Skip to content
Post Views: 3,529
உனக்கென இருப்பேன்-23
அண்ணி ப்ளீஸ் அழாதீங்க ! சங்கடமாய் அவள் தோள் தட்டினாள் அச்சு .
எனக்கு இதெல்லாம் சத்தியமா தெரியாது அச்சு …. உங்க அண்ணன் என் மேல் இவ்வளவு கருணை காட்டி இருக்காறே …எத்தனை ஜென்மம் எடுத்து இந்த நன்றி கடனை அடைப்பேன் ! தேம்பி தேம்பி அழுதாள் .
பேசி பழகாத என் மேல் இவ்வளவு நெசமா நேசமா ? நான் எங்கேயும் இவ்வளவு அன்பை கேள்வி பட்டது கூட இல்லை .
Advertisement
கடவுள் என் வாழ்வை பறிச்ச்சுட்டாருன்னு கோபமா இருந்தேன் …பறித்ததற்கு ஈடான வாழ்வை திருப்பி கொடுத்துட்டாரு! எவ்வளவோ பாவம் பண்ணியிருந்தாலும் கொஞ்சம் புண்ணியம் பண்ணியிருக்கேன் போல ….முகத்தை மூடி அவ்வளவு அழுதாள் .
அண்ணி அண்ணாவோட காதல் பவித்ரமானது . பல போராட்டங்களுக்கு பிறகு அது கை கூடி இருக்கு . வினோத் காதலியை எங்க அண்ணன் லவ் பண்ணலை ….எங்க அண்ணன் ஒருதலையா நேசித்த கீர்த்தியை தான் வினோத் லவ் பண்ணி மேரேஜ் பண்ணினாரு .
தயவு செய்து நீங்க அவரை தெய்வமா நினைத்து பூஜை பண்ணனாம கணவனா நினைத்து அவரோட சந்தோஷமா வாழுங்க ! அவரோட காத்திருப்பு, வேதனை, வலி எல்லாம் எனக்கு தான் தெரியும் . கீர்த்தியின் கரம் பற்றி மென்மையாய் அழுத்தினாள் அக்ஷ்யா .
Advertisement
அச்சும்ம்மா அத்தை மாமா உங்களை அருமையா வளர்த்திருக்காங்க….நெகிழ்ந்து போனாள்.
Advertisement
அண்ணன் வெறித்தனமா படித்து வேலை தேடிகிட்டதே உங்களுக்காக தான்.
அண்ணன் நீங்க கிடைக்கலைன்னு பட்ட வேதனையை விட வினோ அண்ணனை இழந்து நீங்க நின்னப்போது அவர் துடித்ததும் அழுததும் அப்பா…..நினைச்சாலே பதறுது !
இனியாவது மகிழ்ச்சியா ரெண்டு பெரும் வாழனும் அண்ணி …. அண்ணன் நாலு வருஷம் ரொம்ப கஷடப்பட்டிருச்சு !
Advertisement
ம்ம்ம்ம்ம் என்று தலை அசைத்தாள் கீர்த்தி .
அஸ்வின் அயர்ந்து உறங்கி போனான் , கீர்த்திக்கு தான் உறக்கமே இல்லை .
எப்படி இது சாத்தியம் ? என்னை பார்த்து எனக்காக இவ்வளவு செய்திருக்கிறார் . என் கண்ணில் படவில்லையே ….
எனக்காகவா ? அவளால் பிரம்மிப்பில் இருந்து மீள முடியவில்லை .
“…………………………………”
என்னங்க குழந்தை தூங்குறான் பார்த்துக்கோங்க ! என்றவளை வியப்பாய் பார்த்தான் .
என்னடா இது ? மேடம் அவஙக்ளா வந்து பேசிட்டு போறாங்க ! நம்ப முடியாமல் அமர்ந்திருந்தான் .
என்னங்க பல் தேய்ச்சுட்டீங்களா? காபி தரவா ? உள்ளிருந்து குரல் கொடுத்தாள்.
தூங்கி எழுந்தவுடனே இவளுக்கு என்ன ஆச்சு ? “பே” என்று பார்த்துக் கொண்டிருந்தான் .
