வெகு நாட்களுக்குப் பிறகு தன் அலுவலக அறைக்குள் நுழைந்த ஆழி கண்ணன் , “என்ன சார் நான் சொன்ன வேலையெல்லாம் என்ன ஆச்சு.”
“எல்லாமே பக்காவா இருக்கு சார். இனிமேல் செயல்படுத்த வேண்டியது தான் பாக்கி.”
கொல்கத்தாவில் இருக்கும் பொழுதே.. மதுரையில் பிடிப்பட்ட இருவரிடமும் சென்னையில் இருக்கும் போலீஸ்காரர்கள் விசாரனையை துவங்கியிருந்தனர்.
விசாரணையில்.. பிடிப்பட்ட இருவருக்கும் ராபர்ட் உடன் நேரடித் தொடர்பு இல்லை என்பது உறுதியாகி இருந்தது. ராபர்ட்டை போலவே இவர்களும் திருட்டு தொழில் செய்வதால் ஏற்பட்ட பழக்கத்தில் இங்கு வந்து தங்கி இருக்கிறான். ஒருநாள் மது போதையில் நீதிபதி வீட்டில் கொள்ளையடித்தது ராபர்ட் தான் என்றும் அவனோடு சேர்ந்து நண்பன் ஒருவன் இருந்ததுள்ளான் என்பதையும் உளறி இருக்கிறான்.
இரண்டாவதாக ராபர்ட் கொலை செய்யப்பட்ட இடத்தில் கண்டறியப்பட்ட தடயங்களையும் கொல்கத்தாவில் கைப்பற்றிய தடயங்களையும் சோதித்துப் பார்க்க அனுப்பி இருந்த முடிவுகளும் கண்ணனின் கைக்கு கிடைத்து இருந்தது. அதில் இரண்டு இடங்களிலும் கைப்பற்றப்பட்ட தடயங்கள் ஒன்றுதான் என்ற உறுதியான முடிவு வர கொலை செய்தவனை பாதி நெருங்கியிருந்தது காவல்துறை.
மிச்சமிருக்கும் ஒரே ஒரு விசாரணை ராபர்ட் மனைவி அஞ்சலி மேரியிடம் தான். ஆனால் அதை உடனே செயல்படுத்தாமல் மூன்று நாட்களுக்கு அஞ்சலை மேரியை கண்காணிக்க ஆட்களை நியமித்து இருந்தான் கண்ணன். அதுமட்டுமில்லாமல் ராபர்ட் பத்தின குற்ற வழக்குகளில் தொடர்புடைய அத்தனை ரவுடிகளையும் பிடிக்க ஏற்பாடு செய்திருந்த கண்ணன் மறைமுகமாக ஏற்கனவே ராபர்ட் உபயோகித்து இருந்த தொலைபேசி எண்ணைக் கொண்டு ராபர்ட் பேசி இருக்கும் மற்ற நபர்களை பிடிக்க ஏற்பாடு செய்திருந்தான்.
“சார் எல்லாமே பக்காவா பண்ணியாச்சு. அப்புறமும் எதுக்காக அமைதியாய் இருக்கனும் சார்.” தனிப்படை காவல் அதிகாரி கண்ணனிடம் கேள்வி எழுப்ப,
“பாதி கிணறு தான் தாண்டி இருக்கோம் சார். இன்னும் உறுதியான ஆதாரம் வேணும். ராபர்ட் போஸ்ட் மார்ட்டம் பண்ணின ஹாஸ்பிடல்ல இருக்க அத்தனை கேமராவையும் வாட்ச் பண்ணுங்க. அன்னைக்கு ராபர்ட் மனைவி திடீர்னு எப்படி மாற்றி பேசினாங்க. ஒருவேளை இந்த கொலை குற்றவாளி கூட அங்க வந்து இருக்கலாம். இல்லனா இதுக்கு காரணம் அஞ்சலி மேரியா கூட இருக்கலாம். முதல்ல இந்த சந்தேகத்தை உறுதிப்படுத்திட்டு தான் அவங்க கிட்ட விசாரணை ஸ்டார்ட் பண்ணனும். இவ்ளோ நாள் பொறுமையா இருந்துட்டோம். இன்னும் சில நாட்கள் தான் சார். அவனை கண்டிப்பா பிடிப்போம். இத்தனை நாள் நம்மளை அலைய வைச்சதுக்கு… நல்லா விருந்து கொடுத்து தான் கோர்ட்டில் ஆஜர் பண்ணனும்.”
கண்ணனின் எண்ணங்களை தெளிவாக புரிந்து கொண்ட தனிப்படை காவல் அதிகாரிகள் மருத்துவமனையின் கேமராக்களை ஆய்வு செய்ய சென்றிருந்தனர்.
