நள்ளிரவு நேரம், பஞ்சமி திதியன்று, பலத்த சூறாவளி காற்றோடு பெய்துகொண்டிருந்தது கனமழை..
தமிழ்நாட்டின் கடைக்கோடியான கன்னியாகுமாரியில் ஒதுக்கு புறத்தில் அமைதிருக்கிறது அந்த வறண்டுமிக்க வறுமையோடு ஒரு சிறிய கிராமம்..அக்கிராமத்தில் பங்களா, அரண்மனை, மாடி வீடு, மெத்தை வீடு என்றும் ஏதும் கிடையாது.
முண்ணூறு குடிசைகள் கொண்ட சிறு கிராமம் அது.மின்சாரமோ குடிநீர்வசதியோ கிடையாது..
பலநூற்றாண்டுக்கான ஆலமரத்தில் கீழே இருக்கிறது, பனை ஓலையால் மற்றும் தென்னை கீற்றால் ஆனா ஒரு குடிசை.
“ஆஆஆஆ அம்மா முடில, ஏனுங்க எனக்கு இடுப்புல வலி வந்துடுச்சி, நமக்கு நாலாவது கொழந்தையாச்சி ஆம்புள புள்ளையா பொறக்கணும் ன்னு வேண்டிக்கிங்க, அப்போ தான் நமக்குன்னு ஒரு விடிவு காலம் பொறக்கும் “என்று வலியை பொறுத்துக்கொண்டு கணவரிடம் கூறினார் செல்லாயி.
மனைவியின் வார்த்தையை கேட்டு கண்கலங்கிய சுப்பராயன் என்ற சுப்பன், ” செல்லம் கடவுள் எப்போதும் நமக்கும் நல்லது தான் செய்வாரு, அவரு என்ன கொடுக்கறாரோ அதையே வாங்கிப்போம், வேணாம்ன்னு சொல்லாத தாயி, முதல்ல நீ பேசாம இரு, நான் போயி பக்கத்து வீட்டு கோசலை அக்காவ அனுப்பிவுடறேன்,”என்றவர் வீட்டை விட்டு வெளியேறி, மழையில் நனைந்து கொண்டே “யக்காவ் மாமோய், என் பொஞ்சாதி இடுப்பு வலில துடிச்சிகிட்டு இருக்குறா, செத்தநாழி வந்து பாருங்கோ எனக்கு வேற கைகாலெல்லாம் நடுங்குது,”என்ற படி வீட்டின் வெளியே நின்று கூவிகொண்டிருந்தான் சுப்பன்.
“இருலே வரேன், நீ போயி இருளாயி கிழவியை இட்டா டே “என்றவர் கையில் ஒரு வெள்ளை துணியோடு ஓடிவந்து செல்லாயிடம் “இந்தா டி செத்த நாழி பொறுத்துக்கோ டி, இதோ இருளாயி கிழவி வந்துடும் “என்றவரின் பார்வை வெளியே இருந்தது.
வலியில் பொறுக்க முடியாமல் வானத்து மின்னலிடியின் சத்ததோடு கத்திகொண்டிருந்தார் செல்லாயி.
“முடில ஆத்தா, இந்த தடவையாச்சு ஆம்புள புள்ள பொறக்கணும் ன்னு வேண்டிகிட்டு கிடக்குறேன், எல்லா கடவுள் கையில தான் இருக்கு,” என்று கூறும் போது இருளாயி கிழவியோடு குடிசையின் உள்ளே நுழைந்தார் சுப்பன்.
“வாங்க ஆத்தா எனக்கு நோவு அதிகமா இருக்கு முடில, ” என்று வலியால் கத்தி ஊரையே கூட்டம் கூட்ட வைத்தாள் செல்லாயி.
அந்த மழையில் ஊரில் இருக்கும் பெண்கள் நனைந்து கொண்டே செல்லாயி வீட்டிற்கு வந்து அங்கு திரிவிளக்கு வெளிச்சத்தில் செல்லயாயியை சுற்றி நின்றுகொண்டிருந்தார்கள்.
அவளை பார்த்து பயத்தோடு கண்களில் கண்ணீரோடும் பக்கத்தில் அமர்த்திருந்த மூன்று தேவதைகள் (பார்வதி , அபிராமி, பாக்கியலக்ஷ்மி ), தேம்பி அழ ஆரம்பித்து விட்டார்கள்.
“இந்தா புள்ளைங்களா நீங்க அங்குட்டு உன் அப்பன் கூட வெளிய திண்ணையில போயி இருங்க, உனக்கு தம்பி பாப்பா வர போகுது “என்று கூறி மூன்று பேரையும் வெளியே அனுப்பி வைத்தார் கோசலை.
