வானதி கல்லூரிக்கு கிளம்பி கொண்டிருக்க, அவளுக்கு வேண்டியதை செய்து கொண்டிருந்தார் ராசாத்தி. சாப்பிட்டுக் கொண்டிருந்த சேகர் டிவியை ஆன் செய்து செய்தி சேனலை பார்க்க… பரபரப்பான தலைப்புச் செய்தி ஓடிக்கொண்டிருந்தது.
நீதிபதி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளி நேற்றிரவு அதிகாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டான். இவன் தன்னுடைய கூட்டாளி ராபர்ட்டை கொலை செய்தவன் ஆவான். மேலும் அனிதா என்ற பெண் கொலை வழக்கிலும் சம்பந்தப்பட்டவன். அந்தப் பெண் விசாரணைக்காக கொலை நடந்த இடத்துற்கு அழைத்துச் செல்லப்பட்டு கொலை செய்ததை செய்து காட்ட சொல்ல அதை பயன்படுத்திய மைக்கேல் அங்கிருந்து தப்பிக்க பார்த்ததால் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டான்.
இந்த நான்கு வரி செய்தியை மாற்றி மாற்றி திகிலுடன் அனைத்து சேனல்களும் ஒளிபரப்பி கொண்டிருக்க, அதைப் பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு முதலில் அதிர்ச்சி என்றாலும் இது ஏற்கனவே அவர்களுக்கு தெரியும் என்பதால் மனதில் மகிழ்ச்சியே சூழ்ந்திருந்தது. அனிதாவின் மரணத்திற்கு சிறு ஞாயம் கிடைத்து விட்டதாக எண்ணினார்கள். உடனடியாக மூவரும் கிளம்பி பக்கத்தில் இருக்கும் கண்ணனின் வீட்டிற்குள் நுழைய, அங்கு இருப்பவர்களும் அதையே பார்த்துக் கொண்டிருந்தனர்.
ராசாத்தி கண்ணனை தேட,
“மூணு பேரும் இங்க இல்ல. நேத்து மதியம் கிளம்பி போனவங்க. நியூஸ் பார்த்துதான் என்ன வேலை பண்ணி இருக்காங்கன்னு தெரிஞ்சிக்கிட்டோம் ராசாத்தி. வருவாங்க பாருங்க இன்னும் கொஞ்ச நேரத்துல…” என மஹாலட்சுமி கூற, மூவரின் வருகைக்காக காத்துக் கொண்டிருந்தார்கள்.
17 மணி நேரங்களுக்கு முன்பு,….
“என்ன மைக்கேல் எப்படி இருக்கீங்க. மூன்று வேளைக்கும் சாப்பாடு. நல்ல தூக்கம். பாதுகாக்க போலீஸ்காரங்க கூடவே பாசமான பையன்…னு நல்லா ஜம்முனு இருக்கீங்க போல. “
தன் மகனிடம் பைக்கேல் வந்த பிறகு மூவரும் …ஏன் அங்கு இருக்கும் அதிகாரிகள் உட்பட யாரும் எந்தக் கேள்வியும் கேட்கவில்லை. சந்திரனிடம் சில நேரங்கள் தாக்குதல் நடத்தப் பட்டாலும் மைக்கேலிடம் எதுவும் இல்லை. இதைப் பற்றி பலமுறை இருவரும் யோசித்திருக்கிறார்கள். இதில் ஏதோ ஒரு மர்மம் இருப்பது புரிந்தாலும் அன்று ஆரதி உங்கள் உயிருக்கு எந்த ஆபத்தும் வராது என கூறியிருந்ததால் சற்று நம்பிக்கையில் இருந்தனர். பல நாட்கள் கடந்து தன்னிடம் பேசும் கண்ணனுக்கு பதில் சொல்லாது,
“விசாரணைக்காக ஒரு மாசம் உங்க கஸ்டடியில வைக்க சொன்னாங்க. நீங்க எதுக்காக இங்க வச்சிருக்கீங்க. எப்போ என்ன ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு போவாங்க.”
அப்போது தான் உள்ளே வந்த சித்து, “ஏண்டா கண்ணா உனக்கு கொஞ்சம் கூட பொறுப்பே இல்லையா. குற்றவாளியே கேள்வி கேட்கிற அளவுக்கு வேலை பார்க்குற. முதல்ல மைக்கேல் சார் சொன்ன மாதிரி உங்க இடத்துக்கு கூட்டிட்டு போ.”
