என்னவன்_46
பிறந்தநாளை மறந்து சுற்றி கொண்டு இருந்தவனுக்கு….சக்தியின் வாழ்த்து காலை நேரத்தில் அத்தனை மகிழ்ச்சியை தந்து இருந்தது கார்த்திக்கிற்கு…”பிருந்தா எப்படி கொண்டாடலாம் என விதவிதமாக ப்ளான் சொல்ல மறுப்பு எதுவும் சொல்லாமல் சிரித்தபடி கவனித்து கொண்டு இருந்தாள்.”
ஒரு வழியாக ஹோட்டலுக்கு செல்வதாக முடிவு செய்ய வழக்கம்போல மாலையில் புறப்பட்டனர். மறக்கமுடியாத நாளும் கூட நிறைய பேசினார்கள் பிருந்தாவும் சக்தியும்…
வடிவேலு காமெடி வருமே அதுபோல இரண்டு பேரும் அன்கோ போட்டு கொண்டு மொத்தமாக டேமேஜ் செய்து இருந்தார்கள்க் கார்த்திக்கை…
அன்றைய இரவு இன்னும் ஒரு அழகான நாளாக அமைந்தது கார்த்திக்கிற்கு…மொத்தமாக சக்தியிடம் உருகி கரைந்து இருந்தான். உலகம் வண்ணமயமாக மாறி இருந்தது. மனதின் மகிழ்ச்சி முகத்தில் தெரிய இருவரையும் இன்னும் அழகாக காட்டியது…சக்தி ஒரே வரியில் சொல்வது என்றால் அன்பை கொடு அன்பை பெறலாம். இதுதான் இவளுடைய மொத்த குணமுமே…
“தேங்க்ஸ் கார்த்திக்…எந்த பொண்ணுக்கு மனதில் எதையும் மறைக்காமல் எல்லாத்தையும் ஹஸ்பெண்ட் கிட்ட பேச முடியுமோ அந்த பொண்ணு ரொம்ப அதிஷ்டசாலி…அந்த வகையில் நான் லக்கி…எனக்கு நீங்கள் கிடைச்சு இருக்கறிங்க..”.
அன்றைய நாளிற்கு பிறகு வேகமாக நகர்ந்து என்று தான் சொல்ல வேண்டும். சிவா வழக்கம் போல போனில் அழைத்து ஊட்டிக்கு வா கார்த்திக் அங்கே ரெண்டு பேரையும் பார்த்த பிறகு இன்னும் உங்களுக்கு ரூம் தராட்டி நல்லா இருக்காது என்று நிறைய கிண்டல் செய்து ஒருவழியாக வந்தே ஆகவேண்டும் என்று கட்டளை போல அழைக்க…
ஹனிமுனிற்கு குடும்பத்தினரோடு போன ஓரே ஜோடி நாங்களாகத்தான் இருப்போம். நீண்ட நாட்களுக்கு பிறகு மகிழ்ச்சியாக இருந்தது மொத்த குடும்பமும்…
ஊட்டிக்கு சென்றுவந்த பிறகு நிறைய மாற்றம் இருவருக்குள்ளும் நடந்து கொண்டு இருந்தது. சக்தி தங்களது அறைக்குள் தான் அத்தனை விளையாட்டு, கிண்டல்,கேலி பேச்சுக்கள் பேசினாலும் அந்த அறையை தாண்டி வெளியே வந்து வந்து விட்டாள் அத்தனை பொறுப்பான பெண்ணாக பரிணாமம் காட்டினாள். முகம் பார்த்தே தேவையானதை எடுத்து தர பழகி இருந்தாள்.
பிருந்தா சொல்லவே தேவை இல்லை மொத்தமாக சக்தியோடு செட்டில் ஆகி இருந்தாள். சின்ன சின்ன விஷயத்தை கூட சக்தியிடம் கேட்டே செய்து கொண்டு இருந்தாள்.