தனக்கு முன்பு வந்த மூன்று பிரசவ வலி பழகினது தான், ஆனால் இந்த முறை வலி அதிகமா இருக்க கத்திக்கொண்டே இருந்தாலும், கதறி மயக்க நிலையில் இத்தனை நாளாய் உறங்காது உழைத்து கொண்டிருந்த தாயின் கருவறையிலிருந்து பூமிக்கு எட்டி பார்த்தது புத்தம் புதிய பூத்த இரட்டை ரோஜாமலர்கள்..
ஒன்று ஆண் இன்னொன்று பெண்..
“ஏலேய் சுப்பா உனக்கு ரெண்டை புள்ளைங்க பொறந்து இருக்கு டா,” என இருளாயி கிழவி கூவ, ஊரும் “மறுபடியும் பொண்ணோ, என்ன பண்றது இந்த ஊருல இருந்து பொழக்கவே கஷ்டமா இருக்கு, இதுல ஆம்புள புள்ளை வேணும் ன்னு மறுபடியும் புள்ளத்தாச்சியா ஆகிட்டாத சுப்பா, காலம் ரொம்ப மாறுதே தவிற நம்ம ஊரு மாறலையே “என மனதின் ஓரத்தில் இருக்கும் கஷ்டத்தை ஏக்கமாக சொன்னது ஊரின் பெரிசு…
மழை நன்றாக பெய்து கொண்டிருந்தது, ஆனால் ஊர் மக்கள் அனைவரும் எப்போது விடியும் என்ற மனநிலையில் இருந்தார்கள்.
சுப்பனுக்கோ சந்தோஷம் தாள வில்லை, தனக்கு ஒரு மகன் பிறந்து விட்டான், கூடவே பிறந்த இன்னொன்றை வெறுத்து பார்த்தார், அன்று ஒரு சாமியார் கூறியது நினைவுக்கு வந்தது..
ஒருநாள் மனைவி மகள்களோடு பழனிக்கு மலைஏறி கொண்டிருக்கையில் கண்டார் ஒரு தவமுனிவரை.
அவரோ சுப்பனையும் மனைவி மகள்களையும் பார்த்து விட்டு மர்மான ஒரு புன்னகை வெளியிட அதை சுப்பு பார்த்துவிட்டார் போலும், உடனே அவர் தனது மனைவியை தான் பார்க்கிறார் என்று தவறாக சிந்தித்து விட்டு,அவரை பார்த்து முறைத்து கொண்டு “என்னய்யா இங்க பார்வை, வந்தோமா, கொடுத்தத்தை வாங்கி தின்னோமா ன்னு இருக்கனும் கோயிலுக்கு வர போற ஜனங்களை அப்படி பார்க்கறது தப்பு,”என அவருக்கு எடுத்து சொல்லி கொண்டிருக்கும் போது, அந்த சாமியார் அவனை “பார்த்து உனக்கு அடுத்து பிறக்க போகும் பெண்குழந்தையால் உன் உயிருக்கே ஆபத்து, பஞ்சமி தித்தியன்று பிறக்கும் குழந்தை உன்னை ஆபத்திலிருத்து காப்பாற்றுவதற்கு தான் அந்த பஞ்சமுகியே உனக்கு மகளாக பிறப்பாள், அதுவரைக்கும் உன்னால் எவ்வளவுமுடியுமோ ஆட்டம் ஆடு, உன் கொட்டத்தை அடக்கவே வருகிறாள் பஞ்சமுகி, “என்று கூறிக்கொண்டே எழுந்து கிழக்கை நோக்கி நடந்து சென்றவர் திடீரென்று மறைந்து போனார்.
அவர் கூறி சென்றது போல் அப்படியே ரெட்டை பிள்ளைகள் பிறந்து விட்டது,
ஆனால் ஏற்கனவே இருக்கும் மூணு பெண்குழந்தைகளின் எதிர்காலத்திற்காக திருட்டு பிழைப்பை நடத்திக்கிறார், இப்பொது இன்னொரு பெண் சிசுவும் சேர்ந்து விட அதுக்கும் சேர்ந்து திருடணுமோ, வேணாம் எப்படியாவது மனைவியிடம் பேசி அந்த குழந்தையை ஒரு அனாதை ஆசிரமத்தில் விட்டுவிடலாம் என்று யோசித்து கொண்டிருக்கும் போதே ஊர் ஜெனங்கள் அனைவரும் குழந்தைகளை கொஞ்சிவிட்டு சுப்பனை பாராட்டி விட்டு தங்களது இல்லத்திருக்கு சென்றார்கள்.
மயக்க நிலையில் இருக்கும் மனைவியின் முகத்தில் சிறிது நீரை தெளித்து எழுப்பினார். அவரின் மனைவியோ மெல்ல விழிகளை திறந்து பக்கத்தில் உறங்கிக்கொண்டு இருக்கும் இரு மலர்களை பார்த்து ஆனந்த கண்ணீர் விட்டார்.
