அவரின் பதிலில்… அழுது கொண்டிருந்த பெண்மணியோ,
“இதையே தாங்க சொல்லிக்கிட்டு இருக்கீங்க. ஆனா என் பொண்ணு தான் கிடைத்தபாடில்லை. உங்க கால்ல கூட விழுறேன்… தயவு செஞ்சு என் பொண்ண கண்டுபிடிச்சி கொடுங்க.” என்றபடி அந்தப் போலீஸ்காரரின் காலில் விழ போக அதற்குள்ளே அங்கு வந்து ஆரதி அவரை காலில் விழ விடாமல் தடுத்து… சமாதானப்படுத்த முயற்சிக்க.. அந்த பெண்மணியோ ஆரதியின் பேச்சுக்களை காதில் வாங்காமல் அழுதபடி திரும்பவும் காலில் விழ சென்றார். நிலைமை சரியில்லை என்பதை யூகித்த ஆரதி அவரை சமாதானப் படுத்தும் நோக்கோடு அங்கிருந்து கட்டாயப்படுத்தி அழைத்து சென்று என்னவேன விசாரிக்க ஆரம்பித்தாள்.