அப்புறம் குழந்தை பிறந்தவுடனே வேணுமின்னா, உங்க கல்யாணத்தை ரெஜிஸ்டர் பண்ணிக்கோங்க! சிம்பிள்!
அதுக்குள்ளவே உன்னோட சாமியார் பொம்பள சாயம் வெளுத்திடும்! என்ன சொல்ற டீல் ஓகேயா?”
“கல்யாணம் பண்ணிக்காம புருஷன் பொண்டாட்டியா வாழறதா? நானா? நம்ம அப்பாயி இருந்து நீ இத சொல்லி இருக்கணும்!” மதுரா விரக்தியாக சிரித்தாள்.
“எல்லாம் அந்த கிழவிய சொல்லணும்! செத்தவங்கள திட்டக் கூடாதுன்னு பார்க்கிறேன்! அப்படியே அதோட புத்திய உன் மண்டையில ஏத்தி வச்சுட்டு போய் இருக்கு அந்த கிழவி!” லக்கி பல்லைக் கடித்தாள்.
“அது போகட்டும். அக்கா.. நீ முடிவா என்ன தான் சொல்ற?” லக்கி கேட்க,
மதுராவிடம் மவுனம்!
“நீ சரிப்பட மாட்டே. அப்ப ஒண்ணு பண்ணு. நீ மறக்காம என்னோட கல்யாணத்துக்கு வந்து சேர்ந்திடு.
நீ வந்த பின்னே தான் அத்தானை என் கழுத்துல தாலி கட்ட விடுவேன்! என்ன சரியா?” என்று சொல்லி போனை வைத்து விட்டாள்.
மதுரா அதிர்ச்சியில் அப்படியே நின்றவள், அடுத்து இனியாவை அழைத்தாள்.
ஆனால் இனியா உட்பட அனைவரிடமும் லக்கி தன் திட்டத்தை சொல்லி இருக்க, எல்லோரும் சொல்லி வைத்த மாதிரி நடந்து கொண்டார்கள்!
“இல்லக்கா.. எனக்கு என்னவோ லக்கி சொல்றது சரியா தான் படுது!
அவ என்னை மாதிரி, உன்னை மாதிரி இல்லை! ரொம்ப ப்ராக்டிக்கல்! அவ சொல்ற மாதிரி ரேவந்த் அத்தான் மாதிரி ஒரு நல்ல மாப்பிள்ளைய நாம மிஸ் பண்ணிடக் கூடாது!
அன்டயத்துல உங்களுக்கு பஸ் கிடைக்காதுன்னு சொல்லி அவங்களோடவே கூட்டிட்டு வந்தாங்க. இங்க நம்ம ஊர் எல்லையில வந்ததும் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வச்சு என்னோட தாலி செயினை அத்துட்டு போய்ட்டாங்க!” என்று அவர் திக்கி திக்கி சொல்லி முடித்தார்!
மதுரா கையில் அப்போது போன் கூட இல்லை! என்ன பண்றது என்று அவள் தவிப்பாய் யோசித்துக் கொண்டிருக்கும் போது அவர்கள் அருகில் ஒரு பழைய ஆம்னி வேன் மெல்லமாய் கடந்து செல்ல,
அவர்களிடம் “அண்ணே.. ப்ளீஸ்.. இவங்கள ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போகணும் கொஞ்சம் ஏத்திக்கங்க!”
அவர்களோ,
“அய்யோ இது போலிஸ் கேஸ் ஆகிடும்! நீ வேற ஆள் பாரும்மா! நூத்திஎட்டுக்கு போன் பண்ணு!”
“அண்ணே. அதுக்கு நேரம் இல்லண்ணே! பாருங்க வயசானவங்க. இவ்வளவு ரத்தம் வேற போயிட்டு இருக்கு!
என்ன வந்தாலும் நான் பார்த்துக்கிறேன்!
நம்ம கண்ணு முன்னாடி ஒருத்தவங்க இப்படி கிடைக்கிறப்போ நாம எப்படி சும்மா போக முடியும்? ப்ளீஸ்” என்று அவள் கெஞ்ச, அவர்கள் ஏற்றிக் கொண்டு அரசு மருத்துவ மனையில் கொண்டு போய் விட்டார்கள்!
போகும் போது சூர்யா அம்மா, அவளை கையெடுத்து கும்பிட்டார்!
