அன்று இரவு ஜனா அறையில் சத்யன் உறங்கி விட..உமாவிற்கு தூக்கம் எட்டி கூட பார்க்க வில்லை..
அன்றைய நாள் பொழுதின் நிகழ்வுகள் எல்லாம் அவளின் மனதில் காட்சிகளாய் ஓடி கொண்டு இருக்க.. இறுதியில் அவளின் கனவின் கண்ணை நேரில் பார்த்த பரவசம் அவளின் மனதில் நிலை கொண்டு இருந்தாலும்..
ராதாவை அவன் திருமணம் செய்து கொள்வதாக இருந்தது.. என்பதே அவளுள் புரியாத ஒரு மன உளைச்சலை உருவாக்கியது..
“ஒரு வேலை அக்கா வேற யாரையும் காதலிகலைனா சத்யன் அக்காவை கல்யாணம் பண்ணிக்கிட்டு இருப்பாரோ.. அப்போவும் அக்கா தான் வேணாம்னு சொல்லி இருக்கா.. சத்யன் மறுக்கலையே.. அப்போ அவரு அக்காவை காதலிச்சி…” இது சந்தேகமாக அவளுள் இன்று எழ.. நாளை மரமாக இதே வளர போகிறது என்பதை அவள் உணராமலே போய் விட்டாள்
எதோ ஒரு இருள் சூழ்ந்த காட்டு பகுதி..வழி தெரியா.. முடிவில்லா அந்த காட்டில் சிரித்து மகிழ்ந்த படி.. மாலையும் கழுத்துமாய் அவள் சென்று கொண்டு இருக்க
அவளுக்கு அருகில் அவளின் கண்ணன்.. மாலையும் கழுத்துமாக அவளின் கை கோர்த்த படி.. அவளின் மலர்ந்த முகம் பார்த்து தானும் புன்னகைத்த படி செல்ல…
அவளின் கழுத்தில் மின்னும் அந்த பொண் தாலி அவளை மேலும் அழகாக்க..தாலி கயிற்றின் மஞ்சள் கூட அதனின் மனம் மாறாமல் மணக்க… இருவரும் ஒருவருக்குள் ஒருவர் தொலைந்து..எழுந்து.. மீண்டும் தொலைந்து கொண்டு இருந்த இன்பமான நேரத்தில்
திடீரென கேட்ட மரண ஓலத்தில்.. இருவரும் திடுக்கித்து…மருண்டு போய் நிற்க…
அவர்கள் இருவரையும் ஒன்று சேர்த்து கடந்து வந்தது அந்த உருவம்.. கோரமாக..தலை முடியை விரித்து கொண்டு..நீண்ட கை நகங்களுடன்.. ராட்சசி போன்ற உருவத்தில் அவர்கள் முன் வந்து நின்றவள்.. உமாவை பார்த்து ஏளன சிரிப்பு ஒன்றை சிரித்தவள்.. அடுத்த நொடி அவளின் பார்வை மஞ்சள் தாலி மேல் விழ..சிரித்த முகத்தில் வஞ்சம் தெரிய.. எதையும் யோசிக்கும் முன் அதை அவளின் கையால் பற்றிய படி இழுத்து அறுத்தெறிந்ததாள் அந்த ராட்சசி
“ஐயோ” பதறிய படி உமா படுக்கையை விட்டு எழ… அதே நேரம் சரியாக அவள் வைத்த அலாரம் அலற
“மன்னவன் வந்தானடி தோழி
மன்னவன் வந்தானடி தோழி
மஞ்சத்திலே இருந்து நெஞ்சத்திலே அமர்ந்த
மன்னவன் வந்தானடி தோழி” என்ற பாடல் ஒலித்த படி கைபேசி அலற..
அப்போதும் கனவில் இருந்து மீள முடியாமல் தவித்தவள்.. சுற்றம் முற்றம் பார்க்க.. கண்டது கனவு என்பது புரிந்தாலும்..
