தந்தை மாப்பிள்ளை பார்த்திருக்கும் விஷயத்தை சொன்னாள் .
மிதுன் அவளுடன் என்ஜீனியரிங் படித்தவன் . இந்தி சினிமா கதாநாயகன் போல் அழகு …கிளாஸ் ஒர்க் , பிளைவுட் தயாரித்து வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யும் தொழிலதிபர் பக்தவசலத்தின் சீமாந்திர புத்திரன் அவன் . கோடிகளில் புரளும் குடும்பம் .
வெவ்வேறு சாதி ….ஆயினும் காதலில் விழுந்தனர் .
இவர்கள் காதல் சங்கதி சதாசிவத்திற்கு தெரிய வந்தது .
அவர் ஜாதி , குலம் கோத்திரம் பார்ப்பவர் . மகளுக்கு பொறுமையாய் எடுத்து சொன்னார் .
அவள் மிதுன் மயக்கத்தில் இருந்தாள் .
மிதுன் மேற்படிப்பிற்கு லண்டன் சென்று விட்டான் .
கலங்கி அழுத பத்மஜாவை அணைத்து ஆறுதல் படுத்தினான் . படித்து முடித்து வந்தவுடன் திருமணம் செய்து கொள்ளலாம் என்று வாக்குறுதி அளித்தான் .
அவன் இரண்டாண்டு படிப்பு முடிந்து வருவதற்குள் பத்மாவிற்கு திருமணம் செய்து வைத்து விட தீவிரமாக இறங்கி விட்டார் சதாசிவம் .
ஸ்வீட்டி …நீ உன் அப்பாட்ட பேசி புரிய வை ! எங்காவது வேலைக்கு போ … நான் வர வரைக்கும் எப்படியாவது சமாளி !
இல்லை மிதுன் …என் டாடி பத்தி உனக்கு தெரியல . அவர் ரொம்ப கௌரவம் பார்க்கிறவர் .
பார்த்துக்கலாம் விடு …நம்மை மீறி எதுவும் நடக்காது அவன் ஆறுதல் சொன்னான் .
பத்மஜாவுடன் கனவில் டூயட் பாடி சுவிட்சர்லாந்தில் ஆடி களைத்தான் பிரபா .
கஸ்தூரி நாளைக்கு வரதன் குடும்பத்தோடு பெண் பார்க்க வரான் .
உன் பொண்ணுக்கு சொல்லி வை ! ஏடாகூடமா ஏதாவது செய்ய நினைச்சா இந்த சதாசிவத்தின் இன்னொரு முகத்தை உன் பொண்ணு பார்க்க வேண்டி வரும் .
பிரபா காதில் ரகசியம் ஒதினாள் ஸ்ரீமதி . வாவ்! அண்ணா அண்ணி செம்ம அழகு !
மெல்ல தலை உயர்த்தி பார்த்த பிரபா …மெய் மறந்து போனான் .
காஃபி கொடுத்து விட்டு வணக்கம் சொன்ன பத்மஜாவை உள்ளே அழைத்து செல்லும்படி கண்ணை காட்டினார் சதா .
எங்களுக்கு பெண்ணை ரொம்ப பிடிச்சிருக்கு . நீங்க என்ன சொல்றீங்களோ அது தான் ? வரதன் சொல்லிவிட்டார் .
ஜோதிடரை அழைத்து நிச்சயத்திற்கும் , முகூர்தத்திற்கும் நாள் குறித்து விட்டார்கள் .
தன்னால் ஆனவரை முரண்டு பிடித்து பார்த்தாள் பத்மஜா . மிதுனிடம் அழுதாள் .
இப்போதைய சூழ்நிலையில் நான் இந்தியா வர வாய்ப்பே இல்லை . பைனல் செமஸ்டர் டைம் இது . லீவ் கிடைக்காது .
ஏதாவது செய்து மேரேஜை நிறுத்த பாரு …அவன் வைத்து விட்டான் .
