மதுரா கொண்டு வந்த டாக்ஸியில் ஏறி, கொஞ்ச தூரம் போன பின்னே தான், தன் கையில் தன் ஹான்ட் பேக் இல்லாதது ரேஷ்மாவுக்கு நினைவு வந்தது!
“அய்யோ மதுரா.. கொஞ்சம் வண்டியைத் திருப்ப சொல்லுங்க. என் ஹான்ட் பேகை அங்கேயே விட்டுட்டு வந்திட்டேன். அதுல தான் என்னோட பாஸ்போர்ட் இருக்கு” என்றாள் அவசரமாக.
“திரும்ப அங்க போறது சரியில்ல.
உங்க அண்ணனும் யுவி சாரும் அங்க தானே இருக்காங்க.
Advertisement
அவங்க கிட்ட போன் பண்ணி எடுத்துட்டு வர சொல்லிடலாம்” என்று மதுரா சொல்லி விட்டு உடனே ரேவந்துக்கு போன் பண்ணி இந்த விபரம் சொல்ல,
“ஆமாடா. ரேஷ்மா உள்ள வந்தவுடன் அந்த ஆண்ட்டி அவ கையில் இருந்து வாங்கினாங்க!
Advertisement
ரேஷ்மா அவசரத்தில் திரும்ப வாங்கிக்க மறந்துட்டா போல!” என்றான் யுவியும்.
Advertisement
ஹாஸ்பிட்டல் பில்லை செட்டில் செய்து விட்டு, ராமநாதனை ஸ்ட்ரெச்சரில் ஏற்றிக் கொண்டு
பார்க்கிங்கில் டாக்சிக்கு வெயிட் பண்ணிக் கொண்டிருந்த போது, பார்வதியிடம் ரேஷ்மாவின் ஹேன்ட் பாகை கேட்டான் ரேவந்த்.
அவரோ, “எனக்கு தெரியாது. நான் இவர பார்ப்பேனா..
Advertisement
இல்ல உன் தங்கச்சி கையில் என்ன வச்சுட்டு இருக்கான்னு பார்த்தேனா?
அதெல்லாம் எனக்கு ஒண்ணும் தெரியாது” என்று கடுப்புடன் சொல்லி விட அதற்கு மேல் அவரிடம் ஒன்றும் கேட்க முடியவில்லை அவனாலும்.
அந்த பேகை திறந்து பார்த்து விட்டு அதில் பாஸ்போர்ட் இருப்பதைக் கண்டு விட்டு தான்,
எதற்கும் இருக்கட்டும் என்று நைசாக அதை ஜெயந்திடம் கொடுத்து அவன் டூ வீலரில் மறைத்து வைத்து எடுத்து போக சொல்லி விட்டார் அவர் ஏற்கனவே!
ராமநாதனை டாக்ஸியில் ஏற்றிக் கொண்டு கூடவே பார்வதியையும் ஏற்றிக் கொண்டு அவனுக்கு தெரிந்த வேறு ஒரு ஹாஸ்பிடலுக்கு சென்று சேர்த்து விட்டு அவர் கண் விழிக்க காத்திருந்தார்கள்! ரேவந்தும் யுவியும்.
யுவியை எரித்து விடுவது போல பார்த்துக் கொண்டே இருந்தார் பார்வதி!
அவ அதைக் கண்டு கொள்ளாது, மதுராவுக்கு போனில் இருந்து மெசேஜ் அனுப்பி விட்டான்.
சும்மா சும்மா அவன் அம்மாவோட வந்து ரேஷ்மா முன்னாடி நின்னு,
அவளை கல்யாணத்துக்கு கம்பல் பண்ணிட்டே இருப்பாங்க.
ரேஷ்மாவுக்கு எங்க அப்பா இறந்த பின்னே ராம் அங்கிள் தான் எல்லாம்!
அவர் மேல ரொம்ப பாசம் வச்சுருக்க அவளை ஏதாச்சும் இமோசனல் ப்ளாக் மெயில் பண்ணி,
அவளை ஸ்ட்ரெஸ்ல கொண்டு வந்துடுவாங்க.
அவளுக்கு எப்போதுமே ராம் அங்கிள் நம்மள நல்லபடியா பார்த்துட்டு இருந்துட்டு அவர் பிள்ளைய கோட்டை விட்டுட்டார்ன்னு எப்பவும் ஒரு கில்ட்டி கான்சியஸ் இருக்கும்.
அத நல்லா யூஸ் பண்ணிப்பாங்க பார்வதி ஆண்ட்டி!
அந்த அளவுக்கு எல்லாம் அவங்கள விடக் கூடாது.
இதுகளுக்கு பயந்துட்டுகிட்டு எல்லாம் ஓடி ஓளியனுமான்னு கொஞ்சம் தோணினாலும்,
துஷ்டனைக் கண்டால் தூர விலகு.. இது தான் இப்ப என்னோட திங்கிங்!