“சரி மைக்கலே ஆசைப்பட்டு கேட்கும் போது நான் வேணாம்’னா சொல்லப் போற…. மைக்கேல் சார் கிளம்புங்க. உங்ககிட்ட அனிதா சம்பந்தமான விசாரணையை ஆரம்பிக்கலாம். முதல்ல கொலை நடந்த இடத்துக்கு போகணும்… அங்க உங்களோட வீரதீர செயல்களை எப்படி செஞ்சீங்க ன்னு ரெண்டு பேரும் எங்களுக்கு செஞ்சு காட்டணும் சரியா…” என்றதோடு பேச்சை நிறுத்திய கண்ணன் அதிகாரிகளுக்கு கண்ணை காட்ட வெட்டப்படும் ஆடு போல் இருவரும் இரவு 11 மணிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர் அனிதா கொல்லப்பட்ட இடத்திற்கு.
அந்த இடத்தில் கண்ணன் வருவதற்கு முன்னரே ஆரதி இருக்க… “வா ஆழி இவ்வளவு நேரமா.. வரதுக்கு. பயில்வான் ரெண்டு பேரும் சேர்ந்து நில்லுங்க கடைசியா ஒரு போட்டோ எடுத்துக்கலாம்.”
கடைசியா என்ற வார்த்தை இருவருக்குள்ளும் பயத்தை கிளப்ப,” நீங்க பேசுறதை பார்த்தா எங்கள விசாரணைக்கு கூட்டிட்டு வந்த மாதிரி தெரியலை. உங்க பேச்சும் நடவடிக்கையும் வேற வேறயா யாருக்கு. அன்னைக்கு நீங்க சொன்னதை நம்பி தான் எல்லார்கிட்டயும் அனிதாவை நானே கொன்னதா சொன்னேன். அப்புறம் என்ன… தண்டனை வாங்கிக் கொடுத்துட்டு போகாம எதுக்கு இந்த மாதிரி பண்றீங்க.”
“நீ கேட்கிற கேள்விக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. இப்போ இதோ இங்க நிக்கிறான் பாரு உன் பையன் இவன்தான் அனிதா…. அனிதாவை எப்படி கொன்னியோ அதை உன் பையனை வைச்சி செஞ்சு காட்டு.”
உறுதியாக இருவருக்கும் தெரிந்து விட்டது என்று இருவரில் யாரோ ஒருவருக்கு முடிவு கட்டும் நாள் என்று. பயத்தில் அசையாது நிற்க, மைக்கேல் முதுகில் ஓங்கி அடித்த கண்ணன்..,”ஒழுங்கா செஞ்சு காட்டு.. இன்னும் நாங்க முடிவு பண்ணல ரெண்டு பேர்ல யார கொல்றதுன்னு. ஒழுங்கா பேச்சைக் கேட்டு நடந்தா உயிர் தப்பும்..”
