வெளியில் வந்தவனோ… தப்பித்தோம் என்ற பெரும் நிம்மதியில் அங்கிருந்து வேக வேகமாக நடக்க ஆரம்பித்தான். ஏற்கனவே இரவு பதினோரு மணி ஆகிவிட்டதால் ஆள் நடமாட்டம் குறைந்து இருந்தது அந்த பெசன்ட்நகர் சாலையில். தனக்கு பயம் இல்லை என்பதுபோல் விசில் அடித்துக் கொண்டு அன்ன நடை இட்டு நடந்து கொண்டிருந்தவனை வேகமாக வந்த ஒரு கார் இடிக்க, கீழே சரிந்தான்.
விழுந்த வேகத்தில் காலில் சிறு காயம் ஏற்பட அதில் கோபமாகியவன், “டேய் அறிவுகெட்ட பேமானி. இன்னாடா வண்டி ஓட்டுற. இம்மாம் பெரிய கார் இருந்தா நீ என்ன பெரிய இவனா. கிழ இறங்கி வாடா. டேய் இம்மா நேரம் பேசுற.. பயம் க்கீதா உனக்கு. இறங்குடா கீழே இறங்கு…” என்றவன் கார் கண்ணாடியை வேகவேகமாக தட்ட, அதிலிருந்து அம்சமாக இறங்கினான் ஆழிக் கண்ணன்.
கண்ணனைக் கண்டதும் தப்பித்து ஓட ஆரம்பிக்க, ஓட விட்டு வேடிக்கை பார்த்த கண்ணன்.. மெதுவாக தன் துப்பாக்கியை எடுத்து குறி பார்த்து முட்டிக்கு கீழே சுட … தார்சாலை சிகப்பு நிற திரவத்தை பூசி இருந்தது. கண்ணனின் பின்னே வந்த தனிப்படை காவல் அதிகாரிகள் அவனை பிடித்துக் கொள்ள, சாலையில் நின்றிருந்த ஒரு சிலரும் நடையை கட்டினார்கள்.
“என்ன ஆறுமுகம் இந்த சம்பவத்தை எதிர்பார்க்கலையோ. ஏண்டா… எந்த ஆதாரமும் இல்லாம உன்னை விசாரிக்க நாங்க என்ன பைத்தியக்காரங்களா. என்னமோ உத்தமனுக்கு பொறந்த உத்தமன் மாதிரியே பேசுற. எங்ககிட்ட தெளிவான ஆதாரம் இருக்கு. நடந்ததை சொன்னா நீ உயிரோட இருப்ப. இல்ல’ன்னா ஒன்னும் பிரச்சனை இல்ல. ராபர்ட் ட கொன்னது நீதானு சொல்லி கேச முடித்துடுவேன். இப்பவும் நீ வாய திறக்காம இருந்தாலும் பரவால்ல. இங்கயே போட்டுத் தள்ளிட்டு போய்கிட்டே இருப்பேன்.”வாய் வார்த்தையோடு நில்லாமல் துப்பாக்கியை எடுத்து காதின் பின்புறம் அழுத்தி நிறுத்த, ஆறுமுகத்திற்கு கண்ணன் எமதர்மன் ஆகவே தெரிந்தான்.
“சார் சார் இன்னா சார் நீங்க. நான் கொலை பண்ற அளவுக்கு எல்லாம் பெரிய ஆள் இல்ல சார். ஏதோ கைக்கு கிடைக்கிற வேலைய செஞ்சிட்டு இருக்க. நான் எல்லாத்தையும் சொல்லிடுறேன் சார் . தயவுசெஞ்சு என்னை உயிரோட விட்ருங்க சார். என்ன நம்பி ரெண்டு குழந்தைங்க இருக்கு.”
“என்னை நம்பி பொறக்கப் போற என் குழந்தை இருக்கு. மூடிக்கிட்டு சொல்றா வெண்ணை.”
