பத்து நிமிட காத்திருப்புக்கு பின், அவர் அலைபேசிக்கு அழைப்பு வந்தது..எடுத்து பேசிய அவர்,
“சார், பாதி பேர் சாப்பிட போயிட்டானுங்களாம்.மீதி பேர், முன் பக்கம் நிக்குறாங்களாம்..இப்போ யாரும், பின்னாடி வர மாட்டாங்களாம்..இப்போ போனா சரியாய் இருக்கும்..
போய்ட்டு, சீக்கிரம் வந்துடுங்க சார்..”
அவருக்கு தலை அசைத்து விட்டு, இருவரும் இறங்கி,அந்த புதரை விலக்கி விட்டுக் கொண்டு சென்றார்கள்..
‘ஆத்தா மஹமாயி, இதுல என்ன ஜந்து இருந்தாலும் தெரியாது..நீ தான், உன் பக்தனை காப்பாத்தனும்..’
பின் கதவின் வழியே உள்ளே நுழைந்து, ஜாம்மெர் உதவியுடன் கேமரா கண்ணில் இருந்து தப்பி, வீட்டை நெருங்கும் போது,கன்றுக்குட்டி அளவு உயரம் கொண்ட இரண்டு நாய்கள், அந்த பக்கம் உலா வந்தது..
பாண்டியின் இதயம், ஒரு நிமிடம் நின்று துடித்தது..
இருவரும், ஒரு தூணுக்கு பின்னே மறைந்து கொண்டார்கள்..
‘நாய் கடிச்சு செத்ததா, நாளைக்கு உன்னை வரலாறு பேச போகுது பாண்டி.. இந்த அவமானம் உனக்கு தேவையா??’
இவர்கள் இருக்கும் இடத்தை அந்த நாய்கள் நெருக்கும் போது, ரெட்டை நாடி தேகம் கொண்ட வடக்கு பெண் ஒருத்தி, அவை இரண்டையும் பிடித்து சென்றாள்..
‘ஹப்பா, ஜஸ்ட் மிஸ்..’
அதன் பின்னே வெளிப்பட்டார்கள் இருவரும்..வீட்டின் பின் கதவை நெருக்கும் போது, அந்த பெண் இவர்களுக்கு பின்னே வந்து,
“சீக்கிரம் உள்ள போங்க..”
கதவை திறந்து விட்டு கூறினாள்..
(ஹிந்தியில் தாங்க..)
சற்று திடுக்கிட்டாலும், அவள் தான் அமைச்சர் ஆள் சொன்ன பெண் என்பதை உணர்ந்து, வேகமாய் உள்ளே சென்றார்கள்..
“மாப்பு, இந்த அம்மாக்கு ஜலதோஷமா??”
சம்பந்தம் இல்லாத அவன் கேள்வியில் விழித்து,
“என்னடா??”
“இதானே இப்போ, ஜல்புன்னு சொல்லுச்சு..”
“அது ஜல்த்தி..பேசாம வா.. அடிவாங்காத..”
உள்ளே சென்றதும், மாடிப் படியின் வழியே, இரண்டாம் தளத்துக்கு கூட்டி சென்றாள்..
அங்கு இருந்த அறைகளில், கடைசி அறைக்கு கூட்டி சென்று,தன்னிடம் உள்ள சாவியில் கதவை திறந்தாள்..
“சீக்கிரம் வந்துடுங்க..ஐயா கிட்ட, அவர் வந்ததும் சாவி கொடுக்கணும்..நாளைக்கு தான் திரும்ப வாங்க முடியும்..அதுக்குள்ள கூட்டிட்டு போய்டுங்க..”
அவசரகதியில், வேர்த்து வழிய பேசினாள்..
தலை அசைத்த ராஜா,
“நீ, இங்கயே நில்லு..நான் போய் கூட்டிட்டு வரேன்..”
பாண்டியை வெளியே நிறுத்தி விட்டு, கதவை திறந்தான்..
உள்ளே, கருப்பு வண்ணம் பூசியது போல கருமை..
‘எங்க இருக்கா??’
இருட்டுக்கு கண்களை பழகிய படி பார்த்தான்..