அதனால அவங்களுக்கு முன்னாடி நாம முந்திக்கணும்.
சீக்கிரம் உங்க ரெண்டு பேத்தோட கல்யாணம் நடக்கணும்.
அதுக்கு முன்னாடி, கொஞ்ச நாள் ரேஷ்மாவை எங்கியாச்சும் அப்ராட் அனுப்பலாம்னு பார்த்தா,
இந்த ஆண்ட்டி இப்படி பாஸ்போர்ட்டை எடுத்து வச்சுகிட்டு தர மாட்டேங்கிறாங்க!
ரொம்ப கேட்டா, உங்கள வளர்த்து ஆளாக்கின பாவத்துக்கு எனக்கு திருட்டுப் பட்டம் கட்டுறீங்களான்னு அதுக்கு ஒரு டிராமா பண்ணுவாங்க!
ஒரே எரிச்சலா இருக்கு!
ரேஷ்மாவை, அவங்க அடிக்கடி போய் பார்த்து திரும்பவும் தொல்லைப் பண்ணாத இடத்துல போய் கொஞ்ச நாள் இருக்க வைக்கணும்!
திருப்பூர் அனுப்பினா, அந்த ஜெயந்த் அங்கயும் வந்து நிப்பான் அவன் அம்மாவோட!
என்ன பண்றதுன்னு தெரியலடா..” ரேவந்த் புலம்ப,
“அப்ப ஒண்ணு பண்ணலாமா? பேசாம என் வீட்டுக்கு அனுப்பி வச்சுடு” என்றான் யுவி!
“அது எப்படிடா முடியும்! அவளை நான் கல்யாணம் பண்ணி உன் ஒய்ஃபா தான் முறைப்படி அனுப்புவேன்!
அதுவும் இல்லாம இப்ப பத்மா ஆண்ட்டி வேறே ஊரில் இல்லன்ற!”
“ஆமா அவங்க ஆன்மீக சுற்றுலான்னு சீரடி, சனி சிங்க்னாப்பூர் எல்லாம் போய் இருக்காங்க”. என்றான் யுவி.
“அப்ப வேறே எதாச்சும் தான் பண்ணனும். இரு. ஸ்வீட்டி கிட்ட கேப்போம்” என்று அவளை அழைத்து விபரம் சொல்ல,
“இப்ப நாங்க ஆபிசில் தான் இருக்கோம்” என்ற மதுரா, போனை ஸ்பீக்கரில் போட்டாள். ரேஷ்மாவும் அதை எல்லாம் கேட்டுக் கொண்டிருக்க,
“எனக்கு ஒரு ஐடியா இருக்கு.
பட் ரேஷ்மாவுக்கு ஒத்து வருமான்னு தெரியல” என்று அவளைப் பார்த்துக் கொண்டே மதுரா சொல்ல,
“டபுள் ஓகே எனக்கு!” ரேஷ்மா சம்மதம் சொல்ல, அடுத்து வேகமாக வேலையில் இறங்கினாள் மதுரா.
ஆபிசில் ஒரு ஸ்டான்ட் அப் மீட்டிங் ஒன்றை ஏற்பாடு செய்து, மாதேஷிடம் தற்காலிகமாக எல்லா பொறுப்புகளையும் கொடுத்து மற்றவர்களை எல்லாம் அவனுக்கு ஒத்துழைக்க சொல்லி கேட்டுக் கொண்டு,
வார இறுதிகளில் எல்லோரையும் ஆன்லைன் மீட்டிங்கில் சந்திப்பதாகவும் சொல்லி விட்டு அடுத்து லக்கிக்கு போன் பண்ணினாள்.
“லக்கி.. உனக்கு நாளையில் இருந்து செமஸ்டர் ஸ்டடி ஹாலிடேஸ் தானே!
நாம இன்னிக்கே ஸ்ரீரங்கம் போறோம்! ரேஷ்மாவோட!
ஒரு அர்ஜென்ட் ட்ரிப்!
நீ உனக்கும் எனக்கும் ஒரு பத்து செட் டிரஸ் எடுத்து பேக் பண்ணி வச்சுடு.
பிரிட்ஜில் இருக்கும் பால், தயிர், மாவு காய்கறிகளை எல்லாம் வாட்ச்மேனிடம் கொடுத்து காலி பண்ணிடு.
பவர் பேங்க், சார்ஜர், எமர்ஜென்சி லைட், அப்புறம் கிராமத்து வீட்டு ரூமில் இருக்கும் பீரோவின் சாவிக் கொத்து, கெட்டில், புல்லட் மிக்சியும் கூட எடுத்து வச்சுடு.
கேஸ் சிலிண்டர் ரெகுலேட்டரை ஆஃப் பண்ணி வச்சுடு.