இட்டலி பண்ணவா ? ரவா பொங்கல் பண்ணவா ? காபி கப்பை கொடுத்து விட்டு அவன் முகம் பார்த்து கேட்டாள் .
அண்ணி ரவா பொங்கல் பண்ணுங்க! கொட்டாவி விட்டபடி வந்து நின்றாள் அச்சு .
சரி பண்ணிட்டா போச்சு !
அண்ணி சட்னி வேண்டாம் , எனக்கு சாம்பார் தான் பிடிக்கும் !
ஏய் தீனிப்பண்டாரம் அவ என்ன ஹோட்டலா நடத்திட்டு இருக்கா ? நீ ஆர்டர் பண்ணிட்டு இருக்க …. தங்கையை முறைத்தான் .
அவளை ஏன் முறைக்கிறீங்க ? கணவனை முறைத்தபடியே நகர்ந்தாள் கீர்த்தி .
ஹல்லோ உன் பொண்டாட்டி எனக்கு சமைத்து போட்டு இடுப்பொடிந்து போயிட்டாங்களாக்கும்.? அக்ஷயா முறுக்கிக் கொண்டாள்.
அவ குழந்தையை வைத்துட்டு எவ்வளவு வேலை செய்வா ? அதுக்கு தான் சொன்னேன் . ஏதாவது சிம்பிளா செய்தால் போதும் என்றான் .
சார் ரொம்ப தான் உருகறீங்க ! ஊரு உலகத்துல யாரும் கைகுழந்தையை வச்சிட்டு வேலை செய்யறதே இல்லை …. இவர் பொண்டாட்டி தான் அதிசயம்,
அச்சு இதுக்கு பேர் தான் நாத்தனார் கொடுமையோ ? அஸ்வின் கேட்ட விதத்தில் அக்ஷயாவிற்கு சிரிப்பு வந்துவிட்டது .
அச்சு கிச்சனுக்கு போய் அண்ணிக்கு ஹெல்ப் பண்ணு ! தங்கையை விரட்டினான் .
“…………………………….”
அண்ணி என்ன உளுந்து ஊறவச்சிருக்கீங்க ?
கொஞ்சம் வடை பண்ண போறேன்
நான் வெங்காயம் கட் பண்றேன் அண்ணன் கூப்பிடறாரு என்னனு போய் பாருங்க !
ஏங்க கூப்பிட்டிங்களா ? கையை துடைத்துக் கொண்டு வந்து நின்றாள் .
நானா …..? ம்ம்ம்ம் ஆமா கூப்பிட்டேன்
இந்த ஷர்ட்டை கொஞ்சம் அயர்ன் பண்ணி தறியா ?
ஏற்கனவே நாலு ஷர்ட் அயர்ன் பண்ணி வச்சிருக்கேன் பாருங்க !
அவள் மீண்டும் கிச்சனுக்குள் புகுந்தாள் .
என்ன அண்ணி அதுக்குள்ள வந்துட்டீங்க ?
அயர்ன் பண்ணணுமாம் !
இந்த அண்ணி சுத்த வேஸ்ட் ….தலையில் அடித்துக் கொண்டாள் . இந்த அண்ணன் அதுக்கு மேல தெண்டம் . ரெண்டும் சேர்ந்திருக்கு பாரு….நொந்து கொண்டாள்.
சாம்பார் தானே வைக்கப்போறீங்க ?அதுக்கு ஏன் தேங்காய் துருவறீங்க ?
காரம் இல்லாத கெட்டியான தேங்காய் சட்னி உங்க அண்ணனுக்கு ரொம்ப பிடிக்கும் என்றாள் பெருமிதமாக .
ம்க்கும் …. இது மட்டும் தெரிந்து வச்சிருக்கீங்க ! உள்ளுக்குள் முணுமுணுத்தாள் .
அச்சு குழந்தை அழறான் பாரு ! அஸ்வின் குரல் கொடுத்தான் .
அச்சு போ ….குழந்தையை பாரு ! நான் டிபன் முடிச்சுட்டு வரேன் .
