சரண் – 23
என்னை வெல்ல இங்கு யாரும் இல்லை
என்ற எண்ணத்தில் நான் இருந்தேன்
இன்று உன்னைப் பார்த்தவுடன் என்னைத் தோற்றுவிட்டு
வெட்கத்தில் தலை குனிந்தேன்
அன்பே ஓர் நிமிடம் உன்னை மறந்திருக்க
என்னாலே முடியவில்லை
இங்கு எந்தன் நாள் முழுக்க உன்னை நினைத்திருக்க
ஒரு போதும் அலுக்கவில்லை
சின்ன சின்னக் கூத்து நீ செய்யிறத பார்த்து
உள்ளுக்குள்ளே நான் சிரித்தேன்
வண்ண வண்ணப் பாதம் நீ வச்சி வச்சி போகும்
அந்த தரையாய் நான் இருப்பேன்
கவலைகள் மறக்குதே கவிதைகள் பிறக்குதே
உன்னருகே நான் இருந்தால்
தினம் உன்னருகில் நான் இருந்தால்
“என்னம்மா அமைதியா இருக்க, நாங்க பேசுறது உனக்கு புரியலையா..? இல்லை விருப்பம் இல்லயா..? அமைதியாக நின்றிருந்த அரூபியைப் பார்த்துக் கேட்டான் வெற்றி.
அன்று மங்கையிடம் புகழை வேண்டாம் என்று சொன்னதிலிருந்து, கிடைக்கும் நேரங்களில் எல்லாம் இப்படித்தான் பேசி அவள் மனதைக் கரைக்க முயல்கிறார்கள் இருவரும். அவளோ நழுவிக்கொண்டே இருக்கிறாள்.
“இல்ல.. இல்ல அப்படியெல்லாம் இல்ல. ஆனா நான் எப்படி சொல்றது. என்னைச் சுத்தி என்ன நடக்குதுன்னே புரியல. எல்லாமே ரொம்ப வேகமா நடக்குற மாதிரி, எனக்குப் பயமா இருக்கு. தாத்தா, எங்க சனம் எல்லாம் என்ன சொல்லுவாங்க தெரியல. நீங்க செய்றது உதவியெல்லாம் கடவுளே கீழ வந்து செய்ற மாதிரிதான் இருக்கு. ஆனா..” எனத் திக்கித் தினறியவளின் தோளில் கையைப் போட்ட மங்கை,
“இங்க பாரு அபி, உனக்கு புகழ் மாமாவைப் பிடிச்சிருக்குத் தான. அவருக்காக நீ செய்ய மாட்டியா, அவர் உனக்கு வேண்டாமா..” என பாவமாகக் கேட்க,
“ஷட் அப் வனி.. நாம என்ன பேசிட்டு இருக்கோம், நீ என்ன சொல்லிட்டு இருக்க.. இங்க ஏன் புகழ் பத்தி பேசுற, அவளுக்கு விருப்பம் இல்லன்னா கம்பல் செய்யக்கூடாது. காதல் கட்டாயப்படுத்தி வரக்கூடாது. புரிஞ்சிக்கோ. நீ அவளை, அவளோட உணர்வுகளை மதிக்கனும். நடக்கப் போறதுக்கான நிகழ்வுகளோட சாதக பாதகங்களை எல்லாம் யோசிச்சு முடிவெடுக்குறா. அதைத் தடுக்காதே..” எனக் காட்டமாகப் பேச,
“இல்ல மாமா அது..” என தினறியவளை, “நீ எதுவும் பேசக்கூடாதுன்னு சொல்லித்தான் உன்னை இங்க கூப்பிட்டு வந்தேன். அமைதியா உட்காரு. முடியாதுன்னா உன் ப்ரண்ட்ஸ் கூட போய் வேலையைப் பாரு..” என அதட்ட,
“ப்போடா..” என உதட்டை அசைத்தவள் கைகளைக் கட்டி வாயில் விரலை வைத்து ஓரமாக உட்கார்ந்து கொண்டு இருவரையும் மாறி மாறி பார்த்தாள்.
