கண்ணன் வீட்டுக்கு வந்ததும் நடந்த கலவரங்களில் தன்னை ஈடுபடுத்தி இருந்தவனுக்கு பிரச்சனை வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதை போல பிம்பம். ஒரு பக்கம் வேளையிலும், ஒரு பக்கம் சொந்த வீட்டிலும் இருக்கும் பிரச்சனைகளை தீர்க்கவே அவன் பம்பரமாக சுழல போகிறான் என்பது மட்டும் தெளிவாக புரிந்தது.
ராசாத்தி இடம் சென்றவன்,
” ஆன்ட்டி எப்படி இருக்கீங்க. இங்க தங்குறதுல உங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை தான. எதுவா இருந்தாலும் தைரியமா சொல்லுங்க. இன்னும் கொஞ்ச நாள்ல கண்டிப்பா அனிதா பற்றின தகவல்கள் உங்ககிட்ட வரும். அதுவரைக்கும் தைரியமாக இருங்க.”
“இங்க எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்ல தம்பி. அம்மா முதல் கொண்டு எல்லாருமே வீட்ல ஒருத்தரா தான் பழகுறாங்க. வீட்டுல நடந்த எல்லாத்தையும் பாத்துட்டு தான் இருக்க. உங்களை மாதிரி ஒரு பிள்ளையை நான் இதுக்கு முன்னாடி பாத்ததில்லை தம்பி. ஆரதி பாப்பா ரொம்ப கொடுத்து வச்சவ.”
“இல்ல ஆன்ட்டி நான் தான் ரொம்ப கொடுத்து வச்சவன். வேலையில பாக்குற ஆரதிக்கும் எங்கிட்ட இருக்க ஆரதிக்கும் எவ்வளவு வித்தியாசம் இருக்குன்னு இப்போ உங்களுக்கு புரிஞ்சிருக்கும். அவளோட அன்புக்கு முன்னாடி என்னோடது எதுவுமே பெருசில்ல.”
” இப்போ பரவால்ல தம்பி. சரஸ்வதி அக்காவும் சித்து தம்பியும் தான் ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போய் இருக்காங்க.”
” சரிங்க ஆன்ட்டி வந்ததும் பேசிக்கிற.. நீங்க பார்த்து வேலைக்கு போங்க.”
ராசாத்தி இடம் பேசி விட்டு வந்தவன் நேராக சென்றது ஆரதியின் அறைக்கு தான். அறையின் பால்கனியில்.. கையில் போனுடன் எதையோ யோசித்தபடி அமர்ந்திருந்தவளை கண்டவன்
“ஓய்.. ரிப்பேரு என்ன ரொம்ப யோசனை போல. வேலைக்கு போகலையா.”
“இல்லை எடுபிடி. எனக்கு ஒரு ப்ராஜெக்ட் கொடுத்திருந்தாங்க அத நேத்தே முடிச்சு கொடுத்துட்டேன். இப்போதைக்கு அந்த ராபர்ட் பத்தின ஆர்டிகல் தான் போய்க்கிட்டிருக்கு. நீயே அவனை கண்டுபிடிக்காம இங்க வந்து இருக்க நான் என்னத்தை எழுத.”
“எப்பா திரும்ப நமகுள்ள சண்ட வேணாம் விடு. இப்பதான் நான் கொஞ்சம் நிம்மதியா இருக்க.”
“சரி என்ன யோசிச்சிட்டு இருக்க. ” என்றவன் பால்கனியில் ஆரதி அமர்ந்திருக்கும் எதிர் சுவற்றில் அவனும் அமர்ந்துகொண்டு காலை நீட்ட… . அவளும் அவனைப் போலவே கால் நீட்டி அமர்ந்திருக்க..அது சரியாக ஆரதியின் கால்களை தீண்டியது. கைகள் பிணைந்து கொள்வதைப் போல இருவரின் கால் விரல் பத்தும் தங்களுக்குள் இறுக்கத்தை காட்டு இருக்க… சிந்தனையில் சுழன்றவள் பார்வையை மாற்றாமல் இதழில் மட்டும் பிடித்திருப்பதை சிரிப்பாக காட்டினாள். அவள் சிரிப்பில் லாயித்தவன் தன் கால் விரல்களை பிரித்து பாதத்தில் மெல்ல கோலமிட இப்போது பார்வையும் அவனுக்கு பதில் தந்தது.