அண்ணி இதை கன்டினியூ பண்றேன் நீங்க போய் உங்க புருஷரையும் புள்ளையையும் கவனிங்க ! பொறுத்து பார்த்தவள் சொல்லியே விட்டாள் .
குட்டி தங்கத்துக்கு பசிக்குதா ? அம்மா வேணுமா ? குழந்தையை கன்னத்தோடு கன்னம் இழைத்து கொஞ்சினான் .
என்னமா ….செல்லம் எழுந்துடீங்களா ? தாய் அவள் குரல் கேட்டு பிள்ளை துள்ளியது .
குழந்தையை அவளிடம் கொடுத்தான் அவன் கை அவள் கையோடு .உரசிவிட்டது சாரி …என்றபடி வெளியேறிவிட்டான்.
“………………………………….”
அஸ்வின் அவசரமாய் ஆபீஸ் கிளம்பி கொண்டிருந்தான் .
என்ன கீர்த்தி தியானு குட்டி என்ன பன்றான் ?
வாங்க மஞ்சுமா ! அவன் அத்தையோட விளையாடறான் .
யாரு ? உன் நாத்தனாரா ?
ஆமா மஞ்சுமா நேத்து சாயந்திரம் வந்தா, நீங்க எஅதோ பங்க்ஷனுக்கு போயிட்டிங்க ,
அச்சு இங்கே வாயேன் !
என்ன அண்ணி ….குழந்தையை கொஞ்சிக் கொண்டே வந்தாள் .
இவங்க மஞ்சுமா ….ஹவுஸ் ஓனர் ! இவங்க பிள்ளை சரவணன் உங்க அண்ணன் கூட தான் வேலை பார்க்கிறார்.
வணக்கம் ஆன்டி ! அழகாய் ஒரு புன்னகை பூத்தாள் . அஸ்வின் ஜாடையில் இருந்தாள்.
நல்லா இருக்கியாம்மா? அம்மா ,அப்பா எலாம் சௌக்கியமா ?
எல்லாரும் நல்லா இருக்காங்க ஆன்ட்டி . அண்ணன் உங்களை பத்தி நிறைய சொல்லி இருக்காரு . அண்ணனை நல்லா பார்த்துக்கறீங்களாம் …தேங்க்ஸ் ஆன்ட்டி .
இதுல என்னமா இருக்கு எனக்கு சரவணன் மாதிரி தான் அஸ்வினும் ! அவளை ஆசையாய் ஊடுருவி பார்த்தார் .
அச்சு மஞ்சுமாக்கு வடை கொண்டு வந்து கொடு !
பொண்ணு ரொம்ப அழகா இருக்கா கீர்த்தி ….மஞ்சுளாவின் முகத்தில் அத்தனை பிரகாசம் .
அம்மா …அம்ம்மா ….சரவணன் கீழிருந்து குரல் கொடுத்தான் .
சரவணன் கூப்பிடறான் …நான் குழந்தையை தூக்கிட்டு போறேன் .நீ வேலை இருந்தா பாரும்மா .
அச்சு மஞ்சுமா வீட்டுக்கு போயிட்டாங்க ! நீ போய் வடை கொடுத்துட்டு வந்துடு .
ஆன்ட்டி ….ஆன்ட்டி அக்ஷயா குரல் கொடுக்க …..
அம்மா யாரோ கூப்பிட்றாங்க என்றான் சரவணன் .
அக்ஷயா …..வாம்மா!
சரோ ….இவ அஸ்வினோட தங்கைடா ….அக்ஷயான்னு பேரு .
அப்படியா ? மலர்த்தி பார்த்தான் .
என்ன படிக்கிறீங்க ?
MSC மேத்ஸ் பைனல் இயர் என்றாள் எங்கோ பார்த்தபடி .
ஓ…என்றவன் முகத்தில் பளிச்சென்ற மின்னல் .
உட்காரும்மா…காபி கொண்டு வரேன் .
வேண்டாம் ஆன்ட்டி நான் மார்னிங் மட்டும் தான் காபி சாப்பிடுவேன் . தவறா நினைக்காதீங்க ப்ளீஸ் ! கெஞ்சுதலாய் வால் பார்த்த பார்வை அவனை வாரி சுருட்டியது .