லக்ஷ்மி விலாஸ் பேங்க் தொலைபேசி எண்ணை மிதுனுக்கு அனுப்பி வைத்தாள் பத்மஜா .
ஹலோ சொல்லுங்க ….நான் பிரபானந்தன் .
நீங்க மேரேஜ் பண்ணிக்க போற பொண்ணோட லவ்வர் நான் .
“வாட் …? “
“யெஸ் ….நாங்க நாலு வருஷமா லவ் பண்றோம் ! “
“அப்படியா ? உங்க பேர் என்ன?”
அது ஏன் உனக்கு ? இந்த கல்யாணம் நடக்க கூடாது .
ஹலோ …இந்த மாதிரி அனானிமஸ் காலிற்கெல்லாம் ரெஸ்பான்ஸ் பண்ணிட்டு இருக்க முடியாது .
தந்தையிடம் சொன்னான் பிரபா
பிரபா ….சதா அப்படி எல்லாம் பெண்ணை வளர்த்திருக்க மாட்டான் . இதை எப்படி அவனிடம் கேட்பது ?
யாரோ வேண்டும் என்றே செய்யும் சதி இது மகனுக்கு தைரியம் சொன்னார் வரதராஜன் .
நிச்சயதார்த்தம் முடிந்தது. அடுத்த பதினைந்தாவது நாள் முகூர்த்தம் .
வீட்டு காவலில் சிறை பிடிக்க பட்டிருந்தாள் பத்மஜா .
சதா மகளிடம் ஒற்றை வரியில் சொன்னது இது தான் .
உலகத்தில் உள்ள எல்லா பெற்றவர்களும் சொல்லும் அதே டயலாக் தான் எனக்கு வேற வழி இல்லை .
இந்த கல்யாணம் நடக்கலைன்னா நானும் உங்கம்மாவும் உயிரை விட்டுடுவோம் . விஷத்தை எடுத்து காட்டினார் .
நாங்க செத்த பிறகு நீ எவன் கூட போனா எங்களுக்கென்ன ?
மிதுன் இன்னும் ஆறுமாதம் பொறுத்து கொள்ள சொன்னான் .
உண்மையில் என் மீது காதல் இருந்தால் நீ இவ்வளவு அலட்சியமாக இருப்பாயா என்று கதறினாள் .
இந்த வயசில் படிப்பு முக்கியம் ஸ்வீட்டி . More than fifty lakhs செலவு செய்து லண்டனில் படிக்க வைக்கிறாங்க . அதை வீணாக்கிட முடியாது .
கண்டிப்பா உன்னை மேரேஜ் பண்ணிக்கிறேன் இது சத்தியம் என்றான் .
கை மீறி எல்லாம் போய் விட்டது .ஒரு சிறு சந்தர்ப்பம் கூட பத்மஜாவிற்கு கிடைக்கவில்லை . விதி அவளுக்கு எதிராகவே இருந்தது .
திருமணம் ஆனால் என்ன? இன்னும் ஆறு மாதம் தாக்கு பிடித்தால் போதும் . மிதுன் வந்து விடுவான் . தன்னை வந்து மீட்டு செல்வான் . திடமாய் நம்பினாள் .
கோலாகலமாய் திருமண வைபவம் நடந்தேறியது . பொம்மையாய் அனைத்து சடங்குகளையும் செய்தாள் . மறந்தும் பிரபாவை அவள் நிமிர்ந்து பார்க்கவில்லை .
திருமணம் ஆகி விட்டது ….இனி மகள் மனம் மாறிவிடுவாள் என்று நம்பினார் சதாசிவம் .
“——–“
பால் சொம்புடன் அறைக்குள் வந்து தயங்கி நின்றவளின் கரம் பற்றினான் பிரபா .
கையை விடு …ஆங்காரமாய் ஓங்கி ஒலித்து எதிரொலித்தது அவள் குரல் .