“அவசரத்துல பொறந்தவனே! உன்ன அவங்க ரெண்டுபேருக்குமே ஆல்ரெடி தெரியும் டா” என்றான் விதுரன் தலையில் அடித்துக்கொண்டு.
“நா ஃபேமஸான ஆளுதான்னு எனக்கே தெரியுமே! என் காலேஜ்ல எத்தன பொண்ணுங்க வந்து புரோபோஸ் பண்ணுனாங்க! நா தான் வேணா, எனக்காக பிறந்தவ என்னைய தேடி வருவா, அவளுக்கு துரோகம் பண்ணக்கூடாதுன்னு இப்பவரைக்கும் சிங்கிளாவே இருக்கேன்” என்றான் பெண்கள் இருவரையும் பார்த்து ஆர்வமாக.
இரு பெண்களும் கிண்டலாகப் பார்த்தனர்.”இந்த இன்பர்மேஷன்லாம் எதுக்கு சொல்லுறன்னு நல்லாவே எங்களுக்கு தெரியுது எரும” என்றான் விதுரன் முறைப்புடன்.
“நீ இவ்ளோ சொல்ல தேவையில்ல விஷ்வா. உன்னபத்தி இவங்க ரெண்டுபேருக்குமே தெரியும். இவ அஞ்சனா, இவ ருத்ரா” என்றான் அர்வி முறைப்புடன்.
“எங்கயோ கேள்விப்பட்ட பேரு மாதிரி இருக்கே!” என்றான் யோசனையுடன்.
“தேனி தெரியுமா? தேனி!” என்றாள் ருத்ரா கிண்டலாக.
“எக்ஸ் எக்ஸ் ஸ்கூல் தெரியுமா?” என்றாள் அஞ்சு கிண்டலாக.
“ஏய்!! அஞ்சு! ருத்ரா! நீங்க ரெண்டு பேரும் இங்க எப்ப வந்திங்க? உங்கள இங்க எதிர்பார்க்கவே இல்ல, ஸ்கூல் படிக்கிறப்ப அப்படி இருந்துட்டு இப்ப என்ன ரெண்டுபேரும் செம்ம ஃபிகரா இருக்கீங்க” என்றான் சந்தோஷமாக.
“அப்ப எப்படி இருந்தோம் ம்ம்… அதே மாதிரி தான் இருக்கோம்” என்று அஞ்சு சண்டைக்கு வந்தாள்.
“அதான! நாங்களாம் மாறவே இல்ல. எப்படி நீ இப்படி சொல்லலாம்?” என்றாள் ருத்ரா முறைப்புடன். அர்வியும் விதுரனும் சிரித்தனர். விஷ்வா முழித்தான்.
“சரி சரி! விடும்மா. தெரியாம வந்ததும் அழகா இருக்கீங்கனு சொல்லிட்டேன். அதுக்கு இவ்ளோ பெரிய சண்டையா!” என்று சலித்துக் கொண்டான்.
“அது! அந்த பயம் இருக்கணும் எங்ககிட்ட” என்றனர் இருவரும் ஹை -ஃபை அடித்துக்கொண்டே.
“சாப்பிட வர ஐடியா யாருக்கும் இல்லையா?” என்று வந்து அழைத்தார் புவனா. அனைவரும் சேர்ந்து சாப்பிட்டனர்.
“ஆமா ஆஞ்சு! நீ எதுக்கு விஷ்வாவை எதிரின்னு சொன்ன?”.
“அம்மா! அது ஒரு பெரிய கதை. அத சொன்னா இன்னைக்கு ஃபுல்லா சொல்லிட்டே இருக்குறதா இருக்கும்” என்றாள் சிரிப்புடன்.
“அப்படி என்ன கதை?” என்றார் ஆர்வமுடன்.
“அம்மா! ஒரு பிரச்சனைல அஞ்சு கிட்ட நான் அடி வாங்கிட்டு வந்தேல்ல உனக்கு ஞாபகம் இருக்கா? அது இந்த பிரச்சனையில் தான்” என்றான் அர்வி.