அதற்குள் அந்த அறையின் மூலையில் இருந்து,
“ஏய்,ஹூ இஸ் தட் இடியட்.. கிளோஸ் தி டோர்..”
சீரலாய் ஒரு பெண் குரல்..
குரல் வந்த திசைக்கு சென்றான்..இருட்டில், கோட்டோவியம் போல அவள் உருவம் தெரிந்தது..நத்தை ஓட்டுக்குள் இருக்கும் நத்தை போல, சுருண்டு படுத்திருந்தாள்..
“மது..”
அவள் அருகில் குனிந்து, அவள் தோள் தொட்டான்..
“ஏய்,டோன்ட் டச் மீ….ஐ வில் கில் யூ..”
சத்தமாய் கத்தினாள்..
சவுண்ட் ப்ரூப் அறை. அதனால், சத்தம் வெளியே கேட்கவில்லை..
[the_ad id=”6605″]
‘இவ, நம்மளை மாட்டி விடாம ஓய மாட்டா போல..’
அவளை வலுக்கட்டாயமாய் தூக்கினான்..
முரண்டியவள், அருகில் இருந்த மேஜையின் மேல் இருந்த பூ ஜாடியை உடைத்து, அவன் கைகளில் கிழிக்க முயன்றாள்..
சற்று சுதாரித்ததால், காயம் பட இல்லை..
“ஏய் லூசு..நான் ராஜா..”
“எந்த நாட்டுக்கு.??.”
“ஹ்ம்ம்..எந்த நாட்டுக்கும் இல்ல..நான், உன் அத்தை பையன்..”
அப்பொழுது தான் கவனித்தான், அவள் பேச்சு குளரலாய் வந்தது..
‘குடிச்சுருக்காளோ??இருக்கலாம், குடிகாரி தானே..ஆனா, ஸ்மெல் எதுவும் வரல..ஸ்மெல் வராத சரக்கு போல..என்ன கன்றாவியோ.. இதெல்லாம் யாருக்கு தெரியும்..குடிக்குறவங்களுக்கு தான் தெரியும்..’
எண்ணம் ஓட,அருகில் இருந்த ஜன்னலின் திரையை சற்று விலகினான்..தோட்டத்தில் இருக்கும் வெளிச்சம் உள்ளே நுழைந்து, அவன் முகத்தில் பட்டது..
அவளை நிமிர்த்தி,
“இங்க பாரு..என்னை பாரு..”
அவள் முகத்தை பிடித்து, இவன் புறம் வைத்து, பார்க்க செய்தான்..
கஷ்டப்பட்டு விழி திறந்து பார்த்தவள்,
“ஏய்,யூ..உன்னை எங்கயோ பார்த்திருக்கேனே..”
விரலால் மண்டையை தட்டி யோசித்தவள்..
“ஏய்,நீ மதுமித்ரா லவர் தானே..காட் இட்..இங்க ஏன் வந்த??ஐம் நாட் யூவர் மது..”
கோணல் புன்னகையோடு கூறிவிட்டு, கண்களை மூடினாள்..
அவள் கன்னத்தில் பலமாய் தட்டினான்..
“ஏன் மேன் அடிக்குற??போ..வெளிய..அமித் வந்தா, உன்னை கொன்னுடுவான்..”
“கிளம்பு,இங்க இருந்து.உன்னை கூட்டிட்டு போக தான் வந்தேன்..”
“ரிப்பீடட்லி செட்.. ஐம் நாட் யுவர் மது..”
‘இந்த நிலையிலயும், பீட்டர்க்கு ஒன்னும் குறைவில்லை..’
எரிச்சலுடன்,
“எனக்கு தெரியும்..உன் அப்பா தான், உன்னை கூட்டிட்டு வர சொல்லி அனுப்புனார்..சீக்கிரம் கிளம்பு..உன் புருஷன் வரத்துக்கு முன்ன கிளம்பனும்..”
“ஓ..மை டாட்.. சோ ஸ்வீட்..ஐ லவ் யூ டாட்..”
“ஊருக்கு போய் லவ் பண்ணலாம், கிளம்பு..”
அவளை பிடித்து தூக்கினான்..அவன் மேல் சாய்ந்தாள், நிற்க முடியாமல்.
