ரிசெப்ஷன் அருகே, கையில் ஒரு பைலை பிடித்துக்கொண்டு அதில் மும்முரமாய் எழுதிக்கொண்டிருந்தாள் பிரியா.
“ஷீலா, கிவ் மீ தட் ரெட் பென்?” வரவேற்ப்பாளரிடம் பேனாவை வாங்கி மீண்டும் என்னவோ எழுத ஆரம்பித்தாள்.
பூனை போல அவள் பின்னே வந்து நின்ற கோகுல், “ஹலோ மேடம்?” என்று மெல்லமாய் சொல்ல, வேலை மும்மரத்தில், சொல்வதும் யாரென்றும் நிமிர்ந்து பாராது, “ஒன் செகன்ட் ப்ளீஸ்” என்றாள் பிரியா.
கோகுல், “நான் ஒரு பொண்ணை தேடிட்டு இருக்கேன்! கொஞ்சம் உயரமா… கண்கள்ல காஜல் தடவி…!”
சட்டென நிமிர்ந்த பிரியா, கோகுலை கண்டு செல்லமாய் முறைத்தபடி, “ஏய்… கோகுல்?” என்றாள் புன்னகையாய்.
“நான் வந்து நிக்குறது கூட தெரியாம செம்ம பிசியா இருக்கீங்களே மேடம்” என்றான் வம்பாய்.
“என்ன சார் பண்றது? இன்னும் டூ டேஸ்ல ‘மால்தீவ்ஸ்’ கிளம்பனும்! சீஃப் கெஸ்ட் அப்பாயின்மென்ட், அவங்களை தங்க வைக்கிறது, ப்ரோக்ராம் ஆர்கனைஸ் பண்றது எல்லா வேலையும் நாந்தான் பார்க்கனும்ன்னு தன்யா மே’மோட ஸ்ட்ரிக்ட் ஆர்டர்” என்று சொல்ல,
“நல்லா வச்சு செய்றாங்களா?” என்றான் சிரித்துக்கொண்டே…
“அப்டின்னு இல்ல… ஆனா, அப்படிதான்!” என பிரியா சிரிக்க, அவளுடன் இணைந்து சிரித்தவன், “அப்பறம்?” என்றான் அவள் முகத்தை பார்த்தபடி.
“அப்பறம்’ன்னா?” என அவளும் கேட்க, “ஆபிஸ்ல சேர்ந்து ஒரு வாரம் ஆகிடுச்சு! வீடு பார்த்து குடுத்த அன்னைக்கு, ‘யோசிச்சு நாளைக்கு சொல்றேன்’ன்னு ஒன்னு சொன்ன! ஆனா, இப்போ வரைக்கும் எனக்கு பதில் கிடைக்கலையே” என்றான் கோகுல்.
அவனுக்கு முதுகுக்காட்டி முன்னே நடந்தவள், “அதேதான் இப்பவும் சொல்றேன்! ‘யோசிச்சு… நாளைக்கு சொல்றேன்” என்று நமட்டு சிரிப்பு சிரிக்க, “ஏய் பிரியா?” என நடையை நிறுத்திவிட்டு இடுப்பில் கைவைத்து முறைத்தான் கோகுல்.
“கம் ஆ….ன் கோகுல்… இந்த பிரியாக்கிட்ட எப்பவும் இன்னைக்கு ஒரு பேச்சு, நாளைக்கு ஒரு பேச்சு இல்லை! எப்பவும் ஒர்….ரே பேச்சு தான்” என்று சொல்ல, முறைப்புடனே நின்றிருந்தான் கோகுல்.
அவன் தீவிரமாய் இருப்பதாய் தோன்றவே, அவன் அருகே சென்றவள், “கோகுல்! ஆர் யூ சீரியஸ்?” என்றாள் கேள்வியாய்.
“பின்ன? நான் டைம் பாஸ் பண்றேன்னு தோணுதா உனக்கு?” என்ற கோகுல், “உன்னை பார்த்ததுமே எனக்கு தோனுச்சு! நீதான் என் லைஃப்-ன்னு! நீ இல்லாம இனி ஒரு நிமிஷம் கூட என்னால வாழ முடியாதுன்னு தோனுச்சு! உன் கையை பிடிச்சுக்கிட்டே என் மிச்ச வாழ்க்கையை வாழணும்ன்னு தோனுச்சு! என் உயிர் போகும்போது நான் பார்க்குற கடைசி முகம் உன்னுதா தான் இருக்கனும்ன்னு தோனுச்சு!” என மூச்சுவாங்க சொன்னவன்,
“உனக்கு அப்படி எதுவும் தோணலையா பிரியா?” என்றான் ஏக்கமாய்.