“அடிவாங்குனது நியாபகம் இருக்கு. ஆனா, எதுக்கு அடி வாங்கினன்னு தான் எனக்கு தெரியல. அப்படி என்னதான் உங்களுக்குள்ள பிரச்சனைகள் வந்துச்சு?”.
“சொல்றேன்மா. நான் பிளஸ் வன் படிக்கிறப்ப..” என்று அஞ்சு ஆரம்பித்தாள்.
(பிளாஷ்பேக் ஸ்டார்ட்)
‘இந்தப் பக்கம்தானே இந்த விஷ்வா வீடு இருக்குன்னு சொன்னான். எந்த வீடுன்னு சரியா தெரியலையே..இந்த வழியா தானே அவனும் போவான். அவனோட வீடும் எதுன்னு தெரியல்லையே!’ என்று யோசித்தபடி சைக்கிளை தள்ளிக்கொண்டு நடந்தாள் அஞ்சு.
‘மூன்னாவது வீடு தானே சொன்னான். சரி! இந்த வீட்டுல கேட்டுப் பார்க்கலாம்’ என்று நினைத்துக்கொண்டே காலிங் பெல்லை அழுத்தினாள்.
“யார் பாப்பா வேணும்? யார் நீ?” என்றபடி ஓர் இளைஞன் வந்தான்.
“இது விஷ்வாவோட வீடு தானே?” என்றாள் சந்தேகமாக.
“ஆமா! விஷ்வா என் தம்பிதான். நீ யாரு?”.
“நான் அவனோட கிளாஸ்மேட். என் பேரு அஞ்சு. அஞ்சனலோஷினி” என்றாள் தயங்கியபடி.
“சரி! உள்ள வா” என்று அழைத்துச் சென்று ,”என்பேரு ஜெய விதுரன். டேய்! விஷ்வா! உன் ஃப்ரெண்ட் உன்ன பார்க்க வந்து இருக்கா. வெளிய வாடா” என்று சத்தம் போட்டான். அஞ்சு தயக்கத்துடன் புதியவனைப் பார்த்தாள்.
விஷ்வா வேகமாக வெளியே வந்தான்.”ஓய்! நீ என்ன பண்ற எங்க வீட்டில?”.
“என் புக்கு எங்க? இன்னும் ரெண்டு நாள்ல எக்ஸாம் இருக்கு, என் புக்க வாங்கதான் இங்க வந்தேன். இல்லனா நான் எதுக்கு உன் வீட்டுக்கு வர போறேன்” என்றாள் எரிச்சலுடன்.
“ஓ.. உன் புக்கா? இரு எடுத்துட்டு வரேன்” என்று உள்ளே சென்று எடுத்து வந்து கொடுத்தான். விதுரன் உள்ளே சென்றான்.
“ஏய்! என்ன முதல் பக்கமும் காணோம் கடைசி பக்கமும் காணோம்? என் புக்க குடுடா” என்றாள் கோபமாக.
“இது உன் புக்குதான்” என்றான் நக்கலாக.
“என்னது! என் புக்கா? உன்கிட்ட நான் கொடுக்குறப்ப என்ன சொல்லிக் கொடுத்தேன்? என் புக்குல சின்ன கீறல் கூட இருக்கக் கூடாது, நீ அதுல எதுவும் கிருக்க கூடாதுன்னு சொல்லி தானே கொடுத்தேன்? புக்கு வாங்குறப்ப மண்டைய மண்டைய ஆட்டி வாங்கின. இப்ப கொடுக்கிறப்ப இப்படி குடுக்குற!” என்றாள் கோபமாக.
“இப்ப என்ன நடந்துச்சுன்னு நீ காத்து கத்து கத்தர? புக்கு கிழிஞ்சு போச்சு. நானே அத ஓரளவுக்கு ஒட்டி உன்கிட்ட கொடுத்துருக்கேன். வாங்கிட்டு போகாம இப்படி சண்டை போட்டுட்டு இருக்க!” என்றான் திமிராக.