நிலைமை தங்கள் கைக்குள் இல்லை என்பதை உணர்ந்து சந்திரன் அனிதாவாக மாற மைக்கில் செய்து காட்ட ஆரம்பித்தார். சரியாக அனிதாவின் உடலை அறுக்கும் காட்சியை செய்து காட்ட …… ஆரதி சித்து தினேஷ் மூவரும் முன்னே சென்று நின்று கொள்ள.., மைக்கேலிடம் இருந்து சில அடிகள் பின்சென்ற கண்ணனும் அதிகாரிகளும் … தங்களை தயார்படுத்தி நிற்க, அனிதாவாக நினைத்து சந்திரனின் உடலை தொட கையை எடுக்க ……
பின் பக்கமிருந்து அதிகாரிகள் சுட குண்டு பாய்ந்து படுத்துக் கொண்டிருக்கும் சந்திரன் மீது சரிந்தார் மைக்கேல். பாய்ந்த நொடியே உயிர் சென்றிருக்க படுத்திருந்த சந்திரனுக்கு திக்பிரமை பிடித்து இருந்தது. அதன் பின் எந்த பேச்சுக்களும் அங்கு இல்லை. சந்திரனை பழையபடி தினேஷ் வீட்டில் அடைத்து விட்டு.. தங்களின் மேல் அதிகாரிகளுக்கும் மீடியாக்களுக்கும் தகவல் சொல்லிவிட்டனர். இது தொடர்பான விசாரணைகளும் இனி ஒருபுறம் நடந்து கொண்டிருக்கும் என்பதை முன்னரே அறிந்து இருந்த அதிகாரிகளும் அதற்கு தயாரான வேலைகளில் ஒரு பக்கம் இறங்கியிருக்க.., மைக்கேல் உடலை அவர் மனைவியிடம் ஒப்படைக்கும் வேலையில் இறங்கி இருந்தான் கண்ணன். ஆரதி இதை மேலும் வலு சேர்க்க தனது பத்திரிக்கையில்… அனிதா கொலை சம்பந்தமான ஆர்டிகல் ஒன்றை வெளியிட்டு இந்த என்கவுண்டரில் எந்தத் தவறும் இல்லை என மீடியாக்களும் மக்களும் பேசும்படி செய்துவிட்டாள்
மதியம் வேலை போல் ஆரதி,சித்து வீட்டிற்க்கு வர நடந்ததைப் பற்றி விசாரிக்க மேலோட்டமாக சொல்லினர் குடும்பத்திற்கு. ராசாத்தி சேகர் இருவரும் தங்கள் நன்றியை உரைக்க அதை தவிர்த்த ஆரதி அடுத்தகட்ட வேலையை கவனிக்க சென்றுவிட ,
சிறிது நேரம் வானதி ஏதாவது சொல்வாள் என எதிர் பார்த்து நின்ற சித்துவிற்கு ஏமாற்றமே மிஞ்ச அமைதியாக அறைக்குள் சென்று விட்டான்.
**********
அறைக்குள் இருந்த சந்திரனின் மனநிலை ஒரு இடத்தில் இல்லை. நடந்த சம்பவத்தில் இருந்து இன்னும் மீளாமல் உடலை மட்டும் இங்கே விட்டுவிட்டு மனதை சம்பவம் நடந்த இடத்தில் நிறுத்தி இருந்தான். தன் தந்தை இறந்ததை நம்பமுடியாமல் கடைசியாக தன்னை தொட வந்த அந்த நிகழ்வு அவனுக்குள் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அனிதாவை கொலை செய்யும் பொழுது கூட பிரச்சனை முடிந்துவிடும் என்ற எண்ணத்தில் இருந்தான். இங்கு ஒவ்வொரு நிமிடமும் தன் உயிரா தன் தந்தையை உயிரா என்ற போராட்டத்தில் கடைசியாக தன் உயிரை காப்பாற்றி தந்தை உயிரை விட்டு விட்டான். அதுவும் சற்றும் எதிர்பார்க்காத நொடியில். தன் மீது சாய்ந்தவரின் ரத்தத்தில் தான் தெரிந்து கொண்டான் உயிர் பிரிந்ததை. இதுவரை நடந்த அனைத்து துயரங்களையும் விட இது அவன் மனதை மிகவும் ஆழமாக சிதைத்து இருந்தது. இந்த நிலைமையில் சந்திரன் இருக்க வேண்டும் என்பதே ஆரதியின் எண்ணம். இரண்டாவது முறையாக அவளின் திட்டம் சரியாக நடக்க தொடங்கி இருந்தது.
அங்கு கண்ணனும் பரபரப்பாக மைக்கேல் உடலை கூறாய்வுக்கு அனுப்பிவிட்டு அவனது மனைவியிடம் உடலை ஒப்படைத்தான். தனது மேலதிகாரிகளை சந்தித்தவன்… “விசாரணை நடத்திக் கொண்டிருக்கும் பொழுது தப்பிக்க பார்த்தான். ஏற்கனவே ஆறு மாதங்கள் கழித்து பிடிபட்ட குற்றவாளிகளை தப்பிக்க விட்டால் இன்னும் சிக்கல்.. என்பதால் அந்த இக்கட்டான சூழ்நிலையில் என்கவுண்டர் செய்ய வேண்டியதாக போயிற்று” என கூற… மேல் விசாரணை நடத்தப்படும் இதை சொல்லி என்கவுண்டர் விசாரணையை முடிக்கும் படி கூறிவிட்டனர்.