அவனையே பார்த்திருந்தவள், அவன் பேசிய காதல் வசங்களுக்கு மயங்கிய பாவனையோ, அல்லது விருப்பமின்மையோ காட்டாது, கண்கள் சிரிக்க, வாய்மேல் கரம் வைத்து எழும் சிரிப்பை மறைக்க பெரும்பாடுப்பட்டுக்கொண்டிருந்தாள்.
கோகுலுக்கு ‘நம்ம சரியா தான் பேசுறோமா?’ என்ற பெருத்த சந்தேகம்!
பிரியா சிரிப்பை அடக்குவதை பார்த்துக்கொண்டே ‘அவளே முடிக்கட்டும்’ என கோகுல் நிற்க, இப்போதைக்கு அவள் நிறுத்துவதை போல தெரியவில்லை என்றதும், “போதும் பிரியா! ஸ்டாப் இட்” என்றிருந்தான் கோகுல்.
அவன் சொன்ன பிறகும் கூட சிரிப்பை உடனே அடக்க முடியாது, சிரமப்பட்டவள், பின் பெரும்பாடுப்பட்டு அடக்க, “என் காதல் உனக்கு காமெடியா போச்சுல பிரியா?” என்றான் கோகுல். இம்முறை அவள் சத்தமாகவே சிரிக்க, புசுபுசுவென மூச்சுவிட்டு முறைத்தவன், ஒன்றும் பேசாமல் நகர்ந்துவிட்டான். கோகுல் சென்று மறைந்த பின்னும், பிரியாவின் சிரிப்பு அடங்கியப்பாடில்லை.
ராஜகோபால் அன்று வீட்டிலேயே இருந்தார். சுரேன் ‘திறப்புவிழா’ தேதி நெருங்கிவிட்டதால், அன்றைய காலை விமானத்தில் கிளம்பி ‘மாலத்தீவு’ சென்றிருந்தான்.
ஜெயதேவின் எண்ணிற்கு அழைத்துவிட்டு அவர் அழைப்பை ஏற்ப்பதற்க்காக காத்திருந்தார் ராஜகோபால்.
“ஹலோ?”
“ஜெயா?” ராஜகோபாலின் குரலை கேட்டதுமே ஜெயதேவிற்கு உடலின் ரத்தம் வேகமாய் பாய்ந்தது. அதே வேகத்துடன், “சொல்லு ராஜா” என ஆவலாய் கேட்க,
“எப்படிடா இருக்க?” என்றார் ராஜகோபால். லேசாக அவர் குரல் கமறியது.
“இருக்கேன் ராஜா! அங்க எல்லாரும் நல்லா இருக்கீங்களா!?” என்று கேட்க, “ம்ம்ம்” என்றதோடு நிறுத்திக்கொண்டார் ராஜகோபால்.
“சொல்லு ராஜா? பேசவே மாட்டேங்குற”
‘க்கும்’ என குரலை சீர்செய்தவர், “என் பையன் மேல உனக்கு கோவம் இருக்கா ஜெயா?” என்றார்.
“ஹே, அவன் ‘உன்னோட’ புள்ள ராஜா! அவன் மேல எப்படி? அதுவும் இல்லாம இந்த கேள்வியை நான்தான் உன்கிட்ட கேட்கணும்” என சொல்ல, அங்கே சில நொடிகள் ஆழ்ந்த அமைதி நிலவியது.
ஜெயதேவ், “சொல்லு ராஜா! ஏதோ சொல்ல வந்துட்டு தயங்குற போல?” என்று சொல்ல, “தயக்கம்ன்னு இல்ல ஜெயா! சுரேன் மாலத்தீவுல ஒரு ரெசார்ட் கட்டிருக்கான்!” என்றதும்,
“அட, இது ரொம்ப சந்தோசமான விஷயமாச்சே ராஜா” என்றார் ஜெயதேவ்.