‘போதை ஓவர் போல..ஆனா, குளரினாலும் தெளிவா பேசுறா..’
யோசனையோடு கதவை நோக்கி நடந்தான்..அவளை தன் மேல் சாய்த்துக் கைத் தாங்கலாக பிடித்துக் கொண்டு,
“ஏய், மேன் வெயிட்..ஐ பஃர்கெட் ஒன் திங்க்..”
விரலை தட்டி யோசித்தாள்..
அவனுக்கு, அங்கிருந்து கிளம்பினால் போதும் என்று இருந்தது..
“உன் ட்ரஸ் அஹ்..??அதெல்லாம் வேண்டாம் வா..”
“ச்சு, அதில்லை..இந்த கம்ப்யூட்டர்ல சொருகுவோமே..வாட்ஸ் தட்..”
“ஹ்ம்ம்.ஒயர்..”
“நோ மேன்.. இட்ஸ் டைனி திங்க்..”
‘இவ கிளம்பமாட்டா போல..இவ புருஷன் கிட்ட, மாட்ட போறோம்..’
“அம்மா தாயே,இதுக்கெல்லாம் நேரம் இல்ல..உன் புருஷன் வந்தான்..அம்புட்டு தான்.. கிளம்பு மா..”
“நோ..அது எடுக்காம வர மாட்டேன்..ஐ நீட் தட்..”
“என்னன்னு சரியாய் சொல்லி தொலை.. தேடி பார்க்குறேன்..”
“அது, ப்ளூ கலர்ல இருக்கும்..குட்டியா கியூட் அஹ்..மிக்கி ஹெட் டாப்ல இருக்கும்..”
“நீ சொல்லி முடிக்கும் முன்ன, உன் புருஷன் வர போறான்..அவன் கிட்ட சிக்குனா, என்ன ஆகும் தெரியுமா??”
“ஒன்னும் ஆகாது..ஹி ஹாவ் கன்..ஜஸ்ட், சூட் பண்ணிடுவான்..”
அத்தனை பற்களும் தெரிய, சிரித்துக் கொண்டே கூறினாள்..
இவளிடம் பேசி வேலைக்கு ஆகாது என்று, அவளை தூக்கப் போனான்..
“ஏய்,தூக்கிட்டு போன..சத்தம் போட்டு, அமித் கிட்ட மாட்டி விட்டுடுவேன்..”
“லூசு,லூசு. என்னடி வேணும் உனக்கு.??.”
“யா, ஐ ரிமெம்பெர்.. அது பென்ட்ரைவ்..அது வேணும் எனக்கு..”
“அது எதுக்கு??சரி, எங்க இருக்கு சொல்லு..”
[the_ad id=”6605″]
“என் சீக்ரெட் லாக்கர்ல..யாருக்கும் தெரியாம பூட்டி வச்சிருக்கேன்..உன் காதை கொடேன்.. அமித் கிட்ட சொல்லிடாத..
உனக்கும் எனக்கும் தான் தெரியும்..”
‘பெரிய ரகசியம்’
“ஆண்டவா,அந்த லாக்கர் எது??”
“அது..அது..”
நாடி தட்டி யோசித்தாள்..
“ஏய்,இப்போ வரியா அறையவா..”
“நோ,நோ..வலிக்கும் எனக்கு..எனக்கு தெரியும்..என்னை, என் பெட் கிட்ட கூட்டிட்டு போ..அதை எடுத்துட்டு போயிடலாம்..”
அவளை தோளில் சாய்த்து கொண்டு, அவள் படுக்கை அருகே சென்றான்..
படுக்கைக்கு கீழே தட்டு தடுமாறி தேடி, அந்த பென்ட்ரைவை எடுத்தாள்.. அதை பிடிக்க முடியாமல், கீழே போட போனாள்..
இது கீழே விழுந்தால்,
இதை தேடியே பொழுது ஓடிவிடும் என்று நினைத்த ராஜா,வேகமாய் அதை கை பற்றி, தன் சட்டை பையில் போட்டுக் கொண்டான்..
“இப்போவாச்சும் கிளம்பு..”