“சத்யனை கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோசமா இருக்கும் போது அது முடிந்து போவது போல் எதுக்கு கனவு வரணும்.. நேத்து கண்ணன் வருவதா வந்த கனவு பளிச்சா.. (Ambien) அப்போ இதுவும் பலிக்குமா” என்ற எண்ணமே அவளை நிலை குலைந்து.. கண்ணில் நீர் சேர செய்ய.. கைபேசியில் அலாரத்தை அணைத்த படி படுக்கையில் அமர்ந்து இருந்தாள் உமா
அப்போது அவளின் அறை கதவு தட்ட பட.. கண்ணில் கண்ணீருடன் இருந்த அவள்..”உள்ள வாங்க” என்று குரல் கொடுக்க
கதவை திறந்து கொண்டு வந்தான் சத்யன்.. இந்த நேரம் தன் அறை கதவு தட்டுவது ஜனவோ, சிவகாமி பட்டியாகவோ இருக்கும் என்பதால் அவள் உள்ளே வரும் படி கூறி விட..சத்யனை எதிர் பார்த்தவள் முதலில் திடுக்கித்தாலும்
வந்த அவனோ.. கையில் காபி டம்ளருடன்.. “உன்ன மதி அத்தை எழுந்துட்டயானு பார்த்துட்டு வர சொன்னாங்க..இன்னைக்கு காலேஜ்க்கு போகணுமாம்.. அதனால உன்னை எழுப்பிட்டு வர சொன்னாங்க” என்றான் மிக இயல்பாக
“என்ன” என்பதை போல அவள் முழிக்க.. ஜனாவை தான் பார்க்க சொன்னாங்க..அவன் எதோ வேலைன்னு போய்ட்டான்..அவன் தான் என்னை அனுப்புனான்” என்றான் கண்ணில் வழியும் அவளின் கண்ணீரை கவனித்த படியே
“இதோ கிளம்புறேன்” என்ற படி சோர்ந்த முகத்தோடு அவள் கட்டிலை விட்டு இறங்க
“எதுக்கு அழற.. கெட்ட கனவா”
அவனின் கேள்வியில் திடுக்கிதவள்.. “ஆஹ் ஆமா..இல்ல இல்ல..அப்டி எல்லாம் எதுவும் இல்லை” என்றாள் என்ன கூறுகிறோம் என்பது புரியாமல்.
“கனவு தானே.. அதை தூக்கத்துலயே விட்டுட்டு எழுந்திரு..அது நடந்தா பார்த்துக்கலாம்..அது வரைக்கும் உன்னோட நிம்மதிய ஏன் கெடுத்துக்குர” என்று சத்யன் கூறி சென்று விட்டான்
ஏனோ சத்யனின் வார்த்தைகள் ஒரு தெம்பை தந்தாலும்..அந்த கனவின் பயம் அவளுள் இருக்க தான் செய்தது
அவளுள் எப்போதும் இருக்கும் உற்சாகம் குறைந்தாலும்.. அதை வெளியில் காட்டி கொள்ள முடியாதவள்.. முடிந்த வரை சமாளித்தாள்
குளித்து முடித்து பையுடன் கீழே வந்தவன்.. டின்னிங் டேபிளில் செல்வமும் சத்யனும் உணவு பரிமாற காத்திருக்க.. சத்யனை கண்டவள் சிறிது நேரம் அந்த கனவை மறந்து.. இளித்த பாடியே அவர்களை நெருங்கினாள்
“என்னபா..சாப்பாடு தட்டு முன்னாடி உக்காந்து தியானம் பன்னுறீர்களா ரெண்டு பேரும்..அங்க தோட்டத்துல பக்கம் போங்கபா.. நல்ல காத்தோட்டமா இருக்கும்” கிண்டலடித்த படி உமா வர
‘சாப்பாடு வெக்க ஆள் இருந்தா நாங்க ஏன் இங்க யோகா பண்ண போறோம்” பதில் சத்யனிடம் இருந்து வர