மனைவியின் செயலில் பொங்கிய சிரிப்பை உதட்டுக்குள்ளே அதக்கியவன், அவளைக் கண்டுகொள்ளாமல் மீண்டும் அரூபியைப் பார்க்க அவள் முகத்தில் இருந்த கலக்கத்தின் சாயல் சற்றும் குறையவில்லை.
பெண்ணின் முகத்தில் தெரிந்த தவிப்பில் “என்னம்மா உன்னோட விருப்பம் இல்லாம ஒன்னும் நடக்காது..” என ஆறுதல் சொல்ல,
‘ஆமா ஆமா என்னோட் விருப்பம் தான் இங்க நடக்குறமாதிரி. புருஷனும் பொண்டாட்டியும் என்னமா பேசுறாங்க. இவங்க பேச்சில மயங்கி நானே சரின்னு சொல்லிடுவேன் போலயே.. ஊகும் கூடாதுடா சாமி, முதல்ல எதையாச்சும் சொல்லி சமாளிக்கனும் என உறுதி எடுத்தவள், வெற்றியைப் பார்த்து,
“இல்ல எனக்கு.. எனக்கு அவுகளைப் பிடிக்கும். அவுகளை மட்டும் தான் பிடிக்கும். ஆனா நான் மலைச்சாதிப் பொண்ணு. நீங்க ரொம்ப ரொம்ப பெரிய இடம். இந்தக் காடுதான் எனக்குத் தெரிஞ்ச என்னோட உலகம். இதைத் தாண்டினா என்ன இருக்கு..? அங்க என்ன நடக்கும்..? எதுவும் தெரியாது. நான் எப்படி உங்க குடும்பத்துக்கு சரியாவேன். எந்த வகையிலும் ஒத்துப் போக மாட்டேன்.” என்றவள், பின் அங்கிருந்த மங்கையைக் காட்டி
“இவுக எப்படி இருக்காக, இவுகள மாதிரி ஒரு பொண்ணைப் பார்த்து கட்டி வைங்க உங்க தம்பிக்கு. அதுதான் சரி, நானெல்லாம் வேண்டாம். உங்கட தம்பி சொன்னா புரிஞ்சிக்குவாக.. நீங்க சொல்லுங்க..” என்றவளைப் பார்த்து ஆயாசாமாக வந்தது வெற்றிக்கு.
வந்த நாளில் இருந்து நேரடியாகவும்,பின் மறைமுகமாகவும் எனப் பலமுறை பலவாறாக கேட்டும் அவள் தன்னிலையில் இருந்து இறங்கி வரவே இல்லை. கிடைக்கும் சமயங்களில் எல்லாம் பேசி பார்க்கிறான். ஒருவாராக இளகி வருபவள் பின் மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏரி உச்சியில் அமர்வது போல, ‘வேண்டாம்’ என பிடிவாதம் பிடிக்கிறாள். இவளை என்னதான் செய்வது என அவன் யோசிக்க,
“நீ எங்க புகழ் மாமாவை சன்னியாசம் வாங்கி சாமியாரா அனுப்பாம விடமாட்ட போள..” என எரிச்சல் பட.
“ஷட் அப் வனி.. ஐ செட் ஜஸ்ட் ஷட் அப்..” என்றக் கணவனை உறுத்து விழித்தவள், உங்களூக்கு இந்த டைலாக் விட்டா வேறத் தெரியாதா..? எப்ப பாரு ஷட்டப் ஷட்டப்ன்னு சொல்லிட்டு. இப்ப நீங்க ஷட்டப் ஓகே.. கிளிப்பிள்ளைக்கு சொல்ற மாதிரி சொல்லிட்டு இருக்கோம். சரி சரின்னு மண்டையை ஆட்டிட்டு, அப்புறம் எந்தப் பேய் பிடிக்குமோ தெரியல, மறுபடியும் வேதாளம் உச்சியில ஏறி உக்காந்துடரது. என்ன எங்க மாமாவை ஏமாத்த நினைக்கிரியா..? கொன்னுடுவேன் பார்த்துக்கோ..” என ஏகத்துக்கும் எகிற, அமைதியான மங்கையின் ஆக்ரோசத்தைப் பார்த்ததும் மற்றவள் மிரண்டு போனாள்.