“சார் இதை செய்ய சொன்னவரோட பேரு மைக்கேல். சென்னையில பல திருட்டு கேஸ்ல சம்பந்தப்பட்டு இருக்காரு. கொஞ்ச நாளுக்கு முன்னாடி இங்க தான் சார் இருந்தாங்க. ஒரு வருஷத்துக்கு முன்னாடிதான் வீடு காலி பண்ணிட்டு போனாங்க. எங்க போனாங்க என்ன எதுன்னு ஒண்ணும் தெரியாது. ஆனா அடிக்கடி போன்ல மட்டும் பேசுவோம். அன்னைக்கு வழக்கம்போல போன் பண்ணாரு. எனக்கு ஒரு உதவி வேணும் டா எவ்வளவு காசு கேட்டாலும் தரேன்னு சொன்னாரு. நான் காசுக்காக தான் இந்த திருட்டு வேலையை செய்யுற. அதான் மைக்கில் அண்ணன் சொன்னதை செய்ய ஒத்துக்கிட்டேன்.”
“என்னடா செய்ய சொன்னா அதை சொல்லு.” என்று கண்ணன் துப்பாக்கியை மேலும் அழுத்த,
“ராபர்ட் மனைவி இருக்க ஹாஸ்பிடலுக்கு போயிட்டு. ராபர்ட் பேசுறதா சொல்லி போனை கொடுக்க சொன்னாரு சார். இதப்பத்தி யாரு கேட்டாலும் வெளியே சொல்ல கூடாதுன்னு சொல்லி நான் கேட்ட பணத்தை கொடுத்தாரு சார். சத்தியமா ராபர்ட் இறந்ததற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நானே மைக்கல் அண்ணாவ பார்த்து ரொம்ப மாசம் ஆகுது சார். எனக்கு வேற ஒன்னும் தெரியாது. என்னை மன்னிச்சு விட்டுடுங்க சார்…” தனக்கு தேவையான தகவல் கிடைத்ததும் சுட்ட இடத்தில் தனது காலால் எட்டி உதைத்த கண்ணன், “போலீஸ்காரங்களை பார்த்தா உங்களுக்கு எப்படி தெரியுது. இதை அங்கேயே சொல்லியிருந்தா இவ்வளவு ரத்தம் வீணாகி இருக்காதுல. உன்னை விடுறதுக்கா பிடிச்சோம். ” கண்ணன் தன் தனிப்பட்ட கஸ்டடியில் ஆறுமுகத்தை கொண்டு சென்றான்.
அவனுக்குத் தேவையான சிகிச்சையை அளித்து விட்டு மீண்டும் தன் விசாரணையை தொடங்கிய கண்ணன் மைக்கலை பற்றிய தகவல்களை மேலும் சேகரிக்க ஆரம்பித்தான். இதற்கிடையில் மைக்கேலின் புகைப்படத்தை கேட்க,
“சார் நான் மைக்கல் அண்ணாவ பார்த்து இருக்கேன். பேசி இருக்கேன். அவரோட முகம் எனக்கு நல்லா தெரியும். ஆனா எங்கிட்ட போட்டோ வச்சுக்கிற மாதிரி போன் இல்ல சார். நீங்களே வேணா பாருங்க.” என்று பேண்ட் பாக்கெட்டில் மறைத்து வைத்திருந்த சிறிய பட்டன் போனை காட்ட, அதையும் வாங்கி ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தனர் தனிப்படை காவல் அதிகாரிகள்.
கண்ணனின் அமைதியான செயலால் கிட்டத்தட்ட கொலையாளியை முக்கால்வாசி தொட்டு விட்டவர்கள் அவனின் புகைப்படத்தை மட்டும் காண முடியவில்லை.இதுவே மேலும் மேலும் அவர்களை வேக மூட்ட அதை குறைக்கும் நாளுக்காக காத்திருந்தனர்.
தன் வேலை அனைத்தும் முடித்து விட்டு இரவு ஒரு மணி போல் வீட்டிற்கு வந்த கண்ணனை வரவேற்றது வாசலில் கிழிந்த சட்டையுடன் கவிழ்ந்து படுத்துக் கொண்டிருந்த மனிதன் தான். அவரின் அருகில் அமர்ந்து ராசாத்தி எழுப்பிக் கொண்டிருக்க, வானதியோ அமைதியாக பார்த்து கொண்டிருந்தாள். வழக்கம்போல் தன் ஜோடி புறாவின் வேலை என்பதை யூகித்தவன், சித்துவை தேட அவனோ ஏஞ்சலின் சாகச வித்தையை எண்ணி நெகிழ்ந்திருந்தான்.
கண்ணன் வந்ததும் நல்ல பிள்ளை வேடம் அணிந்து கொண்ட ஆரதி மாமன் நாராயணன் பின்னால் நின்று கொண்டாள்.