” ஆழி என்ன பண்ற…”
” என்ன பண்ற…”
“ஆழி..”
“அதுவா ரதி என்னோட வலது காலால உன்னோட இடது கால இறுக்கமா பிடிச்சிருக்க. அப்புறம் இந்த இடது கால் கட்டை விரலால…. களி மண்ணு மாதிரி வழ வழன்னு இருக்கு உன்னோட வலது கால் பாதத்தை தடவிட்டு இருக்க.”
“ம்ம்ஹ்.. என்டா சொல்ல வேற வார்த்தையே கிடைக்கலையா ! களி மண்ணு கூட கம்பேர் பண்ற.”
” ரசனையா சொன்னா ரசிக்கணும் ரதி.”
“இதுல என்ன ரசனை… அவன்.. அவன் வெண்ணை, ஐஸ் கட்டி, குலோப் ஜாமுன் னு சொல்லிட்டு இருக்கான் நீ களிமண்ணுன்னு பேசுற.”
சலிப்போடு சொன்னவளில் கால்களுக்கு அருகில் சம்மணம் இட்டு அமர்ந்த கண்ணன், ஆரதியின் கால்களை இழுத்து நெஞ்சின் அருகில் கொண்டு வந்தவன் மெதுவாக குனிந்து வர …
முத்தமிட போகிறான் என நினைத்த ஆரதி தன் கால்களை இழுத்துக் கொள்ள முயல, அதுவரை காற்றை தொட்டவன் வெயிலாய் இறுக்க… அமைதியாக பார்த்து இருந்தாள் .
அவளின் எண்ணங்களுக்கு மாறாக முத்தமிடாமல் உதடுகளால் உரச இதற்கு முத்தமே தேவலாம் என்ற எண்ணம்தான் உரசலில் உருகிக் கொண்டிருந்தவளுக்கு.
பதில் சொல்ல மனமில்லாமல்…. பாதத்தை மணவாளனின் நெஞ்சில் புதைக்க, தாங்கும் இதயமானவனுக்கோ சொல்ல முடியாத ஆனந்தம்.
“உனக்கு ஞாபகம் இருக்கா ன்னு தெரியல. நான் ஒரு தடவை ஊருக்கு வரும்போது ரொம்ப மழை. அத்தை உன்ன காணோம்’னு ரொம்ப நேரமா தேடிக்கிட்டே இருந்தாங்க. நானும் வந்ததிலிருந்து உன்ன பாக்காம… தானாவே அத்தை பின்னாடி வந்தேன்.
அங்க 14 வயசு ரதி ரொம்ப குட்டியா கைல ஒரு குடை பிடிச்சுட்டு உடம்பு முழுக்க சேறும் சகதியுமா கையில களி மண்ணோட நின்னுட்டு இருந்தாள். அத்தைக்கு செம கோவம். திட்ட வந்தவங்க அமைதி ஆகிட்டாங்க என் ரதி எறும்பு புற்றை கரையை விடாம களி மண்ணால அடைச்சிட்டு இருந்தத பார்த்ததும்.”
“ஞாபகம் இருக்கு ஆழி”
“ம்ம்ஹ் ஒரு வழியா வீட்டுக்கு கூட்டிட்டு வர , நீ கால் வச்ச இடமெல்லாம் ஒரே சேறு. அத்த திட்டனதும் வேகமா கால கழுவிட்டு வர ஓடுன. அப்போ கால் முழுக்க இருந்த சேறு தண்ணி பட்டதும் அப்படியே கரைஞ்சி இதோ இந்த பாதத்தை என் கண்ணுக்கு காட்டுச்சு. செம்மண் தண்ணியில நல்லா அழகா வெள்ள பூ மாதிரி கால்ல மெல்லிசா ஒரு கொலுசு… பாதியா அங்கங்க சேறு. அதை இப்போ நெனச்சாலும் என்னமோ பண்ணுது.”