“ம்ம்ம்… இன்னும் ரெண்டு நாள்ல நாங்க கிளம்புறோம்! வர வெள்ளிக்கிழமை திறப்புவிழா!”
“நல்லபடியா நடக்கும் ராஜா! நீ நிம்மதியா போயிட்டு வா!” என்றார் ஜெயதேவ். அருகே இருந்த தெய்வாவும் இவர்கள் பேச்சை கேட்டுக்கொண்டு தான் இருந்தார்.
“நாங்க போறதுக்காக நான் ‘கால்’ பண்ணலடா” என்ற ராஜகோபால், “நீங்களும் வரணும்ன்னு தான் ‘கால்’ பண்றேன்” என்றார்.
“நாங்களா?” என ஜெயதேவ் தயங்கி நிற்க, அருகே, “நம்ம எப்படிங்க?” என முணுமுணுத்தார் தெய்வா.
ராஜகோபால், “நீங்க இல்லாம எப்படி ஜெயா? எனக்குன்னு இருக்க உறவு நீங்க தானே? என்னோட சந்தோசத்துல நீயும் பங்கெடுக்கனும்ன்னு நான் ஆசைப்படக்கூடாதா?” என்றார்.
கேட்டதெல்லாம் சரிதான்! ஆனால், அன்றைய பிரச்சனை மட்டும் நடவாமல் இருந்திருந்தால் இந்நேரம் ராஜகோபால் அழைப்பு விடுக்கக்கூட ஜெயதேவ் காத்திராமல், கிளம்பியிருப்பாரே!!!
அதை மனதில் வைத்தே, “இல்ல ராஜா! சுரேன் முதன்முதல்ல ஆரம்பிக்கப்போற தொழில். எந்தவித மனசுனக்கமும் இல்லாம அவன் தொடங்கட்டும். நாங்க இன்னொரு முறை வரோம்” என்றார் சமாளிப்பாய்.
“நீங்க வந்தா சுரேன் எதுவும் பிரச்சனை பண்ணுவான்னு நினைக்குறியா ஜெயா?” என்றார் ராஜகோபால் சரியாக.
ஜெயதேவ் மௌனம் கொள்ள, “இதை இப்படியே விட முடியாது ஜெயா, சூட்டோட சூடா முடிச்சுடுறது தான் நல்லது. என்னவேனாலும் நடந்திருக்கட்டும்! அதுக்காக சின்ன பசங்களோட சேர்ந்து நம்மளும் சண்ட போட்டுட்டு இருக்க முடியாது. சமாதானம் செஞ்சு வைக்க தான் நம்ம முயற்சி பண்ணணும். அதுக்கு ‘மாலத்தீவு’க்கு நம்ம எல்லோரும் போறது முக்கியம்! என்ன முடிவா இருந்தாலும் அதை அங்கேயே பேசி முடிச்சுடலாம்! என்ன சொல்ற?” என்றார் ராஜகோபால்.
ஜெயதேவ் தெய்வாவை பார்க்க, அவர் என்ன சொல்வதென தெரியாது அமைதியாய் இருந்தார்.
“என்ன ஜெயா ஒன்னும் சொல்ல மாட்டேங்குற?” ராஜகோபால் மீண்டும் கேட்க, “என்ன சொல்றதுன்னு தெரியல ராஜா… நான் வீட்ல கலந்து பேசிட்டு சொல்றேனே!” என்றார் தயக்கமாய்.
அவர் தயக்கத்தை உணர்ந்தாலும், “நீங்க எல்லாம் வரீங்களான்னு நான் கேட்கல ஜெயா! வரணும்ன்னு தான் சொல்றேன்! ஊருக்கு கிளம்ப ரெடியா இரு, நாலு பேருக்கான டிக்கெட் உன் வீடு தேடி வரும்” என்ற ராஜகோபால் அடுத்து பேசாமல் அவசரமாய் அழைப்பை துண்டித்துவிட்டார்.
தெய்வா, “அண்ணே என்னங்க இப்படி சொல்றாரு?” என்றதும், “ப்ச்! எனக்கும் அதுதான் சங்கடமா இருக்கு, நம்ம போனா தேவையில்லாத பிரச்சனை வருமோன்னு தோணுது! நல்ல நாளும் அதுவுமா தேவையா அதெல்லாம்?” என்றார் ஜெயதேவ்.