சோர்ந்த முகத்தோடு நின்றுருந்த ரதி தேவியை கண்ட கண்ணன், ” தேவி என்ன நடந்துச்சி இங்க..”
ரதிதேவி வாயை திறப்பதற்கு முன் “நான் சொல்றேன்” என முந்திக் கொண்டு வந்த சித்துவின் பனியன் காலரை பிடித்த கண்ணன், “என்ன சொல்லுவ. உன் ஏஞ்சல் ஏணி இல்லாம ஏறி அடிச்சதையா” என கேட்க,
“ஈஈஈ அதே அதே..”
“ஓரமா நின்னுட்டா நல்லது. இல்லனா கவுந்து கிடக்குறவருக்கு பக்கத்துல நீயும் படுக்க வேண்டி வரும்.” அதன்பின் சித்துவிற்கு அங்கே என்ன வேலை. பதமாக சரஸ்வதி மடியில் படுத்துக் கொண்டான்.
இரவு அனைவரும் உறங்க சென்றதும்… பைப் பிடித்து வீட்டுக்குள் நுழைந்த சேகர், ராசாத்தி எங்கு இருக்கிறார் என்று தெரியாமல்… ஏதோ ஒரு அறைக்குள் நுழைய அது ரதிதேவி தங்கி இருக்கும் அறை. மனதில் தனிமையோடு உரையாடிக் கொண்டிருந்தவள் உறங்கலாம் என்று விளக்கை அணைக்க செல்ல, திடீரென குதித்த சேகரை கண்டவள் அலறியடித்து கத்த ஆரம்பித்தாள். அவளின் அலறலில் நடுங்கிய சேகர்…. வந்த வழியே திரும்பி ஓட நினைத்து நகர ,அதற்குள் ரதிதேவியின் சத்தம் கேட்டு வந்த ஆரதி உள்ளே இருந்த சேகரை தாக்க ஆரம்பித்து இருந்தாள். அதற்குள் வீட்டில் உள்ள அனைவரும் ஒன்று கூடி இருக்க ராசாத்தி தான் தன் கணவரை அடையாளம் கண்டு அதிர்ந்தாள்.
மது போதையிலும் தன் மனைவியைக் கண்டு கொண்டவர்..”ஏய் இங்க தான் இருக்கியா. எவன் கூட டி ஓடி வந்த. நான் சந்தேகப்பட்டது சரிதான். எனக்கு அப்பவே தெரியும் டி கழுதை. பொண்ண தேட போறன்னு நீ யாரையோ தேடிக்கிட்டன்னு. “
அவர் பேசியவிதமே ராசாத்தியின் கணவர் என்பதை அறிமுகப்படுத்தி விட சேகரை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஆண்கள் இறங்கி இருந்தார்கள். நாராயணன் சண்முகம் இருவரையும் வாய்க்கு வந்தபடி பேச ஆரம்பித்த சேகர்.. சிறுது நேரத்திலே பொறுமை இல்லாமல் அடிக்க கை ஓங்க, அதைத் தடுத்து விட்ட சித்து ராசாத்திக்காக அமைதியாக பேச ஆரம்பித்தான்.
இதற்கிடையில் வந்த வானதியை கண்ட சேகர் , “ஓ நீயும் இங்கதான் இருக்கியா. அம்மா மாதிரியே நீயும் மாறிட்ட. அம்மாக்கு துணையா இருக்கியா. இல்ல உனக்கும் ஒரு துணையைத் தேடிக்கிட்டியா. உன் பெரிய பொண்ணு எவன் கூட ஓடி போனானே தெரியல.. அதுக்குள்ள அவ பேரை சொல்லி அம்மாவும் பொண்ணும் ஓடி வந்துட்டீங்க.” அத்தோடு நிறுத்தவில்லை சேகர் மேற்கொண்டு ராசாத்தியை ஏகத்துக்கும் பேசியவர் அவரை அடிக்கவும் செய்தார். பொறுமை இழந்த ஆரதி… இரண்டு அடி அடித்து வாசலில் கொண்டுபோய் தள்ள,
போதை தெளியாத சேகர் வாய்க்கு வந்ததை உளறிக் கொட்டிக் கொண்டிருந்தார்.
