விக்ரம் உச்சகட்ட கோபத்தில் அவளை அறைந்தான். மிருணா பெட்டில் விழுந்தாள். ” என்னையப் பாத்தாப் பொறுக்கி மாதிரி தெரிதாடி?? அந்த சிவாவையும் என்னையும் சேர்த்து வச்சுப் பேசுற”, என்றான் ஆத்திரமாகி அவள் மேல் கையைப் பிடித்து எழுப்பி. மிருணா பயத்துடன் பார்த்தாள்.
“எப்படி உன்னால இப்படி பேச முடிஞ்சது?? என் காதல் உனக்கு ஒரு இடத்தில் கூட தெரியலையா?? நீ எதனால ஆறுதலுக்கு என்னையத் தேடுற?? என் அணைப்பு அந்த சமயத்துல வேணும்னு ஏன் நினைக்கிற?? நான் தொட்டா ஏன் உருகிப் போய் தடுக்காம இருக்க?? ஏன்டா?? ஏன்???”, என்று அவள் இரு தோள்களில் கையை வைத்து ஆட்டினான்.
“என் பார்வையில தெரியலையா?? என் அணைப்புல தெரியலையா?? என் முத்தத்துலக் கூடத் தெரியலையா?? என் காதல், என் காதலையும் புரிஞ்சுக்கல உன் காதலையும் நீ உணரல, என் காதலச் சொல்லாமப் புரிஞ்சுப்பன்னு நினைச்சேன், இப்பச் சொல்லியும் புரியாமதானே நிக்கிற??”, என்றான் வேதனையுடன் அவள் இரு தோளில் இருந்து கையை எடுத்து.
“என்கிட்டப் பேசாத “, என்று பாத்ரூமிற்குச் சென்றான்.
மிருணா அழுகையுடன் அவனுக்காகக் காத்துகொண்டு இருந்தாள். அவளைக் கண்டுகொள்ளாமல் வந்து படுத்தான். “மனு!! பிளிஸ்!! என்னைய மன்னிச்சிடு, நீ லவ்வ சொல்லல, கல்யாணத்துக்கு சம்மதம் வாங்கல, இதுல என்னைய கைதி அது இதுன்னு பேசிட்ட, அந்தக் கோவத்துலதான் அப்படி பேசிட்டேன், சாரி மனு!!”, என்றாள் அழுகையுடன். விக்ரமிடம் இருந்து எந்த அசைவும் தெரியவில்லை.
மறுபக்கம் வந்து படுத்து அழுது கொண்டே, ” மனு!! பிளிஸ்!!! பேசு! அப்பா அம்மா இல்லாமக் கல்யாணம் பண்ணுனது எனக்குப் பிடிக்கல”, என்றாள் திரும்பி அவனைப் பார்த்து. விக்ரம் அமைதியாகக் கண்ணை மூடி இருந்தான். அவனைப் பார்த்தபடி அழுதுகொண்டே தூங்க ஆரம்பித்தாள். விக்ரம் சிறிது நேரத்தில் அவளை இழுத்து அணைத்துக் கொண்டு தூங்க ஆரம்பித்தான். மிருணா சிரிப்புடன் தூங்கினாள்.
காலையில் விக்ரம் எழும்போது மிருணா அவன் மேல் கால் போட்டு அவன் மார்பில் படுத்துத் தூங்கிக்கொண்டு இருந்தாள். ‘ ஏன்டி நேத்து அப்படி பேசுன?? ‘, என்று மனதில் வருந்தி அவள் தலைமுடியைக் கோதிவிட்டான். சிறிது நேரம் அப்படியே இருந்தவன் எழுவதற்காக அவள் தலையைத் தூக்கினான். மிருணா தூக்கம் லேசாகக் களைந்து, ” என்ன மனு?? நைட் தான் தூங்க விடல, இப்பவும் ஏன் இப்படி பண்ற??”, என்று மீண்டும் படுத்துக் கொண்டாள்.
“ஏய்!! நீ தூங்கு, நா போறேன்”.
“முடியாது”, என்று அவன் மார்பில் புதைந்தாள்.