மைக்கேல் உடலை எந்த பிரச்சினையும் செய்யாமல் அவனது மனைவி வாங்கி கொள்ள இன்னும் வசதியாகி போனது கண்ணனுக்கு. இச் சம்பவங்கள் நடந்து நாட்கள் சென்று இருக்க, வானதியிடம் வந்த சித்து, ” காலேஜ் லா எப்டி போது.. வானு.”
” நல்லா போகுது.. சித்து.”
“அது போகுது… நீ என்ன பண்ற அங்க. யாரு கிட்டையும் பேசாம அமைதியா இருக்க போல. ரிபோர்ட் வருது.”
“நான் என்ன பண்றேன்னு வாட்ச் பண்றீங்களா!”
” இல்ல.. அப்படியே பண்ணாலும் தப்பு இல்ல வானு.” என்றவனை முறைத்து பார்க்க,
“உன் பிரச்சனை தான் என்ன…” நேரிடையாக கேட்க, ” தெரியல சித்து. இன்னும் அந்த சந்திரன் உயிரோட இருக்கான்னு நினைச்சாலே ஆத்திரமா வருது.”
“இதான் உன் பிரச்சனையா… வானு. அவன் உயிரோட இருக்கான்… ஆனா உயிர் மட்டும் தான் இருக்கு.”
” புரியல…”
“உனக்கு புரியறமாதிரி சொல்லணும்னா மைக்கேல் இறந்த அன்னையிலிருந்து சொல்லணும். அப்பா சாவ நேருக்கு நேரா பார்த்ததிலிருந்து சந்திரன் பைத்தியம் பிடித்த மாதிரி தான் இருந்தான். இது நடக்கணும்’னு தான் ஆரதி பிளான் பண்ணா. ஒரு மூணு நாள் அவன் யார் கிட்டயும் பேசல. என்ன சொன்னாலும் பதிலே இல்லாம எங்களையே பதற வைச்சான். அன்று,
“சந்திரன்… எதுக்காக இந்த நடிப்பு. ஒரு பொண்ண உயிரோட கொன்னு பண்ணக் கூடிடாத காரியத்தை பண்ணி இருக்க… அப்போ கூட நல்லா தான இருந்த. இப்ப என்னமோ பாசத்தை கொட்டி வளர்த்த அப்பா அநியாயமா செத்துட்ட மாதிரி சீன் போடுற.” ஆரதி.
“உங்களுக்கு எப்படியோ! எனக்கு என்னோட அப்பா நல்லவர். என் கண்ணு முன்னாடி இறந்ததை இப்ப வரைக்கும் ஜீரணிக்க முடியல. அதும் ஒரு பையனா என் அப்பாக்கு செய்ய வேண்டிய கடைசி மரியாதையை கூட செய்ய விடாம பண்ணிட்டீங்க.”… சந்திரன் பேசிக்கொண்டே இருக்கும் பொழுது… பின்னால் நின்றிருந்த கண்ணன் அவன் கையில் ஊசி ஒன்றை செலுத்த…, அதன் சிறு வலியில் திரும்பியவனிடம்,
“உன்னோட அப்பா சாவ பார்த்த மாதிரி உன் சாவையும் இனி இந்த உலகம் பார்க்கும்.” கண்ணன்.
கண்ணனின் பேச்சில் ஆரதியிடம் திரும்பிய சந்திரன்,
“எங்க உயிருக்கு உங்களால எதுவும் ஆகாதுன்னு சொன்னீங்க தான…!”
“என் பேச்ச உங்களை யாரும் நம்ப சொன்னா…! “என ஆரதி முடிக்கவும் சந்திரன் மயக்கமடையும் சரியாக இருந்தது.