“அண்ணே இத்தனை சொல்லும்போது மறுக்கவும் முடியாது! நம்ம பையனுக்கும் இது மூலமா ஒரு நல்லது நடந்தா நமக்கும் சந்தோஷம் தானேங்க!” என்றார் மறைமுகமாய் தனது சம்மதத்தை தெரிவித்து.
சில நொடிகள் யோசித்த ஜெயதேவும், “சரி… போய் தான் பார்ப்போமே” என்றுவிட்டு, “மது என்ன செய்யுறா? அவக்கிட்டயும் சொல்லிடு” என்றார்.
“அவ சென்னைல இருந்து வந்ததுல இருந்து ரூமை விட்டே வெளில வர மாட்டேங்குறா! எந்நேரமும் அந்த மொபைலை நோண்டிக்கிட்டு, எதையோ பறிக்குடுத்தவ மாறியே உட்காந்துருக்கா!” என்று தெய்வா சொல்ல,
“நீ வேற புதுசா எதையாவது சொல்லாத தெய்வா! ஒருத்தன் பிரச்சனையே இன்னும் முடியல” என பதறினார் ஜெயதேவ்.
“என்னமோ போங்க! பிள்ளைங்க நம்ம உசரம் வர வரைக்கும் தான் எல்லாம் நம்மகிட்ட பேசுறாங்க! நம்மளை மீறி நிக்குறப்போ அவங்க ரூம்க்குள்ள போறதுக்கு கூட நம்ம தயங்க வேண்டியதா தான் இருக்கு! இதுல எங்க அவங்க பிரச்சனைய நம்மக்கிட்ட சொல்லப்போறாங்க!” என அலுத்துக்கொண்டார் தெய்வா.
மனைவி சலிப்பாய் பேசுவதைக்கூட பொறுத்துக்கொள்ள முடியாத ஜெயதேவ், “பார்ரா! என் பொண்டாட்டிக்கு சீரியஸா கூட பேச வருது” என கிண்டல் செய்ய, “ம்கும்! ஒழுங்கா, ஊரை சுத்தி பார்க்க வந்த வெள்ளைக்காரனையே நான் கட்டிருந்தன்னா, இந்த நிலைமை எல்லாம் எனக்கு வந்துருக்குமா?” என நொடிக்க,
“அதானே பார்த்தேன்! என் பொண்டாட்டியாவது திருந்துறதாவது!” என முறைத்தார் ஜெயதேவ்.
“விடுங்க விடுங்க! எனக்கு வேற ‘பேக்’ பண்ற வேலை எல்லாம் இருக்கு! ‘மாலத்தீவு’க்கு போனதே இல்ல நானு” என்றவர் குஷியாய் எழுந்துக்கொண்டு,
“அப்பறம்? இந்த கிருஷ்ணா பய, தொன தொனன்னு ‘போன்’ பண்ணிட்டே இருந்தான்னு, அவன்கிட்ட நடந்த பிரச்சனை எல்லாம் சொல்லிட்டேன்! நிச்சயம் நின்னுப்போச்சுன்னு தெரிஞ்சதும், உடனே இந்தியா கிளம்பி வரேன்னு குதிச்சுட்டு இருந்தான்! ஒன்னும் தேவையில்லைன்னு திட்டி விட்டுருக்கேன்! உங்களுக்கு எதுவும் கூப்பிட்டான்னா ‘போன்’ எடுக்காதீங்க” என்றவர் ‘பேக்கிங்’ வேலையை பார்க்க சென்றுவிட்டார்.
‘தன்யா கன்ஸ்ட்ரக்ஷனில்’ எந்த ஒரு புது ப்ரோஜெக்ட் முடிந்தாலும், அதற்க்கான ‘திறப்பு விழா’வுக்கு அங்கே பணிபுரியும் அத்தனை பேருக்கும் அழைப்பு கொடுப்பது வழக்கம்!
இம்முறை வெகு தொலைவில் விழா நடக்கவிருப்பதால் அனைவரையும் அழைத்து செல்வது இயலாத காரியம் என்று, மிக முக்கிய பொறுப்புகளில் இருக்கும் ஆட்களுக்கு மட்டும் விமான டிக்கெட் போடப்பட்டிருந்தது.