“வனி சும்மா இருடி.. அவ பயப்படுறா பாரு, நீயோ நானோ யார் பேசினாலும் அவளுக்குப் புரியாது. உன் புகழ் மாமாவை வரச்சொல்லு. வந்து அவனே பேசட்டும். அவனாச்சு இவளாச்சு.. எனக்கு தலைவலிக்குது..” என அங்கிருந்த கல்லில் உட்கார்ந்து விட,
“என்னாச்சு மாமா, மார்னிங் வேற சாப்பிடல, நான் சொல்றேன் தான டென்சன் ஆகாதீங்கன்னு. கேட்காமா எதையாச்சும் இழுத்து வைங்க. டேப்லட் போடுறீங்கள..? கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க..” என பதற,
“இந்த மாதிரி சின்ன வியாதிக்கெல்லாமா மாத்திரை போடுவாங்க, நான் சுக்கு காப்பி போட்டு தர்ரேன். சரியாகலன்னா வேணும்னா மாத்திரை போடுங்க. தொட்டதுக்கெல்லாம் மாத்திரை எடுக்காதீங்க. அது நல்லதுக்கில்ல..” என அரூபி முன்னெடுக்க,
“ஒய் நான் டாக்டர் தெரியுமில்ல, மாத்திரை சாப்பிடக்கூடாதுன்னு என்கிட்டயே சொல்ற, என் தொழிலையே ஊத்தி மூடிருவ போல, அப்புறம் என் புகழ் மாமா ராத்திரி பகலா கஷ்டப்பட்டு கண்ணு முழிச்சு என்னை படிக்க வச்சதெல்லாம் வேஸ்டா போயிடாதா..?” என்று கிண்டல் செய்ய
“சின்ன சின்ன வியாதிக்கெல்லாமா மாத்திரை போடுவாங்களான்னு தான் கேட்டேன். தாத்தாவுக்கு கொடுத்தீங்க, நான் வேண்டாம்னு சொல்லவே இல்லையே. தலைவலியெல்லாம் ஒரு வியாதியே கிடையாது. அதத்தான் சொன்னேன்.” என பேசியபடியே அவர்களீன் குடிலின் அருகே வந்திருந்தனர்.
“நான் வீட்டுக்குப் போய் வச்சு எடுத்துட்டு வர லேட்டாகும். இங்கனவே வைக்கிறேன். குடிச்சிட்டு கொஞ்சம் தூங்கி எழுந்தா சரியாயிடும்..” என தன் மடியில் இருந்த இழைகளை எடுத்துக் கொண்டு உள்ளே செல்ல,
“இவ எப்ப மாமா இதையெல்லாம் பறிச்சிட்டு வந்தா..” என அதிசயிக்க,
“எல்லாரும் உன்னை மாதிரியே இருப்பாங்களா, வேலைன்னு வந்துட்டா எவ்வளவு பொறுப்பா இருக்கா, நீயும் இருக்கியே காளேஜ் போகவே அத்தனை ஆர்ப்பாட்டம், மகாராணி நமக்கு கொடுத்த டைம் வேற வேஸ்டா போகுதே.. இதுக்கெல்லாம் உன் புகழ் மாமாவை பழிவாங்காமா விடமாட்டேன்..” எனப் பேசிக்கொண்டே இருந்தாலும், அவனின் கைகள் இடையை வளைத்து மனைவியைத் தன் மடியில் இருத்திக்கொள்ள, உதடுகளொ அவளின் பின் கழுத்தை இதமாக உரசிக் கொண்டிருந்தது.
“எதுக்காம்.. ம்ம்ச்ச் சும்மா இருங்க மாம்ஸ், பாவம் புகழ் மாமா. அவரை ஏன் கிண்டல் செய்றீங்க. யாரோ இங்க வந்தா அப்படி இருக்க முடியாது, இப்படி இருக்க முடியாதுன்னு சொன்னாங்க. நான் கூட பயந்துட்டே இருந்தேன். ஆனா நடக்குறது எல்லாம் அதுக்கு ஆப்போசிட்டா இல்ல நடக்குது..” எனக் கணவனை சீண்டினாலும், அவனின் வருடலில் மயங்கிக் கொண்டுதான் இருந்தாள் மங்கை.