சக்தி பிருந்தாவிடம் “சோஷியல் மீடியா தப்பு இல்லை அதை நாம பயன்படுத்ததில் இருக்கு…ஒரேடியாக வெளியே வரத்தேவை இல்லை…உனக்கு பிடிச்சதை பாரு ஆனால் அதிகமாக வீட்டுக்கு விஷயம் போட்டோஸ் கொடுக்காதே என அவளுக்கு தைரியம் தந்து இருந்தாள்.”
பத்து நாட்கள் கடந்து இருக்க தெரியாத நம்பரில் இருந்து அழைப்பு வந்திருக்க… அழைத்து பேசியது ரமணன் போதுவான நலம் விசாரிப்பிற்கு பிறகு சக்தியிடம் பேசுவதற்கு மனைவி ஆசைபடுவதாக சொல்ல… சக்தியிடம் பேசியபோது அவள் முகம் காட்டிய ஜாலம் அத்தனை அழகாக இருந்தது.
“சென்னை வந்தால் கட்டாயம் வருகிறோம் என வாக்குறுதி தந்த பிறகே ஃபோனை வைத்து இருந்தனர்.”
நாட்கள் வேகமாக நகர்ந்து கொண்டு இருந்தது. கார்த்திக்கின் உலகம் சக்தி என்று மாறி இருந்தாள்.
வேலை என்று புறப்பட்டு விட்டால் வருவது என்னவோ மாலையில் தான் ஆனால் அதன் பிறகு சக்தியை மட்டுமே சுற்றி கொண்டு இருந்தான். ஒவ்வொரு தேவைக்குக்கும் சக்தி தேவை இருந்தாள். அடிக்கடி பில்லோ சண்டை கூட இருவருக்கும் நடந்தது. சில நேரம் வேந்தனும் சேர்ந்து கொள்ள நாட்கள் மகிழ்ச்சியாக நகர்ந்தது.
ஆறு மாதம் தாண்டி இருக்க…அன்றைய பொழுது வீட்டிற்கு வந்தால் பிருந்தா ஒரு பக்கம் சக்தி ஒரு பக்கத்தில் அமர்ந்து எதையோ தேடிக்கொண்டு இருந்தனர். இவனை கவனிக்க எல்லோம் இல்லை.
“என்ன என்று சக்தியை கேட்க”…”ச்சு தொந்தரவு பண்ணாதிங்க வேலையாக இருக்கிறேன் இல்லை என்று பதில் வர…பிருந்தாவும் அதையே வேறு மாதிரி சொன்னாள்.”
“அப்படி என்ன ரெண்டு பேரும் தேடறிங்க நானும் தேடுவேன்ல்ல…என்று கேட்க…”
“முதல் குழந்தைக்கு வேந்தன்னு ஃபேர் வச்சிட்டிங்க… அடுத்த குழந்தைக்கு நல்ல பேரை செலக்ட் பண்ணனும்ல்ல…என்று கேட்டுவிட்டு லேசாக கண் அடிக்க…”
“சக்தி” என்று நெருங்கியனை..”ஹேய் இது ஹால் “என்று ஒரே சொல்லில் தடுத்து நிருத்தி இருந்தாள்.தங்களது அறைக்குள் செல்லவும் “எனக்கு நீ சொல்லவே இல்லை இப்பதான் சொல்லற…ஹாஸ்ப்பிடலுக்கு போனது கூட நீ என்கிட்ட சொல்லை…”ரூம்பிற்கு போகவும் முதலில் சொன்னது இதை தான்.
“கார்த்திக் சந்தேகமா இருந்தது அத்தைகிட்ட சொன்னேன் போயிட்டு வந்திடலாம்ன்னு கூப்பிட்டுட்டு போணாங்க…ப்ளீஸ் முகத்தை இப்படி வைக்காதிங்க எவ்வளவு நேரமா உங்களை எதிர் பார்த்தேன் தெரியுமா..”