மயக்கம் தெளிந்து எழுந்த சந்திரன் தன்னை உணர்ந்து சுற்றிப்பார்க்க மருத்துவமனையாக இருந்தது. உட்கார முயற்சி செய்ய அடிவயிற்றில் சுருக்கென வலி. தனக்கு எதுவோ நடந்து இருக்கிறது என்பதை அறிந்துகொண்டான் சந்திரன். அந்த நேரம் உள்ளே வந்த ஆரதி,
“ஹலோ பேஷண்ட். அதுக்குள்ள கண்ணு முழிச்சிட்டீங்க. இந்தாங்க இந்த மாதிரி நேரத்துல நீங்க நிறைய ஜூஸ் குடிக்கணும்.”என்றவள் ஜூஸை கொடுக்க அதை மறுத்தவன்,
“என்னை என்ன பண்ணிங்க. “
“அதுவா! உன்னோட அடி வயிற கிழிச்சி…. அதுல இறந்த பெண்ணோட கர்ப்பப்பையை வைச்சிருக்கோம். இன்னும் கொஞ்ச நாள்ல உன்னை நீயே ஒரு பொண்ணா உணரப் போற. அன்னைக்கு வந்தாரே ஒரு ஐயா…வர்மக்கலை மூலமா உன் உடம்பு குள்ள சில மாற்றங்களை கொண்டு வந்துட்டாரு. இன்னைல இருந்து சரியா 30வது நாள் உனக்கான மாதவிலக்கு நாள். மாத விலக்கு வந்தாலும் நீ பொண்ணு கிடையாது. அப்போ திருநங்கையானு கேட்காத அதுவும் இல்லை. நீ ஒரு ஆண் தான். ஆனா என்ன பொண்ணுங்க மாதிரி மாசத்துல ஒரு மூணு நாள்… அந்த வலி, வேதனையை உணர்வ. அந்த நாள்.. அசௌகரியமா உணர்வ. அடிக்கடி பாத்ரூம் போக வேண்டியதா இருக்கும். டிரஸ்ல எதாச்சும் இருக்கான்னு பார்க்க வேண்டியதா இருக்கும். ஆண்கள் கிட்ட இருந்து கொஞ்சம் தள்ளி இருக்க வேண்டியதா இருக்கும். வெறும் மூன்று நாள் தான். அதுக்கு அப்புறம் நீ பழைய மாதிரி ஆண் சிங்கமா மாறிடலாம். இதைப் பத்தி நீ வெளிய யார் கிட்ட வேணா பெருமையா சொல்லிக்கலாம். முக்கியமா உன்னோட அம்மா கிட்ட சொல்லிடு. ஏன்னா அந்த மூன்று நாள் ஒரு அம்மாவா… அவங்க துணை அவசியம். அப்புறம் இனிமே நீ என்னோட கஸ்டடியில இருக்க வேணாம். உன்னோட வீட்டுக்கே போகலாம். சுதந்திரமா வாழலாம். எத்தனை பொண்ணுங்களை வேணா காதலிக்கலாம். என்ஜாய் யுவர் லைஃப்… சந்திர தாஸ்.”
ஆரதி பேசப்பேச உச்சி முதல் பாதம் வரை முழுதும் அதிர்ந்து அறிவை மறந்து சிலையாகி நின்றான் சந்திரன். சொல்லி முடித்துவிட்டு ஆரதி கிளம்பியதும்… கத்த ஆரம்பிக்க அடிவயிற்றில் வலி பின்னி எடுத்தது.
ஒரு வாரம் மருத்துவமனையில் இருந்த சந்திரனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு எட்டாவது நாள் வீட்டுக்கு கிளம்பும் படி கூறி விட்டனர். அங்கிருந்து கிளம்பியவன் தன் வீட்டுக்கு செல்ல, பல நாள் கழித்து மகனைக் கண்ட மைக்கேல் மனைவி…. தந்தை மரணம் உட்பட ஏதேதோ அழுது புலம்ப அத்தனையும் தவிர்த்தவன் அறைக்குள் சென்று அடைந்து கொண்டான்.
“என்ன சித்து சொல்றீங்க இதெல்லாம் உண்மையா! இந்த மாதிரி எல்லாம் பண்ண முடியுமா! என்னால நம்பவே முடியல.”
“ஹா ஹா ஹா…. அது எப்படி பண்ண முடியும் வானு. அதெல்லாம் பண்ண முடியாது.”
“அப்புறம் எப்படி சந்திரனுக்கு பண்ணிங்க.”
“நாங்க எங்க பண்ணோம். பண்ணதா சும்மா சொன்னோம். அதை அவனும் நம்பிட்டான்.”
“அடப்பாவிங்களா.. ஒருவேளை அவன் கண்டு பிடிச்சிட்டா!”