“வனி அபிக்கு கேஸ் ஸ்டவ் யூஸ் பன்றது எப்படின்னு சொல்லிக் கொடுத்துட்டியா, அவ பட்டூக்கு பர்னர ஆன் பண்ணிட்டு நின்னுட்டு இருக்கப் போறா..” என்றவனின் உடல் சிரிப்பில் குழுங்க,
அதெல்லாம் சொல்லிட்டேன், ஒருமுறை தெரியாம செய்தா, அதையே மறுபடியும் செய்வாங்களா, ஒன்ஸ் சொல்லிக் கொடுத்தா போதும் சட்டுன்னு பிடிச்சிக்கிறா, புரிஞ்சிக்கிறா. ஷார்ப் மைன்ட் மாமா, எல்லாத்தையும் உடனே பிக்கப் பண்ணிடுறா. புகழ் மாமாவை விட ஷார்ப் மாமா அபி. இவக்கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையா தான் இருக்கனும். புருஷனும் பொண்டாட்டியும் சேர்ந்து பிறகு என்னை ஓட்டுவாங்க..” என்றவளின் குரலில் அவ்வளவு அப்பாவித்தனம்.
“அட என் செல்லக்குட்டியை யாராச்சும் கிண்டல் செஞ்சா நான் விட்டுடுவேனா, நான் பார்த்துக்குறேன் குட்டிம்மா.. உன் புகழ் மாமா குடுமி என் கைல, அவன் உன்னை திட்டினா என்கிட்ட சொல்லு, கல்யாணாத்தையே நிறுத்திடுவோம்..” என்ற் கணவனின் வாயிலே ரெண்டு போட்டவள்,
“இந்த மேரேஜ் நடக்க நாம எவ்வளவு போராடிட்டு இருக்கோம். இடையில அபசகுணமா பேசிட்டு, புகழ் மாமா என்னை எங்கேயும் விட்டுக் கொடுக்க மாட்டார் தெரியுமா..? நீங்க வந்து காப்பாத்துவீங்களா, வேனும்னா சேர்ந்து கிண்டல் செய்வீங்க..” என இடையில் இருந்த அவன் கையில் கிள்ள,
“ஹா ஹா நீ அறிவாளின்னு எனக்குத் தெரியுமே வனிக்குட்டி, அதுதான் உடனே கண்டுபிடிச்சிட்ட, பாரு நீயும் அபி மாதிரி ஷார்ப் தான்..” என மேலும் மனைவியை வம்பிழுக்கிழுத்துக் கொண்டிருந்தான்.
காபியோடு வந்த அரூபி இவர்களின் நிலையைப் பார்த்து உள்ளே ஓடிவிட்டாள். உள்ளே வந்தவளுக்கு சிறிது நேரம் ஆனது இயல்பாக. சற்று ஆசுவாசமாகி ‘ச்சே புதுசா கல்யாணம் ஆனவங்கன்றதையே மறந்துட்டு நானும் அவுங்க கூட சுத்துறேன். லூசுடி அம்மாயி நீ.. இப்ப எப்படி வெளிய போக.’ எனக் கையை பிசைந்தவள், கிச்சனுக்குள் இருந்தபடியே “அக்கா..” என அழைக்க, “வா அபி” என பதில் குரல் கிடைத்ததும் தான் மூச்சே வந்தது. இருவரையும் நிமிர்ந்து பார்க்காமல் காபியை வெற்றியின் அருகில் வைத்துவிட்டு, “நான் பொறவு வாரேன்..” என ஓட்டமாக ஓடிவிட்டாள்.