அதில் பரவசம் அடைந்தவள்.. அவர்களை நெருங்கி.. “நான் வேணும்னா பரி மாறவா” என்றாள் ஈன சுவரத்தில்..சொன்னதோடு மட்டும் நிற்காமல் அவர்களுக்கு பரிமாறவும் துவங்க
“ஹய்யையோ.. மதி.. இங்க வாயேன்.. உன் பொண்ணுக்கு பேய் பிடிச்சிடுச்சு போல..புதுசு புதுசா செய்யுறா.. எங்கள வந்து காப்பதேன்” செல்வம் வேண்டும் என்றே அலற
“பேய் எல்லாம் இருக்காது மாமா.. கனவுல எதாவது விசித்திரமா பார்த்து இருப்பா” சத்யன் விளையாட்டாய் கூற
கனவை பற்றி பேசவும்.. அவளுள் அதே பயம் குடி கொள்ள..முகம் இருக..பரிமாறியதை பாதியிலேயே விட்டு விட்டு சென்று விட்டாள் உமா
புத்தங்களை சரி பார்த்தவளிடம் வந்த கோமதி..”என்னடி இன்னும் ஸ்ரீஜாவை காணோம்.. நேரம் வேற ஆகுது”
“அவளுக்கு உடம்பு சரி இல்லையாம்மா.. அதனால வரலனு சொல்லிட்டா.. சரி நானும் கிளம்புறேன்.. அண்ணனை கூப்பிடு”
“சாப்பிடுடி மொதல்ல.. அப்றம் கிளம்புவ”
“இல்லாமா.. பசி இல்லை.. மதியம் சேர்த்து சாப்ட்டுக்குறேன்” என்றவள் தொங்கிய முகத்துடன்
தன்னை வம்பிழுக்கமால் போகும் உமாவையே பார்த்து கொண்டு இருந்த சிவகாமி பாட்டி
“என்ன ஆச்சு இவளுக்கு.. அமைதியா போறா… எதாவது பிரெச்சனையா.. டேய் ஜனா காலேஜ்ல பிள்ளைய எவனாச்சும் வம்பிழுக்குறாங்களானு விசாரிடா” என்ற படி கவலையுடன் அவர் கூற
“இவ எவனயாச்சும் வம்பிழுக்கமா வந்தா போதாது.. இவள தான் வம்பிழுக்க போறாங்களாம்” புலம்பிய படியே சென்றான் ஜனா
போகும் அவளை பார்த்த சத்யனுக்கு தான்.. “நாம கனவை பத்தி பேசுனதால தான் இப்டி சாப்பிடாம போறாளோ..என்ன இருந்தாலும் அதை பத்தி நாம பேசி இருக்க கூடாது” என்று மனது வருத்த பட்டாலும்…
தட்டில் சுட சுட இட்லி பரிமாற பட.. அனைத்தையும் மறந்து அதில் கவனமாய், உன்ன துவங்கி விட்டான் அந்த கல்நெஞ்ச காரன்
உமா தான் அங்கு.. வகுப்பில் கவனம் இல்லாமல்..பயந்து போய்.. கனவை பற்றியே யோசித்த படி இருக்க..
உடன் ஸ்ரீஜாவும் இல்லாமல் போனது அவளுக்கு பெரிய கஷ்டமாகவே போனது.. அவள் இருந்து இருந்தாள் அவளிடம் தன் மன பாரத்தை கூறி ஆறுதல் அடைந்து இருப்பாள்..அவள் வேறு இல்லாதது உமாவிற்கு தன்னில் எதையோ இழந்ததை போலவே உணர்ந்தாள்
மாலை நேரம் வர..ஸ்ரீஜா உடன் இல்லாமல்.. காலையில் இருந்து பேசாமல் அமைதியாகவே இருந்த வாயின் வருத்தம் முகத்தில் தெரிய…சோர்ந்த படி நடந்து வந்து கொண்டு இருந்தாள் உமா
“ஹை.. அங்க காலேஜ் வாசல்ல ஒருத்தன் நிக்குறான் பார்த்தியாடி.. செம ஹண்ட்ஸோமா இருக்கான் இல்ல..அவனை பார்க்கும் போதே கல்யாணம் பண்ணிக்கனும்னு தோணுதுடி” என்ற படி இரு பெண்கள் பேசிய படி அவளை கடக்க