அதற்கான பயணசீட்டுகள் விநியோகத்தில், கோகுலுக்கு மட்டும் டிக்கெட் கொடுக்கப்படாமலிருக்க, மேனேஜரிடம் போய் நின்றான் அவன்.
“சேல்ஸ் டீம் இன்சார்ஜ்-க்கு எல்லாம் டிக்கெட் குடுத்துருக்கீங்க! நான் ‘சேல்ஸ் டிபார்ட்மென்ட் ஹெட்’, எனக்கு இன்னும் டிக்கெட் வரல?” என கோகுல் கேட்க,
“உங்க பேரு மேடம் குடுத்த லிஸ்ட்ல இல்ல கோகுல்! நீங்க எதுவா இருந்தாலும் மேடம்க்கிட்ட கேட்டுக்கோங்க” என முடித்துவிட்டார் அவர்.
‘மேடம்’கிட்டயா?’ என தயங்கியவன், ‘இதுல வெட்கம், மானம் பார்த்தா நம்ம பிரியா கூட மால்தீவ்ஸ் போக முடியாது! அடிமட்டம் வரைக்கும் இறங்கி கெஞ்சிட வேண்டியது தான்’ என முடிவு செய்து தன்யாவின் அறைக்குள் அனுமதி பெற்று நுழைந்திருந்தான்.
“ஹலோ மேடம், ஹேப்பி மார்னிங்” என அவன் கோல்கேட் விளம்பரம் ரேஞ்சுக்கு பல்வரிசை காட்டி சிரிக்க, பதிலுக்கு அவனை நிமிர்ந்து அரை நொடி பார்த்தவள், மீண்டும் கணினி புறம் திரும்பியபடி, “ம்ம்ம்” என்றாள் வேண்டாவெறுப்பாய்.
‘எப்பேர்ப்பட்ட அவமானம்’ என மனம் அழுதாலும், ‘நமக்கு காரியமே முக்கியம்’ என்ற எண்ணத்தில், “மேம், நம்ம வேளச்சேரி ப்ரொஜெக்ட்ல எல்லா பிளாட்’ட்டும் சேல் ஆகிடுச்சு” என்றான், முதலில் இனிப்பை கொடுப்போம் என்ற எண்ணத்தில்.
தன்யா சற்றேனும் ஆச்சர்யமாய் விவரம் கேட்பாள் என அவன் எதிர்ப்பார்க்க, “சோ வாட்?” என பல்பு கொடுத்திருந்தாள் தன்யா.
கோகுலுக்கு உள்ளே ஒரு குழந்தை ‘அவ்வ்வ்’ என கதற ஆரம்பித்தது. அடுத்து என்ன பேசி அவளை சரிக்கட்டலாம் என அவன் யோசிக்க சில நிமிடங்கள் எடுத்துக்கொள்ள, அதற்குக்கூட பொறுக்காது, “எதுக்கு இங்க வந்து நிக்குறீங்க?” என சுள்ளென கேட்டாள் தன்யா.
“மே… மேம்… அ… அ…து…?” என கோகுல் வார்தைகள் கோர்க்க தினறிக்கொண்டு நிற்க, “என்ன? இப்போதான் பேச கத்துக்குறீங்களா?” என கத்தினாள் தன்யா.
“இல்ல மேடம்! மாலத்தீவுக்கு போக எனக்கு மட்டும் இன்னும் டிக்கெட் வரலை! அதான் உங்ககிட்ட அதைப்பத்தி சொல்லிட்டு போலாம்ன்னு!” ஒரு வேகத்தில் ஒரே மூச்சாய் சொல்லி முடித்தான் கோகுல்.
சுவாதீனமாய் ஆசனத்தில் சாய்ந்து அமர்ந்து, “உங்களை யாரு முதல்ல மால்தீவ்ஸ் போக இன்வைட் பண்ணது?” என்றாள் அவனை நக்கலாய் பார்த்து.
“மேம்…?” அவளிடம் இருந்து இப்படியொரு கேள்வியை அவன் எதிர்ப்பார்க்கவில்லை.
“வாட் மேம்? முக்கியமான ஸ்டாஃப்’க்கு மட்டும் தான் டிக்கெட் போட்டுருக்கோம்”
அவன் முக்கியமானவனில்லை’ என நேரிடையாகவே சொல்லிவிட்டாள் தன்யா.