“டேய்! உன்ன.. நான் என் புக்குல ஒரு சின்ன கீறல்கூட விடாம பார்த்துக்கிட்டேன். ஆனா நீ எடைக்கு போடுற கடைக்கு குடுக்குற மாதிரி என் புக்க திருப்பி கொடுத்து இருக்க! உன்ன சும்மா விடமாட்டேன் டா” என்று டேபிள்மேல் இருந்த பேப்பர் வெயிட்டை எடுத்து தூக்கி அவன்மீது போடப் போனாள். விதுரன் சத்தம் கேட்டு வெளியே வந்தான்.
“ஏய்! வெயிட் வெயிட்! சின்ன புள்ளைங்க மாதிரி சண்ட போட்டுக்கிட்டு இருக்கீங்க ரெண்டு பேரும்! நிறுத்துங்க. நீ முதல்ல அந்த பேப்பர் வெயிட்டை கீழவை” என்று சத்தம் போட்டான்.
“என்ன! உங்க தம்பிக்கு சப்போட்டா? பாருங்க. என் புக்க இப்படி குடுத்து இருக்கான். அவன நான் சும்மா விடமாட்டேன்” என்று தூக்கிப்போடச் சென்றாள்.
“அண்ணா! காப்பாத்து” என்று வேகமாக விதுரன் பின்னால் சென்று நின்றுகொண்டான்.
“இங்க பாரு, எதா இருந்தாலும் பேச்சு பேச்சா இருக்கணும். இப்படிலாம் வந்து சண்ட போடக்கூடாது. ரவுடியா நீ? உனக்கு என்ன புது புக்கு வேணாலும் வாங்கி கொடுக்கிறேன்”.
“என்னது! ரவுடியா? என்ன பார்த்தா உங்களுக்கு ரவுடி மாதிரி தெரியுதா?” என்று சண்டைக்கு வந்தாள்.
“அம்மா! தாயே! உன் கையில இருக்க பேப்பர் வெயிட்டை கீழே வச்சுட்டு எதா இருந்தாலும் பேசுமா?”. முறைப்புடன்.
“முடியாது”.
“வைன்னு சொன்னா வைக்க மாட்டியா?” என்று எரிச்சலுடன் அவள் கையில் இருந்த வெயிட்டை பிடுங்கி கீழே வைத்துவிட்டு, “இப்ப சொல்லு. உனக்கு என்ன பிரச்சனை?” என்றான் விதுரன் சமாதானமாக.
“உங்க தம்பி என்னோட புக்க கிழிச்சுட்டான். அதுக்கு என்ன சொல்லப்போறீங்க?”.
“ஹையோ! ஹையோ! சின்ன விஷயத்துக்குதான் இவ்ளோ பெரிய சண்டை நடக்குது! நான் என்னமோ ஏதோன்னு நினைச்சேன்! எதுக்குடா அவ புக்கை நீ கிழிச்ச?” என்றான் விஷ்வாவைப் பார்த்து.
“அண்ணா! அவ சொல்ற அளவுக்குலாம் கிழியல. மேல இருக்க அட்ட கிழிஞ்சு போச்சு. அத நா ஒட்டி பத்திரமா வச்சிருக்கேன். இவதான் ஒன்னுமில்லாத விஷயத்த ஊதி பெருசாக்குறா”.
“யாரு? யாரு? நானா பெரிய விஷயமாக்குறேன்! என் புக்க உன்கிட்ட கொடுக்கிறப்ப புத்தகம் புதுசா இருந்துச்சு. நீதான் இப்ப எப்படி வெச்சிருக்க பாரு” என்றாள் ஆத்திரமாக.
“ஏய்! பாப்பா! இந்த சின்ன விஷயத்துக்கு போயி சண்ட போடுற?”.
“சரிமா! அஞ்சனா! உனக்கு புது புக் வேணா வாங்கி தரச் சொல்லுறேன். இதுக்கெல்லாம் போயி அழாத” என்றான் கிண்டலாக.