“ஸாரி…கோபம் எதுவும் இல்லை. சக்தி டாக்டர் என்ன சொன்னாங்க…”
“நிறைய சொன்னாங்க கார்த்திக். இனி ஹக் பண்ண கூடாதாம் கன்னத்தில் முத்தம் எல்லாம் தரவே கூடாதாம்…”
“என்ன இதெல்லாமா சொல்லுவாங்க…”
“ஹாம் இதெல்லாம் நம்ம டாக்டர் சொன்னாங்களே என்று சீரீயஸ்ஸாக கூற…அதுவரையில் கேட்டவன் முகத்தை பார்க்கவும்…பொய்தானே சொல்லற…என்றபடி காதை திருக வர…”
“நோ கார்த்திக் ஏதாவது பண்ணினிங்க பாப்பா கிட்ட சொல்லி கொடுத்திடுவேன். வெளியே வந்தா டியூம் டியூம் தான் பார்த்துக்கோங்க…”
“பாப்பாவா முடிவே பண்ணிட்டியா சக்தி என்று அருகில் நெருங்கியவன் உன்னை போலவே வேணும் என்று கூற…”
“எந்த குழந்தையாக இருந்தாலும் ஒகேதான் ஆனால் பெண்குழந்தை ரொம்ப பிடிக்கும்…க்யூட்டா அழகாக…நிறையவே அழகழகா டிரஸ் போடலாமே…”
அடுத்து வந்த நாட்களில் சக்தியை தாங்கினார்கள் என்று சொல்லி வேண்டும். நாட்கள் நகரநகர லேசாக உடல் எடை கூட அத்தனை அழகாக மாறி இருந்தாள். படி ஏறக்கூடாது என முதலிலேயே சொல்லி இருக்க கீழ் அறைக்கு மாறி இருந்தனர் இருவரும்…
சக்திக்கு இப்போது ஏழாவது மாதம் துவங்கி இருந்தது.நாளை வளைகாப்பு செய்து அழைத்து செல்வதாக ஏற்பாடு…இங்கே ரூம்பில் இங்கேயும் அங்கேயும் நடந்து கொண்டு இருந்தாள்.
பத்து நிமிடம் வரைக்கும் பார்த்த கார்த்திக்…”என்ன சக்தி ஒரு இடத்தில் உட்காரு ஏன் இப்படி நடந்துட்டே இருக்கற…”
“அது…வந்து…கார்த்திக் நீயாவது புரிஞ்சிக்கோ…நாளைக்கே அங்கே போகணுமா. .இன்னும் தான் நாள் இருக்கே ஒன்பதாவது மாதம் போணா பத்தாதா…”
“என்ன இந்த சக்தி பொண்ணுக்கு என்ன ஆச்சு…வழக்கமா அம்மா வீடுன்னா உடனே புறப்படுவே இப்போது இவ்வளவு யோசிக்கற…”
“அம்மா வேலை செஞ்சாதான் உடம்புக்கு நல்லது பிரசவம் ஈசியா இருக்கும்ன்னு நிறைய வேலை வாங்குவாங்க…”
“ம்…சரி…ஆனால் சக்தி பொண்ணு வேலை செய்ய தயங்கற பொண்ணு இல்லையே..”
“கார்த்திக் எனக்கு தண்ணீர் சூடா இருந்தா பிடிக்காது தானே அவங்க சூடா இடுப்புக்கு ஊற்றுவாங்க…சின்ன குழந்தை போல கம்பிளைண்ட் வாசிக்க…கார்த்திக் முகத்தில் அத்தனை சிரிப்பு..”
“சின்ன குழந்தை மாதிரி பண்ணற… ஆனால் இன்னும் உண்மை வரலையே
சக்தி…என்ன செய்யலாம் புன்னகையோடு கேட்க..”
“கார்த்திக் என்றபடி அருகில் நெருங்கி அவனது சட்டை பட்டனை திருகியபடி இப்ப போனா பாப்பா பிறந்த பிறகு தான் வரமுடியும். ரொம்ப நாள் ஆகும் உங்களை பார்க்க முடியாது. “
“இதுதான் பிரச்சினையா உனக்கு…சக்தி அடுத்த மாதம் கூடாதாம் ஒன்பதாவது மாதம் கடைசியில் தான் நல்ல நாள் இருக்கு அப்படி வைக்க முடியாது டேட் நெருங்கிடும் அதனால்தான் இந்த தேதி முடிவு பண்ணி இருக்கறாங்க…புரிஞ்சிக்கோ…நான் வேணும்னா அங்கே வரேன்.”