“ஏன் மாமா இந்தப் பொண்ணு இப்படி ஓடுறா..” என அவளின் ஓட்டத்தைப் பார்த்து பதட்டமாக கேட்க,
“ம்ம்ம்… அவ உன்னை விட ஷார்ப் அதுதான். நமக்கு ப்ரைவேசி கொடுக்கனும்னு ஓடிருப்பா, இப்படி என் மடில உட்கார்ந்து இருந்தா ஓடாம என்ன செய்வா..” என நமுட்டுச் சிரிப்பு சிரிக்க, “உங்களை..” என அவன் தலையில் கொட்ட, அப்போது வெற்றியின் போன் அலற, எடுத்துப் பார்த்து, அவளிடம் காட்டியவன் “உன் புகழ் மாமாவுக்கு அதுக்குள்ள மூக்கு வேர்த்திடுச்சு..” என கிண்டல் செய்தவாறே போனைக் காதுக்கு கொடுத்தான்.
“சொல்லுடா.. எப்படி இருக்க.. வீட்ல எல்லாரும் எப்படி இருக்காங்க..” எனக் கேள்விகளை அடுக்க,
“ம்ம்.. எல்லாரும் ஃபைன் தான். பட் எனக்குத்தான் ஒரு டவுட். நீ எனக்கு ஹெல்ப் பண்ணலாம்னு அங்க போனியா இல்ல உன்னோட ஹனிமூன் ட்ரிப்ப செலப்ரேட் செய்ய போனியா..? உண்மையைச் சொல்லு. என் மேரேஜ்க்கு டேட் ஃபிக்ஸ் பண்ணிட்டு வரச் சொன்னா, உன் பேபியோட டெலிவரி டேட்ட பிக்ஸ் செய்துட்டு வருவ போல, என்னடா நடக்குது அங்க..” எனப் புகழ் பேசப்பேச, வெற்றி வாய்விட்டுச் சிரிக்க, மங்கையோ அவனைத் தள்ளிவிட்டு ‘மானம் போச்சு உங்களோட..’ என்று வீட்டுக்குள் ஓடிவிட்டாள்.
“விடுடா… ரெண்டையும் ஃபிக்ஸ் செய்துட்டே வர்ரேன். அதுல டவுட்டே வேணாம். சரி ஆச்சி எப்படி இருக்காங்க. பிபி ஹை ஆகிடுசுன்னு மொழி சொன்னா. டேப்லட் எடுக்கலையா..”
“ம்ம்… இந்த திரு இருக்கானே அவன் ஒருத்தன் போதும் அவங்க பிபியை ஏத்த இறக்க, அவன் வந்து மொழியை இங்க விட்டுட்டு, ஆச்சிக்கிட்ட பேசிட்டு போனான். அப்படியே டல்லாகிட்டாங்க..”
“ஓ.. அவனோட விசா இன்னும் டூ வீக்ஸ்ல வந்துடும் போல புகழ். அதுக்குத்தான் ஆச்சி டென்சன் ஆகிருப்பாங்க. நீ அவங்கிட்ட பேசுனியா..”
“விடு வெற்றி அவன் போயிட்டு வரட்டும். நம்ம ரெண்டு பேர்தான் இங்கையே படிச்சோ. அவனாவது வெளி உலகத்தைப் பார்க்கட்டும். அத்தை பயப்படுற மாதிரி எல்லாம் அவன் நடந்துக்க மாட்டான். நீயும் அவனை டிஸ்கரேஜ் செய்யாத. போயிட்டு வரட்டும். இவ்வளவு பணம் சொத்து இருந்து எதுக்கு. லைஃபை ஜாலியா எஞ்சாய் செய்துட்டு வரட்டும். எங்க போனாலும், எப்படி இருந்தாலும் கடைசில இங்கதான வரனும். பார்த்துக்கலாம். ஏன் மொழியை நீ அனுப்ப மாட்டியா..?”
“அப்படி இல்லடா.. மொழிக்கு விருப்பம் இருந்தா கண்டிப்ப அனுப்பி வைப்பேன். ஆனா இது வேர. நான் அத்தைக்கு ப்ராமிஸ் செய்துருக்கேன். வெளியே விடமாட்டேன். என் கூடவே வச்சுக்குறேன்னு. அதுதான் யோசனை..”
“வெற்றி அதெல்லாம் பார்த்துக்கலாம் விடு. நான் அத்தைக்கிட்ட பேசுறேன். அவன் போயிட்டு வரட்டும். அதை விடு. அங்க என்ன சிச்சுவேஷன் இப்போ. என்ன சொல்றா என் காட்டு ராணி..”