“என்னை தூக்கிட்டு போ..”
“பேசாம நடந்து வா..”
“அப்போ, நான் வர மாட்டேன்..”
“வந்து தொலை..”
அவளை தூக்கி தோளில் போட்டுக் கொண்டு, கதவை நெருங்கினான்….
வெளியில் பாண்டியும் அந்த பெண்ணும் நின்றார்கள்..
அந்த பெண்ணுடன் பேச்சு கொடுத்த பாண்டி, நொந்து போனான்..
அவள் கியா கியா என்றதில்
“இவ வேற, கிய்யா முய்யாங்குற..ஒன்னும் பேச முடில..ரோஜா படத்துல கூட, தீவிரவாதி தமிழ் பேசுறார்..இவளுக்கு தமிழ் சொல்லி கொடுக்க ஆள் இல்லியா??”
‘ஏன், நீ சொல்லிக் கொடேன்..’
‘ஆத்தி, மீனா தொலைச்சு கட்டிடுவா’
‘இவ இங்க சமைக்குறாளா,சாப்பிட மட்டும் செய்யுறாளா..??நல்லா சாப்பாடு போடுவான் போல, அந்த வில்லன்..’
வாசலில் கார் வரும் ஒலி கேட்டது..பதறிய வேலைக்காரி, அறை கதவை தட்டுவதற்கும், ராஜா அவளை தோளில் சுமந்து கொண்டு வெளியே வருவதற்கும் சரியாய் இருந்தது..
முதலாளி வந்து விட்டதாகவும்,சீக்கிரம் போய் விடும்படியும் கூறினாள்..
அவசரம் உணர்ந்து கீழே இறங்கும் போது, படியில் யாரோ ஏறி வரும் அரவம் கேட்டு, அருகில் இருந்த அறைக்குள் இவர்களை தள்ளி விட்டு, அவள் மட்டும் கீழே இறங்கினாள்..
மாடி ஏறியது,அமித்லாலின் அத்தை..
“எங்க போய் தொலைஞ்ச?? போய், ஒரு டீ கொண்டு வா.. தலைவலி..இந்த லிப்ட் வேற ரிப்பேர்..இவ்ளோ படி ஏற வேண்டி இருக்கு….”
அவள் நிற்பதை கண்டு,
“சீக்கிரம் கொண்டு வா..பார்ட்டிக்கு திரும்ப போனும்..ஒரு பைலை மறந்துட்டு போய்ட்டேன்..எடுத்துட்டு கிளம்பணும்..சீக்கிரம் போ..”
அங்கு உள்ள கூடத்தில் அமர்ந்தாள்..அறைக்குள் பாண்டிக்கு, வயிற்றை கலங்கியது..
“ஏய், ஏன் மேன் நிக்குற..போ..சீக்கிரம்..”
மதுவின் குரலில், தூக்கி வாரி போட, வேகமாய் அவள் வாயை பொத்தினான் பாண்டி..
அவன் கையை கடித்தாள்..
‘அட கிரகம் புடிச்சவளே..’
திருடனுக்கு தேள் கொட்டியது போல..கத்தவும் முடியாமல்,கைகளை உதறிக் கொண்டு நின்றான் பாண்டி..
“மது பேசாம இரு..போலாம்..”
ராஜா மெல்லிய குரலில் சொன்னதும்,
“ஹ்ம்ம்..”
என்றவள்,அமைதி காத்தாள்..
அவள் காக்கவில்லை.. இயற்கையாக,
அரை மயக்க நிலையில் இருந்தவள்,முழு மயக்கத்திற்கு சென்றாள்..
அந்த அத்தை, காபி குடித்து விட்டு,பைலை எடுத்துக் கொண்டு சென்றதும்,அந்த வேலைக்காரி,இவர்கள் அறைக்கு வந்து,இவர்களை சீக்கிரம்,சீக்கிரம் என்று கூறி, அவசரமாய் வெளியே அனுப்பினாள்..
அவர்களுக்கு, பின் கதவை திறந்து விட்டு,அவர்கள் கேட் தாண்டி சென்றதும்,அந்த கதவையும் பூட்டி விட்டு வந்தவள்,சற்று ஆசுவாசம் அடைந்த போது,அந்த அத்தை மீண்டும் உள்ளே வந்தாள்..