“யாரா இருக்கும்..அதுவும் வாசல்ல…நமக்கு எதுக்கு” என்று முதலில் நினைத்தவள்…அடுத்த நொடி காலேஜ் வாசலில் நின்றாள்
நின்ற அவனை கண்டவளுக்கு அதிர்ச்சி என்றால்..அந்த பெண்களின் வார்த்தைகளால் அவளுக்கு கோவமும் சேர்ந்தே வந்தது…
ஜீப் ஒன்றில் நீல நிற ட்ஷிர்ட் ஒன்று போட்டுகொண்டு.. நீல ஜீன்ஸுடன்..கண்ணில் கூலர் கண்ணாடியுடன்.. அழகாய் சீவ பட்ட தலையுடன்.. ராஜா தோரணையில் அவன் அமர்ந்து இருக்க.. உமாவே நின்று ஒரு முறை அவனை ரசிக்க தான் செய்தாள்..பின் நினைவு பெற்றவள்… கோபத்துடன் சத்யனை நெருங்க.. உமா வருவதை கண்டவன்.. ஜீப்பை விட்டு இறங்கி. அவளின் முன் நின்றவன்
“கிளம்பலாமா?” என்றான் கண்ணில் இருந்த கண்ணாடியை கழட்டிய படியே
அவனின் முகத்தை நன்கு ரசித்தவள் .. பின் முகத்தை இறுகி வைத்து கொண்டு “உங்கள யார் இங்க வர சொன்னது…எதுக்கு இங்க வந்தீங்க?” என்றாள் குதித்த படி
“ஏன் நான் ஏன் வர கூடாது.. இது நான் படிச்ச காலேஜ்.. இங்க வர எனக்கு யார் அனுமதியும் தேவைஇல்லை” என்றான் திமிராக
“அப்டியா சரி இங்கயே நின்னு உங்க காலேஜ்ஜை வேடிக்கை பாருங்க” என்ற படி அவ்விடத்தை விட்டு நகர பார்த்தவளை தடுத்தவன்
“சரியான பச்சமிளாய்யா இருக்கியே..எதுக்கு எடுத்தாலும் உனக்கு கோவம் வந்துடுமோ”
“நான் பச்சை மிளகாய் எல்லாம் இல்ல..எனக்கு கோவமும் வராது” என்றாள் முகத்தை திருப்பி கொண்டு, முகம் சிவக்க
“அதில் சிரித்தவன்.. சரி சரி வண்டியில ஏறு…நானும் வீட்டுக்கு தான் போறேன்.. ரெண்டு பேரும் ஒன்னா போய்டலாம்” என்றவனின் வார்த்தைகளில் திடுக்கித்தாலும்.. மனது ஒரு புறம் கூத்தாடினாலும்.. அதை மறைத்தவள்..அமைதியாக வண்டியில் போய் அமர்ந்து கொண்டாள்
அரைமணி நேரத்து பயணம் அது…ஆனால் உமாவிற்கு எதோ யூகங்களை கடந்து சத்யனுடன் வாழ்ந்து கொண்டு இருப்பதை போல ஒரு உணர்வு..
சத்யனின் பார்வை ரோட்டின் மீது மட்டுமே இருக்க… உமாவின் பார்வை சத்யனின் மீது மட்டுமே இருந்தது…
பல வரும்டங்களாக காணாத அந்த ஊரின் மாற்றத்தை கவனித்த படியே வண்டியை ஓட்டினான் சத்யன்…உமாவோ அன்று கேரளாவில் முதல் முறை கண்ட அவளின் ஆசை கண்ணனின் இன்றைய மாற்றத்தை ஆயிரந்த படியே பயணித்தாள்
இதில் அவளுக்கு மனதில்
“என்னை கொஞ்சம் மாற்றி…
என் நெஞ்சில் உன்னை ஊற்றி
நீ மெல்ல மெல்ல என்னை கொல்லாதே
நேற்றும் இன்றும் வேறா?
இன்று காணும் நானும் நானா?