அதில் பெண்குழந்தையை பார்த்தவர் சந்தோஷத்தில் தனது கரத்தால் குழந்தையை தூக்கி முகம் முழுவதும் முத்தமழை பொழித்தார்..
அதை கண்டு திகைந்த சுப்பனோ “இந்தா டி செல்லம், அது பொண்ணு டி, இதோ இருக்கு பாரு டி இது பையன், நீ மாத்தி எடுத்து கொஞ்சுற டி” என்ற கணவரை ஏறிட்டு பார்த்தார்.
என்ன டி நான் சரியாத்தானே சொன்னேன், நீ இன்னாத்துக்கு அப்படி பாக்குற என்னைய, நான் என்ன தப்பா சொல்லிப்புட்டேன், என்றார் சுப்பன்.
நான் சரியாத்தேன் பொண்ணை தூக்கி கொஞ்சனேன், ஏன்னுங்க, நம்ம ஊருல கூட இப்படி சிவப்பா தெய்வீகமா ஒரு பொண்ணு குழந்தை கிடையாது, எனக்கு பொண்ணா பொறந்த பொண்ணை பாருங்க, எம்புட்டு சிவப்பு, நான் நினைச்சது போலவே எனக்கு ஆம்புள புள்ள பொறந்தாலும், இந்த பொண்ணை பார்க்கும் போது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குங்க, ஆமா பொண்ணுக்கு என்ன பேரு வைக்கலாம், “என்று கூறும் மனைவியை புரியாமல் பார்த்தார் சுப்பன்.
“அடியேய் நீ தானே தினமும் புலம்பிட்டு கிடப்ப ஆம்புள புள்ள வேணும் ன்னு, இப்போ ஆம்புள புள்ள பொறந்ததும் சந்தோஷமே இல்லை ன்னு சொல்ற, ஏன் டி நான் ஒன்னு நினைச்சா நீ ஒன்னு நினைப்பியா, இதோ பாரு திருட்டு பொழப்பு வைச்சித்தேன் நாம வயிறு நிரம்புது, இதுல இன்னொரு பொண்ணு வேற, நான் முடிவு பண்ணிட்டேன், அந்த பொண்ணை கொண்டு போயி ஆசிரமத்துல வுடலாம்ன்னு இருக்குறேன் “என்று கூறும் கணவரை பார்த்து அதிர்ந்த செல்லாயி “வேணாமுங்க, இந்த பொண்ணு குழந்தை தெய்வம் சாயல் இருக்குதுங்க, எந்த கஷ்டம் வந்தாலும் பரவாயில்லை, இந்த பொண்ணு நம்ம கூடவே இருக்கட்டும், நான் பத்து மாசம் சுமந்த புள்ளைய பால் கூட கொடுக்கலியே “என்று கூறும் வீரிட்டு அழுதது அந்த பெண் குழந்தை. உடனே தனது மார்பில் சுரக்கும் தாய்ப்பாலை இரு குழந்தைகளுக்கு புகட்டினார் செல்லாயி.
பஞ்சமி நாளில் பிறந்த அந்த இரட்டை குழந்தையான முதலில் பிறந்தது தான் பெண் குழந்தை, அதற்கு “விசாலாட்சி “என்ற பெயரும், அடுத்து பிறந்த ஆண் குழந்தைக்கு” விதுரன் “என்று பெயரிட்டார்கள் சுப்பனும் செல்லாயியும்.
நாட்கள் யாருக்காகவும் காத்திருக்காமல் அதன் போக்கில் சென்றுகொண்டிருந்தது, பார்வதி ஐந்தாம் வகுப்பு படிக்க, அபிராமி மூன்றாம் வகுப்பு படிக்க, பாக்கியலக்ஷ்மி ஒன்றாம் வகுப்பு படிக்கிறார்கள்..
தினமும் ரெண்டு கிலோமீட்டர் தொலைவிலுள்ள பாடசாலைக்கு மூவரும் நடந்தே சென்று வருவார்கள்.
பிள்ளைகள் பள்ளிக்கு அனுப்பிய பிறகு, தானும் காட்டை நோக்கி செல்வார் சுப்பன், அங்கு கிடைக்கும் காய்கனிகளை அவரின் தலையில் கட்டியிருந்த துண்டை விரித்து அதில் காய்கணிகளை வைத்து கட்டி கொண்டு மதியமே இல்லத்திற்கு வந்து மனைவியிடம் கொடுத்து விட்டு சிறிது நேரம் குழந்தைகளோடு விளையாடுவார், ஆனால் விசாலாட்சி பக்கம் மட்டும் போகவே மாட்டார்,
அவருக்கு இன்னும் அந்த முனிவர் கூறிய வார்த்தைகள் செவியில் ஒலித்து கொண்டே இருந்தது..