விக்ரம் அவனைக் கட்டுப்படுத்தப் பெரும்பாடு பட்டான். விக்ரம் அவளை வேகமாகக் கீழே படுக்க வைத்து விட்டு எழுந்து சென்றான். மிருணா கோபமாக எழுந்து வந்து பாத்ரூம் கதவு முன்னால் நின்றாள். விக்ரம் வெளியே வரும் போது லேசான அதிர்ச்சியுடன் அவளைப் பார்த்துவிட்டு விலகிச் செல்லப் போனான்.
“சரி!! விடு! எல்லாம் சரியாகிடும், இதுல புடவ இருக்கு, அம்மா இதக் கட்டிட்டு வரச் சொன்னாங்க”, என்று தந்துவிட்டுச் சென்றாள்.
சிறிது நேரத்தில் மிருணா பிங்க் வண்ண டிசைனர் புடவையில் லேசான ஒப்பனையுடன் கீழே இறங்கி வந்தாள். விக்ரம் ராகவிடம் பேசிக் கொண்டிருந்தவன் இவளைப் பார்த்ததும் பேச்சை நிறுத்திவிட்டு அவளையே..!! பார்த்தான். அவன் பக்கத்தில் வந்து புருவம் உயர்த்தி, “மாமா!! எப்படி இருக்கேன்??”, என்றாள் தலைசாய்த்து.
விக்ரம் வந்தச் சிரிப்பை அடக்கிக் கொண்டு தன் உணர்வைக் கட்டுப்படுத்தி கொண்டு, ” வேலையப் பாரு, ராகவ்!! வா!! சாப்பிடலாம்”, என்று பொய்யான கோபத்துடன் டைனிங் டேபிளுக்குச் சென்றான்.
“நா சொல்லலாம்னு நினைச்சேன் கவியே கால் பண்ணிட்டாளா”, என்றார் கோதை சிரிப்புடன்.
“விக்ரம்!! மிருணா!! எக்ஸ்.எக்ஸ் கோவிலுக்குப் போயிட்டு வாங்க ரெண்டு பேரும்”, என்றார் மீனாட்சி.
“அம்மா!! எனக்கு வேல இருக்கு, அவ மட்டும் போயிட்டு வரட்டும் “.
“விக்ரம்!! சேர்ந்து போயிட்டு வாங்க, அதுவுமில்லாம இவ எப்படி தனியா போவா?? அவளுக்கு ஆபத்து இருக்குன்னு தெரிஞ்சும் எப்படி அனுப்புறது “, என்றார் வாணி லேசான முறைப்புடன்.
“யாரும் போக வேண்டாம், மிருணா மட்டும் போகட்டும்”, என்றான் அழுத்தமாக.
“மிருணா!! நா உன் கூட வரேன், நாம சாப்பிட்டுப் போலாம்”, என்றாள் சங்கவி.
“சங்கவி!!”, என்றனர் ராகவ் மற்றும் விக்ரம் கோரசாக.
“அத்தான்!! போதும்!! நானும் சிபிஐ யோட வருங்கால பொண்டாட்டி தான், எனக்கும் தைரியம்லா இருக்கு, என்னைப் போக விடுங்க”, என்றாள் அழுத்தமாக.
ராகவ் விக்ரமைப் பார்த்தான். “சரி!!”. என்றனர்.
மிருணாவும் சங்கவியும் கிளம்பினர். “மிருணா!! இந்தக் கோவிலுக்கு எப்படி போகணும்னு உனக்குத் தெரியுமா?? நம்ம வீட்ல இருந்து மேலே ஏறி கொஞ்ச தூரம் போகணும், ஒரு ரோடு வரும், அங்கிருந்து பாதி தூரம் நடந்து போனா கோவில் வரும்”.
“அப்ப கார்லப் போக முடியாதாடி??”.
“நடந்துதான் போக முடியும், அங்க ஆள் நடமாட்டம் அதிகமா இருக்காது”, என்று இருவரும் பேசிக்கொண்டே சென்றனர்.