உன் பேச்சில் என்னை வீழ்த்தி செல்லாதே”
பாடலின் வரிகளும் அசைபோட்ட படி இருக்க..அந்த பயணத்தை மனதில் நிறைத்து கொண்டே இருந்தாள் உமா
(பி.கு-காக்க காக்க படத்தின் ரசிகர்கள் யாராவது இருந்தால்…உமாவை அடிக்கவும்.. என்னை இல்லை)
வீடு வந்து சேர்ந்தவள் இறங்காமல்…எங்கோ லயித்து இருக்க.. அதை கவனித்த சத்யன்
“ஏய் பச்சமிளகா..இறங்கு..வண்டியிலேயே தூங்குறதா ஐடியாவா” என்றதும் சுற்றம் உணர… அவளுள் சொல்ல முடியாத வெக்கம் வந்து குடி ஏறி கொள்ள.. அதை மறைத்த படி பையுடன் உள்ளே ஓடி விட்டாள் உமா
அவளின் அந்த மாற்றம் எதோ சத்யனுக்கு பிடித்தும்… ரசிக்கவும் செய்ய..முகத்தில் புன்னகையுடன் உள்ளே சென்றான்
சிறிது நேரத்தில் வீட்டின் அத்தனை மூலையிலும் உமா ஜனாவை தேடி கொண்டு இருக்க.. அவன் தென் படாமல் போக..
“அம்மா.. இந்த அண்ணன் எங்க தான் போச்சு… ஆலயே காணோம்” சலித்த படி உமா பேச..
“மடியில தானாடி ஜனாவும், சத்யாவும் பேசிகிட்டு இருந்தாக… அங்க போய் பாரு”என்ற கோமதி
“அடியே இரு.. அப்டியே ரெண்டு பேருக்கும் டீ குடுத்துடு” என்று கோமதி நீட்ட
பிளாக் காபி போட பட்டு இருக்கிறதா என்பதை நிச்சயித்த பின்பே மாடிக்கு சென்றாள் உமா
சத்யனுடன் எதையோ தீவிரமாக பேசி கொண்டு இருந்தான் ஜனா.. அதற்கு சத்யன் சமாதானம் சொல்லி கொண்டு இருக்க..ஒரு பதட்டமான சூழலே இருந்தது இருவருக்குள்ளும்
அதை எதையும் கவனிக்காத உமா… அடிய படி வர.. அவளின் கால் கொலுசின் சத்தமே அவளின் வருகையை காட்டி கொடுக்க.. ஜனாவும் சத்யனும் இயல்பாக நின்று கொண்டு இருந்தனர்
அவள் தந்த டீ கப்புகளை வாங்கி கொண்டவர்கள்.. அதை புருக.. அவர்கள் குடித்து முடிக்கும் வரை அமைதியாகவே நின்று கொண்டு இருந்தாள் உமா
“என்ன உமா..என்ன யோசனைல நின்னுகிட்டு இருக்க” ஜனா கேட்க
கையில் ஒரு காகிதத்தை நீட்டி”இத பாருணா.. லவ் லெட்டராம்” என்றாள் சலித்த படி
“எனக்கா..யார் கொடுத்தா.. எந்த ஊர் பொண்ணு” என்று ஜனா ஆர்வமாக கேள்விகளை அடுக்கி கொண்டே போக
அதில் மேலும் கடுப்பான உமா… “இது உனக்கு இல்ல…என் கிட்ட இத இன்னைக்கு சாயங்காலம் தான் குடுத்தாங்க.. குடுத்திட்டு பதில் சொல்ல சொன்னாங்க.. அதான் உன் கிட்ட கொண்டு வந்தேன்” என்றாள் முகத்தை சுழித்த படி
அவள் பேசியதை கேட்ட சத்யனுக்கு கோவம் வந்து விட.. “ஏய் உனக்கு அறிவில்ல..பொண்ணா அடக்க ஒடுக்கமா இருக்கனும்.. இப்டி சுத்திகிட்டு திரிஞ்சீனா இப்டி தான் எவனாச்சும் லவ் லெட்டர் குடுப்பாங்க… ஒரு ஒழுக்கம் இருக்கனும்…இல்லாட்டி இப்டி தான் நடக்கும்” என்று அவன் போக்கில் சத்யன் பொரிந்து தள்ள
அவன் பேசுவதை அனைத்தையும், கைகளை கட்டி கொண்டு அமைதியாக கேட்டு கொண்டு இருந்தாள் உமா.. அவன் முடித்ததும்.. ஜனா கையில் இருந்த கடிதத்தை பிடுங்கி, சத்யனிடம் கொடுத்தவள்
“இதை பிரிச்சி படிங்க.. அப்றம் என்னோட ஒழுக்கத்தை பத்தி பேசலாம்” என்றாள் இப்போதும் சலித்து கொண்டே
லெட்டரை பிரித்து படித்தவன் முகத்தில் இருந்த இறுக்கம் போய்…அசடு வழிய துவங்க…
அதை கண்ட ஜனா அந்த கடிதத்தை வாங்கி படிக்க…மனதுக்குள் அவன் சிரித்த படி..