அவர்கள் சென்றதும் மீண்டும் தன் சிந்தனையில் உழன்ற கண்ணன் கொல்கத்தாவில் வெங்கடாசலம் அனிதா செயல்களையும், அங்கு நடப்பதையும் அவ்வப்போது தெரிந்து கொண்டிருந்தான்.
வீட்டிற்கு வந்ததும் மதிய உணவை முடித்துவிட்டு ஆரதியை காண செல்ல,
அவனின் வருகைக்காகக் காத்திருந்தவள் , “என்ன பித்து இவ்வளவு நேரமா உனக்கு. போன விஷயம் நல்லபடியா முடிஞ்சுதா. ஹாஸ்பிடல்ல என்ன சொன்னாங்க.”
“இன்னும் ஒரு வாரத்துல வானதி கம்ப்ளீட்டா சரியாகிடுவான்னு சொன்னாங்க ஆதி. காலேஜ்ல பேசி அட்மிஷன் போட்டாச்சு.”
“சூப்பர். நானும் திருநெல்வேலில எனக்கு தெரிஞ்சவங்க கிட்ட பேசி வானதி சர்டிபிகேட்ட வாங்கிட்டேன். ஒரு ரெண்டு நாள்ல இங்க வந்துரும்.”
“சரி ஆதி. இதைவிட முக்கியமான வேலை நமக்கு நிறைய இருக்கு. கொஞ்ச நாளைக்கு உன்னோட ஆளை சைட் அடிக்காம.. வேலையை பாக்கலாமா.”
“டேய் இரு எடுபிடி வரட்டும் சொல்லிவிடுற.. நாங்கள்லாம் என்ன நடந்தாலும் வேலையில கரெக்டா இருப்போம்.”
“இருங்க இருங்க… முதல்ல உன் கிட்ட நிறைய விஷயம் பேசணும் அனிதா பத்தி.” என்றவன் அனிதா எண்ணிலிருந்து அடிக்கடி சென்று கொண்டிருந்த எண்ணை கூறி, “இது சென்னையில வாங்கின சிம் கார்ட். பரமசிவம் என்ற பெயரில் வாங்கி இருக்காங்க. நானும் அந்த அட்ரெஸ் ல போய் விசாரித்தேன். பரமசிவம் இறந்து ஒரு வருஷத்துக்கு மேலாகுது. அவர் உயிரோடு இருக்கும்போதே இந்த சிம் கார்டு வாங்கி இருக்காங்க. அவங்க வீட்ல விசாரித்த வரைக்கும்.. பரமசிவம் ஒரு ஆக்சிடெண்டில் இறந்து இருக்காரு. அப்போ அவரோட போனும் காணாம போயிருக்கு. இதைப்பற்றி குடும்பத்துல இருக்கவங்க அப்போ பெருசா எடுத்துக்கல. அதுக்கு அப்புறம் யோசிச்சு தேடிப் பார்த்து இருக்காங்க கிடைக்காம போகவும் போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளைன்ட் கொடுத்திருக்காங்க.” என்றவன் காவல் துறையில் இருந்து கைப்பற்றிய நகலையும் தர,
அதைப் படித்துப் பார்க்க ஆரம்பித்தாள் ஆரதி.
“அதுமட்டுமில்ல ஆதி. பரமசிவம் இழந்து ஒரு மூணு மாசத்துக்கு அடிக்கடி மட்டும்தான் இந்த சிம் கார்டு ஆன் ஆகி இருக்கு. இப்போதான் கடந்த எட்டு மாசமா முழுசா ஆன் ஆகி இருக்கு.”
“சித்து.. நம்ம தேடிட்டு இருக்கவன் கண்டிப்பா திருட்டு தொழில் செய்கிற ஒருத்தனா தான் இருப்பான். இந்த பரமசிவம் இறந்தது கூட அவனால இருக்கலாம். இல்லையா இறந்த இடத்துல இருந்து ஃபோனை திருடி இருக்கலாம். பரமசிவம் இறப்பில் ஏதாச்சும் சந்தேகம் இருந்துச்சா விசாரிச்சுப் பாத்தியா.”
“விசாரிச்சுட்டேன் ஆதி. ஒரு பணக்காரக் கார் இடிச்சிருக்கு. அதுக்காக போலீஸ் ஸ்டேஷன்ல சுமுகமாக பேசி காசும் கொடுத்து கேஸை முடிச்சிருக்காங்க. அந்தக் காருக்கு சொந்தமானவனையும் பிடித்து விசாரிச்சிட்டேன். அவனுக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இருக்கிற மாதிரி தெரியல.”