ரோட்டில் ஏறி, பாதி தூரம் நடந்து சென்றதும் சிவாவின் ஆட்கள் இவர்களைச் சுற்றி வளைத்தனர். இருவரும் அதிர்ச்சியோடு நின்றனர். சிவா மிருணாவைப் பார்த்ததும் அதிர்ந்து, ” ஏய்!! அந்த சிபிஐ சொன்ன மாதிரி உன் கழுத்துல தாலி கட்டிட்டானா?? பரவால்ல அந்தத் தாலியை அத்துட்டு உன் கழுத்துல நா கட்டுவேன் டி, உன்ன விடமாட்டேன்”, என்றான் ஆக்ரோஷமாக.
மிருணா மற்றும் சங்கவியின் பக்கத்தில் நின்ற ஐந்து பேரை எங்கிருந்தோ வந்தத் துப்பாக்கிக் குண்டு பட்டுக் கீழே விழுந்தனர். பெண்கள் இருவரும் அதிர்ச்சியோடு திரும்பிப் பார்த்தனர். பின்னால் விக்ரம், ராகவ் ,முகில் இன்னும் ஐந்து பேர் நின்றனர்.
குரு காரிலிருந்து இறங்கி விக்ரமின் ஆட்கள் ஒருவனைக் கீழே தள்ளிவிட்டு சிவாவின் பக்கத்தில் வந்து நின்று, ” என்ன டா?? சுத்தி வளச்சுட்டோம்னு மிதப்புல இருக்கிங்களா ??”, என்றான் நக்கலாகத் துப்பாக்கியை வெளியே எடுத்து. பெண்கள் இருவரும் அதிர்ந்தனர்.
“இப்பக் கூட கொழுப்பு குறையல பாத்தியா?? அப்படியேதான் இருக்கு”, என்றான் ராகவ் நக்கலாக.
“சிவா!! கடைசியா உனக்கு ஒரு வாய்ப்புத் தரேன், உனக்குத் தெரிஞ்ச பெரிய ஆளுங்ககிட்ட போன் பண்ணிப் பேசு “, என்றான் விக்ரம் நக்கலாக.
சிவா போன் செய்து பேசிய அனைத்து நபர்களும் சொன்ன ஒரே பதில், “நாங்களே பதவியில இல்ல, எங்க கிட்ட கேக்குற?? உன் சகவாசத்துனால தான் இப்படி இருக்கோம்”, என்று திட்டிவிட்டு வைத்தனர்.
“என்ன சிவா?? ஒருத்தனும் பதவியில இல்லையா?? நா சொன்ன மாதிரி ஜெயிச்சுட்டேன், இவ என் பொண்டாட்டி”, என்றான் அவள் தோளில் உரிமையாகக் கைப்போட்டு.
“டேய்!! உன்ன… சும்மா விடமாட்டேன்..”, என்று கத்தியை எடுத்துக் குத்த வந்தான். விக்ரம் மிருணாவிடம் இருந்து விலகினான். ராகவ் சிவாவைப் பிடித்துக் கீழே தள்ளி விட்டான்.
“குரு!! எல்லாத்தையும் சுட்டுத் தள்ளு டா”, என்று கத்தினான். அதில் சுய உணர்வு வந்த சங்கவி, “ராம்!!”, என்று கத்திக்கொண்டே பக்கத்தில் போனாள். சிவா வேகமாக எழுந்து சங்கவியின் கழுத்தில் கத்தியை வைத்தான்.
“அப்ப நீ வா”, என்றான் வெற்றிச் சிரிப்புடன். சங்கவி பயத்துடன் பார்த்தாள்.
மிருணா முன்னால் போகப் போனாள். விக்ரம் அவள் கையைப் பிடித்து தடுத்தான்,” எனக்கு என் உயிர விட உங்க எல்லோரோட உயிர்தான் முக்கியம்”, என்று செல்லப் போனாள்.
அவள் கையைப் பிடித்து இழுத்து, “டேய்!! ராமகுரு!! சிவாவோட கையச் சுடு டா!!”, என்று விக்ரம் கத்தினான்.