நாராயணன் தான், “இங்க பாருங்க எதுவா இருந்தாலும் காலைல பேசிக்கலாம். இப்போ அமைதியா தூங்குங்க.” என்றவரை ,
கழன்ட லுங்கியை கட்டிக்கொண்டு..”நீ யாருடா. நீதான் என் பொண்டாட்டிய இழுத்துட்டு வந்தியா..”
இந்த வார்த்தையே போதும்..ஆரதியை உசுப்பி விட. சேகர் வயதையும் பார்க்காமல் அடிக்க , தடுக்கச் சென்ற ராசாத்தியை தடுத்த வானதி,
“அம்மா தயவு செஞ்சு தடுக்காதீங்க. நமக்கு ஆதரவு கொடுத்த குடும்பத்தை தப்பா பேசுறாரு. இப்பவும் அவர் பக்கம் நின்னா நம்ம மனுசங்க இல்லை.”
“ஓ ஆதரவு கொடுத்திருக்கானா.. அது சரி . அப்போ உன்ன தான் வச்சிருக்கான்.” அதன் பின் எந்த பேச்சுக்களும் அங்கே இல்லை. ஏற்கனவே திருநெல்வேலியில் அவர் செய்த சாகசத்தைப் கேட்ட ஆரதிக்கு கட்டுக்கடங்காத கோபம் இருந்தது. இதில் தன் முன்னே பெண்களை தரக்குறைவாகப் பேசுவது மட்டுமில்லாமல் தன் மாமனை தவறாக பேசிய சேகரை கண்டவள் பொறுக்க முடியாமல் அடிகளில் பதில் சொல்லியிருந்தாள். ஒரு கட்டத்திற்கு மேல்… சேகர் மயங்கி சரிய ராசாத்தி தான் தங்கி இருந்தார்.
“இந்த மாதிரி தப்பு பண்ற புருஷனை நல்லா தாங்குங்க. உங்க பொண்ணுங்களுக்கும் புருஷன் என்ன பண்ணாலும் அனுசரிச்சு போகணும். அமைதியா போன்னு சொல்லி கொடுங்க. புருஷன்கிட்டையே தன்னுடைய தன்மானத்தை காப்பாற்ற முடியலன்னா வெளி உலகத்துல அதை வாங்க முடியாது ம்மா. வயசு பொண்ணு.. என்ன வார்த்தை எல்லாம் பேசுறாரு. இனி என் மாமா முகத்தை எப்படி உங்க பொண்ணு பார்ப்பா. தப்பு பண்றவன் புருஷனா இருந்தாலும் தட்டிக் கேளுங்கள். ஆரம்பத்துலேயே இதை பண்ணி இருந்தா இங்க உக்காந்து இருக்க வேண்டிய அவசியம் வந்திருக்காது. உங்க புருஷனுக்கு சப்போர்ட் பண்ற மாதிரி இருந்தா இப்பவே நீங்க கிளம்புங்க. வானதி என் தங்கச்சி அவளை எப்படி பார்க்கணும் னு எனக்கு தெரியும். ”
ஆரதியின் பேச்சில் தலை கவிழ்ந்து நின்ற ராசாத்தி சேகரை விட்டு எழும் நேரம் தான் கண்ணன் உள்ளே வந்தான்.
நடந்ததைக் கண்ணனிடம் சொல்லி முடிக்க..”உனக்கு ஒன்னும் ஆகல தான தேவி.”
“இல்ல சார். எனக்கு ஒன்னும் இல்ல. நான் நல்லா இருக்க. “
ரதிதேவியிடம் பேசியவன்.. சேகரை எழுப்பி நீரால் நிதானத்திற்கு கொண்டு வந்திருந்தான். யாருக்கோ தகவல் சொல்ல, அடுத்த 15 நிமிடத்தில் அரசு வாகனம் ஒன்று வந்தது. அதில் சேகரை ஏற்றிவிட்டவன் எதுவும் பேசாமல் தன் அறைக்கு சென்று விட்டான்.
சித்து,”ஆன்ட்டி கவலைப்படாதீங்க. உங்க புருஷன குடிப்பழக்கம் மறக்குற இடத்துக்கு தான் அனுப்பி வச்சிருக்கான். கொஞ்ச நாள்ல மனுஷனா மாறி வருவாரு. அதுவரைக்கும் பொறுமையா இருங்க.” என்றவன்,
“ஆதி நம்ம எவ்வளவு பர்பாமென்ஸ் பண்ணாலும் கடைசி நேரத்துல வந்து இவன் ஸ்கோர் பண்ணிடுறா பாரு. இப்ப கூட நீ வருவன்னு தானே பேசாம மேல போறா… போ போ உங்க ரொமான்ஸை கண்டினு பண்ணுங்க.”