“ஸ்வீட்டி.. உன்னோட நல்ல மனசுக்கு நீ நல்லா இருப்ப.
நான் உன்கிட்ட ஒரு உண்மைய சொல்லணும்!
இதோ இவ உன்கிட்ட உன் கல்யாணம் பத்தி சொன்னது எல்லாம் உண்மை இல்ல!
எல்லாமே நான் சொல்லி தான் இவ அப்படி உன்கிட்ட சொன்னா!
நான் தான் புத்திக் கெட்டுப் போய் உன்னோட சித்தி பேச்சைக் கேட்டுகிட்டு அப்படி சொல்ல சொன்னேன்!
ஆனா கடவுள் உன் பக்கம் இருக்காரு பாரு!
நீ அந்த ரேவந்த்தை கல்யாணம் பண்ணிக்கிட்டு நல்லபடியா இரும்மா!
இந்த அம்மாச்சிய மன்னிச்சுடு” என்று சொல்லி விட்டு மயங்கி இருந்தார்.
அவர்களை மருத்துவமனையில் சேர்த்து விட்டு, தெரிந்த ஆயா ஒருவரிடம் சொல்லி விட்டு,
சூர்யா அப்பாவுக்கும் தெரிவித்து விட்டு அவள் ரேவந்த் லக்கி கல்யாணம் நடப்பதாய் இருந்த அந்த மண்டபம் செல்ல ஒரு ஆட்டோவைப் பிடித்தாள்.
ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் அருகே அந்த காலை வேளையிலும் பயங்கர ட்ராபிக்!
ஆட்டோவில் இருந்து இறங்கி மண்டபம் நோக்கி கிட்டதட்ட ஓடினாள்.
அவள் அப்படி அங்கு வந்து கொண்டிருப்பதை அந்த ஆட்டோ டிரைவர் ரேவந்தின் மாமாவுக்கு போனில் சொல்லி விட்டான்.
அந்த ஆம்னி வேன் கூட அவர்கள் ஏற்பாடு தான்!
சூர்யா அம்மாவும் அந்த சாமியாடியும் எப்படியும் ஊர் திரும்புவார்கள் என்று தான் அவர்கள் அங்கு காத்து இருந்ததே!
வந்தால் தூக்கிக் கொண்டு போய் உண்மையை வரவழைக்க அவர்கள் திட்டமிட்டு இருந்தார்கள்!
அதற்குள் மதுராவுக்கு லக்கி கொடுத்து இருக்கும் ஷாக் ட்ரீட்மென்ட் எப்படியும் வேலை செய்து விடும் என்றும் நம்பினார்கள்!
கல்யாணத்தைத் தடுக்க மதுரா எப்படியும் வந்து விடுவாள் என்றே நம்பினார்கள்!
ஆனால் அவர்களே எதிர்பாராதது அந்த செயின் பறிப்பு!
மதுரா அந்த பெண்களை ஹாஸ்பிட்டலில் சேர்த்து விட்டு வெளியே வருவாள்.
வந்தவுடன் ஏற்றிக் கொள்ள தோதாக ஒரு ஆட்டோவையும் நிறுத்தி வைத்து விட்டு தான் அவர்கள் காத்திருந்தார்கள்!
எல்லாம் லக்கியும் ரேவந்தின் சின்ன மாமாவும் இந்த விசயம் தெரிந்து சேர்ந்து செய்த உடனடி ஏற்பாடுகள்!
அவர்கள் திட்டபடியே எல்லாமும் நடந்துருக்க, மண்டபத்தின் வாசலிலேயே காத்திருந்தாள் இனியா!
மதுராவைக் கண்டவுடன்,
“அப்பாடி.. அக்கா வந்தாச்சு.. அத்தான் எல்லாம் ரெடி தானே!” என்று உள்ளே ஓடினாள்.
“ஏய்.. இனியா.. கொஞ்சம் நில்லு. நான் சொல்றத கேளு!” மதுரா பின்னாடியே ஓட,
“அக்கா சீக்கிரம் அக்கா.. நல்ல நேரம் முடிய இன்னும் கொஞ்சம் நேரமே பாக்கி இருக்கு! அதுக்குள்ள முடிக்கணும்! நீ சீக்கிரம் வா” என்று சொல்லி விட்டு வேகமாக படியேறினாள் அவள்!