இவள் சமையல் அறையில் நின்றாள்..
அவரை பார்த்ததும், மூச்சு விட மறந்து நின்றாள்.
“மது ரூம் சாவி தா..அமித் வாங்கிட்டு வர சொன்னான்..மறந்துட்டு போய்ட்டேன்..கொஞ்ச தூரம் போனதும் தான், ஞாபகம் வந்துச்சு..”
சாவியை எடுத்துக் கொடுத்தாள்.
அவள் முக மாற்றத்தை கவனிக்க வில்லை அந்த அத்தை, அவளின் அவசரத்தில்..அதனால், அந்த வேலைக்காரி தப்பித்தாள்..
அத்தை சென்றதும், பதறிய இதயத்தை, தண்ணீர் குடித்து நிதானப்படுத்தினாள் அவள்..
மதுவை தூக்கி வந்த ராஜா,வேனில் பின் இருக்கையில், அவளை கிடத்தினான்..
வண்டி கிளம்பியது..சிறிது தூரம் சென்றதும் தான், வண்டியின் விளக்குகளை போட்டார்கள்.
அப்பொழுது தான் கவனித்தான் ராஜா,மதுவை..
நிறம் மங்கி,கண்ணில் கருவளையம் தெரிய,இளைத்து,எலும்பு தான் தெரிந்தது..
“கல்யாணத்துல பார்த்தபோ..எவ்ளோ பளிச்சுன்னு இருந்தா..”
வாய் விட்டு சொன்னான் ராஜா..
“ஆமாம் மாப்பு..புஃல் மேக் அப் போல..இப்படி தான், பல பேர் ஏமாறாங்க..”
“டேய்..அடி வாங்காத..”
“என்ன மாப்பு தப்பா சொல்லிட்டேன்..நீ சொன்னதை தான் சொன்னேன்..”
“ச்சு.. போடா..அவன் என்ன கொடுமை பண்ணானோ..??இப்படி ஆயிட்டான்னு சொன்னேன்..”
‘இவ்ளோ நேரம் இவ பேசுனதை வச்சு பார்த்தா, இவ தாண்டா அவனை, பேசி பேசியே கொடுமை பண்ணி இருப்பா..’
மனசாட்சியின் குரலை அடகினான்.
மறுபடியும் அவளை பார்த்த போது,அவளின் டாப்பில் இடை பகுதி விலகி, அங்கு வட்ட வட்டமாய் கருமை நிறத்தில், நிறைய வடுக்கள் தெரிந்தது..
சற்று அதிர்ந்தவன்..
‘என்ன இது??இப்பொழுது ஏற்பட்டதா, இல்லை, ஏற்கனவே இருந்ததா..??’
வேன் ஓர் இடத்தில் நின்றது..
“சார்,இனி நீங்க இங்க இருக்குறது சேஃப் இல்ல..அடுத்த பிளைட்க்கு டிக்கெட் போட்டுட்டேன்..அந்த அமித்லால்க்கு, இந்த பொண்ணு மிஸ் ஆனா விபரம் தெரியும் முன்ன,மும்பையை தாண்டிடுங்க.. அதான், எல்லோருக்கும் நல்லது..”
“ஹ்ம்ம்..”
அவன் கையில், மூன்று பிளைட் டிக்கெட்டுகளை கொடுத்தார்..
அவள் முகத்தில் நீர் தெளித்து, சற்று தெளிய வைத்தான்..
விமான நிலையத்தில் இறக்கி விட்டார்..
அவருக்கு நன்றி உரைத்து விட்டு, கை தாங்கலாக பிடித்து அழைத்து வந்தான், அவளை..
அங்கு காத்திருப்பு நேரம் முழுதும்,பக் பக்கென கழிந்தது பாண்டிக்கு..
பிளைட்டில் ஏறி அமர்ந்து, அது கிளம்பிய பின் தான், நிம்மதி மூச்சு வந்தது,அவனுக்கு..
மது, பாதி விழிப்பு,பாதி மயக்கம் என்று பயணத்தை கடந்தாள்..