சிரித்தவள் நேராக தன் அறைக்குள் சென்று விட்டாள். அதன் அர்த்தம் சித்து மட்டுமே அறிந்தது.
அழுதுகொண்டிருக்கும் ராசாத்தியை கண்ட மஹாலட்சுமி, “எதுக்கு இப்ப அழுதுட்டு. ஏற்கனவே சித்து உங்க வீட்டுக்காரர் வருவாருவாறுன்னு சொல்லியிருந்தான். இப்ப நடந்ததுக்கும் உங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இத நினைச்சு கவலைப் படாதீங்க. கொஞ்ச நாள்ல என் பையன் உங்க வீட்டுக்காரரை மனுசனா மாத்தி உங்ககிட்ட கொடுப்பான். இனிமே எந்த பிரச்சினையும் இல்லன்னு நினைச்சு நிம்மதியா தூங்குங்க.”
தந்தை வந்ததிலிருந்து அமைதியாக பார்த்துக்கொண்டிருந்த வானதியை கண்ட நாராயணன், “இங்க வாடா..” என்றழைக்க, அவளும் அவர் அருகில் அமர்ந்தாள்.
“உன் அப்பா சொன்ன வார்த்தை என்னை எந்த விதத்திலும் காயப்படுத்தல. ஏன்னா அந்த வார்த்தை எதுவும் உண்மை இல்லை. என்னோட மருமக ஆரதி தான் எனக்கு முதல் பெண் குழந்தை. அவளுக்கு அடுத்து நீயும் ரதி தேவியும். பெண் குழந்தைக்கு ஆசைப்பட்ட எங்களுக்கு வீட்டுல இப்போ மூணு பொண்ணுங்க இருக்கீங்க. நானும் என் மனைவியும் உங்கள அப்படி தான் பார்க்குறோம். நீ அழாம இருந்ததை பார்க்கும்போதே புரிஞ்சுகிட்டேன்.. இது வலியோட சுவடு ன்னு. இனிமேலும் அழக்கூடாது.. உங்களால முடியாதது எதுவுமே இல்லை. உன்கிட்ட என்னென்ன குறை இருக்கோ அது அத்தனையும் நிறையா மாற்று. இந்தப் பேச்சுக்களும், வலிகளும் தான மறையும். ” அவள் தலைமீது கைவைத்து தடவி விட வாழ்வில் பார்க்காத தந்தை உணர்வை உணர ஆரம்பித்தாள் வானதி. அதன் வெளிப்பாடாய் கண்ணீர் கட்டுக்கடங்காமல் ஓசையோடு வெளிவர அவள் அழுது முடிக்கும் நேரம் வரை அங்கிருந்த அனைவரும் அமைதி காத்தனர்.
சண்முகமும் அவள் அருகில் அமர்ந்து ஆதரவு தர பிறகென்ன பெண்ணிற்கு.. ஆயிரம் பலம் ஆட்கொண்டது.
இதை கவனித்துக் கொண்டிருந்த ரதி தேவிக்கு துக்கமும் சந்தோஷமும் ஒருசேர தாக்க.., அதை புரிந்துகொண்ட சண்முகம், “இங்க நடக்கிற சில விஷயங்கள் எங்களுக்கு புரியும். இருந்தாலும் அமைதியா போறதுக்கு காரணம் வர பிரச்சனையை நீங்களே சரி பண்ணிடுவிங்கன்ற நம்பிக்கையில தான். சின்ன விஷயத்துக்கு துவண்டு போகாதீங்க. காலம் எல்லாத்தையும் மாத்தும். எப்பவுமே நீயும் என் பொண்ணு தான். உனக்கான ஆதரவு இந்த அப்பா கிட்ட இருந்து எப்பவுமே கிடைக்கும்.” இந்த வார்த்தைகள் அனைத்தும் தனக்கானது என்பதை உணர்ந்த ரதிதேவியின் மனம் மகிழ்ச்சி கொள்ள அந்த இரவு அழகாக கழிந்தது.