. ‘என்ன கண்ணா கல்யாணம் பண்ணிக்கலாமா ..! உன் அப்பா அம்மாக்கே தெரியுது. எனக்கு இங்க இருக்க தான் பிடிச்சிருக்கு ன்னு. நீ மட்டும் கண்டுக்காம இருக்க… உனக்காக தான் சென்னைக்கு வந்ததே. இனிமே இங்கயே தான். போற ஐடியா எனக்கு இல்லை..’ என்று மன ஓட்டத்தில் கண்ணனோடு பேசிக்கொண்டு சிரித்தாள்.
வணக்கம் உறவுகளே…
இது என்னோட இரண்டாவது கதை. முதல் கதையில பார்த்த ஆரதி தான் இந்த கதையோட கதாநாயகி. கதாநாயகன் யாரா இருக்கணும்னு… இன்னும் முடிவு பண்ணல ?????. அப்படி’ன்னு சொல்ல மாட்ட முடிவு பண்ணிட்டேன். அது யாரா இருக்கும்’னு கரெக்டா சொல்லுங்க பாப்போம். வேற ஒரு கதையை தான் எழுதணும்னு நினைச்சிட்டு இருந்தேன். ஆனா கடைசி நேரத்துல ஆரதி என்னை டிஸ்டர்ப் பண்ணிட்டா. அதான் இந்த கொடுமைய ஸ்டார்ட் பண்ணிட்டேன். இது ஒரு மர்மம் சார்ந்த அழகான காதல் கதையா தான் இருக்கும். அப்படின்னு நினைக்கிற….. எப்படி வரப் போகுதுன்னு தெரியல.
எப்படியா இருந்தாலும் சப்போர்ட் பண்ணுவோம்’னு சொல்லி இருந்திங்க .
பாத்துக்கோங்க….???
அம்மு இளையாள்.