சென்னை விமான நிலையத்துக்கு இவர்களை அழைக்க, சேகரே வந்திருந்தார்..
மதுவை கண்டதும்,
“மதும்மா..”
அரை மயக்கத்தில் அவரை கண்டவள்,
“டாட்..”
அவரை அணைத்துக் கொண்டு அழுதாள்..
குழந்தையாக இருக்கும் போது, அவள் அழுது பார்த்தது..
வளர்ந்த பிறகு, இப்பொழுது தான் அவள் அழுது பார்க்கிறார்..
அவர் கண்கள் நிரம்பித் வழிந்தது..
பிறகு, அது பொது இடம் என்று உணர்ந்து,அனைவரையும் அழைத்துக் கொண்டு, அவர் வீட்டுக்கு சென்றார்..
வீட்டிற்குள் நுழைந்ததும்,அவளை கண்ட பிரமிளா,ஒரு நொடி திகைத்து,மறுநொடி,
“மது செல்லம்..”
வேகமாய் சென்று அணைத்துக் கொண்டார்..
சேகர், அவரிடம் எதுவும் சொல்லவில்லை..
தினமும் அவள் புலம்பல்களையும், மகள் மேல் அக்கறை இல்லை என்னும் திட்டுகளையும் கேட்டுக் கொண்டு, அமைதியாய் போய் விடுவார்..
பொறுத்து போனார் என்று சொல்வதை விட, அவரிடம் பேச பிடிக்காமல் அமைதி காத்தார்..
அதனால் தான் ராஜாவை அனுப்பியதையும் சொல்லவில்லை..
இப்பொழுது விமான நிலையம் செல்லும் போது கூட, சொல்ல வில்லை..
“ஏன்டா செல்லம் இப்படி இருக்க??என்ன ஆச்சு டா.. என்ன பண்ணான் அந்த படுபாவி..”
“மாம்..மாம்..அவன் என்னை அடிச்சுட்டே இருந்தான் மாம்..அப்புறம், திட்டு விழுந்துட்டே இருக்கும்..”
கேவிக் கொண்டே கூறியவள்,
தன் இடை பகுதியை காட்டினாள்..டாப்பை சற்று உயர்த்தி.
“பாரு மாம்..எவ்ளோ சூடு வச்சுருக்கான்.. எப்படி வலிச்சுது தெரியுமா??”
“பாவி,பாவி.அவன் நல்லா இருப்பானா?? என் பொண்ணை, என்ன பாடு படுத்தி இருக்கான்..”
அவர்கள் கண்ணீர் அதிகம் ஆனது..
“இன்னும் நிறைய இடத்துல வச்சுருக்கான் மாம்..ஐ ஹேட் ஹிம்..”
[the_ad id=”6605″]
பேசிக்கொண்டு இருக்கும் போதே,
“மாம், பீலிங் டையர்ட்..என் ரூம்க்கு போறேன்..”
‘பயணம் முழுதும் தூங்கிட்டு தானே இருந்தா..??என்னாச்சு இவளுக்கு??’
யோசனையோடு பார்த்தான் ராஜா..
அவன் கைகளை பிடித்துக் கொண்ட சேகர்,
“உனக்கு எப்படி நன்றி சொல்லுறதுன்னு தெரியல ராஜா..என் பொண்ணை காப்பாத்தலை நீ.. என் உயிரையே காப்பாத்தி இருக்க”
அவன் கைகளை எடுத்து, கண்களில் வைத்துக் கொண்டார்..
கண்ணில் நீர் வழிந்தது..
அப்பொழுது தான் இவர்களை கவனித்த பிரமிளா..
இவர்கள் பேச்சில், மகளை காப்பாற்றியது அவர்கள் தான் என்று அறிந்து,
“நன்றி தம்பி..நீங்க??”
யோசனையாய் கேட்டார்..
“மரகதம் அம்மா பையன்..”
“ஓ..”
என்ன சொல்லுவது என்று தெரியாமல், மௌனித்தார்..
‘நாத்தனார் மகனையே தெரியல இந்தம்மாவுக்கு..’