“நிச்சயமா மாட்டான். பயம் தான் ஒரு மனுஷனுக்கு பெரிய எதிரி. ஆரதி கிட்ட இருந்த ஒவ்வொரு நாளும் அவனுக்கு மரண வலிதான். வர்மக்கலை மருத்துவரை கூட்டிட்டு வந்த அன்னைக்கே தன்னையும் மீறி ஏதோ பண்றாங்கன்னு சந்திரனுக்கு பயம் வந்துருச்சு. அதுவுமில்லாம அவன் கண்ணு முன்னாடியே மைக்கேல் செத்துட்டான். மயக்கம் அடைச்சவன் முழிச்சி பார்த்தா ஹாஸ்பிடல்ல இருக்கான். அடிவயிற்றுல தையல் போட்டு இருக்காங்க. இது போதாதா நாங்க சொன்னது உண்மை னு நம்ப. அவன் சாதாரண மன நிலையில இருந்து இருந்தா நிச்சயமா நாங்க சொல்றது பொய்யின்னு அப்பவே நம்பி இருப்பான். கிட்டத்தட்ட அவனோட மனநிலையை சிதைச்சி தன்னை சுத்தி என்ன நடக்குதுன்னு புரிய முடியாத நிலைமைக்கு கொண்டு வந்து … அப்புறம் தான் இதை நடத்தி இருக்கோம். ஒரு ஆண் உடம்புக்குள்ள கர்ப்பப்பை இருக்குன்னு சொல்றது எவ்ளோ பெரிய அதிர்ச்சியும், அவமானமாவும் இருக்கும் அவனுக்கு. இத வெளிய கண்டிப்பா சொல்ல மாட்டான். அதுவும் இல்லாம உன் இஷ்டப்படி இருந்துக்கோன்னு வெளிய அனுப்பி இருக்கோம். சோ கண்டிப்பா இத அவன் முழுசா நம்புவான். எங்களோட கணிப்பு சரியா இருந்தா …முன்ன இருந்த மன நிலையை விட மோசமான மனநிலைக்கு சந்திரன் தள்ளப்பட்டு இருப்பான். “
ஆம் ! சித்தேஷ் சொன்னது போல்.. சந்திரன் நிலை மிகவும் மோசமான கட்டத்தில் இருந்தது. தன் அறைக்குள் அடைந்தவன் யார் பேச வந்தாலும் அவர்களை தவிர்த்து மௌனமாகவே இருக்க ஆரம்பித்தான். ஒவ்வொரு தடவையும் அடி வயிற்றில் இருக்கும் தையல் போடப்பட்ட இடம் உடம்புக்குள் கர்ப்பப்பை இருப்பது போன்ற பிரம்மை ஏற்படுத்தியது அவனுக்கு. இதை வெளியில் சொல்லவும் முடியாமல்… இத்துடன் வாழவும் முடியாமல் ஒவ்வொரு நாளும் நரகமாய் சென்று கொண்டிருந்தது சந்திரனுக்கு. ஆரதியின் ஏற்பட்டால்…. அவன் முகவரிக்கு ஒரு பார்சல் அனுப்பப்பட்டிருக்க, மைக்கேல் மனைவி அதை அவனிடம் கொடுத்தார். பிரித்து பார்த்தவனுக்கு அதிர்ச்சி… பெண்கள் சம்பந்தப்பட்ட ஆடைகள் இருக்க… அனுப்பிய முகவரியில் உள்ள தொலைபேசி எண்ணிற்கு அழைத்து விசாரிக்க, “9********8 இந்த நம்பர் உங்களோடு தான சார் நீங்க தான் நேத்து எங்களுக்கு ஆர்டர் பண்ணி இருந்தீங்க.” வேகமாக தன் தொலைபேசியில் உள்ள முந்தைய அழைப்புகளை பார்க்க அந்த எண் இருந்தது. அதில் மேலும் குழம்பி தன்னைத்தானே சிதைக்க ஆரம்பித்திருந்தான் சந்திரன். (சந்திரன் வீட்டிற்கு அருகில் ஒருவரை ஏற்பாடு செய்ய, அவரும் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சந்திரன் மட்டுமே இருப்பதை அறிந்து கொண்டு மைக்கேல் பற்றி ஏதோ பேச்சு கொடுத்து அவன் கைபேசியில் இருந்து இந்த நம்பரை அழைத்திருந்தார்.)
“அப்போ அந்த ஆபரேஷன்..”