“ம்… உங்களுக்கு தூரம் ஜாஸ்தி…கம்படபிளா இருக்காது.”
“உனக்காக இருப்பேன் போதுமா..”.இப்படி சொல்லி கொண்டு இருக்கும் போதே…வேந்தன் தனதுகுட்டி ஃபேக்கில் துணியை வைத்து எடுத்து கொண்டு…தூக்கமுடியாமல் இழுத்து கொண்டு வந்து நின்றான்.
“ஏய் எங்க புறப்பட்டாச்சு என்று வேந்தனை பார்த்து கார்த்திக் கேட்க…”
“தாத்தா வீட்டுக்கு…தோட்டத்து தாத்தாவீட்டுக்கு தாத்தா வரதா சொன்னாங்க” மழலையில் கூற…
வேந்தன் இப்போது மூன்று தாத்தாகளுக்கு செல்ல பேரணாக மாறி இருந்தான்…ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பெயரோடு நம்ம தாத்தா என்று கார்த்திக் தந்தையை அழைக்க…மாயாவின் தகப்பனார் கண்ணாடி அணிந்து இருப்பதால் அவருக்கு பெயர் கண்ணாடி தாத்தா…சக்தி தந்தை தோட்டத்து தாத்தா ஆக மாறி இருந்தார்.
நாளைக்கு காலையில்பத்து மணிக்கு சக்திக்கு வளைகாப்பு செய்து அழைத்து செல்வதாக ஏற்பாடு செய்து இருக்க… ஏதாவது விடுபட்டு இருக்கிறதா என்று கேட்டு தெரிந்து கொள்ள புறப்பட்டு வருவதாக கூறி இருந்தார்.அதை தெரிந்து கொண்டு வேந்தன் புறப்பட ரெடியாகி இருந்தான்.
சக்தியிடம் வந்து “ம்மா தாத்தா வீட்டுக்கு போறேன் பாப்பாக்கு பை சொல்கிறேன் என்று அருகில் வந்தவன் சக்தியின் வயிற்றுக்கு முத்தம் வைத்தான் உம்மா…உம்மா என்று கூறியபடி…”
இவனது சத்தத்திற்கு குழந்தை வயிற்றில் இருந்தே அசைந்து கொடுத்தது. சக்தி போட்டு இருந்தது பளாசா பேண்ட் கவுன் போன்ற டாப்ஸ் அதற்கும் மேலே அசைவது தெரிய…கார்த்திக் வயிறு வரைக்கும் குனிந்தவன்…பாப்பாவுக்கு நானும் உம்மா தரேன் என்று வேந்தனுக்கு போட்டியாக குரல் கொடுத்தான்.
“இல்லை என்னோட பாப்பா நான் தான் தருவேன் என்றபடி வயிற்றை மறைத்தபடி நிற்க…சக்திக்கு அப்படி ஒரு சிரிப்பு…”
“டேய் இதுக்கு காரணமே நான் தான் என்னயவே கிட்ட விடமாட்டியா” என்று கேட்க பட்டென தோலில் அடி வைத்து இருந்தாள்.”குழந்தை கிட்ட என்ன பேசறிங்க என்றபடி…”
“இப்ப எல்லாம் சும்மா சும்மா அடிக்கிற சக்தி நான் உண்மையை தானே சொன்னேன் கார்த்திக் அப்பாவியாக கேட்க…”
“மானத்தை வாங்காதிங்க கார்த்திக் வா நாம போகலாம் “என வேந்தனை கரம்பிடித்து அழைத்து சென்றாள்.அடுத்த நாள் அவர்களது வீட்டில் சுற்றம் சுழ…வளைகாப்பு செய்து அழைத்து சென்றனர்.அனைத்து உறவினர்களுக்கும் அழைப்பு விடுத்து இருந்தனர்.