வீட்டை சுத்தமா அழகா வச்சிருக்கீங்க ஆண்ட்டி .
சாப்பிட்டு சும்மா வீட்டுல உட்கார்ந்திருக்கேன் வீட்டை கூட கவனிக்கலைனா எப்படி ? குறும்பாய் சிரித்தார் .
என்ன ஆண்ட்டி இப்படி சொல்லிட்டீங்க ? ஹவுஸ் வைஃபா இருக்கிறது எவ்வளவு கஷ்டம் !
பாருடா ….கொஞ்ச நேரத்துல அம்மாவோட ஜெல்லாகிட்டா ….!சரவணன் ஆச்சரியப்பட்டு போனான் .
வாம்மா சாப்பிடு !
இல்லை ஆன்ட்டி நான் அண்ணியோட சாப்பிட்டுக்கிறேன் மதியம் உங்க கூட லன்ச் சாப்பிடறேன் . அப்போ தான் நிறைய வெரைட்டி இருக்கும் அழகாய் சிரித்தாள் .
சாப்பிட்டுக் கொண்டிருந்த சர்வணனுக்கு மனசெல்லாம் அவளையே சுற்றி சுற்றி வட்டமடித்தது .
“……………………………”
இன்னும் ஒரு வடை வச்சிக்கோங்க ! சட்னி…. இன்னும் ஊற்றினாள் .
போதும் ….போதும் ஏற்கனவே மூணு வடை சாப்பிட்டாச்சு .
இந்த வயசுல நாலு வடை சாப்பிடறதுனால ஒன்னும் ஆகிடாது .
அவன் அமைதியாகி சாபிட்டான் . மதியம் லஞ்சுக்கு வந்துடுங்க என்றாள் .
ம்ம்ம்ம்ம்ம் என்றான் அவளை பார்த்தபடி .
என்றும் இல்லாமல் அவன் பார்வையில் சிவந்து தலை கவிழ்ந்தாள் .
குழந்தைக்கு பொங்கல் ஊட்டினான் .
வேண்டாம் ….அவனுக்கு செரிக்காது ! நான் கஞ்சி செய்து ஊட்டிக்கிறேன் என்றாள் .
ம்ம்ம்ம் என்றவன் ஆபிஸ் கிளம்பினான் .
ஏதாவது வாங்கிகிட்டு வரணுமா ? ஓர விழியில் பார்த்து கேட்டான் . இன்று அவ்வளவு பொலிவுடன் இருந்தாள் . பார்வையை விலக்க சிரமப்பட்டான். உடல் நடுங்கி முறுக்கியது .
வேண்டாம் எல்லாம் இருக்கு …ஈவினிங்க் சீக்கிரம வாங்க ! அச்சுவை எங்காவது கூட்டிட்டு போய் வரலாம் என்றாள்
சரி என்றவன் குழந்தையிடம் திரும்ப …..தியானு குட்டி அப்பாக்கு பை சொல்லுங்க என்றாள் . குழந்தையின் பிஞ்சு கரம் பற்றி டாடா காண்பித்தாள் .
அச்சு எங்கே ?
மஞ்சுமா வீட்டில் இருக்கா எ.
சரி நான் கிளம்புறேன் ! கண்களால் விடைபெற்றான் தலை அசைத்து விடை கொடுத்தாள் .
அம்மா நான் ஆபிஸ் கிளம்புறேன் என்றான் சரவணன் .
சரவணனும் அஸ்வினும் ஒரே பைக்கில் கிளம்பினார்கள் .
அண்ணன் கிளம்பிட்டாரா ?
ம்ம்ம்ம் இப்போ தான்
சரி வா சாப்பிடலாம் !
நீங்க அண்ணனோட சேர்ந்து சாப்பிடறத்துக்கு என்ன ?
அதுக்கு தான் மேடம் மஞ்சுமா வீட்டில் டேரா போட்டுட்டு வாரீங்களா? பெருமையாய் நாத்தனார் கரம் பற்றினாள் .
புரிஞ்சா சரி ! குறும்பாய் கண்சிமிட்டினாள் .
