நேராக வீட்டுக்குள் சென்றவள் கடையில் பார்த்த பெண்ணை தேட அவள் அங்கு இல்லை. குழம்பிய ஆரதி அங்கிருந்த பெண்களிடம், “அந்தப் பெண் எங்கே” என கேட்க…. குளியல் அறையில் இருப்பதாக தகவல் வந்தது. ஆரதி வந்ததை அறிந்திராத அப்பெண்… தனது தேவைகளை முடித்து விட்டு வெளியில் வர ,
“ஹாய்! சுபா… என்னை யாருன்னு தெரியுதா. நான்தான் மதியம் போல உன் கடைக்கு வந்து முதலாளி கிட்ட பேசிட்டு இருந்தேன். நீ கூட நான் என்ன பேசுறேன்னு எனக்கு பின்னாடி நின்னு கேட்டியே ஞாபகம் இருக்கா.” ஆரதி கேட்க,
“நா.. நான்ன்ன்… எதுவும் கேட்கல. எனக்கு எதுவும் தெரியாது. என்னை விட்ருங்க…” சுபா பயந்து கொண்டே சொல்ல,
“இப்ப எதுக்கு இவ்வளவு பயந்து நடுங்குற. உனக்கு ஏதாவது தெரியுமா’ ன்னு நான் கேட்டனா. அதுக்குள்ள நீயா எதுக்கு உளறிக் கொட்ற சுபா. இங்க பாரு நீ எனக்கு பின்னாடி நின்னு கேட்டதையும் நான் கவனிச்சேன். அதே மாதிரி நான் போனதுக்கு அப்புறமா நீ…. இதோ இங்க நிற்கிறாங்களே இந்த ரெட் கலர் டிரஸ் போட்ட லேடி… இவங்ககிட்ட என்னமோ பேசி ஃபோன் வாங்கிட்டு போய் யாருக்கும் தெரியாம கால் பண்ணதையும் பார்த்த . நீ தப்பு பண்ணிட்டதா நினைச்சி விசாரிக்க வரல. உனக்கு அனிதாவை பத்தி நிச்சயமா ஏதோ ஒரு தகவல் தெரிஞ்சு இருக்கு. அது என்னன்னு தெரிஞ்சுகிட்டு போகலாம்’னு தான் வந்த. உனக்கு அனிதாவை பத்தி என்ன’ன்ன தெரியுமோ அது அத்தனையும் இப்போ எனக்கும் தெரிஞ்சாகனும்.” என்றவள் சாவகாசமாக சம்மணமிட்டு தரையில் அமர்ந்து கொள்ள….,
ஆரதியின் பேச்சில் நடுங்கிய சுபா , “இல்ல க்கா எனக்கு சத்தியமா ஒன்னும் தெரியாது. என்னை விட்ருங்க. நான் ரொம்ப கஷ்டப்படுற வீட்டு பொண்ணு. நீங்க இப்படி வந்து விசாரிக்கிறது முதலாளிக்கு தெரிஞ்சா என்னை வேலையை விட்டு நிறுத்திடு வாங்க. என்னோட சம்பளத்தை நம்பி தான் என் குடும்பமே இருக்கு. ப்ளீஸ் க்கா விட்ருங்க.”
“இங்க பாரு சுபா நான் திரும்பவும் சொல்ற… நீ தப்பு பண்ணட்டதா முடிவு பண்ணி நான் இங்க வரல. அதேமாதிரி அனிதாவை பத்தி உனக்கு தெரியும்’னு எனக்கு நல்லா தெரியும். வேலைய விட்டுலாம் உன்ன அனுப்ப மாட்டாங்க. கடை முதலாளி கிட்ட முன்னாடியே இதை பத்தி தெளிவா பேசிட்டேன். நிச்சயமா உன்னோட வேலைக்கு எந்த ஆபத்தும் வராது நான் பொறுப்பு. இதுக்கு மேலயும் நம்பிக்கை இல்லாம நீ சொல்லாம இருந்தின்னா தான் உனக்கு பிரச்சனை வரும்.” என்று ஆரதி சுபாவுக்கு புரியும்படி எடுத்துச் சொல்ல,
சிறிது நேரம் மௌனமாக இருந்த சுபா, “அக்கா எனக்கு தெரிந்ததை நான் சொல்ற. எனக்கு எந்த பிரச்சனையும் வராது தான.”