பால்கனி கேட்டை பூட்டு போட்டு பூட்டி வச்சுடு.
அப்புறம் மறக்காம உன்னோட புக்ஸ் எல்லாத்தையும் எடுத்து வச்சுட்டு ரெடியா இரு.
நான் ரேஷ்மா வீட்டில் போய் அவங்களுக்கு தேவையான பொருட்களை எடுத்துக்கிட்டு நம்ம வீட்டுக்கு வந்து உன்னை பிக்கப் பண்ணிட்டு திருச்சி போறோம்!
நான் சொன்ன எல்லாத்தையும் மறக்காம எடுத்து வச்சுட்டு ரெடியா இரு! மறந்துடாதே!
வேணுமின்னா ஒரு செக் லிஸ்ட் எழுதி வச்சுக்கோ!
ரெடியா இரு. காரை நிக்க வச்சுட்டு துழாவிக் கிட்டு இருக்க கூடாது” என்று நீண்ட கட்டளைகள் இட்டாள்!
“ம்ம் அக்கா..அதெல்லாம் நான் பக்காவா எடுத்து வச்சுடறேன்! நோ ஒர்ரிஸ்!
அப்புறம் அக்கா ரேவந்த் அத்தானும் நம்ம கூட வரப் போறாரா?”
“ம்ம் அது ஏன் உனக்கு? அவருக்கு இங்க கொஞ்சம் வேலை இருக்கு!
அதெல்லாம் முடிச்ச பின்னே தான் அவர் அங்க வர முடியும்!”
“சரிக்கா” என்று சொல்லி போனை வைத்து விட்டு அக்கா சொன்னபடி தேவையானதை எல்லாம் பேக் பண்ணினாள் லக்கி.
மதுராவும் சொன்ன படியே ரேஷ்மாவுடன் வீட்டுக்கு சென்று அவளுக்கு மிகவும் தேவையானவைகளை எடுத்துக் கொண்டு,
லக்கியை அழைக்க அவள் வீட்டுக்கு சென்று அவளை அழைத்துக் கொண்டு,
அப்படியே பக்கத்து வீட்டு ஆண்ட்டியிடம் சொல்லிக் கொண்டு, அமேசான் பார்சல் வரும்.
வந்தால் வாங்கி வைக்கவும் கேட்டுக் கொண்டு காருக்கு விரைந்தாள் மதுரா!
ரேஷ்மாவின் காருக்கு ஆக்டிங் டிரைவர் ஒருவனை ஏற்பாடு செய்து கொண்டு கிளம்பினார்கள்.
கார் பயணத்தின் போதே, மதுரா, அவர்கள் வீட்டில் தற்போது குடியிருந்து கொண்டு வீட்டை, பூஜையறையை, பின் பக்கம் உள்ள கோவிலை பராமரித்துக் கொண்டிருக்கும் மணியை அழைத்து தாங்கள் அங்கு வந்து கொண்டிருப்பதை சொன்னாள்!
“டவுனில் இருந்து வீட்டை கிளீன் பண்ண ஆள் பேசியிருக்கேன் அத்தை!
அவங்களுக்கு ரூமை திறந்து விடு.
அவங்கள வச்சுகிட்டு பாத்ரூம் பெட்ரூம் எல்லாம் நல்லா கிளீன் பண்ணி வச்சுடு அத்தை!
அப்படியே மாடியையும் சுத்தம் பண்ண சொல்லு.
வேற எதாச்சும் வேலை இருந்தாலும் அவங்க கிட்ட சொல்லி சரி பண்ணிடு.
அப்புறம் ரெண்டு மூணு கேன் தண்ணீர் வாங்கி வச்சுடு.
ஏசியை ஒரு வாட்டி போட்டு பாரு அத்தை.
நல்லா கூலிங் வரலைன்னா உடனே சொல்லு.
அதுக்கும் ஆள் அனுப்புறேன்”. என்று மணிக்கும் பல்வேறு வேலைகள் சொல்லிக் கொண்டே போனாள் கார் பயணத்தின் போதே.
“எல்லாம் ரெடி பண்ணிடுறேன் பெரிய பாப்பா!” என்றார் அவர்.
சென்னை திருச்சி ஹை வேஸில் போகும் போது வழியில் நிறுத்தி ஒரு முழு பலாப்பழம் வாங்கி கொண்டாள் மதுரா!
“இது எதுக்குக்கா?” என்ற லக்கியிடம்,
“முதன் முதலா நம்ம வீட்டுக்கு வராங்க ரேஷ்மா!
அவங்களுக்கு சக்க பிரதமன் பண்ண சொல்லலாம்! மணி அத்தை சூப்பரா செய்யும்!”
“இவ்வளவு ரண களத்திலும் உனக்கு ஒரு குதூகலம் உனக்கு? இல்ல!” என்று அக்காவை கிண்டலடித்தாள் லக்கி!