“நான் அப்போ சின்ன பொண்ணு ஆழி.”
“தப்பா ஒன்னும் பார்க்கல ரதி . நல்லா ஜில்லுனு மழை, குளுமையான காற்று, மனசை மயக்குற மண்வாசனை மாதிரி உன்னோட இந்த பாதமும் எனக்கு ரசனையா தெரிஞ்சுது.”
” ஆனா நான் உன்ன ரசனையை பார்க்கலையே.”
“தெரியும். என் ரதி கண்ணுல எனக்கான காதல பார்த்தேன்.”
” பண்ணி இருக்கலாம். ஆனா இந்த மாதிரி தருணம் வந்திருக்காதே ரதி.”
“இப்ப பண்ணிக்கலாமா…..”
மோனத்தில் சிறகடித்திருந்தவன் நிதானத்திற்கு திரும்பி ஆரதியை காண,
“நிஜமா தான் ஆழி. “
“அனிதா, ராபர்ட் ரெண்டு பேரோட கேஸ் முடியட்டும் ரதி. இப்ப என்ன அவசரம். “
ஆரதிக்கும் அது புரிந்ததால் மேற்கொண்டு எதுவும் பேசாமல் தனக்கான நேரத்தை அனுபவிக்க ஆரம்பித்திருந்தாள்.
“இன்னும் வலி இருக்காம்மா?”
“இல்ல டாக்டர் இப்போ வலி எதுவும் இல்ல. நடக்க ட்ரை பண்ணா மட்டும் லேசா வலிக்குது.”
“இப்பதானே காயம் ஆறி இருக்கு. அதனாலதான் வலி இருக்கு. இன்னும் ஒரு வாரத்துல மொத்தமா சரியாகிடும்.”
வானதியை மருத்துவரிடம் காட்டிவிட்டு காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர் மூவரும்.
“இன்னும் ஒரு வாரத்துல நீ நல்ல நடக்க ஆரம்பித்துடுவ வானதி சந்தோஷம் தான. நீ சரியான உன் அம்மா ரொம்ப சந்தோஷ படுவாங்க. ஏற்கனவே ஒரு மகள நெனச்சு ரொம்ப கவலையில இருப்பாங்க. இதுல நீயும் இப்படி இருக்க அவங்க மனசு எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்குமோ.”
“உண்மைதான் ஆன்ட்டி. அம்மாக்கு அக்காவை நினைச்சு பாதி கஷ்டம்னா. மீதி என்னை நினைச்சு. நான் சரியான அம்மாவுக்கு கொஞ்சம் பலம் வந்த மாதிரி இருக்கும்.”
இருவரும் பேசிக்கொண்டிருக்க கார் சென்னையில் உள்ள பிரபலமான ஒரு கல்லூரியில் நுழைந்தது. இங்கு எதற்கு வந்திருக்கிறோம் என்பதே புரியாமல் பார்த்த வானதியை கீழே இறங்க வைத்தார் சரஸ்வதி.
ஏதோ இவர்களின் வேலைக்காக வந்திருக்கிறார்கள் என நினைத்துக் கொண்ட வானதியும் எதுவும் பேசாமல் அவர்களுடன் பயணிக்க நேராக நின்றது கல்லூரி முதல்வர் அறையில் தான்.
அங்கிருக்கும் உதவியாளரிடம் தங்கள் வருகையை தெரிவித்திருக்க அவரும் கல்லூரி முதல்வரிடம் சென்று கூற , சிறிது நேரத்திலே நாற்பது வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வெளியில் வந்தார்.
“சித்தேஷ் என்ன இது. உள்ள வர வேண்டியது தான. எதுக்காக இந்த ஃபார்மாலிட்டீஸ். உங்களுக்காக தான் நான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன்.”
“பரவாயில்ல மேடம். இதுல என்ன இருக்கு.”