“இதெல்லாம் எப்ப சித்து பண்ண.”
“அதான் நம்ம மூணு பெரும் சம்பவம் பண்றதுக்கு முன்னடி நாள் நைட்டு எங்க போன.. எங்க போனேன்னு எல்லாரும் கேட்டுட்டு இருந்திங்களே அப்போ தான். என்னுடைய சைடுல இருந்து நீ கேட்ட அத்தனை இன்பர்மேஷனையும் கொடுத்துட்டேன். இனிமே ஆரதி அதிரடி காட்ட வேண்டியதுதான்.”
“இன்னும் ஒரே ஒரு இன்ஃபர்மேஷன் வேணும் சித்து. கடைசியா அனிதா போன் சிக்னல் எந்த இடத்துல கட் ஆச்சுன்னு தெரியணும்.”
“அதை ஏற்கனவே போலீஸ்காரங்க கண்டு பிடிச்சுட்டாங்க ஆதி. அனிதா வேலை செஞ்ச கடைக்கு பக்கத்துல தான் கடைசியா அந்த சிம் ஆன் ஆகி இருக்கு.”
“அப்போ சம்பவம் நடக்குறதுக்கு முன்னாடி அனிதா அங்க வந்து இருக்கா அப்படி தானே.”
“இருக்கலாம் ஆதி.”
***********************************
சார் நீங்க சொன்னது கரெக்ட் தான். ராபர்ட் மனைவி அஞ்சலி மேரி வேணும்’னே தான் பல்டி அடித்திருக்காங்க. இத அப்பவே கண்டு பிடிச்சு இருந்தா நம்ம கொல்கத்தா வரைக்கும் போய் இருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது. ” என்ற காவல் அதிகாரி மருத்துவமனையில் உள்ள வீடியோ காட்சிகளை கண்ணனிடம் சமர்ப்பிக்க , அதை கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தான். பின் நேராக மருத்துவமனைக்குள் நுழைந்து அங்கு இருக்கும் பணியாளர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணையில் ஈடுபட்ட, ஒருவன் மட்டும் பயத்தில் வெளிரி இருப்பதை காண, காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.
பணியாளன் ஒப்புக்கொண்டான் தன்னுடைய பணியாளர் துணியைக் கொடுத்து ஒருவனை அனுப்பியதை. மேலும் அவனிடம் விசாரணை நடத்தப்பட , “சார் சத்தியமா எனக்கு ஒன்னும் தெரியாது. வந்து ஒரு ஐந்தாயிரம் ரூபாய் கொடுத்தான். அதுக்கு ஆசைப் பட்டு தான் எங்க ட்ரஸை கொடுத்தேன். அதைத் தவிர வேறு எதுவும் எனக்கு தெரியாது.”
வீடியோ பதிவில் உள்ள.. முகத்தைக் கொண்டு அனைத்து காவல் நிலையத்திற்கும் தெரியப்படுத்தி இருக்க சிறிது நேரத்திலேயே தகவல் வந்தது. சென்னையில் சிறு சிறு குற்றங்களில் ஈடுபட்டு இருக்கும் வளர்ந்து வரும் ரவுடி என்று. அவனுடைய முழு தகவல்களும் கண்ணனின் கைக்கு வர, அடுத்த அரை மணி நேரத்தில் அவனும் கைக்குள் வந்து விட்டான்.
எவ்வளவு அடித்தும், விசாரித்தும் ஒரு வார்த்தை கூட சொல்ல தயாராக இல்லை அவன். நான் மருத்துவமனைக்கே செல்லவில்லை என உறுதியாக நடிக்க அவனைப் பேச அவருக்கு முயற்சியில் ஈடுபட்டிருந்தனர் போலீஸ்காரர்கள். இத்தனை நிகழ்ச்சியையும் பொறுமையாக தன் அறையில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த கண்ணன் மௌனமாக சிரித்துக்கொண்டே, “சார் அவன்தான் ஹாஸ்பிடலுக்கு போகவே இல்லன்னு சொல்றானே. அப்புறம் எதுக்கு விசாரணை என்ற பேர்ல நேரத்தை வீணடிக்கிறிங்க. எனக்கு என்னமோ இவன் சொல்றது தான் உண்மை னு தோனுது. பேசாம வீட்டுக்கு அனுப்பி விடுங்க. “
கண்ணனின் வார்த்தை ஒன்று கூறினால் கண்கள் வேறு ஒரு செய்தியைக் கூறியது தனிப் படை அதிகாரிகளுக்கு. அதைப் புரிந்து கொண்டவர்களும் “சரிங்க சார் ” என்றதோடு குற்றவாளியை அனுப்பி வைத்தனர்.