அதனின் விளைவு, அவரை பார்க்கும் போதெல்லாம் குழந்தை விசாலாட்சி தனது பொக்கை வாயை திறந்து சிரிப்பாள், அவளின் சிரிப்பை கூட தள்ளி உட்கார்ந்து இருந்த சுப்பன் ரசித்தாலும்,குழந்தை வளர வளர அவருக்குள் அச்சமும் சேர்ந்து வளர்ந்தது.
நேரம் ஆக ஆக தனது மதிய உணவை முடித்து விட்டு, வீட்டின் திண்ணையில் சுகமான காற்றோட்டத்தில் படுத்தவர் அப்படியே உறங்கி போனார்.
வீட்டில் உள்ளே செல்லாயி குழந்தைகளுக்கு அன்னமிட்டு உறங்க வைத்து, தானும் சிறிது நேரம் உறங்கலாம் என்று படுக்க போகும் போது அவரின் இரு விழிகளில் தென்பட்டது சாரை நாகம்.
அந்த நாகமோ சரசரவென விசாலாட்சியை நோக்கி வர செல்லாயியோ அதிர்ந்து கத்தி கூச்சலிட்டார்,
“ஐயோ பாம்பு பாம்பு, யோவ் மனுஷா பாம்பு வருதுய்யா ஐயோ என் புள்ளைங்க, ” என்று கதற அது அவர்கள் வசிக்கும் தெருவில் இருக்கும் நான்கு வீட்டுக்களில் கேட்டது. சுப்பனும்,
அங்கிருபவர்கள் ஓடிவந்து பார்த்தபோது அந்த நாகம் விசாலாட்சியின் மீது ஊர்ந்து சென்றது…
செல்லாயி தனது இரு கரங்களை சேர்த்து வைத்து நாகம் செல்லும் திசையை நோக்கி கையெடுத்து கும்பிட்டார்.
“அம்மா தாயி, காளியத்தா என் புள்ளைகளுக்கு ஏதும் தீண்டு படாம காப்பாத்தி உட்டியே அதுவே போதும் ஆத்தா “என்று குலதெய்வதை மனசார வேண்டினார்.
வந்தவர்கள் நாகம் செல்லும் திசையை பார்த்து விட்டு, தங்கள் வீட்டுக்கு வந்துவிடுமோ என்று பயத்தில் உடனே தங்களது இல்லத்தை நோக்கி ஓடினார்கள்.
இதோ பொழுதுச்சென்றுவிட்டது, பள்ளிக்கு சென்ற மூவரும் வீட்டிற்கு வந்து தம்பி தங்கைகளோடு விளையாட ஆரம்பித்துவிட்டார்கள்.
சிறியவள் பாக்கியலட்சுமியோ தாயிடம் சென்று “ஆத்தா துன்னுறதுக்கு எதுமே இல்லையா, எனக்கு மம்மு வேணும் “என்று கேட்க அவள் செல்லாயி
வீட்டில் கூரையில் மாட்டி வைத்திருந்த தேன்மிட்டாய், எள்ளுருண்டையை எடுத்து கொடுத்தார்.
சுப்பனும் வீட்டின் நிலவரத்தை பார்த்து ஒரு முடிவுக்கு வந்தவராய், துணியை மாற்றி கொண்டு தினமும் தனது மனையாளிடம் “ஒரு கொல்லில காவலாரியா போவணும், தினமும் ராவுக்கு மட்டுதேன் வேலை, காலையில வெள்ளனமே வந்துப்புடுவேன் “என்று ஒரே பொய்யை தினமும் கூறிவிட்டு பையை எடுத்துக்கொண்டு நாகர்கோவிலை நோக்கி நடையை கட்டினார்.
ஆனால் அவர் நோக்கி செல்லுமிடம் திருட்டு பிழைப்பை பார்ப்பதற்காக, ஐந்து பிள்ளைகளை வைத்து கொண்டு படிப்பறிவு இல்லாத எனக்கு இப்படி வேலை கொடுப்பார்கள், கூலி வேலைக்கு போனா கூட ஒரு நூறோ, மூண்ணுறோ தான் கிடைக்கும், அதை வச்சி இப்படி பொழப்பை ஓட்டுறது, எல்லாம் என் விதி,முன்னாடியே அபிராமி பொறக்கறதுக்கு பதிலா விதுரன் பொறந்து இருந்தா நான் ஏன் இப்படி ஊரு ஊரா திருடப்போவ போறேன் “என்று புலம்பிக்கொண்டு வேகமாக நடந்தார்.