“கண்டிப்பா வராது சுபா…”
“அனிதா இங்கே தான் தங்கியிருந்தாள். அவளும் என்ன மாதிரி கஷ்டப்படுற குடும்பம் தான். என்னோட வயசு தான் அவளுக்கும். அதனாலேயே நானும் அவளும் நல்லா பேசிப்போம். கொஞ்ச நாளுக்கு முன்னாடி நாங்க வேலை பார்த்த கடைக்கு வந்த கஸ்டமர் ஒருத்தர் ஃபோன தொலைச்சிட்டாரு. அந்த நேரம் அனிதா தான் கூட இருந்ததால .. அவ மேல பழிய போட்டாங்க. அவ எடுக்கலன்னு எவ்வளவோ சொல்லிப் பார்த்தா. ஆனா முதலாளியும் அந்த கஸ்டமரும் கேட்கவே இல்லை. கடைசில அந்த ஃபோன் அவங்களோட பேஸ்கட் லையே இருந்துச்சு. அதுல இருந்தே அவ என் கிட்ட அதிகமா பேசறதையே விட்டுட்டா. ஆனா அடிக்கடி அவ வெளியே போறதும் வரதுமா இருப்பா. நான் கேட்டதக்கு எந்த பதிலும் சொல்லல. அப்போதான் முதலாளி அவளை வேலையை விட்டு அனுப்பிட்டாரு. அன்னைக்கு ராத்திரி தன்னோட துணி எல்லாம் எடுத்துக்கிட்டு அனிதா கிளம்பிட்டா க்கா.
திரும்பவும் ஒரு நாலு நாள் கழிச்சு இங்க வந்தா . வந்தவ ஒரே அழுகை… க்கா . என்ன ஏதுன்னு கேட்கும் போதுதான்… எப்படியாது எனக்கு இந்த வேலை திரும்ப கிடைக்கனும் சுபானு சொல்லி அழுதாள். நானும் வீட்ல வேலையை விட்டதால திட்டி அனுப்பிட்டாங்க போல’ன்னு நினைச்சு,
மறுநாள்… முதலாளி கிட்ட பேசுன க்கா. அவரும் ரெண்டு நாள் கழிச்சு வந்து பார்க்கச் சொன்னாரு. முதலாளி சொன்ன மாதிரி வேலைக்கு வந்தா க்கா. ஒரு வாரத்திலேயே அவளோட நடவடிக்க சரியில்லாம போனதால திரும்பவும் வேலையை விட்டு நிறுத்திட்டாரு க்கா. வேற வேலை கிடைக்கிற வரைக்கும் நான் இங்கேயே தங்கிக்கிறேன் சுபா. முதலாளி கிட்ட யாரும் சொல்லாதீங்கன்னு ரொம்ப அழுது கெஞ்சினா க்கா அனிதா. அதான் நாங்களும் இதை பத்தி முதலாளி கிட்ட சொல்லல. அப்படியே ஒரு ரெண்டு மாசம் போச்சு… ஆனா, அந்த ரெண்டு மாசமும் அடிக்கடி வெளியே போவா க்கா. அவங்க அம்மா வர்றதுக்கு ரெண்டு நாளைக்கு முன்னாடி தான் இங்கிருந்து கிளம்பனாள். அதுதான் நான் அவளை கடைசியா பார்த்தது. இதைத் தவிர வேறு எதுவும் எனக்கு தெரியாது க்கா… “
” சரி நீ யாருக்கு கால் பண்ண. “
” அனிதா நம்பருக்கு தான்.. க்கா..”
” அவ நம்பர் எடுக்கலன்னு அவங்க அம்மா சொன்னாங்க..”
“ஆமா.. க்கா.! என்கிட்டையும் அப்படி தான் சொன்னாங்க. ஆனா நான் அவங்க அம்மா வந்துட்டு போனத கூட போன் பண்ணி சொன்ன க்கா. “
“அதுக்கு அனிதா என்ன சொன்னா..”
“என் கிட்ட பேசுறத சொல்லாத.. அம்மா ஃபோன் பண்ணா லைன் கிடைக்காத மாதிரி பண்ணிட்டேன். அதான் அங்க வந்திருப்பாங்க. நானே இன்னும் கொஞ்ச நாள்ல அம்மா கிட்ட பேசுற. என்னோட டிரஸ் லா பத்திரமா பார்த்துக்க சுபா.. ஒரு வாரத்துல வந்து எடுத்துக்கிறன்னு” சொல்லிட்டு வச்சிட்டாக்கா.