பேச்சும் சிரிப்புமாய் இரு பெண்களும் உண்டு முடித்தனர். கையோடு மதிய சமையலும் செய்யத் தொடங்கிவிட்டனர் .
அண்ணி நான் தியானுவை குளிப்பாட்டவா ? ஆசையாய் கேட்ட்டாள் .
சரி ….நீயும் பிராக்டிஸ் பண்ணிக்கோ ! சீக்கிரம் அந்த நிலை வரும் .
ஐய்ய ….போங்கண்ணி வெட்கத்தில் சிவந்து போனாள் அச்சு
“………………………..”
அச்சு இன்னைக்கு லன்ச் என்கூட தான் …உரிமையாய் அழைத்தார் மஞ்சுளா .
மறப்பேனா ….? இன்னைக்கு ஆன்ட்டி வீட்டுல ஒரு கட்டு ! சிரிப்புடன் ஆமோதித்தாள் .
அண்ணி நான் ஆன்ட்டி கூட சாப்பிட்டுகிறேன் நீங்க அண்ணன் வந்தா சாப்பிடுங்க ! குழந்தையை கொஞ்சிக் கொண்டே சென்றுவிட்டாள் .
“…………………………..”
அஸ்வின் வர இன்னும் நேரம் இருக்கிறதி என்று படுத்தவள் மெல்ல கண்ணயர்ந்தாள் .
ஷர்ட்டை கழட்டி ஹேங்கரில் மாட்டிவிட்டு முகம் கழுவி வந்தான்
கீர்த்தி படுத்திருந்த கோலம் கண்டு துணுக்குற்றான் .
காலையில் நல்லா இருந்தாளே ….தலை வலியா? தயங்கியபடியே மெல்ல அவள் நெற்றியை தொட்டு பார்த்தான் .
அவன் ஸ்பரிசத்தில் கண்விழித்தவள் ….சாரி என்று வாரி சுருட்டிக் கொண்டு எழுந்தாள்
ஹே …ரிலாக்ஸ் …முடியலைன்னா படுத்துக்கோ ! நான் எடுத்து போட்டு சாப்பிட்டுக்குவேன் என்றான் .
இல்லை எனக்கு ஒன்னும் இல்லை சும்மா படுத்தேன் அப்படியே லேசா தூங்கிட்டேன் .
வாங்க சாப்பாட்டைக்கு எடுத்து வைக்கிறேன் ! அவள் பரிமாற தொடங்கினாள் . ஏனோ அவள் சோர்வுடன் இருப்பதாக பட்டது .
நீ சாப்பிட்டியா ?
நீங்க சாப்பிடுங்க! நான் அப்புறம் சாப்பிட்டுக்கிறேன் .
மணி ஒன்னேகால் ஆகுது ! அப்புறம் எப்போ சாப்பிட்டப்போற ? அவளுக்கும் தட்டு எடுத்து வைத்தான் .
வேறு வழி இல்லாமல் அவளும் அமர்ந்தாள் .
இன்னும் கொஞ்சம் கூட்டு வச்சிக்கோ … அவளுக்கு சௌசௌ கூட்டை நிறைய அள்ளி வைத்தான் .
கேரட் தானே …..சாப்பிட என்ன ? மிச்சம் வைக்காம சாப்பிட்டு ! அவன் அதட்டலில் பிடிக்காத கேரட் பொரியலை பயந்து முழுங்கினாள்
இவ என்ன சின்ன பிள்ளை மாதிரி சாப்பிட்றா ? இவ்வளவு நாளா இதை கவனிக்காம விட்டுட்டோமே …..
நல்லா சமைக்க தெரிந்தா போதாது …நல்லா சாப்பிடவும் தெரியணும் ! இனி சரியா சாப்பிடணும் ! நீயே இந்த லட்சணத்துல சாப்பிட்டா உன்னை பார்த்து வளரும் குழந்தை எப்படி சாப்பிடுவான் ?
ஐயோ ….இவன்கிட்ட மாட்டிகிட்டோமே ….திருதிருவென விழித்தாள் ..
ஈவினிங் நேரமா வரேன் .கிளம்பி ரெடியா இருங்க ! பீச்சுக்கு போயிட்டு வரலாம் என்றான் .
error: Content is protected !!