குரு சிவாவின் கையைச் சுட்டான், கத்தியையும் சங்கவியும் வலியில் விட்டான். குரு என்ற ராமகுரு சங்கவியைத் தன் பக்கம் இழுத்து அணைத்தான்.
“ராம்!! “, என்றாள் அழுகையுடன் அவனைப் பார்த்து.
“அடியே!! பயந்தாங்கோளி!! அழாத, அதான் வந்துட்டேன்ல”, என்று கண்ணீரைத் துடைத்து விட்டான்.
“டேய்!! குரு!! என்னைய எதுக்கு டா சுட்ட??”, என்றான் ஆத்திரமாக.
“ஏன்னா நா ஒரு சிபிஐ! இவ என் காதலி, விக்ரம் அண்ணா சொல்றதுக்காகத் தான் வெயிட் பண்ணுனேன், சொல்லிட்டாரு, ஆனா உன் கையில ஏன் சுடச் சொன்னாருன்னு தெரியல??”, என்றான் யோசனையுடன் விக்ரமைப் பார்த்து.
“பாவம்டா!! சாகப்போறப்பயாச்சும் அவனச் சுத்தி நடக்குறத தெரிஞ்சுக்கிட்டும், சிவா!! இது ஒரு சதுரங்க விளையாட்டு மாதிரி, எதிரிய அவன் கூட்டத்துக்குள்ளயே போய், ஒரு ஆளா நின்னு அழிக்கிறது”, என்றான் சிரிப்புடன்.
“என்ன சிவா புரியலையா?? இந்த குரு யாருன்னு நினச்ச?? எங்க தம்பி ராமகுரு, ரெண்டு வருஷத்துக்கு மேல உன் இடத்துலயே உனக்கு வலது கை இடது கையா இருந்தவன்”, என்றான் ராகவ் நக்கலாக.
“அண்ணா!! இவனுக்கு இன்னும் புரியலை போல, உன்ன சுட வந்த ஆள செட் பண்ணுனதே நா தான், என் உயிரக் கொடுத்து உன்னக் காப்பாத்துற மாதிரி நடிச்சேன், நீயும் எங்க வலையில வசமா சிக்கிக் கிட்ட, என் ஃபர்ஸ்ட் கேஸ் நீதான், என்னையத் தான் யாருக்கும் தெரியாதே, அதான் ஈஸியா உன் கூட்டத்துலச் சேர்ந்துட்டேன்”.
“துரோகி!! கூடவே இருந்து குழி பறிச்சுட்டியே!! டா”, என்றான் ஆத்திரமாக.
“என்ன சிவா பண்றது?? நீ உத்தமனா இருந்தா பரவால்ல, நீயே மகாபாவி, உன்கிட்ட உத்தமனா இருக்க முடியுமா??”, என்றான் நக்கலாக.
“டேய்!! முதல்ல இவங்க எல்லாத்தையும் சுட்டு தள்ளுங்கடா”, என்றான் அவன் ஆட்களிடம்.
“அண்ணே!! முடியாது”, என்றான் வீரைய்யா.
“ஏன்டா???”, என்றான் கோவமாக.
“இவங்க எங்களுக்குச் சாப்பாடு கொடுத்து எங்கள கௌரவமா வச்சுருந்தாங்க”, என்றான் கனகு.
“இப்பக்கூட அவங்க எஸ்டேட்ல எங்களுக்கு வேலைப் போட்டுக் கொடுத்து இருக்காங்க”, என்றான் முத்து.
“டேய்!!! உங்கள.. “, என்று கர்ஜித்தான்.