“அப்டி உன் கிட்ட இருக்கறது எதுடா என் கிட்ட இல்லை… எப்போ பாரு உனக்கே லவ் லெட்டர் வருது.. எனக்கு வர மாட்டேங்குது” ஜனா அலுத்து கொள்ள
“சும்மா இருணா.. அப்றம் ஒழுக்கம் இருக்கனும்.. வழுக்கை இருக்கணும்னு மறுபடியும் பாடம் சொல்ல ஆரம்பிச்சிட போறாரு” இருந்த கடுப்பில் சத்யனை வாரிவிட்டு முகத்தை திருப்பி கொண்டு சென்று விட்டாள் உமா
“அவசர பட்டு வாய் பேசிட்டோமோ.. பரவலா பேசுவோம்” என்ற படி சத்யன் இருக்க
அவனுக்கு கோவம் வந்ததின் காரணம்…அந்த கடிதமா.. இல்லை அது உமாவிற்கு வந்தாள் கோவம் வந்ததா என்பது தான் அவனுக்கு புரிய வில்லை
மடியில் இருந்து கீழே வந்தவள்..நேரே தன் அறைக்கு செல்ல.. அலமாரியில் இருந்து அந்த துணி துண்டை எடுத்தவள்…
“உனக்கு லவ் லெட்டர் வராதே தப்பு.. இதுல நானே கொண்டு வந்து கொடுக்கணுமோ.. எவ்வளவு சொல்லியும் அந்த சீனியர் லாசு கையில திணிச்சு அனுப்பிடுச்சி.. இதுல அதை பார்த்ததும் தொரைக்கு அசடு வேற வழியுது…
இருக்கட்டும் இருக்கட்டும்..நானும் பார்க்குறேன்..இப்படியே இந்த லூசு கண்ணா எத்தனை நாளைக்கு நடந்துக்குறான்னு.. இதுல என்னை வேற பச்ச மிளகாய்னு சொல்லுறாரு” ஆதங்கத்தை கொட்டி தீர்த்து கொண்டு இருந்தவள் கண்ணில்.. கூலர் ஒன்று பட..அதை எடுத்து தனக்கு மாட்டி கொண்டு கண்ணாடி முன் நின்று தன்னையே அழகு பார்த்து கொண்டு இருந்தாள் உமா
அது சத்யனின் கண்ணாடி தான்.. இன்று அவன் அவளை காலேஜ்ஜில் இருந்து அழைத்து கொண்டு வீடு வரும் போது.. வண்டியில் அதை மறந்து வைத்து விட.. உமா அதை ஆசையாக அடித்து கொண்டு வந்து விட்டாள்
அதை போட்டு கொண்டு சத்யன் போல் நிற்பது நடப்பது என்று செய்து கொண்டு இருக்க..ஒரு படி மேலே சென்று அவன் பேசும் வசனம் உட்பட அவள் பேசி பார்த்து கொண்டு இருக்க…
அறை வாசலில் இருந்த படி அதை கவனித்த சிவகாமி பாட்டி… “ஹையோ ஆத்தா.. என்ன ஆச்சு என் பேதிக்கு” அலறிய படி உமாவிடம் சென்று அவளை மேலும் கீழும் ஆராய்ந்து கொண்டு இருக்க
அவரின் அலறலில் மொத்த குடும்பமும் உமாவின் அறையில் ஒன்று கூட
“என்ன அத்தை ஆச்சு.. ஏன் கத்துனீங்க?” எழில் கேட்க
“தெரியலையே.. காலைல நல்லா பள்ளிக்கூடம் போன பொண்ணு… வரும் போது பேய் அடிச்சிடுச்சி போலே” என்ற படி அவர் புலமைப்ப