“இவங்க தான் நீங்க சொன்ன பொண்ணா.”
“ஆமா மேடம். இவங்களுக்கு தான் இங்க அட்மிஷன் தரணும். ஏற்கனவே ஆதி இதப்பத்தி எல்லாமே உங்ககிட்ட பேசி இருப்பா. இன்னும் ஒரு வாரத்துல இவங்களோட சர்டிபிகேட் எல்லாத்தையுமே ரெடி பண்ணி தரேன். முடிஞ்சவரைக்கும் இங்கையே சீட் வாங்கி கொடுத்தீங்கன்னா நல்லா இருக்கும்.”
“ஏற்கனவே ஆரதி இதைப் பத்தி பேசுனாங்க சித்தேஷ். ஒரு பிரச்சினையும் இல்ல இனிமே வானதி இங்கையே படிக்கலாம். அதுக்கான எல்லா ஏற்பாடும் ஏற்கனவே பண்ணியாச்சு. அங்க இருந்து டிரான்ஸ்பர் சர்டிபிகேட் மட்டும் வாங்கிட்டு வந்திடுங்க. அடுத்த வாரமே வானதி இங்க படிக்க ஆரம்பிச்சிடலாம்.”
எதையோ யோசித்து வந்தவளுக்கு தன் படிப்பை தொடரவே.. இந்த சந்திப்பு என்பதை அறிந்து பேச்சு கூட எழவில்லை. வீட்டில் நடந்த பிரச்சனைகளும், அனிதா கிடைக்காமல் இருப்பதும் அவளின் எதிர்கால வாழ்க்கையை முழுவதுமாக முடித்திருந்தது. இனி தனக்கு படிப்பு என்ற ஒன்று இல்லவே இல்லை என்பதை மனதில் நம்பவைக்க பெரும் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தாள். வேலைக்கு சென்றாவது அம்மாவைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என எண்ணி இருந்தவளுக்கு.. தன்னால் நடக்க முடியாமலும் போக மொத்தமாக நம்பிக்கையும் தூரம் சென்று இருந்தது. தன்னுடைய உச்சபட்ச ஆசையாக இருந்த படிப்பை இனி தொடர முடியாது என்ற ஏக்கமே உள்ளுக்குள் வதைக்க இன்று அதற்கு ஒரு வழி கிடைத்ததை எண்ணி ஆனந்தத்தில் மிதந்தாள். அது கூடவே மேலும் மேலும் இவர்களை சங்கட படுத்துவதாக ஒரு எண்ணம் தோன்ற ஆரம்பிக்க,அதன் பிரதிபலிப்பாய் வேண்டாம் என மறுக்க,
சரஸ்வதி,”நீ என்ன சொல்ல வரேன்னு புரியுது எனக்கு. ஆனா நீ என்ன சொன்னாலும் இங்கு யாரும் கேட்க போறதில்லை. மனுஷனுக்கு படிப்பு ரொம்ப முக்கியம். அதுவும் பெண்களுக்கு ரொம்ப ரொம்ப முக்கியம். உன்னை யாரும் பாவம் பார்த்து படிக்க வைக்கல. உன் அம்மா வேலைக்கு போறாங்க. நீயும் படிச்சு முடிச்சுட்டு நல்லதா ஒரு வேலைக்கு போ. அப்புறமா இந்தப் படிப்புக்கான செலவை திருப்பிக் கொடு. அன்னைக்கு சொன்னது தான் இன்னைக்கும் நீயும் எனக்கு மகள் தான். எந்த காரணத்துக்காகவும் இனிமே யாரும் இல்லன்னு நீ நினைக்க கூடாது. இந்த ஏற்பாடு எல்லாத்தையும் பண்ணது ஆரதி தான். எதுவா இருந்தாலும் நீ அவகிட்ட தான் பேசணும்.”