” அப்புறம் எப்ப வந்தா இங்க..”
“இல்ல’க்கா அப்புறமா அவ வரவே இல்லையே. கொஞ்ச நாள் கழிச்சி ஃபோன் பண்ணி பார்த்த…தொடர்பு எல்லைக்கு வெளியில் இருக்குன்னே வந்துச்சு க்கா. நானும் அம்மா நம்பர் மாதிரி என்னையும் பிளாக் பண்ணிட்டான்னு நினைச்சி அவளே வரும்போது வரட்டும்’னு விட்டுட்ட க்கா.”
‘அப்போ அனிதா ட்ரஸ் லா இன்னும் இங்க தான் இருக்கு… போட்டுக்க ட்ரஸ் கூட எடுத்துக்காம அப்படி எங்க போயிருப்பா…. அவங்க அம்மா தேடிட்டு இருக்க விஷயம் தெரிஞ்சும் எதுக்காக தலைமறைவா இருக்கணும். இப்ப அனிதா உயிரோட இருக்காளா?? இல்லையா????’மனதோடு அனிதாவை பற்றிய எண்ணங்களை சூழலை விட்ட ஆரதி ,
“அவள் ட்ரஸ் எங்க இருக்கு நான் பார்க்கலாமா சுபா.”
அனிதா சம்பந்தப்பட்ட ஒரு பேக்கை எடுத்து வந்து ஆரதியிடம் கொடுக்க,
அதை திறந்து பார்க்க ஆரம்பித்தாள் ஆரதி.
தன் அலுவலகத்திற்கு வந்த கண்ணன் அவரச ஆலோசனை நடத்த அனைவருக்கும் அழைப்பு விடுக்க.. அடுத்த ஒரு மணி நேரத்தில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற தொடங்கியது.
அதில், “இது ஒரு சாதாரணமான கேஸ் இதுக்கு எதுக்கு இத்தனை பேரையும் வர சொல்லி இருக்கனு நினைக்கிறீங்களா..? நிச்சயமா இப்ப வரைக்கும் இது ஒரு சாதாரணமான கேஸ் தான். ஆனா, கொஞ்ச நாளா மீடியோ ஓட பார்வையும், மேல் இடத்து பார்வையும் நம்ம மேல தான் இருக்கு. காரணம் அந்த ராபர்ட் கேஸ் தான். அதுலையே நமக்கு நிறைய சிக்கல் இருக்கு. இன்னும் அவனை கண்டுபிடிக்க முடியல. அத பத்தி கேள்வி கேட்டே.. நம்மளை விரட்டிட்டு இருக்கிறவங்களுக்கு ஜாக்பாட் மாதிரி இந்த கேஸ் கிடைச்சிருக்கு.
இந்த கேஸ் பத்தின ஆராய்ச்சிய நிச்சயமா மீடியா நடத்தும். உங்க எல்லாருக்குமே உடற்கூறாய்வு தகவல தெரியப்படுத்திட்டேன். பழசு புதுசு ன்னு எத்தனை ரவுடிங்க இருக்கிறாங்களோ அத்தனை பேர் டீடைல்ஸ்ம் ரெடி பண்ணுங்க. மீடியா கேள்வி கேக்குறதுக்கு முன்னாடி அந்த டெட்பாடி யாருன்னு கண்டுபிடிச்சாகனும்.” என இன்னும் சில ரகசிய தகவல்களோடு அந்த ஆலோசனை கூட்டம் நிறைவு பெற,
அங்கிருந்து சென்றவர்கள் கண்ணன் கொடுத்த வேலையில் இறங்க ஆரம்பித்தனர்.
இதற்கிடையில், ராபர்ட் உபயோகித்த சிம் கார்ட் கடைசியாக மதுரையில் அணைக்க பட்டதற்கான தகவல் வந்தது. உடனே ராபர்ட்டை பிடிப்பதற்காக ஏற்கனவே இருந்த தனி படையிடம் தகவல் கொடுக்கப்பட அங்கு விரைந்தனர்.