“நான் எதுக்கு அழணும்? உங்க தம்பிய சும்மா விடமாட்டேன். புது புக்கு வாங்கி கொடுத்தா மட்டும் எதுவும் இல்லன்னு ஆகிடுமா? இந்த புக்குல எவ்ளோ நோட் பண்ணி வெச்சிருக்கேன்னு தெரியுமா? என் புக்தான் எனக்கு வேணும்” என்று சத்தம் போட்டாள்.
“என்ன! என் அண்ணாகிட்டயே வந்து ஓவரா சத்தம் போட்டுக்கிட்டு இருக்க! உன் புக் தான் கொடுத்துட்டுட்டேன்ல? அப்புறம் என்ன ஓவரா சீன் க்ரியேட் பண்ணிட்டு இருக்க?” என்று விஷ்வா சத்தம் போட்டான்.
“நான் என் புக்க உன்கிட்ட கொடுக்கும்போது இப்படித்தான் இருந்துச்சா? நீ திருப்பி கொடுக்குற லட்சணத்த பாரு. உன்னை நான் சும்மா விடமாட்டேன்”.
“என்கிட்ட வந்து புக்கு கொடு அஞ்சு, சொல்லிக்கொடு அஞ்சுன்னு கெஞ்சுகிட்டு வந்தல்ல.. இனி வருவல்ல. அப்ப இருக்கு உனக்கு. போயும் போயும் உனக்குப் போயி என் புக்க கொடுத்தேன் பாரு! என்னைய சொல்லணும்” என்றாள் ஆத்திரமாக. விதுரன் இவர்கள் சண்டையைப் பார்த்துச் சிரிக்க ஆரம்பித்தான்.
“என்ன நக்கலா? உங்க தம்பி பண்ணுனது தப்புனு சொல்லுறத விட்டுட்டு என்னைய பார்த்து சிரிக்கிறீங்க!” என்றாள் ஆத்திரமாக.
“விஷ்வா! எல்கேஜி பாப்பா மாதிரி சண்ட போட்டுட்டு இருக்கா. நெஜமாவே இவ உன் கிளாஸ்தானா? உண்மைய சொல்லுடா” என்றான் விதுரன் கிண்டலாக.
“என் கிளாஸ்னு தான் நினைக்கிறேன் அண்ணா” என்றான் அவனும் கிண்டலாக.
“என்ன? அண்ணனும் தம்பியும் சேர்ந்து என்னையே கிண்டல் பண்றீங்களா? உங்கள நான் சும்மா விடமாட்டேன். என் அண்ணன கூட்டிட்டு வரேன். அப்ப இருக்கு” என்று திட்டிவிட்டு சென்றாள். விதுரனும் விஸ்வாவும் அவள் போவதைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தனர்.
சிறிது நேரத்தில். “எவன்டா அவன்? என் தங்கச்சிய கிண்டல் பண்ணுனது?” என்று கத்தியபடி அர்வி உள்ளே வந்தான். அவனுடன் அஞ்சுவும் வந்தாள்.
“நாங்கதான் அதுக்கு என்ன இப்ப?” என்றான் விதுரன் நக்கலாக.
“அண்ணா! இவங்க ரெண்டு பேரும்தான். இவன் என் புக்க கிழிச்சுட்டான். அதுக்கு அவன் அண்ணனும் சப்போர்ட்” என்றாள் எரிச்சலுடன்.
“புக்கு கேட்டு வந்த பொண்ண போய் கிண்டல் பண்ணிருக்கீங்க! உங்க வீட்டு பெரியவங்க கிட்டயே இத கேக்குறேன். வீட்டுல யாரு இருக்கா?” என்று அர்வி சத்தம் போட்டான்.
“யார பார்த்து டா கண்ணு தெரியாலன்னு சொன்ன?” என்று அர்வி விதுரனிடம் நெருங்கினான்.
“உன்ன பார்த்து தான் டா. ஒன்னும் இல்லாத விஷயத்துக்கு உன் தங்கச்சி வந்து சண்ட போடுறா! நீ பின்னாலே சொம்பு தூக்கிட்டு வர” என்றான் நக்கலாக.