நாட்கள் நகர…பிருந்தாவும்,லட்சுமி முதலில் ஒரு வாரம் தங்கிவிட்டு வந்திருந்தனர். கார்த்திக் தினமுமே மாலையில் அவளை பார்த்து விட்டு வருவதை வழக்கத்தில் வைத்து இருந்தான். ஒருவாரம் இருக்கையில் சக்தியோட அவர்களது வீட்டில் தங்கி இருந்தான். கால் நன்றாக வீங்கி இருக்க முகம் கூட சோர்ந்து தெரிய அவளது முகத்தை பார்த்தவன் அவளோடு தங்கிக்கொண்டான்.சொன்ன தேதிக்கு நான்கு நாட்களுக்கு முன்பாகவே சக்திக்கு வலி எடுக்க ஆரம்பித்து இருந்தது.
உடனே அழைத்து சென்று இருந்தனர் ஹாஸ்ப்பிடலுக்கு..”.ஃபோனில் கார்த்திக் வீட்டிற்கு தகவல் சொல்ல வீட்டில் உள்ள அனைவருமே வந்து இருந்தனர். சிவா கூட திவ்யாவை அழைத்து கொண்டு வந்து இருந்தான்.”
ஒரு நாள் முழுக்க காக்க வைத்த பிறகு கார்த்திக்கின் தவபுதல்வி ஜனனம் எடுத்து இருந்தாள். அத்தனை பேருக்கும் அத்தனை மகிழ்ச்சி. என்ன குழந்தை பிறக்கும் என்று ஆர்வமாக அனைவரும் காத்திருக்க பெண் குழந்தை என்கவும் அவ்வளவு மகிழ்ச்சி.
குழந்தையை எடுத்து வந்து காட்ட…குழந்தை ரோஜாப்பூ நிறத்தில் அப்படியே பிருந்தாவின் சாயலில் இருக்க…”அண்ணா பாப்பா என்ன மாதிரியே இருக்கறா…அத்தனை குதூகலம் அவளது குரலில்…”
சற்று நேரம் கழித்து சக்தியை பார்க்க செல்ல…கார்த்திக்கை பார்த்து லேசாக சிரித்தாள். அருகில் வந்தவன் “நீ ஆசைப்பட்ட மாதிரி தான் பெண் குழந்தை…ஆனால் எனக்கு உன்ன மாதிரி ஒரு குழந்தை வேணும் உன்னோட சாயலில்…சரி என்பது போல கண்களை மூடி திறக்க…அடுத்ததாக…
அப்புறம் என்னோட சாயலில் ஒரு பையன் என்று கூறவும்…இப்போது சக்தி கண்களில் மிரட்டுவது போல கண்களை காட்ட…”
“அருகில் நெருங்கி நெற்றியில் முத்தமிட்டவன் சும்மா சொன்னேன் சக்தி இந்த குழந்தைக்கே ரொம்ப கஷ்டப்பட்டுட்ட.. இன்னோரு குழந்தை ஆசை எல்லாம் இல்லை ..என்றபடி அவளின் கை பிடித்து அமர்ந்து கொண்டான்.”
“ஃபேர் செலக்ட் பண்ணியாச்சு வெண்பா ஃபேர் பிடிச்சு இருக்கா…சக்தி இவனிடம் கேட்க…”
“ரொம்ப…ஃபேரை மட்டும் இல்லை உன்னையையும் கூட…” என்று சொல்லிய கார்த்திக்கின் கண்களில் அத்தனை காதல் இருந்தது.
இவள் என்னவள், எனக்குரியவள் ,எனக்காக பிறப்பெடுத்தவள் என்ற கர்வம் கூட அந்த நிமிடம் கண்களில் இருந்தது. நீண்ட தூரம் பாலைவனம் தாண்டி வந்தவன்
நந்தவனத்தில் குடி ஏறிய நிறைவு இருவர் மனதிலும் இருந்தது. இதே மனநிறைவோடு நாமும் வாழ்த்தி விடை பெறுவோம்.
நிறைவுற்றது.