“என்ன லட்சுமி ரொம்ப நேரமா யோசனையா இருக்க போல . நான் வந்தது கூட கவனிக்காம அப்படி என்ன யோசனை” வீட்டிற்குள் நுழைந்ததில் இருந்து தன்னை கவனிக்காமல் எங்கோ பார்த்திருந்த மனைவி கண்ட நாராயணன் கேட்க,
“எல்லா நேத்து நடந்ததை பற்றி தான் யோசிச்சிட்டு இருக்காங்க. நம்ம ஒன்னு நினைச்சா பசங்க மனசுல வேற ஒன்னு இருக்கு போல….” மஷாலக்ஷ்மி வருத்தத்தோடு சொல்ல,
“நான்தான் அன்னைக்கே சொன்னனே… பசங்க மனசுல என்ன இருக்கு’ன்னு போக போக தெரியும்’னு. அன்னைக்கு உனக்கு புரியல . இன்னைக்கு புரியுதா.” என்று இருவரும் பேசிக்கொண்டிருக்க… நேற்று நடந்த சம்பவமும் மனக்கண்ணில் தோன்ற ஆரம்பித்தது.
நேற்று மாலை வீட்டுக்கு வந்து ஆரதி சித்துவை வம்பிலுக்க ஆரம்பித்து அதில் வீடே போர்க்களமாய் மாறி இருக்க, விளையாடிய கலைப்பில் மூவரும் ஆளுக்கொரு பக்கமாய் அமர்ந்திருந்தனர்.
அவர்களைக் கண்ட மகாலட்சுமி தான், “இன்னும் மூணு பேருக்கும் சின்ன குழந்தைகன்னு நினைப்பு. போலீஸ், வக்கீல், ரிப்போர்ட்டர் மாதிரியா மூணு பேரும் நடந்துக்கிறீங்க. வீட்டுல வேலை பார்க்குற அத்தனை பேரும் முழிக்கிறாங்க உங்கள பாத்து.”
கண்ணன், “அம்மா! மனுசனா பொறந்தா எல்லாருமே ஏதாச்சும் ஒரு வேலை பாக்கத்தான் செய்வாங்க. நாங்களும் அந்த மாதிரி தான் சம்பாதிக்க ஒரு வேலை பார்க்கிறோம். அதுல நேர்மையாவும், உண்மையாவும் இருக்கோம். அதுக்காக வீட்டுக்குள்ளேயும் போலீஸ்காரனாவா இருக்க முடியும். “
கல்யாணப் பேச்சை எடுத்ததும் கண்ணன் ஆரதியை காண அவளும் அவனையே பார்த்திருந்தாள். இவர்களின் பார்வை அறிந்த சித்து …”அம்மா எனக்கு ஒண்ணும் வயசு ஆகல கல்யாணம் பண்ற அளவுக்கு. முதல்ல கண்ணனுக்கு ஒரு நல்ல பொண்ணா பாத்து கல்யாணம் பண்ணி வைங்க. அப்புறம் நம்ம ஆரதிக்கு பண்ணுவோம்.” பார்த்துக்கொண்டிருந்த இருவரின் வாயைத் திறக்க நினைத்து கூற,
“நல்லா இருக்குடா நீ சொல்றது. வீட்ல ரெண்டு ஆம்பளைங்கள வச்சுக்கிட்டு என் அண்ணன் பொண்ணுக்கு வெளியவா மாப்பிள்ளை தேட முடியும்.” மகாலட்சுமி கேட்க,
“எது இவள நாங்க கல்யாணம் பண்ணிக்கனும்மாமாமா… ஆத்தாடி… அண்ணா கேட்டியா அம்மா சொல்றத . ஆசை ஆசையா நம்ம ரெண்டு பேரையும் பெத்து… வளர்த்து.. இவகிட்ட மாட்டிவிட பார்க்கிறாங்களே. அம்மா இவ பேண்ட் சட்டை போட்ட விஜயசாந்தி இல்ல… விஜயகாந்த் ம்மா விஜயகாந்த். கிட்ட வாங்க அடிக்க மாட்டேன்னு சொல்லிட்டு தூக்கி அடிச்சிடுவா…….ம்மா எங்கள . நான் இந்த விளையாட்டுக்கு வரல வேணும்’னா கண்ணன் கிட்ட கொர்த்து விடு.” என சித்து பேச்சை கண்ணன் பக்கம் திருப்ப..,
“எது கல்யாணமா! அதுவும் இவளையா. என்னம்மா நீங்க. நான் பொண்டாட்டியா எதிர்பார்க்கிறது ஒரு அழகான அன்பான பொண்ண. இவள இல்ல.” என்றவனின் தலையில் கொட்டிய ஆரதி,
“நான் பொண்ணு இல்லையா. என்ன பாத்தா எப்படி தெரியுது உனக்கு.”