“என்ன டா சொன்னா?” என்று விதுரனின் சட்டையைப் பிடித்தான். விதுரன் பதிலுக்கு இவன் சட்டையைப் பிடித்தான். சிறிது நேரத்தில் இருவரும் உருண்டு பிரண்டு சண்டை போட்டனர்.
“அண்ணா! விடுணா அவர. வா ண்ணா” என்று அர்வியின் கையைப் பிடித்து இழுத்தாள். விஷ்வா விதுரனை பிடித்து இழுத்தான்.
“ஏய்! அஞ்சு! ஒன்னும் இல்லாதத இவ்ளோ பெரியா சண்டையாக்கிட்டல்ல” என்று விஷ்வா சண்டைக்கு வந்தான்.
“நீ ஒரு சாரி கேட்டுருந்தா இவ்ளோ பெரிய பிரச்சனையா வந்துருக்காது. சாரி நீயும் சொல்லல, உன் அண்ணாவும் சொல்லல. ரெண்டு பேரும் சொல்லாம என்னைய கிண்டல் பண்ணுனீங்களா அதான் என் அண்ணாவ அழைச்சுட்டு வந்தேன்” கோபமாக.
“இவனுங்க கிட்ட போய் சாரி எதிர் பார்க்குறீயே அஞ்சும்மா” நக்கலாக.
“என்ன ரொம்ப பேசுற! உன் தங்கச்சி தான் கத்திரிக்காய்கு கைகால் முழச்ச மாதிரி இருந்துக்கிட்டு தைய தக்க தைய தக்கான்னு குதிக்கிறா” கிண்டலாக.
“சரியா சொன்னணா” கிண்டலாக.
“அண்ணா! இந்த எதிரிக்கிட்ட நமக்கு என்ன பேச்சு? வா போலாம்” இழுத்துக்கொண்டு வெளியே வந்தாள்.
“அஞ்சு குட்டி! டென்ஷன குறை டா. அவனத்தான் அடிச்சாச்சுல்ல” என்று சமாதானம் செய்தபடி நடந்தான்.
“ம்ம்… நா உடனே ருத்ராகூட கோவிலுக்கு போறேன். அப்பதான் எனக்கு கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கும். நீ விசா கிட்ட சொல்லிடு” அவன் பதிலை எதிர்பார்க்காமல் சென்றாள். ருத்ராவிடம் நடந்ததைச் சொன்னாள்.
“ஏன் டி அப்படியே விட்டுட்டு வந்த? அவனோட அப்பா அம்மாகிட்ட சொல்லிட்டு வர வேண்டியதுதானே?” என்றாள் ருத்ரா கோபமாக.
“அவங்க வீட்டுல அவனோட அப்பா அம்மா இல்லன்னு நினைக்கிறேன் டி. கீழ விழுந்து பிரண்டுலா சண்ட போட்டாங்க. உள்ள இருந்திருந்தா அவங்க வெளில வந்துருப்பாங்கல்ல? வரலையே!” என்று உதட்டைப் பிதுக்கினாள்.
“ம்ம்… விடு! அந்த விஷ்வா ஸ்கூலுக்கு வருவான்ல. அங்க பார்த்துக்கலாம்” என்று சமாதானம் செய்தாள். விஷ்வா ஸ்கூலுக்கு வந்த சிறிது நேரத்தில் அவன் புக்கு கிழிந்தபடி மேஜையில் இருந்தது. ஒரு வாரம் விடமால் அவன் பொருட்கள் எல்லாம் நாசம் செய்தனர்.
“விசா! நா ருத்து வீட்டுக்கு போய் படிச்சுட்டு வரேன்”.
“எனக்கு நீதான் பேரு வச்சியா டி? என் அம்மா எவ்ளோ அழகா விசாலாட்சின்னு வச்சுருக்காங்க! அத விசா விசான்னு ஏலம் விடுற? ஒழுங்கா அம்மான்னு கூப்பிடு டி” என்று சத்தம் போட்டார் விசா என்கிற விசாலாட்சி (அஞ்சுவின் அம்மா).