பாண்டி நினைத்துக் கொண்டிருக்கும் போது,
“வாங்க தம்பி..கொஞ்சம் ஓய்வெடுங்க..சாப்பாடு ரெடி பண்ணிட்டு கூப்பிடுறேன்..”
பிரமிளாவா இவ்வளவு அமைதியாய் பேசுவது ??என்று ஆச்சர்யமாய் பார்த்தார் சேகர் ..
அப்பொழுது, பாண்டியின் அலைபேசி இசைத்தது..
‘இவ்ளோ காலையில யாரு..??’
யோசனையோடு எடுத்தான்..
மீனாவின் எண்..
‘இவளா கூப்பிட மாட்டாளே.. என்ன அதிசயம்..அதுவும் இந்த நேரத்துல..’
வேகமாய் இயக்கிப் பேசினான்..
“ஹலோ..”
எதிர்புரம் இருந்து, அழுகை சத்தம் தான் கேட்டது..
“ஹலோ மீனா,என்னாச்சு..??ஏன் அழற??சொல்லு..”
“…”
“சொல்லிட்டு அழு..திடீருன்னு அழுதா, என்ன நினைக்க..??சொல்லு??”
“அம்மா..அம்மா..”
“அம்மாக்கு என்ன??”
“தெரில..கால் பண்ணா, எடுக்கவே மாட்டேங்குறாங்க..”
“ச்சு.. இதுக்கா அழற??உன் அப்பா நம்பர்க்கு போடு..”
“அப்பா, ஆபிஸ் டூர் போய் இருக்கார்..அம்மா மட்டும் தான் இருக்காங்க..”
“தூங்கிட்டு இருப்பாங்க மா..எழுந்ததும் பண்ணுவாங்க..”
“இல்ல,அம்மா நாலு மணிக்கே எழுந்துடுவாங்க, எப்போவும்..இல்லைனா கூட, போன் சத்ததுல தூங்க மாட்டாங்க.. நாலு தடவை போட்டுட்டேன்..
பயமா இருக்கு பாண்டி..”
“சரி,நான் சென்னையில் தான் இருக்கேன்..நேர்ல, உன் வீட்டுக்கு போய் பார்க்குறேன்..”
அலைபேசியை அணைத்தவன்..மெதுவாய் ராஜாவின் காதில் மட்டும் விஷயத்தை சொல்லி விட்டு,அவனும் வருகிறேன் என்று கூறியதை மறுத்து விட்டு, மீனாவின் வீடு நோக்கி சென்றான்.
சேகர் ராஜாவை, விருந்தினர் அறைக்கு அழைத்து சென்றார்..
அங்கு குளித்து விட்டு, ஓய்வெடுக்குமாறு கூறிக் கொண்டிருக்கும் போது,மாடியில் இருக்கும் மதுவின் அறையில் இருந்து அலறல் கேட்டது..
“மாம்…மாம்…”
என்னவென்று பதறியபடி அனைவரும் அங்கு சென்றார்கள்..
அறை முழுதும் கலைத்து போடு விட்டு,
“ஐ நீட் இன்ஜெக்சன்..வேர் இஸ் இட்..??இங்க தானே வச்சேன்..”
அவளின் பேச்சில், அனைவரும் திகைத்தார்கள்..
“என்ன சொல்லுற மது??”
“இங்க பாரு,இங்க பாரு..என் கை எப்படி நடுங்குதுன்னு..அது போட்டா தான் சரி ஆகும்..ஐ நீட் இட்..எங்க இருக்கு??”
நடுங்கிய கைகளை காட்டினாள்..
அவள் பேச்சு புரியவில்லை யாருக்கும்..
“ஓ…ஓ…ஏன் எல்லோரும் இப்படி இருக்கீங்க.??அமித் எங்க??அவன் கிட்ட தான் இருக்கும் அது.அவனை கூட்டிட்டு வாங்க..அவன் தான் வச்சுருக்கான்..அது போட்டா தான், என்னால தூங்க முடியும்..”
தலையை இரு கைகளிலும் பிடித்து தாங்கிக் கொண்டு, கத்தினாள்..
அவள் குழப்பமான பேச்சில் அனைவரும், விஷயம் பெரிது என்று அறிந்து, அதிர்ந்து நின்றார்கள்..