“யாருக்கு.. எப்போ பேய் அடிச்சுது ஆச்சி” உமா புரியாமல் கேக்க
“உனக்கு தாண்டி பைத்திய காரி”
“என்னாது எனக்கா…ஆச்சி லூசு மாதிரி உலராத.. எனக்கு என்ன.. நான் நல்லா தானே இருக்கேன்”
“உனக்கு தெரியாது ராசாத்தி.. இப்டி கண்ணாடி முன்னாடி நின்னு தானா பேசுறது.. கிறுக்கு பிடிச்ச படி பேசுறது எல்லாம் பேய் பிடிச்சா தான் பண்ணுவாங்க.. அந்த வடக்கு தெரு ராமசாமி பொண்ணும் இப்டி தான் பண்ணுச்சு..நீ வா என் கூட” உமாவை இழுத்து செல்ல.. மொத்த குடும்பமும் பூஜை அறையில் கூடியது
உமாவின் அருகில் ஹரினி செல்ல முயல..”தாயி.. இவ பக்கத்துல வராதமா.. உனையும் பேய் பிடிச்சிக்கும்” சிவகாமி பாட்டி எச்சரிக்க
அதில் மேலும் கடுப்பான உமாவை பார்க்க அங்கு இருப்பவர் அனைவர்க்கும் சிரிப்பு வர…
“இதுக்கு தான்.. கிறுக்கு தனம் பண்ணாம அமைதியா இருன்னு சொல்லுறது.. கேட்டா தானே.. இப்போ பாரு பேய் விரட்டுறேன்னு பழுக்க காய்ச்சின கம்பியால உன் தொடைக்கு ரெண்டு சூடு போட போறாங்க” என்ற படை ஜனா அவளை பயமுறுத்த
“என்னடா சொல்லுற.. தொடைல மட்டுமா போடுவாங்க.. வாயில கூட தானே போடுங்க” என்றான் சத்யன் அவன் பங்கிற்கு அவளை பயமுறுத்த
அதை கேட்டு கொண்டு இருந்தவள்.. “ஹய்யையோ.. வாயிலாய.. அப்றம் எப்படி நான் சாப்பிடுறது” என்றாள் எதோ அது தான் முக்கியம் என்பது போல
அதில் ஜனாவும், சத்யனும் தலையில் அடித்து கொள்ள.. ஹரினி சிரித்த படி… “தேவையா உங்க ரெண்டு பேருக்கும்.. இப்போ நீங்க மொக்க வாங்குனது தான் மிச்சம்”
எதற்கோ பூஜை அறையில் இருந்து சின்ன இரும்பு கம்பியுடன் சிவகாமி பாட்டி வர…
ஹய்யையோ.. கொலைகார குடும்பம்..எனக்கு சோறு போடாம கொள்ள பண்ண முயற்சி பன்றாங்க.. யாராவது காப்பாத்துங்க என்ற படி எதிரில் இருக்கும் ஸ்ரீஜாவின் வீட்டிற்கு ஓடி விட..
“எதுக்கு இவ இப்டி ஓடுறாரா.. என்ன ஆச்சு” என்ற படி எழில் விசாரிக்க
நடந்ததை கூறினாள் ஹரினி…அதில் அனைவர்க்கும் சிரிப்பு வந்து.. பின் அவர் அவர் வேலைக்கு சென்று விட
விஸ்வநாதன் மட்டும் எதோ யோசனையில் நின்று கொண்டு இருக்க…அதை கவனித்த சாரதா
“என்னங்க.. என்ன ஆச்சு.. என்ன யோசனை உங்களுக்கு?”