“அது கொஞ்சம் கஷ்டம்தான் விசா. உன் பொண்ணு உன்ன அம்மான்னு கூப்பிட்டத விட விசான்னு கூப்பிட்டதுதான் அதிகம்” என்று சிரித்தபடி உள்ளே வந்தார் புவனா.
“அம்மா!” என்று பக்கத்தில் வந்தாள் அஞ்சு.
“வாங்க புவனாக்கா. இந்த நாய் எப்போதுமே இப்படித்தான்” என்று சலித்துக் கொண்டார்.
“விடு! காலப்போக்குல மாறிடும்”.
“ம்ம்… அர்வி எங்கக்கா? ஆள காணோம்?”.
“அவன் எங்க வீட்டுல தங்குறான்! பசங்களோட சேர்த்து சுத்த வேண்டியது தான்” என்று சலித்துக் கொண்டார்.
“ம்ம்… போதும் என்னைய புகழ்ந்தது. எனக்கு படிக்கிற வேல இருக்கு” என்று சென்றாள்.
“ஏன் டா ஜெய்விஷ்வா நிலமை இப்ப எப்படி இருக்கு டா?” என்றான் அர்வி.
“அத ஏன் டா கேக்குற? உன் தொங்கச்சி பண்ணுற இம்சை இருக்கே! அவன் வச்சுருக்க எல்லாத்தையும் ஏதாச்சும் ஒரு டேமேஜ் பணணிருறா” என்று சலித்தப்படி அர்வி உக்கார்ந்திருந்த சுவற்றுக்கட்டையின் மேல் ஏறி உட்கார்ந்தான்.
அர்வி சிரித்தான். “இதுலா உன் தம்பிக்கு தேவதான். புக்க கிழிப்பானாம் ஆனா சாரி கேக்க மாட்டானாம். என்ன ஒரு கேரக்டர்?”.
“டேய்! அவன் கிழிஞ்ச புக்க ஒட்டிக் கொடுத்ததே பெரிய விஷயம் டா” என்று சிரித்தான்.
“அத சொல்லு. இன்னும் எத்தன நாள் உன் தம்பிய தாக்கப் போறாளோ!” சிரிப்புடன்.
“ஆமா ஆமா! ஆனா டா நீ வந்து சண்ட போட்ட பாரு! எனக்கு செம்ம சிரிப்பு. சீரியஸா பேசாம காமெடி பண்ணிக்கிட்டு”.
“ஏன் டா சொல்ல மாட்ட? நீ என் நண்பனாச்சே! உன்ன என் ஃப்ரெண்ட்டுன்னு எப்படி சொல்லுறதுன்னு தெரியாமயே என்னைய வீட்டுக்குள்ள இழுத்துட்டு வந்துட்டா. உன்ன பார்த்ததும் சிரிப்பு வந்துருச்சு. இருந்தாலும் அஞ்சுக்காக கட்டுப்படுத்திக்கிட்டேன்” சத்தமாகச் சிரித்தான்.
“எனக்குமே உன்ன பார்த்ததும் ஷாக் தான். அப்பறம் அவ பேசுறத பார்த்ததும் நாம சண்ட போடலாம்னு முடிவு பண்ணிட்டேன்”.
“அஞ்சு உன்ன எங்கயாச்சும் பார்த்தா வம்பு பண்ணாம இருக்க சொன்னா. ஏன்னா நீ ஒரு லூசாம்” என்று சிரித்தான்.
“ஏன் டா சொல்ல மாட்டா? ஏதோ சின்ன பொண்ணுன்னு சும்மா விடுறேன் இல்லன்னா..” என்று ஆரம்பிக்கும் போதே ,”ஆ…” என கத்தியபடி இருவரும் கீழே குதித்தப்படி, “எவன் டா அது?” திரும்பி அந்த பக்கம் எட்டிப் பார்த்தவர்கள் அதிர்ந்து நின்றனர்.
எதற்காக அதிர்ந்தனர்??? இவர்கள் விஷயம் அச்சுக்கு தெரிந்தால் என்னாகும்?? என்பதை அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்…