“சிவா!! உனக்கு ஜெயிக்க நிறைய வாய்ப்புக் கொடுத்தேன், மிருணாவத் தொரத்துனதாச் சொல்லி நாலு பேரு உன் கிட்ட முதல்ல வந்தாங்க, அடுத்தக் கொஞ்ச நாள்ல இன்னும் நாலு பேரு வந்து நானும் ராகவ் தான் மிருணாக்கு ஹெல்ப் பண்ணுனோம்னு சொன்னாங்க, அப்பவே நீ யோசிச்சுருந்தா குரு என் ஆளுனு தெரிஞ்சிருக்கும், நீ என்னைய அழிக்கணும்னு வெறியில இருந்த, அதான் கண்டுபிடிக்க முடியல, இங்க சுத்தி இருக்குற எல்லாருமே எங்க ஆளுங்கதான், என்னடா உன் ஆள காணோம்னு யோசிக்கிறியா?? அவங்க எல்லாத்தையும் நேத்து நைட்டே மண்ணுக்குள்ள அனுப்பியாச்சு, இனிமே உன்னால ஒண்ணும் பண்ண முடியாது”, என்றான் சிரிப்புடன்.
“நான் எப்போதுமே அண்ணே!! அண்ணே!!னு சொன்னத உன்னனு நினைச்சுகாத, நா சொன்னது எங்க அண்ணன”, என்றான் குரு சிரிப்புடன்.
“டேய்!! உங்கள எல்லாம் சும்மா விட மாட்டேன் டா, எப்ப இந்த மிருணா பின்னாடி போக ஆரம்பிச்சனோ.. அப்ப இருந்து எனக்குப் பிரச்சனைதான், எனக்கு மட்டும் தான் மிருணா, நா இல்லனா அவளும் இருக்கக் கூடாது”, என்று அசந்த நேரத்தில் ராமின் கையில் இருந்தத் துப்பாக்கியைத் தட்டிவிட்டு அதைப் பிடித்து மிருணாவைப் பார்த்துத் துப்பாக்கியை நீட்டினான்.
“ஹேய்!!!”, என்று அனைவரும் அதிர்ந்தனர். மிருணா பயப்படாமல் அப்படியே நின்றாள்.
“நீ உயிரோடவே இருக்கக் கூடாது”, என்று துப்பாக்கியை அழுத்தினான். விக்ரம் மிருணாவை வேகமாக பக்கத்தில் இழுத்தான். குண்டு பின்னால் இருந்த மரத்தில் பட்டது. பாக்கெட்டில் இருந்தத் துப்பாக்கியை எடுத்து சிவாவைச் சுட்டான்.
ராகவ் மற்றும் முகில் சுட ஆரம்பித்தனர். சிவா அப்படியே கீழே விழுந்து மடிந்தான். ” டிஸ்போஸ் பண்ணுங்க”, என்று ஆணையிட்டான்.
ராகவ். சிவாவை எடுத்துச் சென்றனர். முகில், ராகவ், ராம்,சங்கவி, விக்ரம்,மிருணா மட்டுமே அங்கு இருந்தனர்.
“அடியே!! என்னடி பயப்படாம அப்படியே நிக்கிற?? “, என்றான் விக்ரம் ஆச்சரியமாக.
“அண்ணி!! விக்கி அண்ணா தான் பிளான் போட்டான், அப்பவும், வேணா! அண்ணி பயந்துருவாங்கனு சொன்னேன்”, என்றான் ராம் வேகமாக.
“மிருணா!! நானும் சொன்னேன், உன் புருஷன்தான் அவள என்கிட்ட இருந்து பிரிக்க முடியாது அப்படி இப்படின்னு வசனம் பேசுனாரு”, என்று முகில் வேகமாகப் போட்டுக் கொடுத்தான்.
“ம்ம்.. எல்லாம் உன் தங்கச்சியால தான், படிக்கணும், படிப்பு முடிஞ்சதுக்கு அப்புறம் தான் கல்யாணம் பண்ணுவேன்னு சொல்லிட்டா”.
“போடா!! லூசு!! அவ படிக்கணும், தொல்லப் பண்ணாத”, என்று முகிலின் முதுகில் அடித்தாள்.
“உன் புருஷன அடி முதல்ல, மறந்துட்டியா?? உன்ன வச்சுப் பிளான் போட்டிருக்காரு, நாங்க போறோம்”, என்று நினைவுப்படுத்தி விட்டு மற்ற மூவரையும் அழைத்துக் கொண்டு வீட்டிற்குச் சென்றான்.