“அதுவும் சும்மா. கண்ணனும் ஆரதியும் டாக்டர் கிட்ட பேசி சின்னதா தையல் போட்டாங்க.”
“எங்களுக்காக எவ்வளவு பெரிய உதவி பண்ணி இருக்கீங்க. உங்க குடும்பத்துக்கு நாங்க ரொம்ப கடமைப் பட்டவங்க.”
“அதெல்லாம் இருக்கட்டும். முதல்ல காலேஜுக்கு ஒழுங்கா போ. உன் குடும்பத்தை தாங்க வேண்டிய பொறுப்பு உனக்கு இருக்கு. உனக்காக இவ்வளவு செஞ்ச ஆரதிக்கு நீ செய்ற உதவி இதுதான்.”
நாட்களும் இதோ அதோ என்று ஒரு மாதங்களைக் கடத்தி இருக்க,
இப்பொழுதெல்லாம் சேகர் குடிக்காமல் வேலைக்கு செல்கிறார். வாங்கும் சம்பளத்தை ஒரு ரூபாய் கூட எடுக்காமல் அப்படியே ராசாத்தி இடம் தருகிறார். இதை வானதி கவனித்தாலும் இன்னும் தன் தந்தையிடம் பேசவில்லை. தினமும் வானதியை கல்லூரிக்கு அழைத்து போவது கண்ணன் என்றால்.. திரும்ப அழைத்து வருவது சித்தேஷ். ஆரதியும் தன் வேலையில் முழு கவனத்துடன் இறங்கி இருக்க அடிக்கடி சந்திரனைப் பற்றி மட்டும் விசாரித்துக் கொண்டிருந்தவளுக்கு அவள் நினைத்தது போலவே இருபத்தி எட்டாவது நாள் இறப்பு செய்தி வந்தது. அதிலும் இறந்ததற்கு பின் தன்னை யாரும் கண்டு கொள்ளக் கூடாது என்று… சந்திரன் தன் கைப்பட தீயிட்டு கொளுத்தி கொண்டான் என்று. இதையறிந்த வானதி ராசாத்தி இருவரும் மகிழ்ச்சி கொண்டனர். ஆரதியும் எண்ணியதை நிறைவேற்றி விட்ட காரணத்தால் நிம்மதியுடனே இருந்தாள்.
வழக்கம்போல் தன் சம்பள பணத்தை ராசாத்தி இடம் கொடுத்தார் சேகர், “வானதி! இந்தா அப்பா உனக்காக பிரியாணி வாங்கிட்டு வந்திருக்காரு சாப்பிடு.” தாய் கொடுத்ததை தட்டி விட்டவள்,
“உன் புருஷன் வாங்கிட்டு வந்தா நீ சாப்பிடு. நான் எதுக்காக சாப்பிடணும்.” கோபத்தோடு தன் அறைக்குள் சென்று விட்டாள்.
மறுநாள் சேகர் ஆரதியிடம் இது பற்றி பேச, “விடுங்கப்பா சின்ன பொண்ணு. அக்கா மேல இருந்த பாசத்தை உங்ககிட்ட கோவமா காட்டுறா. முன்னை விட இப்போ பரவால்ல தான. போகப் போக சரியாகிடும். நீங்களும் கொஞ்சம் அமைதியா இருங்க. நான் அத்தை கிட்ட சொல்லி பேச சொல்ற.”
கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் கழித்து அவ்வீட்டில் அழகான சுப நிகழ்ச்சி நடக்கப் போகிறது.
கையில் உள்ளதை ரசித்து ரசித்து சிரித்து கொண்டிருக்கும் ஆரதியை கண்ட கண்ணன் மெதுவாக அவள் அறியாமல் பின் நின்று பார்க்க
ஆழிக்கண்ணன் வெட்’ஸ் ஆரதி.
அழகாக காதல் ஜோடியின் பெயர்களைக் குறிப்பிட்டு மின்னிக் கொண்டிருந்தது திருமண பத்திரிக்கை.
அம்மு இளையாள்.
(கதை முடிய போகுது. கொஞ்சநாள் அழ வைச்சிட்டேன். சோ… ஒரு நாலஞ்சு எபிசோட் ஹாப்பியா எழுதி எண்டிங் கொடுக்கிறேன். ????)