இருந்தும், “அப்ப நானு?” என அவன் கேட்க, “ம்ம்ம்? நீங்களும் வரலாம்! ஆனா, உங்க பிரண்ட் அப்போ’ன்னு விட்டுட்டு போன ஒரு வேலையை முடிச்சு குடுங்க! அடுத்த செகன்ட் டிக்கெட் உங்க கைக்கு வரும்” என பேரம் பேசினாள் தன்யா.
‘பிரியா கூட ப்ரீயா ஃபிளைட்ல போலாம்’ என்ற நினைவே அவனுக்கு குதூகலம் கொடுக்க, “என்ன வேலைன்னு மட்டும் சொல்லுங்க மேடம், டூ மினிட்ஸ்ல முடிச்சுடுவேன்” என வாயை விட்டான் கோகுல்.
அவன் பதிலில், “ஹோ!” என வியப்பாய் புருவம் உயர்த்திய தன்யா, “அது ஒண்ணுமில்ல மிஸ்டர் கோகுல், நம்ம போன மாசம் ஒரு புது ப்ரொஜெக்ட் எடுத்தோம்ல? அதுக்கு கூட உங்க பிரன்ட் மிஸ்டர் ஆதி, ‘செராமிக் வொர்க்ஸ்’ எல்லாம் பிப்டி பர்சன்ட் டிஸ்கவுன்ட்ல செஞ்சு தரோம்ன்னு சொல்லி ஓகே பண்ணாரே!!!” என்று சொல்ல,
“ஆம்ம்…மா” என தயக்கமாய் இழுத்தான் கோகுல்.
“ம்ம்ம்! அந்த ‘செராமிக்’ ஆர்டரை மட்டும் ஓகே பண்ணி, சம்பந்தப்பட்ட கம்பெனியோட அக்ரீமென்ட் போட்டுடுங்க! சிம்பிள்! அடுத்த நிமிஷமே உங்களுக்கு டிக்கெட் கன்பார்ம்” என்றாள் தன்யா.
‘இதுக்கு டிக்கெட் குடுக்க முடியாது வெளில போடான்னு நேராவே சொல்லிருக்கலாமே என் தெய்வமே!’ என எண்ணியவன், “தேங்க் யூ மேடம்” என திரும்பி வெளியே செல்ல,
“என்ன கோகுல், ஒண்ணுமே சொல்லாம போறீங்க! உங்களுக்கு தான் இது ‘டூ மினிட்ஸ் வொர்க்’ஆச்சே!” என எள்ளலாய் கேட்டாள் தன்யா.
திரும்பி அவளை பார்த்தவன், “இட்ஸ் ஓகே மேடம்! நான் இங்கேயே இருந்து நம்ம ஆபிசை பத்திரமா பாத்துக்குறேன்! நீங்க எல்லாம் போயிட்டு வாங்க!” என்றவன் கதவை திறக்க, மறுபக்கம், கையில் கோப்பை ஏந்திக்கொண்டு அறைக்குள் வர எத்தனித்தபடி நின்றிருந்தாள் பிரியா.
அவளை கண்டவன் அப்படியே நிற்க, “ப்ச்! கோகுல்… மூவ் அவே” என்றாள் கிசுகிசுப்பாய். அவள் மீதே இடிப்பதை போல சென்றவன், நூலிடைவெளியில் நகர்ந்து செல்ல, எப்போதும் போல புன்னகையில் விரிந்தன அவள் இதழ்கள்.
மாலத்தீவு செல்வதற்கான ஏற்ப்பாடுகள் துரிதமாய் நடைபெற்றுக்கொண்டிருந்தன. ஜெயதேவ் குடும்பத்திற்கு விமான பயணசீட்டுகள் ராஜகோபால் மூலம் ரகசியமாய் அனுப்பிவைக்கப்பட்டிருந்தன.
அன்று மாலை விமானத்தில் அனைவரும் ‘மாலத்தீவு’ கிளம்புவது என முடிவாகியிருக்க, முக்கியமான சில கோப்புகளை எடுத்து செல்வதற்காக அலுவலகம் வந்திருந்தாள் பிரியா.
வேகமாய் தன்யாவின் அறைக்குள் நுழைந்து அவள் மேசையில் அமர, ‘அவள் வருவாளா? அவள் வருவாளா?’ என சோகமாய் காத்திருந்த கோகுலுக்கு, மறுநொடி அவள் முன் சென்று நிற்ப்பதை தவிர வேறு வேலை இருந்திருக்கவில்லை.