மிருணா விக்ரமை முறைத்தாள். “மிரு!! சாரி டி!! அடிச்சுட்டேன், உன் மனசுல என்ன இருக்குன்னு தெரியாம நடந்துகிட்டேன்”, என்றான் வருத்தமாக அவள் கன்னத்தை வருடி.
“இல்ல மனு!! என் மேலேயும் தப்பு இருக்கு, என் லவ்வ உணரவைக்க எல்லாரும் என்கிட்ட பேசுனாங்க, நா தான் புரிஞ்சுக்காம சண்டப்போட்டுட்டேன், உன்னையும் கஷ்டபடுத்திட்டேன்”, என்றாள் வருத்தமாக.
“என் மேலேயும் தப்பு இருக்கு, நீ புரிஞ்சுப்பன்னு சொல்லி உன்கிட்ட என் காதலச் சொல்லவே இல்ல, காதல்ல ஈகோ வரக்கூடாது, என் ஈகோ மத்தவங்க காதலைச் சொல்லச் சொல்லியும் தடுத்துருச்சு மிரு, உன்ன நா முதல் முதல்ல ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி ஒரு ஷாப்பிங் மாலில் தான் பார்த்தேன், உன் ஃப்ரெண்ட் சுதா கூட வந்திருந்த, உன்னப் பத்தித் தெரிஞ்சுக்கணும்னு ஃபாலோ பண்ணி வரத்துக்குள்ள மிஸ் பண்ணிட்டேன், அப்புறம் அமரோட ஸ்டேட்டஸ்ல தான் உன்னப் பார்த்தேன், போட்டோ கேரளாவுல எடுத்த மாதிரி இருந்தது, அமர் கிட்ட விசாரிச்சதுல கேரளால இருக்கன்னு தெரிஞ்சதும், உன்ன பத்தி உடனே டீடைல்ஸ் எல்லாத்தையும் கலெக்ட் பண்ணுனேன், வேணும்னு தான் உன் காலேஜ் பஸ்ல கார் ரிப்பேர்னு ஏறுனேன் , நீ கேரளால இருக்குற வரைக்கும் உன்னத்தான் சுத்தி வந்தேன், அப்புறம் சிவாவப் பத்தி கலெக்ட் பண்றப்ப சுதா கல்யாணத்துல மறுபடியும் உன்னப் பார்த்தேன், அதுக்கு அப்புறம் நடந்தது தான் உனக்குத் தெரியுமே!!”, என்றான் சிரிப்புடன்.
“அதுக்கு ஏன் ஃபீல் பண்ற?? இப்படி ஒரு உம்மா கொடுத்தா எல்லாம் சரியாப் போயிடும்”, என்று கன்னத்தில் முத்தமிட்டான்.
“மனு!! இது ரோடு”, என்றாள் வெட்கத்துடன்.
“யாரும் வர மாட்டாங்க டி, இப்பச் சொல்லு, என் காதல நம்ம காதலை ஏத்துப்பியா?? ஜென்ம ஜென்மமாய் தொடரும் பந்தத்தில் என் மனம் என்னும் சிறையில் இந்த காவலனின் காதல் கைதியாக வருவாயா???”, என்றான் காதலுடன் அவள் முகத்தைக் கையில் ஏந்தி.
“என் காவலனின் கைதியாக விரும்பியே சிறைபடுகிறேன் மனு!! லவ் யூ”, என்றாள் அவன் மார்பில் புதைந்து.
“லவ் யூ லாட் மிரு”, என்று சத்தமாகக் கத்திக்கொண்டே அவளைத் தூக்கிச் சுத்தினான்.
காதல் பெரிதா?? ஈகோ பெரிதா?? என ஓர் நிமிடம் யோசித்தாலே போதும், வாழ்வில் எந்தப் பிரச்சனையும் வராது. இனி இந்தக் காவலனின் கைதி என்றும் மகிழ்ச்சியோடு அவர்கள் வாழ்க்கையைத் தொடருவார்கள். நாமும் விடை பெறுவோம்….