“வொர்க்கெல்லாம் ஆல்மோஸ்ட் ஃபினிஷ்டுடா.. இன்னும் பெயின்ட்டிங் தான் பேலன்ஸ். ஹாஸ்பிடல் ஓபனிங் அப்போ தான் மீடியாக்கு சொல்லனும். அந்த எம்.பி தான் இன்னும் படியல. ஓவரா பன்றான். எத்தன சி கொடுத்தாலும் பத்தாதுனே சொல்றான். என்ன செய்ய.? ஓரளவுக்கு மேல நாம இங்க செலவு செய்ய முடியாது. ட்ரஸ்ட்ன்னு மென்ஷன் செய்துருக்கோம். சோ ப்ராப்ளம் வர வாய்ப்பாகிடும். என்ன செய்யலாம். ஆடிட்டர்கிட்ட பேசிட்டு சொல்லு. அப்பா என்ன சொன்னார். அந்த லேன்ட் கிடைச்சிடுமா..”
“ம்ம்.. லேன்ட் ஓகே தான். பட் வேல்யூ ரொம்பக் கம்மி. இப்ப இந்த லேன்ட் எதுக்கு உனக்கு. அதுவும் மலையடிவாரத்தை ஒட்டி, என்ன ப்ளான் வச்சிருக்க அந்த லேன்ட்ல..”
“பழத்தோட்டம் போல வச்சு, ஊடுபயிரா மூலிகைகளை வளர்க்கலாம்னு பார்க்கிறேன். அப்படியே ஒரு மூலிகை ரெஸ்டாரன்ட் ஓபன் பண்ணலாம்னு ப்ளான். அபி மூலிகை வைத்தியம் நல்லா செய்றா. அவளுக்கு இதை கிஃப்ட்டா கொடுக்கலாம்ன்னு ப்ளான். இப்போதைக்கு இவ்ளோதான். அங்க வந்து தான் வேற என்னன்னு யோசிக்கனும்.”
“சரி நீ எப்போ வர்ர, அபி என்ன சொன்னாலும் கேட்க மாட்டேங்குறா, நீ பேசினா தான் சரியா வரும். அதோட அவளுக்கு உன்மேல கோபமும் இருக்கு. நீ அவக்கிட்ட சொல்லாம போனதானே அந்தக் கோபம்தான். நீ பேசினா மட்டும் தான் சரியாவா.. எப்போ கிளம்புறன்னு சொல்லு.. மத்த ஏற்பாடுகளை நான் பார்த்துக்குறேன்…”
“நானும் அதைத்தான் யோசிச்சேன் வெற்றி. டூ ஆர் த்ரீ டேய்ஸ் வீ ஆர் தேர். உனக்கு ஒன்னும் கஷ்டமில்லையே..”
“எனக்கு என்ன கஷ்டம்.. இந்த ஒரு மாசம் எங்களுக்கும் ஒரு புது அனுபவம்தான். ஹனிமூன் போயிருந்தாக் கூட இப்படி ஹேப்பியா இருந்திருக்க முடியாது. வனிதான் ஜாலியா சுத்திட்டு இருக்கா. கூட அவளை மாதிரியே நாலு ப்ரண்ட்ஸ். போதாதா அவளுக்கு. மேடம் ட்ரீட்மென்ட் பன்றேன்னு எல்லாரையும் கதற விட்டுட்டு இருக்கா..”
“ஹா ஹா படிக்கவே வேண்டாம்னு மட்டும் சொல்லிப்பாரு. இன்னும் எவ்வளவு ஜாலியா இருப்பான்னு தெரியும். சரிடா மகி இருந்தா கொடு பேசிட்டு வைக்கிறேன். பேசலன்னா உடனே சண்டைக்கு வருவா..”
“அவ எங்க இங்க இருக்கா. நீ கிண்டல் செய்யவுமே ஓடிட்டா..” எனச் சிரிக்க, பதிலுக்கு புகழும் சிரித்தபடியே போனை வைக்க, “மாமா..” என்ற அலறலில் பதறியடித்துக் கொண்டு வீட்டுக்குள் ஓடினான் வெற்றி.