கோகுலை கண்டதும் எப்போதும் பூக்கும் புரியாத அப்புன்னகையை பரிசளித்தவள், “வாட்?” என்றாள் தன் வேலையை பார்த்தபடி.
“என்னை விட்டுட்டு போறோமேன்னு கொஞ்சம் கூட உனக்கு கஷ்டமாவே இல்லையா பிரியா?” அத்தனை பாவமாய் கேட்டான் கோகுல்.
சிரிப்பில் துடித்த கீழுதடை தன் பற்களால் கைது செய்து மறைக்க முயன்றவள், “சின்ன பையன் மாறி பிகேவ் பண்ணாதீங்க கோகுல்! இட்ஸ் ஜஸ்ட் அன் அபீசியல் டூர்! டூ டேஸ்ல எல்லாரும் திரும்ப வந்துடுவோம்” என்று சொல்ல,
“இருந்தாலும், மாலத்தீவு மாறி ஒரு ஹனிமூன் ஸ்பாட்க்கு நான் இல்லாம நீ மட்டும் போறது….? ஹும்! தன்யா மேடம்க்கு கல்நெஞ்சு பிரியா. அவங்களும் லவ்வர் கூட போக மாட்டாங்க! லவ்வர் கூட போகலாம்ன்னு ஆசப்படுறவங்களையும் போக விட மாட்டாங்க” என்றான் விரக்தியாய்.
“ஹல்ல்….லோ…! இங்க யாரு, யாருக்கு லவ்வர்?” என்றாள் பிரியா திகைப்பாய்.
கோகுலோ, குரலை செருமி,
“டீ’ல இருக்கும் சுகர்,
செடில பூக்கும் ஃபிளவர்,
பாத்ரூம்ல இருக்கும் ஷவர்,
நீதான் என்னோட லவ்வர்” என்றான் ஸ்டைலாய்.
பிரியா, “அடடா! இதென்ன? கவிதையா?”
“யெஸ் பெப்பே(babe)! இது மாறி கைவசம் பல சரக்கு இருக்கு!” என்று பெருமையாய் காலர் தூக்க, “பலசரக்கு? யூ மீன் மளிகை ஜாமான்?” என்றாள் சிரியாது.
பல்பு வாங்கியதில் முகம் சுணங்க, “நான் கவிதையை சொன்னேன்” என்றான் முறைப்பு போல்.
“ஹப்பப்பா! போதும் போதும்! இப்போதைக்கு சிரிக்க எனக்கு நேரமில்லை! ஐ ஹேவ் டு கோ” என்றவள் அறையை விட்டு வெளியேற ஆயத்தமாக, ‘எது? சிரிக்க நேரமில்லையா? நம்ம கவிதை தானே சொல்றேன்னு சொன்னோம்?’ என குழம்பிப்போனான் கோகுல்.
அவள் மர்மப்புன்னகைக்கான காரணத்தை அவன் அறிய முயல்கையில்…? ஹாஹா… ஐயோ பாவம்!!!
“பை கோகுல், ஸீ யூ சூன்” என பிரியா கிளம்ப, “பிளைட்ல தான் உன்கூட வர குடுத்து வைக்கல, அட்லீஸ்ட் இந்த லிப்ட்ல உன்கூட வரேனே” என்றான் வெகு பாவமாய்.
அவன் முகத்தை காண்கையில் சிரிப்பு வந்தாலும், அவனை காயப்படுத்த வேண்டாம் என்ற நல்லெண்ணத்தில், அவன் ஆசைக்கு சரியென்றவள், இறுதியாய் டேக்ஸியில் ஏறி கிளம்பி செல்கையில், “நிறைய தமிழ் படம் பார்க்குறீங்கன்னு நினைக்குறேன்! கொஞ்சம் கம்மி பண்ணிக்கோங்க” என்ற ப்ரீ அட்வைஸை அவனுக்கு வழங்கிவிட்டே ‘டாட்டா’ காட்டி பறந்து சென்றாள்.