“இங்க வந்த அப்றம் சத்யன் குணத்துல மாறுதல் தெரியுது இல்ல..கோவம் போய் பழைய குறும்பு தனம் அவன் கிட்ட மறுபடியும் வர ஆரம்பிச்சி இருக்கு” என்ற படி அவர் பேச
“எல்லாம் அந்த எல்லை அம்மனோட அருள் தாங்க..அவ தான் என் புள்ளைக்கு நல்ல வழியை காட்டணும்” கை கூப்பி சாராத வணங்கிய படியே பேச
“அடி போடி பைத்திய காரி.. இது எல்லை அம்மனோட வேலை இல்லடி… இந்த வீட்டு சேட்டையம்மனோட வேலை” என்ற படி புன் முறுவலிட… புரியவில்லை என்றாலும் கேட்டு கொண்டார் சாரதா
இரவு உணவிற்கு சரியாக வந்தாள் உமா.. வந்தவள் நேரே சமையல் அறை போக..அங்கு ஏற்கனவே தண்ணீர் குடித்து கொண்டு இருந்த சத்யனை கண்டவள்.. முகத்தை திருப்பி கொண்டு உணவு எடுத்து கொண்டு இருக்க
“என்ன பச்ச மிளகா..உர்ர்ர்னு இருக்க”
“நான் உங்க பேச்சு டூ..போங்க.. அந்த ஜனா தடிமாடு கிட்டயு டூ.. ரெண்டு பேரும் சேர்ந்து என்னை ஓட வெச்சிடீங்க இல்ல…உங்க ரெண்டு பேரையும் பார்த்துக்குறேன்” என்றபடி அவள் முகம் சுழித்து கொள்ள
அவளின் இந்த குழந்தை தனத்தை ரசிக்க தவற வில்லை சத்யன்…எதோ அந்த நிமிடத்தை கடக்க விடாமல்..அவளையே ரசிக்க தோன்றியது அவனின் மனதிற்கு..அவனின் மன ஆசையை கெடுக்கும் வகையில் அலறியது வீட்டின் லேண்ட்லைன்
அதை எடுக்க எத்தனித்த உமாவை தடுத்தவன்.. அவனே சென்று எடுத்து பேசினான்…
பேசியவனின் குரல் போக போக இறுகி கொண்டே போக.. ஏதோ சரி இல்லை என்றே தோன்றியது உமாவிற்கு
அழைப்பை வைத்தவனிடம் வந்தவள் “யாரு பேசுனது.. என்ன விஷயம்?” என்று கேட்க
“யார் கிட்டயும் சொல்லிடாத.. நான் வந்து சொல்லுறேன்” என்ற படி அவன் எங்கோ புறப்பட்டு சென்று விட
“இந்த கண்ணன் என்ன லூசா.. அடிச்சி கேப்பாங்க அப்பயும் சொல்லிடாதன்ற மாதிரி சொல்லிட்டு போகுறாங்க..மொதல்ல விஷயத்தை எனக்கு சொல்லிட்டு போயா” என்ற படி அவன் சென்ற பிறகும் வாசலையே பார்த்து கொண்டு இருந்தாள் உமா
எதோ மனதில் பிசைவது போன்றும்…அழுத்துவது போன்றும்.. அழ வேண்டும் போன்ற துக்கம் தொண்டையை அடைப்பது போன்றும் அவளுக்கு உணர்வுகள் மாறி மாறி வர
முற்றத்தில் அமர்ந்த படி.. உணவையும் விடுத்து யோசனையில் மூழ்கி இருந்தாள் உமா
அவளின் யோசனையை கலைக்கும் படி சதயனின் ஜீப் வந்து நிற்க…அப்பட வந்து விட்டான் என்ற படி அவள் வாசலிற்கு ஓட
சத்யனுடன் கை கோர்த்த படி வந்து கொண்டு இருக்கும் நபரை பார்த்தவளுக்கு உலகமே சுற்றி… மூச்சும் திணற.. பேச்சு வராமல்…விக்கித்து போய் கண்ணில் இரு துளி கண்ணீருடன் நின்றவள் மனதில் வந்தது ஒரே எண்ணம் தான்
“கண்ணனின் ருக்மணி நான் இல்லையா?” என்பதே
காற்று வீசும்…..