“ஹா ஹா .. பொண்ணு உருவத்துல இருக்க பிசாசு மாதிரி இருக்கடி நீ ரிப்பேரு.”
“அத்தை! இந்த எடுபிடி என்ன என்னை வேணாம்’னு சொல்றது. இவனுக்கும் எனக்கும் சுத்தமா ஆகாது. நல்லவேளை இப்பயாச்சும் உங்க மனசுல இருக்கறத சொன்னீங்களே. சித்துவை கல்யாணம் பண்ணிக்க கூட நான் சம்பாதிப்பேன். ஆனா இந்த கோலி கண்ணனை கட்டிக்க சொன்னா ..இந்த வீட்டிலேயே நான் தூக்குல தொங்கிடுவேன். இந்த எடுபிடிக்கு கூஜா தூக்குற மாதிரி ஒரு பொண்ண பாருங்க. இப்பவே பார்க்க ஆரம்பிச்சிடுங்க அத்தை. ஏற்கனவே பாதி கிழவனா தான் இருக்கான். அப்புறம் இந்த மூஞ்சிக்கு பொண்ணு கிடைக்கிறது கஷ்டம்.” என்றவளின் பேச்சில் சத்தமாக சிரித்து கண்ணன்,
“அடியே ரிப்பேரு நல்ல காமெடி பண்ற. யாருக்கு எனக்கு பொண்ணு கிடைக்காதா.” ஆரதியிடம் கேட்டவன் தன் தாயிடம் திரும்பி,
“அம்மா இப்போ நான் பெங்களூர் போயிருந்தேன் இல்ல. அப்போ ஒரு பொண்ண பார்த்த ம்மா. செம்ம அழகா இருந்தா. அவளோட பேரு கூட ரதிதேவி. பேருக்கேத்த மாதிரி அப்படி ஒரு அழகு ம்மா. பேசாம எனக்கு அந்த பொண்ணையே பாருங்க. அந்த பொண்ணுக்கும் என்னை பிடிச்சிருக்கும் போல பார்வையே சரி இல்ல ம்மா. அவள பார்த்ததுக்கு அப்புறம் இதோ இங்க இருக்கே… இந்த பிசாசு.. உங்க அருமை அண்ணன் பொண்ணு இதெல்லாம் ஒரு மூஞ்சியான்னு கேப்பீங்க. உங்களுக்கு சம்மதம்’னா சொல்லுங்க அந்த பொண்ண பத்தி விசாரிச்சு நானே சொல்றேன்.” என கண்ணன் பேசிக் கொண்டே செல்ல…,
ஆரம்பத்தில் விளையாட்டாக எண்ணிய ஆரதி போகப்போக பொறாமைத் தீயில் வேக ஆரம்பித்திருந்தாள். அவளின் பார்வை மாற்றத்தை உணர்ந்த கண்ணன் தனக்குள்ளே சிரித்து கொண்டு… அங்கிருந்து நகர்ந்தான்.
“அத்தை அவன் சொல்ற பொண்ணு யாருன்னு பாருங்க. அப்படி என்ன என்னை விட ஒசத்தியா இருக்கான்னு நானும் பார்க்கிறேன். ரொம்பதான் ஓவரா பேசுறான் எடுபிடி. இவனை எனக்கு சுத்தமா பிடிக்கல அத்தை.” என்றவளும் மகாலட்சுமியின் கஷ்டத்தை உணராமல் தன் அறையை நோக்கி செல்ல,
இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த சித்து தான், “இதுங்க ரெண்டும் கடைசி வரைக்கும் இப்படியே தான் இருக்குங்க போல. பெத்தவங்களே கல்யாணத்தைப் பத்தி பேசுறாங்க… இதுங்க என்னடான்னா வெறுப்பேத்துறன்ற பேருல இம்ச பண்ணுதுங்க.” என்று தலையில் அடித்துக் கொண்டான்.
இவர்கள் பேசிய நேரமோ என்னவோ… சென்னையில் இருக்கும் கண்ணனின் முகவரியை விசாரித்து .. அவனைக் காண குடும்பத்துடன் வந்து கொண்டிருந்தால் ரதிதேவி.