‘அவள் பறந்து போனாளே!! எனை மறந்து போஓஓஓ….னாளே!!!’ என ஒப்பாரி ராகத்தில் கோகுல் உள்ளம் தூரத்தில் புள்ளியாய் சென்றுக்கொண்டிருக்கும் டேக்சியை பார்த்துக்கொண்டே குமுற, அவன் கை இன்னமும் அவளுக்கு ‘டாட்டா’ காட்டிக்கொண்டிருந்தது.
ஐந்து நிமிடங்கள் வரை கோகுல் அப்படியே நிற்க, அலுவலகத்துக்குள் நுழையலாம் என அவன் ஒருமனதாய் முடிவு செய்தபோது, வாட்ச்மேன், “என்ன ஆதி சார்? ரொம்ப நாளே ஆளே காணோம்! எங்க போனீங்க?” என உற்சாகமாய் பேசுவது விழ, வியப்பும், அதிர்வுமாய், அவர் குரல் ஒலித்த திக்கில் வேகமாய் மும்முறை ‘சடக், சடக்’கென திரும்பினான் கோகுல். (visual effect bba!!!)
அங்கே ஜீன்ஸ் பேன்ட், டீ-சர்ட்டில் இடுப்பில் கைவைத்தபடி நின்றுக்கொண்டிருந்த ஆதியை கண்டதும், உற்சாகமாய், “மச்ச்ச்சசீ…..” என ஓடிப்போய் கட்டிக்கொண்டான் கோகுல்.
என்னதான் பலமுறை ஆதி கோகுலுக்கு ‘செய்வினை’ வைத்திருந்தாலும், ‘நண்பன்’ அல்லவா! பாசம் விட்டுப்போகவில்லை.
ஆதியிடம் கோகுல் அளவிற்கு அத்தனை உற்சாகம் தென்ப்படவில்லை. கட்டிப்பிடித்திருந்தவனை சற்று விலக்கியவன், “நான் தன்யாவை பார்க்கணும்” என்றான் தீவிரமாய்.
அவன் முகத்தில் கண்ட தீவிரத்தில் தன் உற்சாகம் மெல்ல வடிய, “ஏன்டா, எதுவும் பிரச்சனையா?” என்றான் கோகுல் கலக்கத்துடன்.
ஆதி, “ப்ச்! பாக்கணும்! ஏற்ப்பாடு பண்ணு” என்றான் விட்டேத்தியாய்.
“பிரியா உன்கிட்ட சொல்லலையா? எல்லாரும் இன்னைக்கு எவனிங் ப்ளைட்ல ‘மால்தீவ்ஸ்’ போறாங்க! சுரேன் கட்டிருக்க ரெசார்ட்’டோட திறப்புவிழாக்காக” என்றதும்,
“நீ போலையா?” என்றான் ஆதி.
ஆதியின் தீவிர தோற்றத்தில், ‘உனக்கு பிரண்ட்டா இருக்கனால தான்டா போக முடியல’ என நேரிடையாய் சொல்ல முடியாமல், “டிக்கெட் இல்லடா” என்றான் மொட்டையாய்.
“தன்யா பேமிலி?” என அடுத்து ஆதி கேட்க, “என்னடா? எல்லாரும் தானே போவாங்க!” என்றான் கோகுல்.
சில நொடிகள் யோசித்த ஆதி, “லெட்ஸ் மேக் அவர் ப்ளான்! நீயும் நானும் இன்னைக்கு மால்தீவ்ஸ் கிளம்புறோம்” என்றான் முடிவாக.
‘ஐ……..யா!’ என கோகுல் மனம் துள்ளினாலும், “டிக்கெட் உடனே கிடைக்கணும்! அதுமட்டுமில்லாம, நான் அங்க வந்தா, ‘ஏன் வந்த, எதுக்கு வந்த?’ன்னு மேடம்கிட்ட பதில் சொல்லணும் ஆதி” என்றான் சோகமாய்.
ஆனால், அவன் மனமோ, “வேலையே போனாலும் பரவால்ல, கிளம்பி போடா” என உசுப்பேத்திக்கொண்டிருந்தது.
ஆதியும் அதற்கேற்றார்போல, “என்ன ஆனாலும் சரி, நான் பார்த்துக்குறேன்! வா” என்றான் தீர்கமான முடிவாய்.
அதற்கு மேல் துளியும் தாமதிக்காத இரு நண்பர்களின் பயணம், கடல்வழியாய் மாலத்தீவை நோக்கி சென்றுக்கொண்டிருந்தது.