வெளி வார்த்தைக்கு தடுக்க வந்தாலே தவிர உள்ளுக்குள் இதில் மகிழவே செய்திருந்தால் வானதி. சரஸ்வதியின் பேச்சும் அதற்கு உறுதுணையாக வர கண்களில் கண்ணீரோடு, “உங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது. எங்கள யாருன்னு கூட தெரியாது. ஒரே ஒரு தடவை பார்த்த என் அம்மா காக இவ்வளவு செய்றீங்க. நிச்சயமா உங்க உதவிய நான் மறக்க மாட்டேன். என் வாழ்க்கையில பெரிசா நினைச்ச ஒண்ண திருப்பி கொடுத்து இருக்கீங்க. உங்களுடைய நம்பிக்கையே கண்டிப்பா காப்பாற்றுவேன்.”என கையெடுத்துக் கும்பிட்டாள் .
வானதியின் கண்ணீருக்குப் பின் மறைந்திருக்கும் ஆனந்தத்தை உணர தான் சித்து இந்த ஏற்பாட்டைச் செய்தது. இதற்கு வானதி மறுப்பு தெரிவிப்பாள் என்பதை சித்துவும் அறிந்துதான் சரஸ்வதியை அழைத்து வந்தது. அவளின் மதிப்பெண்களை ராசாத்தி மூலம் கேட்டவன் ஆரதியிடம் சொல்லி இந்த ஏற்பாட்டை செய்திருந்தான். சித்து தன் சம்பளத்திலிருந்து பெரும்பகுதியை செலவழிப்பது பெண்களின் படிப்புக்காக தான். இந்த பழக்கமே கண்ணனிடம் இருந்துதான் சித்துவிற்கு வந்திருந்தது.
“கை எடுத்து கும்பிடனும்னு அவசியமில்ல வானதி. இங்கு யாரும் யாருக்கும் மேலேயும், கீழையும் இல்லை. ஒவ்வொரு மனுஷனும் இன்னொருத்தரை சார்ந்தே இருப்பாங்க. இவ்வளவு நாள் அனிதா உங்களை படிக்க வச்சாங்க. அதேமாதிரி ஆரதி உங்கள படிக்க வைக்க போறாள். அதாவது இனிமே அனிதா இடத்துல ஆரதி தான் உங்களுக்கு. புரிஞ்சுதா…”
” புரியுது சித்து. “
“இதெல்லாம் கரெக்டா புரியும். ஆனா என் வாழ்க்கையில மட்டும் தப்பா சரியா புரிஞ்சிப்பிங்க. கொஞ்சம் விட்டிருந்தா என்னை பலிகடா ஆக்கி இருப்பீங்க.”
சித்துவின் வார்த்தை எதைக் குறிக்கிறது என்பதை உணர்ந்தவள் மறுப்பாக தலை அசைக்க. சரஸ்வதி தான் ” சித்து விடு… இன்னும் அதையே பேசிட்டு. “
“இருந்தாலும் வானதி சொன்னதை நீ யோசிக்கலாம் சித்து. ரதிதேவியும் ரொம்ப நல்ல பொண்ணு.” நைசாக தன் சின்ன மருமகனின் வாழ்க்கையை சிறப்பாக மாற்ற அத்தை மந்திரம் தூவ,
அதைப் புரிந்து அவனோ, “எனக்கு வரப் போற பொண்ணு.. எப்படி இருக்கணும்’னு ஆதி தான் முடிவு பண்ணனும் அத்தை. என்னோட கல்யாண வாழ்க்கை முழுக்க முழுக்க ஆதியோட முடிவு. ஆதி யாரைக் கட்டினாலும் நான் கல்யாணம் பண்ணிப்பேன்.”
தாயாய் சரஸ்வதிக்கு இதைவிட வேறென்ன சந்தோஷம் இருக்க முடியும். மருமகளை தாங்கும் மாமியாரும், அவளுக்காகவே வாழும் கணவனும், மகளை அரவணைக்கும் மாமனாரும் , தாயாய் பார்க்கும் சித்துவும் , தன் மகளுக்கு கிடைத்ததை நினைத்து உள்ளுக்குள் மகிழ்ந்தது அவ்வுள்ளம்.